Sunday, July 27, 2008

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.

தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

No comments: