Friday, August 8, 2008

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

06.08.2008 புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மௌலவி குதுப்புத்தீன் ஆலிம் அவர்கள் 'நபிகள் நாயகம் ( ஸல்)' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தமிழகப் பெருமக்கள் பலர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கென தனியிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

கோட்டைப் பள்ளி

இதே போல் ஒவ்வொரு வாரமும் தேரா கோட்டைப் பள்ளியில் தமிழ் சொற்பொழிவு மற்றும் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரபி மொழியினை படிக்காதவர்கள் கூட திருக்குர்ஆனை சிறப்பான முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் தமிழ் மொழியில் சொற்பொழிவும், மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.

No comments: