Thursday, October 30, 2008

முதுகுளத்தூர் திடலில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் திடலில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் மற்றும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து திடல் பள்ளிவாசல் பெண்கள் தொழுகைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ( 31 அக்டோபர் 2008 ) ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இளையான்குடி யாஸ்மின் முபல்லிஹா ( திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ) உரை நிகழ்த்த உள்ளார். இவர் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வணிகத்துறை பேராசிரியர் அஷ்ரஃப் அவர்களின் துணைவியார் இவர். இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி, கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி உள்ளிட்டவற்றில் நீதிபோதனை வகுப்புகளை பெண்களுக்காக நடத்தி வருபவர்.

இளையான்குடியில் பெண்களுக்கு திருக்குர்ஆன் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார்.

No comments: