Saturday, December 6, 2008

காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்

காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு


ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.

முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.

பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.

ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new

No comments: