Friday, April 3, 2009

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு
















துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு 03.04.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ப‌குதியில் உள்ள‌ ராய‌ல் பேல‌ஸ் ஹோட்ட‌ல் அபார்ட்மெண்டில் ந‌டைபெற்ற‌து.

புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வுக்கு இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச் ச‌ங்க‌ க‌ன்வீன‌ர் பிர‌வாஸி பார‌திய‌ ச‌ம்ம‌ன் விருது பெற்ற‌ கே. குமார் தேர்த‌ல் அதிகாரியாக‌ த‌லைமை வ‌கித்து தேர்த‌லை ந‌ட‌த்தினார்.

துவ‌க்க‌மாக‌ ச‌ந்திரா கிருஷ்ண‌ன் தேசிய‌ கீத‌ம் பாடினார். அத‌னைத் தொட‌ர்ந்து விழாக்குழு செய‌லாள‌ர் துபாய் த‌மிழ்ச் ச‌ங்கத்தின் ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு பெற்ற‌ன‌ர்.

த‌லைவ‌ராக‌ ஜெய‌ந்தி சுரேஷும், பொதுச்செய‌லாள‌ராக‌ ஜெக‌ந்நாத‌னும், பொருளாள‌ராக‌ கீதா கிருஷ்ண‌னும், விழாக்குழு செய‌லாளராக‌ ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவும், க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ளாக‌ சுந்த‌ர், விஜ‌யேந்திர‌ன், விஜ‌ய‌ராக‌வ‌ன், பால‌கிருஷ்ண‌ன் உள்ளிட்டோர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அனைத்து உறுப்பின‌ர்க‌ளின் ஏகோபித்த‌ க‌ர‌கோஷ‌த்துக்கிடையே புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

புதிய‌ நிர்வாகிக‌ளை கே. குமார் வாழ்த்தினார். த‌ன‌து 37 வ‌ருட‌ அமீர‌க‌ வாழ்வினை நினைவு கூர்ந்த அவ‌ர் த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் சேவையாற்றிட‌ கேட்டுக் கொண்டார்.த‌லைவர் ஜெய‌ந்தி சுரேஷ் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.

பொதுச்செய‌லாள‌ர் ஜெக‌ந்நாத‌ன் ந‌ன்றி கூறினார். நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ பல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

No comments: