Thursday, May 14, 2009

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இந்திய முஸ்லீம் நல அறக்கட்டளை சார்பாக 11.05.2009 காலை 10 மணிக்கு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசலின் கீழதளத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிசக்கு அறக்கட்டளையின் கல்விக்குழு தலைவர் ஜனாப் சேக் முஹம்மது(துபய்) தலைமைதாங்கினார். ஐடியல் ஆங்கிலப்பள்ளியின் தாளாளர் ஜனாப் கமால் பாசா (அபுதாபி ) வறவேற்றுப்பேசினார். இந்த கருத்தரங்கில் இளையான்குடி சாகீர்உசேன் கல்லூரி பேராசிரியர,; டாக்டர் ஆபிதீன் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் என்ற தலைப்பில் அறிமுகமில்லாத சுமார் 150 க்கும் மேற்பட்ட புதுப்புபது படிப்புகள் பற்றிய தெளிவான ஆலோசனைகளை ஒளித்திரையின் மூலம் விளக்கி முஸ்லீம்களுக்கு இன்றைய கல்வியின் அவசர அவசியம் குறித்தும் பேசினார்.

இந் நிகழ்சியில் ஆரும்பாவூர் தாஹிர் பாசா, வி களத்தூர் ஹக்கீம் , ஆதம் சரீப், சேக் தாவூத் , சாதிக், அபுதாஹிர், உட்பட சுமார் இறுநூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: