Tuesday, January 5, 2010

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் 26.3.1915 இல் காயல்பட்டணத்தில் பிறந்தார். சிறு வயது முதலே அரசியல் - எழுத்து - கலை ஆகிய துறைகளில் ஈடுப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும், நெல்லை ஜில்லா போர்டிலும் உறுப்பினராக இருந்தக் காலத்தில் மூதறிஞர் ராஜாஜி, டாக்டர். சுப்பராயன் ஆகியோருடன் நெருங்கிப் பழகக் கூடியவராகவும், காந்தி மற்றும் நேரு போன்றவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றவாரகவும் இருந்தார். அவ்வப்பொழுது பலப் பத்திரிகைகளிலே கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

விஞ்ஞானமும் தொழில்களும், தமிழ்கூறும் முஸ்லிம் நல்லுலகம், மார்கோ போலோவின் யாத்திரை, ஜனநாயகமும் அபேதவாதமும், பாத்திமா நாயகி பெற்ற சீதனம், சர் சையீது அஹ்மத் கான், சாந்தி மார்க்கம் கண்ட சமதர்ம தூதர், அல்லாஹ் முன் எல்லோரும் ஒன்றே ஆகிய இவரதுக் கட்டுரைகள் புகழ்பெற்றவை.

மாசில்லாமணி மகபூப் சுபுஹாணி, வள்ளல் சீதக்காதி ஆகிய இரண்டு நூல்களை இவர் எழுதி உள்ளார். வான்ப்புகழ் காயல்ப்பட்டணம் என்னும் இவரது மற்றொரு நூல் அறிய ஆய்வு நூலாகும். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் எழுதும் வன்மை உள்ளவாரகத் விளங்கினார். An Arab King of Pandya (பாண்டிய நாட்டின் அரபு வேந்தர்) என்ற இவரது ஆங்கில ஆராய்ச்சி கட்டுரையை பிரபல ஆங்கில நாளிதழான HINDU - ஹிந்து விரும்பி பிரசுரித்தது. Scientific Farming என்னும் பத்திரிகையை ஆங்கிலம் - சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும், விஞ்ஞானப் பண்ணை என்னும் தமிழ் பத்திரிகையையும் நடத்தி அதன் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் தொழில் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார். 1956 இல் இலங்கை அரசு நடத்திய கைத்தொழில் - விவசாயப் பொருட்காட்சியை நடத்தும் பொறுப்பில் செயற்குழு உறுப்பினாராக நியமிக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றினார்.

எழுத்தாளரும் - ஆராய்ச்சியாளரும் - வர்த்தகருமான ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்தார். 1945 இல் காயல்ப்பட்டனத்தில் நடைப்பெற்ற வள்ளல் சீதக்காதி விழாவிற்கு தலைமை தாங்கினார். அவ்விழாவில் டாக்டர். ஹுசைன் நயினார், தமிழக முதல்வராக பின்னர் பதவி வகித்த சி.என் . அண்ணாதுரை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

தகவல்: (தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் நூலிலிருந்து)

Rajaghiri Gazzali
www.rajaghiri.net
www.masjid-al-taqwa.blogspot.com

No comments: