Wednesday, February 24, 2010

"காத்தமுன்" நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்.............

"காத்தமுன்" நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்.............

குர்- ஆன் என்னும் பேருரைக்கு
கோமான் நபிகள் வாழ்வேப் பதவுரையாம்
பெருமான் நபிகள் பிறந்ததினாலே
பேதமை யாவும் மறைந்தனவே
ஒருநாள் உலகம் முடிவு பெறும்;
உண்மைகள் அன்று விடிவு தரும்!!
வருநாள் மறுமையின் திண்ட்டாட்டத்திலே
வள்ளல் நபிகளின் மன்றாட்டத்தினாலே
தருவான் அல்லாஹ்வும் நிழலாகவே
தன்னிருக்கை அருகில் அழகாகவே
ஒருமுறை கனவில் தந்தீர் தரிசனம்;
உண்மையில் அதென் வாழ்விலோர் அதிசயம்!!!
மறுமுறை மீண்டும் வரவேண்டும் என்றே
மன்றாடிக் கேட்கின்றேன் இன்றே


-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
kalamkader2@gmail.com
adiraikalam@rediffmail.com

No comments: