Thursday, May 6, 2010

அன்று................

அன்று
பிரேமானந்தா !
இன்று
நித்தியானந்தா !

வஞ்சிக்கொடி
ரஞ்சிதாவை
வஞ்சகவலைவிரித்து
கொஞ்சிவிளையாடிய
பஞ்சமாபாதகனே !

பகலில் ஆன்மீகம்
இரவில் பெண்மோகமா ?
காமக்களியாட்டதிற்கு
காவி அவதாரமா ?

சிற்றின்ப
சுகபோகத்துக்கு
முற்றுந்துறந்த
முனிவர் வேஷமா?

பெண்பித்து
பிடித்து அலைந்தவனே
பிரம்மச்சாரியமா
பேசிவந்தாய் ?

அரேபியச்சட்டமின்று
அமுலிலே இருந்திருந்தால்
அன்றே கல்லெறிந்து
கொல்லப்பற்றிப்பாய்


அன்று ......
ஆன்மிகத்தைப் போதிக்க
ஆசிரமங்கள் தோன்றியது

இன்று ........
ஆபாசத்தை அனுபவிக்க
ஆசிரமங்கள் தோன்றுகிறது

அந்தபுரங்கலேல்லாம்
ஆசிரமங்கலாகிவரும்
அவலநிலை இன்று
அன்றாடம் அரங்கேறுது

கடவுள் பெயரால்
கருவறைக்குள்ளேயே
காமக்களியாட்டங்களை
காண முடிகின்றது

ஆன்மீகத்தின் பெயரால்
அன்றாடம் நிகழுகின்ற
போலிச்சாமியார்களின்
காளித்தனங்களும்

கடவுளின் பெயரால்
மடங்களிலே நடக்கும்
மூடநம்பிக்கை களும்
முடிவுக்குவந்திட

மக்களின் மனங்களிலே
மண்டிக்கிடக்கின்ற
மூடநம்பிக்கை களை
தோண்டி எறிந்திடவெண்டும்

கடுமையான சட்டங்கள்
காலதாமதமின்றி
நடைமுறைக்கு வந்திட
நடவடிக்கை உடனடியாக
எடுத்திடவேண்டும்
காயல்............................சிந்தா


theakmujeb@yahoo.com

No comments: