Sunday, June 27, 2010

கலிபோர்னியாவில் பெண்கள் பயான்

கலிபோர்னியாவில் பெண்கள் பயான் ஒன்றுக்கு ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்
ரிச்மாண்ட் என்ற ஊரில் உள்ள பெரிய மர்கசில் வெள்ளி,சனி,ஞாயிறு என
தொடர்ந்து தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்று வருகிறது.

அதுபோது,அமெர்க்கா,கனடா மற்றும் உலகின் பல முனைகளிலிருந்தும் பலர்
கலந்துகொண்டுள்ளனர்.அதுபோல இந்தியாவின் பல மாநிலங்கள்,தமிழகம் போன்ற
இடங்களிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் சார்பாக குறிப்பாக புரொபசர் அப்துல் ரஹ்மான்(70) அவர்கள்
கலந்துகொண்டுள்ளனர்.


புரொபசர் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்
சொன்னார்,"அட அதிராம்பட்டினமா?நம்ம அப்துல் காதர் ஆலிம்சா
ஊராச்சே.தங்கமான மனிதரைக் கொண்ட ஊரல்லவா அது?"என்றார்.மேலும்
கூறுகையில்,சில மாதங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம்.அங்கு அதிரையை
சேர்ந்த சகோதரர்களை சந்தித்தோம்.அவர்கள் பெண்கள் பயானுக்கு ஏற்பாடு
செய்து,அது மூலம் பலர் பயன்பெற்றனர்.இங்கும் நீங்கள் ஏற்பாடு
செய்தால்,பேசுவோமே?என்றாகள்.



இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் செய்வோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

அல்லாஹ்வின் கிருபையினால்,அதிரையை சேர்ந்த சகோதரர் ஷிப்லி அவர்கள் தங்கள்
வீட்டில்( சாக்ரமண்டோ )பயானை வைத்துக்கொள்ளலாம் என மனமுவந்து
ஒத்துக்கொண்டார்கள்.

எனவே இன்ஷா அல்லாஹ்,ஞாயிறு (06.27.10)அன்று சாக்ரமண்டோ மஸ்ஜித் அந்நூர்
பள்ளிவாசலில் அசர் தொழுகை முடிந்தவுடன்,சகோ ஷிப்லி அவர்களின் வீட்டில்
பயான் தொடங்கி,மக்ரிப் நேரம் வரை நடை பெரும்.

எனவே அதிரையை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் எல்லா
ஆண்களும்,பெண்களும் வந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன்
வேண்டுகிறோம்.மேலும் உருது,ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு ஏற்பாடும்
செய்யப்பட்டுள்ளது.


இடம் மற்றும் ரூட் போன்ற விவரங்கள் அறிய சகோ ஷிப்லி அவர்களை தொடர்பு கொள்ளவும்.

BROTHER SHIBLI 916 473 3593

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன்

நிகழ்ச்சி ஏற்பாடு மதுரை சலீம்,அதிரை ஷிப்லி

No comments: