Saturday, June 26, 2010

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

செம்மொழி மாநாட்டுப் பாடல் கேட்டேன். மிக இனிமையாக அமைந்துள்ளது.

இதுவரை யாராவது இதனை முதல்வரின் பார்வைக்கு எடுத்து வைத்திருக்கலாம். இல்லையெனில், என் மனதில்பட்ட ஒரு சிறு மாற்றத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என ஒலிக்கிறது.

இது மாற்றியமைக்கப்பெறின், காலப்பெட்டகமாகப்போகும் கலைஞரின் இந்த பாடல் மேலும் மிளிரும் என எண்ணுகிறேன்.

அன்புடன்
அப்துல் கதீம்
(யு.ஏ.இ. துபையிலிருந்து)

No comments: