Friday, September 3, 2010

புர்க்கா..

புர்க்கா..

அஸ்ஸலாமு அலைக்கும்,


குறைந்துவிட்ட ஆடையால்
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை
மறந்துவிட்டப் பரிதாபம்!

அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று
முரசுக் கொட்டும் உலகம்!

போர்திக்கொண்டுப் போகும் எம்
சகோதிரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொருக்கி உனக்கு!

ஒழுங்கான ஆடையில்
உலா வரும் ஒரேச் சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும்
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும்
மானம் காப்போம் தரணியிலே!

வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம்
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!

-யாசர் அரஃபாத்

No comments: