Friday, September 10, 2010

மன்னித்து விடு மறையோனே ..

மன்னித்து விடு மறையோனே ..

நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை
எதிர் நோக்கிருந்தேன்;

கலங்கிய கண்ணீருடன்கரம்
உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!

தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் –
உனக்குமண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!

மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தைசேர்த்து விடு –
மாறி மாறி எங்களுக்குள் சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!

-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com/

No comments: