Saturday, September 18, 2010

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித்..

இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!

தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!

எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6’யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!

அமைதியான அயோத்தியை அய்யோ ”தீ”யாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!

தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!

இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!

இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blospot.com
--

No comments: