Thursday, September 23, 2010

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்


ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு என்றார்கள்;
கசக்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திர்க்காக;
கனவுகளை தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!

- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

No comments: