Sunday, September 26, 2010

தூரத்தேசத்து நண்பன்

தூரத்தேசத்து நண்பன்

வாக்குரிமைச் சொல்லும்
இந்தியன் என்று
வாழும் இடம் சொல்லும்
காஷ்மீர் என்று;
பத்திரிக்கைச் சொல்லும்
பயங்கரவாதி என்று;
காவல் துறைச் சொல்லும்
தீவிரவாதி என்று;
அரசியல் சொல்லும்
கலகக்காரன் என்று!

உலகெங்கும் ஆதரவுண்டு
தனி நாடு இஸ்ரேலுக்குண்டு;
தனி ஈழம் முழக்கமுண்டு
கைகொடுக்க கழகமுண்டு!

அறுத்துவிட்ட அனாதைகளாக;
வேலியே பயிரை மேயும்;
எங்கள் உயிரை வாங்கும்!


இங்கு மட்டும்தான்
பிறந்த பாலகனும் பயங்கரவாதியாக;
கம்பூன்றும் கிழவனும்
தீவிரவாதியாக!

நிம்மதியாய் சுவாசம்விட
நிம்மதி தொலைத்து நிற்கும்
தூரத்தேசத்து நண்பன்!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

--

No comments: