Sunday, November 14, 2010

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!ஒருங்குறியில்

தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

பேரன்புடையீர்,

வணக்கம்.கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. இதில் பங்கேற்கஒருங்குறியில் தமிழ்க்காப்புஎன்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும். தொடர்பிற்கான பேசி எண்கள்: 98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)

94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்)கெடல்எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! - பாவேந்தர் பாரதிதாசன்அன்பன்
இலக்குவனார் திருவள்ளுவன் ஒருங்கிணைப்பாளர் , தமிழ்க்காப்பு அமைப்புகள்

No comments: