அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=114
வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப் பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை. இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம். கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம். ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை. ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை. அலெக் சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம். சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர். பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம். பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங் களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.
மலைகளைப் போன்று உயரமாக எழுந்த அலைகளின் நடுவே மரத்தாலும் ஆணிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு கலத்தில் நபி நூஹ் (அலை) அவர்களும் குழுவினரும் எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றப்படுகின்றனர். கொடியோன் நம்ரூதின் ஆணைப்படிக் கோபுரமாகக் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் இறைநேயர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது நெருப்புக் குண்டம் குளிர்ச்சிமிக்க தண்ணீர்க் குளம் போன்று மாறிவிடுகின்றது. அட்டதிசை போற்றும் சுலைமான் நபி (அலை) அவர்களின் அரசவையில் ஸபா நாட்டரசி பல்கீஸின் அரியணை நாடியவுடன் கொணரப்படுகிறது. முன்னவன் தூதர் மூஸா (அலை) அவர்களின் ஆஸாக் கோல் பாம்பாக மாறுகின்றது. பாறையில் அடித்தவுடன் நீரூற்றுக்கள் தோன்றுகின்றன. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றியே பிறக்கின்றார்கள். தொட்டிற் பருவத்திலேயே தெளிவாக உரையாடுகின்றார்கள். இறை யாணைப்படி இறந்தோரை எழுப்புகின்றார்கள். பிறவிக் குருடர்களையும், பெரு நோயாளிகளையும் குணப்படுத்து கின்றார்கள்.
பாலைவன நாட்டின் பாரான் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தன்னந்தனியாகக் கிடந்த புனிதக் குழவியொன்றன் பூவடிகள் பட்டுப் பொங்கியெழுந்த நீரூற்றொன்று, இற்றைநாள் வரையில் வற்றாமலிருந்து வையகத்து மக்களுக்கெல்லாம் வாய்கமழ, மனங்குளிர ஜம்ஜம்மென்று நீரூட்டி வருகின்றது. அந்த ஜம்ஜம் ஊற்றின் கரையிலேயே எழுந்த மக்கமா நகரத்தில் அனாதையாகப் பிறந்து எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒருவரால் தோற்று விக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் இன்று உலகளாவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் நெறியின் அடிப்படை யாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ள அல்- குர்- ஆன் என்னும் அருள்மறை அவனியிலுள்ள நூல்கள் அனைத் திற்கும் அன்னையாகத் திகழ்ந்து அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது. இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இறைத் தூதர்களாக இவ்வுலகில் வாழ்ந்த நபிமார் களெல்லாம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக் கேற்ற அற்புதங் களைக் காட்டிச் சென்றார்கள். இசை இன்பத்தில் இதயத்தைப் பறிகொடுத்து வாழ்ந்த மக்களிடையே தோன்றிய ஹலரத் தாவூத் (அலை) அவர்கள் நாத வேதமாகிய சபூர் மறையை ஓதிக் காட்டினார்கள். மந்திரவாதிகளின் மாயத் தந்திரங் களெல்லாம் மேலோங்கி நின்ற காலத்தில் வாழ்ந்த ஹலரத் மூஸா (அலை) ஆஸாக் கோலால் அற்புதம் செய்தார்கள். மருத்துவத் துறையில் மனத்தைச் செலுத்திய மக்களிடையே வாழ்ந்த ஹலரத் ஈஸா (அலை) அவர்கள் தீராப் பிணிகளைத் தீர்த்து வைத்தார்கள். மொழி வெறியிலும், இலக்கிய இன்பத் திலும், கவிதைச் சுவையிலும் மெய்ம்மறந்து திளைத்திருந்த மக்களுக்கு அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையருள் இலக்கியமாகிய திருக்குர்ஆனை வழங்கினார்கள். பிற நபிமார் காட்டிய அற்புதங்களெல்லாம் ஏடு கமழும் பேருண்மைகளாக விளங்க அண்ணலார் காட்டிய அற்புதம் என்றும் எல்லோரும் நேரிற் காணும் பாருண்மையாக நிலைத்து விட்டது.
“அற்புதங்கள் யாவினையும் அவைமிகைத்து நிற்பனவாம் நிற்கவில்லை முந்தைநபி நிகழ்த்துமற்றை அற்புதமே”
என்பது காலமெல்லாம் கமழும் கஸீதத்துல் புர்தா என்னும் கவிதைச் செல்வம் வழங்கியுள்ள இமாம் பூஸ்ரீ (ரஹ்) அவர்கள் ’தாமத்ல தைனா’ எனத் தொடங்கும் பாவடிகளில் பதித்துள்ள கருத்தாகும். பெற்றெடுத்த குழவிகளையே உயிருடன் குழிதோண்டிப் புதைத்துக் கொடுமையின் கொடு முடியிலேறிக் கொக்கரித்து நின்ற கொடியவர்களின் கன் னெஞ்சங்களைத் தண்ணீர் போல மாற்றிய அற்புதத்தை மாநிலத்தில் வேறெங்கே காண முடியும்?
பளிச்செனத் தோன்றிய வான்மறையின் வெளிச்சத்திற்கு முன்னால் இலக்கிய அரக்கர்களெல்லாம் கண்ணைத் திறக்க முடியாமல் வாயை மூடி மெளனிகளாயினர். நானில நாயனின் மறை நாதத்தைச் செவிமடுத்த மாத்திரத்தில் ஆடிய அவர்களின் நாடிகளெல்லாம் அடங்கியொடுங்கி இதயங்களெல்லாம் இளகியோடின. வானின்று இறங்கிய பேரமுதம் அவர்களுக்குத் தேனினும் பாலினும் தெவிட்டாக் கனியிலும் தித்தித்தது. வள்ளல் நாயகமவர்களின் தலையைக் கொய்வதற்காக வஞ்சினங் கூறி வாளேந்திப் புறப்பட்டுச் சென்ற மாவீரர் உமறு, திருமறை வசனங்கள் சிலவற்றைக் கேட்டதும் மனந்திருந்தி மாநபியின் தாளடைந்து மறை நெறியைத் தழுவுகின்றார். திருநபியைத் திருத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த தீரர் உத்பா, திருமறை ஓதக் கேட்டதும் ஊமையைப் போல் ஒன்றும் பேசாமல், சிங்கத்தைக் கண்ட வரையாடு போன்று அசையாமல் நிற்கின்றார். உத்தமத் திருநபிக்குப் புத்தி கூற வந்த வலீதிப்னு முகைரா,”தேனீ” என்னும் அத்தியாயத்தைக் கேட்டு மறைமலர் நுகரும் தேனீயாக மாறிவிடுகிறார். பிரசித்தி பெற்ற மந்திரவாதி லம்மாதிப்னு ஸஃலத்துல் அஜ்தீ, துமாமத் இப்னு உதால், அபூ தர்ருல் கப்பார் முதலிய ஆயிரக்கணக்கானோரின் திசைமாறிய வாழ்க்கையில் திருமறையே ஒரு திருப்பு மையமாக அமைந்தது. கவிதச் செருக்கு மண்டையிலேறி யிருந்த அண்டாக்கவிஞன் இன்பத் திருமறையில் ஈரைந்து சொற்களைக் கொண்டிலங்கும் “அல் கவ்தர்” அத்தியாயத்தைச் செவி மடுத்ததும் ”மானிடர் மொழி யீதன்று” (மா ஹாதா கவ்லுல் பஷர்) என்பதாக வியந்து மொழிந்து தலைகுனிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம்.
அருமை நாயகமவர்களின் திருமறை வெளிப்பாடெனக் கூறுவதெல்லாம் கற்பனையின் களியாட்டே யென்றும், பித்தரின் பிதற்றலென்றும் சூனியக்காரரின் சூழ்ச்சி யென்றும் குறை கூறிக் கொண்டிருந்த மக்கத்து மக்களுக்கு மாபெரியோன் விடுத்த அறைகூவல் உலையாத இறை மறையில் நிலையாக இடம்பெற்றுள்ளது.
”நாம் நம் அடியாருக்கு அருளியதில் நீங்கள் ஐயம் கொண்டு நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர - உங்கள் உதவியாளர்களையும் நீங்கள் துணைக் கழைத்துக் கொண்டு இதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்” (2:23)
இவ்வறை கூவலை ஏற்கும் வகையில் தொடக்கத்திலே தோன்றிய ஓரிரு சலசலப்புகள் மக்கள் மன்றத்திலே நகைப்பிற் கிடமாகி அழிந்தொழிந்தன. பிற்காலத்தில் திரு மறையின் அறைகூவலை ஏற்கும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வில்லியம் மூர் போன்ற பாதிரிமார்களும் வித்தகர்களும் படுதோல்வி கண்டதோடு மட்டுமன்றி வான் மறையை வாய்விட்டுப் பாராட்டவும் தொடங்கினர். “There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் “That the best of Arab writers has never succeded in producing anything equal in merit to the Holy Quran itself is not surprising” (மிகச்சிறந்த அரபி எழுத்தாளர் ஒருவர் கூடப் புனிதக் குர்ஆனின் ஆற்றலுக்கு ஈடானதொன்றை ஆக்கியளிப்பதில் என்றுமே வெற்றி கண்ட தில்லை என்பது வியப்பிற்குரியதல்ல”) என்பதாக பால்மர் என்பார் திருக்குர்ஆன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே” (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
மனித குலத்தின் மனப் பக்குவத்திற் கேற்பக் காலத்திற் கேற்ற முறையில் தூதர்கள் வாயிலாக வழிகாட்டி வந்த இறைவன், நிறைவான அறவுரைகள் அனைத்தையும் பெறு வதற்கு மனிதகுலம் தகுதியைப் பெற்றுவிட்ட தருணத்தில் இறுதித் தூதராகிய அண்ணல் நாயகமவர்கள் வாயிலாக வளமும் வனப்பும் செறிந்த உயர்தனிச் செம்மொழியாகிய அரபியில் நிறைவு பெற்ற இறுதி மறையை இறக்கினான். ஆகவே உலகின் இறுதி வரையிலே மனித குலத்திற்குத் தேவையான அறவுரைகள் அனைத்தும் அதில் இடம் பெற்றன. அதனை மாசுபடாமல், மாறுபடாமல் இறைவன் ஏற்றெடுத்தான்.
“அறிவுவகை யெத்தனையென் றறியவகை யில்லை
அத்தனையும் அவனுரைத்த அருள்மறையி லடக்கம்
எத்தனையோ கோடிமறை இறையுரைத்த தெல்லாம்
எடுத்தொடுக்கிக் குர்ஆனை இறையிறக்கிக் கொடுத்தான்
முத்தான குர்ஆனுக் குயர்ந்தமறை யில்லை”
என்பது ஞானமேதை பீரப்பா அவர்களின் சத்தான பாடல். அறிஞர்களால் ஆக்கப்படும் நூல்கள், யாதேனும் ஓரிரு பொருட்கள் பற்றிப் பேசுவதைப் பொதுவாகக் காணலாம். அனைத்துலகுக்கும் உலக முடிவு வரையில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றிருக்கும் ”நூல்களின் தாய்” (உம்முல் கிதாப்) என நுவலப்படும் இறைவனின் அருள்மறை தொட்டுக் காட்டாத பொருட்களே உலகத்திலில்லை. அறிவியல், அரசியல், அருளியல், பொருளியல், உயிரியல்,ஒழுக்கவியல், சட்டவியல், சமூகவியல் முதலிய எல்லாப் பொருட்களை யும் தன்னகத்தே தாங்கியுள்ளது ஏகநாயகனின் எழில்மறை, ஒருவன் யார் யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை விரிவாக எடுத்துக் கூறுவதிலிருந்து தன்னுடைய தல்லாத இல்லத்தில் நுழைகின்றபோது எத்தகைய ஒழுக்கத் துடன் நுழையவேண்டு மென்பது வரையில் எல்லாப் பொருள் பற்றியும் நுட்பமாக நுவல்லது அல்லாஹ்வின் அருள்மறை மனிதகுல ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத் துவம், உயிர்களின் உற்பத்தி, வான்வெளிப் பயணம், வானுக்கும் மண்ணுக்கு மிடையே உயிரினங்கள், அனைத்துயிர்களிலும் ஆண், பெண் அமைப்பு, அன்னையின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி, உலோகங்களின் பயன், பொறியின் செயற்பாட்டால் விளையும் வீரியம் – போன்ற பல்வேறு பொருள்பற்றி இன்று விஞ்ஞானிகள் வெளியிடும் கருத்துக்களுக்குரிய கருவனைத்தையும் திருமறையில் காணலாம் நூஹ் நபியின் கப்பல், உரோமர்கள்மீது வெற்றி ஃபிர்அவ்வின் சடலம் ஆகியவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் காலப் போக்கிலே வெளிப்பட்டுள்ளன.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமாக ஒரே நூல் பொய்யகற்றும் திருமறை யென்பதில் ஐயமே இல்லை. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய நூல்களுக்குரிய பத்து வனப்பாலும் பொலிவினைப் பெற்று ”குன்றக் கூறல், மிகைபடக் கூறல்” முதலிய குற்றங்கள் பத்தும் இல்லாததாக இலங்குகின்ற நூல் இறைமறையேயாகும். வரலாற்றைக் கூறினாலும் வாக்குறுதிகளை வழங்கினாலும் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தாலும், ஆகுமானவற்றை அறிவித்தாலும், நன்மையை ஏவினாலும், தீமையைத் தடுத்துரைத்தாலும், இறை புகழை இயம்பினாலும் திருமறையில் ஒரு தனித்தன்மையைக் காணலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற முறையில் தேவையான உவகை உருவகங்களுடன் உலகின் எப்பகுதி மக்களும் புரிந்துகொள்ளும் தன்மையில் அமைந்துள்ளன திருமறையின் போதனைகள்.
தீயானது தொட்டவரை மட்டும் சுட்டிடும் தன்மை வாய்ந்தது. தீமையோ, செய்தாரை மட்டுமின்றி அவர் வழி வந்தோரையும் வாட்டி வதைக்கும் இயல்புடையது. மனிதப் புனிதர்களாகிய இறை தூதர்களுக்குத் தீங்கிழைத்ததன் காரணமாகப் பூண்டோடழிந்த மக்களைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பெருக்கால் அழிந்தவர்களையும், ஆத் கூட்டத்தினர் புயலினால் அழிந்த தையும், தமூத் கூட்டத்தினர் இடியோசை கேட்டு ஈரல்கள் வெடித்துக் குடல்கள் தெறித்துச் சிதறி அழிந்ததையும், லூத் நபியின் பகைவர் கல்மாரியினால் அழிந்ததையும், ஷுஐப் நபியின் பகைவர் நெருப்பு மாரியால் மடிந்ததையும், மூஸா நபியின் பகைவர்கள் நீலாற்றில் மூழ்கி இறந்ததையும், காரூன் குழுவினரை நிலமே விழுங்கியதையும் திருமறை யானது எடுத்துரைத்து எச்சரிக்கும் பகுதிகள் எவரையும் நடுங்கச் செய்வனவாகும்.
உலகின் எப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் தோன்று கின்ற எவ்வகைச் சிக்கலுக்கும் ஓரிரு சொற்களில் வழிகாட்டுகின்ற அற்புதத்தைத் திருமறையில் காணமுடியும். ஒரு போது ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மாரிடையே ஆண் குழந்தைக்குரியவன் யாரெனும் ஐயம் எழுந்தபோது, எடையிலே மிகுந்த தாய்ப் பாலுக்குரிய அன்னையே ஆண் குழந்தைக்குரியவள் என்னும் தீர்ப்பினை வழங்குவதற்குக் காரணமாக இருந்தது. ”அர்ரிஜாலு கவ்வாமூன அலந் நிஸா (ஆண்களே பெண்களின் நிர்வாகிகள்) 4:34, என்னும் திருமறைத் தொடராகும்.
குழப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கும் மயக்க நிலையில் நல்ல தீர்ப்புகள் வழங்குவதற்கும் காரணமாக இருந்த மறைத்தொடர்கள் பலப்பல திருமறையின் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு சொல்லும் விளைக்கின்ற பயன்களும் அற்புதமாகவே அமைந்துள்ளன. மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் இருதயங்களிலுள்ள நோய்க்கு அது ஒரு சஞ்சீவியாகும். மேலும் (அது) விசுவாசம் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57) இவ்விறை மொழிக்கேற்ப இதயப் பிணிகளைப் போக்கும் ஆத்மீக மருந்தும் இம்மையையும் மறுமையையும் செம்மையாக்கும். அறவுரைகளும் வான் மறையில் நிறைந்துள்ளன. “லஹா மஆனின்” என்பதாகத் தொடங்கும் கஸீதத்துல் புர்தாவின் கவின்மிகு பாடலைக் காண்போம்.
“கடலின் அலைபோன்றதுவாம் கத்தன் மறை வாக்கருத்தம்
சுடருமுத்தின் மேலதுவாம் சொல்லழகினால் மதிப்பால்”
பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவதையும் முன்னால் வந்த அலைகளைத் தழுவியே பின்னால் வரும் அலைகள் எழுவதையும் பார்க்கின்றோம். அதுபோன்ற திருமறையின் வசனங்களுக்குத் தொடர்ந்து பல விளக்கங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் அவ்விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஆதரவாக இருப்பதையும் காண்கிறோம். அழகிலும் விலைமதிப்பிலும் திருமறையின் மணியான கருத்துக்கள் முத்துக்களை வென்றுவிடப் பார்க்கின்றோம். “ஸிப்கத்தல்லாஹ்” (இறைவனின் வண்ணத்தை அடைவீர்) 21:38, “வஜிபால அவ்தாத” (மேலும் மலைகள் முளைகள்) 78:7 இவைபோன்று எத்தனையோ சிறுதொடர்களுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் ஆய்வாளர்களை வியப்பில் மூழ்கச் செய்கின்றன.
ஆசிரியர் ஒருவர் ஒரு நூலை எழுதி முடித்தபின் அந்நூலினை ஆயும் அறிஞர்கள் அதிலுள்ள பிழைகளையும், முரண்பாடுகளையும் எடுத்துரைப்பதற்குத் தவறுவதில்லை. ஓர் ஆசிரியரின் வாழ்நாளிலேயே அவர் நூலின் கருத்துக்கள் மறுக்கப்படுவதையும் வெறுக்கப்படுவதையும் பார்க்கின்றோம். அவர் மறைவுக்குப் பின் அந்நூல் திருத்தப்படுவதையும் இடைச் செருகல்கள் நுழைக்கப்படுவதையும் காண்கின்றோம். இறைவனால் இறக்கப்பட்ட மறைநூல்கள் கூட மனிதர்களின் கைபட்டுத் தூய்மையிழந்து உருக்குலைந்து விட்டன. ஆனால் இறைவனின் இறுதி மறையாகிய திருக்குர்ஆன் தோன்றி 1450 ஆண்டுகள் சென்ற பின்பும் அதன் ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ, கோடோ மாற்றப்படாமல் காக்கப்பட்டு வருகின்றது. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்தாகியா என்னும் ஊரிலிருந்து வந்த ஒரு குழுவினர் திருமறை கூறும் வரலாற்றுக் குறிப்பின் காரணமாகத் தங்கள் ஊருக்கு ஏற்படுகின்ற பழியைப் போக்குவதற்காக “அபல்” என்னும் சொல்லை “அதவ்” என்பதாக மாற்றுவதற்கு எவ்வளவோ வேண்டியும் அண்ணலார் அவர்கள் அதற்கிசையவில்லை.
நிச்சயமாக நாமே இந்நினைவூட்டியை இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்” (15:9) என்பது ஆற்றல் மிக்கோனின் அருள் வாக்கல்லவா? இவ்வசனத்தின் அடிப்படையில் இறைவன் திருமறையைக் காப்பாற்றி வருகின்ற முறைகள் பலவாகும். திருமறை முழுவதையும் மனத்திலே பதித்துள்ள ஹாபிளுகள் இஸ்லாமிய உலகில் என்றும் ஆயிரக்கணக்கிலே இருந்து வருகின்றார்கள். அவனி யிலுள்ள அனைத்து நூல்களும் அழிந்துவிட்ட போதிலும் உயர் மறையை உள்ளத்திற் பதித்துள்ள நானூறு ஹாபிளுகள் ஓரிடத்திலே சேர்ந்துவிட்டால் ஆளுக்கு ஈரெட்டு வசனங்களாகப் பகுத்து ஒரு மணி நேரத்திற் குள்ளாகத் திருமறை முழுவதையும் திருப்பி எழுதிவிட முடியும்.
திருமறையின் ஓர் எழுத்தைக் கூட எவரும் மாற்றிவிடாத நிலையில் அதன் கட்டுக்கோப்பு அமைந்திருப்பது மிகப் பெரும் அற்புதமாக இருந்து வருவதை இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். திருமறைக்கும் திருமறையிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் சிறப்புத் தொடராகவும் காப்பு மொழியாகவும் அனைத்தும் வல்ல நாயனின் அரசு முத்திரையாகவும் அமைந்துள்ள பஸ்மலா என்னும் ஆணித்திறவுகோல் (Master – key) கொண்டு திருமறைப் பகுதிகளைத் திறந்து பார்ப்பவர்கள் மாமறைக் கருவூலத்தில் மண்டிக்கிடக்கும் மாமணிக் குவியல்களைக் கண்டு பெருவியப்படைவார்கள். “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்னும் அரபித் தொடர் நான்கு சொற்களையும் 19 எழுத்துக்களையும் பெற்றதாக அமைந்துள்ளது. எண்களின் வரிசையில் மிகச்சிறிய எண்ணாகிய ஒன்றும் மிகப்பெரிய எண்ணாகிய ஒன்பதும் இணைவதே பத்தொன்பது. மேலும் அவ்வெண் வேறெந்த எண்ணாலும் வகுத்தற் கியலாத ஒற்றைப் பட்ட எண்ணாகத் தத்துவங்கள் பலவற்றைப் பொதிந்துள்ளது. காலத்தின் அளவுகோலாக அமைந்த ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் ஒரு ஆண்டின் பன்னிரு மாதங்களையும் கூட்டினால் பெறுவது பத்தொன்பது. மனிதர்கள் பெற்றுள்ள தத்துவங்கள் 19 என்றும், மனிதன் உறுதிகொள்ள வேண்டிய நம்பிக்கைகள் 19 என்றும், அர்சு, குர்சு, எழுவான், மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஜீவாதாரத் தாது இனங்கள், மானிட இதயம், ஈரல், மூளை ஆகிய வற்றிற்குரிய காவலர்களாகிய அமரர்கள் 19 என்றும் அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். காலத்தை வென்று ஞாலத்தை வாழவைக்கும் சீலத்திருமறையுடன்19 பிணைக்கப்பட்டுள்ளது. பஸ்மலாத் தொடரில் அடங்கியுள்ள இஸ்ம். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், - ஆகிய நான்கு தொடர்களும் திருமறைக் குள் பத்தொன்பதன் பெருக்கமாகவே இடம்பெற்றுள்ளன.
இஸ்ம் 19 x 1 = 19 தடவையும், அல்லாஹ் 19 x 142 = 2698 தடவைகளும், ரஹ்மான் 19 x 3 = 57 தடவைகளும், ரஹீம் 19 x 6 = 114 தடவைகளும் திருமறைக்குள் இடம் பெற்றுள்ளன. அரபி நெடுங்கணக்கில் 28 எழுத்துக்கள். 114 சூறாக்கள் ஆகிய வற்றின் கூட்டுத்தொகையாகிய 142 ன் பெருக்கமாகவே அல்லாஹ் 2698 தடவைகள் இடம்பெற்றுள்ளதும் ரஹ்மான் என்பதன் இரட்டிப்பாக ரஹீம் அமைந்திருப்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
பாருலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான விந்தைக்குரிய அரபி மொழி எழுத்துக்களின் ஒலி, வரி வடிவங்கள், தத்துவங்கள் பலவற்றைத் தாங்கியுள்ளன. நேர் கோடு ஒன்றை அகரமாகத் தலைப்பிலே நிறுத்திப் பின்னர் அதனையே படுத்தும் வளைத்தும் நெளித்தும் புள்ளிகள் இல்லாமலும் அமைந்துள்ள எழுத்துக்களின் வரிவடிவம் ஒரு வகைச் சுருக்கெழுத்தாகவே விளங்குகின்றது. அவ்வெழுத்துக் களுக்கு அமைக்கப்பட்டுள்ள “அப்ஜதீ” என்னும் எண் கணிதமும் ஒருபெரும் அற்புதமாகும். எழுத்துக்களைச் சூரிய எழுத்துக்கள், சந்திர எழுத்துக்கள், இருள் எழுத்துக்கள், ஒளி எழுத்துக்கள் என்பதாக வகைப்படுத்துவதும் உண்டு. “ஸப் அன் மினல் மதானி” எனப்படும் திருப்பித் திருப்பி ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட பாத்திஹா சூறாவில் இருள் எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பதை எடுத்துக்காட்டுவதும் உண்டு. 28 அரபி எழுத்துக்களின் நேர்பாதியாகிய 14 எழுத்துக்கள் “ஹுருப்ஃபுல் முகத்த ஆத்” (சங்கேத எழுத்துக்கள்) என்பதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பதினான்கினையும் எழுத்துக்களின் சுரங்கமென்றும் பேச்சு மொழியின் தொடக்கமென்றும் ஹலரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அல்லாமா சுயூத்தி அவர்கள் இத்கானில் எடுத்துரைத்துள்ளார்கள். அலீஃப், லாம், மீம், யா, ஸீன் இச்சங்கத்தே எழுத்துக்கள் பதினான்கும் பதினான்கு வகையான இணைப்புகளைப் பெற்று திருமறை யின் 29 சூறாக்களின் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் அத்தியாயத்திற்குள் இருக்கும் எழுத்துக்கள் வெளியேறி விடாமலும், வெளியிலிருந்து பிற நுழைந்து விடாமலும் அவை திறம்படக் காவல் புரிகின்றன.
குர்ஆன் என்னும் சொல்லின் முதலெழுத்து காஃப், ஈற்றெழுத்து நூன், சூறா 68-நூன் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள நூன்களின் எண்ணிக்கை 133, அதாவது 19 x 7=133 சூறா 50-காஃப் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள காஃப் களின் எண்ணிக்கை 57. அதாவது 19 x 3= 57 ஹா மீம் ஐன் ஸீன் காஃப் எனத் தொடங்கும் 42-வது சூறாவில் 57 காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாவில் 57காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாக்களிலுமுள்ள 114 காஃப்களும் குர்ஆனிலுள்ள சூறாக்களைக் குறிக்கும் இஷாராவாக உள்ளன. சங்கேத எழுத்துக்களுடன் தொடங்கும் எல்லா சூறாக்களிலும் தலைப்பிலுள்ள சங்கேத எழுத்துக்கள் பத்தொன்பதன் பெருக்கமாகவே அந்த சூறாக்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான கட்டுக்கோப்பு டன் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருப்பதால் திருமறைக்குள் ஓர் எழுத்தைப் புகுத்தினாலும், அகற்றினாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இவை மட்டுமின்றித் திருமறை யினுள் பல சொற்களும் அவற்றின் எதிர்ச்சொற்களும் ஒரே அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக, இம்மை யைக் குறிக்கும் துன்யா-115 தடவைகள்; மறுமையைக் குறிக்கும் ஆகிரத்-115 தடவைகள்; வாழ்க்கையைக் குறிக்கும் ஹயாத்-145; இறப்பைக் குறிக்கும் மெளத்து-145; நன்மையைக் குறிக்கும் ஸாலிஹாத்-167; தீமையைக் குறிக்கும் ஸையிஆத் -167; கடுமையைக் குறிக்கும் ஷித்தத்-102; பொறுமையைக் குறிக்கும் ஸப்ரு-102; துன்பத்தைக் குறிக்கும் முஸீபத்து-75; நன்றியைக் குறிக்கும் ஷுக்ரு-75.
எதிர்ச்சொற்களின் எண்ணிக்கையில் சமநிலை இருப்பது போன்றே தொடர்புடைய பல சொற்களிலும் ஒரு சமநிலை யைக் காண்கிறோம். நபாத் (முளை) ஷஜர் (மரம்) இரண்டும் 26 தடவைகள்; ரஹ்மத் (கருணை) ஹுதா (நேர்வழி) இரண்டும் 79 தடவைகள் பிர்ரு (நற்செயல்), தவாப் (நன்மை) இரண்டும் 20 தடவைகள்.
இவை போன்று நூற்றுக்கணக்கான சொற்களில் சமநிலை யைக் காண்கின்றோம். மேலும் ஓர் ஆண்டில் அமைந்துள்ள 12 மாதங்களும் இஷாராவாக ஷஹ்ர் (மாதம்) என்னும் சொல் 12 தடவைகளும் ஓர் ஆண்டிலுள்ள 365 நாட்களுக்கு இஷாராவாக யவ்ம (நாள்) என்னும் சொல் 365 தடவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பின்னணியில் கவிதையுலகில் முன்னணியில் நிற்கும் புனித இலக்கியமாகிய கஸீதத்துல் புர்தாவில் ”ஃபலாது அத்து” எனத் தொடங்கும் பாவடிகளைப் பாடுகின்றபோது மெய் சிலிர்த்து விடுகின்றது.
“கத்தன்மறை அற்புதங்கள் கணிப்புக்கள வுக்கடங்கா;
நித்தமதை ஓதிவரும் நேயர் அடையார் அலுப்பே”
சாதாரண ஆசிரியர் ஒருவரின் நூலை இரண்டாவது முறை யாகப் படிக்கும்போது சலிப்படைகின்ற நாம் திருமறையின் ஒரு சூறாவை – பாத்திஹா சூறாவை –ஓராயிரம் தடவைகள் ஓதினாலும் உள்ளம் சலிப்படையாமலிருப்பதன் இரகசியம் இறைமறையின் அற்புதமேயாகும். இவ்வற்புதத்திற்கு இணை யான தொன்றை எங்கும் எவரும் எப்போதும் காணமுடியுமா தென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வல் ஹம்துலில்லாஹ்!
( அல் குர்ஆன் ஓர் அற்புதம் எனும் நூலிலிருந்து ……….. )
பதிப்பாசிரியர் :
பேராசிரியர் மு. கலீல் அகமது எம்.ஏ
தமிழ்த்துறை
புதுக்கல்லூரி
சென்னை 600 014
வெளியீடு :
நன்னெறிப் பதிப்பகம்
17-18 B, பாறையடித் தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, August 5, 2009
shab-e-bara'at
ahmed muhammad mahroof
tosirajudin b
Assalamu Alaikkum
Dear brothers, first and foremost be clarified that we are not "CELBRATING" shab-e-bara'at.
This termonology is always used by these brothers leading to misguide. We are only advised and trying to do more righteous deeds on these particular days. Regarding the hadiths being week or strong, or about the validity of reciting Sura Yaseen,what is the real meaning of "Bid'ah" "good innovations" "bad innovations" leave it to the scholars.
Secondly, As per Qur'an teaching we muslims should obey who has authority over us, A doctor has authority over us regarding our health, a teacher has authotiy over a student, an auditor has authority over your wealth, earnings,trade, a lawyer has authority over our court cases,litigations if any etc. If the concerned person acts against these people it is he who suffersand not the doctor,nor teacher nor auditor nor lawer. Likewise an Alim i.e religious scholar has authority over us regarding religious affairs.
However you will agree that you cannot have two doctors, or two teachers, or two auditors or two lawers with opposite and contradicting views to obey. which will lead to confution.
So you decide whether you want to follow the religious scholars who are advising to increase the religious deeds or the ones who always want to reduce your religious deeds. Do you think that Allah is going to punish us for reciting the Holy Qur'an and thasbeeh,and asking Dua on a particular day.
Even after all the above clarification you feel it may be a bid'ah, the scholars who advised us are going to be taken to task by Allah and not us.
So be relaxed and attend the shab-e-bara'at programmes (not celebrations) arranged tonight at D'Block, Kottai pallivasal and Kuwait pallivasal
wassalam/best regards
A.Mahroof
--- On Wed, 8/5/09, sirajudin b wrote:
From: sirajudin b
Subject: Shab-e-Bara'at - Can we celebrate or no ?
To: mahroof1958@yahoo.com
Cc: muduvaihidayath@gmail.com, bilaliyam@gmail.com
Date: Wednesday, August 5, 2009, 2:18 AM
Assalamu alaikum,
I received this mail.I'm following sunath wal jamath Please i need clarification for this mail.
I got confused about this matter
tosirajudin b
Assalamu Alaikkum
Dear brothers, first and foremost be clarified that we are not "CELBRATING" shab-e-bara'at.
This termonology is always used by these brothers leading to misguide. We are only advised and trying to do more righteous deeds on these particular days. Regarding the hadiths being week or strong, or about the validity of reciting Sura Yaseen,what is the real meaning of "Bid'ah" "good innovations" "bad innovations" leave it to the scholars.
Secondly, As per Qur'an teaching we muslims should obey who has authority over us, A doctor has authority over us regarding our health, a teacher has authotiy over a student, an auditor has authority over your wealth, earnings,trade, a lawyer has authority over our court cases,litigations if any etc. If the concerned person acts against these people it is he who suffersand not the doctor,nor teacher nor auditor nor lawer. Likewise an Alim i.e religious scholar has authority over us regarding religious affairs.
However you will agree that you cannot have two doctors, or two teachers, or two auditors or two lawers with opposite and contradicting views to obey. which will lead to confution.
So you decide whether you want to follow the religious scholars who are advising to increase the religious deeds or the ones who always want to reduce your religious deeds. Do you think that Allah is going to punish us for reciting the Holy Qur'an and thasbeeh,and asking Dua on a particular day.
Even after all the above clarification you feel it may be a bid'ah, the scholars who advised us are going to be taken to task by Allah and not us.
So be relaxed and attend the shab-e-bara'at programmes (not celebrations) arranged tonight at D'Block, Kottai pallivasal and Kuwait pallivasal
wassalam/best regards
A.Mahroof
--- On Wed, 8/5/09, sirajudin b
From: sirajudin b
Subject: Shab-e-Bara'at - Can we celebrate or no ?
To: mahroof1958@yahoo.com
Cc: muduvaihidayath@gmail.com, bilaliyam@gmail.com
Date: Wednesday, August 5, 2009, 2:18 AM
Assalamu alaikum,
I received this mail.I'm following sunath wal jamath Please i need clarification for this mail.
I got confused about this matter
Islamic Banking seminar at Bhatkal: (Urdu)
Iqbal Soofi
dateTue, Aug 4, 2009 at 10:17 PM
subject[nrindians] Islamic Banking seminar at Bhatkal: (Urdu)
please click the link:
http://www.sahilonline.org/urdu/news.php?catID=coastalnews&nid=2366&viewed=0
----------------------------------
-- Iqbal Soofi
o State of Kuwait
dateTue, Aug 4, 2009 at 10:17 PM
subject[nrindians] Islamic Banking seminar at Bhatkal: (Urdu)
please click the link:
http://www.sahilonline.org/urdu/news.php?catID=coastalnews&nid=2366&viewed=0
----------------------------------
-- Iqbal Soofi
o State of Kuwait
Tuesday, August 4, 2009
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி
இன்று காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி எனும் ஒரு காவியத்திற்கு பிரிவு உபச்சார நிமித்தமாக நாம் கூடியுள்ளோம்! அவரைப்பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உண்டு என்பதால் அவற்றை பகுதி பகுதியாக பிரித்துக் கூறப்போகிறேன்! முடிவில் நீங்கள் விருப்பப்பட்டால் மொத்தமாகவும் .. இன்னும் சத்தமாகவும் கூற நான் தயார் என்று கூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறேன்!
இவர் ஒரு கவிஞர்
ஒற்றை வரி ஹைக்கூ
கருவெடுத்து
புதுக்கவிதைகளின்
புதுமைச் சேர்த்து
மரபுக்கவிதைகளின்
மரபுமீறாமல்
இவர்தரும் அதிரடி
கவி கேட்போர்
‘சும்மா அதிருதில்ல”
எனச்சொல்வார்…
இவர் ஒரு பேச்சாளர்
வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்
தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை
சிறுத்தைபோல் சில கணம் பார்த்து
அவர் கர்ஜி;கும் சத்தத்தில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம்
இவர் மேடையில் நடத்துவார்
பேச்சில் ஆட்டம் பாட்டம்
இவர் ஒரு ஆன்மீகவாதி
ஆன்மீகம் என்றுவிட்டால்
யார்மீதும் நாட்டமில்லாமல்
உலகின்மீது நோட்டமில்லாமல்
தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்
தனித்திருப்பார் சிலர்!
இவர் இலக்கியம் இஸ்லாம்
இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்
இலக்கியம் என்று வந்துவிட்டால்
கலக்கிடுவார்
இஸ்லாம் என்று வந்துவிட்டால்
கலங்கிடுவார்
மதமென்று மதங்கொள்ளாமல்
மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி
இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!
மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்
வாழ்க்கைப் பிரசாதம்!
இவர் ஒரு நடிகர்
இதற்கு முன் வந்தமுகம்
தெரிந்திருந்தாலும்
இந்த முகம் உங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
விருச்சங்கள் சிலநேரம்
விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்
இந்தத் திறன் இவர்தம்
பள்ளி நாட்களுடன்
தள்ளிப் போனது
பச்சையப்பன் கல்லூரியில்
இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்
அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!
இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்
பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது
பழம்பெற்ற கவிஞர்
புலவர் நாராயணனால்
நடத்தப்பட்ட
மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்
நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்
இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை
இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!
எத்தனையோ திறமைகள் இவருள்
அடங்கியிருந்தாலும் - அவையில்
அடங்கியிருத்தல் இவர்
தனித்திறன்..
அதற்கேற்றார் போல்
வேலூர் கவியரங்கில்
இவர்பாடிய அவையடக்கக் கவிதை
இவருக்கு சபையடங்கா கைத்தட்டை
பெற்றுத்தந்தது!
இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1
இவர் ஒரு திறனாய்வாளர்;
மற்றவர் இவர் திறன் ஆய்வு
செய்து கொண்டிருந்த வேளையில்
மு.மேத்தாவின்
கண்ணீர்ப+க்களை இவர்செய்த
திறனாய்வு
இவர் திறன் மேன்படச்
செய்த ஆய்வு
என்றுமே இல்லை இவர்தம்
திறன் ஓய்வு
இவர் ஒரு கவிக்கடல்
இவர் ஒரு கவிக்கடல் - ஆம்
அரபுமொழி என்று விட்டால
இவர் ஒரு அரபிக்கடல்!
இந்தி உருது என வந்துவிட்டால்
இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்
முத்தமிழை முகர்ந்து விட்டால்
முக்கடல் சங்கமம்
கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்
இவர் ஒரு செங்கடல்
இதை அன்றே அறிந்தோ
என்னவோ சென்னையில்
கவிஞர் பொன்னடியான்
நடத்திய கடற்கரை கவியரங்கில்
இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்
கவிதைகளோ தாராளம்!
இவருக்கு வெடிகுண்டு
வைத்த அனுபவமும் உண்டு
எவன் எப்படி போனால் என்னவென்று
வெறித்தனமாய் வைக்கப்படும்
வீணர்களின் வெடியல்ல இது
எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற
வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..
ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்
வேற்றுமைக்கு வெடிவைப்போம்
என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்
சமூக அக்கறை கொண்டோரின்
மறக்க இயலா தினங்கள்!
25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!
அப்படி புதைந்த சந்திரனை
தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை
நம் காவிரிமைந்தனை; சாரும்..
அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்
சுரம் சேருங்கள்..
இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!
அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!
அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!
ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!
இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!
இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..
திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..
அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்
புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -
நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..
இப்படி இவரின் பின்னணியில்
பல முன்னணிப் பதவிகள் உண்டு..
இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை
விடைகாண இயலா வினா..
இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை
நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற
எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!
RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)
இன்று காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி எனும் ஒரு காவியத்திற்கு பிரிவு உபச்சார நிமித்தமாக நாம் கூடியுள்ளோம்! அவரைப்பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உண்டு என்பதால் அவற்றை பகுதி பகுதியாக பிரித்துக் கூறப்போகிறேன்! முடிவில் நீங்கள் விருப்பப்பட்டால் மொத்தமாகவும் .. இன்னும் சத்தமாகவும் கூற நான் தயார் என்று கூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறேன்!
இவர் ஒரு கவிஞர்
ஒற்றை வரி ஹைக்கூ
கருவெடுத்து
புதுக்கவிதைகளின்
புதுமைச் சேர்த்து
மரபுக்கவிதைகளின்
மரபுமீறாமல்
இவர்தரும் அதிரடி
கவி கேட்போர்
‘சும்மா அதிருதில்ல”
எனச்சொல்வார்…
இவர் ஒரு பேச்சாளர்
வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்
தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை
சிறுத்தைபோல் சில கணம் பார்த்து
அவர் கர்ஜி;கும் சத்தத்தில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம்
இவர் மேடையில் நடத்துவார்
பேச்சில் ஆட்டம் பாட்டம்
இவர் ஒரு ஆன்மீகவாதி
ஆன்மீகம் என்றுவிட்டால்
யார்மீதும் நாட்டமில்லாமல்
உலகின்மீது நோட்டமில்லாமல்
தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்
தனித்திருப்பார் சிலர்!
இவர் இலக்கியம் இஸ்லாம்
இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்
இலக்கியம் என்று வந்துவிட்டால்
கலக்கிடுவார்
இஸ்லாம் என்று வந்துவிட்டால்
கலங்கிடுவார்
மதமென்று மதங்கொள்ளாமல்
மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி
இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!
மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்
வாழ்க்கைப் பிரசாதம்!
இவர் ஒரு நடிகர்
இதற்கு முன் வந்தமுகம்
தெரிந்திருந்தாலும்
இந்த முகம் உங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
விருச்சங்கள் சிலநேரம்
விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்
இந்தத் திறன் இவர்தம்
பள்ளி நாட்களுடன்
தள்ளிப் போனது
பச்சையப்பன் கல்லூரியில்
இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்
அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!
இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்
பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது
பழம்பெற்ற கவிஞர்
புலவர் நாராயணனால்
நடத்தப்பட்ட
மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்
நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்
இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை
இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!
எத்தனையோ திறமைகள் இவருள்
அடங்கியிருந்தாலும் - அவையில்
அடங்கியிருத்தல் இவர்
தனித்திறன்..
அதற்கேற்றார் போல்
வேலூர் கவியரங்கில்
இவர்பாடிய அவையடக்கக் கவிதை
இவருக்கு சபையடங்கா கைத்தட்டை
பெற்றுத்தந்தது!
இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1
இவர் ஒரு திறனாய்வாளர்;
மற்றவர் இவர் திறன் ஆய்வு
செய்து கொண்டிருந்த வேளையில்
மு.மேத்தாவின்
கண்ணீர்ப+க்களை இவர்செய்த
திறனாய்வு
இவர் திறன் மேன்படச்
செய்த ஆய்வு
என்றுமே இல்லை இவர்தம்
திறன் ஓய்வு
இவர் ஒரு கவிக்கடல்
இவர் ஒரு கவிக்கடல் - ஆம்
அரபுமொழி என்று விட்டால
இவர் ஒரு அரபிக்கடல்!
இந்தி உருது என வந்துவிட்டால்
இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்
முத்தமிழை முகர்ந்து விட்டால்
முக்கடல் சங்கமம்
கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்
இவர் ஒரு செங்கடல்
இதை அன்றே அறிந்தோ
என்னவோ சென்னையில்
கவிஞர் பொன்னடியான்
நடத்திய கடற்கரை கவியரங்கில்
இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்
கவிதைகளோ தாராளம்!
இவருக்கு வெடிகுண்டு
வைத்த அனுபவமும் உண்டு
எவன் எப்படி போனால் என்னவென்று
வெறித்தனமாய் வைக்கப்படும்
வீணர்களின் வெடியல்ல இது
எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற
வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..
ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்
வேற்றுமைக்கு வெடிவைப்போம்
என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்
சமூக அக்கறை கொண்டோரின்
மறக்க இயலா தினங்கள்!
25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!
அப்படி புதைந்த சந்திரனை
தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை
நம் காவிரிமைந்தனை; சாரும்..
அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்
சுரம் சேருங்கள்..
இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!
அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!
அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!
ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!
இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!
இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..
திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..
அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்
புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு
மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -
நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..
இப்படி இவரின் பின்னணியில்
பல முன்னணிப் பதவிகள் உண்டு..
இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை
விடைகாண இயலா வினா..
இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை
நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற
எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!
RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் அமீரகம் வருகை
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் அமீரகம் வருகை
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=199
துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் 04.08.2009 செவ்வாய்க்கிழமை மாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஷார்ஜா வருகை புரிந்தார்.
துபாயில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆவூர் தாருஸ் ஸலாம் அரபி மதரஸா முதல்வர் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ வருகை புரிந்தார். அவரை விமான நிலையத்தில் கவானிஜ் ஹிப்ஸ் மதரஸா நிர்வாகி அப்பாஸ் ஹஜ்ரத், அப்துல் ரஹ்மான், மவ்லவி இஸ்மாயில் ஹஸனி, பொறியாளர் பீர் முஹம்மது, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.



ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் அமீரகம் வருகை
துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் 04.08.2009 செவ்வாய்க்கிழமை மாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஷார்ஜா வருகை புரிந்தார்.
துபாயில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆவூர் தாருஸ் ஸலாம் அரபி மதரஸா முதல்வர் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ வருகை புரிந்தார். அவரை விமான நிலையத்தில் கவானிஜ் ஹிப்ஸ் மதரஸா நிர்வாகி அப்பாஸ் ஹஜ்ரத், அப்துல் ரஹ்மான், மவ்லவி இஸ்மாயில் ஹஸனி, பொறியாளர் பீர் முஹம்மது, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=199
துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் 04.08.2009 செவ்வாய்க்கிழமை மாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஷார்ஜா வருகை புரிந்தார்.
துபாயில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆவூர் தாருஸ் ஸலாம் அரபி மதரஸா முதல்வர் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ வருகை புரிந்தார். அவரை விமான நிலையத்தில் கவானிஜ் ஹிப்ஸ் மதரஸா நிர்வாகி அப்பாஸ் ஹஜ்ரத், அப்துல் ரஹ்மான், மவ்லவி இஸ்மாயில் ஹஸனி, பொறியாளர் பீர் முஹம்மது, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் அமீரகம் வருகை
துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் 04.08.2009 செவ்வாய்க்கிழமை மாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஷார்ஜா வருகை புரிந்தார்.
துபாயில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆவூர் தாருஸ் ஸலாம் அரபி மதரஸா முதல்வர் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ வருகை புரிந்தார். அவரை விமான நிலையத்தில் கவானிஜ் ஹிப்ஸ் மதரஸா நிர்வாகி அப்பாஸ் ஹஜ்ரத், அப்துல் ரஹ்மான், மவ்லவி இஸ்மாயில் ஹஸனி, பொறியாளர் பீர் முஹம்மது, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
Labels:
அமீரகம்,
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத்
Monday, August 3, 2009
Free SMS Web site
Free SMS Web site
Send free SMS to any mobile in
UAE, Saudi, Kuwait, India, Singapore, Philippines & Malaysia
http://www.160by2.com/ae/index.aspx
Send free SMS to any mobile in
UAE, Saudi, Kuwait, India, Singapore, Philippines & Malaysia
http://www.160by2.com/ae/index.aspx
TIME TRUST
In the name of Almighty the most gracious and the most merciful
PROFESSIONALISE AND PROSPER
TIME TRUST
(THE ILAYANGUDI MUSLIM EDUCATIONAL TRUST)
Reg: No:21/2008 dt.29.1.2008
The deed for the Trust was executed on 21st day of January 2008, by
T.S.H. Musafer Abdul Rahuman with the following as Members of the Trust
1. Alhaj. Captain. N.A. Ameer Ali M.A.
Founder Principal, Dr. Zakir Husain College.
2. Alhaj. T.S.E. Amir Ali.
3. Alhaj. M.M. Fazal Mohamed B.Sc., Assistant Divisional Manager.
L.I.C. of India.
4. A. Ajmalkhan Howth B.A., Businessman
5. Alhaj. Pea. Abdul Karim
Principal Al Ameen Buhari Alim Industrial Training Centre.
6. Janab.Dr. M.E.Syed Hussain M.Com.,B.Ed., Phd.,
Principal Dr.Zakir Husain College .
7. Janab. A.E.John Mohamed.M.A.B.Ed., Head Master, Ilayangudi Higher Secondary School.
8.. Janab. A.S.Abideen M.Sc., M.Phil. B.Ed., Professsor Dr. Zakir Husain College Ilayangudi.
The Trust shall be a non-profit organization established and
managed purely with the motive to serve the people without any distinction of caste creed religion or language.
The deed of Trust envisages numerous objectives. To begin with the trustees have decided to concentrate on the following objectives. These mainly relate to building up the younger generation of the rural area with enthusiasm courage and confidence to meet the challenges of modern day life. We chose to work for the empowerment of the rural youth through supplementary activities in the realm of education and enlightenment.
Our chosen areas of work are as follows:
To scout for talented students belonging to poorer sections, who could not pursue their education and help them to continue their education.
To continuously monitor and check dropouts in the Higher Secondary Schools, Industrial Training Institutes and take all possible steps to prevent the menace. If it be due to financial constraints arrange for necessary help to such students and encourage them to continue their education.
To collect information regarding Scholarships, Stipends, Subsidies, Concessions, provided by State and Central Governments, and other Agencies and disseminate them among students and educational Institutions.
To organize and conduct career oriented training programmes for the benefit of the unemployed youth of this area and render all help to build them with confidence courage and conviction.
To collect and disseminate information in respect of the opportunities available for higher education and employment in various segments amongst the unemployed youth and render necessary assistance for their placement.
To organize and conduct vocational and career guidance programmes and coaching classes for Civil Service Examinations, TNPSC Examinations, and other Competitive Examinations.
The Inauguration
It was on an auspicious Wednesday the 23rd of April 2008 our activities were formally inaugurated in a grand and well attended function.
The famous film Director Thiru. Ameer was the chief guest.
Janab. S.M. Idayathullah General Secretary of the Islamic Literary Society delivered the special address. Directed Ameer inaugurated the month long summer camp that was to start on the following day.
Our first Summer Camp for boys
“Nurturing aspiring minds for excellence” is our motto.
Twenty one students hailing from different hues and communities were given intensive training in the following areas.
Physical fitness, yoga, General hygiene, Etiquette, General knowledge, Interview Skills, Memory Skills, Public Speaking, Developing Self Confidence and
Self Esteem and Spoken English.
Competent resource persons from different places were invited to impart training. Notable among them is the team from “Nikile” Foundation lead by its founder Thiru. Nagalingam, Inspector of Central Excise Madurai.
Thiru.Kalaimuthan Head Master from Ramanathapuram who has earned a name for training rural students as mathematical wvizards imparted training to the boys in enhancing their arithmetical ability.
Medical Doctors were invited to speak about personal hygiene.
Prof. Dr. V.M. Shajahan Gani gave an illuminating lecture on public speaking.
Our trustees T.S.H. Musafer Abdul Rahuman, Dr. M.E. syed Husain,
P.Ea. Abdul Karim, and Dr. A.S. Abideen handled classes for the students.
The latest audio Visual equipments like the LCD projectors were used for the training. The participants of the Camp were taken for an Educational Tour.
The feed back from the participants and their parents was encouraging. Signs of attitudinal change and behavioral modifications were very much visible.
Hajee S. N. Shaik Dawood was kind enough to willingly donate a sum of
Rs. 10,000/= to supplement the expenses of the camp.
Public meeting to create awareness of Education.
On 22.11.2008 Saturday 6.30.P.M.
While the entire Globe is shrinking in to a Village and there is an epidemic realization that “Knowledge is power” our folks in the rural areas are in deep slumber of the yester years. Hence we organized a grand meeting to highlight the importance of Education particularly that of female children.
Janab. C.M.N. SALEEM., M.A.,
Madem. A.K. THASREEF JAHAN., M.A., M.Phil.,
Retired Principal, Meenakshi Government Arts College, Madurai.
Were the guests honour. They spoke about the importance of Education, particularly of the female children. The message was well received by the people. The programme was recorded by a team from Tamilan T.V, and was telecast in installments for two weeks.
Training for Competitive Examinations.
In tune with our objective that we should organize training classes for aspirants of this area for Competitive Examinations we scouted for aspirants in our area qualified for recruitment as Typist and Stenographer in the
Government of Tamil Nadu. But unfortunately we drew blank.
Again when the Government of Tamil Nadu advertised for TNPC examinations for Group I and II we issued pamphlets and made announcements through public address system inviting aspirants to attend free classes for the said examinations.
Again we were disappointed. Virtually there was no response. Undaunted by these negative results we continue to publicise employment opportunities through a Notice board.
On introspection and analysis for the reasons for the absence of response from the unemployed youth for our programmes we found that:
First of all ignorance about the on going recruitment processes is the first reason.
Secondly a sense of diffidence and lack of self confidence and self esteem were found to be the reasons.
Hence we have decided to enlighten the students about these opportunities right from the Higher Secondary and College levels.
Guidance to students to obtain Scholarships
We continue to disseminate information to the students regarding various Scholarships available to them. We also guide and help them to avail them.
Our Second Summer Camp
As we have done during last year we have organized a month long camp for boys during this year also. It was conducted during the month of May 2009.
Spoken English and Personality Development were the key areas of our training.
13 boys from all sections of the society attended the programme.
Personality Development and Motivational programme for students.
Our Trustees T.S.H. Musafer Abdul Rahuman and Dr. A.S. Abideen have developed a module for Personality Development and Motivation for students. As a pilot programme it was conducted for the students of Ilayangudi Melapalllivasal Girls Higher Secondary School.
The presentations were well received by the Students and Teachers. We propose to give this presentation in all the schools around this area.
Our Educatioinal Assistance Programmes.
We have just started our services. We are yet to launch our activities in a big way. However during the by gone period of a year and so we have been able to give a sum of Rs.35,100.00 as Educational Assistance to deserving students. We have ambitious plans to mobilize more funds and carry on our activities in a befitting manner. The success of our effort depends on our ability to mobilize funds. Though the need of the community is huge we estimate that sum of Rs. 3lakhs for the current year, may put us good stead to undertake some meaningful commitments.
OUR IMMEDIATE PLANS
Our immediate concern is to confine our effort to the six important items enumerated above. Amongst them we consider the following two areas as the most important and would like to concentrate our activities in these aspects.
To scout for talented students belonging to poorer sections, who could not pursue their education and help them to continue their education.
To continuously monitor and check dropouts in the Higher Secondary Schools, Industrial Training Institutes and take all possible steps to prevent the menace. If it be due to financial constraints arrange for necessary help to such students and encourage them to continue their education.
We have also planned to conduct regular classes for “Spoken English”
The success of our effort is directly related to the availability of resources.
Our appeal to our brethren is
Have you had a kindness shown?
Pass it on.
It was not given for thee alone.
Pass it on.
Let it travel down the years,
Let it wipe another’s tears.
In the name of Almighty the most gracious and the most merciful
PROFESSIONALISE AND PROSPER
THE ILAYANGUDI MUSLIM EDUCATIONAL TRUST
(TIME TRUST)
Reg: No: 21/2008 dated 29.01.2008
Income Tax PAN. No: AABTT5843K
We endeavour to nurture aspiring minds towards excellence
Our submissions
For recognition under section 80-G (5) of Income Tax Act 1961
And
Registration under section 12AA of Income Tax Act 1961
CONTENTS
Report of our activities for the period from 21.01.2008 to 31.03.2009
Photographs and leaflets in support of our activities
Details of our Trustees with their Income Tax PAN. Nos
Statement of Accounts for the year ending 31.03.2008.
Statement of Accounts for the year ending 31.03.2009
Xerox copy of the Pass Book of our Bank Account.
Xerox copy of our Trust deed
17.07.2009
KINDLY HELP US TO HELP
PROFESSIONALISE AND PROSPER
TIME TRUST
(THE ILAYANGUDI MUSLIM EDUCATIONAL TRUST)
Reg: No:21/2008 dt.29.1.2008
The deed for the Trust was executed on 21st day of January 2008, by
T.S.H. Musafer Abdul Rahuman with the following as Members of the Trust
1. Alhaj. Captain. N.A. Ameer Ali M.A.
Founder Principal, Dr. Zakir Husain College.
2. Alhaj. T.S.E. Amir Ali.
3. Alhaj. M.M. Fazal Mohamed B.Sc., Assistant Divisional Manager.
L.I.C. of India.
4. A. Ajmalkhan Howth B.A., Businessman
5. Alhaj. Pea. Abdul Karim
Principal Al Ameen Buhari Alim Industrial Training Centre.
6. Janab.Dr. M.E.Syed Hussain M.Com.,B.Ed., Phd.,
Principal Dr.Zakir Husain College .
7. Janab. A.E.John Mohamed.M.A.B.Ed., Head Master, Ilayangudi Higher Secondary School.
8.. Janab. A.S.Abideen M.Sc., M.Phil. B.Ed., Professsor Dr. Zakir Husain College Ilayangudi.
The Trust shall be a non-profit organization established and
managed purely with the motive to serve the people without any distinction of caste creed religion or language.
The deed of Trust envisages numerous objectives. To begin with the trustees have decided to concentrate on the following objectives. These mainly relate to building up the younger generation of the rural area with enthusiasm courage and confidence to meet the challenges of modern day life. We chose to work for the empowerment of the rural youth through supplementary activities in the realm of education and enlightenment.
Our chosen areas of work are as follows:
To scout for talented students belonging to poorer sections, who could not pursue their education and help them to continue their education.
To continuously monitor and check dropouts in the Higher Secondary Schools, Industrial Training Institutes and take all possible steps to prevent the menace. If it be due to financial constraints arrange for necessary help to such students and encourage them to continue their education.
To collect information regarding Scholarships, Stipends, Subsidies, Concessions, provided by State and Central Governments, and other Agencies and disseminate them among students and educational Institutions.
To organize and conduct career oriented training programmes for the benefit of the unemployed youth of this area and render all help to build them with confidence courage and conviction.
To collect and disseminate information in respect of the opportunities available for higher education and employment in various segments amongst the unemployed youth and render necessary assistance for their placement.
To organize and conduct vocational and career guidance programmes and coaching classes for Civil Service Examinations, TNPSC Examinations, and other Competitive Examinations.
The Inauguration
It was on an auspicious Wednesday the 23rd of April 2008 our activities were formally inaugurated in a grand and well attended function.
The famous film Director Thiru. Ameer was the chief guest.
Janab. S.M. Idayathullah General Secretary of the Islamic Literary Society delivered the special address. Directed Ameer inaugurated the month long summer camp that was to start on the following day.
Our first Summer Camp for boys
“Nurturing aspiring minds for excellence” is our motto.
Twenty one students hailing from different hues and communities were given intensive training in the following areas.
Physical fitness, yoga, General hygiene, Etiquette, General knowledge, Interview Skills, Memory Skills, Public Speaking, Developing Self Confidence and
Self Esteem and Spoken English.
Competent resource persons from different places were invited to impart training. Notable among them is the team from “Nikile” Foundation lead by its founder Thiru. Nagalingam, Inspector of Central Excise Madurai.
Thiru.Kalaimuthan Head Master from Ramanathapuram who has earned a name for training rural students as mathematical wvizards imparted training to the boys in enhancing their arithmetical ability.
Medical Doctors were invited to speak about personal hygiene.
Prof. Dr. V.M. Shajahan Gani gave an illuminating lecture on public speaking.
Our trustees T.S.H. Musafer Abdul Rahuman, Dr. M.E. syed Husain,
P.Ea. Abdul Karim, and Dr. A.S. Abideen handled classes for the students.
The latest audio Visual equipments like the LCD projectors were used for the training. The participants of the Camp were taken for an Educational Tour.
The feed back from the participants and their parents was encouraging. Signs of attitudinal change and behavioral modifications were very much visible.
Hajee S. N. Shaik Dawood was kind enough to willingly donate a sum of
Rs. 10,000/= to supplement the expenses of the camp.
Public meeting to create awareness of Education.
On 22.11.2008 Saturday 6.30.P.M.
While the entire Globe is shrinking in to a Village and there is an epidemic realization that “Knowledge is power” our folks in the rural areas are in deep slumber of the yester years. Hence we organized a grand meeting to highlight the importance of Education particularly that of female children.
Janab. C.M.N. SALEEM., M.A.,
Madem. A.K. THASREEF JAHAN., M.A., M.Phil.,
Retired Principal, Meenakshi Government Arts College, Madurai.
Were the guests honour. They spoke about the importance of Education, particularly of the female children. The message was well received by the people. The programme was recorded by a team from Tamilan T.V, and was telecast in installments for two weeks.
Training for Competitive Examinations.
In tune with our objective that we should organize training classes for aspirants of this area for Competitive Examinations we scouted for aspirants in our area qualified for recruitment as Typist and Stenographer in the
Government of Tamil Nadu. But unfortunately we drew blank.
Again when the Government of Tamil Nadu advertised for TNPC examinations for Group I and II we issued pamphlets and made announcements through public address system inviting aspirants to attend free classes for the said examinations.
Again we were disappointed. Virtually there was no response. Undaunted by these negative results we continue to publicise employment opportunities through a Notice board.
On introspection and analysis for the reasons for the absence of response from the unemployed youth for our programmes we found that:
First of all ignorance about the on going recruitment processes is the first reason.
Secondly a sense of diffidence and lack of self confidence and self esteem were found to be the reasons.
Hence we have decided to enlighten the students about these opportunities right from the Higher Secondary and College levels.
Guidance to students to obtain Scholarships
We continue to disseminate information to the students regarding various Scholarships available to them. We also guide and help them to avail them.
Our Second Summer Camp
As we have done during last year we have organized a month long camp for boys during this year also. It was conducted during the month of May 2009.
Spoken English and Personality Development were the key areas of our training.
13 boys from all sections of the society attended the programme.
Personality Development and Motivational programme for students.
Our Trustees T.S.H. Musafer Abdul Rahuman and Dr. A.S. Abideen have developed a module for Personality Development and Motivation for students. As a pilot programme it was conducted for the students of Ilayangudi Melapalllivasal Girls Higher Secondary School.
The presentations were well received by the Students and Teachers. We propose to give this presentation in all the schools around this area.
Our Educatioinal Assistance Programmes.
We have just started our services. We are yet to launch our activities in a big way. However during the by gone period of a year and so we have been able to give a sum of Rs.35,100.00 as Educational Assistance to deserving students. We have ambitious plans to mobilize more funds and carry on our activities in a befitting manner. The success of our effort depends on our ability to mobilize funds. Though the need of the community is huge we estimate that sum of Rs. 3lakhs for the current year, may put us good stead to undertake some meaningful commitments.
OUR IMMEDIATE PLANS
Our immediate concern is to confine our effort to the six important items enumerated above. Amongst them we consider the following two areas as the most important and would like to concentrate our activities in these aspects.
To scout for talented students belonging to poorer sections, who could not pursue their education and help them to continue their education.
To continuously monitor and check dropouts in the Higher Secondary Schools, Industrial Training Institutes and take all possible steps to prevent the menace. If it be due to financial constraints arrange for necessary help to such students and encourage them to continue their education.
We have also planned to conduct regular classes for “Spoken English”
The success of our effort is directly related to the availability of resources.
Our appeal to our brethren is
Have you had a kindness shown?
Pass it on.
It was not given for thee alone.
Pass it on.
Let it travel down the years,
Let it wipe another’s tears.
In the name of Almighty the most gracious and the most merciful
PROFESSIONALISE AND PROSPER
THE ILAYANGUDI MUSLIM EDUCATIONAL TRUST
(TIME TRUST)
Reg: No: 21/2008 dated 29.01.2008
Income Tax PAN. No: AABTT5843K
We endeavour to nurture aspiring minds towards excellence
Our submissions
For recognition under section 80-G (5) of Income Tax Act 1961
And
Registration under section 12AA of Income Tax Act 1961
CONTENTS
Report of our activities for the period from 21.01.2008 to 31.03.2009
Photographs and leaflets in support of our activities
Details of our Trustees with their Income Tax PAN. Nos
Statement of Accounts for the year ending 31.03.2008.
Statement of Accounts for the year ending 31.03.2009
Xerox copy of the Pass Book of our Bank Account.
Xerox copy of our Trust deed
17.07.2009
KINDLY HELP US TO HELP
Sunday, August 2, 2009
www.me2everyone.com
Hello
From late July 2009 me2everyone is going to be a cool new website where you can meet friends, chat, shop, play, watch videos, create an art gallery, open a virtual newspaper, play the free in world lottery and make money from your own online store! You and everyone you know make the decisions, shape the world, create real incomes and share in the profits. It’s a new place where you meet new people or invite your friends. Learn new skills or expand your business. Find the love of your life or help the planet.
Oh and the great part is that every member also has the option to become a shareholder in me2everyone PLC - a British company all without spending a single penny! me2everyone is free now, free forever. They are about to recruit 70,000 people to run their own customer care business too so if you know anyone that needs some extra work, this could be ideal for them!
If you are looking for something really good in 2009: something that changes your view on the world, then you really have to spend just one minute and look at this website. This is an excellent chance for all of us to make some real progress in 2009 and beyond! Please do not miss it.
www.me2everyone.com/516376
Best regards,
R.Ramachandran
From late July 2009 me2everyone is going to be a cool new website where you can meet friends, chat, shop, play, watch videos, create an art gallery, open a virtual newspaper, play the free in world lottery and make money from your own online store! You and everyone you know make the decisions, shape the world, create real incomes and share in the profits. It’s a new place where you meet new people or invite your friends. Learn new skills or expand your business. Find the love of your life or help the planet.
Oh and the great part is that every member also has the option to become a shareholder in me2everyone PLC - a British company all without spending a single penny! me2everyone is free now, free forever. They are about to recruit 70,000 people to run their own customer care business too so if you know anyone that needs some extra work, this could be ideal for them!
If you are looking for something really good in 2009: something that changes your view on the world, then you really have to spend just one minute and look at this website. This is an excellent chance for all of us to make some real progress in 2009 and beyond! Please do not miss it.
www.me2everyone.com/516376
Best regards,
R.Ramachandran
இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்
இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்
இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்
( தமிழ்மாமணி,முனைவர் மு.அ.முகம்மது உசேன் எம்.ஏ, பி.எச்.டி., )
ஓய்வு பெற்ற குடந்தை கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்,
துணைத்தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
கும்பகோணம். )
http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=170
இஸ்லாமியத் தலைமை ஆளுமை என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே துவங்குகிறது. அல்லாஹ்தான் இந்த உலகத்தின் தலைவன். அவனே வணக்கத்திற்குரியவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அவன் பேராற்றல் மிக்கவன். ஏக தலைவனும் அவனாகவே விளங்குகிறான். அவனது வழியே மிக நேரான வழி. நேர்வழி செல்வோருக்கு அவன் துணை புரிகின்றான். நம்பிக்கையாளர்களின் நேசிப்பிற்குப் பாத்திரமானவன். அவன் தலைமைக்குரிய தனிப்பெரும் பண்பான அமைதியின் பக்கம் அழைப்பவன் அல்லாஹ். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன், இவையெல்லாம் அல்குர் ஆனில் இறைவன் தன்னைப்பற்றி நமக்கு அருளிய சத்திய வாசகங்கள். தீர்க்க வசனங்கள் இவை அனைத்தும் ஒரு தலைமைப் பண்பாளரிடம் இருக்க வேண்டிய குணாம்சங்கள் இந்த தன்மைகள் நிறைந்தவன் அல்லாஹ். இக்குணங்களை திரும்பத் திரும்ப அனைத்து உலகின் ரட்சகனான அல்லாஹ் நமக்குப் பிரகடனப் படுத்துகிறான். சத்திய சமத்துவ திருமறையாம் திருக்குர்ஆன் மூலமாக இவைகளை இறைவனைத் தவிர வேறு யாரும் சுய பிரகடனம் செய்ய தகுதியுடையோரை இறைவன் படைக்க வில்லை. ஆனால் இவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று காலம் காலமாய் நபிமார்களை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தான்.
அவன் அகமகிழ்ந்து பரிபூரண திருப்தி அடைந்தபோது நம் பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி நபியாக இவ்வுலகிற்கு அருளினான். நபித்துவத்தின் பூரணத்துவம் ரசூலுல்லாஹ்விடமே நிறைவு பெறுகிறது. நபித்துவம் என்னும் பிறைமதி. ஆதம் தொடங்கி அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முழுமதி பெளர்ணமியாய் பரிணமிக்கின்றது. உலகின் ஞான ஒளி முகம்மத் என்னும் நபி மொழியில் ஜொலிக்கிறது.
ஆதம் நபி தொட்டு அனைத்து நபிமார்களுக்கும் தலைமைப் பண்பு சீராக வளர்ந்தோங்கி இருக்கிறது. இருப்பினும் அண்ணலம் பெருமான் பூவுலக கோமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்பண்புகள் மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. எவை, எவை எல்லாம் சிறந்தத் தலைமைப் பண்புகள் என்பதற்கு மேலாண்மை ஆய்வாளர்கள் பின்வரும் பண்பியல் கூறுகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தன்னடக்கம், சுய கட்டுப்பாடு (self control) எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் சமநிலையான உணர்வு, ஒரு காரியத்தில் முடிவெடுப்பதில் தீட்சண்யமான பார்வை, சரியாக திட்டமிடல் அந்த திட்டத்தை மிகத்துள்ளியமாக நிறைவேற்றுதல், நம்பிக்கையாளர்களை உருவாக்குதல், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல், ஒருவர் மீது பட்சாதாபப்படுதல், அனுதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல் அனுதாபத்திற்கு உரியோரின் உள்ளத்தில் உயர்வான எண்ணக்கிளர்ச்சியை (Empathy) உருவாக்குதல், எல்லோரிடத்திலும் இணைந்து போதல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நம்பிக்கை யாளரிடமும் ஒரு இணைவை (integragity) உருவாக்குதல் ஆகியவை தலைமைப் பண்பாக இன்று பேசப்படுகிறது.
இவைகளோடு வென்றெடுக்கும் திறன், நம்பிக்கையாளர் களிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளல், தன்னலம் பேணா தகைமை, கூர்மதியும் குறுகிய கால செயல் வடிவ முடிவும், எளிமையாக சந்திக்கக் கூடியவராக அடையக் கூடியவராக இருத்தல், தலை சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருத்தல் இவைகளும் தலைமைப் பண்பாளரின் குணங்களாகும். இவை அனைத்தையும் இணைத்து நாம் ஒரு வரியில் சொல்லிவிடலாம். நபிகளார் எப்படி உபதேசித்தார் களோ (ஹதீஸ்) எப்படி செயல்பட்டார்களோ அவைகள் அனைத்தும் தான் தலைமைப் பண்புகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னடக்கத்தோடு வாழ்ந்தார்கள். இறைக் கட்டளையையே செயல்படுத்தி னார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சமூகத்திற்கு மட்டு மல்ல தன் குடும்பத்திற்கும் நல்ல தலைவராக விளங்கி னார்கள். நபிகளார் தன் கிழிந்த உடைகளைத் தைத்துத் தந்திருக்கிறார்கள். நைந்த தனது காலணிகளைச் செப்பனிட்டு அணிந்திருக்கிறார்கள். என அன்னை அயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தன்னடக்கத்துடன் எளிமையும் இதில் வெளிப்படுகிறது. (திர்மிதி, ஷமைல், ஹம்பல் 6: 256)
இறைவன் அருளிய இஸ்லாம் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் இப்பூவுலக மக்கள் மீது கொண்ட நம்பிக்கைத்தான் இன்று உலகம் முழுவதும் ஈமான் என்னும் நம்பிக்கை கொண்ட கோடானுகோடி முஸ்லீம்களையும், முஸ்லீம் நாடு களையும் உருவாக்கியுள்ளது. அரபு நாட்டின் ஏதாவது ஒரு வெயில் சுட்டெறிக்கும் பாலைவனத்தில் நட்டு நடுவே நின்று விட்டு அந்த இடத்தில் நிலவு தோன்றா வளர்பிறையின் முன்னிரு நாட்களில் நின்று பயங்கர இருளில் நின்று யோசித்தால் எதுவுமே கிடைக்காத இந்த ஏகாந்த மணல் பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத ஜீவனற்ற இந்தப் பாழ்வெளியில் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவரை இறைவன் நபியாகத் தந்திருக்கிறான் என்பது புலப்படும். உடலும், உள்ளமும், பக்தியினாலும், பயத்தினாலும், குளறும். இறைவன் கிருபையாளன், கருணையாளன் என்பது புலப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்திறன் புலப்படும்.
பல்லாயிரம் சிலை தெய்வங்களை வணங்கி வந்த பாலை நில மக்கள் மனதில் ’அல்லாஹ்’ என்னும் பசுஞ் சோலையைப் படர விடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல தெய்வ வழிபாட்டில் இருந்து அவர்களை விடுவிப்பதே அபூர்வம். உருவமில்லா உன்னத இறைவனை உணர்த்துவது எவ்வளவு கடினம் ! தன்னை வருத்தித்தான் உலகத்தவரை உம்மத் ஆக்கினார்கள். நீங்கள் எங்கிருந்த போதும் அவன் (இறைவன்) உங்களுடன் இருக்கிறான் என்று இன்று சொல்வது சுலபம். ஈர நெஞ்சே தோன்றாத அம்மக்க ளிடம் இச்சத்திய வசனத்தைக் கூற கடும் முயற்சி அவர்களுக்கு அப்போது ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஒருவரின் நம்பிக்கையாளர்களில் முதன்மையானவர் அவரது தாயார். திருமணமான பிறகு மனைவி, மனைவி கணவனை நம்ப வேண்டும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது இருவழிப்பாதை. ஹிரா குகையில் நடந்த்தைக் கூறி அகில உலகின் ஏக இறைவன் அல்லாஹ் என்று திருத்தூதர் கூறிய போது பெண்களுக்கு அரசி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அடுத்த கணமே அது உண்மை என்று நம்பினார்கள். நல்ல தலைவருக்கு உரிய பண்பு குடும்பத் தலைமையிலிருந்து தொடங்கி சமுதாயத் தவரை அவர் கூறுவது தான் உண்மை என்று நம்ப வைத்திருக்கிறது.
நல்ல பயிற்றுனர்களே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். அதாவது அவர்கள் சிறந்த பயிற்சி பெற வேண்டும். பின்னர் அதைப்பற்றி பயிற்றுவிக்கும் திறன் வேண்டும். தான் இறைவனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நபிகள் மக்களுக்கு நிரூபனமாக விளக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். (நபியே) அளவற்ற அருளாளன் தான் இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான் (திருக்குர்ஆன் 55, 1-4) எல்லா உயிரினங்களும் இறைவனின் படைப்பு என்ற பயிற்சி தன்மை அவர்களை எல்லா ஜீவராசி களும் இறை அச்சத்தோடு ஜீவித்து வாழ வேண்டும் என்று உபதேசிக்க வைத்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த திறன் ஆள்பவராக (Skill of Ieading performance ) விளங்கினார்கள். அதே சமயம் அவர்கள் சிறந்த திறனாளர் (Skill) ஆவார்கள். இஸ்லாத்திற் காகத் தற்காப்பு போரிடும் போது (Defence war) அவர்களே தலைமை தாங்கினார்கள். பத்ர் போரில் அவர்கள் வகுத்த வியூகம் அகழி வெட்டி போர் புரிவது என்பது அக்காலத்து புதுமையான விஷயமாகும். வெற்றிக்குப் பின்னால் தான் நிதானம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தலைமைப் பண்பும் கூட. ஆனால் அதற்கு அடுத்த மதினாவில் நடந்த உஹத் போர் அவர்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. பத்ர் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த முஸ்லீம்கள் சற்று அலட்சியமாக இருந்தார்கள். உஹத் மலை அடிவாரத்தில் 50 வில் வீரர்களை நிறுத்தி ’நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையாதீர்கள்’ முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று செய்தி கேட்டாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது’ என்றார்கள். எதிரியை ஆரம்பத்தில் வீழ்த்திய முஸ்லீம்கள் நபிகள் கட்டளையை ஏற்காமல் நகர ஆரம்பித்தார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிப்படை திரும்பி வந்து தாக்க ஆரம்பித்தது. அதில் எழுபது பேர் ஷஹீத் (வீர சுவர்க்கம்) அடைந்தார்கள். நம் பெருமானார் அவர்கள் காயம் பட்டார்கள். அந்த நிலையிலும் அவர்கள் கோபமோ கடும் சொல்லோ கூறவில்லை. இறைவன் திருமறையில் இதனைக் கூறுகிறான். நபியே அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் கடுகடுப் பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால், உங்களிடமிருந்து அவர்கள் வெகுண்டோடி இருப்பார்கள். ஆகவே அவர்களின் குற்றங் களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக ! அன்றி யுத்தம் சமாதானம் ஆகிய மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து வாருங்கள் (திருக்குர்ஆன் : 3: 159) எவ்வளவு அருமையான தலைமைப் பண்பு உபதேசம் அல்லாஹ்விட மிருந்து வருகிறது பாருங்கள். அதுவும் அருமை பெருமான் நபிகள் நாயகத்திற்கு.
தலைமைப் பண்பின் மன்னிக்கும் சுபாவம் வேண்டும். தன்னைச் சார்ந்தோர் செய்யும் தவறுகளைப் புரிந்து பின்னாளில் அத்தகைய தவறுகள் நடக்காது அவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும். இந்தப் பண்பு அவர்களிடம் இருந்தபோதும் உலகத்தாருக்கு உணர்த்த நபிகளிடம் கூறி நபிக்கு அறிவுறுத்துகிறான்
உஹத் போரில் முஸ்லீம்கள் தோல்விக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் காலித் பின் வாலித் என்பவராவார். பின்னர் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். தன்னை இஸ்லாமிய சேவையில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று வருந்தினார். நம்புகின்றவர்களை நம்பும் குணம் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாமியப் படையில் எவ்விதத் தயக்கமும் இன்றி சேர்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல அபுஜஹீலுடைய சகோதரர் இபின் ஹஸ்ஸம் இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவ ரானார். நபிகளார் மரணித்ததற்குப் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து நடந்த யர்முக் போரில் தண்ணீர் தந்த போது கூட அருந்த மறுத்து ஷகீதானார். (ஹக்கீம், முஸ்தாக் 3, 242) எதிரியை மன்னிப்பது மட்டுமல்ல அரவணைத்து நம்பி, நல்ல நம்பிக்கையாளராக மாற்றும் சீரிய தலைமை அண்ணலாரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
தலைமைப் பண்பின் மற்றொரு அருங்குணம், தான் நிலை மாறா தன்மை(Stability) தன் மகனார் இறந்த போது சூரிய கிரகணம் தோன்றி இருள் சூழ்ந்தபோது ஸஹாபாக்கள் இறைவன் இச்சோக சோதனைக்கு உலகை இருள்கப்ப வைத்து விட்டான். என்றபோது அது இயற்கையாய் நடக்கும் ஒரு செயல் என்று கூறி, மூடப்பழக்க சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். எதுவும் இறைவன் நாட்டப்படி என்ற அசையா நம்பிக்கை உடையவர்கள். உதுமான் பின் மதூம் என்ற ஸஹாபா இறந்து விட்டார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஒரு பெண், ’’உதுமான் அவர்கள் ஒரு பறவையைப் போல் பறந்து சுவர்க்கம் புகுகிறார்கள்’’ என்றாள். அப்படிப்பட்ட துக்கத்திலும் ரசூலுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உனக்கு அவர் சுவர்க்கம் புகுவார் என்று எப்படித் தெரியும்? நபியாக இருக்கும் எனக்கே அது தெரியாதே? என்றார்கள். (முஸ்லிம், அஸ்மான் 31,33 இமாம் ஹன்பல் 3: 447) இது தான் தன் நிலைமாறாப் பண்பு என்பது தன்னை முன்னிறுத்தாமல் அல்லாஹ்வே அனைத்திற்கும் என்பதால் தன்முனைப்பு தோன்றாத நிலை நிலைத்து நிற்கும்.
நபிகளார் வாழ்வில் தலைமைப் பண்பிற்கு எதிரான பகைவர்களும் அவர் களின் செயல்களும் இருந்தபோதும், எதிரிகளின் எதிர் வினைகளை (Negative) உடன் வினையாக (Positive) மாற்றி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை கணிக்கும் சக்தி உடையவராக விளங்கினார்கள். சவால்களைச் சமாளிக்கும் சமயோசித ஞானம் பெற்றிருந்தார்கள். உலகோரை ஏகத்துவத் திற்குக் கொண்டு வர அதையே இலக்காகக் (Goal) கொண்டு அந்த இலக்கினை அடைய சதாசர்வகாலமும் ஆய்ந்து அதற்கான செயலில் ஈடுபட்டார்கள். யதார்த்தங்களை (As it is) புரிந்து கொள்ளும் பேராற்றல் பெற்றிருந்தார்கள். மனப்புயலில் (Brain Storming) சிக்கித் தவிக்காத குணம் பெற்றிருந்தார்கள். மனதில் உறுதி, எல்லாக் காரியத்தில் முழுமை எடுத்தக் காரியம் யாவிலும் வெற்றி இவைகள் அவர்கள் தலைமைப் பண்பு பட்டியலில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவு. அதையும் சக தோழர் களிடம் கலந்து ஆலோசிக்கும் கூட்டுத் தலைமைப் பண்பு (Collective leadership) அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
சிறந்த நாவன்மை (Communication Skill) உடையவர்களாக விளங்கினார்கள். தன் வளர்ப்பு தாயார் அன்னை ஹலிமா அவர்கள் மக்காவில் அழைத்து வந்து ஆடு, ஒட்டகம் மேய்க்க நேர்ந்ததால் நேர்த்தியான அரபிய மொழி பேசும் திறன் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். அபு ஜஹீலே அவர்களது நாவன்மை கண்டு நடுநடுங்கிப் போனார். சொல்லும் செயலை அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். மக்கள் ஏகத்துவ விழிப்புணர்வு பெற தூண்டும் சக்தியாக (Motivation) விளங்கினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பாசறையின் மனித நேயப் பாதுகாவலராக அவர்கள் விளங்கி வருகிறார்கள். ’’மதங்களில் எவர் தீவிரவாதத்தைப் புகுத்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’’ (முஸ்லிம்) என்று உலகோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்
( தமிழ்மாமணி,முனைவர் மு.அ.முகம்மது உசேன் எம்.ஏ, பி.எச்.டி., )
ஓய்வு பெற்ற குடந்தை கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்,
துணைத்தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
கும்பகோணம். )
http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=170
இஸ்லாமியத் தலைமை ஆளுமை என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே துவங்குகிறது. அல்லாஹ்தான் இந்த உலகத்தின் தலைவன். அவனே வணக்கத்திற்குரியவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அவன் பேராற்றல் மிக்கவன். ஏக தலைவனும் அவனாகவே விளங்குகிறான். அவனது வழியே மிக நேரான வழி. நேர்வழி செல்வோருக்கு அவன் துணை புரிகின்றான். நம்பிக்கையாளர்களின் நேசிப்பிற்குப் பாத்திரமானவன். அவன் தலைமைக்குரிய தனிப்பெரும் பண்பான அமைதியின் பக்கம் அழைப்பவன் அல்லாஹ். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன், இவையெல்லாம் அல்குர் ஆனில் இறைவன் தன்னைப்பற்றி நமக்கு அருளிய சத்திய வாசகங்கள். தீர்க்க வசனங்கள் இவை அனைத்தும் ஒரு தலைமைப் பண்பாளரிடம் இருக்க வேண்டிய குணாம்சங்கள் இந்த தன்மைகள் நிறைந்தவன் அல்லாஹ். இக்குணங்களை திரும்பத் திரும்ப அனைத்து உலகின் ரட்சகனான அல்லாஹ் நமக்குப் பிரகடனப் படுத்துகிறான். சத்திய சமத்துவ திருமறையாம் திருக்குர்ஆன் மூலமாக இவைகளை இறைவனைத் தவிர வேறு யாரும் சுய பிரகடனம் செய்ய தகுதியுடையோரை இறைவன் படைக்க வில்லை. ஆனால் இவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று காலம் காலமாய் நபிமார்களை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தான்.
அவன் அகமகிழ்ந்து பரிபூரண திருப்தி அடைந்தபோது நம் பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி நபியாக இவ்வுலகிற்கு அருளினான். நபித்துவத்தின் பூரணத்துவம் ரசூலுல்லாஹ்விடமே நிறைவு பெறுகிறது. நபித்துவம் என்னும் பிறைமதி. ஆதம் தொடங்கி அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முழுமதி பெளர்ணமியாய் பரிணமிக்கின்றது. உலகின் ஞான ஒளி முகம்மத் என்னும் நபி மொழியில் ஜொலிக்கிறது.
ஆதம் நபி தொட்டு அனைத்து நபிமார்களுக்கும் தலைமைப் பண்பு சீராக வளர்ந்தோங்கி இருக்கிறது. இருப்பினும் அண்ணலம் பெருமான் பூவுலக கோமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்பண்புகள் மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. எவை, எவை எல்லாம் சிறந்தத் தலைமைப் பண்புகள் என்பதற்கு மேலாண்மை ஆய்வாளர்கள் பின்வரும் பண்பியல் கூறுகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தன்னடக்கம், சுய கட்டுப்பாடு (self control) எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் சமநிலையான உணர்வு, ஒரு காரியத்தில் முடிவெடுப்பதில் தீட்சண்யமான பார்வை, சரியாக திட்டமிடல் அந்த திட்டத்தை மிகத்துள்ளியமாக நிறைவேற்றுதல், நம்பிக்கையாளர்களை உருவாக்குதல், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல், ஒருவர் மீது பட்சாதாபப்படுதல், அனுதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல் அனுதாபத்திற்கு உரியோரின் உள்ளத்தில் உயர்வான எண்ணக்கிளர்ச்சியை (Empathy) உருவாக்குதல், எல்லோரிடத்திலும் இணைந்து போதல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நம்பிக்கை யாளரிடமும் ஒரு இணைவை (integragity) உருவாக்குதல் ஆகியவை தலைமைப் பண்பாக இன்று பேசப்படுகிறது.
இவைகளோடு வென்றெடுக்கும் திறன், நம்பிக்கையாளர் களிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளல், தன்னலம் பேணா தகைமை, கூர்மதியும் குறுகிய கால செயல் வடிவ முடிவும், எளிமையாக சந்திக்கக் கூடியவராக அடையக் கூடியவராக இருத்தல், தலை சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருத்தல் இவைகளும் தலைமைப் பண்பாளரின் குணங்களாகும். இவை அனைத்தையும் இணைத்து நாம் ஒரு வரியில் சொல்லிவிடலாம். நபிகளார் எப்படி உபதேசித்தார் களோ (ஹதீஸ்) எப்படி செயல்பட்டார்களோ அவைகள் அனைத்தும் தான் தலைமைப் பண்புகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னடக்கத்தோடு வாழ்ந்தார்கள். இறைக் கட்டளையையே செயல்படுத்தி னார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சமூகத்திற்கு மட்டு மல்ல தன் குடும்பத்திற்கும் நல்ல தலைவராக விளங்கி னார்கள். நபிகளார் தன் கிழிந்த உடைகளைத் தைத்துத் தந்திருக்கிறார்கள். நைந்த தனது காலணிகளைச் செப்பனிட்டு அணிந்திருக்கிறார்கள். என அன்னை அயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தன்னடக்கத்துடன் எளிமையும் இதில் வெளிப்படுகிறது. (திர்மிதி, ஷமைல், ஹம்பல் 6: 256)
இறைவன் அருளிய இஸ்லாம் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் இப்பூவுலக மக்கள் மீது கொண்ட நம்பிக்கைத்தான் இன்று உலகம் முழுவதும் ஈமான் என்னும் நம்பிக்கை கொண்ட கோடானுகோடி முஸ்லீம்களையும், முஸ்லீம் நாடு களையும் உருவாக்கியுள்ளது. அரபு நாட்டின் ஏதாவது ஒரு வெயில் சுட்டெறிக்கும் பாலைவனத்தில் நட்டு நடுவே நின்று விட்டு அந்த இடத்தில் நிலவு தோன்றா வளர்பிறையின் முன்னிரு நாட்களில் நின்று பயங்கர இருளில் நின்று யோசித்தால் எதுவுமே கிடைக்காத இந்த ஏகாந்த மணல் பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத ஜீவனற்ற இந்தப் பாழ்வெளியில் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவரை இறைவன் நபியாகத் தந்திருக்கிறான் என்பது புலப்படும். உடலும், உள்ளமும், பக்தியினாலும், பயத்தினாலும், குளறும். இறைவன் கிருபையாளன், கருணையாளன் என்பது புலப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்திறன் புலப்படும்.
பல்லாயிரம் சிலை தெய்வங்களை வணங்கி வந்த பாலை நில மக்கள் மனதில் ’அல்லாஹ்’ என்னும் பசுஞ் சோலையைப் படர விடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல தெய்வ வழிபாட்டில் இருந்து அவர்களை விடுவிப்பதே அபூர்வம். உருவமில்லா உன்னத இறைவனை உணர்த்துவது எவ்வளவு கடினம் ! தன்னை வருத்தித்தான் உலகத்தவரை உம்மத் ஆக்கினார்கள். நீங்கள் எங்கிருந்த போதும் அவன் (இறைவன்) உங்களுடன் இருக்கிறான் என்று இன்று சொல்வது சுலபம். ஈர நெஞ்சே தோன்றாத அம்மக்க ளிடம் இச்சத்திய வசனத்தைக் கூற கடும் முயற்சி அவர்களுக்கு அப்போது ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஒருவரின் நம்பிக்கையாளர்களில் முதன்மையானவர் அவரது தாயார். திருமணமான பிறகு மனைவி, மனைவி கணவனை நம்ப வேண்டும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது இருவழிப்பாதை. ஹிரா குகையில் நடந்த்தைக் கூறி அகில உலகின் ஏக இறைவன் அல்லாஹ் என்று திருத்தூதர் கூறிய போது பெண்களுக்கு அரசி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அடுத்த கணமே அது உண்மை என்று நம்பினார்கள். நல்ல தலைவருக்கு உரிய பண்பு குடும்பத் தலைமையிலிருந்து தொடங்கி சமுதாயத் தவரை அவர் கூறுவது தான் உண்மை என்று நம்ப வைத்திருக்கிறது.
நல்ல பயிற்றுனர்களே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். அதாவது அவர்கள் சிறந்த பயிற்சி பெற வேண்டும். பின்னர் அதைப்பற்றி பயிற்றுவிக்கும் திறன் வேண்டும். தான் இறைவனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நபிகள் மக்களுக்கு நிரூபனமாக விளக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். (நபியே) அளவற்ற அருளாளன் தான் இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான் (திருக்குர்ஆன் 55, 1-4) எல்லா உயிரினங்களும் இறைவனின் படைப்பு என்ற பயிற்சி தன்மை அவர்களை எல்லா ஜீவராசி களும் இறை அச்சத்தோடு ஜீவித்து வாழ வேண்டும் என்று உபதேசிக்க வைத்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த திறன் ஆள்பவராக (Skill of Ieading performance ) விளங்கினார்கள். அதே சமயம் அவர்கள் சிறந்த திறனாளர் (Skill) ஆவார்கள். இஸ்லாத்திற் காகத் தற்காப்பு போரிடும் போது (Defence war) அவர்களே தலைமை தாங்கினார்கள். பத்ர் போரில் அவர்கள் வகுத்த வியூகம் அகழி வெட்டி போர் புரிவது என்பது அக்காலத்து புதுமையான விஷயமாகும். வெற்றிக்குப் பின்னால் தான் நிதானம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தலைமைப் பண்பும் கூட. ஆனால் அதற்கு அடுத்த மதினாவில் நடந்த உஹத் போர் அவர்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. பத்ர் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த முஸ்லீம்கள் சற்று அலட்சியமாக இருந்தார்கள். உஹத் மலை அடிவாரத்தில் 50 வில் வீரர்களை நிறுத்தி ’நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையாதீர்கள்’ முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று செய்தி கேட்டாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது’ என்றார்கள். எதிரியை ஆரம்பத்தில் வீழ்த்திய முஸ்லீம்கள் நபிகள் கட்டளையை ஏற்காமல் நகர ஆரம்பித்தார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிப்படை திரும்பி வந்து தாக்க ஆரம்பித்தது. அதில் எழுபது பேர் ஷஹீத் (வீர சுவர்க்கம்) அடைந்தார்கள். நம் பெருமானார் அவர்கள் காயம் பட்டார்கள். அந்த நிலையிலும் அவர்கள் கோபமோ கடும் சொல்லோ கூறவில்லை. இறைவன் திருமறையில் இதனைக் கூறுகிறான். நபியே அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் கடுகடுப் பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால், உங்களிடமிருந்து அவர்கள் வெகுண்டோடி இருப்பார்கள். ஆகவே அவர்களின் குற்றங் களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக ! அன்றி யுத்தம் சமாதானம் ஆகிய மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து வாருங்கள் (திருக்குர்ஆன் : 3: 159) எவ்வளவு அருமையான தலைமைப் பண்பு உபதேசம் அல்லாஹ்விட மிருந்து வருகிறது பாருங்கள். அதுவும் அருமை பெருமான் நபிகள் நாயகத்திற்கு.
தலைமைப் பண்பின் மன்னிக்கும் சுபாவம் வேண்டும். தன்னைச் சார்ந்தோர் செய்யும் தவறுகளைப் புரிந்து பின்னாளில் அத்தகைய தவறுகள் நடக்காது அவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும். இந்தப் பண்பு அவர்களிடம் இருந்தபோதும் உலகத்தாருக்கு உணர்த்த நபிகளிடம் கூறி நபிக்கு அறிவுறுத்துகிறான்
உஹத் போரில் முஸ்லீம்கள் தோல்விக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் காலித் பின் வாலித் என்பவராவார். பின்னர் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். தன்னை இஸ்லாமிய சேவையில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று வருந்தினார். நம்புகின்றவர்களை நம்பும் குணம் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாமியப் படையில் எவ்விதத் தயக்கமும் இன்றி சேர்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல அபுஜஹீலுடைய சகோதரர் இபின் ஹஸ்ஸம் இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவ ரானார். நபிகளார் மரணித்ததற்குப் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து நடந்த யர்முக் போரில் தண்ணீர் தந்த போது கூட அருந்த மறுத்து ஷகீதானார். (ஹக்கீம், முஸ்தாக் 3, 242) எதிரியை மன்னிப்பது மட்டுமல்ல அரவணைத்து நம்பி, நல்ல நம்பிக்கையாளராக மாற்றும் சீரிய தலைமை அண்ணலாரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
தலைமைப் பண்பின் மற்றொரு அருங்குணம், தான் நிலை மாறா தன்மை(Stability) தன் மகனார் இறந்த போது சூரிய கிரகணம் தோன்றி இருள் சூழ்ந்தபோது ஸஹாபாக்கள் இறைவன் இச்சோக சோதனைக்கு உலகை இருள்கப்ப வைத்து விட்டான். என்றபோது அது இயற்கையாய் நடக்கும் ஒரு செயல் என்று கூறி, மூடப்பழக்க சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். எதுவும் இறைவன் நாட்டப்படி என்ற அசையா நம்பிக்கை உடையவர்கள். உதுமான் பின் மதூம் என்ற ஸஹாபா இறந்து விட்டார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஒரு பெண், ’’உதுமான் அவர்கள் ஒரு பறவையைப் போல் பறந்து சுவர்க்கம் புகுகிறார்கள்’’ என்றாள். அப்படிப்பட்ட துக்கத்திலும் ரசூலுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உனக்கு அவர் சுவர்க்கம் புகுவார் என்று எப்படித் தெரியும்? நபியாக இருக்கும் எனக்கே அது தெரியாதே? என்றார்கள். (முஸ்லிம், அஸ்மான் 31,33 இமாம் ஹன்பல் 3: 447) இது தான் தன் நிலைமாறாப் பண்பு என்பது தன்னை முன்னிறுத்தாமல் அல்லாஹ்வே அனைத்திற்கும் என்பதால் தன்முனைப்பு தோன்றாத நிலை நிலைத்து நிற்கும்.
நபிகளார் வாழ்வில் தலைமைப் பண்பிற்கு எதிரான பகைவர்களும் அவர் களின் செயல்களும் இருந்தபோதும், எதிரிகளின் எதிர் வினைகளை (Negative) உடன் வினையாக (Positive) மாற்றி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை கணிக்கும் சக்தி உடையவராக விளங்கினார்கள். சவால்களைச் சமாளிக்கும் சமயோசித ஞானம் பெற்றிருந்தார்கள். உலகோரை ஏகத்துவத் திற்குக் கொண்டு வர அதையே இலக்காகக் (Goal) கொண்டு அந்த இலக்கினை அடைய சதாசர்வகாலமும் ஆய்ந்து அதற்கான செயலில் ஈடுபட்டார்கள். யதார்த்தங்களை (As it is) புரிந்து கொள்ளும் பேராற்றல் பெற்றிருந்தார்கள். மனப்புயலில் (Brain Storming) சிக்கித் தவிக்காத குணம் பெற்றிருந்தார்கள். மனதில் உறுதி, எல்லாக் காரியத்தில் முழுமை எடுத்தக் காரியம் யாவிலும் வெற்றி இவைகள் அவர்கள் தலைமைப் பண்பு பட்டியலில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவு. அதையும் சக தோழர் களிடம் கலந்து ஆலோசிக்கும் கூட்டுத் தலைமைப் பண்பு (Collective leadership) அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
சிறந்த நாவன்மை (Communication Skill) உடையவர்களாக விளங்கினார்கள். தன் வளர்ப்பு தாயார் அன்னை ஹலிமா அவர்கள் மக்காவில் அழைத்து வந்து ஆடு, ஒட்டகம் மேய்க்க நேர்ந்ததால் நேர்த்தியான அரபிய மொழி பேசும் திறன் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். அபு ஜஹீலே அவர்களது நாவன்மை கண்டு நடுநடுங்கிப் போனார். சொல்லும் செயலை அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். மக்கள் ஏகத்துவ விழிப்புணர்வு பெற தூண்டும் சக்தியாக (Motivation) விளங்கினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பாசறையின் மனித நேயப் பாதுகாவலராக அவர்கள் விளங்கி வருகிறார்கள். ’’மதங்களில் எவர் தீவிரவாதத்தைப் புகுத்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’’ (முஸ்லிம்) என்று உலகோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
Saturday, August 1, 2009
ராஸல்கைமாவில் புதிய தையலகம்
ராஸல்கைமாவில் புதிய தையலகம்
ராஸல்கைமாவில் தமிழ் நண்பர்கள் 'அல் மரூஃப் டைலரிங் டிரேடிங் எல்.எல்.சி' எனும் நிறுவனத்தை 24-07-2009 அன்று ராஸல் கைமா மாரிஸ் பகுதியில் துவக்கினர்.
இந்நிறுவனத்தில் யூனிபார்ஃம், பள்ளி சீருடைகள், உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை மொத்த ஆர்டரின் பேரில் தைக்கும் திட்டத்தின் அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவன வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ள்படுகிறார்கள்
தொடர்புக்கு
சாதிக் பாஷா
055 - 310 89 00
ராஸல்கைமா
யு.எ.இ
ராஸல்கைமாவில் தமிழ் நண்பர்கள் 'அல் மரூஃப் டைலரிங் டிரேடிங் எல்.எல்.சி' எனும் நிறுவனத்தை 24-07-2009 அன்று ராஸல் கைமா மாரிஸ் பகுதியில் துவக்கினர்.
இந்நிறுவனத்தில் யூனிபார்ஃம், பள்ளி சீருடைகள், உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை மொத்த ஆர்டரின் பேரில் தைக்கும் திட்டத்தின் அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவன வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ள்படுகிறார்கள்
தொடர்புக்கு
சாதிக் பாஷா
055 - 310 89 00
ராஸல்கைமா
யு.எ.இ
சமவுரிமை மாத இதழ்
சமவுரிமை மாத இதழ்
“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ் அல்ஹம்து லில்லாஹ்.
“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.
தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.
முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறேன்.
வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப் படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். இதயம் குளிந்து வாழ்த்துகிறேன்.
ஆக்கம் :முதுவைக் கவிஞர்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ
“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ் அல்ஹம்து லில்லாஹ்.
“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.
தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.
முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறேன்.
வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப் படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். இதயம் குளிந்து வாழ்த்துகிறேன்.
ஆக்கம் :முதுவைக் கவிஞர்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ
கோடையும் வாடையும்
கோடையும் வாடையும்
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர்
கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதனை விட
வரதட்சணையால்
பல பெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
கொடுமையானது !
வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
மே, ஜூன், ஜூலை வாடைகாற்று
உடலெல்லாம்
வியர்த்து விட்டது !
வரதட்சணைக் கோடையால்
மேனியெல்லாம் தீ ஜூவாலை
சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !
எத்தனை டிகிரி
வெயிலடித்தடித்தாலும்
அது குறைவானதுதான் !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !
கோடையின்
கத்திரி வெயில் அடித்தது !
அனலால்
வீட்டில் இருக்க முடியவில்லை
எங்கள்
புத்திரிக்கு திருமணம் நடந்தது
வரதட்சணையால்
வீட்டை விற்காமல் இருக்கமுடியவில்லை !
அறுபது டிகிரி
வெயிலடித்தால்
குளிர் பானத்தை குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
பணத்துக்கு எங்கே போவது !
கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள்
வரதட்சணையால்
வீட்டையே விற்றவர்கள்
வசிக்க எங்கே போவார்கள் !
மகனுக்கு
நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என்று வரும் போது
வாய் மூடி விடுகிறார்கள் !
பாலையில்
கானல் நீர் அங்கே !
ஆம் அங்கே நீரில்லை
கல்யாணத்தில்
பெண்ணைப் பெற்றவர்கள்
சிரிக்கிறார்கள்
ஆனால்
அவர்களுக்குள்
சிரமங்கள் மறைந்திருக்கிறது
கோடை மழை
இன்று வரும்
வானிலை அறிக்கையில்
உள்ளம் குளிர்ந்தது !
கொடுமையான
இந்நிலை என்று மாறும்
உள்ளம் கொதிக்கிறது !
கோடையின்
வாடை !
காய்ந்து போகும்
இலை !
மயக்கம் தலைவலி
என்ற நிலை - அவை
கொடியதல்ல
வரதட்சணையைவிட !
பெண் சிசுக்கொலை
இளம் பெண்களின்
தற்கொலை !
கணவன், மாமியார்
செய்யும் படுகொலை
கொடியது மட்டுமல்ல
கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தணித்து விடலாம் !
சகோதரா
கொதித்தெழு – இந்த
அக்கிரமத்தை எதிர்த்து நீ
எப்போது குரல் கொடுப்பாய்?
நீ மனம் வைத்தால்
தடுத்து விடலாம் !
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர்
கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதனை விட
வரதட்சணையால்
பல பெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
கொடுமையானது !
வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
மே, ஜூன், ஜூலை வாடைகாற்று
உடலெல்லாம்
வியர்த்து விட்டது !
வரதட்சணைக் கோடையால்
மேனியெல்லாம் தீ ஜூவாலை
சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !
எத்தனை டிகிரி
வெயிலடித்தடித்தாலும்
அது குறைவானதுதான் !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !
கோடையின்
கத்திரி வெயில் அடித்தது !
அனலால்
வீட்டில் இருக்க முடியவில்லை
எங்கள்
புத்திரிக்கு திருமணம் நடந்தது
வரதட்சணையால்
வீட்டை விற்காமல் இருக்கமுடியவில்லை !
அறுபது டிகிரி
வெயிலடித்தால்
குளிர் பானத்தை குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
பணத்துக்கு எங்கே போவது !
கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள்
வரதட்சணையால்
வீட்டையே விற்றவர்கள்
வசிக்க எங்கே போவார்கள் !
மகனுக்கு
நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என்று வரும் போது
வாய் மூடி விடுகிறார்கள் !
பாலையில்
கானல் நீர் அங்கே !
ஆம் அங்கே நீரில்லை
கல்யாணத்தில்
பெண்ணைப் பெற்றவர்கள்
சிரிக்கிறார்கள்
ஆனால்
அவர்களுக்குள்
சிரமங்கள் மறைந்திருக்கிறது
கோடை மழை
இன்று வரும்
வானிலை அறிக்கையில்
உள்ளம் குளிர்ந்தது !
கொடுமையான
இந்நிலை என்று மாறும்
உள்ளம் கொதிக்கிறது !
கோடையின்
வாடை !
காய்ந்து போகும்
இலை !
மயக்கம் தலைவலி
என்ற நிலை - அவை
கொடியதல்ல
வரதட்சணையைவிட !
பெண் சிசுக்கொலை
இளம் பெண்களின்
தற்கொலை !
கணவன், மாமியார்
செய்யும் படுகொலை
கொடியது மட்டுமல்ல
கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தணித்து விடலாம் !
சகோதரா
கொதித்தெழு – இந்த
அக்கிரமத்தை எதிர்த்து நீ
எப்போது குரல் கொடுப்பாய்?
நீ மனம் வைத்தால்
தடுத்து விடலாம் !
Friday, July 31, 2009
மறுமை அச்சம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது - ஏ.ஆர். ரஹ்மான்
மறுமை அச்சம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது - ஏ.ஆர். ரஹ்மான்
திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி
இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.
1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.
அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.
முட்டுக்கட்டை
எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை போட்டார்கள்.
அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.
அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.
அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.
சொன்னது பலித்தது
மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா காதிரி என்ற ’சூபி’ பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.
இன்னும் 10 ஆண்டுகளில் திலீப் என்னைத் தேடி வருவான் என்று அந்தப் பெரியவர் கூறிச் சென்றார். அவர் சொன்னது போல் நடந்தது.
ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை ‘சூபி’ பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.
1989-ல் ‘சூபி’ கரீமுல்லாஹ் ஷா அடிக்கல் நாட்ட ரகுமானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.
இஸ்லாம் அனுபவம்
இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.
அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.
ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ‘சூபி’ தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாத்தின் ஆணிவேர் வரை சென்றிருந்தேன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.
1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.
ஹஜ் பயணம்
ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
அது பற்றி ரகுமான் சொன்னது.
இந்த புனித யாத்திரை - வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.
அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் பெருமை
முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.
மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.
பரிசு
2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.
நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.
நன்றி – ராணி வார இதழ்
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்
27/28 மே 2009
திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி
இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.
1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.
அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.
முட்டுக்கட்டை
எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை போட்டார்கள்.
அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.
அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.
அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.
சொன்னது பலித்தது
மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா காதிரி என்ற ’சூபி’ பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.
இன்னும் 10 ஆண்டுகளில் திலீப் என்னைத் தேடி வருவான் என்று அந்தப் பெரியவர் கூறிச் சென்றார். அவர் சொன்னது போல் நடந்தது.
ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை ‘சூபி’ பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.
1989-ல் ‘சூபி’ கரீமுல்லாஹ் ஷா அடிக்கல் நாட்ட ரகுமானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.
இஸ்லாம் அனுபவம்
இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.
அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.
ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ‘சூபி’ தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாத்தின் ஆணிவேர் வரை சென்றிருந்தேன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.
1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.
ஹஜ் பயணம்
ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
அது பற்றி ரகுமான் சொன்னது.
இந்த புனித யாத்திரை - வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.
அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் பெருமை
முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.
மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.
பரிசு
2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.
நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.
நன்றி – ராணி வார இதழ்
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்
27/28 மே 2009
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
Thursday, July 30, 2009
CNN - NEWS - Millions of Americans converting to ISLAM
CNN - NEWS - Millions of Americans converting to ISLAM
Assalamu Alaikkum,
Dear brothers and sisters,
Pls look at the following links.
http://www.metacafe.com/watch/2326959/cnn_news_report_american_convert_to_islam/
http://dotsub.com/view/6a8f8476-e6a7-4dd1-9280-0fab185c45aa
http://www.liveleak.com/view?i=4d1_1186010536
http://www.youtube.com/watch?v=Rfx4glTU5JQ
Assalamu Alaikkum,
Dear brothers and sisters,
Pls look at the following links.
http://www.metacafe.com/watch/2326959/cnn_news_report_american_convert_to_islam/
http://dotsub.com/view/6a8f8476-e6a7-4dd1-9280-0fab185c45aa
http://www.liveleak.com/view?i=4d1_1186010536
http://www.youtube.com/watch?v=Rfx4glTU5JQ
இறைவா!
இறைவா! உன்னிடம்…
இருகரம் ஏந்துவதும்
உன்னிடம்
என் இன்னல்களை
இயம்புவதும்
உன்னிடம்…
துன்பத்தில் மிகைத்தாலும்
உன்னிடம்
நான் இன்பத்தில்
திளைத்தாலும்
உன்னிடம்…
அகிலப் படைப்பும்
உன்னிடம்
என் ஆத்ம துடிப்பும்
உன்னிடம்...
அன்பு ஓங்குவதும்
உன்னிடம்
என் ஆசைகள் வளர்வதும்
உன்னிடம்…
அபலைகள்
அழுவதும் உன்னிடம்
என் கவலைகள் கூறுவதும்
உன்னிடம்…
ஆறுதல் தேடுவதும்
உன்னிடம்
எனக்கு
மாறுதல் கிடைக்கும்
உன்னிடம்…
‘’தக்பீர்’’ கட்டுவதும்
உன்னிடம்…
என்
‘தக்தீரின்’ நிர்ணயம்
உன்னிடம்…
தலை வணங்குவதும்
உன்னிடம்
நான் தலை சாயும் போது
உன்னிடம்…!
பிரிவு…
கருவறையைப்
பிரிந்தபொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டுத்
தாய் அழுதாள்…
கல்லூரிப் படிப்பு முடிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…
கணவனைப் பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…
உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…
பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…
எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது…?
உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து _ அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது.
எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!
இருகரம் ஏந்துவதும்
உன்னிடம்
என் இன்னல்களை
இயம்புவதும்
உன்னிடம்…
துன்பத்தில் மிகைத்தாலும்
உன்னிடம்
நான் இன்பத்தில்
திளைத்தாலும்
உன்னிடம்…
அகிலப் படைப்பும்
உன்னிடம்
என் ஆத்ம துடிப்பும்
உன்னிடம்...
அன்பு ஓங்குவதும்
உன்னிடம்
என் ஆசைகள் வளர்வதும்
உன்னிடம்…
அபலைகள்
அழுவதும் உன்னிடம்
என் கவலைகள் கூறுவதும்
உன்னிடம்…
ஆறுதல் தேடுவதும்
உன்னிடம்
எனக்கு
மாறுதல் கிடைக்கும்
உன்னிடம்…
‘’தக்பீர்’’ கட்டுவதும்
உன்னிடம்…
என்
‘தக்தீரின்’ நிர்ணயம்
உன்னிடம்…
தலை வணங்குவதும்
உன்னிடம்
நான் தலை சாயும் போது
உன்னிடம்…!
பிரிவு…
கருவறையைப்
பிரிந்தபொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டுத்
தாய் அழுதாள்…
கல்லூரிப் படிப்பு முடிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…
கணவனைப் பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…
உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…
பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…
எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது…?
உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து _ அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது.
எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!
Barack Hussain Obama : Is he a white (hearted) man in the Black house?
Barack Hussain Obama : Is he a white (hearted) man in the Black house?
By Abdul Rauf Baqavi
Obama's triumph in the presidential race for the white house has been crowned with a thumping majority to the delight of the oppressed masses throughout the world. His winning a landslide victory in the recent presidential pole of the US to elect its 44th president is seen not only by the long persecuted black race within US but also by all the oppressed and downtrodden people around the globe as a ray of hope that would lead to a world ruled by people with humble back ground.
The cheers Obama receives from the underprivileged and deprived masses all over the world shows nothing but their long time aspiration to find their own representative in the corridors of power in a country that exercise enormous influence over today’s world affairs.
With its colossal nuclear arsenal and a gigantic military which devours annually a huge defense budget that supersedes many developed countries' combined annual military budget , with an arrogant foreign policy making body that places its jingoistic nationalist interests over the welfare of the humankind and an infamous spy agency CIA that plays the role of a super government…..
with its nefarious designs to topple the rulers it finds detrimental to the US interests to crown its puppets and allies as rulers in the third world countries, America has represented so far an evil empire of war mongers, mischief makers and an arrogant super state that claims unquestionable superiority and reckless sovereignty over the destiny of the world.
White house is in fact not worth its name, as its history is stained with murderous plots, assassinations of rulers and leaders around the globe, toppling of regimes deemed unfavorable to the US interests, staging military coups to oust leaders defying the diktats of US policy makers, creating and training militias and guerilla groups to bow down the leaders flouting its orders, triggering civil wars and anarchy to intimidate the foreign governments and its people in order to make them dance to the tunes of the US foreign policy.
As the former Premier of UK Sir Winston Churchill who led his country successfully at a critical moment of World war 11 once said, “Nations have no morals; only interests.” In the present day world, this chauvinistic norm of modern nationalism is well manifested in its ugliest form in the role played by the White House thru its infamous spy agency the CIA.
The super power status attained by the US is not a result of its contribution towards the world community for its welfare, its industrial and technical progress and promotion of world peace. But it was attained by Uncle Sam’s self proclaimed designation of the protector of human rights, despite gross violations of human rights in its own soil and in many of its allies’ territories.
This status was grabbed through America’s big brother attitude that bent on serving its own imperialistic designs and safeguarding its regional interests. It was heartlessly seized by the US through subjecting the weak nations to its will by using brutal military force on the false pretexts of proliferation of WMD, violation of human rights.
This status was obtained by oppression of freedom thirst people and by brokering injudicious pacts between warring rival parties in various parts of the globe, so that and so on.
The first ever nuclear test conducted on human beings was the Manhattan Project ordered by the coldhearted President of US, Mr. Harry Truman and executed by a group of scientists driven by the madness of ultra-nationalistic chauvinism, turning a blind eye to humanitarian concerns.
The nuclear bombs exploded by the US in its human test fields of Hiroshima and Nagasaki played havoc with the lives of hundreds of thousands of innocent human beings and took a heavy toll on their ill fated lives in an unprecedented manner never experienced throughout the human history. This horrendous catastrophe would suffice to explain how the US became a super power by striking the never forgettable terror in the hearts of the nations dwelling on this planet of earth.
The blind support of the US to the despotic and authoritarian regimes, the demagogues in the Islamic and third world countries and its use of them as its pawns in its political game plan have made its crusade to establish the democratic system all over the world delicate and ridiculous even in the eyes of the gullible masses.
This unjustifiable foreign policy adopted since long by the US is an eye-opener to both the public and the elite. This policy of double standards exposes its ideological bankruptcy and ruthless hypocrisy.
It is an irony of present day global politics that the self declared proponent of democracy the US, on one hand claims to promote liberal democracy that guarantees freedom of expression and rule of law and on the other hand it is promoting authoritarianism, despotic monarchy, military dictatorship and fake democracy where puppet rulers are elected with sweeping majority through rigged polls.
Attempting to impose its own will on the impoverished nations, subjecting them further to an unscrupulous exploitation in the name of protecting human rights and liberating them from the clutches of oppressive regimes have become the basic characteristic of the foreign policy of the White house.
In the recent barbaric war launched by Israel on Gaza strip in the pretext of hunting the Hamas activists the White house and its foreign affairs office seem to be hand in glove with Israel’s insane aggression, its indiscriminate bombing of schools and public places resulting in high death toll of civilians including a large number of women and children.
The US has turned a deaf ear to the appeals from the world human rights organizations. It has signed a co-operation accord with the foreign minister of Israel to stop smuggling of arms through the tunnels to Gaza from Egypt in order to unarm the already poorly armed defenseless Gazans, the targets of heavy bombardment of Israel’s Air force.
While Palestinian blood spills and more than thousand Palestinians die and hundreds of thousands are getting injured the US and its western allies are demanding Hamas, a mismatch to the world’s fourth strongest most sophisticated army of Israel to stop launching its least effective grenades and rockets.
As Dr. Mahathir said these war crimes are committed against an occupied and humiliated nation with the help of US weapons and political support only.
These undeniable facts and blood stained track records of the White house are telling us in a clear and loud voice that the oval office is nothing but a black house in its spirit and character.
Similarly, first time in the world history the charisma of an optimistic leader who belongs to a nation that remained victim of apartheid for centuries, although highly educated hailing from humble background, convincingly articulate with his balanced approach and plain logic, campaigning with the slogan of “we can” and promising the much required change attracts the entire world and his own country’s large electorate irrespective of class, color and creed.
With them, the entire world has begun to spin its hopes with this man of magnetic charm who captivates the minds by his prudent way of analyzing the problems and wins the hearts by his sane and sensible arguments.
Barack Husain Obama, the US President-elect, son of a Kenyan Muslim father and a White Christian mother, who boasts himself to be brought up by a grandma that taught him all the cherished human values, who was schooled in a third world country Indonesia in his early boyhood and experienced all the sufferings of wretched and stressful life of a poverty ridden society is expected by the people of the world to be different from all the previous presidents of America.
It is a turning point not only in the history of the US but also in the history of the world, that once extremely persecuted and oppressed nation can produce such a fascinating leader in the once a white racist country US where a black man cannot enter the white house even as a visitor could enter it as the President of the whole country.
This fact is effectively conveyed by the veteran journalist Jonathan Power who worked for the Black leader Martin Luther king and participated in his civil rights movement in his article ‘Obama the President’ in these impressive words :
On getting this clean and shining image of Barak Obama projected by himself during the campaign for Presidential election , the people of the world don’t consider him- as popularly believed- to be a Black Man in the White house: instead they deem him a White (hearted) Man in the Black house.
They expect him to stop the occupation of foreign lands in the name of war on terror, to stop unleashing terror and inflicting heavy loss on them in terms of life and property, to interfere in internal affairs of other nations, to stop sending troops to other countries in order to occupy and bring regime change with bogus claims and to stop threatening to launch pre-emptive strike on nations that pursue nuclear projects for peaceful purpose.
At the same time, the US refuses to stop its most favored nation that has already achieved secretly its nuclear ambitions and notorious for its aggressive nature, the Israel, So, the people of the world expect him to stop using double standards in its diplomacy of handling world affairs and to be fair and sane in dealing with them.
They expect him to stop the gigantic arms industry operating in the US that manufactures sophisticated weapons of mass destruction to export to other countries and groups, thus proliferating the arms race and triggering wars around the globe.
They expect him to stop Israel from its naked aggression against a people driven from their homes and turned in to refugees in their own soil inflicting on them unbearable losses of lives and properties and to draft and enforce a -judicious peace accord through an honest arbitration of the US with an unflinching will and monitor with sufficient alertness in order to prevent Israel from breaching it as it used to do in the past.
Also they expect to stop the inhuman blockade of the Gaza people from going to work to earn their livelihood and barring the essential things like food and medicine from reaching them.
However, his predecessor Mr. Bush has become the most hated leader in the international arena by the people of the world. His wrong policies and hawkish approach, insane acts of war mongering has made the world a worse place instead of a better place to live. Millions of people wounded and died. Thousands perished in torture cells without any fair trial and open hearing.
But, we could not predict whether Obama will stand up to his claims and fulfill his promises to bring a positive change in the policies of white house or will become a victim of the hawkish Neo cons and biased Jewish advisors and policy makers appointed by him.
Combined with these hawks, the influence of the Jewish media and the power of the military-industrial complex and the many a opinion makers among the academia and the intelligentsia as well that are in service of these big powers for their own interests will definitely resist immensely any change in the foreign policy of the US.
Let us wait and see whether Obama wins in this acid test and prove himself a white man in the black house who determined to change its image in to a real white or surrender himself to the pressures of the hawkish aides and the arrogant bureaucracy and let himself blackened with the Black house’s evil designs by succumbing to them.
By Abdul Rauf Baqavi
Obama's triumph in the presidential race for the white house has been crowned with a thumping majority to the delight of the oppressed masses throughout the world. His winning a landslide victory in the recent presidential pole of the US to elect its 44th president is seen not only by the long persecuted black race within US but also by all the oppressed and downtrodden people around the globe as a ray of hope that would lead to a world ruled by people with humble back ground.
The cheers Obama receives from the underprivileged and deprived masses all over the world shows nothing but their long time aspiration to find their own representative in the corridors of power in a country that exercise enormous influence over today’s world affairs.
With its colossal nuclear arsenal and a gigantic military which devours annually a huge defense budget that supersedes many developed countries' combined annual military budget , with an arrogant foreign policy making body that places its jingoistic nationalist interests over the welfare of the humankind and an infamous spy agency CIA that plays the role of a super government…..
with its nefarious designs to topple the rulers it finds detrimental to the US interests to crown its puppets and allies as rulers in the third world countries, America has represented so far an evil empire of war mongers, mischief makers and an arrogant super state that claims unquestionable superiority and reckless sovereignty over the destiny of the world.
White house is in fact not worth its name, as its history is stained with murderous plots, assassinations of rulers and leaders around the globe, toppling of regimes deemed unfavorable to the US interests, staging military coups to oust leaders defying the diktats of US policy makers, creating and training militias and guerilla groups to bow down the leaders flouting its orders, triggering civil wars and anarchy to intimidate the foreign governments and its people in order to make them dance to the tunes of the US foreign policy.
As the former Premier of UK Sir Winston Churchill who led his country successfully at a critical moment of World war 11 once said, “Nations have no morals; only interests.” In the present day world, this chauvinistic norm of modern nationalism is well manifested in its ugliest form in the role played by the White House thru its infamous spy agency the CIA.
The super power status attained by the US is not a result of its contribution towards the world community for its welfare, its industrial and technical progress and promotion of world peace. But it was attained by Uncle Sam’s self proclaimed designation of the protector of human rights, despite gross violations of human rights in its own soil and in many of its allies’ territories.
This status was grabbed through America’s big brother attitude that bent on serving its own imperialistic designs and safeguarding its regional interests. It was heartlessly seized by the US through subjecting the weak nations to its will by using brutal military force on the false pretexts of proliferation of WMD, violation of human rights.
This status was obtained by oppression of freedom thirst people and by brokering injudicious pacts between warring rival parties in various parts of the globe, so that and so on.
The first ever nuclear test conducted on human beings was the Manhattan Project ordered by the coldhearted President of US, Mr. Harry Truman and executed by a group of scientists driven by the madness of ultra-nationalistic chauvinism, turning a blind eye to humanitarian concerns.
The nuclear bombs exploded by the US in its human test fields of Hiroshima and Nagasaki played havoc with the lives of hundreds of thousands of innocent human beings and took a heavy toll on their ill fated lives in an unprecedented manner never experienced throughout the human history. This horrendous catastrophe would suffice to explain how the US became a super power by striking the never forgettable terror in the hearts of the nations dwelling on this planet of earth.
The blind support of the US to the despotic and authoritarian regimes, the demagogues in the Islamic and third world countries and its use of them as its pawns in its political game plan have made its crusade to establish the democratic system all over the world delicate and ridiculous even in the eyes of the gullible masses.
This unjustifiable foreign policy adopted since long by the US is an eye-opener to both the public and the elite. This policy of double standards exposes its ideological bankruptcy and ruthless hypocrisy.
It is an irony of present day global politics that the self declared proponent of democracy the US, on one hand claims to promote liberal democracy that guarantees freedom of expression and rule of law and on the other hand it is promoting authoritarianism, despotic monarchy, military dictatorship and fake democracy where puppet rulers are elected with sweeping majority through rigged polls.
Attempting to impose its own will on the impoverished nations, subjecting them further to an unscrupulous exploitation in the name of protecting human rights and liberating them from the clutches of oppressive regimes have become the basic characteristic of the foreign policy of the White house.
In the recent barbaric war launched by Israel on Gaza strip in the pretext of hunting the Hamas activists the White house and its foreign affairs office seem to be hand in glove with Israel’s insane aggression, its indiscriminate bombing of schools and public places resulting in high death toll of civilians including a large number of women and children.
The US has turned a deaf ear to the appeals from the world human rights organizations. It has signed a co-operation accord with the foreign minister of Israel to stop smuggling of arms through the tunnels to Gaza from Egypt in order to unarm the already poorly armed defenseless Gazans, the targets of heavy bombardment of Israel’s Air force.
While Palestinian blood spills and more than thousand Palestinians die and hundreds of thousands are getting injured the US and its western allies are demanding Hamas, a mismatch to the world’s fourth strongest most sophisticated army of Israel to stop launching its least effective grenades and rockets.
As Dr. Mahathir said these war crimes are committed against an occupied and humiliated nation with the help of US weapons and political support only.
These undeniable facts and blood stained track records of the White house are telling us in a clear and loud voice that the oval office is nothing but a black house in its spirit and character.
Similarly, first time in the world history the charisma of an optimistic leader who belongs to a nation that remained victim of apartheid for centuries, although highly educated hailing from humble background, convincingly articulate with his balanced approach and plain logic, campaigning with the slogan of “we can” and promising the much required change attracts the entire world and his own country’s large electorate irrespective of class, color and creed.
With them, the entire world has begun to spin its hopes with this man of magnetic charm who captivates the minds by his prudent way of analyzing the problems and wins the hearts by his sane and sensible arguments.
Barack Husain Obama, the US President-elect, son of a Kenyan Muslim father and a White Christian mother, who boasts himself to be brought up by a grandma that taught him all the cherished human values, who was schooled in a third world country Indonesia in his early boyhood and experienced all the sufferings of wretched and stressful life of a poverty ridden society is expected by the people of the world to be different from all the previous presidents of America.
It is a turning point not only in the history of the US but also in the history of the world, that once extremely persecuted and oppressed nation can produce such a fascinating leader in the once a white racist country US where a black man cannot enter the white house even as a visitor could enter it as the President of the whole country.
This fact is effectively conveyed by the veteran journalist Jonathan Power who worked for the Black leader Martin Luther king and participated in his civil rights movement in his article ‘Obama the President’ in these impressive words :
On getting this clean and shining image of Barak Obama projected by himself during the campaign for Presidential election , the people of the world don’t consider him- as popularly believed- to be a Black Man in the White house: instead they deem him a White (hearted) Man in the Black house.
They expect him to stop the occupation of foreign lands in the name of war on terror, to stop unleashing terror and inflicting heavy loss on them in terms of life and property, to interfere in internal affairs of other nations, to stop sending troops to other countries in order to occupy and bring regime change with bogus claims and to stop threatening to launch pre-emptive strike on nations that pursue nuclear projects for peaceful purpose.
At the same time, the US refuses to stop its most favored nation that has already achieved secretly its nuclear ambitions and notorious for its aggressive nature, the Israel, So, the people of the world expect him to stop using double standards in its diplomacy of handling world affairs and to be fair and sane in dealing with them.
They expect him to stop the gigantic arms industry operating in the US that manufactures sophisticated weapons of mass destruction to export to other countries and groups, thus proliferating the arms race and triggering wars around the globe.
They expect him to stop Israel from its naked aggression against a people driven from their homes and turned in to refugees in their own soil inflicting on them unbearable losses of lives and properties and to draft and enforce a -judicious peace accord through an honest arbitration of the US with an unflinching will and monitor with sufficient alertness in order to prevent Israel from breaching it as it used to do in the past.
Also they expect to stop the inhuman blockade of the Gaza people from going to work to earn their livelihood and barring the essential things like food and medicine from reaching them.
However, his predecessor Mr. Bush has become the most hated leader in the international arena by the people of the world. His wrong policies and hawkish approach, insane acts of war mongering has made the world a worse place instead of a better place to live. Millions of people wounded and died. Thousands perished in torture cells without any fair trial and open hearing.
But, we could not predict whether Obama will stand up to his claims and fulfill his promises to bring a positive change in the policies of white house or will become a victim of the hawkish Neo cons and biased Jewish advisors and policy makers appointed by him.
Combined with these hawks, the influence of the Jewish media and the power of the military-industrial complex and the many a opinion makers among the academia and the intelligentsia as well that are in service of these big powers for their own interests will definitely resist immensely any change in the foreign policy of the US.
Let us wait and see whether Obama wins in this acid test and prove himself a white man in the black house who determined to change its image in to a real white or surrender himself to the pressures of the hawkish aides and the arrogant bureaucracy and let himself blackened with the Black house’s evil designs by succumbing to them.
Tuesday, July 28, 2009
அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப்போட்டி
அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப்போட்டி
துபாய் : அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமீரக சுற்றுச்சூழல் ஏஜென்ஸி மற்றும் ஆர்கிவ் ஆகியவை அறிவித்துள்ளன.
சிறந்த புகைப்படங்கள் www.arkive.org என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இதுவரை 36,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.
துபாய் : அமீரக வனவிலங்கு குறித்த புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமீரக சுற்றுச்சூழல் ஏஜென்ஸி மற்றும் ஆர்கிவ் ஆகியவை அறிவித்துள்ளன.
சிறந்த புகைப்படங்கள் www.arkive.org என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இதுவரை 36,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.
துபாயில் சமுதாயங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாயில் சமுதாயங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் காஞ்சி மவ்லவி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் 'சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் பணிபுரிந்து வந்த காஞ்சி ரவூஃப் பாகவி இம்மாத இறுதியில் அமீரகப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தாயகம் செல்ல இருக்கிறார்.
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் காஞ்சி மவ்லவி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் 'சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் பணிபுரிந்து வந்த காஞ்சி ரவூஃப் பாகவி இம்மாத இறுதியில் அமீரகப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தாயகம் செல்ல இருக்கிறார்.
Labels:
எழுச்சி,
சமுதாயம்,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி,
வீழ்ச்சி
Monday, July 27, 2009
Barack Hussain Obama : A White (hearted) man in the Black house?
Barack Hussain Obama : A White (hearted) man in the Black house?
By Abdul Rauf Baqavi
January 15, 2009
Obama's triumph in the presidential race for the white house has been crowned with a thumping majority to the delight of the oppressed masses throughout the world. His winning a landslide victory in the recent presidential pole of the US to elect its 44th president is seen not only by the long persecuted black race throughout the world but also by all the oppressed and downtrodden people around the globe as a ray of hope that would lead to a world ruled by people with humble back ground. The cheers Obama receives from the underprivileged and deprived masses all over the world shows nothing but their long time aspiration to find their own and reliable representative in the corridors of power in a country that considered to be the boon and the bane of the modern world.
With its huge nuclear arsenal and a gigantic military which devours annually a huge defense budget that supersedes many developed countries' combined annual military budget , with an arrogant foreign policy making body that places its jingoistic nationalist interests over the welfare of the humankind and an infamous spy agency CIA that plays the role of a super government, with its nefarious designs to topple the rulers it finds detrimental the US interests and crowning its stooges as rulers in the third world countries, America has represented so far a big cartel of war mongers and an arrogant super state that claims unquestionable superiority and reckless sovereignty over the destiny of the other countries of the world.
White house is in fact not worth its name, as its history is stained with murderous plots, assassinations of rulers and leaders around the globe, toppling of regimes deemed unfavorable to the US interests, staging military coups to oust leaders defying the diktats of US policy makers, creating and training militias and guerilla groups to bow down the leaders flouting its orders, engineering civil wars and anarchy to intimidate the foreign governments and its people in order to make them dance to the tunes of the US foreign policy. As the Premier of UK Sir Winston Churchill who led his country successfully at a critical moment of World war 11 once said, “Nations have no morals; only interests.” In the present day world, this jingoistic norm of modern nationalism is well manifested in its ugliest form in the role played by the White House thru its infamous spy agency the CIA.
The super power status attained by the US is not a result of its contribution towards the world community for its welfare, its industrial and technical progress and promotion of peace. But it was attained by Uncle Sam’s self proclaimed designation of the protector of human rights, despite gross violations of human rights in its own soil and in many of its allies’ territories.
It was grabbed through America’s big brother attitude that bent on serving its own imperialistic designs. It was heartlessly seized by the US through subjecting the weak nations by brutal force, by military occupations on the false pretexts of proliferation of WMD, violation of human rights, by oppression of freedom thirst people and by brokering injudicious pacts between warring rival parties across the globe, so that and so on.
The first ever nuclear test conducted on human beings was the Manhattan Project ordered by the coldhearted President of US, Mr. Harry Truman and executed by a group of scientists driven by the madness of jingoistic nationalism, turning a blind eye to humanitarian concerns. The nuclear bombs exploded by the US in its human test fields of Hiroshima and Nagasaki played havoc with the lives of hundreds of thousands of innocent human beings and took a heavy toll on their ill fated lives in an unprecedented way never experienced throughout the human history. This horrendous catastrophe would suffice to explain how the US became a super power by striking the never forgettable terror in the hearts of the nations dwelling on this planet of earth.
By its blatant denial of democratic rights to the people of the states where they want to exercise their franchise in order to elect the Islamists they like to bring in power, the US has done a mockery of its own liberal democratic values. Blindly supporting and sustaining the despotic regimes and the demagogues in the Islamic and third world countries and using them as its pawns in its political game plan have made its crusade to establish the democratic system all over the world delicate and ridiculous even in the eyes of the gullible masses.
This unjustifiable foreign policy adopted since long by the US is an eye-opener to both the public and the elite that exposes its ideological bankruptcy and ruthless hypocrisy. It is an irony of present day global politics that the self declared proponent of democracy- the US on one hand claims to promote liberal democracy that guarantees freedom of expression and rule of law and on the other hand it promotes authoritarianism, despotic monarchy, military dictatorship and fake democracies where puppet rulers are elected in sweeping majority through rigged polls.
Attempting to impose its own will on the impoverished nations subjecting them further to an unscrupulous exploitation in the name of protecting human rights and liberating them from the clutches of oppressive regimes have become the basic characteristic of the foreign policy of the White house.
As Dr. Mahathir Mohammed the former Malaysian prime minister stated in an open letter to Obama the President -elect of the USA recently, US’s crusade to democratize countries has killed more people than the authoritarian Governments which it has overthrown.
Mostly the US with some other Western Nations is responsible for the unabated violence and bloodshed spilled through civil wars and for the unrelenting mayhem brought by the rebel groups and racist movements all over the world, because of its supply of arms and offer of training in guerilla warfare to them.
In the recent barbaric war launched by Israel on Gaza strip in the pretext of hunting the Hamas activists the White house and its foreign affairs office seem to be hand in glove with Israel’s insane aggression, its indiscriminate bombing of schools and public places resulting in high death toll of civilians including a large number of women and children.
The US has turned a deaf ear to the appeals from the human rights organizations and many a countries. Instead, it has signed a co-operation accord with the foreign minister of Israel to stop smuggling of arms through the tunnels to Gaza from Egypt in order to unarm the already poorly armed Gazans who are the victims of heavy bombardment of Israel’s Air force.
While Palestinian blood spills and more than thousand Palestinians died and hundreds of thousands are injured, the US and its western allies are demanding Hamas, a mismatch to the world’s fourth strongest most sophisticated army of Israel, to stop launching its least effective grenades and rackets. As Dr.Mahathir said these war crimes are committed against an occupied and humiliated nation with the help of US weapons and political support only.
These undeniable facts and blood stained track records of the White house are telling us in a clear and loud voice that the oval office is nothing but a black house in its spirit and character.
Similarly, first time in the world history the charisma of an optimistic leader who belongs to a nation that remained victim of apartheid for centuries, hailing from humble background, convincingly articulate with his balanced approach and plain logic, campaigning with the slogan of “we can” and promising the much required change for US, attracts the entire world and his own country’s large electorate that includes all the colored and the white irrespective of class and creed. With them, the entire world has begun to spin its hopes with this man of magnetic charm, who captivates the minds by his prudent way of analyzing the problems and wins the hearts by his sane and sensible arguments.
Barack Husain Obama, the US President-elect, son of a Kenyan Muslim father and a White Christian mother, who boasts himself to be brought up by a grandma that taught him all the cherished human values, who was schooled in a third world country Indonesia in his early boyhood and experienced all the sufferings of wretched and stressful life of a poverty ridden society is expected by the people of the world to be different from all the previous presidents of America.
It is a turning point not only in the history of the US but also in the history of the world, that once extremely persecuted and oppressed nation can produce such a charismatic leader in the once a white racist country US where a black man cannot enter the white house even as a visitor, could enter it as the President of the country.
On getting this clean and shining image of Barak Obama projected by himself during the campaign for Presidential election , the people of the world don’t consider him- as popularly believed- to be a Black Man in the White house: instead they deem him a White (hearted) Man in the Black house.
It is really an achievement of the American public to send him to the white house voting purely on merit, without harboring any racial prejudice as the veteran journalist Jonathan Power writes in the above mentioned article in a jubilant tone, “the effect on the rest of the world will be stunning. No European nation, including Russia that has a part black national poet, Pushkin, is within sight of electing a man of color as head of government”
They expect him to stop the occupation of foreign lands in the name of war on terror, to stop unleashing terror and inflicting heavy loss on them in terms of life and property, to interfere in internal affairs of other nations, to stop sending troops to other countries in order to occupy and bring regime change with bogus claims.
Also they expect him to stop threatening to launch pre-emptive strike on nations that pursue nuclear projects for peaceful purpose while sparing its most favored nations that already achieved nuclear ambitions and notorious for their aggressive nature like Israel, also to stop using double standards in its diplomacy of handling world affairs and to be fair and sane in dealing with them.
They expect him to stop the gigantic arms industry operating in the US that manufactures sophisticated weapons of mass destruction to export to other countries and groups, thus proliferating the arms race and triggering wars around the globe.
Again Jonathan Power writes, “The Middle East will rejoice too. Muslims have always had less hang ups about racial equality than western Christians. Now they will expect to see a man who has climbed out of the abysmal abyss of poverty and separated parents in a country once driven with prejudice will profoundly and instinctively understand the plight of the Palestinians and will really this time put America's strength in motion to enable a two state solution, they expect him to stop Israel from its naked aggression against a people driven from their homes and turned in to refugees in their own soil inflicting on them unbearable losses of lives and properties and to draft and enforce a judicious peace accord through an honest arbitration of the US with an unflinching will and monitor with sufficient alertness in order to prevent Israel from breaching it as it used to do in the past.”
Also they expect to stop the inhuman blockade of the Gaza people from going to work to earn their livelihood and barring the essential things like food and medicine from reaching them.
However, his predecessor Mr. Bush has become the most hated leader in the international arena by the people of the world. He launched his war on terror with a promise to hunt down the terrorists. But he ended up in hurting the peaceful life of billions of the common people of the world. His wrong policies and hawkish approach, insane acts of war mongering has made the world a worst place instead of a better place to live. Millions of people wounded and died. Thousands perished in torture cells without any fair trial and open hearing.
The former British premier Tony Blair who is Mr. Bush’s main ally in war on terror himself told recently that he believed the new president Barack Obama will unify the world. Though he had been an ally of Mr. Bush while he was in power, it sounds that he now realizes the fact that his mentor Mr. Bush’s policies have divided the world instead of unifying them. His realization of this factual state of affair, in my opinion, must have prompted him to give this statement.
But, we could not predict whether Obama will stand up to his claims and fulfill his promises to bring a positive change in the policies of white house or will become a victim of the hawkish Neo cons and biased Jewish advisors and policy makers appointed by him. Combined with these hawks, the influence of the Jewish media and the power of the military-industrial complex and the many a opinion makers among the academia and the intelligentsia as well that are in service of these big powers for their own interests will definitely resist any change in the foreign policy of the US.
Let us wait and see whether Obama wins in this acid test and prove himself a white man in the black house who determined to change its image a real white or surrender himself to the pressures of the hawkish aides and the arrogant bureaucracy and let himself blackened with the Black house’s evil designs by succumbing to them.
baqavi18@gmail.com
kanchi27@yahoo.com
By Abdul Rauf Baqavi
January 15, 2009
Obama's triumph in the presidential race for the white house has been crowned with a thumping majority to the delight of the oppressed masses throughout the world. His winning a landslide victory in the recent presidential pole of the US to elect its 44th president is seen not only by the long persecuted black race throughout the world but also by all the oppressed and downtrodden people around the globe as a ray of hope that would lead to a world ruled by people with humble back ground. The cheers Obama receives from the underprivileged and deprived masses all over the world shows nothing but their long time aspiration to find their own and reliable representative in the corridors of power in a country that considered to be the boon and the bane of the modern world.
With its huge nuclear arsenal and a gigantic military which devours annually a huge defense budget that supersedes many developed countries' combined annual military budget , with an arrogant foreign policy making body that places its jingoistic nationalist interests over the welfare of the humankind and an infamous spy agency CIA that plays the role of a super government, with its nefarious designs to topple the rulers it finds detrimental the US interests and crowning its stooges as rulers in the third world countries, America has represented so far a big cartel of war mongers and an arrogant super state that claims unquestionable superiority and reckless sovereignty over the destiny of the other countries of the world.
White house is in fact not worth its name, as its history is stained with murderous plots, assassinations of rulers and leaders around the globe, toppling of regimes deemed unfavorable to the US interests, staging military coups to oust leaders defying the diktats of US policy makers, creating and training militias and guerilla groups to bow down the leaders flouting its orders, engineering civil wars and anarchy to intimidate the foreign governments and its people in order to make them dance to the tunes of the US foreign policy. As the Premier of UK Sir Winston Churchill who led his country successfully at a critical moment of World war 11 once said, “Nations have no morals; only interests.” In the present day world, this jingoistic norm of modern nationalism is well manifested in its ugliest form in the role played by the White House thru its infamous spy agency the CIA.
The super power status attained by the US is not a result of its contribution towards the world community for its welfare, its industrial and technical progress and promotion of peace. But it was attained by Uncle Sam’s self proclaimed designation of the protector of human rights, despite gross violations of human rights in its own soil and in many of its allies’ territories.
It was grabbed through America’s big brother attitude that bent on serving its own imperialistic designs. It was heartlessly seized by the US through subjecting the weak nations by brutal force, by military occupations on the false pretexts of proliferation of WMD, violation of human rights, by oppression of freedom thirst people and by brokering injudicious pacts between warring rival parties across the globe, so that and so on.
The first ever nuclear test conducted on human beings was the Manhattan Project ordered by the coldhearted President of US, Mr. Harry Truman and executed by a group of scientists driven by the madness of jingoistic nationalism, turning a blind eye to humanitarian concerns. The nuclear bombs exploded by the US in its human test fields of Hiroshima and Nagasaki played havoc with the lives of hundreds of thousands of innocent human beings and took a heavy toll on their ill fated lives in an unprecedented way never experienced throughout the human history. This horrendous catastrophe would suffice to explain how the US became a super power by striking the never forgettable terror in the hearts of the nations dwelling on this planet of earth.
By its blatant denial of democratic rights to the people of the states where they want to exercise their franchise in order to elect the Islamists they like to bring in power, the US has done a mockery of its own liberal democratic values. Blindly supporting and sustaining the despotic regimes and the demagogues in the Islamic and third world countries and using them as its pawns in its political game plan have made its crusade to establish the democratic system all over the world delicate and ridiculous even in the eyes of the gullible masses.
This unjustifiable foreign policy adopted since long by the US is an eye-opener to both the public and the elite that exposes its ideological bankruptcy and ruthless hypocrisy. It is an irony of present day global politics that the self declared proponent of democracy- the US on one hand claims to promote liberal democracy that guarantees freedom of expression and rule of law and on the other hand it promotes authoritarianism, despotic monarchy, military dictatorship and fake democracies where puppet rulers are elected in sweeping majority through rigged polls.
Attempting to impose its own will on the impoverished nations subjecting them further to an unscrupulous exploitation in the name of protecting human rights and liberating them from the clutches of oppressive regimes have become the basic characteristic of the foreign policy of the White house.
As Dr. Mahathir Mohammed the former Malaysian prime minister stated in an open letter to Obama the President -elect of the USA recently, US’s crusade to democratize countries has killed more people than the authoritarian Governments which it has overthrown.
Mostly the US with some other Western Nations is responsible for the unabated violence and bloodshed spilled through civil wars and for the unrelenting mayhem brought by the rebel groups and racist movements all over the world, because of its supply of arms and offer of training in guerilla warfare to them.
In the recent barbaric war launched by Israel on Gaza strip in the pretext of hunting the Hamas activists the White house and its foreign affairs office seem to be hand in glove with Israel’s insane aggression, its indiscriminate bombing of schools and public places resulting in high death toll of civilians including a large number of women and children.
The US has turned a deaf ear to the appeals from the human rights organizations and many a countries. Instead, it has signed a co-operation accord with the foreign minister of Israel to stop smuggling of arms through the tunnels to Gaza from Egypt in order to unarm the already poorly armed Gazans who are the victims of heavy bombardment of Israel’s Air force.
While Palestinian blood spills and more than thousand Palestinians died and hundreds of thousands are injured, the US and its western allies are demanding Hamas, a mismatch to the world’s fourth strongest most sophisticated army of Israel, to stop launching its least effective grenades and rackets. As Dr.Mahathir said these war crimes are committed against an occupied and humiliated nation with the help of US weapons and political support only.
These undeniable facts and blood stained track records of the White house are telling us in a clear and loud voice that the oval office is nothing but a black house in its spirit and character.
Similarly, first time in the world history the charisma of an optimistic leader who belongs to a nation that remained victim of apartheid for centuries, hailing from humble background, convincingly articulate with his balanced approach and plain logic, campaigning with the slogan of “we can” and promising the much required change for US, attracts the entire world and his own country’s large electorate that includes all the colored and the white irrespective of class and creed. With them, the entire world has begun to spin its hopes with this man of magnetic charm, who captivates the minds by his prudent way of analyzing the problems and wins the hearts by his sane and sensible arguments.
Barack Husain Obama, the US President-elect, son of a Kenyan Muslim father and a White Christian mother, who boasts himself to be brought up by a grandma that taught him all the cherished human values, who was schooled in a third world country Indonesia in his early boyhood and experienced all the sufferings of wretched and stressful life of a poverty ridden society is expected by the people of the world to be different from all the previous presidents of America.
It is a turning point not only in the history of the US but also in the history of the world, that once extremely persecuted and oppressed nation can produce such a charismatic leader in the once a white racist country US where a black man cannot enter the white house even as a visitor, could enter it as the President of the country.
On getting this clean and shining image of Barak Obama projected by himself during the campaign for Presidential election , the people of the world don’t consider him- as popularly believed- to be a Black Man in the White house: instead they deem him a White (hearted) Man in the Black house.
It is really an achievement of the American public to send him to the white house voting purely on merit, without harboring any racial prejudice as the veteran journalist Jonathan Power writes in the above mentioned article in a jubilant tone, “the effect on the rest of the world will be stunning. No European nation, including Russia that has a part black national poet, Pushkin, is within sight of electing a man of color as head of government”
They expect him to stop the occupation of foreign lands in the name of war on terror, to stop unleashing terror and inflicting heavy loss on them in terms of life and property, to interfere in internal affairs of other nations, to stop sending troops to other countries in order to occupy and bring regime change with bogus claims.
Also they expect him to stop threatening to launch pre-emptive strike on nations that pursue nuclear projects for peaceful purpose while sparing its most favored nations that already achieved nuclear ambitions and notorious for their aggressive nature like Israel, also to stop using double standards in its diplomacy of handling world affairs and to be fair and sane in dealing with them.
They expect him to stop the gigantic arms industry operating in the US that manufactures sophisticated weapons of mass destruction to export to other countries and groups, thus proliferating the arms race and triggering wars around the globe.
Again Jonathan Power writes, “The Middle East will rejoice too. Muslims have always had less hang ups about racial equality than western Christians. Now they will expect to see a man who has climbed out of the abysmal abyss of poverty and separated parents in a country once driven with prejudice will profoundly and instinctively understand the plight of the Palestinians and will really this time put America's strength in motion to enable a two state solution, they expect him to stop Israel from its naked aggression against a people driven from their homes and turned in to refugees in their own soil inflicting on them unbearable losses of lives and properties and to draft and enforce a judicious peace accord through an honest arbitration of the US with an unflinching will and monitor with sufficient alertness in order to prevent Israel from breaching it as it used to do in the past.”
Also they expect to stop the inhuman blockade of the Gaza people from going to work to earn their livelihood and barring the essential things like food and medicine from reaching them.
However, his predecessor Mr. Bush has become the most hated leader in the international arena by the people of the world. He launched his war on terror with a promise to hunt down the terrorists. But he ended up in hurting the peaceful life of billions of the common people of the world. His wrong policies and hawkish approach, insane acts of war mongering has made the world a worst place instead of a better place to live. Millions of people wounded and died. Thousands perished in torture cells without any fair trial and open hearing.
The former British premier Tony Blair who is Mr. Bush’s main ally in war on terror himself told recently that he believed the new president Barack Obama will unify the world. Though he had been an ally of Mr. Bush while he was in power, it sounds that he now realizes the fact that his mentor Mr. Bush’s policies have divided the world instead of unifying them. His realization of this factual state of affair, in my opinion, must have prompted him to give this statement.
But, we could not predict whether Obama will stand up to his claims and fulfill his promises to bring a positive change in the policies of white house or will become a victim of the hawkish Neo cons and biased Jewish advisors and policy makers appointed by him. Combined with these hawks, the influence of the Jewish media and the power of the military-industrial complex and the many a opinion makers among the academia and the intelligentsia as well that are in service of these big powers for their own interests will definitely resist any change in the foreign policy of the US.
Let us wait and see whether Obama wins in this acid test and prove himself a white man in the black house who determined to change its image a real white or surrender himself to the pressures of the hawkish aides and the arrogant bureaucracy and let himself blackened with the Black house’s evil designs by succumbing to them.
baqavi18@gmail.com
kanchi27@yahoo.com
COVA
COVA is a national network of over 800 organisations working for communal harmony, peace and social justice. COVA works with women, children, youth and men from different sections and communities on the issues of communal harmony, women's empowerment, child rights, youth advancement, education, health, environment and civic amenities.
Apart from working with the poorer sections, COVA also actively works with the educated and professional classes to enlist their support and involvement for social transformation through college discussion groups and professional clubs.
COVA believes that involving people from different communities in development programs is an effective way of achieving communal harmony and national integration. Hence, COVA ensures that all its member organisations involve people from different communities in their programs.
In order to achieve its mandate, COVA undertakes programs at the grassroots, networking of organisations and institutions, research, training, advocacy and policy interventions. COVA also works in alliance with a number of international organisations to promote peace in the sub-continent and across the globe.
http://www.covanetwork.org/
COVA, 20-4-10, Charminar, Hyderabad, Andhra Pradesh, INDIA. PIN: 500 002 Phone :+91-40- 24572984, Fax : +91-40-24574527, E-mail : cova@sancharnet.in ; URL: www.covanetwork.org
Apart from working with the poorer sections, COVA also actively works with the educated and professional classes to enlist their support and involvement for social transformation through college discussion groups and professional clubs.
COVA believes that involving people from different communities in development programs is an effective way of achieving communal harmony and national integration. Hence, COVA ensures that all its member organisations involve people from different communities in their programs.
In order to achieve its mandate, COVA undertakes programs at the grassroots, networking of organisations and institutions, research, training, advocacy and policy interventions. COVA also works in alliance with a number of international organisations to promote peace in the sub-continent and across the globe.
http://www.covanetwork.org/
COVA, 20-4-10, Charminar, Hyderabad, Andhra Pradesh, INDIA. PIN: 500 002 Phone :+91-40- 24572984, Fax : +91-40-24574527, E-mail : cova@sancharnet.in ; URL: www.covanetwork.org
Sunday, July 26, 2009
காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி
காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில்
இஸ்லாமியக் கல்வியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள்
நான்கு ஆண்டு கல்வித் திட்டம்
1.இக்கல்லூரியின் சித்தீக்கிய்யா B.I.S (Bachelor of Islamic studies)
2.மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் அப்ஸலுல் உலமா B.Lit (Bachelor of Literature)
3.மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் B.C.A. (Bachelor of Computer Application) அல்லது B.Com with computer Application
மாணவியருக்கான கல்வித்தகுதிகள்
1.திருக்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருப்பது, ஓதத் தெரியாதவர்கள் ஏப்ரல் முதல் மே மாதம் வரை (60 நாட்கள்) இக்கல்லூரியில் நடைபெறும் திருக்குர்ஆன் ஓதக் கற்றல் வகுப்பில் சேர்ந்து சரளமாக ஓதும் தகுதியைப் பெறுவது.
2.பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அல்லது ஜூன் 30 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியான, பிளஸ் டூ தேர்ச்சிக்கு இணையான திறமையினைப் பெற்றிருப்பது, இதற்கான தேர்வு நடத்தப்படும்.
மூன்று ஆண்டு கல்வித் திட்டம்
8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்த திருக்குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவியருக்கு மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் நடைபெற்று வரும் சித்தீக்கிய்யா, அப்ஸலுல் உலமா ஆகிய வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன.
லாப நோக்கின்றி உரிய கட்டணங்களை மட்டும் பெற்று சேவை மனப்பான்மையில் இயங்கும் இக்கல்லூரியின் நான்கு ஆண்டுகள் கல்வித் திட்டத்தில் மூன்று பட்டப்படிப்பு களையும், மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் சித்தீக்கிய்யா மற்றும் அப்ஸலுல் உலமா பட்டப்படிப்புகளையும் கற்றிட, மாணவியர் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
நிர்வாகி,
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி,
அஞ்சல் பெட்டி எண் :8,
காயல்பட்டணம் – 628 204.
தொலைப்பேசி : +4639 283331, 281930, 283270
இஸ்லாமியக் கல்வியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள்
நான்கு ஆண்டு கல்வித் திட்டம்
1.இக்கல்லூரியின் சித்தீக்கிய்யா B.I.S (Bachelor of Islamic studies)
2.மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் அப்ஸலுல் உலமா B.Lit (Bachelor of Literature)
3.மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் B.C.A. (Bachelor of Computer Application) அல்லது B.Com with computer Application
மாணவியருக்கான கல்வித்தகுதிகள்
1.திருக்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருப்பது, ஓதத் தெரியாதவர்கள் ஏப்ரல் முதல் மே மாதம் வரை (60 நாட்கள்) இக்கல்லூரியில் நடைபெறும் திருக்குர்ஆன் ஓதக் கற்றல் வகுப்பில் சேர்ந்து சரளமாக ஓதும் தகுதியைப் பெறுவது.
2.பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அல்லது ஜூன் 30 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியான, பிளஸ் டூ தேர்ச்சிக்கு இணையான திறமையினைப் பெற்றிருப்பது, இதற்கான தேர்வு நடத்தப்படும்.
மூன்று ஆண்டு கல்வித் திட்டம்
8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்த திருக்குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவியருக்கு மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் நடைபெற்று வரும் சித்தீக்கிய்யா, அப்ஸலுல் உலமா ஆகிய வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன.
லாப நோக்கின்றி உரிய கட்டணங்களை மட்டும் பெற்று சேவை மனப்பான்மையில் இயங்கும் இக்கல்லூரியின் நான்கு ஆண்டுகள் கல்வித் திட்டத்தில் மூன்று பட்டப்படிப்பு களையும், மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் சித்தீக்கிய்யா மற்றும் அப்ஸலுல் உலமா பட்டப்படிப்புகளையும் கற்றிட, மாணவியர் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
நிர்வாகி,
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி,
அஞ்சல் பெட்டி எண் :8,
காயல்பட்டணம் – 628 204.
தொலைப்பேசி : +4639 283331, 281930, 283270
Labels:
ஆயிஷா சித்தீக்கா,
இஸ்லாமியக் கல்லூரி,
காயல்பட்டணம்,
மகளிர்
துபாய் தேராவில் வீடு வாடகைக்கு
துபாய் தேராவில் வீடு வாடகைக்கு
துபாய் தேரா பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளது. தமிழக குடும்பத்தினர் உள்ள இல்லத்தில் உள்ள அறை வாடகைக்கு உள்ளது.
மாத வாடகை ரூ. 2500
மேலும் விபரங்களுக்கு
050 1818225
துபாய் தேரா பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளது. தமிழக குடும்பத்தினர் உள்ள இல்லத்தில் உள்ள அறை வாடகைக்கு உள்ளது.
மாத வாடகை ரூ. 2500
மேலும் விபரங்களுக்கு
050 1818225
Saturday, July 25, 2009
உயிரை குடிக்கும் ஃபாஸ்ட் புட் எமன்கள் !
உயிரை குடிக்கும் ஃபாஸ்ட் புட் எமன்கள் !
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )
http://www.mudukulathur.com/katturai.asp?id=53
இறைவன் அருளிய இயற்கையான வாழ்க்கை நடை முறைகளை மறந்துவிட்டு அதற்கு நேர்மாற்றமான நடை முறைகளை அறிமுகப்படுத்தியும், நாகரீக கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாசகார அழிவுப் பாதைகளை உருவாக்கி கொள்ளும் மனிதகுலத்தை நினைத்து அழுவதா? கோபப் படுவதா? எனத் தெரியவில்லை ! இறைவனால் படைக்கப் பட்டவைகளிலேயே மிகவும் அழகான, அறிவான, உயர்ந்த பண்புகளுக்குரிய ஒரே படைப்பு மனித இனம்தான் ! மனிதருக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் ஒரே வித்தியாசம் பகுத்தறிவு மட்டும்தான் !
இறைவனின் முதல் படைப்பு ஆண் என்றும் அதற்கு துணை படைப்பு பெண் என்றும் தான் இயற்கை அமைந்துள்ளது. ஆண்கள் வெளியே ஆளுமை கொண்டவர்களாகவும் பெண்கள் வீட்டிற்குள் ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை எப்போது மனிதர்கள் மாற்றத் துடித்தனரோ, அப்போதே பல்வேறான தீங்குகள் நம்மை சூழ்ந்து விட்டன.
ஆணுக்குப் பெண் சமமென்பது குடும்பவியலுக்கு வேண்டுமானால் ஒரு வகையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் உலகவியலுக்கு அதாவது வீட்டுக்கு வெளியேயும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற ஆணவப்போக்கு தொடர்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பது தான் நமது நிலைபாடு !
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது எதற்காக? பிள்ளைகள் பெற்றுக் கொள்வது எதற்காக? பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த் தெடுப்பது யாருடைய கடமை? குடும்பவியலின் தத்துவமென்ன? இப்படி பல்வேறான கேள்விகளுக்கு குறைந்தபட்ச சிந்தனையை கூட செலுத்த முடியாத ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதால் மனித குலத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதின் முதல் நோக்கமே மனித சந்ததிகளின் அபிவிருத்தி தான் ! இரண்டாவது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணை என்பது தானே தவிர இணை என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
தன்னை நம்பி வந்த பெண்ணை மனநிறைவுடன் வாழ வைக்க வேண்டிய கடமை ஆணுக்கு உண்டு அதனால் தான் ஆண் உழைக்க சென்று விடுகிறான். கணவன் வெளியில் சென்றுவிடுவதால் வீட்டையும் அதில் உள்ள பொருட் களையும் பாதுகாப்பது ஒழுங்குபடுத்துவது போன்றவை மனைவியின் கடமையாகி விடுகிறது. இதில் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைகளை பராமரிப்பதும், ஆரோக்கியமான சூழலில் பாதுகாத்து வளர்ப்பதும் மனைவியின் தலைசிறந்த பணியாகும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் உழைத்து பொருளீட்டுவது ஆண்களின் கடமை என்றும் வீட்டை நிர்வகிப்பது பெண்களின் கடமையென்றும் இருந்த எதார்த்தமான வாழ்க்கை நடைமுறையில் குடும்பவியலுக் கென்று ஒரு தனிச்சிறப்பு இருந்தது. கணவன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகளை பார்த்து, ரசித்து, ருசித்து சமைத்து கொடுக்கும் பெண்களாகவும், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தும் தாயாகவும் இருந்ததால் தான் அன்றைய காலத்தில் (Health is Wealth) ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமிருந்தது.
அன்றைய பெண்களின் பொழுதுபோக்கே தம் பிள்ளைகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதுதான். தாயின் அரவணைப்பிலும், நேரடி கண்காணிப்பிலும் வளர்ந்த குழந்தைகளின் காலம் வரைக்கும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்குமே முதியோர் இல்லம் உருவாகியதில்லை !
காரணம் பெற்றோர்கள் பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்ப தத்துவத்தில் எவ்வித இடைவெளிகளும் ஏற்பட்டதில்லை. கணவன் – மனைவி குழந்தைகள் என்ற அற்புதமான வாழ்க்கை நடைமுறையில் பொழுது விடிந்து வெளியில் வேலைக்கு சென்று விட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பும் கணவனின் வருகைக்காகவும், காலையில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் தன் பிள்ளையின் வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கும் இல்லத்தரசியின் இனிய பாசத்திற்காக ஏங்கிய கணவன், பிள்ளைகள் என்ற அந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது !
கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் அமர்ந்து தங்களது உணர்வுகளையும், அன்புகளையும் பரிமாறிக் கொண்டதால் தான் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் அன்றைய மனிதர்களிடம் மிகைத்திருந்தது. ஆனால் இன்றோ? ஆணுக்குப் பெண் சமம் என்ற மேலை நாட்டின் சீரழிந்த கலாச்சார அடையாளத்தை நாமும் ஏற்றுக் கொண்டதால் இன்று மூலை முடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள் தோன்றி விட்டன.
ஆண்கள் உழைப்புக்காக வெளியேறும் அதே நேரத்தில் பெண்ணும் உழைப்புக்காக வெளியேறுகிறாள். அவர்களது பிள்ளைகளும் படிப்பிற்காக வெளியேறுகின்றனர். வீடு பூட்டப்பட்டு விடுகிறது. மாலையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருத்தராய் வீடு திரும்புகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் தங்களது அலுவலக கூடுதல் பணி நிமித்தமாக நீண்ட நேரம் கழித்து அதாவது குழந்தைகள் உறங்கிய பின்னரும் கூட வீடு திரும்புவதுண்டு. பெற்றோர்களின் பாசம் கிடைக்காத ஏக்கத்திலேயே குழந்தைகளும் தூங்கி விடுகின்றனர்.
பிறகு காலையில் அவசர அவசரமாக எழுந்து அவரவர் பணியில் கவனம் செலுத்தி ஒவ்வொருத்தராய் பிரிந்து விடுகின்றனர். இது போன்ற வாழ்வியல் சூழ்நிலைகள் தான் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தி பாசப்பிணைப்புகளை வேறருக்கச் செய்து விடுகின்றன !
இதன் எதிர்கால விளைவு இன்றைய பெற்றோர்கள் நாளைய முதியோர் இல்லத்தின் நிரந்தர உறுப்பினர்களாவர். அமைதியான வாழ்க்கை முறையை இயந்திரத்தனமாய் உருவாக்கி கொண்டது யார்? பெண்களே தான் ! வீடங்கி இருக்க வேண்டிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் முற்றிலும் பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான் !
பாவம், அந்தப்பிள்ளைகளுக்கு தாய்ப்பாசம் கலந்த பாதுகாப்பான உணவை தன் கைப்பட சமைத்துக் கொடுக்க நேரமில்லாதவளாக தன்னை மாற்றிக் கொண்டதால் தற்போது ஆங்காங்கே புற்றீசல் போல குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் ஃபாஸ்ட் புட் உணவு விடுதிகள் கிளம்பி விட்டன.
அந்த உணவு விடுதிகளில் தயார் செய்யப்படும் ஒவ்வொரு வகையும் வினிகர், அஜீர்ண்மோட்டா, மிஷினரி போன்ற மனித குலத்திற்கு விரோதமான பல்முனைக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய உணவு முறைகள் தான் தற்போது ஏதுமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதத்தில் அமீரகத்தில் மட்டும் ரிஸாப் ஃபிரனக் (வயது 2) ஷாஜியா ரஹ்மான் (4) மர்வா பைஸல் (4) நாதன் டிசவுசா (5) செல்சியா (7) ஆகிய ஐந்து குழந்தைகள் ஃபாஸ்ட் புட் உணவை உட்கொண்டதால் இறந்துள்ளனர். என்ற செய்தியை நாளிதழ்களில் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது !
வினிகர், அஜீர்ணமோட்டா போன்றவை குழந்தைகளின் உணவு செறிமான சக்திக்கு எமனாகும். நமது ஊர்களில் கூட இப்போது பீப் பக்கோடா, சிக்கன் பக்கோடா போன்ற வினிகர், அஜீர்ணமோட்டா கலந்த ஃபாஸ்ட் புட் விஷ உணவுகள் சக்கைப் போடு போடுகின்றன. நல்லது கெட்டதை பிரித்தறிய முடியா பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் என்று தெரிந்தே வாங்கி கொடுக்கும் ஈவு இரக்கமில்லா பெற்றோர்களை இறைவன் மன்னிக்க மாட்டான் !
அவரவர்தம் பிள்ளை களுக்கு தத்தமது வீட்டிலேயே தேவையான உணவு பண்டங்களை தயார் செய்து கொடுக்கலாமே, என சமூக அக்கறையுடன் நாம் கேட்டால் எங்களுக்கு அதற்கேது நேரம்? என எதிர் கேள்வி கேட்கத் துடிக்கும் பெண்களே ! உங்களின் இந்தக் கேள்வியை பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு முன்பே யோசித்து இருக்க வேண்டும்.
“மலடி” என்ற சமூக அவப்பெயரிலிருந்து விடுபடவே குழந்தைப் பெறுகிறோம் என நினைத்தால் அதற்கு திருமணமே செய்யாமல் இருந்து விடலாமே ! குழந்தைப் பெற்றால் அதை நல்ல முறையில் பேணி பாதுகாத்து அதற்கு தேவையான அனைத்தையும் பெற்றவளே செய்யத் துடிக்க வேண்டும் ! அது தான் குழந்தைப் பெற்றலின் உண்மையான நோக்கமாயிருக்கும்.
ஆண், பெண் உழைப்பு சம உரிமையின் அடையாளம் என நினைத்துக் கொண்டு அப்பாவிக் குழந்தைகளின் உரிமைகளை குழி தோண்டி புதைப்பது மிகப் பெரிய பாவமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட ஃபாஸ்ட் புட் எமனுக்கு பழி கொடுத்துவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐயத்தோடு நின்று போகட்டும் ! இனியாவது விழிப்புணர்வுடன் நம்முடைய முன்னோர்கள் காட்டித் தந்த பாரம்பரிய குடும்பவியல் நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வீட்டிலேயே சமைத்து கொடுக்கும் பெற்றோர்களாய் மாறுவோம் !
பிள்ளைகளுடன் நெருக்கமாவோம் !
வேண்டாமே, ஃபாஸ்ட் புட் எமன் உறவு!!
தொடர்புக்கு : 050 795 99 60
தங்களது கருத்துக்களை muduvaihidayath@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )
http://www.mudukulathur.com/katturai.asp?id=53
இறைவன் அருளிய இயற்கையான வாழ்க்கை நடை முறைகளை மறந்துவிட்டு அதற்கு நேர்மாற்றமான நடை முறைகளை அறிமுகப்படுத்தியும், நாகரீக கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாசகார அழிவுப் பாதைகளை உருவாக்கி கொள்ளும் மனிதகுலத்தை நினைத்து அழுவதா? கோபப் படுவதா? எனத் தெரியவில்லை ! இறைவனால் படைக்கப் பட்டவைகளிலேயே மிகவும் அழகான, அறிவான, உயர்ந்த பண்புகளுக்குரிய ஒரே படைப்பு மனித இனம்தான் ! மனிதருக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் ஒரே வித்தியாசம் பகுத்தறிவு மட்டும்தான் !
இறைவனின் முதல் படைப்பு ஆண் என்றும் அதற்கு துணை படைப்பு பெண் என்றும் தான் இயற்கை அமைந்துள்ளது. ஆண்கள் வெளியே ஆளுமை கொண்டவர்களாகவும் பெண்கள் வீட்டிற்குள் ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை எப்போது மனிதர்கள் மாற்றத் துடித்தனரோ, அப்போதே பல்வேறான தீங்குகள் நம்மை சூழ்ந்து விட்டன.
ஆணுக்குப் பெண் சமமென்பது குடும்பவியலுக்கு வேண்டுமானால் ஒரு வகையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் உலகவியலுக்கு அதாவது வீட்டுக்கு வெளியேயும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற ஆணவப்போக்கு தொடர்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பது தான் நமது நிலைபாடு !
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது எதற்காக? பிள்ளைகள் பெற்றுக் கொள்வது எதற்காக? பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த் தெடுப்பது யாருடைய கடமை? குடும்பவியலின் தத்துவமென்ன? இப்படி பல்வேறான கேள்விகளுக்கு குறைந்தபட்ச சிந்தனையை கூட செலுத்த முடியாத ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதால் மனித குலத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதின் முதல் நோக்கமே மனித சந்ததிகளின் அபிவிருத்தி தான் ! இரண்டாவது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணை என்பது தானே தவிர இணை என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
தன்னை நம்பி வந்த பெண்ணை மனநிறைவுடன் வாழ வைக்க வேண்டிய கடமை ஆணுக்கு உண்டு அதனால் தான் ஆண் உழைக்க சென்று விடுகிறான். கணவன் வெளியில் சென்றுவிடுவதால் வீட்டையும் அதில் உள்ள பொருட் களையும் பாதுகாப்பது ஒழுங்குபடுத்துவது போன்றவை மனைவியின் கடமையாகி விடுகிறது. இதில் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைகளை பராமரிப்பதும், ஆரோக்கியமான சூழலில் பாதுகாத்து வளர்ப்பதும் மனைவியின் தலைசிறந்த பணியாகும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் உழைத்து பொருளீட்டுவது ஆண்களின் கடமை என்றும் வீட்டை நிர்வகிப்பது பெண்களின் கடமையென்றும் இருந்த எதார்த்தமான வாழ்க்கை நடைமுறையில் குடும்பவியலுக் கென்று ஒரு தனிச்சிறப்பு இருந்தது. கணவன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகளை பார்த்து, ரசித்து, ருசித்து சமைத்து கொடுக்கும் பெண்களாகவும், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தும் தாயாகவும் இருந்ததால் தான் அன்றைய காலத்தில் (Health is Wealth) ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமிருந்தது.
அன்றைய பெண்களின் பொழுதுபோக்கே தம் பிள்ளைகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதுதான். தாயின் அரவணைப்பிலும், நேரடி கண்காணிப்பிலும் வளர்ந்த குழந்தைகளின் காலம் வரைக்கும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்குமே முதியோர் இல்லம் உருவாகியதில்லை !
காரணம் பெற்றோர்கள் பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்ப தத்துவத்தில் எவ்வித இடைவெளிகளும் ஏற்பட்டதில்லை. கணவன் – மனைவி குழந்தைகள் என்ற அற்புதமான வாழ்க்கை நடைமுறையில் பொழுது விடிந்து வெளியில் வேலைக்கு சென்று விட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பும் கணவனின் வருகைக்காகவும், காலையில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் தன் பிள்ளையின் வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கும் இல்லத்தரசியின் இனிய பாசத்திற்காக ஏங்கிய கணவன், பிள்ளைகள் என்ற அந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது !
கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் அமர்ந்து தங்களது உணர்வுகளையும், அன்புகளையும் பரிமாறிக் கொண்டதால் தான் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் அன்றைய மனிதர்களிடம் மிகைத்திருந்தது. ஆனால் இன்றோ? ஆணுக்குப் பெண் சமம் என்ற மேலை நாட்டின் சீரழிந்த கலாச்சார அடையாளத்தை நாமும் ஏற்றுக் கொண்டதால் இன்று மூலை முடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள் தோன்றி விட்டன.
ஆண்கள் உழைப்புக்காக வெளியேறும் அதே நேரத்தில் பெண்ணும் உழைப்புக்காக வெளியேறுகிறாள். அவர்களது பிள்ளைகளும் படிப்பிற்காக வெளியேறுகின்றனர். வீடு பூட்டப்பட்டு விடுகிறது. மாலையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருத்தராய் வீடு திரும்புகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் தங்களது அலுவலக கூடுதல் பணி நிமித்தமாக நீண்ட நேரம் கழித்து அதாவது குழந்தைகள் உறங்கிய பின்னரும் கூட வீடு திரும்புவதுண்டு. பெற்றோர்களின் பாசம் கிடைக்காத ஏக்கத்திலேயே குழந்தைகளும் தூங்கி விடுகின்றனர்.
பிறகு காலையில் அவசர அவசரமாக எழுந்து அவரவர் பணியில் கவனம் செலுத்தி ஒவ்வொருத்தராய் பிரிந்து விடுகின்றனர். இது போன்ற வாழ்வியல் சூழ்நிலைகள் தான் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தி பாசப்பிணைப்புகளை வேறருக்கச் செய்து விடுகின்றன !
இதன் எதிர்கால விளைவு இன்றைய பெற்றோர்கள் நாளைய முதியோர் இல்லத்தின் நிரந்தர உறுப்பினர்களாவர். அமைதியான வாழ்க்கை முறையை இயந்திரத்தனமாய் உருவாக்கி கொண்டது யார்? பெண்களே தான் ! வீடங்கி இருக்க வேண்டிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் முற்றிலும் பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான் !
பாவம், அந்தப்பிள்ளைகளுக்கு தாய்ப்பாசம் கலந்த பாதுகாப்பான உணவை தன் கைப்பட சமைத்துக் கொடுக்க நேரமில்லாதவளாக தன்னை மாற்றிக் கொண்டதால் தற்போது ஆங்காங்கே புற்றீசல் போல குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் ஃபாஸ்ட் புட் உணவு விடுதிகள் கிளம்பி விட்டன.
அந்த உணவு விடுதிகளில் தயார் செய்யப்படும் ஒவ்வொரு வகையும் வினிகர், அஜீர்ண்மோட்டா, மிஷினரி போன்ற மனித குலத்திற்கு விரோதமான பல்முனைக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய உணவு முறைகள் தான் தற்போது ஏதுமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதத்தில் அமீரகத்தில் மட்டும் ரிஸாப் ஃபிரனக் (வயது 2) ஷாஜியா ரஹ்மான் (4) மர்வா பைஸல் (4) நாதன் டிசவுசா (5) செல்சியா (7) ஆகிய ஐந்து குழந்தைகள் ஃபாஸ்ட் புட் உணவை உட்கொண்டதால் இறந்துள்ளனர். என்ற செய்தியை நாளிதழ்களில் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது !
வினிகர், அஜீர்ணமோட்டா போன்றவை குழந்தைகளின் உணவு செறிமான சக்திக்கு எமனாகும். நமது ஊர்களில் கூட இப்போது பீப் பக்கோடா, சிக்கன் பக்கோடா போன்ற வினிகர், அஜீர்ணமோட்டா கலந்த ஃபாஸ்ட் புட் விஷ உணவுகள் சக்கைப் போடு போடுகின்றன. நல்லது கெட்டதை பிரித்தறிய முடியா பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் என்று தெரிந்தே வாங்கி கொடுக்கும் ஈவு இரக்கமில்லா பெற்றோர்களை இறைவன் மன்னிக்க மாட்டான் !
அவரவர்தம் பிள்ளை களுக்கு தத்தமது வீட்டிலேயே தேவையான உணவு பண்டங்களை தயார் செய்து கொடுக்கலாமே, என சமூக அக்கறையுடன் நாம் கேட்டால் எங்களுக்கு அதற்கேது நேரம்? என எதிர் கேள்வி கேட்கத் துடிக்கும் பெண்களே ! உங்களின் இந்தக் கேள்வியை பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு முன்பே யோசித்து இருக்க வேண்டும்.
“மலடி” என்ற சமூக அவப்பெயரிலிருந்து விடுபடவே குழந்தைப் பெறுகிறோம் என நினைத்தால் அதற்கு திருமணமே செய்யாமல் இருந்து விடலாமே ! குழந்தைப் பெற்றால் அதை நல்ல முறையில் பேணி பாதுகாத்து அதற்கு தேவையான அனைத்தையும் பெற்றவளே செய்யத் துடிக்க வேண்டும் ! அது தான் குழந்தைப் பெற்றலின் உண்மையான நோக்கமாயிருக்கும்.
ஆண், பெண் உழைப்பு சம உரிமையின் அடையாளம் என நினைத்துக் கொண்டு அப்பாவிக் குழந்தைகளின் உரிமைகளை குழி தோண்டி புதைப்பது மிகப் பெரிய பாவமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட ஃபாஸ்ட் புட் எமனுக்கு பழி கொடுத்துவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐயத்தோடு நின்று போகட்டும் ! இனியாவது விழிப்புணர்வுடன் நம்முடைய முன்னோர்கள் காட்டித் தந்த பாரம்பரிய குடும்பவியல் நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வீட்டிலேயே சமைத்து கொடுக்கும் பெற்றோர்களாய் மாறுவோம் !
பிள்ளைகளுடன் நெருக்கமாவோம் !
வேண்டாமே, ஃபாஸ்ட் புட் எமன் உறவு!!
தொடர்புக்கு : 050 795 99 60
தங்களது கருத்துக்களை muduvaihidayath@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நிறைகுடம்
நிறைகுடம்
http://husba.blogspot.com
உலக அழகை காண வா
நீ மனித இனம் ஒன்றே என கூற வா
புதிய வரலாறு படைத்திட நீ
உலகை சுற்றி வா
-சுற்றுலா தினம் அன்று பாடிய பாடல்
kudanthaihussain.hussain@gmail.com
http://husba.blogspot.com
உலக அழகை காண வா
நீ மனித இனம் ஒன்றே என கூற வா
புதிய வரலாறு படைத்திட நீ
உலகை சுற்றி வா
-சுற்றுலா தினம் அன்று பாடிய பாடல்
kudanthaihussain.hussain@gmail.com
Friday, July 24, 2009
http://www.muhieddeentv.com
Dear brothers, Dhua salam
http://www.muhieddeentv.com/
has come into being since yesterday ie MIHRAJ DAY.
It is available 24 hours worldwide.
http://www.muhieddeentv.com/
has come into being since yesterday ie MIHRAJ DAY.
It is available 24 hours worldwide.
ராமதாஸ்
ராமதாஸ்
சிறுபான்மை இனப்போராளி ஷஹீத் பழனிபாபா அவர்களின் ஊனில் வளர்ந்து, இன்று இலங்கைத் தமிழர்களின் குருதியில் செழிக்கும் வீரிய உறிஞ்சு ரக ஒட்டுண்ணி இனத்தைச் சார்ந்தவர்தான் தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ராமதாஸ்.
( ஈழக் குருதியில் ஓட்டுப் பொறுக்கிடும் தமிழக பிண அரசியல் எனும் கட்டுரையில் பஷீர் )
நன்றி : சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009
சிறுபான்மை இனப்போராளி ஷஹீத் பழனிபாபா அவர்களின் ஊனில் வளர்ந்து, இன்று இலங்கைத் தமிழர்களின் குருதியில் செழிக்கும் வீரிய உறிஞ்சு ரக ஒட்டுண்ணி இனத்தைச் சார்ந்தவர்தான் தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ராமதாஸ்.
( ஈழக் குருதியில் ஓட்டுப் பொறுக்கிடும் தமிழக பிண அரசியல் எனும் கட்டுரையில் பஷீர் )
நன்றி : சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009
Dai required in RAK
Dai required in RAK
Assalamalaikum
Dear Brothers,
Kindly note the following details as per subject requriements
POST: "Dai required for a Government Islamic Dawah Organisation" in RAK
REQUIREMENT: "Islamic Knowledge to explain in English & Urdu"
PACKAGE: "AED 2000 + accomodation"
Send ur cv's directly to javeedkhan1954@yahoo.co.in
Or Contact (00971)-050-7992026
Assalamalaikum
Dear Brothers,
Kindly note the following details as per subject requriements
POST: "Dai required for a Government Islamic Dawah Organisation" in RAK
REQUIREMENT: "Islamic Knowledge to explain in English & Urdu"
PACKAGE: "AED 2000 + accomodation"
Send ur cv's directly to javeedkhan1954@yahoo.co.in
Or Contact (00971)-050-7992026
திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா
திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா
திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா மற்ற்ம் ஐக்கிய நலக் கூட்டமைப்பு சேவைக்குழு அறிமுக விழா 26.07.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மானா மூனா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க தலைவர் ஹாஜி கே.எம்.ஏ. முஹம்மது அலி தலைமை வகிக்கிறார்.
தாமரைப்பட்டி அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி நிறுவனர் மவ்லவி ஹாபிழ் எம்.ஒய். ரஹ்மத்துல்லாஹ் பாகவி முன்னிலை வகிக்கிறார்.
நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி எம். அப்துர் ரஹ்மான் யூசுபி வரவேற்புரை நிகழ்த்துகிறார். கே. எம். இஸ்மாயில் சேட் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
சென்னை ஐக்கிய நலக்கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி முஹம்மது அன்வர்தீன், சென்னை அல்ஹரமைன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய நலக்கூட்டமைப்பின் செயலாளர் ஹாஜி முஹம்மது ரபீக், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி ஷம்சுத்தீன் காஸிமி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
திண்டுக்கல் முத்தவல்லிகள் கூட்டமைப்பின் கன்வீனர் ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவின் நோக்கங்கள் :
வட்டியில்லா கடன், ஜக்காத் வசூலித்து பைத்துல்மால் முறையில் விநியோகம், வியாபாரிகளுகான சிறுசேமிப்புத் திட்டம், வட்டியில்லா டெபாஸிட் திட்டம், அரசு நலத்திட்ட உதவி, சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல், கல்வி ஆலோசனை
தகவல் உதவி :
ஜாபர் சாதிக், திண்டுக்கல்
9894057709
jabarsathik@yahoo.co.in
திண்டுக்கல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷன் டிரஸ்ட் ஆரம்ப விழா மற்ற்ம் ஐக்கிய நலக் கூட்டமைப்பு சேவைக்குழு அறிமுக விழா 26.07.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மானா மூனா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க தலைவர் ஹாஜி கே.எம்.ஏ. முஹம்மது அலி தலைமை வகிக்கிறார்.
தாமரைப்பட்டி அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி நிறுவனர் மவ்லவி ஹாபிழ் எம்.ஒய். ரஹ்மத்துல்லாஹ் பாகவி முன்னிலை வகிக்கிறார்.
நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி எம். அப்துர் ரஹ்மான் யூசுபி வரவேற்புரை நிகழ்த்துகிறார். கே. எம். இஸ்மாயில் சேட் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
சென்னை ஐக்கிய நலக்கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி முஹம்மது அன்வர்தீன், சென்னை அல்ஹரமைன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய நலக்கூட்டமைப்பின் செயலாளர் ஹாஜி முஹம்மது ரபீக், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி ஷம்சுத்தீன் காஸிமி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
திண்டுக்கல் முத்தவல்லிகள் கூட்டமைப்பின் கன்வீனர் ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவின் நோக்கங்கள் :
வட்டியில்லா கடன், ஜக்காத் வசூலித்து பைத்துல்மால் முறையில் விநியோகம், வியாபாரிகளுகான சிறுசேமிப்புத் திட்டம், வட்டியில்லா டெபாஸிட் திட்டம், அரசு நலத்திட்ட உதவி, சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல், கல்வி ஆலோசனை
தகவல் உதவி :
ஜாபர் சாதிக், திண்டுக்கல்
9894057709
jabarsathik@yahoo.co.in
Labels:
அசோஸியேஷன்,
அமானா,
ஆரம்ப விழா,
டிரஸ்ட்,
திண்டுக்கல்,
வெல்ஃபேர்
Subscribe to:
Posts (Atom)