Friday, August 6, 2010

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

From: Sheik Masthan
Date: 5 August 2010 4:23:43 PM GMT+04:00
To: Sheik Masthan
Subject: திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்
Reply-To: uqc_organizing_committee@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


கீழ்கண்ட பயிற்சியினை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் சென்னையில்
தங்கள் பகுதியில் உள்ள ஸ்கூல்.காலேஜ்,பள்ளிவாசல் மற்றும் பொது இடத்தில் நடத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்...
1. ஷேக் மஸ்தான் : 9841223553
2. அஹ்மது கபீர் : 9994176372


பயிற்சியின் விபரம்.....


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
உங்களில்; சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பவரே
- நபிமொழி அறிவிப்பவர் : உதுமான் (ரழி) நூல் : புஹாரி.


குறுகிய கால பயிற்சி - தமிழில் (3 மணி நேரம்)


திருக்குர்ஆனையும், தொழுகையையும்
புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில், இன்ஷா அல்லாஹ்


குர்ஆனிலுள்ள திரும்ப திரும்ப வரும் 50 வார்த்தைகளை முழுக்க முழுக்க அர்த்தம் புரிந்து முற்றிலும் புதிய மற்றும் எளிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம்.


இதில் கற்றுக்கொள்ளும் 50 வார்த்தைகளை தெளிவாக அறிவதன் மூலம் ஏறக்குறைய திருக்குர்ஆனிலுள்ள தோராயமாக 28,995 வார்த்தைகளை புரிந்து கொண்டு ஓத முடியும். திருக்குர்ஆனில் உள்ள மொத்தம் ஏறத்தாழ 78,000 வார்த்தைகளில், இது 35 சதவீதத்திற்கும் அதிகமான வார்த்தைகளாகும்.




• மல்டி மீடியா திரை மூலம் பாடம் கற்பித்தல்
• 12 வயதுக்கு மேற்பட்டவர்க்கு மட்டும்
• குர்ஆன் ஓத தெரிந்து இருத்தல் போதுமானது




குறுகிய காலப் பயிற்சிகளின் நோக்கம்:


திருக்குர்ஆன்,


1. கற்க எளிதானது என்பதை உணர்த்துதல்.
2. அதைப் புரிந்துகொண்டு திரும்பத் திரும்ப ஓத ஊக்குவித்தல்.
3. அதனுடன் உறவாட, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உதவுதல்.
மேலும்,
4. தொழுகையை அர்த்தம் அறிந்தவராய் தொழுதல்.
5. குழு உணர்வைத் தோற்றுவித்தல்.




PLEASE FORWARD TO ALL YOUR FRIENDS AND RELATIVES.....


A short course on
Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil 3Hrs…

Following are the brief details about the programme :
Qualification : The participant should know to read Quran and Tamil Language
Understand Quran and Salah - The Easy Way in Tamil for 3 hours through Power Point Presentation and it covers in Total 8 Lessons - Each Lesson will be conducted for 20 minutes and contents are as follows:

1. Surah Al Fathiha and Al Asr, some hadees and Duas from our Daily Prayers with word to word translation.
2. Some Grammar thru TPI method (Total Physical Interaction)
3. Motivational & Educational Tips to memorize, remember, etc...
4. 50 Arabic words will be taught with translation and examples. That 50 words repeat in quran more than 27,500 times, it means more than 35% of the words in quran (total words in quran approx. 78,000)
5. Test paper (Objective type Questions) will be given at end of the course to make sure that the participants learnt these 50 words thoroughly.



9Hrs Course...


Assalam alaikum wa rahmatullah

OVERALL objectives of this program are as follows:
1. Bring Islamic brothers to interact with the QURAN (recite, understand, follow).
2. Teach 100 words & basic Grammar in these program through what they recite everyday and through easy grammar techniques. (50% coverage of words of the Qur'an; not the Qur'an itself).
3. Grouping the participants under some Learned Peoples to clear their doubts and to continue their learning
4. Teach another 250 words within two months (through additional recommended recitations) & some more Grammar thru email and conducting 25 hours of additional teaching at suitable intervals at Chennai. At the end of this course, a student is familiar with 70% of the words (not 70% of the Qur'an). So, in each line, only two unknown words (on the average) remain.
5. Teach the Quran from Al-Fatihah till An-Naas in 165 hours or at least guide the people how to learn it from first to last.
(A practical alternative for people can be having a 3 hour session every weekend, where they can complete half para easily; after completing the above steps. In 60 weeks, the Qur'an can then be completed from Al-Fatihah till An-Naas).
Please note that a total of 200 teaching hours are required for basic understanding of the Qur'an. The remaining 30% of the words are learnt in this process, i.e., in Step 5, automatically. The list of these words can be provided but it really does not help because a person can not memorize from lists or does not learn a language from a dictionary!.
The objectives of the short course are (as given in the slides):
1. Convince that Qur'an is easy to learn
2. Encourage to recite Qur'an again and again with understanding
3. Help in interacting with the Qur'an (to bring it into our lives)
4. To pray Salah effectively
5. To generate the team spirit to work for Islamic cause (Muslim as well as humanity cause)


Jazakallah
Sheik Masthan
9841223553

Tuesday, August 3, 2010

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்



உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்." (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்த மற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேச வேண்டாம். கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும். (ஸஹீஹூல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக் கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை." (ஸஹீஹூல் புகாரி)

தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது.. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியமான அல்லாஹ்வின் கூலி மகத்தானது. பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கம் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "நோன்பைத் தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்."

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது" என நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபட வேண்டும்.

Sunday, August 1, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”
டாக்டர். S.ஆபிதீன்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=326

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.
அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.
இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …
கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !
இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.
இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : 99658 92706

E-mail : abideen222270@yahoo.com


Thanks : Samarasam Tamil Fortnightly
May 16-31,2010

இறைவனிடம் கையேந்துங்கள்-அல்லாஹ்......

இறைவனிடம் கையேந்துங்கள்-அல்லாஹ்
என்றுமே இல்லையென்று சொல்வதில்லையே!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி(ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=329

இறைவன் இறைக்கின்றான் என்று அல்லாஹ்வினை நம்புகிறவர்களும்-
இறைவன் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்களும் உலகில் உண்டு.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. அது என்னவெனில் இறைவனை நம்பி அவனிடம் கையேந்துவதால் உங்களுக்கு எந்த இழப்புமில்லை.

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்து இன்னல் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் என்பது மட்டும் உறுதியானது. சமீபத்தில் இந்தியாவின் மங்க@ர் ஏர்போர்டில் துபாயிலிருந்து 158 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் ஓடுகிற தளத்தினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி பயணம் செய்த எட்டு பேர்களை தவிர்த்து அனைவரும் மரணம் அடைந்தது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அதில் அதிர்ஸ்டவசமாக தப்பித்த கிருஷ்ணன் என்ற பயணி சொல்லும் போது, ‘விமானம் எரிந்து துண்டு, துண்டாக சிதறியபோது விமானப்பகுதியில் ஒரு ஓட்டை தெரிந்தது. அதனைக் கடவுளின் கருணையாகக் கருதி அதன் வழியாக தப்பித்தேன்’ என்று சொல்லியுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக இறவா அல்லாஹ்வினை நம்பாது இறந்த மனிதர்கள் அடக்கஸ்தலத்தலமான இராமநாதபுரம் ஏர்வாடி மட்டும் மதுரை கோரிப்பாளையம் தர்காக்களை நம்பி படையெடுத்து தன் ஒன்ரறை வயது ஒரே ஆண் மகனான காதர் யூசுப்பினை இழந்த சிரின் பாத்துமாவின் பரிதாபமும் அவனை மூட நம்பிக்கையினம் மொத்த உருவிற்கு நரபலி கொடுத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அப்துல் கப+ரின் கதையினையும் 27.7.2010 அனைத்துப் பத்திரிக்கைகளும் விலா வாரியாக எழுதியிருந்து மூட நம்பிக்கை இஸ்லாமியர்களிடையே எவ்வாறு வேரூன்றியிருக்கிறது என்று பறைசாற்றகின்றன. தப்லீக் ஜமாத்தும், தவ்ஹீத் ஜமாத்துக்களும், சமுதாய தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ மக்களிடம் விழிப்புணர்ச்சிகள் மேற்கொண்டாலும் எங்கே அவைகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துவிட்டது இயற்கையே.. ஆனால் அவர்கள் தங்களின் முயற்சிகளில் இன்னும் தீவிரம் காட்டி எல.;லாம் வல்ல அல்லாஹ்வினைத் தவிர யாரிடமும் நீங்கள் உங்கள் தேவைக்கு கையேந்தாதீர்கள் என்று பறை சாற்ற வேண்டும் என்பதிற்காக உருவானதே இந்த மடல்.



துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் நாம் இன்பத்தில் திளைக்கும்போது மட்டும் இறைவனை மறந்து விடுகிறோம். சில சமயங்களில் இறைவன் இருப்பது சிலருக்கு சந்தேகம் எழுவதுண்டு. இறை மறுப்பாளர்கள் வைக்கும் வாதமெல்லாம், ‘இறைவன் இருக்கிறானென்றால் உலகில் ஏழை பணக்காரனென்ற ஏற்றத்தாழ்வு ஏனிருக்க வேண்டும், சிலருக்கு கிடைக்கும் நல்லருள் பலருக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தால் இறைவன் இருப்பதினையே சந்தேகப்படுகின்றனர். அது அவர்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும். இறைவனின் அருள் எல்லோருக்கும் சமமாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவனுடைய உள்ளம் அமைதியாகவும், சந்தோசமாகவும், கோபமடையாமலும், தீய எண்ணங்கள் அவன் உள்ளத்தில் இருள் கவ்வாமலும் இருந்து இறைவனிடம் தன் குறைகளைச் சொல்லிவிட்டு வாளாதிருக்காமல் தன் முயற்சியில் ஈடுபட்டால் இறைவன் தன் அடியாருக்கு பக்க துணையாக இருக்கிறான். இறைவனுக்கும் அடியாருக்கும் இடையில் மூன்றாமவருக்கு எந்த வேளையுமல்ல. ஆகவே சிலர் அந்த மூன்றாவரை தேடி தர்காக்களுக்கும், சாமியார்களிடமும், போலி மந்திரவாதிகளிடமும், குறி சொல்வர்களிடமும் சோரம் போகிற படியால் தான் மேலேக் குறிப்பிட்ட 27.7.2010 முஸ்லிம் சிறுவன் நரபலி போன்ற உலகில் விரும்பத்தகதாக அனாட்சரமான சம்பவங்கள் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்லாது அனைத்து மதத்தினரிடமும் ஏற்படுகிறது.
நாம் கம்புயூட்டரின் செயல்பாட்டினை எடுத்துக் கொள்வோம். கனினியில் ஒரு செய்தியினை அனுப்புகிறோம். அதனை அனுப்புகிறவர் அடியான் என்று வைத்துக் கொள்வோம். அதனை ஏற்றுக் கொள்ளும் ரிஸீவரை இறைவன் என எடுத்துக் கொள்வோம். அனுப்பிய மெசேஜ் குழப்பம் இல்லாததாகவும், அதனை அனுப்புகிறவர் நல்லொழுக்கம் கொண்டவராகவும், தீய எண்ணங்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போது தான் அவர் இறைவனிடம் விடுக்கும் வேண்டுகோள்(மெசேஜ்) இறைவனிடம் முறையாக சேர்ந்து அவனுடைய கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுகிறான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை பசியால் கதறுகிறது. அந்தக் குழந்தையின் கதறல் சப்தம் தாயினால் தான் உணர முடியும். அந்தக் குழந்தையின் குரலைக் கேட்டு தாய் தன் உதிரத்தில் உதிர்த்த அமுதத்தினை குழந்தைக்கு தாரைவார்க்கிறாள். அதுபோல் தான் அல்லாஹ்வும் தன் அடியார்கள் ஓர்மையுடன் விடும் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவான். அதனை விட்டு விட்டு தர்காக்களுக்கும், கபர்ஸ்தானுக்கும் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற கையேந்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல் மதுரை கோரிப்பாளைத்தில் ஒரு அப்பாவி தாயினுக்கு தன் பாலகனை பலிகொடுத்த கதையாகவும், தர்காக்களில் தங்கும் பெண்களின் கற்புக்கு பாதகம் வரும் நிலையும், மனநிலை பாதித்தவர் மேலும் நோய் அதிகமாகி பராரியாக அலையும் பரிதாபமும் ஏற்படும்.
சில சமயங்களில் நாம் தொழும் போது நமது மனம் பல விசங்களில் அலைமோதி எத்தனை ரக்காத்துகள் தொழுதோம் என்றே நமக்கு மட்டுமல்ல ஏன் சில தொழுகை நடத்தும் இமாம்களுக்கே மறந்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து விலகி மனதினை ஓர் முகப்படுத்தி இறையட்சத்தில் ஈடுபடும்போது நாம் விரும்பும் காரியம் நிச்கயம் நடக்கும். அதற்கு நாம் எண்ண செய்யவேண்டும்:

1) பள்ளிக்குச் செல்லும் போது சுத்தமான ஆடைகள் அணியப் பழகவேண்டும். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சுத்தமான ஆடையணிந்துவிட்டு பள்ளிக்கு வரும் போது வெறும் படம், எழுத்துகள் பொறித்த சட்டை பணியன்களை அணிந்து வருகின்றனர். அதனால் தொழுபவர் அவர்கள் மேலங்கிகளை பார்வையிட்டு அதில் என்ன படம் போட்டிருக்கிறது அல்லது எழுதியிருக்கிறது என்ற கவனத்தினை செலுத்துகின்றனர். ஆகவே தொழச்செல்லும் போது இறை பயத்துடனும,; சுத்தமான ஆடையுடனும் செல்லவேண்டும்.

2) மனதில் மகிழ்ச்சியான விசயங்களை நிலை நிறுத்த வேண்டும். நமது வாழ்வில் தினந்தோறும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றோம், இன்ப துன்பங்களுக்கு ஆளாகின்றோம்.. அப்படிப்பட்ட சூழலில் வாழ்வின் தாழ்வுகளையும், துன்புங்களையும் பிரதானமாக எடுத்துக் கொள்ளலாமா? ஒரு சமயம் நண்பர் ஒருவருடன் விமானப்பயணத்தில் ஈடுபட்டேன். அந்த நண்பர் தன்னுடைய வாழ்வில் நடந்த சோக சம்பவங்களையே பிரதானமாக பேசிக் கொண்டு வந்தார். ஆனால் அந்த சோக சம்பவங்களிடையே அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதினை அவருக்கு ஞாபகமூட்டி உங்கள் வாழ்வில் நீங்கள் பலருக்குக் கிடைக்காத விமானப்பயணத்தினை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதினை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று தேற்றினேன. ஆகவே துன்பங்களை நினைத்துப்பார்த்து இறைவனை குறை கூறுவதினை விட கிடைத்த இன்பத்தினை நினைத்து மகிழ்ச்சியடைய பழக வேண்டும்.

3) நாம் நல்லவைகளையே பார்க்க வேண்டும்-பேச வேண்டும். நல்ல போதனைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். சிலர் சொல்வர் ‘களவையும் கற்று மற’வென்று. ஆனால் விஷம் எப்படியிருக்கிறது என்று சுவைத்துப்பார்த்தால்தான் தெரிய முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இனிய சொற்களிருக்க கடும் சொற்களை பேசக்கூடாது. அதனால் பல குடும்ப வாழ்வில்-நட்புகளில் குழப்பங்கள் வரக் காரணமாக அமைந்து விடுகிறது.

4) அடுத்தவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களை வெளியேற்ற உதவ வேண்டும். மனிதன் ஆறறிவுள்ளவன் அவனுக்கு தீயது எது நல்லது எது என்று பகுத்துப் பார்க்கும் சக்தியிருக்கிறது. அனால் மது, மாது , சூது போன்ற தீய செயல்களில் மூழ்கி இறைவனிடமிருந்து விலகும் நிலையினைத் தவிர்க்க வேண்டும்.. சிலர் சுயநலவாதிகளாக இருப்பதினை காணலாம். அவர்கள் பணம் படைத்து நிம்மதியிழந்து வாழ்வதினையும் காணலாம். தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியினை, உடல் உழைப்பின் ஒரு பகுதியினை ஏழை, எளியவர்களுக்காக, மாற்றுத்திரனாளிகளுக்காக, விதவைப்பெண்கள், முதியோர் மறுவாழ்விற்காக செலவிடுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதினைக் காணலாம்.
• தினந்தோறும் சிலநேரம் தொழுகைக்காக ஒருக்குவதின் மூலம் நீங்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் மன வலிமையினைக் கொடுக்கும். சமீபகால பெரிய எழுத்தாளர், நார்மன் டீலே, ‘நீங்கள் மனதினை ஓர்நிலைப்படுத்தி இறையச்சத்துடன் தொழுது வந்தால் உங்கள் அனேகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்’ என்று சொல்லியுள்ளார். நான் எழுதுவதிற்கு மறந்த சில விசயங்கள், செய்வதிற்கு விடுபட்ட முக்கிய வேலைகள் கூட மனதினை ஓர்முகப்படுத்தி தொழும்போது நினைவிற்கு வந்ததுண்டு. மனிதர்களால் கைவிடப்பட்டு இறைவனிடம் வேண்டுகோள் வைத்து வெற்றிபெற்ற மனிதரின் கதையினை உங்களுக்கு உதாரணமாக சொல்ல ஆசைப்படுகிறேன். நான் சில சதித்திட்டங்களால் சென்னை மத்திய சிறையிலிருந்தபோது நண்பர் குணங்குடி ஹனிபா அவர்களும் இருந்தார்கள. நான் சென்னை சட்டம், ஒழுங்கு டி.சியாக 1991-1994 வரை இருந்த போது ஒருநாள் அலுவலகத்தில் அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தான் ஒரு ஆட்டோ டிரைவராக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்ததாகவும், சமுதாய சேவை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விட்டதாகச்சொன்னார். ஆனால் துரதிஸ்டவசமாக அவரை மத்திய ஜெயிலில் பார்வையாளர் நேரத்தில் சந்திக்கும் வாய்பு;பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவரை அவருடைய துணைவியார் சந்திக்க வந்திருந்தார். அவரிடம் ஹனிபா சொல்லும்போது, ‘அல்லாஹ்விடம் துவா செய், ஏழு வருடமாக சிறையில் வாடுகிறேன், இறைவன் கண்திறக்கவில்லை’ என்றார். இதனை 2007 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய, ‘காக்கிச்சட்டை பேசுகிறது’ என்ற புத்தகத்தில் எழுதியதினை ஆசிரியர் இன்குலாப் அவர்கள் வெளியிட்டார். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் மைனாரிட்டி முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையினைத்தான் நாடவேண்டும். அப்படி நாடியதால் தான் நண்பர் குனங்குடி ஹனிபா இன்று சுததந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டுள்ளார் என்பதினை நாம் மறக்கக் கூடாது.

தினந்தோறும் இறைவனைத் தொழுவதிற்கு பத்து வழிவகைளைக்
கூறலாம் என நினைக்கிறேன்

1) கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுது கொள்ளுங்கள்.

2) தொழ முடியாத நேரத்தில் இறைவனை நினைத்து தஸ்பி எண்ணிக் கொள்ளுங்கள்.

3) அல்லாஹ்வினை நினைத்து உங்கள் மொழியில், தெளிவான வேண்டுகோளை வையுங்கள்.

4) உங்கள் தேவைகளை நிறைவேற்றவே தொழவேண்டும் என நினைத்துத் தொழவேண்டாம்.
உங்களைப்படைத்து தொழ வாய்ப்புக்கொடுத்து உயிரோடு இருக்கச்செய்ததிற்காகவாது தொழுங்கள். சிறு உதவிகளைச் செய்யும் மானிடருக்கு விழுந்து, விழுந்து நன்றி சொல்லும் போது அழகான மனித உயிரினை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.

5) உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்று நாற்காலியில் இருந்து தொழவேண்டாம். கூடுமானவரை குனிந்து, நிமிர்ந்து, இறைவனுக்கு ஸஜ்தா செய்து தொழுக முயற்சி செய்யுங்கள்.

6) நீங்கள் தொழும் போது இறைவனின் குறை தீர்க்கும் சக்தி மீது அவ நம்பிக்கை கொள்ளாது, அல்லாஹ்தான் எல்லாக் குறைகளையும் களையும் வல்லமை மிக்கவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.

7) சாதாரணமாக இறைவன் நாம் கேட்கும் பலனுக்கு மேலாக பன் மடங்கு பலன் கொடுப்பவன். அவன் கொடுக்கும் பலன் எதுவானாலும் அது அருட்கொடை என ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.

8) நமது குடும்ப தேவைகளை புறக்கணித்து இறைதளமே கதியென வாளாதிருக்கக்கூடாது. எந்த மதமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆகவே நீங்கள் தேவைகளைப் ப+ர்த்தி செய்யும் நல்ல கணவராக மனைவிக்கும், சிறந்த தந்தையாக பிள்ளைகளுக்கும், பேணிக்காக்கும் மகனாக உங்கள் வயதான பெற்றோர்களுக்கும் காட்சி தரவேண்டும்.

9) உடன் பிறந்தோர்-உற்றார் உறவினர் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்றும்., உங்களுக்குத் தீங்கிளைத்தவருக்கும் நன்மை செய்ததின் மூலம் நீங்கள் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பது நிச்சயமாகிறது.

10) தீர்வுகாண முடியாத செயல்களுக்கு அல்லாஹ்வினிடம் கையேந்தி நாடவேண்டும். அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நான் 18.6.2010 அன்று என் துணைவியார் என் மகன் சதக்கத்துல்லாஹ் ஆகியோருடன் அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு விட்டு போர் நினைவுச்சின்னம் அணிவகுப்பு(சேன்ச் ஆப் கார்டு) நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு ஜூம்மாத்தொழுவதிற்காக அங்குள்ள பெரிய இஸ்லாமிக் கம்யூனிட்டி பள்ளிவாசலுக்கு ஒரு டாக்ஸியில் ஏறினோம். அதனை ஒரு கறுப்பினத்தின எபி என்ற டிரைவர்; ஓட்டி வந்தார். நாங்கள் போகுமிடம் குறிப்பிட்டு சொன்னோம். அந்த டிரைவர் எங்களிடம் நீங்கள் டூரிஸ்டா எனக் கேட்டார். ஆம் என்றோம். அவர் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்தது அவர், ‘நீங்கள் தொழும்போது உலக அமைதிக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் வல்லரசு என்று தம்பட்டம் அடித்து அனைத்து இஸ்லாமிய நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற வளரும் நாடுகளையும் பயமுறுத்தும் அமெரிக்காவின் சாதாரண குடிமகன் அமைதியினை விரும்புகிறானே என்றுதான். அதுவும் உலக அமைதிக்காக யாரிடம் வேண்டச் சொல்கிறானென்றால் இறைவனிடம் தான். ஆகவேதான் மைனாரிட்டி இஸ்லாமிய சமுதாயம் நமது தனிப்பட்ட, இல்லத்துப் பிரச்னைகள், சமுதாயப் பிரச்னைகள்; ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துங்கள் என்று சொன்னது சரிதானே சொந்தங்களே!

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

From: AJ 100


மணிச்சுடர் நாளiதழில் வெளiயான கட்டுரை-தோப்புத்துறை ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர்.

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்

அமைப்பாளர், அமெரிக்கா காயிதெ மில்லத் பேரவை
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற அமைப்பு)



தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களiல் தோப்புத்துறை சரித்திரம் கொண்ட பசுமை நிறைந்த ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. தோப்பும் துறைமுகம் சார்ந்த ஊர் தோப்புத்துறை எனவே பன்னாட்டு விமானநிலையம் மற்றும் துறைமுகத்திற்கு வழங்கப்படும் குறியீடு சுருக்க எழுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாத விசயம். தோப்புத்துறை துறைமுக குறியீடு – TPH (INTPH-International Port code)

தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் என்று பலரும் நம்புகிறார்கள். தமிழக கடற்கரை ஊர்களாக காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஊர்வாசிகள் போன்றே தோப்புத்துறை மக்களும் சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதுடன், அரபியா மக்களுடன் திருமண பந்த தொடர்பு உறவு முறைகளை கலிபா காலத்திலிருந்து குறிப்பாக கலிபா அபுபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இருந்ததாக நம்பிக்கை செய்தியாகும். நம்பிக்கைகள் சில நேரத்தில் உலக அளவில் சரியாக இருக்கலாம் அல்லது சந்தேகத்துடன் வலம் வருவது இயற்கையான விசயம் தான். இந்த காலத்தில் தான் நம் ஊர்களiல் இறைநேசர்களாக கடல் மார்க்கமாக வந்தவர்கள் இஸ்லாமிய நெறிகளை போதித்து மக்களை ஏகத்துவநெறியின் பக்கம் அழைத்து அதன் படி தங்கள் வாழ்க்கை அமைத்து கொடுத்தார்கள், அத்துடன் மக்களுடன் கலந்து இறைபோதனையும் மார்க்க நெறிகளையும் வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கை இறுதி நாள் வரைஇங்கே இருந்துள்ளார்கள்.

விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் நம் பகுதி அவர்களiன் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.

தோப்புத்துறை பகுதியும் சாலை மற்றும் வீதிகளiன் அமைப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளi என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாக தான் விளைநிலங்களiல் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோனி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள். தோப்புத்துறை சாலைகள், தெருகள் பல்நோக்கு பார்வையில், வரும்முன் காக்கும் யோசனையுடன் அமைக்கப்பட்டுள்ளது இன்று நம்மவர்களுக்கு ஆச்சிரியமான விசயம் தோப்புத்துறை ஊர் அமைப்பு ஆகும், ஒரு தேர்ச்சி பெற்ற வல்லு\நர் மூலம் திட்டமிட்டு அமைத்து போல் இருக்கும். வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களiல் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருகளiன் அலகம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிட கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமிaய பெரிய பள்ளi மற்றும் அடக்கஸ்தலமும் ஊர் தெருகளiன் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது. இந்த பள்ளiயை மாற்றி இன்றைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு தற்போது நவீன அரபு கட்டிட கலையில் வடிவமைப்பில் புதிய ஜாமியா பள்ளi பலத்தரப்பட்ட கொடையாளர்களiன் பங்களiப்பின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் இறைஇல்லத்தை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தோப்புத்துறை பெயரில் கப்பல் பதிவு

சிங்கப்பு>ர் மையமாக செயல்படும் கப்பல் பெயர் தோப்புத்துறை என்று பதிவு பெற்றுள்ள ஆவணம் இங்கிலாந்து கப்பல் பதிவேடுகளiல் வெளiயிடப்பட்டுள்ளது.

1911 –ல் இஸ்லாமிய கல்வியாளர் வரிசையில் தோப்புத்துறை மைந்தன்.

வேதம் வழங்கப்பட்ட கிருஸ்த்துவர்களால் குறைகூறப்பட்ட மறுமை வாழ்வை பற்றி தௌiவாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பதில் கூறும் விதமாக புத்தகம் ஒன்று தோப்புத்துறை இஸ்லாமிய கல்வியாளர் மரியாதைக்குரிய முத்து மரைக்காயர் என்பவரால் எழுதப்பட்டு 1911 –ல் அச்சு பதிப்பை வெளiட்டுள்ளார்கள். இதன் மூலம் தமிழக இஸ்லாமிய அடையாள பிரதிபலிப்பு மற்றும் அச்சு பதிப்பு கலாச்சாரம் பங்களiப்பை அவர்கள் கொடுத்து தோப்புத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வேதாரண்யம்/கோடியக்கரை(பாயிண்ட்காலிமர்) பகுதிக்கு துறைமுகம் தோப்புத்துறை மட்டுமே.
இந்திய துறைமுக சட்டம் 1908 படி வேதாரண்யம் துறைமுகமாக செயல்படவில்லை. அப்போதைய அரசு அனுமதிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறைமுகம் தோப்புத்துறை மட்டும் வேதாரண்யம் சுற்றியுள்ள பகுதிக்கு என்று திறக்கப்பட்டது. தோப்புத்துறை பகுதியில் தத்தர்கள் மற்றும் மரக்கல ஆயர்கள் வாழ்ந்த பு>மியாகும். மரக்கல ஆயர்கள் கடல் வணிபம் மூலம் கொண்டு வரும் பொருள்களை தத்தர்கள் குதிரை மூலம் தரைவழியாக அனைத்து ஊர்களுக்கும் செய்து வியாபாரம் செய்தார்கள். இன்று கிட்டங்கி தெரு என்று பெயர் மறுவி அழைக்கப்படும் லெப்பை அப்பா பள்ளi அருகில் அமைத்துள்ள பண்டகச்சாலையில் ஏற்றுமதி மற்றம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டன. இன்று துறைமுக செயல்பாடுகள் இல்லை என்றாலும் கடலோர சுங்கத்துறை அலுவலகம் முழுநேரமாக செயல்படுகிறது.

விசாகப்பட்டினம்/தோப்புத்துறை துறைமுகம்

1949-50 வருடங்களiல் இந்த இரண்டு துறைமுகத்திலும் நடந்த கப்பல் வர்த்தகம் 6.87 லட்ச டன் மேல் தாண்டியதாக அரசு ஆவணங்களiல் பதிப்பட்டுள்ளது.


கல்வி பணியில் தனிப்பங்களiப்பு தோப்புத்துறை சிங்கப்பு>ர் முஸ்லிம் சங்கம்

தமிழ் முஸ்லிம்கள்f கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் தொழில் மற்றும் நிறுவன அதிபர்களாக இருந்து சிங்கப்பு>ர் பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா தமிழக பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பகுதியை கொடுத்துள்ளார்கள். கடையநல்லு\ர் முஸ்லிம் லீக் மற்றும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் போன்றவைகள் மற்றவர்கள் பார்த்து பெருமை கொள்ளும் அளவிற்கு இந்த சங்கத்தின் பங்களiப்பு சமூகம், மதம் மற்றும் கல்வி தேவைகளுக்கு பெரும் உதவி புரிந்துள்ளார்கள். தோப்புத்துறை சங்கத்தில் செயல்பாடுகள் அரசு பதிவேட்டில் பதியப்பட்டு பெருமை கொள்ளும் அளவில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி குறிப்பு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பு>ர் சங்கம் தான் தோப்புத்துறை வளர்ச்சியில் முதல் வழிக்காட்டியாகும்.

முதல் நூலகம்

தோப்புத்துறையில் இக்பால் நூலகம் ஹுஜ்ரத் சேகு அப்துல் காதிர் வலி தர்ஹா மற்றும் ஆரிபின் பள்ளiவாசல் பரிபாலன சங்கம் நிர்வாகத்தின் மூலம் தொடங்கி புத்தகம் படிக்கும் ஆவலை தோப்புத்துறை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஊரில் இருக்கும் சங்கங்களiல் இது மிகவும் பழைமையானது. வருடந்தோரும் வரவு செலவு கணக்குகள் பார்வையில் தவறாமல் வைக்கும் சங்கம் என்ற பெருமையும் உண்டு.


தோப்புத்துறை துறைமுகத்தில் சுங்கவரி வச>ல்

பொதுவாக 20 முதல் 30 சதவீதம் வரை சுங்கவரி ஏற்றுமதி மற்றம் இறக்குமதி பொருகளுக்கு வரி விதிக்கப்பட்டு இந்த வரி வருமானத்தில் ஒரு பகுதியை நவவித்திலாயா பள்ளiயில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகம்

1938 இந்தியன் புவியியில்துறை சஞ்கையில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுக பட்டியில் வெளiயிட்ட பதிவில் தோப்புத்துறை துறைமுகம் இடம் பெற்றுள்ளது.

தமிழ் பணியில் தோப்புத்துறை வாசிகள்

சிங்கப்பு>ரில் வெளiவரும் நாளiதழ் தமிழ் மலர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் கல்வி கூட்டமைப்பு, சிங்கப்பு>ர் தமிழ் இளைஞர் மன்றம், தமிழ் நூலகம் மற்றும் சங்கங்கள் அனைத்திலும் தோப்புத்துறை சார்ந்தவர்களiன் பங்களiப்பு இருந்துள்ளது. மக்கள் தொகை சரிபார்க்கும் ஆவண பதிவில் எது குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர போரட்டத்தில் முக்கிய நிகழ்வு உப்பு சத்தியா கிரகம்

1930 ஏப்ரல் 13 தேதியில் இராஜாஜி தலைமையில் ஆங்கில அரசுக்கு எதிராக நடைப்பெற்ற உப்பு சத்தியா கிரகம் நிகழ்வுகளiல் தோப்புத்துறை ஜமாத் பெரிய உதவிகளை செய்துள்ளது. உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொள்ள வந்த முகம்மது இஸ்மாயில் தலைமையில் மதுரையிலிருந்து 30 மேற்பட்ட தொண்டருடன் வந்தவர்கள் இவர்கள் தோப்புத்துறை பள்ளiவாசல் மற்றும் தர்ஹா வாளாகத்தில் தங்க வைத்தார்கள். இதை அறிந்த ஆங்கில அரசு காவல் துறை இவர்களை சிறைப்பிடிக்க வந்த போது இது புனிதமிக்க வழிப்பாடுதளம் இங்கு தங்கிருப்பவர்களை கைது செய்ய கூடாது எதுவாக இருந்தாலும் நாளை பகல் நேரத்தில் வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். தடையை மீறி அவர்களுக்கு உணவு மற்றும் வசதிகளை தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்து கொடுத்தார்கள். பள்ளiவாசலில் தங்கியவர்கள் காலை 3 மணிக்கு அகஸ்தியன்பள்ளiக்கு சென்று உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு பெற்றார்கள்.

தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்த இந்த பெருமை கொள்ளும் உதவி பற்றி அரசு ஆவணங்களiல் காணமுடிகிறது.

சர்தார் வேதரத்தினம்பிள்ளை குருகுலம் பெண்கள் கல்விக்கு கலங்கரை விளக்கம்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு சத்தியா கிரக தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்ட குருகுலம் வேதாரண்யம் சுற்றி இருக்கும் பெண்களiன் கல்விக்கு திருப்புமுனையாக இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. குறிப்பாக தோப்புத்துறை முஸ்லிம் பெண்கள் தொடக்க கல்வி மட்டுமே பெற்று வந்த காலம் மாற்றம் பெற்று என்று அறிவியல் கலை பட்டதாரிகளாகவும், டாக்டர் மற்றும் பொறியாளர் என்று ஒரு தன்னிரைவு அடைய இந்த குருகுலத்தின் பங்கு மேன்மையானது.

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய்

ஊரின் பல்வேறு நலத்திட்டங்களை துபாய் வாழ் தோப்புத்துறைவாசிகள் சங்கம் மூலம் செய்து வருகிறார்கள். குறிப்பாக மார்க்க கல்வி கருத்தில் கொண்டு பெண்கள் அரபி கல்லு\ரி தொடங்கப்பட்டுள்ளது.


சமய நல்லிணகத்திற்கு ஓர் எடுத்துகாட்டான ஊர்

தோப்புத்துறை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களiல் இருக்கும் மாற்று மத சகோதரர்களுடன் பல நூற்றாண்டுகளாக உறவு முறை கூறி அழைத்து பழகி நட்பு பாராட்டும் நிலை இன்றும் தொடர்கிறது. அனைத்துவித வைபவங்கள், விழாகள், திருமண நிகழ்வுகளiல் ஒற்றுமையுடன் பங்கு கொண்டு வருகிறார்கள்.


இன்றைய தோப்புத்துறைவாசிகள்..

கடந்த 10 வருடங்களiல் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாகி பல்வேறு பணி மற்றும் தொழில் அலுவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளiநாடு சிங்கப்பு>ர், மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளiல் குடும்பமாகவும், தனியாகவும் வசித்து வருகிறார்கள். தொழில் என்று ஒரு சிலரே செய்கிறார்கள்.

இணையதளத்தில் தோப்புத்துறை

தோப்புத்துறை பற்றி மேலும் விபரங்களுக்கு இந்த http://www.thopputhurai.com இணையதளத்தை பார்க்கவும்.




http://www.thopputhurai.com/malarpdf/mani_2.pdf


GATEWAY OF THOPPUTHURAI

--- www.thopputhurai.com ---

(International Port Code: TPH)


விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும்
ஆரிபா குழுமம் மற்றும் அல்ஜப்பார் பாத்திமா கனிகல்வி அறக்கட்டளை வழங்கிய தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் நேரடி ஒளiப்பரப்பை தோப்புத்துறை டாட்காமில் 121 நபர்கள் பார்த்த விபரமும், இந்த 121 நபர்களும் 7 நாடுகளiலிருந்து பார்த்த விபரமும் பதிவாகியுள்ளது பற்றி உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் வீடியோ காட்சிகளை 43 நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.

அத்துடன் தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர் முழுவதும் தோப்பத்துறை டாட்காமில் வாசகர்களiன் வசதிக்காக 32 பாகங்களாக வெளiயிடப்பட்டு இதுவரை 200 நபர்களுக்கு மேல் இந்த மலரை படித்தும், பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.
அத்துடன் மணிச்சுடர் மற்றும் மஸ்ஜித் சம்பந்தமான அனைத்து செய்திகளும் வெளiயிடப்பட்டுள்ளது.
விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும். இந்த இணையதளம் குறிப்பிட்டவர்களுக்கு சார்புடையது இல்லை. பொதுவான தகவல் தளம்.

மகிழ்ச்சியுடன் தொடர்ந்து தோப்புத்துறை தகவல் தொடர்பில் பாலமாக தோப்புத்துறை டாட்காம் (www.thopputhurai.com) குழுமம்

www.thopputhurai.com
thopputhurai@hotmail.com

*************************************************************************************************
"Where you seek brightness wisdom lives" Al-Noor Indian Matriculation School Always at your service,
www.alnoorschools.com alnoorschools@live.com alnoorvrm@dataone.in

அறிவாளிக்கு ஒரு சூடே ................

அறிவாளிக்கு ஒரு சூடே போதும். நல்ல மாடாகவே இருப்போமே...


From: Ghouse, Mohammed (Petrocon – Al Khobar) : mohammed.ghouse@petrocon-arabia.com



பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.
"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.
"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.
"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது.

வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை;

நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல;

பிறர் பார்க்க… நம்மைத் திருத்திக் கொள்வது… அவமானமே அல்ல!


மிகச்சரியான… நெத்தி அடி!

இன்றே, இத்தருணமே நாம் திருந்த முயற்சிப்போமே?

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Assalamu Alaikkum

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்



ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை
1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்
ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டுள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்


இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்


கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன

பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!


கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.

கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்!


”இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்............ .

__._,_.___
.

உடைந்த மரக்கலம்

உடைந்த மரக்கலம்
( கவிஞர் : சீர்காழி இறையன்பனார் )

நதியின் அலைகள் கரையை மோதும்
நாவால் இறையின் நாமம் ஓதும்;
உதிரும் பூக்கள் உண்மையைக் கூறும்
உலக வாழ்க்கை எத்தனைக் காலம் ?

மழையின் துளிகள் முத்துக்களாகும்
மனித உள்ளம் சிப்பிகளாகும் ;
இழையும் வாய்மை இதயங்களாகும்
இரவும் பகலும் உதயங்களாகும் !

மூடிமறைக்கும் மெளனராகம்
முன்னுரையில்லா புத்தகமாகும் ;
மோதிமருட்டும் இடியின் முழக்கம்
முன்னவன் ஆற்றலின் முத்திரையாகும் !

விட்டிலின் தொட்டில் விடிவிளக்காகும்
விதியின் பட்டியில் விபத்துக்களாகும் ;
நட்டமும் லாபமும் நம்கணக்காகும்
நாணயமில்லா சில்லரையாகும் !

கற்பனை விற்பனை வாணிபம் யாவும்
கயிறாய் மணலைத் திரிப்பதாகும் ;
நற்பயனில்லா அமல்கள் யாவும்
நட்டாற்றில் உடைந்த மரக்கலமாகும் !
( நர்கிஸ் பெண்கள் மாத இதழ் - மே 2010 )

Thursday, July 29, 2010

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் - J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=325

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.

நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர். இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.

இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.

எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

இறைவன் அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்

மெளலவி

J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

050 547 15 43

Sharjah




--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

ஹிஜாப் தரும் சுதந்திரம்!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?



நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை



அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை

ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

Wednesday, July 28, 2010

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

சென்னை
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770


சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126


கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685


திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407


மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053


ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053

தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077


திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001 தொலைபேசி: 0462 - 2334062


(இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக
விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன )

Rajaghiri Gazzali

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

சென்னை
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770


சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126


கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685


திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407


மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053


ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053

தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077


திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001 தொலைபேசி: 0462 - 2334062


(இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக
விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன )

Rajaghiri Gazzali

Sunday, July 25, 2010

உணர்வாய் உன்னை !

உணர்வாய் உன்னை !

சகோதரர் ஜலாலுத்தீன்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..
பகுதி ஒன்று:
அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?
உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க
http://www.ottrumai.net/TArticles/37-DiscoverYourself.htm

Saturday, July 24, 2010

நூல் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு ( 1906 முத‌ல் 2006 )

நூல் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு ( 1906 முத‌ல் 2006 )
ஆசிரிய‌ர் : எழுத்த‌ர‌சு ஏ.எம். ஹ‌னீப்
ப‌க்க‌ங்க‌ள் : 552
விலை : ரூ.125
வெளியிட்டோர் :
முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம்
த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்
த‌லைமை நிலைய‌ம்
36 ம‌ரைக்காய‌ர் லெப்பை தெரு
ம‌ண்ண‌டி
சென்னை 600 001
போன் : 2521 8786
www.muslimleaguetn.com
info@muslimleaguetn.com



ப‌திப்புரை

அருளாள‌ன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெய‌ரால்
முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு முத‌ல் பாக‌ம் இதோ உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில்
அறிவிய‌ல் சாத‌னைக‌ள் பெருகிவரும் இக்கால‌ க‌ட்ட‌த்தில் வ‌ர‌லாற்றுச் செய்திக‌ள் அருகி
விட‌க்கூடாது.
வ‌ர‌லாறு அதை எழுதுகின்ற‌வ‌ரின் நோக்க‌த்தைப் பொறுத்தே அமைகின்ற‌து. அத‌னால் தான்
ப‌ல வ‌ர‌லாற்றுச் செய்திக‌ளால் உல‌க‌ம் ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளைச் ச‌ந்திக்கிற‌து.
இஸ்லாம் வாளால் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து என்ற‌ வ‌ர‌லாற்றுப் புர‌ட்டுக்கு நாம் இன்றைக்கும் ப‌தில்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய‌ முஸ்லிம்க‌ளின் வ‌ர‌லாறு இந்த‌ தேச‌த்தோடு இர‌ண்ட‌ற‌க் க‌ல‌ந்துவிட்ட‌ ஒன்று.
ஆயிர‌த்து நூறு ஆண்டுக‌ளுக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் ஆட்சி இந்திய‌ தேச‌த்திற்கு
வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அருட்கொடை

ம‌த‌த்தைப் ப‌ர‌ப்புவ‌து அம்மன்ன‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இல்லாம‌ல் இருந்தால் தான் இத்த‌னை
ஆண்டுகால ஆட்சி ந‌டைபெற்றும் முஸ்லிம்க‌ள் சிறுபான்மையின‌ராக‌ உள்ள‌ன‌ர்.
வ‌ர‌லாற்றை எழுத‌ முற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வ‌குப்புவாத‌க் க‌ண்ணோட்ட‌த்தில் சிதைத்த‌தால் அதனைப்
ப‌டிக்கின்ற‌வ‌ர்க‌ளின் பார்வையும் விகார‌மாகிப் போன‌து.
இந்த‌ தேச‌ம்,பிர‌ச்ச‌னைக‌ளைச் ச‌ந்திப்ப‌த‌ற்கு இதுதான் பிர‌தான கார‌ண‌ம்.த‌ப்புப் பிர‌ச்சார‌ங்க‌ளை
த‌குதிமிக்க‌ப் பாட‌ங்க‌ளாக‌ ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளி முத‌ல் கொண்டு ச‌ர்வ‌க‌லாசாலைக‌ள் வ‌ரை க‌ற்றுக்
கொடுக்கின்ற‌ கார‌ண‌த்தால் பிஞ்சு உள்ள‌ங்க‌ளில் நஞ்சு விதைக்க‌ப்ப‌டுகிற‌து.
தேச‌ப் பிரி‌வினை என்ப‌து இந்திய‌ வ‌ர‌லாற்றின் ஒரு அத்தியாய‌ம்.அந்த‌ அத்தியாய‌ம்
முஸ்லிம்லீகால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌து அல்ல‌.

இந்தியாவில் முஸ்லிம் லீக் உருவாக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு எத்த‌னையோ கார‌ண‌ங்க‌ள்
இருந்த‌ன‌.

1906இல் அகில‌ இந்திய முஸ்லிம் லீக் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டபோது பிரிவினை வாடை எங்கும்
வீச‌வில்லை.
இந்திய சுத‌ந்திர‌த்தின்போதும் அத‌ன் பின்பும் பிரிவினைக் குற்ற‌ச்சாட்டு முஸ்லிம்க‌ள்மீதும்,
முஸ்லிம் லீக் மீதும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.
இந்த‌ப் பிர‌ச்சார‌த்தில் முன்ன‌ணியில் இருந்த‌வ‌ர்க‌ளே பின்ன‌ர்,த‌ங்க‌ள் நிலைபாட்டை
மாற்றிக் கொண்டுவிட்ட‌ன‌ர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் ஆங்கில‌ப் ப‌த்திரிகையான‌ "ஆர்க‌னைச‌ர்" ஆசிரிய‌ராக‌ இருந்த‌ கே.ஆர்
ம‌ல்கானி இந்திய‌ப் பிரிவினைக்கு முஸ்லிம்க‌ளோ,இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌.அதை
உருவாக்கிய‌தும்,வ‌ள‌ர்த்ததும்,செய‌ல்ப‌டுத்திக் கொடுத்த‌தும் ஆங்கிலேய‌ர்க‌ள்தான் என‌ 1988 இல்
ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தினார்.
இத‌ற்குக் கார‌ண‌ம் இல்லாம‌லில்லை.காங்கிர‌ஸ் த‌லைவ‌ராயிருந்த‌ சுத‌ந்திர‌ப் போராட்ட‌
வீர‌ர் ம‌வ்லானா அபுல் க‌லாம் ஆஜாத் 1958 இல் எழுதி வெளியிட்ட‌ இந்திய‌ விடுத‌லை வெற்றி
( India wins freedom ) என்ற‌ நூலின் முப்ப‌து ப‌க்க‌ங்க‌ள் முப்ப‌து ஆண்டுக‌ள்
க‌ழித்தே வெளியிட‌ப்ப‌ட வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னையில் ஆவ‌ண‌க் காப்ப‌க‌ங்க‌ளால் பாதுகாக்க‌ப்
ப‌ட்டிருந்த‌ன‌.
1988 செப்ட‌ம்ப‌ர் 29 ல் வெளியிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ முப்ப‌து ப‌க்க‌ங்க‌ளும்,இருட்ட‌டிப்புச்
செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ல உண்மைக‌ளை வெளிச்ச‌த்திற்குக் கொண்டு வ‌ந்த‌ன‌.இத‌னால் ஏற்ப‌ட்ட‌
விளைவுதான் அது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு எழுத்து வ‌டிவ‌ம் கொடுத்த‌ ம‌வுண்ட் பேட்ட‌ன் பிர‌புவின்
ஆலோச‌க‌ர் வி.பி.மேன‌ன்,தான் எழுதி வெளியிட்ட‌ "இந்திய‌ அதிகார‌ மாற்ற‌ம்( Transfer of Power in India ) என்ற‌ நூலில்" 1937 பொதுத் தேர்த‌லில் ஐக்கிய‌ (உ.பி)மாகாண‌த்தில் அமைச்ச‌ர‌வை அமைக்கும் விஷ‌ய‌த்தில் முஸ்லிம் லீக் த‌ர‌ முன் வ‌ந்த‌ ஆத‌ர‌வை காங்கிர‌ஸ் ஏற்றிருந்தால் வ‌ர‌லாறு மாறியிருக்கும் என குறிப்பிட்டுள்ள‌தே உண்மை.
வர‌லாறு தெரியாத‌வ‌ர்க‌ள்தான் இந்திய‌ப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கார‌ண‌ம் என
சொல்லிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.
வ‌ர‌லாறு தெரிந்த‌வ‌ர்க‌ளும்,ஜின்னாவின் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்காக‌
உருவான‌து என வ‌ம்ப‌ள‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌ர்.
1904 ல் காங்கிர‌ஸில் சேர்ந்த‌ முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா கால‌மெல்லாம் இந்து முஸ்லிம்
ஒற்றுமைக்கு பாடுப‌ட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூத‌ர் ஜின்னா என்று ச‌ரோஜினி
நாயுடு வ‌ர்ணித்தார் 1935 ல்தான் முஸ்லிம் லீகின் நிர‌ந்த‌ர‌த் த‌லைவ‌ராக‌ ஜின்னா. சாஹிப்
தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார்.
1946 மே 16ல் வெளியிட‌ப்ப‌ட்ட‌ "அமைச்ச‌ர‌வை தூதுக்குழு திட்ட‌த்தை ஏற்று 1940 மார்ச்
23ஆம் தேதியில் "லாகூர் தீர்மான‌த்தையே கைவிட‌ முடிவு செய்த‌து முஸ்லிம் லீக்.
பிள‌வுப‌டாத‌ ந‌ல்ல‌ சூல்நிலை ஏற்ப‌ட‌ப் போகிற‌து என நாடே ம‌கிழ்ச்சியில் திளைத்த‌போது
1946 ஜூன் 10ல் ஜ‌வ‌ஹ‌ர்லால் நேரு ப‌ம்பாயில் அளித்த‌ பேட்டி . அந்த‌ ம‌கிழ்ச்சியை
நாச‌மாக்கிய‌து.
இப்ப‌டிப்ப‌ட்ட‌ வ‌ர‌லாற்று உண்மைக‌ளெல்லாம் உல‌குக்கு சொல்ல‌ப்ப‌டாத‌ கார‌ண‌த்தால் தான்
அபாண்ட‌ம் இந்திய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌து.
அந்த‌ சுமையை போக்கும் முய‌ற்சியாக‌வே முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு
அத்தியாய‌த்தை அந்நூல் அல‌சுகிற‌து.
எண்ப‌து வ‌ய‌தை தாண்டிய‌ எழுத்த‌ர‌சு ஏ.எம். ஹ‌னீப் 65 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌
எழுத்துல‌கில் ஆதிக்க‌ம் செலுத்தி வ‌ருகின்ற‌வ‌ர்.முஸ்லிம் லீகின் வ‌ர‌லாறாக‌வே அவ‌ர் வாழ்ந்து
வ‌ருகின்ற‌வ‌ர்.
550 பக்க‌ங்க‌ள் அவ‌ர் எழுதியிருக்கும் இந்த‌ வ‌ர‌லாற்றுப் பொக்கிஷ‌ம் ஒவ்வொருவ‌ரிட‌மும்
இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மான ஆவ‌ண‌ம்.
விலை ம‌திப்ப‌ற்ற‌ இந்நூலுக்கு நீங்க‌ள் த‌ருகின்ற‌ ஆத‌ர‌வைப் பொறுத்தே முஸ்லிம் லீக்
நூற்றாண்டு வ‌ர‌லாற்றின் இர‌ண்டாம் பாக‌ம் சுத‌ந்திர‌ இந்தியாவில் முஸ்லிம் லீகின் பெருமையை
பேசக்கூடிய‌ அரிய‌ நூலாக‌ வெளிவ‌ர‌ ஏதுவாகும்.
த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம் இத‌னை
வெளியிடுவ‌தில் பெருமைய‌டைகிற‌து.
ஒரு மாபெரும் வ‌ர‌லாறு பதிக்க‌ப்ப‌டுவ‌தில் அந்த‌ வ‌ர‌லாறு புதுப்பிக்க‌ப்ப‌டுகிற‌து.
இதை உருவாக்க‌ அரும்பாடுப‌ட்ட‌ எழுத்த‌ர‌சு ஏ.எம் ஹ‌னீப் ச‌முதாய‌த்தின் நன்றிக்குரிய‌வ‌ர்.
நேற்றைய‌ வ‌ர‌லாறு!
இன்றைய‌ உண்மை!
நாளைய‌ ந‌ம்பிக்கை!
ந‌ன்றியுட‌ன்
முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம்


www.imandubai.org
www.mudukulathur.com

Friday, July 23, 2010

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ் விஞ்ஞான‌ ஆய்வுக‌ளைத் த‌மிழில் கொணர்ந்து த‌மிழுக்கு ஆக்க‌ம் சேர்ப்ப‌தைக் குறிக்கோளாக‌க் கொண்டு த‌வ‌த்திரு குன்ற‌க்குடி அடிக‌ளார் அவ‌ர்க‌ளால் தொட‌ங்க‌ப்பெற்று வெளியிட‌ப்பெறுவ‌து.

த‌மிழ் ம‌க்க‌ளிடையே விஞ்ஞான‌க் க‌ருத்துக்க‌ளை எடுத்துச் செல்லும் அறிவிய‌ல் த‌மிழ்த் தூதுவ‌னாக‌ப் ப‌ணி செய்து வ‌ருவ‌து. விஞ்ஞானிக‌ள் ப‌ல‌ரின் அரிய‌ அறிவிய‌ல் த‌மிழ்க் க‌ட்டுர‌க‌ளைத் தாங்கி அறிவொளி ப‌ர‌ப்பி வ‌ருவ‌து.

சுதேசி விஞ்ஞான‌ இய‌க்க‌ம், மைய‌மின் வேதியிய‌ல் ஆய்வ‌க‌ வ‌ளாக‌ம், காரைக்குடியின் ஆத‌ர‌வில் வெளிவ‌ருகிற‌து.

த‌ற்போதைய‌ நிர்வாக‌ ஆசிரிய‌ர் த‌வ‌த்திரு குன்ற‌க்குடி பொன்ன‌ம்ப‌ல‌ அடிக‌ளார்.
ஆசிரிய‌ர் முனைவ‌ர் மி. நோய‌ல்

அறிக‌ அறிவிய‌ல், த‌மிழ‌க‌ அறிவிய‌ல் வ‌ர‌லாறு, புதிய‌ ஆய்வு முடிவுக‌ள், ப‌ய‌னுள்ள‌ தொழில்நுட்ப‌க் க‌ண்டுபிடிப்புக‌ள் அறிவிய‌ல் க‌லைச் சொல்லாக்க‌ம் போன்ற‌ புதிய‌ ப‌குதிக‌ளுக்கான‌ க‌ட்டுரைக‌ளை வ‌ர‌வேற்கிற‌து.

க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி :

முனைவ‌ர் மி. நோய‌ல்
ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
மைய‌மின் வேதி ஆய்வ‌க‌ம்
காரைக்குடி 630 006

த‌னி இத‌ழ் ரூ. 6
ஆண்டுச் ச‌ந்தா ரூ. 70
ஆயுள் ச‌ந்தா ரூ. 700

தொட‌ர்பு முக‌வ‌ரி :

நிர்வாக‌ ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
குன்ற‌க்குடி 630 206
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌ம்
போன் : 04577 264 166

Tuesday, July 20, 2010

இல்லை! இல்லை!!இல்லை !!!

இல்லை! இல்லை!!இல்லை !!!



அரேபியாவில் ஆறுகள் இல்லை
அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.
சிங்கப்பூரில் காகங்கள் illai.

இந்திய பத்திரிகை (ஒளிபரப்பு) துறையின் ஜாம்பவான்கள்..

இந்திய பத்திரிகை (ஒளிபரப்பு) துறையின் ஜாம்பவான்கள்..




Mr. Jawahar Goel
President - IBF
ZEE Telefilms Ltd.,
FC - 19, Sector - 16A,
Noida - 201301.



Mr. K. V. L. Narayan Rao
Vice President � IBF
Group CEO & Executive Director NDTV
No. 207, Okhla Industrial Estate,
Phase � III,
New Delhi � 110 020.




Mr. I. Venkat
Treasurer - IBF,
Director
EENADU
Shantiskhara Complex,
Rajbhawan Road,
Somajiguda, Hyderabad - 500 082.



Mr. Baljit Singh Lalli
CEO
Prasar Bharati PTI Building,
Sansad Marg,
New Delhi � 110 001




Mr. Chintamani Rao
CEO,
Times Global Broadcasting Co. Ltd.
Trade House, 1st Floor,
Kamala Mills Compound,
Senapati Bapat Marg, Lower Parel,
Mumbai � 400013.



Mr. G. Krishnan
CEO & Executive Director,
TV TODAY
Videocon Tower,
E-1, Jhandewalan Extension,
New Delhi -110 055.




Mr. Mahesh Prasad
Council Director
SAHARA
C-2, Sahara India Complex,
Sector - 11,
Noida - 201 301.



Mr. Markand Adhikari
Vice Chairman & Managing Director
Janmat TV
Adhikari Chambers,
Oberoi Complex, 6/7th Floor,
Andheri (W), Mumbai -400 053.




Mr. Paritosh Joshi
President (Advertising Sales & Distribution)
STAR India Pvt. Ltd.,
'The Masterpiece', Marol Naka,
Andheri-Kurla Road, Andheri (E),
Mumbai- 400 059 .



Mr. R. C. Venkateish
ESPN Software India Pvt. Ltd.
7th Floor, Tower C,
Infinity Towers, DLF Phase-2,
Gurgaon-122 002




Mr. Rajat Sharma
Chairman
India TV
Plot No.17-B,
Sector 16-A, Film City
Noida 201301
Uttar Pradesh



Mr. Uday Shankar
Director,
Media Content & Communications,
Services (I) Pvt. Ltd.,
Star News Centre,
Off Dr. E Moses Road,
Mahalaxmi, Mumbai - 400 011.




CO-OPTED DIRECTORS



Mr.Man Jit Singh
CEO
MSM India Pvt Ltd
Interface Building no.7
near Goregaon
Sports Central,
Malad(West),
Mumbai �400064



Mr. Punit Goenka
Director
Zee News Ltd FC-19, Sector 16 A,
Noida 201 301
Uttar Pradesh




Mr. Siddharth Jain
Vice President (South Asia)
Turner International India Pvt. Ltd.
5th Floor, Radisson Commercial Plaza,
National Highway No. 8,
Mahipalpur,
New Delhi � 110 037.





SPECIAL INVITEES



Mr. Haresh Chawla
CEO
Network 18
Empire Complex, 1st Floor,
414, Senapati Bapat Marg,
Lower Parel,
Mumbai � 400 013.



Mr. Jayant Mammen Mathew
Director
MM TV Limited
P. B. No. 106,
Kandathil Varghese Mappillai
Memorial Society Building
K. K. Road, Kerala
Kottayam � 686 001.




OTHER IBF MEMBERS



Mr. Ajay Kumar Ramanuja
Principal Consultant
Kasthuri Media Pvt. Ltd.
12 & 12/1, Kasturba Road,
Bangalore - 560 001.



Mr. Rajesh Kamat
CEO
Viacom 18 Media Pvt. Ltd.
(Formerly MTV Networks India Pvt. Ltd.)
36 B, Dr. R. K. Shirodkar Road,
Parel, Mumbai - 400 012.




Mr. K. Madhavan
Managing Director
Asianet Communications Ltd.,
Jay Chambers, 'R' 2nd Floor
Service Road, Vile Parle (East).
Mumbai- 400 057 (India)




Mr. Kalanidhi Maran
Chairman & Managing Director
SUN TV
268-269, IIIrd Floor,
Anna Salai, Teynampet,
Chennai- 600 018.




Mr. M. Regunathan,
Director
Raj Television Network Ltd
32, Poes Road, 2nd Street
Teynampet,
Chennai 600 018




Mr. Nikhil Mirchandani
Managing Director
NGC Network (India) Pvt. Ltd.,
South Asia,
205, Okhla Industrial Estate,
Phase - III,
New Delhi - 110 020.




Mr. Rahul Johri
Head of India Operations
DISCOVERY
9/1 B, Qutab Inst. Area,
Aruna Asaf Ali Marg,
New Delhi.110 067.



Ms. Preet K. Dhupar
Director Finance & Operations
BBC World
E-21, Hauz Khas Market,
New Delhi � 110 016.




Mr. Ravi Prakash
CEO
TV 9,
Associated Broadcasting Co Pvt Ltd.,
No.97, Road No.3, Banjara Hills,
Hyderabad - 500 034.



Mr. Rukin Kizilbash
General Manager,
Taj Television (India) Pvt. Ltd.
403, Manish Commercial Centre,
Dr. Annie Besant Road,
Worli, Mumbai - 400 025.




Mr. Shantonu Aditya
Executive Director
UTV Global Broadcasting Ltd.
Parijaat House,
1076, Dr. E. Moses Road,
Worli Naka,
Mumbai � 400 018




Mr. Sharrath Marar
CEO,
Maa television Network Limited,
D. N. 6-3-663/B, Maa Chambers,
Behind Topaz Building, Punjagutta,
Hyderabad - 500 082.




Mr. Harish Thawani,
Director,
NEO Sports Broadcast Private Limited
Nimbus Centre, Oberoi Complex,
Andheri-West,
Mumbai � 400 053.



Mr. S. Ranganathan
Vice President (Admn. & Legal)
Jaya TV
Mavis Satcom Limited
No. 48 NP Jawaharlal Nehru Road
Ekkaduthangal
Chennai 600 032.





Mr. Sudhakar Jayaram
Director & CEO
Amrita Television
TC 15/ 1069, Gandhi Nagar,
Vazhuthacaud,
Thiruvananthapuram � 695 014




Mr. Vineet Jain
Managing Director
Zoom TV
Bennett Coleman & Co. Ltd.
The Times of India Building,
Dr. D.N. Road,
Mumbai - 400 001.




INX Media Pvt Ltd.
Urmi Corporation Park,
1 st Floor, Solaris �D,
Opp. L & T Gate No. 6,
Saki Vihar Road, Powai,
Mumbai 400 072




Mr. Harsh Krishna Rohtagi
Executive Vice President
(Revenue Mgt & New Ventures)
NDTV Imagine Ltd
4th Floor, Opp. Fun Republic
Off Link Road, Andheri (W)
Mumbai 400 053.




Ms. Anuradha Prasad
Managing Director
B.A.G. Network Ltd.
FC-23, Sector 16 A, Film City
Noida 201 301
Uttar Pradesh



Mr. Kartikeya Sharma
Managing Director
India News,
Information TV Pvt Ltd.
Media House,
276, Capt. Gaur Marg,
Srinivaspuri,
New Delhi 110 065.




Mr. Antoine Villeneuve
Sr. Vice-President & Managing Director
THE WALT DISNEY CO. (I) PVT. LTD.
4th Floor, Peninsula Tower � I,
Ganpatrao Kadam Marg,
Lower Parel,
Mumbai � 400 013





ASSOCIATE MEMBERS



Mr. Vikram Kaushik
Managing Director & CEO,
TATA Sky Ltd.,
3rd Floor,
Administrative Office Building,
Bombay Dyeing & Mfg Co. Ltd.,
Pandurang Budhkar Marg,
Worli, Mumbai 400 025






Mr.Lalit Jain
Director
Essel Shyam Communications Ltd.
C-34, Sector � 62,
Electronic City,
Noida � 201 307,
Uttar Pradesh




IBF Members

1.
Mr. Jawahar Goel, Zee Network

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Mr. G. Krishnan, TV Today

4.
Mr. Paritosh Joshi, Star TV

5.
Mr. Rohit Gupta, Multi Screen Media

6.
Mr. Raj Nayak, NDTV

7.
Mr. Joy Chakraborthy, Zee Network



AAAI Members

1.
Mr. Madhukar Kamath, Mudra

2.
Ms. Ambika Srivastava, Starcom

3.
Mr. Sam Balsara, Madison

4.
Mr. Srinivasan Swamy, R.K.Swamy BBDO

5.
Ms. Lynn De Souza, Lintas

6.
Mr. Sashi Sinha, Lodestar

7.
Mr. Vikram Sakhuja, Group M


IBF Members

1.
Mr. Paritosh Joshi, Star TV

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Ms. Ameeta Jog, MSM India Pvt Ltd

4.
Mr. Ashok Soni, Star TV

5.
Mr. Dinesh Gupta, NDTV

6.
Ms. Laxmi Shetty, Zee Network

7.
Mr. R. Rikhy, TV Today

8.
Mr. Sunil Pasricha, ESPN

9.
Ms. Sudha Rao, Network 18



AAAI Members

1.
Mr. Shashi Sinha, Lodestar

2.
Mr. Gopakumar Nair, Group M

3.
Mr. Ganesh R. Shetty, Mudra

4.
Mr. Sandeep Suchak, Rediffusion

5.
Mr. R.S.R. Murthy, Madison

6.
Mr. C. Suresh, Drafts FCB

7.
Mr. Himanshu Shah, Lintas

8.
Mr. K. L. Venkat, R. K. Swamy BBDO

9.
Mr. Dinesh Jain, TLG




IBF Members

1.
Ms.Ameeta Jog, MSM India Pvt Ltd

2.
Mr. Ashok Soni, STAR India

3.
Ms. Laxmi Shetty, Zee Network

4.
Mr. Dinesh Gupta, NDTV

5.
Mr. R. Rikhy, TV Today

6.
Mr. Veera Swamy, Eenadu TV

7.
Mr. Sunil Pasricha, ESPN

8.
Ms. Sudha Rao, Network 18

9.
Mr. Avinash Pandey, Star News

10.
Mr. Suhas Kokate, Walt Disney

11.
Mr. Hardik Shah, Ten Sports

12.
Mr. Nand Punjabi, Sahara TV

13.
Mr. Ganesh Rao, Viacom 18




1.
Mr. R. C. Venkateish, ESPN

2.
Mr. Chintamani Rao, Times Global Broadcasting

3.
Mr. Uday Shankar, Star News

4.
Mr. Paritosh Joshi, Star TV

5.
Mr. A. Mohan, Zee TV

6.
Mr. Vijay Rajput, ESPN

7.
Ms. Ritu Manchanda, Sahara Samay

8.
Mr. Aamod Gupte, Zoom TV

9.
Mr. Rahul Khanna, India TV

10.
Mr. Anshuman Sharma, Tata Sky

11.
Mr. A. Sushil Kumar, Amrita TV

12.
Mr. Sandeep Dahiya, Viacom 18

13.
Ms. Anju Jain Kumar, Walt Disney




1.
Mr. Jawahar Goel, Zee TV

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Mr. Paritosh Joshi, STAR TV

4.
Mr. R. C. Venkateish, ESPN

5.
Mr. Gurjeev Singh Kapoor, Star DEN

6.
Mr. Mohd. Mujeebuddin, Star DEN

7.
Mr. Amit Arora, Star DEN

8.
Mr. Dinesh Jain, Zee Turner

9.
Mr. Vipesh Dhaibar, Zee Turner

10.
Mr. A. Mohan, Zee TV

11.
Mr. I.A. Uthayya, ETV Network

12.
Mr. Natarajan, Sun Network

13.
Mr. Rajesh Kaul, MSM India Pvt. Ltd.

14.
Mr. Vijay Rajput, ESPN

15.
Mr. Makarand Palekar, ESPN

16.
Mr. Arun Poddar, Neo Sports

17.
Mr. Rajmohan Nair, TV Today




1.
Mr. Rajeev Mathur, NDTV

2.
Mr. Ashok K. Vermani, TV Today

3.
Mr. A. Mohan, Zee TV

4.
Mr. S. Bannerjee, Zee TV

5.
Mr. Rahul Khanna, India TV

6.
Mr. Aamod Gupte / Ms. Rachna Burman, Zoom & Times Now

7.
Ms. Ritu Manchanda, Sahara Samay

8.
Mr. Frank Thomas, Asianet




1.
Mr. Puneet Goenka, Zee TV

2.
Mr. Paritosh Joshi, Star TV

3.
Mr. Siddharth Jain, Turner

4.
Mr. Haresh Chawla, Network 18

5.
Mr. R. Radhakrishnan, Amrita TV

6.
Mr. Rajeev Mathur, NDTV
Rajaghiri Gazzali
20/07/2010

3.5 சதவிகித இடஒதுக்கீடு ? - டாக்டர் சே.சாதிக்

3.5 சதவிகித இடஒதுக்கீடு ? - டாக்டர் சே.சாதிக்

( முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம் )

நன்றி : சமநிலை சமுதாயம், மாத இதழ், சென்னை.

வெகுகாலம் காத்திருந்த இட ஒதுக்கீடு தமிழக முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியானது. அநேகமாக அனைத்துக் கட்சிகளும் அனைத்து சமூக மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஓர் உண்மையைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பிற்கும் உயர் கல்விக்கும்தான். இரண்டிற்கும் ஒதுக்கீடு இருந்தாலும் வேலைக்கோ அல்லது உயர் கல்விக்கோ சேருவதற்கு குறைந்த அளவு தகுதி வைத்திருப்பார்கள். அனேகமாக அது மதிப்பெண்களாகத்தான் இருக்கும். அந்தக்குறைந்த தகுதியைப் பெறாதவர்களுக்கு ஒதுக்கீடு உதவ முடியாது. ஆகவே தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

இதையே லிண்டன் ஜான்சன் என்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வாய்ப்பின் வாசலை நம் மக்களுக்குத் திறக்க வேண்டியது முக்கியம். அந்த வாயிலில் நுழைவதற்கு அவர்களைத் தயார் செய்வது அதைவிட முக்கியம் என்று குறிப்பிட்டார்.

ஆகவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற மிகவும் முக்கியமானது மாணவர்களின் தகுதியை வளர்ப்பதாகும். அதே போன்று வேலை தேடும் இளைஞர்களின் தகுதியையும் பொது அறிவையும் உயர்த்துவதாகும்.


வேண்டுவது என்ன ?

தரமும், தகுதியும் மந்திர சக்தியால் மாய வித்தைகளால் ஒரே கணத்தில் வருபவை அல்ல அதிக விளைச்சல் தரும் பயிரைக் கடைசி நாளில் கண்காணித்துப் பெற்றுவிட முடியாது ஆகவே அடிப்படையிலிருந்தே பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். முஸ்லிம்களிடையே ஆண்கள் 81 சதவீதமும், 79 சதவீதம் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் 5 ம் வகுப்பைத்தாண்டும் நிலையிலும் அதன் பிறகும் முஸ்லிம்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து விடுவது தான் வேதனையானது.

இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், பொருளாதாரம் ஏழ்மையில் வாடும் முஸ்லிம்கள் வயிற்றுப் பாட்டையே கவனிக்க முடியாத நிலையில் கல்வியை எப்படி கவனிப்பது ?

இது ஒரு நியாயமான கேள்வி போல் தோன்றலாம். அதுவே முழுக்காரணம் அல்ல. ஆர்வமும், அக்கரையும் கல்விமேல் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அக்கறையுள்ளவர்கள் ஏழையாக இருந்த போதும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கான வழியை முயன்று தேடி வெற்றி பெற்றுள்ளதை முஸ்லிம் சமுதாயத்தினரும், அதிக அளவில் பிற சமூகத்திலும் சிறப்பாக கிருத்துவ சமூகத்திலும் காணலாம்.

இதற்கு சமுதாயம் பெரிய அளவில் அமைப்பு ரீதியாகப் பரவலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பல வழிகளில் கல்வி வாய்ப்பையும், வசதியையும் உருவாக்க வேண்டும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏழ்மை காரணமாக ஒரு முஸ்லிம் பிள்ளை படிக்க முடியவில்லை என்றால் சமுதாயமே அதற்குப் பொறுப்பு என்று உணரும் நிலை உருவாக வேண்டும்.

இட ஒதுக்கீடு : இன்னொரு பக்கம்

சிறுபான்மையினர் நடத்தும் உயர் கல்விக்கூடங்களில் 50 சதவீதம் இடங்களை சிறுபான்மையினரே நிரப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு தமிழகத்தில் உள்ளது. மொத்தம் 14 முஸ்லிம் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் முஸ்லிம் சிறுபான்மைத் தகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளது. அவைகளில் ஆண்டுதோறும் சுமார் 4000 இடங்களில் 2000 இடங்கள் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த ஏற்பாடு கூட ஒரு வகையில் இட ஒதுக்கீடுதான். ஆனால் 800 முதல் 1000 இடங்களில் முஸ்லிம்கள் சேராமல் அந்த வாய்ப்பு பிற சமூக மாணவர் களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.

ஏன் நமக்கென்று ஒதுக்கிய இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன? இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்த முடியாமல், அவைகளில் சேராமல் இருக்கிறார்கள். இரண்டு பணம் இருந்தாலும் குறைந்த பட்சம் தகுதி மார்க் (Minimum Eligible Marks ) இல்லாத நிலையும் உள்ளது.

ஆகவே தகுதி மார்க்கும் வேண்டும். கட்டணம் மற்றும் வாழ்வுச் செலவும் பணமும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் நமது இடங்கள் காலியாக உள்ளன. அவை அப்படியே காலியாக விடப்படவில்லை. பிற சமூகத்தினர் அவ்விடங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே, தகுதி மார்க் வாங்கும் வண்ணம் மாணவர்களை ஊக்குவித்தல் அவசியம். அதற்கு தொடக்கம் முதலே அவர்களைக் கண்காணித்து உதவி செய்து வளர்த்து வர வேண்டும். இது நம் சமுதாயக் கடமை.

அப்படிச் செய்கின்றபோது தானாகவே அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளிலும், அரசு உதவி பெற்ற கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்துடன் நல்ல வாய்ப்பான பாடப் பிரிவுகளிலும் சேர முடியும். அப்போதுதான் உண்மையிலேயே அரசு தந்திருக்கும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அர்த்தமுள்ளதாக அமையும்.

சமுதாயம் உயர்ந்த கல்விக் கட்டணத்திற்கும் ஏற்பாடு செய்தால் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாணவர்களும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டு.

Monday, July 19, 2010

தொழிற்பயிற்சி பிரிவுகளின் பட்டியல்

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர்(சிறுபான்மையினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கும்
2010 மற்றும் 2011 க்கான தொழிற்பயிற்சி பிரிவுகளின் பட்டியல்:
(இதைப்பற்றிய அறிவிப்பு முன்னணி தமிழ் நாளிதழ்களில் இடம்பெறும்)

Heavy Vehicle Driving Training

Light Motor Vehicle Driver Training with PSV badge.

Advanced Embedded System

CNC Programming & Operation and CAD/CAM using Unigraphics Software

Production Operator (CNC shop)

Auto CAD (3D ModelinG Design using Auto CAD)

Advanced Networking using CISCO Routers

Computer Hardware Maintenance & MS office Tools

Apparel Manufacturing Technology (AMT)

Apparel Pattern Making (APM)

Apparel Manufacturing Technology (AMT)

Pattern Cutting Masters Course (PCMC)

Diploma in Knit Garment in Manufacturing Technology (DKMT)

Garment Making Course

Fitters Training Programme on Sulzer / Projectile / Rapier Weaving Machine

Weavers Training Programme

Certificate course in Knitting Technology

AVID -Digital Non Linear Editing

Multi Media

Audio Dubbing

Clothing Production Technology (CPT)

Fashion and Clothhing Technology (FCT)

Certificate course in Hotel Management and Cateriing Science

Garment Manufacturing Technology

Textile Designing & Computer Application

Diploma in logistics and Port Management

Certificate course in Automobile Technology

CNC Programming and operations

Hi Tech Welding (Arc,Gas,TIG&MIG)

JCB-Crane + Poclain + Fork lift operator / Maintenance

Jewellary Manufacturing

Business Management in Jewellary

Jewellary Designing & Hand Made Jewellary Techniques

Certificate course in ECG Technician

Certificate course in C.T.Scan operations.

Certificate course in Medical Lab Assistant

Certificate course in Exercise Therapy and Sports Rehabilitation

Plastics Mould Design with Auto CAD

Plastic Processing Machine Operator (PPMO)

Injection Moulding Machine operator (IMO)

Land surveying Supervisor

Certificate course in ELECTRICIAN

Certificate course in AIR CONDITIONING &REFRIDGERATION

Certificate course in FOUR WHEELER MECHNANISM

Certificate course in TWO WHEELER MECHANISM

Heavy Machine operation and Maintenance

Advanced Diploma in 3D Animation

Honours Diploma in Computer Application

Certificate course in computer Hardware

Computer Accountant

Certificate course in Linux, C, C++.

Web Developer

Certificate course in Multimedia

Auto CAD

Desk Top Publishing

Certificate course Mass Communication

Certificate course in Advertising

Certificate course in Communicative English

Editing, Non Linear Editing and Film Editing

Certificate course in Beauty Theraphy

Certificate course in Clinical Nursing Assistan

Certificate course in Radiological Assistant ( X-ray Assistant)

Certificate course in Medical Transcription

Certificate course in Digital Visual Communication

Certifcate course in Digital printing and Publication

Certificate course in Digital Photography

Certificate course in Mobile Phone Servicing

Certificate course in PLUMBING

Private Secretaryship and Executive Secretaryship

Certificate course in Different Footwear making

Certificate course in Leather Goods Making

The dates for walk in interview for selection of students will be published in leading Tamil dailies.
For further information, interested candidates may contact the concerned Institutions (Govt.
institutions) and Commissionerate of Backward Classes/ Most Backward Classes welfare
(044-28551442/ 28410042).

Sunday, July 18, 2010

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!



நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!

ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!

இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!

ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!

இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!

என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!

Wednesday, July 14, 2010

இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்

இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்

ஷஅபான்

ஷஅபான் மாத‌த்தின் சிற‌ப்பு
அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: (ர‌மழானிற்கு)பிற‌கு ஷஅபான் மாத‌த்தை விட, வேறு எந்த‌ மாத‌த்திலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. ஏனெனில் ஷஅபான் முழுவ‌துமே நோன்பு வைப்பார்க‌ள். ம‌ற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில‌ நாட்க‌ளைத் த‌விர‌, அதிக‌மான‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (புகாரி,முஸ்லிம்)
ஷஅபான் மாத‌ம் ப‌தினைந்தாம் இர‌வு அல்லாஹுத் தஆலா த‌ன் ப‌டைப்பின‌ங்க‌ள் அனைத்தின் ப‌க்க‌மும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்றான். ப‌டைப்புக‌ள் அனைத்தையும் ம‌ன்னித்து விடுவான். ஆனால் இருவ‌ர் ம‌ன்னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணை வைப்ப‌வ‌ர். 2.எவ‌ருட‌னாவ‌து விரோத‌ம் கொண்ட‌வ‌ர் என‌ ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அருளிய‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள். (அஹ்ம‌த்)

இம்மாத‌த்தின் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்

கிப்லா மாற்ற‌ம்:
ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌தீனா சென்ற‌திலிருந்து பைத்துல் முக‌த்திஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்க‌ள். ஹிஜ்ர‌த் செய்த‌ ப‌தினேழாவ‌து மாத‌த்தில் (ஷஅப‌னில்) பைத்துல் முக‌த்த‌ஸி‍லிருந்து, ம‌ஸ்ஜிதுல் ஹராம்(க‌ஃப‌துல்லாஹ்வின்) திசையை கிப்லாவாக‌ மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆய‌த்தை அருளினான்.
(ந‌பியே), உம்முடைய‌ முக‌ம் (கிப்லா மாற்ற‌க் க‌ட்ட‌ளையை எதிர்பார்த்து) வான‌த்தின் ப‌க்க‌ம் திரும்புவ‌தை நாம் காணுகிறோம். ஆக‌வே, நீர் விரும்புகின்ற‌ கிப்லாவுக்கு உம்மை நிச்ச‌ய‌மாக‌ நாம்திருப்பி விடுகிறோம்; என‌வே, உம்முக‌த்தை (தொழும்போது ம‌க்காவிலுள்ள‌) ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமின் ப‌க்க‌ம் திருப்புவீராக‌! (முஃமின்க‌ளே) நீங்க‌ளும் எங்கிருந்தாலும் (தொழும்போது ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமாகிய‌) அத‌ன் ப‌க்க‌ம் உங்க‌ளுடைய‌ முக‌ங்க‌ளை திருப்பிக் கொள்ளுங்க‌ள். (குர்ஆன் 2;144)

ர‌ம‌ழான் மாத‌த்தில் நோன்பு க‌ட‌மை:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் தான் ர‌மழான் மாத‌த்தில் நோன்பு வைப்ப‌து க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.
ந‌ம்பிக்கை கொண்டோரே! உங்க‌ளுக்கு முன்னிருந்த‌வ‌ர்க‌ள் மீது க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருந்த‌து போல் உங்க‌ள் மீதும் நோன்பு (நோற்ப‌து) க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து; (அத‌னால்) நீங்க‌ள் இறைய‌ச்ச‌முடைய‌வ‌ர் ஆக‌லாம். (குர்ஆன் 2;183)

ப‌னூ முஸ்த‌ல‌க் யுத்த‌ம்:
இதை "அல் முர‌ஸீஃ யுத்த‌ம்" என்றும் கூற‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ யுத்த‌ம் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஅபான் மாத‌ம் நிக‌ழ்ந்த‌தென்றும், சில‌ர் ஹிஜ்ரி‍ 6 ஆம் ஆண்டு ஷஅபான் மாத‌ம் நிக‌ழ்ந்த‌தென்றும் கூறுகின்ற‌ன‌ர். இப்போரில் எதிரிகள் அணி‌யில் 10 பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். முஸ்லிம்க‌ளின் அணியில் யாரும் கொல்ல‌ப்ப‌ட‌வில்லை. ஆனால் ஒரு அன்சாரி ச‌ஹாபி, ஹிஷாம் இப்னு ஹுபாபா என்ற‌ ஒரு முஸ்லிம் வீர‌ரை எதிரிப்ப‌டையில் உள்ள‌வ‌ர் என்று எண்ணித் த‌வ‌றாக‌க் கொலை செய்துவிட்டார்.
இப்போரிலிருந்து திரும்பும்போது தான் அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ்ர்க‌ள் மீது, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் அவதூறு ச‌ம்ப‌வத்தை பர‌ப்பினர். இத‌னால் க‌வ‌ளைய‌டைந்திருந்த‌ அன்னையார் அவ‌ர்க‌ளுக்கு, அவ‌ர்க‌ளின் ப‌த்தினித்த‌ன‌த்தை ப‌றைசாற்றி அல்லாஹுத்த‌ஆலா குர்ஆனில் அத்தியாய‌ம் 24 இல், 11 முத‌ல் 20 வ‌ரை உள்ள‌ வ‌சன‌ங்க‌ளை இற‌க்கி வைத்தான்.

உம‌ர் இப்னு க‌த்தாப்(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் உம‌ர்(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 ந‌ப‌ர்க‌ளை 'துர்பா'‌ என்னும் ப‌குதிக்கு ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அனுப்பி வைத்தார்க‌ள். இவ‌ர்க‌ளின் வ‌ருகையை அறிந்த‌ துர்பாவில் வ‌சிக்கும் ஹ‌வாஸின் கூட்ட‌த்தின‌ர்க‌ள் அப்ப‌குதியை காலி செய்துவிட்டு ஓடிவிட்ட‌ன‌ர்.

ப‌ஷீர் இப்னு சஅது(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் ப‌ஷீர் இப்னு சஅது(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 ந‌பர்க‌ளை அனுப்பி 'ஃப‌த‌க்' என்னும் ப‌குதியில் வ‌சிக்கும் ப‌னூ முர்ரா கிளையின‌ர்மீது த‌க்குத‌ல் ந‌ட‌த்த‌ ஒரு ப‌டையின‌ரையும் அனுப்பிவைத்தார்க‌ள்.

அபூகதாதா(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஷஅபான் மாத‌த்தில் அபூக‌தாதா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 15 பேருட‌ன், ந‌ஜ்து மாகாண‌த்தில் உள்ள‌ 'முஹாரிப்' என்னும் ப‌குதிக்கு ஒரு ப‌டையை ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அனுப்பி வைத்தார்கள்.

தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய்