Sunday, March 30, 2008

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.


விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்

சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem

துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://indianmuslimassociation.blogspot.com/
http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com

Saturday, March 29, 2008

இஸ்லாம் கேள்வி-பதில்

From: thamizhmuslim

To: ahamedraja@yahoo.com
Subject: இஸ்லாம் கேள்வி-பதில் - Islam Q&A

இஸ்லாம் கேள்வி-பதில்
To read in "Tamil" click "view" in the browser pull down menu >> then select "encoding" >>>>> then select "more" >>>>>> then select "unicode"

அஸ்ஸலாமு அலைக்கும்!
இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றியும் நமது சகோதர சமுதாய மக்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கும் கூட எத்தனையோ கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு. அவற்றை தீர்த்து வைக்கும் முகமாக மருத்துவர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் IFT (Islamic Foundation Trust) மூலமாக தொலைகாட்சியில் மானுட வசந்தம் என்ற நிகழ்சியை ஒளி பரப்புகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இணையதள பயன்பாட்டாளர்களுக்காக www.youtube ல் கீழ்காணும் இணைப்புகளில் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பற்றுள்ளது, அதனை கண்டு பயன் பெற்று , நமது சகோதர சமுதாய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் இந்த இணைப்புகளை இ-மெயில் அனுப்பினால் பயனுள்ளதாக அமையும். இனி இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்சிகளை தங்களுக்கு இ-மெயில் மூலம் தெரியப் படுத்த விரும்பினால் இந்த இணைப்பில் உறுப்பினராக சேரவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை "தா:.வா" என்ற முறையில் அங்கீகரித்து இதனை உருவாக்கியவர்களுக்கும், துணை புரிந்தவர்களுக்கும், உங்களுக்கும் , எனக்கும் நல்லருள் புரிவானாக!

http://www.youtube.com/watch?v=j22ZAgmdtew (சுவாமி தத்வபோதானந்தா அவர்கள் இஸ்லாத்தை பற்றி )
http://www.youtube.com/watch?v=OMyPp9qI3B4 (A.அன்பரசு I.A.S அவர்கள் இஸ்லாத்தை பற்றி )
http://www.youtube.com/watch?v=KGRg7Qaqais (புதுவை சட்டமன்ற துணைத்தலைவர் A.V.S. சுப்பிரமணியம் இஸ்லாத்தை பற்றி)
http://www.youtube.com/watch?v=vmGuKXuDgkE (Dr. K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள் துவக்கவுரை)
http://www.youtube.com/watch?v=MY9FFK0oQdo (முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்களா?)
http://www.youtube.com/watch?v=nFrx98QKeRY (இன்றைய சூழ்நிலையில் இனி ஒரு இறைதூதர் வருவாரா?)
http://www.youtube.com/watch?v=zLnlREkVYhw (இஸ்லாத்தில் ஜீவனாம்சம்)
http://www.youtube.com/watch?v=sgev_HcgwcA (உலகை இறைவன் படைத்தது விளையாட்டிற்காகவா?)
http://www.youtube.com/watch?v=zo8qhzt99Tw (ஒற்றுமையாக இருக்க வழி

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்

துபாய் தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 3, 2008 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் ராஜா பங்கு பெறும் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.

அத்துடன் பிரவஸி பாரதிய சம்மன் விருதுபெற்ற இந்திய சமூக நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் கே. குமார் கௌரவிக்கப்பட உள்ளார். மேலும் இவ்விழாவில் தலைமை விருந்தினர்களாக 'சித்தி' ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நடனம் நடைபெறும் என துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திருமதி சந்திரா ரவி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர், அகுமென், நைல் ஹெர்பல் ஹேர் ஆயில், ஈடிஏ ஸ்டார், ரிட்ஸி பால்ம் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதவிகரமாக இருந்து வருகின்றன.

இந்நிகழ்ச்சியின் ஊடக அணுசரனை விண் டிவி.மேலதிக விபரம் பெற 050 6370472

எக்ஸ்பிரஸ்

எக்ஸ்பிரஸ் ஃபர் மீ

துபாயில் முன்னணி நாளிதழான கல்ஃப் நியூஸ் குழுமத்திலிருந்து வரும் வாராந்திர இதழ்
எக்ஸ்பிரஸ்.

பல்வேறு பயனுள்ள தகவல்களுடன் வெளிவரும் இவ்விதழை www.xpress4me.com எனும் இணையத்தளம் வாயிலாக வாசிக்கலாம்.

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

UAE condemns Web posting of Dutch film
WAM
Published: March 29, 2008, 00:38


Dubai: The UAE on Friday strongly condemned the web posting of a film that is offending to Prophet Mohammad (PBUH) and Muslims worldwide.

Shaikh Abdullah Bin Zayed Al Nahyan, Foreign Minister, denounced in a statement Dutch lawmaker Geert Wilders' insistence to post the film, titled Fitnah (meaning discord in Arabic), on the internet.

Shaikh Abdullah stressed the need to respect the religions and beliefs of others, and not to use freedom of expression as a pretext to offend people and provoke anger and alienation.

He called on Muslims and Islamic nations to practice self-control and respond to this provocation with restraint. He also thanked United Nations Secretary-General Ban Ki-Moon for condemning the offensive film.

Earlier, Muslim nations, the European Union and the UN chief expressed outrage at the anti-Islam film, while Iran and Bangladesh warned the film could have grave consequences and Pakistan protested to the Dutch ambassador.

The 57-nation Organisation of the Islamic Conference (OIC) warned that the film aimed to provoke unrest and caused "insult to the 1.3 billion Muslims in the world."

The chief imam of the Grand Mosque in Makkah, Shaikh Abdul Rahman Al Sudais, denounced what he called "a blow to the (Muslim) nation," although he did not mention the film by name.

The film was posted on the internet on Thursday, sparking immediate anger. "I condemn in the strongest terms the airing of Geert Wilders' offensively anti-Islamic film," the UN chief said in a statement. "There is no justification for hate speech or incitement to violence. The right of free speech is not at stake here."

The Dutch government has distanced itself from Wilders' film. "The film equates Islam with violence. We reject that interpretation," Prime Minister Jan Peter Balkenende said.


http://www.gulfnews.com/nation/Government/10201356.html

தமிழ் இஸ்லாமிய வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும்,
பிரபலமான வீடியோ இணையதளங்களில் பரவி கிடக்கும் அனைத்து தமிழ் இஸ்லாமிய வீடியோக்களையும் ஒரே இணையதளத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழ

உங்கள் முன் இதோ ஒர் புதிய இணையதளம்!!!

www.tamilmuslimtube.com

இத்தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான இஸ்லாமிய சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்து பறிமாற்றங்கள், இஸ்லாமிய பாடல்கள், நமது கலாச்சார குரும்படங்கள் போன்ற அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம். தயவு செய்து மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் வீடியோக்கள் இருக்கட்டும்.

thamizhmuslim@gmail.com


visit

http://www.tmpolitics.net/reader

thamizhmuslim@gmail.com

Thursday, March 27, 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.

இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 'திண்ணை' இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.
***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.
சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.
சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.
திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, 'பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்' என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி 'ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது' என்று கண்டித்தார்.
ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். "ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற 'அவசியம்' ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.
திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
"திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்" என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் 'சம்பவத்தை' தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த 'ஆதாரம்' பற்றி விசாரித்தபோது, 'கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை' என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?
மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் 'அன்பே சிவம்' என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!


--
அன்புடன்
மீரான்
smeeran.tnj@gmail.com

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்

Saturday, March 15, 2008

ராஜ்ய சபா......

இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு 'ராஜ்ய சபா' என்று பெயர். இதன் பெரும்பாலான உறுப்பினர்கள்
பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவரால் சிலர்
நியமிக்கப்படுவதும் உண்டு. சபை தொடர்ந்து இருக்கும். உறுப்பினர்களின் ஆயுட்காலம் தான் ஆறு ஆண்டுகள்.
இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற, அவர்களோ அல்லது
அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களோ தேர்ந்து எடுக்கப் படுவதுண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இரண்டு ஆண்டும் ஆறு பேர் ஓய்வு பெற இன்னும் அறுவர்
தெர்ர்ந்து எடுக்கப் படுவர். தமிழகத்தைப் பொறுத்தவரைஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட 34
வாக்குகள் வேண்டும். இன்றைய நிலவரப்படி திமுக கூட்டணி நான்கு பேரையும், அதிமுக ஒருவரையும்
எளிதாகத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆறாவது இடத்துக்குத்தான் இழுபறி.

அதிமுக 60 + மதிமுக 6 = 66. இரண்டு இடங்களைபெற எதிரணிக்கு இரண்டு வாக்குகள் குறைவு. சென்ற முறை கனிமொழி களத்தில் இறக்கக்ப் பட்டதாலோ என்ன்வோ அந்த இரண்டு வாக்குகளை திமுக விட்டுக்
கொடுத்து அதிமுகவில் இருவர் தெரிவாக உதவியது. "இதுதான் உண்மையான ஜனநாயகம்" என்று ஜெ.
தன் வாழ்நாளில் முதல் முறையாக கலைஞரைப் பாராட்டினார்.

அந்த ஒரு இடத்தை தன் கூட்டணிக் கட்சி சகாவும், சிறந்த 'பார்லிமெந்தேரியனுமான' வைக்கோவுக்கு ஜெ
விட்டுக் கொடுப்பாரார் என்கிற நம்பிக்கையை அவர் பொய்த்துப் போக வைத்து விட்டார்

இம்முறை அந்த இடத்தை திமுக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஐந்து வேட்பாளர்களை அறிவித்து
விட்டது. இரண்டு திமுக, இரண்டு காங்கிரஸ், ஒன்று இடது சாரிகளுக்கு. அதிமுக ஒன்றை தான் எடுத்துக்
கொண்டு மற்றதை மதிமுகவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. தேவைப்படும் அந்த இரண்டு வாக்குகளுக்கு
எங்கே போவார்கள் ?

ஒன்று விஜயகாந்திடம் இருக்கிறது. அது அநேகமாக திமுகவுக்குப் போகாது. இன்னொன்று 'தளி' தொகுதி-
யிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சுதந்திர உறுப்பினரிடம் இருக்கிறது. ஆனால் அவர் சட்ட மன்ற செயல்
பாடுகளில் இடதுசாரிகளுடந்தான் இணைந்து இருக்கிறார்.

ஆகவே, தேர்தல் நிச்சயம். நான்கு திமுகவினரும், ஒரு அதிமுகவும் தேர்ந்தெடுக்கப்பட, ஒரு இடத்துக்கு
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இருக்கும். எப்போதுமே ஏகமனதாகத் தீர்மானிக்கப்படும் ராஜ்யசபா இடங்கள்
22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் மூலம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

அந்தத் தேர்தலில், மூன்றாவது சுற்றில் மத்திய அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பாலு நாவலர் நெடுஞ்செழியன்
தம்பி இரா.செழியனைத் தோற்கடித்தார்.

திமுக அணி நன்கு இடங்களில் தன் பங்குக்கான இரண்டு இடங்களுக்கான பெயரை அறிவித்து விட்டது.
அமீர் அலி ஜின்னாவையும் திருமது வாசந்தியையும் அறிவித்ததன் மூலம் திமுக சிறுபான்மையினரைக்
கவனத்தில் கொண்டுள்ளது ஆனால் இவற்றில் ஒன்று பேரா:ஸவாஹிருல்லாவுக்கொ, அல்லது கவிக்கோவுக்கோ போகும் என்ற வதந்திகள் வதந்திகளாகவே போயிருக்கின்றன கவிஞர் வைரமுத்துவும்
வரிசையில் நிற்கும் ஒருவர் என்று சொல்கிறார்கள்.

காங்கிரசுக்கு இரண்டு இடங்கள். அவற்றில் ஒன்றை தனகுத்தர வேண்டும் என்று பா.ம.க அடம் பிடிக்கிறது.
இது தொடர்பாக டெல்லியில்அமைச்சர்அன்புமணி ராமதாசுக்கும் காங்க்..கட்சி செயலர்அஹ்மது பட்டேலுக்கும்
பேச்சு வார்த்தைகள் தொடர்வதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன விளைவு என்னவாகுமோ தெரியாது. ஐந்தாவது இடத்துக்கு இடதுசாரி போட்டியிடுகிறது.

64,000 டாலர் கேள்வி. வெற்றி நிச்சயமில்லாத நிலையில் தன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்கோ போட்டியிடுவாரா என்பதுதான்.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு எதிர்வரும் ஹிஜ்ரி 1429 ரபியுல் அவ்வல் பிறை 12 ( 19 மார்ச் 2008 ) புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் இலங்கை புஷ்ரா ( நற்செய்தி ) மாத இதழ் ஆசிரியர் மௌலவி ஏ.எல் பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செய்லாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின்,இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சங்கம் வழங்கும் கல்வி உதவி நிதி




முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008
.

Thursday, March 13, 2008

Easy Way to Understand Quran & Salah

Bismillah
Assalamu Alaikum Rah
Insha Allah
Basic course -
Easy Way to Understand Quran & Salah,

will be held every Sunday starting from 23.03.08 . (Total classes :10)
Time : 9 AM to 12 Noon
in, Chennai (Venue will be informed Later)
Course Fee : Rs 650 with materials.

Are U Willing to Join ?

Please confirm through SMS to 9841223553

or email uqchennai@gmail.com,
or call: 9994578210, 9894379102

JOIN UNDERSTANDQURANCHENNAI GOOGLEGROUP : PLS SEND A BLANK MAIL TO UNDERSTANDQURANCHENNAI-SUBSCRIBE@GOOGLEGROUPS.COM

கல்வி குறித்த இணையத்தளங்கள்

Hello,
This is further to my previous posting, for those who have not received my other postings and attachments, kindly visit my site http://meera.awardspace.com to download the practice questions for X-grade maths.
Regards
Meera Sreekrishnan
meerasreekrishnan@yahoo.co.in

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் B.E./B.Tech. / B. Arch. மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி
ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி ( School of Architecture & Planning Campus )
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv.edu
அல்லது
இயக்குநர் ( சேர்க்கை )
சென்டர் ஃபார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புக்கு 06 ஜுன் 2008 க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜுன் 2008 க்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.


Director ( Admissions ) / Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025


Source : Gulf News March 6,2008 Advt in Business section
Page No. 38

பயனுள்ள தளங்கள்

www.moulanaazad.blogspot.com
www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com

www.sorkal.blogspot.com
www.pitara.com


www.tele-direct.net
www.sacm.ae/davidlee
www.sacm.ae/danat
www.sacm.ae
www.eatyourheartout.ae

i will send u more...soon

--
Best Regards
Adam.Arifin
Web&Graphics Designer
T D InterNational FZE
R A K,U.A.E
Mob: 00971-50-1657853




http://sparksspace.blogspot.com/2008/07/formatfactory-v132.html


Wink - Free Tutorial and Presentation Creation Software

http://sparksspace.blogspot.com/2008/07/wink-free-tutorial-and-presentation.html


Do you want to save and need security for your computer or Laptop? If yes, you can use the freeware with fully security to encryption your hard disk, cd and files.

Free - CompuSec

http://sparksspace.blogspot.com/2008/07/free-compusec.html

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்
படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.
1. தளபதிக்கு அடிபணியுங்கள்.
2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.
3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.
4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.
5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.
6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள், வதைக்காதீர்கள்.
7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும், சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.
8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.
9. 'பிஸ்மில்லாஹ்'கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும் அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.


இவ்வாறு நெறிபோதனை அளித்துதான் இஸ்லாமியப் படைவீரர்களை களத்திற்கு அனுப்பி வைத்தார்கள் கலீபா அவர்கள்.




--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

தமிழ் முஸ்லிம் செய்தித் தளங்கள்

http://islamicnews.wordpress.com



தமிழ் முஸ்லிம் தளங்கள்

http://masjiduthakva.blogspot.com

www.tmmkmtt.wordpress.com

பிரபலமான வீடியோ இணையதளங்களில் பரவி கிடக்கும் அனைத்து தமிழ் இஸ்லாமிய வீடியோக்களையும் ஒரே இணையதளத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழ

உங்கள் முன் இதோ ஒர் புதிய இணையதளம்!!!

www.tamilmuslimtube.com

இத்தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான இஸ்லாமிய சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்து பறிமாற்றங்கள், இஸ்லாமிய பாடல்கள், நமது கலாச்சார குரும்படங்கள் போன்ற அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம். தயவு செய்து மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் வீடியோக்கள் இருக்கட்டும்.


http://www.darulsafa.com
http://www.tamilmuslimmedia.com/

* Read Quran Regular Basis with translation
* Worship the creator, not his creations.
* Dhikr Allah everyday morning & evening.
* Pray promptly and guide others to pray also.
* Reach islamic messages to everyone,it's ur duty.
* Use your mobile phone on your left ear -Health alert.
* Please don't waste water and food in your daily life, save for next Generation.


http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.com
http://adamtradenews.blogspot.com
http://adamtamilit.blogspot.com


http://islamkural.com

www.islamiyadawa.com

http://www.islamkuralblog.blogspot.com/

www.moulanaazad.blogspot.com

www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com



tamililquran. com
islamkalvi.com

http://www.abumahdhi.blogspot.com/

தமிழ் இணைய செய்தித் தளங்கள்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com



www.maraththadi.com

www.uyirmmai.com

http://www.adhikaalai.com

http://panbudan.blogspot.com
http://www.nizhalkal.blogspot.com

rkc1947@gmail.com
http://peopleofindia.net

http://thamizthenee.blogspot.com




தமிழ் இணையத் தளங்கள் - தனிநபர்

www.nilavunanban.blogspot.com (rasikow@gmail.com)

http://kvraja.blogspot.com
http://kosappettai.blogspot.com


www.jbascollege.com

ஆங்கில செய்தித் தளங்கள்

http://www.arabnews.com

www.ithayanila.com



www.tineye.com - இந்த செயலி இப்போதைக்கு பீட்டா நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் எந்த எந்த இடத்தில் இருக்கின்றது என்று சொல்லிவிடும் என்கிறார்கள். இதற்கு தற்போது பதிவு செய்து கொண்டால், சில தினங்களில் பீட்டா டெஸ்ட் பண்ண access தருவார்கள். அப்போது சோதனை செய்து கொள்ளலாம். நானும் பதிவு செய்து விட்டு சில தினங்களாக
காத்திருக்கிறேன். இன்னும் எனக்கு இவர்கள் access கொடுத்தபாடில்லை.

www.acrobat.com - உங்கள் அலுவலகத்தில் webconferencing license தீர்ந்து விட்டது என்று operations டீம் கடியைப் போடுகிறார்களா ? இன்றைக்கே உங்களுக்கு கஸ்டமருடன் ஒரு பிரசண்டேஷன் இருக்கிறதா. நீங்கள் தைரியமாக இந்த தளத்தை நம்பலாம். இதற்கு தேவை ஒரு வெப் காமெராவும், மைக்கும் தான். யாஹூ போன்ற தளங்கள் தரும் வீடியோ கான்பெரன்சிங்கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதன் மூலம் ஒரு
பிரசண்டேஷனையோ ஒரு டெமோவையோ நீங்கள் நடத்த முடியும். Screen sharing இருப்பதால் உங்கள் பிரசண்டேஷனை ஓட்டிக் கொண்டே நீங்கள் போனில் அவருக்கு கதை சொல்ல முடியும்.

www.a.nnotate.com - (ஆமாங்க a க்கு அப்புறம் ஒரு புள்ளி url-ல உண்டு) - ஏதேனும் ஒரு டாக்குமெண்டை நீங்கள் ரிவியூ செய்ய வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் ஏற்றி விட்டு உங்கள் சகாவிடன் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு send button-ஐ அழுத்தினால் போதும். அவர் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் document வலையேற்றப்பட்டிருக்கும் url-ஐ அனுப்பிவிடும். அவர் அந்த முகவரியை கிளிக்கி annotate
செய்ய முடியும் -document-இன் சில பகுதிகளுக்கோ அல்லது முழுவதற்குமோ கருத்து கூற முடியும். அந்த கருத்தின் மேல் உங்கள் கருத்தையும் நீங்கள் பதிவு செய்யலாம் ஒரு chat session-ஐ போல இது சேமிக்கப்படும். நல்லா இருக்குல்ல ! ஆனா காசு கேக்கறாங்க. இப்போதைக்கு 150 credit கொடுத்து free-யா பாரு ராஜான்னு சொல்லிட்டு full fledged usageக்கு காசு கேக்கறாங்க. யாருக்கு இதெல்லாம் பயன்படும் என்றால் இந்தியாவில்
பதிப்பகங்கள் வைத்துக்கொண்டு அயல்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் எழுதும் நாவல்களை படித்து விட்டு கருத்து கூறும் பதிப்பளர்கள் இந்த சேவையை evaluate செய்யலாம். அதுவும் இப்போதைக்கு இது தேவையில்லை என்றே தோன்றும் எதிர்காலத்தில் இது நிச்சயம் பயன்படும்.

www.280slides.com - நீங்கள் விட்டது சனியன் என்று உங்கள் லேப்டாப்பை வீட்டிலேயே வைத்து விட்டு அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு ஊட்டியோ கொடைக்கானலோ சுற்றிக் கொண்டிருக்கும் போது உங்கள் பாஸ் போன் செய்து இந்த pptயை கொஞ்சம் முடிச்சுக் கொடு என்று சொன்னால், "அடடா என்னிடம் இப்போது power point இல்லையே. இருந்திருந்தால் வெட்டி முறித்திருப்பேனே" என்று ஜல்லி அடிக்க முடியாது. இந்த தளம் பவர்
பாயிண்டுக்கான சர்வீஸை ஆன்லைனில் தருகிறார்கள். அப்படி நீங்கள் ஆன்லைனிலேயே செய்து முடித்த presentation-ஐ நீங்கள் ppt-ஆக டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும். என்ன குறையென்றால், அனிமேஷன் செய்ய முடியாது, auto shapes கொஞ்சம் கம்மியாக இருக்கின்றன. முழுமையான power point செயல்பாடுகள் இல்லை. ஆனால் அடிப்படையில் தேவையான எல்லாம் இருக்கின்றன.

http://www.text2mindmap.com - உங்களில் எவ்வள்வு பேர் freemind பயன்படுத்தியிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி பயன்படுத்தியிருப்பவர்களுக்கு இதன் அருமை புரியும். எளிமையாக mindmaps உருவாக்க முடிகிறது அதுவும் எந்தவிதமான செயலியும் உங்கள் கணிப்பொறியில் இல்லாமலேயே. இப்போதைக்கு அடிப்படை செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இதில் freemind-இல் இருக்கும் பல options கிடையாது. அவசரத்துக்குப்
பயன்படுத்தலாம்.

http://www.odiogo.com - இந்த தளத்தில் அளிக்கும் சேவையின் மூலம் உங்கள் blog-ஐ உங்கள் வாசகர்கள் கேட்க முடியும். ஆமாம் - இவர்கள் automatic text to speech conversion சேவையை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ் படுத்தப்படவில்லை. தமிழை உதித் நாராயண் அளவிற்காவது பேசினால் போதும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய blog english-இல் இல்லாததை கண்டுபிடித்து sign up செய்யும் போதே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். நானும் பெருந்தன்மையாக
மன்னித்து விட்டேன். நீங்கள் english-இல் blog வைத்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தொடர்புடைய முந்தய பதிவு:
http://krishchandru.blogspot.com/2008/07/internet-apps.html

தமிழ்மெயில்.காம்

அன்புடையீர்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com

ஆசிரியர் குழு