Sunday, May 24, 2009

Muslim MPs in Indian Parliment

30, not 28 Muslims MP have won this Lok Sabha election
S.O. News Service, Saturday, 23 May 2009 - 17:12:09 IST
http://www.sahilonline.org/english/news.php?catID=nationalnews&nid=5459&viewed=0


New Delhi: The number of Muslim candidates who have been elected to the new Lok Sabha is now 30. According to the final result of successful Lok Sabha candidates, 30 among 543 members are Muslims.

In the early reports after the counting of votes, only 28 Muslims were shown winner. While Bahujan Samaj Party candidate Kaisar Jahan, who won Sitapur Lok Sabha constituency in Uttar Pradesh, was missing in early lists, the name of the newly elected Trinamool Congress candidate Kabir Suman seems to have confused many. Suman, a convert and practicing Muslim, has won Jadavpur Lok Sabha constituency in West Bengal. He got 5,40,667 votes and defeated CPM's Sujan Chakraborty by about 60 thousand votes.

Kabir Suman, a Kolkata-based modern Bengali singer-songwriter, guitarist, poet, journalist, TV presenter and occasional film actor, converted to Islam in 2000. Before being Kabir Suman, he was Suman Chattopadhaya. Jadavpur University graduate in English Literature as the major subject, Kabir Suman is married to Sabina Yasmin. His album of protest songs "Nandigram" in response to atrocities committed on the residents of the village is his latest work.

Against the 14th Lok Sabha which had 39 Muslim Members, this Lok Sabha will have 30. As for the representation of the Muslim community in the Lok Sabha is concerned, this is a far less number given the fact that the community (150 million) counts about 15% of the total population.

Partywise distribution of Muslim MPs in 15th Lok Sabha

Indian National Congress --- 11
National Conference --- 4
Bahujan Samaj Party --- 4
Trinamool Congress --- 3
Muslim League --- 2
Majlis Ittehadul Muslimeen --- 1
Assam United Democratic Front --- 1
Janata Dal United --- 1
Dravida Munnetra Kazhagam --- 1
Communist Party of Marxist --- 1
Bharatiya Janata Party --- 1

Full list of successful Muslim Lok Sabha candidates

1. Andhra Pradesh, Hyderabad, Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
2. Assam, Dhubri, Badruddin Ajmal, Assam United Democratic Front
3. Assam, Barpeta, Ismail Hussain, Indian National Congress
4. Bihar, Kishanganj, Mohammad Asrarul Haque, Indian National Congress
5. Bihar, Begusarai, Dr. Monazir Hassan, Janata Dal (United)
6. Bihar, Bhagalpur, Syed Shahnawaz Hussain, Bharatiya Janata Party
7. Jammu & Kashmir, Baramulla, Sharief Ud Din Shariq, Jammu & Kashmir National Conference
8. Jammu & Kashmir, Srinagar, Farooq Abdullah, Jammu & Kashmir National Conference
9. Jammu & Kashmir, Anantnag, Mirza Mehboob Beg, Jammu & Kashmir National Conference
10. Jammu & Kashmir, Ladakh, Hassan Khan, Independent
11. Kerala, Malappuram, E. Ahamed, Muslim League Kerala State Committee
12. Kerala, Ponnani, E.T. Muhammed Basheer, Muslim League Kerala State Committee
13. Kerala, Wayanad, M.I. Shanavas, Indian National Congress
14. Tamil Nadu, Vellore, Abdulrahman, Dravida Munnetra Kazhagam
15. Tamil Nadu, Theni, Aaron Rashid.J.M, Indian National Congress
16. Uttar Pradesh, Kairana, Tabassum Begum, Bahujan Samaj Party
17. Uttar Pradesh, Muzaffarnagar, Kadir Rana, Bahujan Samaj Party
18. Uttar Pradesh, Moradabad, Mohammed Azharuddin, Indian National Congress
19. Uttar Pradesh, Sambhal, Dr. Shafiqur Rahman Barq, Bahujan Samaj Party
20. Uttar Pradesh, Kheri, Zafar Ali Naqvi, Indian National Congress
21. Uttar Pradesh, Farrukhabad, Salman Khursheed, Indian National Congress
22. Uttar Pradesh, Sitapur, Kaisar Jahan, Bahujan Samaj Party
23. West Bengal, Maldaha Uttar, Mausam Noor, Indian National Congress
24. West Bengal, Maldaha Dakshin, Abu Hasem Khan Choudhury, Indian National Congress
25. West Bengal, Murshidabad, Abdul Mannan Hossain, Indian National Congress
26. West Bengal, Basirhat, Sk. Nurul Islam, All India Trinamool Congress
27. West Bengal, Uluberia, Sultan Ahmed, All India Trinamool Congress
28. West Bengal, Burdwan - Durgapur, Sk. Saidul Haque, Communist Party of India (Marxist)
29. West Bengal, Jadavpur, KABIR SUMAN, All India Trinamool Congress
30. Lakshadweep, Lakshadweep, Muhammed Hamdulla Sayeed A.B, Indian National Congress




Kerala 4 Wayanad M.I. Shanavas Indian National Congress
Kerala 6 Malappuram E. Ahamed Muslim League Kerala State Committee
Kerala 7 Ponnani E.T. Muhammed Basheer Muslim League Kerala State Committee
Tamil Nadu 8 Vellore Abdulrahman Dravida Munnetra Kazhagam
Tamil Nadu 33 Theni Aaron Rashid.J.M Indian National Congress
Andhra Pradesh 9 Hyderabad Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
Assam 4 Dhubri Badruddin Ajmal Assam United Democratic Front
Assam 6 Barpeta Ismail Hussain Indian National Congress
Bihar 10 Kishanganj Mohammad Asrarul Haque Indian National Congress
Bihar 14 Darbhanga Kirti Azad Bharatiya Janata Party
Bihar 24 Begusarai Dr. Monazir Hassan Janata Dal (United)
Bihar 26 Bhagalpur Syed Shahnawaz Hussain Bharatiya Janata Party
Jammu & Kashmir 1 Baramulla Sharief Ud Din Shariq Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 2 Srinagar Farooq Abdullah Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 3 Anantnag Mirza Mehboob Beg Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 4 Ladakh Hassan Khan Independent
Maharashtra 21 Nashik Sameer Bhujbal Nationalist Congress Party
Uttar Pradesh 2 Kairana Tabassum Begum Bahujan Samaj Party
Uttar Pradesh 3 Muzaffarnagar Kadir Rana Bahujan Samaj Party
Uttar Pradesh 6 Moradabad Mohammed Azharuddin Indian National Congress
Uttar Pradesh 8 Sambhal Dr. Shafiqur Rahman Barq Bahujan Samaj Party
Uttar Pradesh 28 Kheri Zafar Ali Naqvi Indian National Congress
Uttar Pradesh 40 Farrukhabad Salman Khursheed Indian National Congress
West Bengal 7 Maldaha Uttar Mausam Noor Indian National Congress
West Bengal 8 Maldaha Dakshin Abu Hasem Khan Choudhury Indian National Congress
West Bengal 11 Murshidabad Abdul Mannan Hossain Indian National Congress
West Bengal 18 Basirhat Sk. Nurul Islam All India Trinamool Congress
West Bengal 26 Uluberia Sultan Ahmed All India Trinamool Congress
West Bengal 39 Burdwan - Durgapur Sk. Saidul Haque Communist Party of India (Marxist)
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress

Micro sector fit for Islamic financing

http://www.dc-epaper.com/DC/DCC/2009/01/16/ArticleHtmls/16_01_2009_013_020.shtml

Micro sector fit for Islamic financing

R. Seetharaman, chief executive officer of Doha Bank, is a strong advocate of Islamic banking. He began his career at the global consultancy firm Price Waterhouse & Associates. A graduate from Raja Serfoji college, Tanjore, he is a chartered accountant and holds certificates in IT Systems and Corporate Management. Recipient of numerous honors and awards, including the Middle East banking industry’s Banker of the Year Award in 2007 and the 2006 Arab Asian Banker Excellence Award, Seetheraman is a renowned speaker and author on cross-border economic issues. This Tanjore Brahmin believes that Islamic banking is ideal for Indian condition and would help eradicate poverty.

Excerpts from an interview with K. S. ANANDAN.
How will a country like India benefit from Islamic banking? Gulf countries possess enormous prosperity from oil and gas. Huge gulf funds can be expected to flow in once India recognises Islamic banking. The micro finance sector is a fit candidate for Islamic financing, which is also a solution for alleviating poverty.

How is Islamic banking different from commercial banking? Islamic banking is consis tent with the principles of Sharia (the Islamic law), namely sharing and caring. Commercial banks charge interest whereas Islamic banks prohibit interest. Sharia prohibits gambling, liquor and any other business that is not conducive for human prosperity. In Islamic banking, we give equity financing, not debt. The system insists on a transparent contract, and there is no hidden agenda in the process.

If you don’t have any commercial interest, how serious will you be in monitoring your partner? We have to create a Special Purpose Vehicle (SPV) for issuing Islamic Sukuk (bonds). Principles of Sharia very categorically state that the responsibility of sharing is applicable for both partners.

How many countries are banking on Islamic financing, with how many banks? What is the asset base under this system? There are 36 countries practicing Islamic banking, including the UK, Japan, Canada and Taiwan with 715 banks across the world. Over $12 trillion assets are under this system.

With globalization, the entire global financial system is interlinked. In such a scenario, how can Islamic banks operate in a standalone fashion without integrating the massive global financial system to function in a safe mode? The global financial crisis is a result of unethical banking practice. They practiced asset-based transactions instead of assetbanked transactions. In Islamic banking, all transactions are done with assets and the products are backed by assets. The system has inbuilt security with its asset base, ensuring its safety.

Why is the Indian regulator reluctant to introduce Islamic financing? We need to create a Sharia board, regulatory system, rating agency and auditors all based on Sharia to introduce Islamic banking in India. Modern Islamic banking is just a 30-year- old industry. Over a period of time, I believe, it will evolve in our country.

Saturday, May 23, 2009

புது உத்தி

புது உத்தி

முதல் உதாரணம் : 96 x 97

முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
அடுத்த எண் 97. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 97 = 3

இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 3 = 12. இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 96ல் இருந்து மூன்றை கழியுங்கள் 96 - 3 = 93. அல்லது 97ல் இருந்து நான்கை கழியுங்கள் 97-4 = 93. இரண்டிற்கும் ஒரே விடைதான் 93. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9312
அடுத்த உதாரணம் : 98 x 92

முதல் எண் 98. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 98 =2
அடுத்த எண் 92. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 92 = 8

இனி விடைகளை பெருக்குங்கள். 2 x 8 = 16. இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 98ல் இருந்து எட்டை கழியுங்கள் 98 - 8 = 90. அல்லது 92ல் இருந்து இரண்டை கழியுங்கள் 92-2 = 90. இரண்டிற்கும் ஒரே விடைதான் 90. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9016
மூன்றாவது உதாரணம் : 96 x 99

முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
அடுத்த எண் 99. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 99 = 1

இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள். இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 96ல் இருந்து ஒன்றை கழியுங்கள் 96 - 1 = 95. அல்லது 99ல் இருந்து நான்கை கழியுங்கள் 99-4 = 95. இரண்டிற்கும் ஒரே விடைதான் 95. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9505

ARAB CUISINE IN CHENNAI

ARAB CUISINE IN CHENNAI

Think Arabia, and you’re instantly reminded of wind-swept deserts, Bedouins, belly-dancers, hookahs, and most importantly the food: hummus, falafel, shawarma and the like. Arab cuisine has travelled the world and has also touched Chennai's shores. Here are the city's two restaurants that sell Arab food.

Sea Shell at Greams Road is typically not what you’d call an authentic Arab restaurant as it serves Chinese and Indian food as well. Nevertheless, it does rustle up several Arab dishes with panache. The ubiquitous khubuz (flat round bread), hummus kebabs, grilled chicken and shawarma prominently feature on their menu.

Surprisingly, though, other dishes like mutnabel (brinjal paste), fatayer (pastries stuffed with spinach, meat and cheese) or the tabouleh (green salad) don’t feature. Instead, you'll find a variety of rice-based dishes, known as kabsa, cooked with meats of your choice like mutton, chicken or fish.

Besides these, unusually-named fresh fruit juices and cocktails—Rolex, Omani, and London—are also served here. Do note that their service is slow.

Looking for something more up-market? Then, do try Cedars located at Kotturpuram. A warm ambience, a platter of kebabs, yoghurt-based chicken shawarma, khubuz and a variety of dips amongst others make this place much sought-after. Do be warned though, this place is not meant for the budget-conscious.
So how about a taste of Arabia tonight?

http://www.chennaionline.com/cityfeature/FoodCorner/May09/09Arab-Cuisine-in-Chennai.aspx

Friday, May 22, 2009

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........


ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் எக்ஸ் எனும் நிக‌ழ்ச்சியில் முதுகுள‌த்தூர் டாக்ட‌ர் ஏ. அமீர்ஜ‌ஹான் ப‌ங்கேற்று நேய‌ர்க‌ளின் பாலிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் அளிக்கிறார்.

இந்நிக‌ழ்ச்சி இந்திய‌ நேர‌ப்ப‌டி இன்று ( ச‌னிக்கிழ‌மை ) இர‌வு 10.30 ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌து.
( அமீர‌க‌ நேர‌ம் இர‌வு 9 ம‌ணி )

லால்பேட்டை சிங்கார வீதி பநேசா நகரில் வீடு மனை விற்பனைக்கு

லால்பேட்டை சிங்கார வீதி பநேசா நகரில் வீடு மனை விற்பனைக்கு உள்ளது
தொடர்புக்கு

ஹயாத் ரியல் எஸ்டேட்

contact 9944001521/9940722818

சஹாரா ரியல் எஸ்டேட்
contact; 9994977803

Thursday, May 21, 2009

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ்.

“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.

தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.

முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறோம்.

வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப்படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம். இதயம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்
158 லாயிட்ஸ் சாலை
கோபால‌புர‌ம்
சென்னை 600 086
தொலைபேசி : 044 4210 5352
மின்ன‌ஞ்ச‌ல் : samaurimai@gmal.com

ம‌திப்புரை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்
முதுவைக் கவிஞர்
மவ்லவி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பஇ

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்
எழுதியவர் : கார்த்திக் 17 May 2009

வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.

எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர்.


இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்...

ஆண்டிவைரஸ் 1

1. பெயர்: Avast! 4 Home EditIon

2. நிறுவனம் : ALWIL Software

3. பைல் அளவு: 26309 கேபி

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்

6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆண்டிவைரஸ் 2

1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition

2. நிறுவனம் : Grisoft Inc

3. பைல் அளவு: 47924 கே.பி

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்

6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.

ஆண்டிவைரஸ் 3

1. பெயர்: Avira Anti Personal Edition

2. நிறுவனம் : Avira GmbH

3. பைல் அளவு: 24462 kb

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்


6.இணையதளமுகவரி: இங்கே கிளிக் செய்யவும்


இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன.

முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத் தமிழ்ச் சங்கம் உதவி

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத்தமிழ்ச் சங்கம் உதவி

அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது, அவரின் உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது, அவர் கபீலிடம் இருந்து ஓடிவந்து வெளியில் வேளைபார்த்த காரணத்தால் கபீல் அவருடைய பாஸ்போர்ட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இக்காமாவும் கலாவதி போன்ற பிரச்னைகளால் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

விபரமறிந்த உறவினர்கள் இந்தியாவில் இருந்து என்னை தொடர்பு கொண்டு உதவும் படி கோரினார்கள், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் திரு. சிகாப் அவர்கள் மாறல் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. என் வேண்டுகோளை ஏற்று சிகாப் அவர்கள் முழுமூச்சுடன் மும்முரமாக செயலாற்றிக்கொண்டுள்ளார், இறைவன் நாடினால் இந்த மாத இறுதிக்குள் அவர் உடலை இந்தியா அனுப்பிவிடலாம், ஊரிலும் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற விபரம் அறியப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த பாதிக்கப்பட்ட மனிதரின் உடலை அனுப்ப தேவையாகும் செலவுகளுக்கும், குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் உதவிசெய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (imthias@imthias.com) தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
இம்தியாஸ் அஹமது
தலைவர்
ரியாத் தமிழ்ச் சங்கம்.

Tuesday, May 19, 2009

அன்று குழந்தை தொழிலாளி: இன்று சாதனை மாணவி!

அன்று குழந்தை தொழிலாளி: இன்று சாதனை மாணவி!

First Published : 15 May 2009 12:59:52 AM IST
Last Updated : 15 May 2009 02:11:48 AM IST

திருப்பூர், மே 14: சாதனை படைக்க வறுமையும் மொழியும் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் திருப்பூர் மாணவி புஷ்ரா பானு.

குழந்தை தொழிலாளியாக தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்ட அவர், பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரஹமத்துல்லா, சாராம்மா தம்பதியின் மகள் புஷ்ரா பானு. இவர் கேரளத்தில் 4-ம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் பிழைப்புத் தேடி திருப்பூர் வந்தனர். பின்னர் புஷ்ரா பானு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தார்.

இதையறிந்த கோவை கிளாஸ் அமைப்பினர் அவரை மீட்டு, தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர். பின்னர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலேயே படித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அவர் 994 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 176 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்: தமிழ் - 176, ஆங்கிலம் - 145, கணிதம் - 179, கணினி அறிவியல் - 169, இயற்பியல் - 164, வேதியியல் - 161. மொத்தம் 1200க்கு 994.

நான் பொறியாளராக விரும்புகிறேன். ஆனால், குடும்ப வறுமை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. யாரேனும் உதவி செய்தால் படிப்பைத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

திருப்பூர் கல்லூரி சாலை ராம்ஜி நகரில் வசிக்கும் அவரது வீட்டு அலைபேசி எண் 9943016993.

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?
Friday, May 15, 2009
Posted by TamilhackX
4 Comments
கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.
இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.



அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.

செயற்படுத்தும் முறை
முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
Pen
drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )

அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.



பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.






அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த

Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.



இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/

மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe

Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/pen-drive-password.html#ixzz0FmQYFP8G&B

எங்கு படிக்கலாம் ?- முழுத்தகவல்

எங்கு படிக்கலாம் ?- முழுத்தகவல்- tamil mail (must see guide our society)






Assalamu alaikum,


see all the links useful for students and parents


தொலை தூர கல்வி, உயர்கல்வி மற்றும் பல....

இவைகளை download செய்து பள்ளிவாசல்களின் ஒட்டிவைக்கு மாரு கேட்டுக்கொள்கின்றேன்

Download this and past in all our masjid, also, if anybody ask give that information
http://tntjsw.blogspot.com/2009/03/blog-post_03.html

எந்த கல்லூரி நல்ல கல்லூரி? ( பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்)

Ranking of engineering colleges
See the ranking to know which colleges is best ,
http://www.annauniv.edu/coe/news.html

எவ்வளவு cut-off mark எடுத்தால் எந்தகல்லூரியில் சீட் கிடைக்கும்

கடந்த வருட பொறியியல் சேர்க்கை விபரம்

Last year engg. Admission information
See this to know,
http://collinfo.annauniv.edu:9080/tnea2008/cutoff/index.jsp


கல்லூரிவாரியாக



http://www.collegesintamilnadu.com/Counseling/TNEA-2008-Engineering-Counselling-Cutoff..asp




உங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை பற்றிய தகவல் அறிய
Information about colleges in ur districts,
http://www.collegesintamilnadu.com/

Also see
கல்வி வழிப்புணர்வு பிரச்சார விடியோ

Educational awareness video
http://tntjsw.blogspot.com/2007/03/blog-post.html

கல்வி சம்மதமான சில முக்கிய இணையதள link-கள்

Some important educational links
Go to this link http://tntjsw.blogspot.com/
see right side scroll down and click the links

தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் விபரம்

medical colleges in tamil nadu
http://www.collegesintamilnadu.com/Medical/Para-Medical-Colleges.asp

தமிழ் நாட்டில் உள்ள பாலிடெக்னிக் (டிப்ளோமா) கல்லூரிகளின் விபரம்

polytechnic in tamil nadu
http://www.collegesintamilnadu.com/Polytechnic/Polytechnic-Colleges..asp

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
எஸ்.எம். ரபீஉத்தீன் பாக்கவி

மனித உடலுக்குப் பல நோய்கள் இருப்பதுபோல அவனது உள்ளத்திற்கும் பல நோய்கள் உள்ளன. அந்த நோய்களில் ஒன்றுதான் பெருமை.

எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்று இறைவனைப் பற்றிச் சொல்லப்படுகிறது. இன்று இறைவனுக்கு அடுத்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று உண்டென்றால் அது பெருமைதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். (திறந்து கொண்டும் சொல்லலாம்;தப்பில்லை)

வாழ்க்கையின் வசதி நிரம்பப் பெற்றவர்கள், அழகில் சிறந்தோர், ஆற்றல் மிக்கோர், பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு கைநிறைய சம்பாதிப்போர் பெருமை யடிக்கிறார்கள் என்றால் ஓரளவாவது அதை சீரணிக்க முடிகிறது. ஆனால் ஏழைகளும், அழகற்றவர்களும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே அவஸ்தைப்படுவோரும் கூட பெருமையடிப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

பெருமை நம்மை உயர்த்தும் என்று பலரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் இறைநியதி என்று ஒன்று இருக்கிறதே, இந்தப் புவியையும் அதிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் இந்த உலகின் அனைத்து இயக்கங் களையும் இயக்கிக் கொண்டிருக்கிற அற்புத ஆற்றல் அந்த இறைசக்தி, அந்த ஆற்றல் இந்த பாவப்பட்ட ஆத்மாக்களை ஒருபோதும் உயர்த்தவே உயர்த்தாது.

பணிவு கொள்வோரை இறைவன் உயர்த்துவான். பெருமை யடிப்போரை வீழ்த்துவான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் மனித சமுதாயத்தின் பெரும் பான்மை பிரச்சினைகளுக்கு இந்தப் பெருமைதான் காரணம் என்பதை உணர முடியும். மனிதனுக்கு ஏற்படுகிற கோபம் பெரும்பாலும் பெருமையால்தான் உண்டாகிறது. குரோதம் இதைக் கொண்டுதான் உண்டாகிறது. பொறாமை, வெறுப்பு போன்றவை இதனால்தான் ஏற்படுகிறது. பிறரைப் பற்றி இனிக்க இனிக்கப் புறம் பேசத்தூண்டுவதும் இந்தப் பாழாய்ப் போன பெருமைதான். பணிவுள்ள மக்களிடம் இது போன்ற பாவங்கள் நிகழ்வது ஆபூர்வம்.

முதல் மனிதராகிய நம் தந்தை ஆதம் அவர்களைப் படைத்தபோது இறை சன்னிதானத்தில் நடைபெற்ற ஒரு காட்சி, அந்த முதல் மனிதருக்கு வானவர்களைக் கொண்டு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது இறைவிருப்பம். எனவே, அனைத்து வானவர்களையும் ஒன்று திரட்டி அவருக்கு சிரம் தாழ்த்தும்படி இறைவன் கட்டளை யிடுகிறான். எல்லா வானவர்களும் சிரம் பணிகிறார்கள். அதிலே ஒரு தலை மட்டும் வணங்கா முடியாக நிமிர்ந்து நிற்கிறது. அது எவன் தலை என்று பார்த்தால் சாத்தானுடைய தலை. ஏனென்று கேட்டால் அவரைவிட நான் சிறந்தவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரையோ மண்ணால் படைத்திருக்கிறாய் மண்ணைக் காட்டிலும் எல்லா வகையிலும் நெருப்பே சிறந்தது. எனவே அவரைக் காட்டிலும் நானே உயர்ந்தவன். சிறப்பு மிக்க நான் தாழ்வான ஜீவனுக்கு எப்படி சிரம் பணிய முடியும்? என்று இறைவனையே கேள்வி கேட்டுத் தாழ்ந்து போனான்.

பெருமையின் தீங்குகளில் இதை முதன்மையானது எனலாம். இறைவனுக்கே மாறு செய்யத் தூண்டுகிற மனோபாவம். இன்று பள்ளிவாசல்களில் பாங்கோசை கம்பீரமாய் ஒலிக்கிறபோது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் பாராமுகமாய்ப் பலர் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்தப் பெருமைதான். பெருமை அதன் விளைவான அலட்சியம். மனிதன் எப்பொழுதும் இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டுமேயன்றி அறிவுக்கு அடிமையாக இருக்கக்கூடாது. இறை ஆற்றலுக்கு முன்பு இந்த அறிவெல்லாம் ….ச்சும்மா ஜுஜுபி. உன்னையும் படைத்து அந்த முதல் மனிதர் ஆதமையும் படைத்து உன் அறிவையும் படைத்து இறைக் கட்டளை அது என்பதை மறந்தல்லவா அவன் அறிவுக்கு முக்கியத்துவம் தந்தான். அறிவை மட்டும் மனிதன் நம்புகிற போது பல சமயங்களில் அது இப்படித்தான் அவனைக் கவிழ்த்துவிடும்.

இறைக் கட்டளையில் மனம்தான் முன்னிற்க வேண்டுமேயன்றி அறிவு முன்னிற்கக்கூடாது. இது சாத்தானுக்கும் தெரியும்தான். பெருமை அவன் கண்ணை மறைத்து விட்டது. அவரைவிட நான் சிறந்தவன் என்கிற சாத்தானின் வாதம் தர்க்க ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் இன்று நம் அனைவரின் பார்வையிலும் அவன் எவ்வளவு சிறுத்துப் போனான்? இதுதான் பெருமை. அது எத்தனைதான் ஆடம்பர வேடம் அணிந்துகொண்டு வந்தாலும் ஆர்ப்பாட்டமாய் வந்தாலும் பார்போர் கண்ணுக்கு அது சிறுமைதான்.

ஓர் எளிமையான உதாரணம் பார்க்கலாமா?

உயர்ந்த மலைமீது ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அங்கிருந்து கீழே கொஞ்சம் குனிந்து பார்த்தால் கீழே நடமாடுகிற மனிதர்களெல்லாம் பொடிப் பொடி எறும்புகள்போல் அவரின் கண்களுக்குத் தெரிவார்கள். வேடிக்கை என்னவென்றால் கீழிருப்போர் கொஞ்சம் நிமிர்ந்து இவரைப் பார்த்தால் அவர்கள் கண்களுக்கும் இவர் எறும்பு போல்தான் தெரிவார். இதுதான் எதார்த்தம். பெருமையடிப் பவர்கள் அவர்களுக்கு மட்டுமே பெருமையானவர்கள். மற்றவர் பார்வைக்கு அவர்கள் அற்பர்களாகத்தான் தெரிவார்கள்.

பெருமையைவிட்டு முற்றிலும் நீங்கியிருப்பது ஒன்று. பெருமை இல்லாததுபோல் பாவனை செய்வது பிறிதொன்று. இதில் நம்மில் பலர் வேடதாரிகளாகத்தான் இருக்கிறோமே தவிர, முற்றிலும் பெருமை இல்லாதிருப்போர் வெகு சொற்பமே. சொற்கள் ஒலிப்பதென்னவோ அடக்கமாகத்தான். ஆனால் இதயம் முழுக்க அகங்காரம்தான். ஆனாலும் இந்த வேஷம் அதிக நாட்களுக்குத் தாங்காது. சீக்கிரத்திலேயே சாயம் வெளுத்துப் போகும்.

புதிதாய்த் திறக்கப்பட்ட அந்த அலுவலகத்தின் சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் அந்த அதிகாரி. அந்த நேரம் பார்த்து அவரைப் பார்க்க யாரோ ஒருவர் வர, மணியே அடிக்காத தொலைபேசி ரிசீவரைக் காதில் வைத்தபடி பந்தாவாய் பாவ்லா பண்ணினார் பாவி மனுஷன். ஒரு வழியாக ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்தவரைப் பார்த்து வாங்க, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். வந்தவரோ சாவகாசமாய் ஒண்ணும் வேண்டாம் சார். உங்க தொலைபேசிக்கு இணைப்புக் கொடுப்பதற்காக தொலைபேசி அலுவலகத்திலிருந்து நான் வருகிறேன் என்றார். அந்த அதிகாரி முகத்தில் எத்தனை கிலோ அசடு வழிந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வெற்று பந்தாப் பேர்வழிகளின் பாடு பெரும்பாலும் இப்படித்தான்.

நான் ரொம்ப அடக்கமானவன். இறைவன் என்னைப் பெருமையை விட்டுக் காப்பாற்றினான் என்பதையே பெருமையோடு சொல்பவர்களும் நம்மில் பலருண்டு. நான் அடக்கமானவன் என்று சொல்லிக் கொள்வது பணிவல்ல; அடக்கம் இதயத்தில் அழுந்தப் பதிந்திருப்பதே உண்மையான பணிவு. பெருமை கொள்வோர் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இறுதியில் அவர்களுக்கு எல்லா வகையிலும் அவமானமே மிஞ்சும்.

பெஞ்சமின் பிராங்க்ளின் அழகாய்ச் சொன்னார். ”தற்பெருமை பூக்கும் ஆனால் காய்க்காது” மற்றொரு அறிஞர் சொன்னார் தற்பெருமை ஒருவனை ஊதச்செய்யும். ஆனால் அவனை உயர்த்தாது.

பெருமையை விட்டு நீங்கி ஆன்மிக ரீதியில் நம்மை உயர்த்திக்கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அழகானதொரு வழிமுறை சொல்லித் தருகிறார்கள். உலகியல் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு கீழுள்ளவர்களைப் பாருங்கள். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பாருங்கள். இப்படிப் பார்க்கிறபோது நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து அவர் நிலைக்கு என் நிலை எவ்வளவோ தேவலை என்கிற திருப்தியோடு நாம் வாழ முடியும். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் நமக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கிறபோது அவர் அளவுக்கு வணங்க வேண்டும் எனும் ஆசையில் நமது வணக்க நிலையை மேலும் நாம் உயர்த்திக் கொள்ள முடியும்.

ஆனால் நமது நிலையோ இதற்கு நேர்மாற்றம். உலகம் சார்ந்த விஷயங்களில் நம்மைவிட மேலானவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி பொறாமையோடும் அதிருப்தி யோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வணக்க விஷயங்களில் நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து மகா திருப்தி. திருப்தியாவது பரவாயில்லை. பெருமை வேறு. வணக்க வழிபாடுகள் விஷயத்தில் பெருமை கொள்வது மிகவும் மோசமானது.

ஆதம் பெறும் மக்களெல்லோரிலும்
நம்மையன்பு கொண்டே
வேத நபி ரசூலின்
உம்மத்தாக்கும்
வெகு நன்றிக்குப்
பாதங்கள் மேலும்
சிரம் கீழுமாய்ப் பத்து நூறாயிரமாண்டோதி
தவஞ் செய்தாலும்
போதாது.

என்று தக்கலைப் பீரப்பா வருந்திப் பாடுவதுபோல எத்தனை வணங்கினாலும் வழங்கினாலும் அது இறைவன் நமக்களித் திருக்கும் அருட்கொடைகளுக்கு முன்பு சொற்பமே என்கிற எண்ணம் வேண்டும்.

தன்மதிப்பு போற்றப்பட வேண்டியதுதான். அது ஒன்றும் பிழையல்ல. ஆனால் நம்மைப் போன்றே பிறரையும் மதிக்க வேண்டும். எனக்கு சில சிறப்புகள் இருப்பதுபோல அவருக்கும் சில சிறப்புகளை இறைவன் தந்திருக்கலாம். என்கிற எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். நாம் போட்டிருக்கிற செருப்பு அறுந்து போனால் அதை நம்மால் சரி செய்ய முடிகிறதா? அதைக் கையில் தூக்கிக் கொண்டு செருப்பு தைப்பவர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு செல்கிறோமே. இந்த இடத்தில் நம்மைக் காட்டிலும் அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர்ந்து விடவில்லையா?

என்னுடைய ஆற்றல்களையும் அரும் சாதனைகளையும் பற்றிப் பொதுமக்கள் கொண்டுள்ள மதிப்பீட்டுக்கும் உண்மை நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு பயங்கரமானது என்கிறார் ஐன்ஸடீன். உலகம் போற்றும் அறிஞர் பெருமக்கள் அனைவருமே இந்த நிலையை உணர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

காந்தி என்றால் மகாத்மா என்கிற அடைமொழியும் கூடவே ஒட்டிக்கொண்டு நம் கவனத்திற்கு வருகிறது. ஆனால் அவர் வாக்குமூலத்தைக் கேளுங்கள். ’’நான் மகாத்மா என்றோ மற்றவர்கள் அல்ப ஆத்மா என்றோ நான் ஒருபோதும் கனவில் கூட எண்ணியதில்லை’’இந்த தன்னடக்கம்தான் அவரை மகாத்மாவாக்கியது. இந்த மேதை களெல்லாம் தங்களைப் பற்றி இப்படி பணிவான அபிப்ராயம் கொண்டிருந்ததால்தான் இன்று உலக மக்களால் மேதைகளாய் மதிக்கப்படுகிறார்கள். இயற்கை விதி இப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

நமது நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்வதைப் பாருங்கள்:

எவனொருவன் தன்னைப்பற்றித் தானே உயர் மதிப்பீட்டுடன் வாழ்கிறானோ அவனை இறைவன் தாழ்த்தி விடுவான். மக்களெல்லோரும் அவனைத் தாழ்வாகவே பார்ப்பார்கள். இதற்கு மாற்றமாக எவரொருவர் தன்னைப் பற்றித் தாழ்வான அடக்கமான மதிப்பீடு கொண்டிருக்கிறாரோ அவரை இறைவன் உயர்த்துவான். மக்களின் பார்வையில் அவர்கள் மகத்தான மனிதர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

தன்னடக்கம் தானாக வர வேண்டும். அதைக் கற்றுத் தரவோ போதனைகள் மூலம் உருவாக்கவோ முடியாது. தானாக வருவதற்கு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பீடு வேண்டும். அளவு கடந்த சுய மதிப்பீடு ஆபத்தானது. அதுதான் தற்பெருமையாய் தலை தூக்கி நிற்கிறது. நம்மைப் பெருமை கொள்ளச் செய்கிற எந்தத் தகுதியாக இருந்தாலும் அது இடையில் வந்தது என்பதை உணர வேண்டும். நாம் பிறக்கிற போதே அந்தத் தகுதிகளோடு பிறக்கவில்லை. எத்தனைத் தகுதிகள் இருப்பினும் இது என் இரட்சகனின் அருட்கொடை என்றெண்ண வேண்டும்.

தன்னம்பிக்கை வேறு. தற்பெருமை வேறு. இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம்தான்.
தன்னம்பிக்கை போற்றுதலுக்குரியது. தற்பெருமை இகழ்ச்சிக்குரியது.
தன்னால் முடியும் என்றெண்ணுவது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்றெண்ணுவது தற்பெருமை.

தன்னம்பிக்கை கொண்டவரை எப்பொழுதும் உற்சாகம் கொண்டவராகக் காணலாம். அந்த உற்சாகம் ரசனைக் குரியதாகும். தற்பெருமை ரசிக்கத்தக்கதல்ல. வெறுப்புக்குரியது.

தன்னம்பிக்கையோடு வாழ்வோம். தற்பெருமை தவிர்ப்போம்.

மின்மடலுக்கு : smrbaqavi@gmail.com


ந‌ன்றி : ச‌ம‌நிலைச் ச‌முதாய‌ம்
ஏப்ர‌ல் 2009

துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கு





துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத்

நாள் : 15 மே 2009
லேண்ட்மார்க் ஹோட்டல்
தேரா,துபாய்

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் வாரந்தோறும் புதன்கிழமை அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

20.05.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள்

கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு
எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை செய்துள்ளது.

கோட்டைப் பள்ளி

21.05.2009 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்பு : ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, May 16, 2009

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

சட்ட ஆலோசகர் சந்திர குமாரிடம் நேரடி உரையாடல்!

பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் நோக்கமென்ன? கோரிக்கை என்ன?

தமிழகம் முழுக்கவுள்ள ஏறத்தாழ 7,500 பள்ளிவாசல்களில் பணிசெய்யும் இமாம்கள், முஅதீன்கள், மதரஸாக்களில் பணி செய்யும் ஒஸ்தாது, பள்ளி கணக்கர், சந்தா வசூலர், மையத்தை குளிப்பாட்டுபவர், கபர்க்குழி வெட்டுபவர் என தமிழகம் தழுவி ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு சலுகை கிடைப்பது என்பது அதிகாரி களின் மனோநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆனால் உத்தரவாதமில்லை. மற்ற பணியாளர்களைப் போல் இவர்கள் போராட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலை இவர்கள் இறைப்பணியாளர்களாக இருப்பதால்

இவர்கள் ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டால் தான் குறவர், கோயில்பூசாரி, ஓவியர், இதரப் பணியாளர்கள் தங்களுக்கான நலவாரியம் பெற்றது போல் பெற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பள்ளி வாசல் பணியாளர் சங்கம். இது கடந்த ஏழு வருடமாக இயங்கி வருகிறது இச்சங்கத்தின் தலைவராக சென்ற ஓரிரு நாட்களுக்கு முன்பு நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை மேட்டுப் பள்ளிவாசல் இமாம் ஏ.எம்.எஸ்.அஹமது லியாகத்தலி நூரி அவர்கள் இருக்கின்றார்கள்.

வலது சாரி தளத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன் சட்டசபையில் இவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமெனப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த அரசு முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் பணியாளர்களைக் கணக் கெடுக்கும்படி வக்ஃபு வாரியத்தை பணித்தது. வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கச் செல்லும்போது பள்ளி நிர்வாகிகள் பயந்து கொண்டு உண்மையான கணக்கைக் கூறாது மறைத்து விட்டனர். இதனால் கணக்கெடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. இதுபற்றி விரிவாக எழுதி சமீபத்தில் தஞ்சைப் பகுதிக்கு வருகை தந்திருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வசம் மனுக்கொடுத்துள்ளோம். அதனில்,கணக்கெடுப்பை அரசு தான் செய்ய வேண்டும். அது எளிமையானதும் கூட ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹெட்மேன் (V.A.O)மூலமாகவும் நகரப்பகுதிகளில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என்று மனுவில் கூறியிருக்கிறோம்.

ஏழு வருடமாக பள்ளிவாசல் பணியாளர் சங்கத்துக்கு பெயர் பதிவைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறப்படுகிறதே?

சங்கப் பதிவு சுணக்கத்திற்குக் காரணம், அவர்கள் கேட்கும் பதிவு தொழிலாளர் நலச் சட்டத்துக்குள் வருமா? என்ற சந்தேகம் தான். எவ்வளவு நேரம் பணி செய்கின்றார்கள். எத்தனை பேர் பணி செய்கின்றார்கள் என்று எப்படி நாங்கள் மசூதிக்குள் சென்று செக்கப் செய்வது என்ற கேள்விகளை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர். பள்ளிவாசல்களில் 8மணி நேரம் வேலை போன்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர் பணி, என்ன பணி என்பதற்கு ஆதாரமாக பள்ளி நிர்வாகம் தனது லெட்டர் ஹெட்டில் எழுதிக் கொடுத்து விடும். அதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளோம். ஆகவே தர மறுக்கின்றார்கள் என்பதெல்லாம் சரியல்ல.

ஏகப்பட்ட வாரியங்களை அமைத்திருக்கும் அரசு முஸ்லிம் களுக்கு ஒரு வாரியம் கொடுப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைவது ஏன்?

தடுமாற்றம் நமக்குள்தான். இந்த வாரியத்தை வாங்கலாமா வாங்கக் கூடாதா? மதப்படி சரியா? சரியில்லையா? என்ற ஊசலாட்டம் பலரிடம் நிகழ்கிறது. இதன் காரணமாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்குச் சென்று தெளிவுபடுத்தி வருகிறோம். ஒரு பள்ளியில் 20 வருடம் வேலை பார்த்ததாகச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் தான் உலமா, முஅதீன் ஓய்வூதியம் 750/- பெறமுடிகிறது. ஒரே பள்ளியில் ஒரு இமாமோ, முஅதினோ 20 வருடம் பணி செய்வது என்பது இயலாது காரியம். அதனால் ஒரு இமாம் எந்தெந்த பள்ளியில் எத்தனை வருடம் பணி செய்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அது மொத்தமாக 20 வருடம் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் விண்ணப்பிப்பதற்கான இலவசப் படிவத்தை 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

தமிழக அரசு இப்போதைய சூழ்நிலையில் வாரியம் அமைத்தால், அது வலிமையானதாக இருக்குமா?

வாரியங்களுடைய வருமானத்தை பெருக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் மட்டுமே 219 கோடி நிதியுள்ளது. இந்த வாரியத்தில் மட்டும் இவ்வளவு நிதி சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஒவ்வொரு கட்டிடமும் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் போது கட்டிடத் தொழிலாளர் வாரியத்துக்காக 1003/- (ஆயிரத்து மூன்று ரூபாய்) நிதி பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து எடுத்து மற்ற வாரியங்களுடைய அலுவலகச் செலவை மேற்கொள்ளலாம் எனப் பேசப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களது நிதியை மற்ற வாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாரியங்களுடைய அலுவலகச் செலவுக்கே திண்டாடும் போது பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வாரியம் அமைக்கப் பட்டால் மட்டும் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முதலில் வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைப்பதற்கு முன்னதாக நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரேம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தனித்தனியாகச் சென்று குரல் கொடுக்காமல் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சென்று கேட்டுப் பெற வேண்டும்.இதற்கு அமைப்பு ரீதியாகச் செயல் படவேண்டும். வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் பலரிடமும் சிக்கி வீணாகும் வக்ஃபு சொத்துக்களை வாரியத்துக்குக் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாரியத்தை செயல்படுத்தலாம். இன்னும் ஒன்றாக அமர்ந்து பேசி செயல்பட நிரம்ப வாய்ப்புகள் உள்ளன.

வாரியம் அமைக்கப்பட்டால் பள்ளிவாசல் பணியாளர்கள் என்னென்ன நன்மைகளைப்
பெறமுடியும்?

வாரியத்தில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு 400/- ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெற 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்துக்கு 15,000 + 2,000 மொத்தம் 17,000மும் 10 ஆவதுக்கு மேல் படிக்கும் வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகள் இருவருக்கு 6000 த்திலிருந்து 10,000/-ம் வரைக்கும் கிடைக்கும். இரண்டு பெண் குழந்தைகளுடைய திருமணத்துக்கு 2,000/- வீதம் கிடைக்கும். பிரசவத்துக்கு 6,000/-ம் கிடைக்கும். வாரிய உறுப்பினர் பதிவை 2 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இந்த சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சங்கத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்து வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

30 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். சங்க வருடச் சந்தா 120/- ரூபாய். சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. தற்போதைக்கு தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. விரைவில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்ய உள்ளார்கள். மாவட்டந்தோறும் சென்று, பள்ளிவாசல் இமாம், முஅதீன், மற்றுமுள்ளோரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். – விரைவில் தனி அலுவலகத்தில் இயங்கும்.

(குறிப்பு) : ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் துணைத்தலைவராகப் பணி செய்பவர் திரு.வழக்கறிஞர் சந்திரகுமார் அவர்கள். இவர் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகராகச் சேவையாற்றுகிறார்.)

பள்ளிவாசல் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளரோடு நேரடி உரையாடல்!

தங்களது சங்கத்தின் செயல்பாடுகள்; இது வரை என்ன விதமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

பிலால் சங்கம் என்று முதலில் ஆரம்பித்தோம். எங்களது செயல்பாடுகளைப்
பார்த்து இமாம்கள் எங்களோடு இணைய ஆரம்பித்தார்கள். பிலால் என்று மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. பள்ளிவாசலில் பணிசெய்யக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பள்ளிவாசல் பணியாளர் சங்கம் எனப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளோம். ஜெயலலிதா அம்மா அவர்களது ஆட்சி காலத்தில் 6 கோரிக்கைகளை முன்வைத்தோம். உலமா ஓய்வூதியம் 500 ஆக உள்ளதை 1,000/- ம் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். உலமாக்கள் இறந்த பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. இறந்த பிறகு உலமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும். உலமா பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமா பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவித் தொகை, இமாமாகப் பணி செய்யும் உலமாக்களுக்கு வக்ஃபு வாரிய நிலங்களை கையகப்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். சங்கத்துக்கு பதிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் இக்கோரிக்கைகளை ஓய்வூதியம் 1,000ம் ஆக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் 750/- ரூபாய் ஆக உயர்த்திக் கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உலமாக்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி ஆதரவுள்ளது?

உலமா ஒருவர் தான் இச்சங்கத்துக்கு இப்போது புதிய தலைவர் சமீபத்தில் உலமா வாரியம் கேட்டு மாநாடு போட்டார்கள். பலரும் தீர்மானம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் அவர்களிடம் உலமா வாரியம் என்று கேட்காதீர்கள் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் என்று கேளுங்கள், ஏழு வருடமாக முயற்சிக்கிறோம் எங்களது கோரிக்கைகள் செக்ரட்டிரியேட்டில் உள்ளன. வீணாக்கி விடாதீர்கள் என தொலைபேசியில் கூறினோம்.ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் ஒரிருவர் ஒத்துக்கொள்ளவில்லை. உலமா சபைத் தலைமையை அணுகினோம். உங்களது பாதை எங்களுக்கு ஒத்துவராது உங்களுக்குப் பின்னால் நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

எங்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது தான். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மூலமாகவே ப.ப. சங்கப்பிரச்சனைகளை அணுகி வருகிறோம் இந்த மாதிரி பொது அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு தான் பெற முடியும். முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் கேட்டாலும் அரசும் அதிகாரிகளும் செவி சாய்க்கப் போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால்தான் இவ்வகையில் முயற்சிக்கிறோம். எங்களது அலுவலகம் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்திற்குக் கீழாக அலுவலகம் இல்லாத காரணமாக தற்காலிகமாக இயங்கி வருகிறது. அவர்கள் தான் எங்களுக்கு உதவி வருகிறார்களே தவிர நாங்கள் அவர்கள் கட்சிக் கூட்டத்திற்கோ, தேர்தல் விளம்பரத்திற்கோ, கட்சிப் போராட்டங்களிலோ கலந்து கொள்வதில்லை. இது தான் உண்மை. எங்களது நோக்கம் இறையில்லப் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு முக்கியமான செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலமா ஓய்வூதியத்துக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது 20 வருடப் பணிசெய்தல் அவசியம் என்ற சட்டம் ஒருபுறம். விண்ணப்பிக்கும் உலமா, வக்ஃபு வாரியத்தில் வரி கட்டும் பள்ளிவாசலில் பணி செய்தால் தான் அந்த ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது மறுபுறம். வருமானம் இல்லாத காரணத்தால் வரி கட்டாது வெறுமனே வக்ஃபு வாரிய சர்வே பதிவோடு இயங்கும் பள்ளிகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனில் பணிசெய்யும் இமாம் களுக்கு இல்லை எனச் சொல்லும் வக்ஃபு வாரியச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

எங்களது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்துக்கு ஐந்து பேர் என 150 பேர் உள்ளனர்.

குறிப்பு : பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஷேக் அப்துல் காதர் என்ற இவர், முன்னாள் முஅதீனாக இருந்து இப்போது இச்சங்கத்துக்கு முழு நேர ஊழியராகப் பணி செய்கின்றார். இச்சங்கம் தற்போது இயங்குவது நெ.117, கீழ வாசல் வீதி, தஞ்சாவூர்.

நன்றி : முஸ்லிம் முரசு – ஜனவரி 2009

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்
Thursday, 14 May 2009

துபாய், இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபுக் குடியரசின் ராஸ் அல்கைபாவின் கல்வி நிலையங்கள் பகுதியில் தனது வளாகத்தைத் தொடங்கியுள்ளது.


பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.கற்பக குமாரவேல் இந்த வளாகத்தை சிறப்புப் பகுதியில் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனுமதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மே மாத இறுதியில் துவங்குகின்றன.

இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ பட்ட வகுப்புகள் இந்த வளாகத்தில் அளிக்கப்படும். வணிகம், கணினி வணிகம், மேலாண்மை, சில்லறை விற்பனை, சுற்றுலா சேவை மேலாண்மை மற்றும் கணினிக் கல்வி இளங்கலைப் படிப்பின் முக்கியப் பாடங்களாகும். எம்.பி.ஏ பிரிவில் மனிதவள மேம்பாடு, சில்லறை வணிக மேலாண்மை, நிதி, உற்பத்தி மற்றும் விற்பனை மேலாண்மைப் பிரிவகளில் பாடங்கள் அளிக்கப்படும்.

ஐக்கிய அரபுக் குடியரசில் பிலானியின் பிட்ஸ், மேஸ்ரா பிட்ஸ், மணிபால் பல்கலை, மகாத்மா காந்தி பல்கலை மற்றும் எஸ்பிஜெயின் மேலாண்மைப் பள்ளி ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

INDIAN AIR FORCE

INDIAN AIR FORCE
Indian Air Force (IAF) invites applications from unmarried male candidates for selection test in August 2009 to join as Airman inGroup 'Y' trades.

Qualification : Candidates should have passed Intermediate/ 10+2/ Equivalent examination with minimum 50% marks in aggregate with Science, Arts or Commerce subjects or vocational cources with minimum 50% marks. Vocational cources conducted by CBSE and Kerala Board recognised by Association of Indian Universities (AIU) only are eligible.
Age : Born between 01 January 1989 and 28 February 1993 (both date inclusive)
Medical Standards : Height :Minimum acceptable height : 152.5 cm, Chest : Minimum range of expansion : 5 cm, Vision : 6/36 each eye., Correctable with spectacles : at least 6/9 each eye., Diopteric power : not exceeding +3.5
Training : Initial Joint Basic Phase Training (JBPT) will be provided at Airmen Training School, Belgaum (Karnataka) for 12 weeks. After it Trade Training will be provided.
Selection Procedure : Written Test : Test will be held during August 2009. Physical Fitness Test (PFT) : those who pass written test will undertake Physical Fitness Test. It consist of 1.6 Km run to be completed in 8 min., Interview : Those who pass both the written and PFT will be called for interview.
How to Apply : Candidate must indicate three choices of the examination centre in order of preference. Application form which is predefined should be typed on A4 size paper only. Last date for receipt of applications at the Central Airmen Selection Board is 05/06/2009. Last date for candidates of far flung areas is 12/06/2009. Application completed in all respect and outside the envelope containing the application write clearly (i) "FOR GROUP `Y' TRADES" (ii) "AGGREGATE PERCENTAGE OF MARKS …….…% IN CLASS XII/EQUIVALENT EXAMINATION (iii) "Son of Serving/Discharged/ Deceased Officer/Airman/ NC(E)/Air Force Unit Cadre Civilian {SOAFP}" (if applicable) to be annotated in RED INK and should be sent by ordinary post to :

President
Central Airmen Selection Board,
Post Box No. 11807, New Delhi - 110010

For further information, kindly visit http://www.careerai rforce.nic. in/home.htmland Application Form is available at http://indianairfor ce.nic.in/ pdf/FORMAT_ OF_APPLICATION_ AIRFORCE. pdf

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.
-ஆலிம் புலவர்
-மறைஞானப்பேழை ஏப்ரல் 2009

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்


சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்