Saturday, February 23, 2008

துபாயில் நூல் அறிமுக விழா


துபாயில் நூல் அறிமுக விழா

வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேசினார். நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மானும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலியும் பெற்றுக்கொண்டனர். இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com

முகைதின் .A
அலைபேசி-050 4689868,
-055 8034874

No comments: