Saturday, February 23, 2008

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

நாள் : 14-02-08 இடம் : இந்திய தூதரகம்

ரியாத் மாநகரில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் கலைவிழா கடந்த 14-02-2008 அன்று மாலை இந்திய தூதரகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆறு மணியளவில் விழா தொடங்கியது. மேடையின் திரைகளில் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் கைகள் விரித்து நின்றிருந்தன. தமிழ்த்தாய் வாழ்த்தொலிக்க தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினர் ஓருடையை சீருடையாக்கி மெழுகுவர்த்திகள் ஏந்தி நின்றிருந்த காட்சி கடலைச்சுற்றி பதினேழு சூரியன்கள் எழுந்து நிற்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிகளைத் தொகுப்பதற்கென்றே பிறந்தவர்களாய் ராஜாவும் கிரு~;ணவேனியும் களமிறங்கினர். மேதகு இந்தியத் தூதுவர் ஃபருக் மரைக்காயர் அவர்களை டாக்டர் திரு ர~Pத் பா~h அவர்கள் மேடைக்கு அழைத்துவர அவரைத் தொடர்ந்து டாக்டர் மாசிலாமணி அவர்கள், ஜித்தா ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு மாலிக் அவர்கள், ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் சஜ்ஜாவுதீன் மற்றும் மூத்த ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஜெயசீலன் மற்றும் திரு விஜய சுந்தரம் ஆகியோர் மேடையேற மேடையின் சிகை அலங்காரமாய் நின்றது.

திரு. முத்துராமன் அவர்கள் மேதகு இந்திய தூதருக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். திரு ஜெயசீலன் அவர்கள் டாக்டர் மாசிலாமணி அவர்களுக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். அரங்கு நிறைந்து வழிந்தது. வாழ்த்தே உரையாய் வாழ்த்துரை வழங்க வந்த திரு கஸ்ஸாலி அவர்கள் சுபசோபனம் பற்றி சுருக்கமாய் விவரித்தார்.

அரங்கு அமைதிபெற மாண்புமிகு இந்திய தூதர் ஃபருக் மரைக்காயர் அவர்கள் அவையின் மௌனம் கலைத்து தன் உரையைத் தொடங்கினார். தமிழ்ச்சங்கத்தின் அவசியம் பற்றியும் அதனால் அடைய வேண்டிய பலன்கள் பற்றியும் அது செய்ய வேண்டிய கடமைகள், அது தாங்கும் சுமைகள், அதன் விரிந்த எல்லைகள் மற்றும் தான் கொண்ட பொறுப்பு, அதன் யதார்த்தம் ஆகியன பற்றியும் ஆழமாகவும் அழகாகவும் பேசி முடித்தார்.

சுமார் எட்டு மணியளவில் முதல் நிகழ்ச்சியாக தில்லானா மேகனாம்பாள் திரைப்படத்திலிருந்து நலந்தானா பாடலின் முன்னிசைக்கு ~மாவும் வர்~hவும் தங்களது நாட்டிய நளினங்களை நடனத்தில் கொட்டி மெய்சிலிர்க்க வைத்தார்கள். அரங்கு அலைபாயத் தொடங்கியது.

அடுத்ததாக கவியரங்கம் சுடர்விட்டது. திருவாளர் தாவூத் அவர்கள் வர்ணனை வார்ததைகள் பொழிய தமிழையும் தமிழரையும் வாழ்த்தி மதுரம் தமிழ் என்ற தலைப்பில் கவிபேச மதுரை பெரோஸ்கான் அவர்களை அழைக்க, திரு பெரோஸ்கான் அவர்கள் தனது வலிமையான வசனங்களால் அரங்கம் அதிர தனது கவிதையை விதைத்து வைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த மலர் சபாபதி அவர்கள் பாரதியை அழைத்து சொன்ன கவிதை அரங்கத்தை குதூகலிக்கச் செய்தது.


அவரைத் தொடர்ந்த வழக்குச் சித்தர் ஜாபர் சாதிக் அவர்களின் புரட்சிக்கவிதை புரட்சிகரமாய் அரங்கேறியது. இறுதியாக வந்த சேலத்து சோலைக் கவிஞர் திரு சிக்கந்தர் அவர்கள் வரம் வேண்டும் என்று சொல்லி கவிதைபாடி கவியரங்கத்தை நிறைவு செய்தார்.

இடையிடையே ராஜா கிரு~;ணவேணியின் கிள்ளை மொழிகள் கொஞ்சிச் சென்றன. அடுத்து இசை விருந்து ஆரம்பமானது. திரு ஸஜ்ஜாவுதீன், திருமதி அணுராதா, திரு பாலா, திரு ஸபீர் ஹ_சைன,; திரு நெவிசன், திரு கென்னடி, திரு வினு, திரு குருராஜன் வரிசையாக பாடல்கள் பாடி அரங்கத்தை ஆனந்தத்தில் தள்ளினர்.

திரு தாவூத் மற்றும் வளவன் அவர்கள் இடைவெளிகிடைத்த போதெல்லாம் திரைக்கு முன்னால் வந்து கேள்விக்கணைகளை தொடுத்து பரிசுகளையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சுமார் ஒன்பது மணியளவில் பட்டிமன்றம் தொடங்கியது. நடுவராக தலைவர் திரு ஸஜ்ஜாவுதீன் அவர்கள் பொறுப்பேற்றார் இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது
காதல் திருமணத்திலே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் துவங்கியது. முதலாவதாக காதல் திருமணத்திலே என்ற தலைப்பில் திரு மீரான், திரு ய+சுப,; திரு சுவாமிநாதன் தங்களது சுவை மிகுந்த சொற்களால் அரங்கத்தை - அசத்தியும் ஆட்டியும் வைத்தனர். பின்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பேசிய திரு லியோ, திரு ஹைதர் அலி, திரு ரேணுகா சுப்பையா ஆகியோர் தங்களது வாள்வீச்சுப் பேச்சினால் அவையைக் கவர்ந்திழுத்தனர். நடுவர் ஸஜ்ஜாவுதீன் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கிடையே சிரிப்பில் சில்மி~ங்கள் செய்தார். இறுதியாக இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்று நாட்டாமையாக வாழ்;ந்து தீர்ப்பு சொல்லி தீர்;த்து வைத்தார்.

திரு ஜாபர் சாதிக் அவர்கள் அவ்வப்போது சபை ஒழுங்கிலும் தனது பொறுப்பிலும் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொன்ன பார்வையாளர்கள் வரை பரிசுகளை பெற்றுச் சென்றனர். பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக நிறைந்த அரங்கம் அளவில்லாத ஆனந்தம் கொண்டது. ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை தூதரகத்தின் வாயிலில் வைத்து திரு ஜாபர் சாதிக், திரு சிக்கந்தர் இன்னும் சில அங்கத்தினர்களால் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் யாவும் சுருங்கிய நெற்றியின் சுருக்கம் நீக்கி திலகமிட்டது போலிருந்தது கண்டு தமிழ் மன்றமும் தமிழ் மனங்களும் திருப்தி கொண்டன.

சுமார் பத்தரை மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.

தமிழில் தொகுத்தது: ஃபெரோஸ் கான்
ரியாத் தமிழ்ச் சங்கம்

sadikjafar@gmail.com

No comments: