Wednesday, February 13, 2008

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா



துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா


உழைப்போம்! உயர்வோம்!! உதவுவோம்!!! எனும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு ( Web : www.etadxb.20fr.com Email : etadxb@yahoo.com ) சமுதாயப் பணியில் தனது ஆறாம் வயதினை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை நினைவுறுத்தும் வகையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 7வது ஆண்டு துவக்கவிழாவும், பவள விழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழாவும்,, அமீரகத்தில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணமாகவும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

மாண்புமிகு ஷேக் சுல்த்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ருஷி அவர்கள்
(சேர்மன், பின் பக்கீத் நிறுவனங்கள்)

தமிழர் தலைவர்
மானமிகு திரு. கி. வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)

புரட்சித்தமிழன் திரு. சத்யராஜ் அவர்கள்

திரு. குடந்தை அன்பழகன் அவர்கள்
(நிறுவனர், அன்பு மருத்துவமனை மற்றும் கல்விசார் நிறுவனங்கள்)

திரு. வீரசேகரன் அவர்கள்
(வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

இவர்களுடன் கலைஞர் டிவி புகழ் "எல்லாமே சிரிப்புதான்" குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவின் சிறப்புகளாக, ஆண்டுமலர் வெளியீடு, அங்கத்தினர்கள் பங்கேற்கும் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற 050 4748490 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

தகவல் : அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு

No comments: