Saturday, August 30, 2008

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு


துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சைபுதீன் வரவேற்றார்.

கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய துணைத்தூதரக அரங்கில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவார்.

மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நூர், செந்தில் ஜெரால்டு, சலீம், சபியா நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: