Thursday, August 28, 2008

துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி


துபாயில் ரமலானே வருக ! ரஹ்மானே ! நிறைவருளைத் தருக !! எனும் சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஃபான் 29 ( 29 ஆகஸ்ட் 2008 ) வெள்ளிக்கிழமை தேரா சிறிய ஜர்வூனி கோட்டைப் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

முதல் அமர்வு ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு மௌலானா மௌலவி பேராசிரியர் முஹம்மது இப்ராஹிம் ஹஜ்ரத் ஃபைஜி தலைமை தாங்குகிறார். மௌலவி முஜீபுர் ரஹ்மான் ஃபைஜி இறைவசனங்களை ஓதுகிறார். அடமங்குடி ஏ. அப்துர் ரஹ்மான் கீதம் பாடுகிறார். மௌலவி மீரன் முஹ்யித்தீன் வடகரை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

இரண்டாம் அமர்வில் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மௌலவி ஹுசைன் மக்கீ காயல்பட்டினம் உரை நிகழ்த்துகிறார்.

மூன்றாம் அமர்வு அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில் மௌலவி வாலிநோக்கம் கலீலுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி காஜா முஹ்யித்தீன் ஜமாலி, காயல் மௌலவி முத்து முஹம்மது மஹ்ளரி, காயல் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம், சென்னை மௌலவி ஜியாவுத்தீன் பாக்கவி, கோட்டக்குப்பம் மௌலவி முஹம்மது யஹ்யா மன்பயீ, பெரம்பலூர் இஹ்சானுல்லாஹ் பாக்கவி, கீழக்கரை முஹம்மது மஃரூப், ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 050 29 28 746 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
"Mohamed ismail" ,

குறிப்பு :

ரமலான் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெறும்

No comments: