Tuesday, December 2, 2008

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்;
ஹஜ்ஜுப்பெருநாள்
வாழ்த்து கவிதை


"தீயகம் களைவதே தூயநற் றியாகம்;
ஐயமில் அன்பெனில் அதுவே நியாயம்"-
என்றே உணர்ந்து ஏகனை வணங்கி;
ஒன்றே மைந்தரை ஓரிறைக் கிணங்கி
அறுத்திடத் துணிந்தனர்; அருமை பக்தி
பொறுத்தனர் புதல்வர்- பொறுமை சக்தி

இச்சை துறந்து; இம்மை மறந்து
ஹஜ்ஜை நாடி அருளைத் தேடி
கூடிடும் மக்கள் கோடானு கோடி
பாடிடும் "தல்பியா" பரவசம் ஒலிக்கும்
தேனினும் இனிய "தக்பீர்" முழக்கம்
காற்றினில் கலந்து காதுகட்கு எட்டும்-
போற்றிடும் பெருநாளில் பெருமகிழ்வு திக்கெட்டும்

இனித்திடும் இன்னாளின் இனியநல் வாழ்த்து;
கனியினும் இனிதாய் கவிதையாய்க் கோர்த்து........

-கவியன்பன்கலாம்

No comments: