Thursday, April 29, 2010

ஓ மனிதா..!!!

ஓ மனிதா..!!!

தேடுதல் என்று தீரும் நில்லடா
ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா
தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ
வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற
நன்மை என்ன? நானும் வாழ்வின்
உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும்
மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன்
பறந்த வண்ணம் பாரெலாம்; நானே
பிறந்த காரணம் புரியா(த) போழ்து
திறந்த பூ...மியில் தினமுமே மனிதா...!!!
தேடும் ஐயம் தீருமா எளிதா.....................???????????

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com

No comments: