Monday, April 19, 2010

முகம்

முகம் திங்கள் என்றனர் எதனால்?

அகம் என்னும் ஞாயிற்றின் பிரதிபிம்பம் அதனால்...

இல்லத்தின் முகம்
இனிய மனைவியே ஆகும்

குடும்பத்தின் முகம்
கணவரே ஆகும்

உடுத்தும் உடையே தான்
உங்கள் செல்வத்தின் முகம்

கவிஞனின் முகம் பார்க்கும்

கண்ணாடி மற்ற கவிஞனாகும்

குழந்தை தான் ஒப்பற்ற
கவிதை முகம்;

படைத்தவன் என்னும் கவிமுகம்
இங்கேதான் அறிமுகம்..........!!!

"கவியன்பன்" கலாம்

No comments: