Sunday, August 8, 2010

பயனுள்ள கல்வி

பயனுள்ள கல்வி

தலைப்பு : பயனுள்ள கல்வி
உரை நிகழ்த்துபவர் : Dr.KVS ஹபீப் முஹம்மது அவர்கள்
இடம் : ILM Edicational Trust, சென்னை





Click here to download this video

உரையிலிருந்து சில முக்கிய குறிப்புகள் :

1) சொத்துக்களை விற்று கல்வியை பெற்ற காலம் மலையேறி விட்டது.இன்று கல்வியை விற்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2) இளைஞர்கள் அரபு நாட்டிற்கு செல்வதுதான் தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற நிலையை விட்டு மாறவேண்டும். அரசு வேலைகளை முஸ்லிம் இளைஞர்கள் பெறுவதற்கு நம் சமுதாயத்தின் பங்கு என்ன? என்பதை சமூக ஆர்வலர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

3) நம் மூளையை செழிப்புள்ளதாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக நம் மூளையை தெளிவுள்ள மூளையாக மாற்றவேண்டும். ஒரு சமுதாயத்தை அழிக்கவேண்டு மென்றால் கல்வியில் மாற்றம் கொண்டுவந்தால் போதும். மேலை நாட்டின் காலச்சார சீரழிவின் பின்னனி என்ன? என்பதை ஆராய்ந்தால் இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

4) மார்க்கக் கல்வியோடு கூடிய உலக்கல்வியே நமக்கு பயனளிக்கும். பயனுள்ள கல்வி என்பது ஒரு செழிப்பான நிலத்தில் பெய்யும் மழைபோன்றது. இறைவனை அஞ்சுபவனே உண்மையான அறிஞன், இறையச்சம் இல்லாதோர் வேதம் சுமக்கும் கழுதைகள்.

5) தீய அறிஞர்களிடமிருந்துதான் ஒரு சமுதாயத்திற்கு சாபக்கேடு உருவாகிறது. நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமானிதம் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.

இவ்வீடியோ பதிவை இணையதளத்திலிருந்து பார்வையிட கீழுள்ள தொடுப்பை கிளிக்செய்க
http://www.ottrumai.net/TArticles/46-WorthfullEducation.htm
இப்படிக்கு
ஒற்றுமை இணையக்குழு
www.ottrumai.net

No comments: