Thursday, February 12, 2009

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்

முன்னுரை :

இந்தியாவின் 565 சமஸ்தானங்களும் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து மடிப்பிச்சையாகத் தம் சுகவாழ்வைப் பெற்ற போது தன்மானம் காக்கவும் தாய்நாட்டின் மண்மானம் காக்கவும் தனித்தெழுந்த துணிந்தெதிர்த்துத் துடித்தெழுந்த இம்மண்ணின் ஒரே மாவீரன் தியாகிகளின் சக்கரவர்த்தி இந்திய விடுதலைப் போரின் முன்னோடி மைசூர் புலி திப்பு சுல்தான்!

250 ஆண்டுகால ஆசிய வரலாற்றில் வாளேந்திப் போர் புரிந்து அப்போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னர் திப்பு சுல்தான்!
இவர்களது ஒப்பற்ற தியாகத்தால் ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்டு இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கும் இந்தியாவை மீண்டும் மீட்கத் துடிக்கும் தென்னிந்தியத் திப்புசுல்தான் பேரவையின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். திப்புசுல்தானின் 208 வது நினைவுநாள் அஞ்சலியாகவும் அனைத்துலக இஸ்லாமிய இலக்கியத்தமிழ் ஏழாம் மாநாட்டில் இதனை அன்பளிப்பாகவும் வழங்கிய தென்னிந்திய திப்புசுல்தான் பேரவைத் தலைவர் சர்தார் ஷேக் அவர்களுக்கும் நல்லமுறையில் அச்சிட்ட ஈரோடு மாருதி பிரஸ் பணியகத்திற்கும் இதனைப் படிப்பதன் மூலம் மாவீரன் திப்பு சுல்தானை நன்றியுடன் நினைவுகூறும் அனைத்து நல் உணர்வாளர்கட்கும் நன்றி...நன்றி...நன்றி...!

2.5.2007
எம்.கே. ஜமால் முஹம்மது
ஈரோடு
அலைபேசி : 94437 02958

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான் !

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் திப்புசுல்தானின் 208 வது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தானின் 208 ஆவது நினைவு ஆண்டில் அம்மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இம்மண்ணின் புண்ணிய மைந்தனைப் போற்றி நினைவு கூர்வோம்.

பிறப்பும், வளர்ப்பும் :

கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார்.
புலிக்குப் பிறந்தது

தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.

வெற்றித்திருமகன்

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

திருமணம்

1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.

ஹைதரின் மரணமும் அரியணையும்

1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.

திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை

1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.
போர்க்களங்களில் திப்பு

மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்

1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.

1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

தியாகதீபம் அணைந்தது

1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார். ஆம் உயிர் பிரிந்தது.இன்னாலில்லாஹி...
திப்பு சுல்தானின் குடும்பம்

குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு.

திப்புவின் புதல்வர்கள்

ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர்.

திப்புவின் புதல்விகள்

பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.

ஆட்சி மாண்பும், படைபலமும்

திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.

ராணுவம்

திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.

கப்பற்படை

கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள்
இருந்தனர்.

திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.

சதவீத அடிப்படையில் மான்யம்

மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய
முதல் மன்னன் திப்பி சுல்தான்.

ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)

சீர்திருத்தம்

மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார்.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன

தொழில் வளர்ச்சி

அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.

தொழிற் புரட்சி

கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்

*கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.

*குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.

மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்

*சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

*கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.

*வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.

கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.

நிறைவு

ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய பின்பே பஞ்சு மெத்தையில் உறங்குவேன் என்று வீரசபதமிட்ட மாவீரன் திப்பு தன் இன்னுயிரை நாட்டுக்கீந்து 148 ஆண்டுகள் கழித்து கி.பி. 1947 ஆகஸ்ட் 15 நடுநிசியில் யூனியன் ஜாக்கொடி கீழே இறங்கியது. அப்பொழுது தான் திப்புவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். ஆம் அல்லாமா இக்பாலின் “கிழக்கு அன்று உறங்கிக் கொண்டிருந்த போது, விழித்திருந்த ஒரே மனிதன் திப்புசுல்தான் மட்டுமே” என்ற வரிகளின் உண்மையை இந்திய சுதந்திரமும் உலகும் என்றும் மறக்க முடியாது. நாமும் அம்மாவீரனை நினைவு கூர்வோமாக!

வாழ்க திப்புவின் புகழ்! வெல்க திப்புவின் தியாகம்!
வெளியீடு :
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( கூகூக )

தொகுப்பாளர் : ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது

( 4.5.2007 அன்று திப்புசுல்தான் 208 ஆவது நினைவு நாள் நினைவாக வெளியிடப்பட்ட்து )
மே 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

சமர்ப்பணம்

தியாகிகளின் சக்கரவர்த்தி திப்புசுல்தானின் பரிசுத்த ஆன்மாவிற்கு..

திப்புவையும் வேலூர் புரட்சியையும் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று திப்புவின் தாசராகவே வாழ்ந்து திப்பு மறைந்த மாத த்திலேயே இறையடி சேர்ந்த ( 11.05.2006 ) அமரர் முனைவர் பி. சின்னையன் அவர்களின் ஆன்ம நினைவிற்கு

முதற்பதிப்பு : 02.05.2007

அச்சிட்டோர் : மாருதி ஆப்செட் பிரிண்டர்ஸ், ஈரோடு
2253165

நாட்டில் நலன் காக்க !
நல்லிணக்கதை நிலை நாட்ட !
நூறாண்டுகள் அடிமைகளாய்
ஆட்டுமந்தை போல் வாழ்வதை விட
இரண்டு நாள் மக்களின் விடுதலைக்காக போராடி
வேங்கையாய் மடிவதே மேல்
- மாவீரன் திப்புசுல்தான்

என்றும் வாழும் திப்புவின் தியாகம்
என்றும் வாழும் திப்புவின் வீரம்
என்றும் வெல்லும் திப்புவின் கொள்கை ! நாட்டிற்கு
என்றும் வேண்டும் திப்புவின் கொள்கை !

வெளியீடு
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( TTP )
தலைமை அலுவலகம்
77 கிழக்கு ரத வீதி,
திண்டுக்கல் 624 001
தொலைபேசி : 0451 6531228
தொலைநகல் : 0451 2420860
அலைபேசி : 98423 52513/92442 28187 / 94439 10222
மின்ன ஞ்சல் : ttp@india.com / tipumail@india.com

Wednesday, February 11, 2009

Counting One’s Blessings: 56 Reasons to be Grateful

Counting One’s Blessings: 56 Reasons to be Grateful

Asma Ahmed (LIFE)

Khaleej Times dt. 11.2.09




This story goes back some years. I was young then, and took a while to accept and adjust to change. The best problem-solving mechanism that I knew was letting the tears roll down for as long as they did.

But the circumstances of my story are no different from those that I hear just about every day in these trying times. With people losing their jobs, earnings and savings left right and centre, this seems like a perfect moment to write about what were probably the two most horrible weeks of my life. My troubles began on the day my little boy took his first steps. It was also the day my firstborn said her first complete sentence,
 ‘I want water’.

I was deliriously happy, and counting the hours before my husband came home so I could surprise him with the little ones’ achievement.

But it was my husband who surprised (or should I say shocked) me by returning early that day, only to tell me that he had lost his job in a major downsizing of his company.

I could not decide whether to tell my husband and celebrate my children’s move towards independence, or burst into tears, because they were my son’s first steps towards a lifetime of 
responsibilities, most of which will revolve around providing for other people, for my husband’s joblessness meant that we could no longer send home money or afford to pay the houseboy’s wages.

As news of the layoff got around, people began to call in to sympathise and offer support. But with all those researches going around about the money/ happiness connection (which most economists and psychologists say isn’t such a big link), I was nearly tempted to say to those who called in to express sympathy and support, oh money doesn’t really matter.

To some who seemed to be calling only to hear me wallow in self-pity and then end the call to tell the person next to them how stupid we had been to rent a two-bedroom instead of one, or buy a new car instead of a second-hand one, I said just that. After all, it is true 
that many of those who have lots of money are not really happy, even when they are able to buy that dream house and four-wheeler that they always wanted to own.

But at a time when the global recession had hit home (literally), I cannot deny the fact that I looked into all my secret hideaways, in the hope that I might have stashed some money and forgotten about it. And upon finding those places empty, I tried to wish money into them by magic.

Each time that I prayed, I always told the Almighty how great it would be to win a cash prize in the countless raffle draws that were taking place in malls. Oh, and I was constantly counting 
the money (and jewellery) that we had, and calculating how long we 
could make it last. But except worrying myself sick, there was absolutely nothing that I did that can be termed positive or productive in those first 
two weeks of adjusting to our new state of affairs.

At a time when I should have been the solid pillar of support that my husband was looking for, I spent most of my time wondering why this was happening to us — a common phenomenon amongst those who lose something precious.

In our case, it was monetary stability and a house that we had spent many painstaking hours to decorate and settle into (not to mention the countless visits to IKEA which was still a not-so-common place to buy furniture).

After nearly two years of my husband’s hard work, we were finally in a position to start a savings account, and in my anger, I kept asking the Almighty why he never helped us have what others got effortlessly.

Unfortunately, such a train of thoughts can be quite self-destructive. When I should have spent my waking hours praying harder than usual, or keeping the children out of the way while my husband was filling out job applications on recruiting web sites, all I could do was burst into tears each time I looked at the red and blue walls of my children’s room. I had spent precious hours deciding what colour to paint the children’s room and another two days doing just that. It was in this state of utter depression that I received an e-mail from a friend who had learnt of our misfortune. Amongst the many other things that she said, she suggested I do a ‘gratitude exercise’.

Make a list of the things that you are grateful for, literally, she said, and count your blessings. Right then, it seemed like a silly idea, but after a fortnight of sleeplessness, I woke up in the morning, staggered to my desk and decided to give it a shot.

I began with the bigger things in life like a loving husband, the prayers and support of our parents, two wonderful children and our collective health and wellbeing, going right down to even the tomato plants in my balcony garden that were now in full bloom.

And there it was. I had 56 things on my list of things to be thankful for, and probably lots more that did not come to my mind just then.

I put my list in the drawer, took a peek at the kids who were still sleeping peacefully and stepped out into the balcony to admire my little garden. I already knew that things were going to get better, for with those 56 things on my list, the Almighty had already sent us signs that He was with us.

ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்

ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம்

நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே அவற்றை மீண்டும் திரும்பப் பெற முடியாத வகையில் பல செயல்களில் ஈடுபட்டு பின் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files .

இது கிடைக்கும் தளத்தின் முகவரி http://www.undeleteunerase.com/download.html.

ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.





__._,_.___

Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009

Dewa Walk-in Interview at Al Boom Tourist Village,Dubai on February 12, 2009

https://careers.dewa.gov.ae/content/root/

The Dewa WALK-IN Interview is organized to extract all the suitable candidates qualified in the field of Transmission Power , Water Operations and more. This will be a golden opportunity to get yourself exposed.

Venue : Al Boom Tourist Village, Adari Hall, Near Al Gharhoud Bridge, Dubai
Date : February 12, 2009
Time : 8 AM to 1:00 PM

Attractive salary package will be offered to the successful candidates based on the qualification and experience.
Must be English speaking with good communication skills and computer knowledge. Age should be below 40 years
Possession of UAE Driving Licence will be an added advantage

சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்!

சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்!
தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)

http://www.kayalpatnam.com/shownews.asp?id=2688

காயல்பட்டணம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த, நஹ்வி அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் நஹ்வி ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை (வயது 26).

துவக்கமாக காயல்பட்டணம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னை வண்டலூரிலுள்ள கீழக்கரை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

எகிப்து நாட்டிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் மர்கஸ{ஸ் ஸகாஃபதிஸ் ஸ{ன்னிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த 15.01.2009 அன்று ஆலிம் அஸ்ஸகாஃபீ அல் அஸ்ஹரீ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்;.


சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாடர்ன் அரபிக் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி...

சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் ஆலிம் அல்-புகாரீ படிப்பை முடித்து, கல்லூரியில் மூன்றாமிடம்...

அஃப்ஸலுல் உலமா தேர்வில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்;சசி...

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி...

உருது மொழி பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி...

அரபி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் இம்மொழிகளில் நடத்தப்படும் முக்கியமானவர்களின் உரைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்துள்ளார்...

காயல்பட்டணம் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹாஃபிழ்களும், ஆலிம்களும் உருவாகியிருந்தாலும், இத்தனை கல்வித் தகுதிகளோடு கற்றுத் தேறியுள்ள நகரின் முதல் ஆலிம் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இவர்.

தகவல்:
நஹ்வி ஷெய்கு அலி ராஜிக்,
சிங்கப்பூர்.

அஸ் ஸலாம் சாரிடபிள் டிரஸ்ட்

Assalamu Alaikkum (Varah)

Maasha Allah. We are receiving several positive responses from Gulf region about the engineering college project. Hearty thanks to all. Also we humbly request you to kindly forward those details to your friends and relatives and publish all e-papers. We are targeting to reach 100 members before the month end. If you need any clarifications, you can send your representative in person.

This is our address:

As - Salam Charitable & Educational Trust
359 M, Main Road, Aduthurai - 612 101
Thanjavur - Dist

Thanks & Regards,

Shahjahan
Secretary, As-Salam Trust,
98948 94999
99659 04553
shahjahan.am@gmail.com

உயிர் காக்கும் CPR

உயிர் காக்கும் CPR

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.


ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்


>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது


>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது


>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது


>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது


>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது


>அதிர்ச்சியின் போது ( in a state of shock)


>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது


>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)


>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )


CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.


>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)


>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)


>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்


>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்


>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.


சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)


>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.


இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.


CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation


முதலில்-Airway


சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.


நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)


இரண்டாவதாக-Breathing


சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது


விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.



மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு
http://www.resus.org.au/
http://www.resus.org.uk/


Thanks: உயிர் காக்கும் CPR


with more kinds,
M. Zakir Hussain
My Blog: http://read-quran.blogspot.com

IslamicGoogle

IslamicGoogle: a search engine for information about Islam, Muslims
Submitted by admin4 on 10 February 2009 - 8:59pm.

Indian Muslim

By TwoCircles.net staff reporter,

New Delhi: A new search engine exclusive for information about Islam and Muslims has been launched. Powered by Google the IslamicGoogle search engine will use "safe search" technology and produces results from all over the internet with more preference to famous Islamic websites.

"Islamic search engine powered by Google striving to provide an easy to use resource to anyone wanting to learn more about Islam and provide a good way for Muslims to surf the web safely," says the search engine.

"IslamicGoogle is powered by Google using "safe search" technology, it produces results from all over the internet with more weighting to given to famous Islamic websites and eliminates the vast majority of unsavoury content, such as pornography, it apply strict filtering for both explicit text and explicit images." The website, however, is not associated with the search giant Google.com

"The site is not associated or affiliated with Google.com, we work closely with Google to help ensure that the results are not objectionable in nature, however, some of the results and adverts that are displayed may not be in line with Islam and we do not endorse any of the results or adverts displayed on Islamic Google."

http://www.islamicgoogle.com/

Tuesday, February 10, 2009

இஸ்லாமிய வங்கி இந்தியாவின் வறுமையைப் போக்கும்

இஸ்லாமிய வங்கி இந்தியாவின் வறுமையைப் போக்கும்

- சீத்தாராமன் -

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். சீத்தாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர்.பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அன்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர் தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில் பயின்றவர் கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ள இவர் தகவல் தொழில் நுட்பத் துறை யிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய கிழக்கு வங்கித் துறையின் 2007ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது 2006ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் சீத்தாராமன் சிறந்த பேச்சாளரும்கூட பொருளியல் பிரச்சினை குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். இந்தத் தஞ்சாவூர் பிராமணர் இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது என அழுத்த மாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த போது அவர் அளித்த நேர்காணல்

*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?

வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம் ஈட்டப்படுகின்றது இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.

*இஸ்லாமிய வங்கி வட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது ?
இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Sharing and Caring ) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம் மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்கு வதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் ( Equity ) நிதியுதவி அளிக்கிறோம் இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.

*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள் ?
ஷுகுக் எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை ( Special Purpose Vehicle ) ஏற்படுத்த உள்ளோம் பொறுப்பு உணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளன? மொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன? இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?
இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.

*இது உலகமயமாக்கல் காலம் இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்ற சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்து பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?
இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம்காரணம் சொத்து வங்கிப்பரிவர்த்தனைக்குப் ( asset – banked transactions ) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் ( asset – based transactions ) ஈடுபடுகின்றனர் ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன உற்பத்திப் பொருள்களும் ( Products )சொத்தை அடிப்படையாகக் கொண்டவை இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?
இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும் நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.

சந்திப்பு : ஏ.ஆர்

நன்றி : சமரசம், பிப்ரவரி 1 -15, 2009

www.samarasam.net
will be appeared soon

முதுவைவிஷன்.காமில் கிரிக்கெட் செய்திகள்

முதுவைவிஷன்.காமில் கிரிக்கெட் செய்திகள்

www.muduvaivision.com

Monday, February 9, 2009

All India Radio Latest News in Tamil

All India Radio News in Tamil on Air (by Internet) thrice in a day.

Click the below link to visit...

http://www.newsonair.com/nsd_schedule.asp

யுஏஇதமிழ்ச்சங்கம்.காம்

Ramesh Viswanathan
to"Navanetha Krishnan Adhikaalai. com" ,
dateWed, Feb 18, 2009 at 1:26 PM

Dear Hidayath/Naveen,

Wow, Cool, Excellent. Thank u very much for ur excellent support.


நன்றியுடன் என்றும் உங்க‌ளுக்காக‌ உங்க‌ள் ரமேஷ் (050-5865375)

ஊடகத்துறையில் முஸ்லிம்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊடகத்துறையில் அபூர்வமாகக் காணப்படும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு சகோதரர் நிருபர் பரக்கத் அலி.

http://electionbarakath.blogspot.com/2009/02/29.html

"ஒரு நிருபரின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் இவர் "செய்திகள்", "தேர்தல் 2009", "கதைகள்" என மூன்று வெவ்வேறு வலைப்பூக்கள் வைத்துள்ளார்.

அவரின் பணி சிறக்கட்டும்.

நீதியும் உண்மையும் வியாபாரத்திற்காக விலைபேசப்படும் இக்காலத்தில் செய்திகளைச் செய்திகளாகவும் உண்மைகளை மறைக்காமலும் வெளியே கொண்டுவர இறைவனுக்கு மட்டுமே பயந்த முஸ்லிம் சமுதாயத்தால் மட்டுமே இயலும்.

மென்மேலும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஊடகத்துறைக்குள் நீரோட்டம் அதிகரிக்கட்டும்.

இதுபோன்று ஊடகத்துறையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களைக் குறித்த விவரங்களைச் சகோதரர்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அறிய ஆவலுடன் உள்ளேன்.

அன்புடன்
அபூஃபாத்திமா.
jaburam@gmail.com

விண்டோஸ் எக்ஸ்பி Tips

விண்டோஸ் எக்ஸ்பி Tips

விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.

1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.

2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் ரன் விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!

3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம்.

Sunday, February 8, 2009

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்

பலஸ்தீன் செய்திகள் இப்போது தமிழில்

பலஸ்தீன் செய்திகள் இப்போது தமிழில்

பலஸ்தீன் பற்றிய நாளாந்தச் செய்திகளைத் தமிழில் வாசிக்க விரும்பும் சகோதர சகோதரிகளின் நலன்கருதி தற்போது புதியதொரு இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது:

http://www.freepalastine.com

Dear Brothers & sisters,

Assalaamu Alaikkum.

Its really glad to inform you all, now there is a new website in Tamil on Palestine issues.

http://www.freepalastine.com

Please pass this message among your friends who really interests to read on Palestine issues.

Jazakallah Khairan wa Baarakallahu feequm.


Umm Rashid.

நட்பு

shaik ibrahim
dateSun, Feb 8, 2009 at 9:52 AM
subjectAssalaamu alaikum


நட்பு

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு
என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம்
நட்பு;

என் உடலில் ஒரு உலகம் உண்டு
ஆனால் அதை இன்றுவரை நான்
பார்த்தது இல்லை;
அது ஒரு கனம் துடிக்க
மறந்து விட்டால் நான் ஒரு பிணம்
அதுபோல நட்பு மனதிலிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது;

தினம் நான் செல்லும் வழியில்
ஒரு ரோஜா புதிதாய்
பூத்திருப்பதை கண்டேன்
அதனழகு என்னை கவர்ந்திழுத்தது
பிரகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன்
அரை மணி கழித்து பார்த்தால்
செடியில் அது இல்லை;
ஏமாற்ற மிகுதியில் சோகத்துடன்
பள்ளிக்கூடம் சென்று பார்த்தேன்
என் நண்பன் கையில் அந்த ரோஜா
எனக்காக!

அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;

உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;

நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்

- ஷேக் இப்ராஹிம்

Google தேடல் டிப்ஸ்

Google தேடல் டிப்ஸ்

மேற்கோள் குறிகள் இரண்டாக அமையட்டும்: எப்போதும் நீங்கள் தேடும் சொற்கள் அல்லது சொல் தொகுதி கொண்ட இணைய தளம் வேண்டுமென்றால் அவற்றை இரு மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கவும். எடுத்துக் காட்டாக women who love rosesஎன்ற சொல் தொகுதி கொண்ட தளம் தேவைப்படுகையில் மேற்கோள் குறி இல்லாமல் தேடிய போது 3,46,00,000 என்ற எண்ணிக்கையில் தளங்கள் இருப்பதாகக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவை நாம் தேடும் தளங்களுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கலாம். இதனையே ""women who love roses'' என டைப் செய்து தேடிய போது தளங்கள் 45,500 என்று காட்டப்பட்டது. மேற்கோள் குறிகளுக்குள் அமைக்கப்படுகையில் மிகச் சரியாக நாம் எந்த வரிசையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அந்த வரிசையில் சொல் தொகுதிகள் இருந்தால் மட்டுமே தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரப்படுகின்றன.

1. சிறிய நட்சத்திரக் குறியீடு (*) : ஆங்கிலத்தில் wildcard என்று கூறப்படுவதனைக் குறிக்க சிறிய நட்சத்திரக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறோம். இதனை உங்கள் தேடுதல் பணியிலும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சொல்லினை அடுத்து எந்த சொல் இருந்தாலும் பரவாயில்லை என்று அமைக்க இந்த குறியீட்டினை அமைத்துத் தேடலாம். குறிப்பிட்ட சொல் தொகுதியில் ஒரே ஒரு சொல்லை மறந்துவிட்டு அதனைத் தேட முயற்சிக்கையில் இந்த வகை குறியீட்டுடனான தேடல் கை கொடுக்கிறது. எடுத்துக் காட்டாக காவிரியின் குறுக்கே உள்ள பாலம் என்பதனைக் குறிக்க "the bridge on the river cauvery'' என அமைக்கலாம். ஆனால் காவேரி என்பது மறந்துவிட்டால் the bridge on the river XXஎன அமைக்க முடியாது. அது தவறான தகவலையே தரும். இங்கே the bridge on the river * என அமைத்தால் காவேரி குறுக்கே உள்ள பாலங்கள் குறித்த தகவல் கிடைக்கும். இரண்டு சொற்கள் இருக்கலாம் என தேட விரும்பினால் "the bridge on the river ** ”என அமைக்கவும்.

2.குறிப்பிட்ட தளத்தில் மட்டும்: இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நீங்கள் தேடும் தகவல் உள்ளது. ஆனால் அது எங்கே தரப்பட்டுள்ளது என்று நினைவில் இல்லை. அந்த தளத்தில் மட்டும் தேட விரும்பினால் "site:" என்று கொடுத்துத் தேடலாம். எடுத்துக் காட்டாக தமிழ் நாடு அரசின் இணைய தளமான www.tn.nic.in என்ற இணைய தளத்தில் மட்டும் ஞிச்ததிஞுணூதூ என்ற சொல் உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினால் "cauvery" site:www.tn.nic.in என டைப் செய்து கொடுத்து சரியான முடிவுகளைப் பெறலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் தேடும் தகவல் இருப்பது நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே இந்த தளம் இல்லாமல் மற்ற தளங்களில் தேடித் தகவல்களை அறிய வேண்டும் என்றால் ஒரு கழித்தல் () அடையாளத்தை இங்கு ண்டிtஞு: ஆப்பரேட்டருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக காவேரி குறித்து தமிழ்நாடு அரசு தளம் தவிர மற்ற தளங்களில் தேட வேண்டும் என்றால் "cauvery" site:www.tn.nic.in எனக் கொடுத்துத் தேடலாம்.

3. அதே பொருள் தரும் சொற்களைத் தேட: ஒரு சொல்லின் பொருள் சார்ந்து இருக்கும் மற்ற சொற்களை அறிந்து கொள்ள கூகுள் தேடலை வரையறை செய்திடலாம். இதற்கு ஆங்கிலத்தில் tilde ("~") என அழைக்கப்படும் அடையாளக் குறியைப் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் தேடும் சொல்லின் முன்னால் எந்த இடைவெளியும் இன்றி அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக எம்.எஸ்.வேர்ட் தொகுப்பு குறித்து விளக்கமான குறிப்புகள் தரும் தளங்களைக் காண விரும்புகிறீர்கள். இந்த குறிப்புகள் என எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவற்றைப் பெறும் வழியை இந்த ஆப்பரேட்டர் தருகிறது. இங்கு "msword" ~tutorial என அமைத்தால் எம்.எஸ் வேர்ட் குறித்த basics, hints, guide, tips, tricks ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

4.விளக்கங்கள் பெற: ஒரு சொல்லின் விளக்கங்கள் பெற கூகுள் "define" என்ற ஆப்பரேட்டரைக் கையாள்கிறது. எந்த சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதன் முன்னால் இதனை இணைத்துச் செயல்படுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக nano technology என்ற சொல் குறித்து விளக்கம் வேண்டும் என்றால் define nano technology என்று கொடுத்தால் போதும். விளக்கத்தோடு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து தளங்களும் கிடைக்க what is nano technology எனக் கொடுத்துப் பெறலாம்.

from
mansoorkmc@yahoo.com

இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)

இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)
Posted by: முஃப்தி on Sunday, February 8th, 2009

தமிழ்மணம் பரிந்துரை : 0/0

http://www.nwebsupport.com/?p=118



Pathivu Toolbar ©2009thamizmanam.com


இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே.

உதா: image shadow

மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.

தனிப்பட்ட html பக்கங்களை பயன்படுத்துகின்றவர்கள் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட இம்முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வேர்ட்பிரஸ்:

நீங்கள் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் Theme-ல் “img” என்ற மூன்றெழுத்து folder-ஐ உருவாக்கி அதில் shadow.gif என்ற கோப்பினை பதிவேற்றுங்கள்.

உங்களின் theme sytlesheet மாதிரியை முழுவதுமாக backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழ்கண்ட வரிகளை sytlesheet-ல் சேர்க்கவேண்டும்.

img
{
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}

a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}

படங்களுக்காக இதனை ஒத்த வேறு ஏதேனும் css code (உதா: img { } ) உங்கள் stylesheet-ல் எழுதப்பட்டிருந்தால் அதனை மட்டும் கண்டுப்பிடித்து நீக்கி சோதித்துப் பார்க்கவும்.

பிளாக்கர்:

பிளாக்கர் டெம்ளேட்டுகளில் அதிகமானவை ஏதாவதொரு image decor code-களை உள்ளடக்கியிருக்கம். அத்தகைய Code-களை நீக்காவிட்டால் இதனை சோதித்துப்பார்க்க இயலாது. எனவே ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் பிளாக்கரில் இதனை சோதித்துப் பார்க்கவும்.

Layout பகுதிக் சென்று Edit HTML கிளிக் செய்து Download Full Template என்பதை சொடுக்கி Backup ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு, கீழ்கண்ட வரிகளை Template-ன் Head பகுதியில் stylesheet code-களை குறிக்கக்கூடிய பகுதியில் சேர்க்க வேண்டும்.

img
{
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}

a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
}

குறிப்பு: பொதுவாக stylesheet-ல் ஏற்பட்ட மாற்றங்கள், தளத்தில் உடனடியாக தெரிவிதில்லை. எனவே refresh செய்து பார்க்கவும்.

Saturday, February 7, 2009

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற சவூதி தமிழ்ச்சங்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.

வியாழனன்று (05.02.2009) இரவு 08:30 மணிக்கு ஜித்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மேதகு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ்ச்சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை திரு. ராபியா தொகுத்து வழங்கினார். திரு. ஜைனுலாபிதீன் வரவேற்புரை வழங்கினார். திரு. லியாகத் அலி, திரு. ஒ. பி. ஆர். குட்டி, திரு. அக்பர் பாட்சா, திரு. அப்துல் பத்தாஹ், டாக்டர். ரபிக், சவுதிக்கான இலங்கை இணைத் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாபிர், மற்றும் சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் "அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதற்கு பெரிதும் காரணம் - கல்வியே! கடமையே!! கண்ணியமே!!!" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைப்பெற்றது.

நடுவராக திரு. குணசேகரன் பங்கேற்க, கல்வியே என்ற அணியில் டாக்டர். ஜெயஸ்ரீ மற்றும் திரு. ராமசந்திரன்; கடமையே என்ற அணியில் திரு. பீர் முஹம்மது மற்றும் திருமதி. ராபத்; கண்ணியமே என்ற அணியில் திருமதி. மைதிலி மற்றும் திரு செய்யது ராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.

பட்டி மன்ற நடுவர் தனது தீர்ப்பில், இந்த மூன்று தலைப்புக்கும் தீர்ப்புக் கூற நம் தூதர் ஐயா தான் பொருத்தமானவர் என்று அவர்களின் முடிவிக்கே விட்டுவிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் திரு. அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்குப்பின், இரவு விருந்துக்கு விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த விழாவில் ஜெத்தா தமிழ் சங்கம், தஃபாரஜ்-ஜெத்தா மற்றும் கிரிட் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன .

செய்தி:
மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் ஜெத்தா, சவூதி அரேபியா

________________________________________________________________________
இந்த நிகழ்ச்சியின் பொது, சவூதி தமிழ்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் அவர்கள் திரு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கவிதை:
ஆதவன் அச்சுறுத்தலில் அன்றாடம்
அல்லுலுற்று அழும் பாலைவனம்
அன்று பலப்பலப்போடு பளிச்சிட்டது!
காலை முதல் மாலை வரை
அலட்டிய ஆட்சி அழிந்தது
அடிமைப்பட்ட அவலமும் ஒழிந்ததென
பூரித்தது பாலைவனம்!
ஏனெனில் ...
அதன் படுகையில்
பெருமை மிகு புதுவையின்
புகழ் மிக்க ஐயா அவர்கள் !!
கொடியவன் கதிரவன்
கலக்கமுற்று கதறினான்
வையகத்து விடிவெள்ளி
வந்துவிட்டதே இங்குமென்று !
உங்கள் வருகை
வறண்ட இவ்வனத்துக்கு
மட்டுமல்ல
இருண்டிருந்த இந்திய
இதயங்களுக்கும் இதமளித்ததையா ...!
தாய் திருதேசத்தின்
தலை மகனாய்
இந்திய மக்களுக்கு
அரணாய்
எங்களனைவருக்கும்
வரமாய்
இந்நாட்டையும், எம்நாட்டையும்
இணைக்கும் பாலமாய்
உறவை வளர்க்கும்
உண்ணத தூதராய் வந்த
தங்களின் வருகையால்
தமிழனின் தனித்துவம்
தலைத்தூக்கியது!
தன்மானம் தழைத்தது!!
பண்பால், பாசத்தால்
பரிவால், பதவியால்
உள்ளத்தால், உரையாடலால்
உயர்ந்து விளங்கும்
ஐயா அவர்களே!
சாதனைப் படைப்பதும்
அதைச் செவ்வனே செய்து
சரித்திரம் பதிப்பதும்
தங்களின் சிறப்பாயிற்றே !
புகழும், புதுமையும்
விரல் வைத்து
வியக்கும் வண்ணம்
மேதகு தூதராய்
இரு நாட்டவரும்
பெருமைப்பட, பெருமிதமுற
தாங்களாற்றிய அரும்பணிகள்
பற்பல !
இந்திய மண்ணின் உயர்வை
தாய் மொழியின் வல்லமையை
வானுற வளர்த்திட்ட
தாங்கள் மென்மேலும்
நலத்தோடும், வளத்தோடும்
புகழோடும், வாழ்ந்து
வெற்றிகள் படைக்க
வேண்டுகிறேன் வல்லவனை!
தமிழ் உறவுகளே!
வியக்க வேண்டாம்...!!
சஞ்சலமில்லா வாழ்வில்
சுகத்தை தந்து
அவ்வப்போது
சோகத்தையும் சுமந்து
அச்சோகத்திலும் ஒரு
சுகத்தையும் ஈந்து
சிறுகதைகள் சிந்திய
என் பேனா முனையில்
இப்போது
கவிதைகளையும் சிதரச்செய்த
நீ சிறப்புற வேண்டும் !
வல்லவனே!
வையகத்தில் வாழ்ந்து
உன்னை வாழ்த்தி
என்றென்றும் வழிப்பட
வாய்ப்பளிப்பாயாக - இறைவனே
இறைஞ்சுகிறேன் - இருகரமேந்தி
உன்னை!!

Shamrock Journeys, New Delhi

Greetings from all of us at Shamrock Journeys….

Benchmarking: Destination Attractiveness and Hospitality Business Performance
We are a professionally managed company which started in the year 1999 and backed by a diligent and pro-active team of professionals, holding sound experience, helping us to confidently meet every challenge that comes our way and leaving no room for any customer grievances.
We have achieved the reputation of the leading tour operators in India by rendering the best travel related services for various kinds of groups and individuals.
We cover all the Indian destinations and provide services for our precious clients according to their desire, demand, special need and interest. Consumers also benefit through clearer indication of the service likely to be offered, so that their service expectations are more likely to correspond with our performances, and their satisfaction with the destination to be increased by observing our hospitality.
Special care and remarkable homely hospitality make our clients always with us.
Visit us - www.shamrockjourneys.com
Looking forward to give you the best services.
Regards,
SHAHID ALI KHAN
Shamrock Journeys(P)Ltd.
Accredited & Associated with IATO, ITOPC, ADTOI
Recognized by Ministry of Tourism - Govt. of India

Regd. Address:
Shamrock Journeys (P) Ltd.
108, R.B.House
Hzt.Nizamuddin West
New Delhi – 110 013 (INDIA)
Tel: +91-11- 41827651 / 41827817 / 24355735 Fax: +91-11- 41827919, Cell: + 91-9811091230

தமிழ் முஸ்லிம் நூலகம்

அன்புச் சகோதரர் இராஜகிரி கஸ்ஸாலி அவர்களின் நூலகங்கள் குறித்த கட்டுரை நம் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளது. குறிப்பாக மின்னூலாக்கம் குறித்து கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமானது.

இந்த வகையில் எமது புதிய முயற்சியாக இணையத்தில் கிடைக்கும் இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வாசிக்க வசதியாக தமி்ழ் முஸ்லிம் நூலகம் என்னும் பெயரில் தனியொரு வலைப்பதிவு தொடங்கியுள்ளோம்.

இணையத்தில் காணும் இஸ்லாமிய நூல்கள் பற்றிய விபரங்களை சகோதார்கள் எமக்கு தெரிவித்தால் நன்றியுடன் எமது பதிவில் வெளியிடுகிறோம். நீங்கள் எழுதிய இஸ்லாமிய நூல்களை இணையத்தில் வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
நூலகத்தை பார்வையிட இங்கே கிளிக்கவும்
தமிழ் முஸ்லிம் நூலகம்

http://tamilmuslimlibrary.blogspot.com/

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்
masdooka@hotmail.com





Date: Mon, 2 Feb 2009 00:47:49 -0800
From: gazzalie@yahoo.com
Subject: லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
To: imantimes@googlegroups.com





அறிவு தளத்திலே களமிறங்கி இருக்கும் லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....

நாம் களமிறங்க வேண்டியவை நிறைய இருகிறது நண்பர்களே. ஒன்றை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் இஸ்லாமிய சமுகத்தில் வெளியான புத்தகங்கள் ( திருகுரான் உள்பட வெறும் பத்து நூல்கள் மட்டுமே மின்னூலாக்கம் செய்ய பட்டு இருக்கிறது) பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை மின் புத்தகங்களாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மை போன்ற இளைஞர்களுக்கு உள்ளது. எனவே தாங்கள் அத்தைகய விசயங்களிலும் மிக தீவிர கவனம் செலுத்த வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

நாம் செய்ய தவறினால் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது அன்பு நண்பர்களே!!!

நீங்கள் அனைவரும் களமிறங்குங்கள்!

உலகிற்கு உன்னதமான வரலாற்றை சொல்லி தந்த சமுதாயம் நாம்!

நேற்று வரை உறங்கி விட்டோம்!
இனி தீயாக புறப்படுவோம்!!

வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி

கோடிகளைகொட்டி மாநாடுகள்; கொட்டிக்கொடுப்பவர்கள் சிந்தி...

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கென்று ஒவ்வொரு கட்சி உதயம் என்று சொல்லுமளவிற்கு தமிழகத்தில் முஸ்லிம்கட்சிகள்/இயக்கங்கள்/அமைப்புகள் பெருத்துவிட்டன. ஒவ்வொரு தனி முஸ்லிமுக்கும் ஒரு அமைப்பு என்ற நிலைவரும்வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது.

இந்த அமைப்புகள்/இயக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறோம் என்றபெயரிலோ, மார்க்கத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோதான் இதுவரை மாநில அளவில் மாநாடுகளை நடத்திவந்தன. இப்போது பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு கட்சி துவங்குவதற்கு கோடிகள் செலவில் மாநில மாநாடு நடக்கிறது. இப்படி புதிய புதிய அமைப்புகளை, இயக்கங்களை, கட்சிகளை உருவாக்கி நடத்துவதற்கும், அவ்வப்போது லட்சங்கள்/கோடிகள் செலவில் மாநாடுகள் நடத்துவதற்கும் பொருளாதார உதவி செய்வது யார்?

இந்த அமைப்புகள்/ இயக்கங்கள் 'நாங்கள் எந்த வெளிநாட்டு அரசிடமோ,வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் பெறமாட்டோம்' என்று பைலாவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படியாயின் உதவுவது யார்? தனது வறுமையை போக்க, இறைவன் வழங்கிய இளமையை தொலைத்து, மனைவிமக்களை பிரிந்து அனாதையாக அரபுநாடுகளில் அற்ப சம்பளத்தில் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்கள்தான். நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த இந்த தொகை சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் தருகிறார்கள்.

ஆனால், வியர்வை சிந்தி உழைத்தபனம் வீணாக நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், மாநாடுகளுக்கும் விரயமாவதையும், லட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கத்தையும் தாண்டி, சக சகோதரர்களைப்பற்றிய பித்னாக்கள்தான் பெருமளவில் அரங்கேறுகிறது என்பதையும் உதவும் உள்ளங்கள் கண்டுகொள்வதில்லை. நாம் நல்வழியில் செலவுசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய ஒவ்வொரு நயாப்பைசாவும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது கடமையாகும்.

கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் தொகையை வைத்து இந்த சமுதாயத்திற்கு எத்தனையோ பயனுள்ள விசயங்களை செய்யலாம். சென்னையில் பிளாட்பாரத்தில் தொழில்செய்யும் ஒரு முஸ்லிம் ஆயிரம் ரூபாய் முதலீடு இல்லாமல் தண்டலுக்கு வாங்கி வியாபாரம் செய்து கிடைக்கும் அற்ப லாபத்தில் வட்டியும் கட்டி, தன்குடும்பத்தோடு அல்லாடுகிறானே அவனுக்கு முதலீட்டுக்கு பனம்தருவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்டவுட்டுகளும் பேனர்களும் வைப்பது இறை உவப்பை பெற்றுத்தருமா?
மருத்துவம் செய்ய வசதியின்றி, எத்தனையோ ஏழைகள் இந்த இயக்கங்களின் படியேறும்போது பலநேரங்களில் விரட்டப்பட்டு, சிலநேரங்களில் உதவிகள் செய்யப்படுகிறதே! இந்த மாநாட்டு தொகையைவைத்து எத்தனையோ நோயாளிகளின் நோயை போக்கலாமே! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடியுமா? ஏடுகளின் விளம்பரத்தில் இறைவனைக்கானமுடியுமா?
நன்றாக படிக்கக்கூடிய நம்சமுதாயத்து பிள்ளைகள் பெற்றோரால் படிக்க வைக்கமுடியாமல், கல்லூரியில் கேட்கும் கட்டணத்தை செலுத்தமுடியாமல் கல்வியை தூக்கிப்போட்டுவிட்டு கடைகளில் பணியாற்றும் சமுதாய மாணவமணிகளை இந்த மாநாடு நடத்தும் தொகையில் எத்துனையோபேரை பட்டதாரிகளாக உருவாக்கலாமே? கல்விக்கு நம்பனம் செலவாவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்சிகளுக்கு செய்யும் விளம்பரங்கள் பெற்றுத்தருமா?
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் உதவிதேடும் அமைப்பினர், அவர்கள் வெளிநாடுசெல்வதற்காக வட்டியில்லா கடன்கேட்டால், நாங்கள் வெளிநாடு செல்பவர்களுக்கு கடன்தரமாட்டோம் என்று தத்துவம் பேச, வட்டி மார்க்கத்தில் பெரும்பாவம் என்று தெரிந்திருந்தும் வட்டிக்கு வாங்கி வெளிநாட்டு வேலைக்கு வந்து, சம்பாதிப்பதில் பெரும்பங்கை வட்டிக்கு தீனியாக தந்துகொண்டு இருக்கிறானே அவனைப்போன்றோருக்கு உதவுவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? அல்லது 'கண்காட்சி' நடத்துவது இறைஉவப்பை பெற்றுத்தருமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு நாம் சொல்லும்போது 'நாங்கள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவை செய்வதில்லையா? என்று இயக்க ஆர்வலர்கள் கேட்கலாம். நீங்கள், ஒருஆண்டுக்கு மருத்துவம்-கல்வி உள்ளிட்ட சமுதாயப்பனிகளுக்கு செய்யும் செலவையும், அமைப்பின்/கட்சியின் பலத்தை அடுத்தவர்களிடம் காட்டுவதற்காக செய்யும் செலவையும் ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம்.

எனவே, உதவி செய்யும் உள்ளங்களே! உங்கள் உதவிகள் எதற்கு பயன்படுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். இயக்கத்தலைவர்களே! நபி[ஸல்] அவர்கள் மாநாடு போட்டு மார்கத்தை வளர்க்கவில்லை; மாநாடு போட்டு மன்னராகவில்லை. இதை கவனத்தில் கொண்டு உங்களை நம்பி தரும் தொகைகளை முழுக்க முழுக்க மார்க்கப்பிரச்சாரத்திற்கும், முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துங்கள். மாறாக பலம்காட்டும் வித்தைக்கு செலவு செய்தால், படைத்தோனின் விசாரணைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

--
2/06/2009 10:14:00 PM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் நிழல்களும் நிஜங்களும் ஆல் இடுகையிடப்பட்டது

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்

எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.

முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.

நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.

1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.

'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.

ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.

இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.

நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்

சலீம் கான்

இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.

ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.

சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.

2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.

உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.

ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''

மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.

சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.

பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.

புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''

அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!

வேளச்சேரி கே.எஸ். மருத்துவமனை

முதுவைவிஷன்.காம்

முதுவைவிஷன்.காம்

Sudarvamsam vamsam
dateMon, Feb 9, 2009 at 4:23 PM
subjectbest wishes

Congratulations, My best wishes to Muduvai Vision.

Warm regards
Raghuraj

Friday, February 6, 2009

Green Channel Business Center & Guest House

From: Jaffer Rafiq [mailto:Rafiq.Jaffer@tetrapak.com]
Sent: Tuesday, February 03, 2009 7:48 PM
To: gcinfotech@gmail.com
Subject: Green Channel Business Center & Guest House

Dear Brothers,
Assalamu Alaikum!
I have sarted a business center in coimbatore & Chennai offering fully furnished office space and facilities .
Please find enclosed details of the services offered. You can also visit www.gcinfotech.in for more information.

In another one month, GREEN CHANNEL GUEST HOUSE will be offering fully furnished a/c apartments near chennai airport : MKN road , Alandur on daily rental basis.
Location: 5 minutes drive to airport, St thomas mount Railway stn , Kattipara etc
Mosque: Located just after 2 buildings on MKN road.

Following facilities will be offered:Airport pick up & Drop, 24hrs internet connectivity, car hire, air/train / bus ticket booking /reconfirmation and any other services required by NRIs.

A new website www.nriclub.net will slso be launched on March 15th where NRIs can post classified ads free of cost . The site will provide free news letters and consultancy on various investment options available for NRIs. Your input is highly appreciated to shape the site to include various topics which could be of interest to NRIs.

If you need any of the above services or interested in promoting this among your circle , please feel free to contact me.

Best regards
BEST REGARDS,
A.Rafiq Mohammed Jaffer
Systems Sales Manager – Processing Division
Tetra Pak Arabia

Tetra Pak Manufacturing Limited
P.O.Box:9454,Lot 88-103, JCCI Warehouse city,
Jeddah-21413 , SAUDI ARABIA
Telephone: +966 2 6351515,Direct: +966 2 2688236 Mobile: +966504653276
Fax: +96626370188
Rafiq.jaffer@tetrapak.com
www.tetrapak.com

அதிகாலை.காம்

Instant dynamic Tamil News Portal


அதிகாலை.காம்

http://www.adhikaalai.com

DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.

DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.

We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.

A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.


We used to provide a decent lunch to honour our guests.

Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.

In the evening there will be an seminar on for Muslims.

This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.

Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com

DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.

DARUL ISLAM FOUNDATION TRUST ARRANGES GETTOGETHER.

We are arranging gettogethers with brothers of other faiths,for the last 18 years,after Eid ul addha.

A good number of brothers from other faiths used to attend. Their participation gradually rose to thousand over the years. They are treated as our guests.


We used to provide a decent lunch to honour our guests.

Before the lunch there will be a brief discourse on Islam followed by Q&A session.This facilitates interaction.

In the evening there will be an seminar on for Muslims.

This year 2009 it will be on
3rd march 2009
at
Faiz mahal. Egmore.
Chennai.
between 10 am and 2 pm.
EVENING SESSION
will be between 6.45 pm - 9.15pm.
All are requested to participate.

Members Managing Trustee-Darul Islam Foundation Trust
darultrust@yahoo.com

வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்

வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்


ராமநாதபுரம்,பிப்.6-

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சார் பில் வெளிநாடு செல்பவர் களுக்கு இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் கிர் லோஷ்குமார் தெரிவித் தார்.

தொழிற் பயிற்சி

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல உள்ள தொழிற்பயிற்சி முடித்தவர்கள் மற்றும் ஓரளவு தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் கிண்டி, வடசென்னை, கோயம்புத் தூர், கடலூர், ஈரோடு, செங் கல்பட்டு, ஓசூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அம்பத்தூர், தூத்துக் குடி விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்பட 28 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகி றது.

இதில் பிட்டர், வெல்டர், தச்சர், பிளம்பர், டர்னர், மெக் கானிக், லிப்ட் மெக்கானிக், கொத்தனார், கிரேன் ஆப ரேட்டர் உள்பட பல பணி களுக்கு இலவச பயிற்சி அளிக் கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் படித்தவர்களும், தொழிற்சாலை பயிற்சி சான்றி தழ் வைத்து இருப்பவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு பாஸ்போர்ட்டு, முன் அனுபவம் தேவையில்லை. தினமும் 5 மணி நேரம் வீதம் 15 நாட்களுக்கு பயிற்சி நடை பெறும்.

விண்ணப்பம்

மேலும் இதில் அயல்நாட்டு வேலைக்கு செல்வதற்கு பின் பற்ற வேண்டிய உரிய வழி முறைகள், அந்தந்த நாடுகளில் தொழிற் தேவை மற்றும் சட் டங்கள் தொடர்பான பயிற் சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் வசதியினை விண் ணப்பதாரர்களே ஏற்க வேண் டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முதல் கட்டமாக வருகிற 11-ந்தேதி முதல் 25 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதேபோல 2ம் கட்டமாக 2.3.09 முதல் 16.3.09 வரையும், 3ம் கட்டமாக 23.3.09 முதல் 6.4.09 வரையும் பயிற்சிகள் நடைபெறும். எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர் கள் அருகில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் உடனடி யாக விண்ணப்பிக்க வேண் டும். இதன் ஒரு நகலை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

Thursday, February 5, 2009

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

தூயோனைத் தொழ நாடும் போழ்து
தூயதோர் அமல் "ஒளு" என்பது
" பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம்
துவக்கமாய்க் ஓதி
உள்ளங்கைகளால் நீரைக் கோதி;
உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன்
உதடுகளால் "கலிமா"வை விளம்பு:
கைகளை நன்றாக அலம்பு

நாக்கு வழி; அதனால்
அச்சரச் சுத்தமாய்
உச்சரிக்கும் இறைவசனம் -உன்
நாக்கு வழி....!!

பல் விலக்கு; அதனால்
பல நோய்கட்கு விலக்கு
நாசி துவாரத்தில்
தூசிகள் போக்கிட
நீர் செலுத்திக் கொண்டே
வாய்க் கொப்பளி

முகத்தை கழுவு முழுவதுமாய்;
முகமொளிரும் முழுநிலவாய்..
கையால் நீரேந்தி
முழங்கை வரை அந்நீரை ஓட விடு;
புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..!

தலையை நீரால் வாரிவிடு;
தலையில் உட்கார்ந்துள்ள
ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..!
புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு;
புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..!

கரண்டை வரை கால்கள்
இரண்டையும் கழுவி விடு;
விரண்டோடிடுவான்
விரட்டப்பட்ட ஷைத்தான்..!!!

இறைவன் கட்டளைப்படியே "ஒளு"
நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே..

தொழுகை:

தொழுகையை நாடு;
தூய்மையான இடம் தேடு.....

"குறிப்பிட்ட நேரத்தின்
குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை
குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி
அல்லாஹ்வைத் தொழுவதாய்..."
"நிய்யத்" என்னும் எண்ணத்தை
நிர்ணயித்துக் கொண்டு,
"அல்லாஹு அக்பர்" என்றே
கைகளை உயர்த்தி விடு

"இறைவனே பெரியவன்" என்று படி;
சரணடைவதில் இதுவே முதற்படி

நெஞ்சில் கைவைத்து;
அஞ்சி தலை தாழ்த்தி;
அஞ்சலை அனுப்பு
"அல்-fபாத்திஹா" வரிகளில்
"ஆமீன்" முத்திரைப் பதித்து
கொஞ்சம் ஒதிடு இறை வசனம்;
கெஞ்சும் குரலோடு உன் வதனம்..

"அல்லாஹு அக்பர்" என்றே
பணிந்து போகும் எண்ணத்தில்
குனிந்து முட்டுகளில் கைகள் படுக
"தூயோனவனே புகழுக்குரியோன்"
வாயால் வாழ்த்து பாடுக

"அவனைப் புகழ்வதை கேட்பவன்
அவனே" என்று சொல்லிய வண்ணம்
தலை நிமிர்ந்து
நிலைக்கு வந்து விடு

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி

முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய
நெற்றியினைத் தரை மீது வைத்து
வெற்றி என்னும் புதையல்
பெற்றிடும் பேறு பெறுக;
அரும்பின் தேனைச் சுவைத்திட
விரும்பி மலருக்குள்
சுருண்டு கிடக்கும்
"சுரும்பு" என்னும் வண்டினைப் போல்..
இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்;
இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!!

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
சிறியதோர் இருப்பிலமர்ந்து
பிரியமான அவனிடம்
பிரியத்துடன் கேள்:
"மன்னிபு;இரக்கம்;
மண்ணில் வாழும் வரை இரணம்"

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
மீண்டுமொரு முறை
"சுஜூது"வின் சுகமேப்
பெற்றிடவே ஆவலுடன்
நெற்றியினைத் தரையில் வைத்து
"தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து
முதல் நிலையை முடித்த நிலையில்..

இரண்டாம் நிலைகு வரும் பொழுதும்
"அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு
அடுத்த நிலையில் நில்லு.


இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்)
இறைவனோடு தொடர்பு தொழுகை என்று
துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ
அதன் எண்ணிகை முடியும்
இறுதி நிலையாம்
"தஷ்ஹுத்" இருப்பில் அமருக
இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும்

நிறைவுடனே "மிராஜ்"ல்
நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க..
மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும்
இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும்
இனிய ஸலாம் படித்து விடு;
இனிதாய் தொழுகை முடித்து விடு.

ஓர் அதிசயச்செய்தி:

நீர் பட்டால் துருவாகும்
நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........
"ஒளு"ச் செய்யும் நீர்
உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!!

இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி:

யோகாசனம் போதிக்கும்
ஆசான்கள் யாவரும்
படம் போட்டு
பாடம் நடத்தும் போழ்து
சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி:
"முஸ்லிம்கள் தொழுகையின்
இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற
அச்செய்தியினைப் படித்தேன்:
"அல்லாஹ் நமக்கு அருளிய
முழுமையான ஒர் அமல்
தொழுகையின் நிலைகளே.. ஆஹா
பரிபூரணமான யோகா..-என்றே
உரியோனிடம் நன்றி கூறி
மகிழ்ந்தேன்; "தீன்" என்னும்
தேனைச் சுவைத்தேன்...

அன்பான் குழந்தாய்..!
அன்போடு அழைத்தேன்
-"தீன்" என்னும்
தேனைச் சுவைத்திடு
தெரியாமல் உள்ளோரை அழைத்திடு

-என்றும் அன்பு படர்ந்த
இதயமுடன்

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

00971-50-8351499
shaickkalam@yahoo.com

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி






துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஹபூப் அலி தலைமை வகித்தார். யுஏஇ தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலர் ஏ. முஹம்மது சிராஜுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மணக்கும் மணவாழ்வு நூல் தொகுப்பாசிரியர் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் நூலை வெளியிட நூலின் பிரதியினை யுஏஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.

மணக்கும் மணவாழ்வு எனும் இந்நூலில் கணவன் மனைவி உறவுகள், பெற்றொர் பிள்ளை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலினை படித்து உணர்ந்து அதன்படி நடக்க முற்பட்டால் திருமண வாழ்வு சிறப்புற அமையும் என்றார் ஆடிட்டர் ஃபெரோஸ்கான்.

ஆடிட்டர் ஃபெரோஸ்கானுக்கு யுஎஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் அசன், முஹம்மது, இளங்கோவன், அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்


ராமநாதபுரம், பிப். 4: சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இரு இஸ்லாமியர்கள் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியிருப்பதாக திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பும் போது குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் வந்திறங்கிய துறைமுக கட்டடம் தற்போது நினைவு மண்டபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத்.சுவாமி சதானந்த மகராஜ் பேசியதாவது:

இந்நினைவு மண்டபத்தை அமைக்க மத்திய அரசு ரூ.47 லட்சம் வழங்கியிருக்கிறது. மேலும் பலரின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி வரை நன்கொடை பெற்று அழகு நிறைந்த நினைவு மண்டபமாக மாற்றி இருக்கிறோம்.

இங்கு தற்போதுள்ள சுவாமி விவேகானந்தரின் கற்சிலை அகற்றப்பட்டு வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும். இங்கு சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளது மிகுந்த பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.

தானமாக இடம் வழங்கிய மண்டபத்தைச் சேர்ந்த எம்.ஷாஜகான் மரைக்காயர், கே.ஏ.ரகுமான் மரைக்காயர் ஆகியோருக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.

பின்னர் கே.எம்.ரகுமான் மரைக்காயர் பேசியதாவது:

அனைத்து மக்களும் சகோதர உணர்வோடும், மிகுந்த ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இடத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இன்னும் கேட்டாலும் கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தேவை ஒற்றுமை தான் என்றார்.

Wednesday, February 4, 2009

மக்காமஸ்ஜித்.காம்

மக்காமஸ்ஜித்.காம்


http://makkamasjid.com

மௌலானா ஸம்சுத்தீன் காஸிமி

ஏப்ரல், 12, 1969இல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் ஜனாப், முஹம்மத் ஸாலிஹ், ஜமீலா பீவி தம்பதியரின் பத்தாவது புதல்வராகப் பிறந்தார் மௌலானா, ஷம்சுத்தீன் காஸிமீ.

இவரது குடும்பம், 1973ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் தனது குர்ஆன் மக்தப் கல்வியை அஷ்ஷெய்க் முஹம்மத் சயீத் அவர்களிடம் பயின்றார்.

அதன் பிறகு பத்தாம் வகுப்புவரை சாந்தோம் மேநிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் 1982-1990 வரை மௌலவி பட்டப் படிப்பை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதரஸா காஷிஃபுல் ஹுதாவில் மேற்கொண்டார்.

அதன் பிறகு ஷரீஆ உயர்கல்வியை உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் கலாசாலையில் 3 ஆண்டுகள் பயின்றார்.. அதன் பிறகுதான் இவரது பெயருடன் ‘காஸிமீ’ என்ற பட்டப்பெயரும் சேர்த்து அழைக்கப்படலாயிற்று.

‘காஸிமீ’ என்பது தாருல் உலூம் கலாசாலையின் நிறுவனர் மௌலானா, நானூத்தவீ அவர்களின் நினைவாக அழைக்கப்படுவதாகும்.

1993ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் வரலாற்றில் (எம்.ஏ.) முதுகலைப் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு மயிலை மாங்கொல்லை மஸ்ஜிதுல் ஹுதாவில் ஒன்றரை ஆண்டுகள் இமாமாகவும், ராயப்பேட்டை ஜாம் பஜார் காட்பாவா பள்ளிவாசலில் ஐந்தாண்டுகள் ஜுமுஆ சொற்பொழிவாளராகவும் (கத்தீபாக) பணியாற்றினார்.

அத்துடன் மயிலை அருண்டேல் மஸ்ஜித், புரசைவாக்கம் தானா தெரு மஸ்ஜித், எழும்பூர் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் மஸ்ஜித் ஆகியவற்றில் வாராந்திர குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்திவந்தார்.

2000ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தலைமை இமாமாகப் பணியாற்றி வருகிறார்.

''மக்கா ஹஜ் சர்வீஸ்'' என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் ஆண்டுதோறும் ஹஜ், உம்ராவிற்காக அழைத்துச் செல்கிறார்.

மஸ்ஜித்களில் பணியாற்றிக்கொண்டிருக்கவே, தப்லீஃக் ஜமாஅத், மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றியுள்ளார்.

மக்கா மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பது என்ற இமாமத் பணியோடு நின்றுவிடாது, ''அழகிய கடன் அறக்கட்டளை'', ''ஷரீஅத் கவுன்சில்'' ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் ஏராளமான சமூகப் பணிகளில் ஊக்கமிக்க குழுவினருடன் இணைந்து சேவைகள் பல ஆற்றி வருகிறார். (அல்ஹம்து லில்லாஹ்!)

ரமளான் காலங்களில் தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவதுடன், தமிழன் தொலைக்காட்சியில் தினசரி அரைமணி நேரம் நேரலை மூலம் மார்க்க ஐயங்களை தெளிவுபடுத்தியும் வருகிறார்.

Major Sins in Islam

Major Sins in Islam
01. Associating anything with Allah
02. Not Praying
03. Not paying Zakat
04. Not fasting on a Day of Ramadan without excuse
05. Not performing Hajj, while being able to do so
06. Murder
07. Practicing magic
08. Disrespect to parents
09. Abandoning relatives
10. Fornication and Adultery
11. Homosexuality (sodomy)
12. Interest (Riba)
13. Wrongfully consuming the property of an orphan
14. Lying about Allah and His Messenger
15. Running away from the battlefield
16. A leader's deceiving his people and being unjust to them
17. Pride and arrogance
18. Bearing false witness
19. Drinking Khamr (wine)
20. Gambling......

கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்

கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்

நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , அந்த நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.

நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்கலில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை , இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.

அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.

Reasons Why You Should Exercise

Reasons Why You Should Exercise

http://www.healthymuslim.com:80/articles/sutte-reasons-why-you-should-exercise.cfm

An active body that gets adequate exercise is one that is likely to remain to remain healthy. As your body is a trust, it is a religious obligation upon you to look after it, to keep it free of disease and ailments to the best of your ability (except as Allaah wills).
Below, you'll find several good reasons why you should start exercising now.
Contributes to fat loss
It is well proven from scientific research all over the world that physical exercise contributes to weight loss. If you burn more calories than you consume through nutrition, you'll lose weight. When you exercise, you burn more calories than when you don't. It's really simple - the more you exercise, the more weight or fat you'll lose.
Prevent disease
The chances of developing various diseases has been proven to decrease when exercising. These diseases include heart disease, cancer, diabetes, and the stroke.
Around 4 out of 5 deaths caused by heart disease and cancer, are linked to factors that include stress and lack of exercise. We all know that diabetes increases the chance for heart attacks and strokes. What this shows, is that many of the risk factors and diseases caused by not exercising are working in conjunction to damage your health. To prevent this from happening, start exercising.
Improving disease
Many severe and minor diseases can be improved or even healed through regular exercise. These even include the diseases listed above. By following a regular plan, you can decrease triglyceride levels and decrease your blood pressure as well. Exercising on a regular basis will also reduce the risk of prostate cancer for men, breast and uterine cancer for women, and much more. All of this is scientifically proven, which is why you should start exercising today.
Enhance your state of mind
Everyone knows from the many scientific studies that regular exercising will lead to an increased release of endorphins in the body. These chemicals will fight depression and make you feel happy. The body releases these endorphins only 12 minutes into the workout.
There is another chemical known as serotonin that is increased during and after a workout. The increased levels of serotonin in the central nervous system is associated with feelings of well being and decreased mental depression. The chemical can also help you sleep better at night.
Enhance your wellness
When you are in great shape and well fit, you'll have more energy and you'll notice that your overall mood is improved. You will have experienced that you can stretch beyond your own limits and you know that you can do more than you thought possible.
Persistence
Exercising regularly will give you more energy, which can help you be more productive at home and at work. Exercising can help give your new goals a sense of purpose and give you something to focus on and aim for. This can help you increase your persistence and prevent you from going off track while you aim for your goal.
Social capabilities
After a workout on a regular basis you can boost your self esteem. This can help you look better and you'll be more comfortable as well. exercise will also help you to become more active, feel confident and prevent you from feeling isolated and unsupported.
After knowing all of these tips and reasons to exercise, you shouldn't hesitate to get out there and exercise. You can exercise at home or go out there and join a gym if this is appropriate, having a suitable Islamic environment.
There are several different ways that you can exercise, all you have to do is select a few that you like. Take a little bit of time out of your day and start exercising - you'll feel better than ever before and your body will thank you.
__._,_.___

SONG FOR A PALESTINIAN CHILD

SONG FOR A PALESTINIAN CHILD
************ ********* ********* ********* ****
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
I was born in the midst of fire,
Coffin on the body is my attire;
I can face everything, dark and dire,
The time fails to sink me in its mire.
I am a Palestinian child. I am a Palestinian child.
People think, I am meek and mild.
Always ready for bullets is my chest,
The bombs can never dampen my zest;
My blood is meant for my country’s best,
Only in the grave, I shall take my rest.
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
I aspire for peace , have love for all,
I want to demolish the religion’s wall;
When the world is weeping on my fall,
I must also try to rise high and tall .
I am a Palestinian child. I am a Palestinian child
People think, I am meek and mild.
Playing with death, is my ordinary game,
For me , earth and sky are all the same;
I am a violent storm, no power can tame,
My enemy will suffer a lasting shame.
I am a Palestinian child. I am a Palestinian child .
People think, I am meek and mild.
Desire for freedom makes me wild,
I am a Palestinian child. I am a Palestinian child
************ ********* ********* ********* ********* *
Dr. Mustafa Kamal Sherwani
All India Muslim Forum
Lucknow , U.P. India
Email:sherwanimk@ yahoo.com
Phones:+91-522- 2733715
+91-9919777909

அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...

அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...

பழைய கம்ப்யூட்டரிலிருந்து நவீன கம்ப்யூட்டருக்கு மாறவிரும்புகிறீர்களா…? உடனே பழைய ஹார்ட் டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லையென்றால் உங்களது ரகசியங்களை வேறு ஒருவர் திருடி தவறாக பயன்னடுத்தக்கூடும்.
கம்ப்யூட்டரில் விலை மதிப்பற்ற பல்வேறு தகவல்களை சேமித்து வைக்கிறோம்.இதில் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் சில ரகசிய தகவல்களும் அடங்கும். நண்பர்களுடன் சாட்டிங் செய்தல் மற்றும் ஆன்லைன் சாப்பிங் செய்வதற்கும் இதை பயன்படுத்துகிறோம்.

இந்நிலையில் பழைய கம்ப்யூட்டரை இபே இணையதளம் மூலம் விற்று விட்டு அல்லது ஸ்க்ராப் ஆக போட்டு விட்டு புதிய கம்ப்யூட்டரை வாங்க விரும்புகிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
அதாவது அதில் உள்ள ஹார்டு டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ரகசிய விவரங்களை திருடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் உங்களது விவரங்கள் அடங்கிய பைல்களை அழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென உள்ள சாப்ட்வேரைக் கொண்டு அழித்துவிட்ட பைல்களையும் திரும்பப் பெற்று முறைக்கேடு செய்ய வாய்பிருக்கிறதாம். எனவே ஹார்டு டிஸ்க்கை மட்டும் உடைத்து விடுவது தான் 100 சதவீதம் பாதுகாப்பானது.
அண்மையில் இபே இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 8 பழைய கம்ப்யூட்டர்களை வாங்கினோம். அதிலிருந்து அழிக்கப்பட்ட 22 ஆயிரம் பைல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த தகவல் மிகவும் முக்கிய தகவலாகக் கூட இருக்கலாம்.
எனவே ஹார்டு டிஸ்க்கை உடைப்பதுதான் ஒரே வழி என இணையதள பத்திரிக்கை எச்சரித்துள்ளது.
கவனமாக இருப்போம் பிரச்சனைகளைத் தவிர்ப்போம்…!
நன்றி - தினகரன்

40 Hadeeth Seminar: Registration Now Open!

Imagine the Prophet (salla Allahu 'alayhi wa sallam) surrounded by his beloved Companions, as they sit and listen to his most precious words, revelation from above the seven heavens. Would you like to recreate even a fraction of what that must have been like? Would you like to listen to the same exact words that had flowed from the Prophet’s lips, preserved intact 1400 years later? Do you want to strengthen your knowledge about Islam, increase your eeman & be in a gathering where angels surround you?

Join us for one of the most rewarding and unforgettable weekends you’ll ever experience inshaa Allaah.

KALEMAH Presents

Imam An-Nawawi’s 40 Hadeeth (Part I)
Explained by Shaykh Muhammad Salah from Huda TV
Intensive Weekend Seminar

Timings: Friday 6th & 7th March, 8.30 AM - 6:30 PM (15 hours of study with breaks for salah, lunch & snacks)

Location: Dubai Chamber of Commerce, Deira, Dubai
Registration Fee: DHS 200 & DHS 100 for students


Lunch, snacks & course material will be provided at no extra charge

Limited places available. Reserve your place here

Registration open for ages 12 and above


For more information:

Tel: 04 2644115
Email: info@kalemah.org

Web: www.kalemah.org

CLP Today!

" I will not be presumptuous enough to say that my life can be a role model for anybody; but some poor child living in an obscure place in an underprivileged social setting may find a little solace in the way my destiny has been shaped. It could perhaps help such children liberate themselves from the bondage of their illusory backwardness and hopelessness? "

These are the words of former President of India and the father of Indian Rocketry Dr. A.P.J Abdul Kalaam. From being a shy boy of Rameshwaram to the highest office of India he has moulded his life in a remarkable way!

CIGI CLP is aiming just the same. Preparing the Community to produce leaders from the backwardness of the society.

Join us and help us to sustain and nurture this dream!

Together we can do it!

CLP Today (4th Feb 2009) at FLORA HOTEL APARTMENTS, NASSER SQ, DEIRA. TIME 8:00PM

Your presence is important.. please do attend.

With warm regards

For CLP Implementation Team

Ashraf Thayyil
ashraf.thayyil@gmail.com

Asslamu Alaikkum Gentlemen!
Your presence without fail is expected at Flora Hotel Appartments , Nasser Square tonight at 8PM for the CLP workshop.
Highlights of the programme are -
Rashid Hamza will insha Allah start the programme with Qirath at 8PM.


Shafeeq will embark on his journey to become a successful mass communicator by taking his first step today by doing the ice breaker session.
Hisham will speak about a cause that is close to his heart and that would be his attempt to achieve the Module II objectives
Master Blaster Sangeeth will present a Demo session on Module 4 with all the tips and tricks.
Siraj Hamza will take us through the session as the CIGEAN of the day, with a theme that would shed light on the opportunities and perils of the economic meltdown. He would also conduct a table topic session having topics related to the on-going recession, so come prepared, grand prizes will be given away to the best speakers of the table topic session.
Let us make the CLP workshops a platform for the youth of our community to find new frontiers in leadership . Yes we can – Insha Allah !

CLP implementation

அரசர்குளம்.நெட்

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் எங்கள் ஊர் அரசர்குளம் சார்பாக ஒரு website தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். நான் designing ல் அவ்வளவாக பழக்கம் இல்லாதவன். எனக்கு 2 விசயங்களில் உங்களின் உதவி தேவைப் படுகிறது. தெரிந்தவர்கள் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1. No of visitors கண்டுபிடிப்பது எப்படி? தயவு செய்து code குடுத்து உதவவும்.
2. நான் இப்பொழுது 15" மானிட்டரில் எங்கள் webpage ஐ design செய்கிறேன். அந்த பக்கம் எத்தனை இன்ச் மானிட்டரில் பார்த்தாலும் ஒரே போல் தெரிய நான் எவ்வாறு coding அடிக்க வேண்டும் . தயவு செய்து எப்படி கோட் அடிக்க வேண்டும் என்று உதாரணத் தோடு விளக்கவும்.

www.arasarkulam.net

இப்படிக்கு,
அன்புடன்,
சிராஜுதீன்,
அரசர்குலம்.
H/P: 9941585566
needjaris@gmail.com

To get visitor number counter pls go to link (http://my8.statcounter.com/logout.php) and regisiter they will give u the code copy and paste it to ur site wer u like to view it. They other question i dont have much knowlage if u get answer pls let me know also. Pls post these to question into this my site http://www.muduvaivision.com/discuss/



K. Shahul Hameed

Tuesday, February 3, 2009

துபாயில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு

துபாயில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு

துபாயில் 04 பிப்ரவரி 2009 புதன்கிழமை மாலை எட்டு மணிக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு துபாய் தேரா ஃபுளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு அஷ்ரஃப் ashraf.thayyil@gmail.com