Monday, June 2, 2008

அரபுக் கல்லூரிகள்

அல் ஜாமிஅத்துல் ஹமீதிய்யா அரபுக் கல்லூரி
நிர்வாகம் : நாகூர் கல்வி அறக்கட்டளை
எண் 23 யாஹுசைன் தைக்கால் தெரு
நாகூர் 611 002
நாகப்பட்டிணம் மாவட்டம்
தொலைபேசி : 04365 251267
98 420 11211
98 436 55883

ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை 608 303
கடலூர் மாவட்டம்
தொலைபேசி : 04144 269079
துவக்கம் ஹிஜ்ரி 1281 ஈஸவி 1864

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
நீடூர் நெய்வாசல் 609 203
நாகப்பட்டிணம் மாவட்டம்

நிஜாம் பாக்கு

நிஜாம் பாக்கு

நிஜாம் பாக்கு

முகவரி

எஸ்.ஏ. சபியுல்லா & கோ
தபால் பெட்டி எண் 14
புதுக்கோட்டை 622 003

ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்

ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள்

Al Hussam Travel & Tours India ( P ) Ltd
No 163/1 North Usman Road
T Nagar
Chennai 600 017

Tel : 28141837 / 281 40 836
Kader : 9940347986

TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 3 DeMellows Road
Choolai
Chennai 600 112
Tel : 2669 1669 / 1779 / 1889
Fax : 2669 1505

TAMILNADU HAJ SERVICE SOCIETY
No 45 Masjid Street
Mumbai - 400 003
Tel : 2346 0721 / 6058 / 8501
Fax : 2346 8076

Al Amanath Haj Service India (P) Ltd
Meco House
No 47 Anna Salai
( Near Devi Theatre )
Chennai - 600 002
Tel : 28594441 / 4442
Cell : 98 414 49256
E-mail : alamanath@alamanath.com
alamanathhajservice@gmail.com
www.alamanath.com


Al Noor Haj Services
No 11/8 Chinnaya Street
Pattukottai - 614 601
Tel : 04373 - 255 275
Cell : 98 424 31557

Bushra Haj Services
No 229/1 Lingi Chetty Street
First Floor
P O Box No. 220
Mannady
Chennai - 600 001
Tel : 2523 3853
Fax : 2527 9088
Cell : 94440 87959
E mail : umrahaj@bushrahaj.com
www.bushrahaj.com


Dheen Haj Services
No 25 Nageswaran North Street
Kumbakonam - 612 001
Tel : 0435 - 243 2684
Fax : 243 1176
E-mail : dheenhaj@yahoo.com
Web : www.dheenhajindia.com

Kalandar Haj Travels
No 3312 South 2nd Street
Pudukottai 622 001
Cell : 9443252614 / 94436447001

Millath Haj Service
No 5/1 Habibullah Road
T Nagar
Chennai 600 017
Tel : 42124020/28345097
Cell : 98 410 37786
E-mail : info@millahhajservice.com
www.millathhajservice.com

Moulana Haj Services
No 65 Ponnappa Street
Purasaiwalkam
Chennai 600 084
Tel : 2641 4692
Cell : 94441 58283
E-mail : moulana_imdadullah@yahoo.com
www.moulanahajservice.com

Taqwa Haj Service
No 3 Post Office Street
Chennai 600 001
Tel : 044 25 22 99 22
Fax : 044 25 22 99 33
Cell : 94443 60006/94441 94158

Al Fathah Haj Services P Ltd
No 82 C Customs Road
Kayalpatnam 628 204
Tel : 04639 280922
Cell : 94431 26922
E mail : alfathah_hajservice@yahoo.com
Chennai :Broadway 25220526

குர்ஆனின் குரல் மாத இதழ்



குர் ஆனின் குரல்
த.பெ.எண் : 250
எண் 38 தாசில்தார் பள்ளிவாசல் தெரு
மதுரை - 625 001

தொலைபேசி : 0452 - 699 1 333
அலைபேசி : 94 867 29191
ஃபேக்ஸ் : 0452 - 2322 672

மின்னஞ்சல் : quraaninkural@sancharnet.in

துவங்கப்பட்ட ஆண்டு : 1958

நிறுவனர் : அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி ( ரஹ் )

ஆசிரியர் & வெளியிடுபவர் :

மவ்லானா முஃப்தீ அல்ஹாஜ் ‘ அஸ் அதுல் மில்லத் ‘
அ. முஹம்மது அஷ்ரஃப் அலீ மன்பயீ

சந்தா விபரம்

ஓராண்டு ரூ.120

தனி இதழ் : ரூ. 10

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா


கீழக்கரை, ஜுன்.2-

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த உணவு விடுதியான யும்மி இந்தியன் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக தமிழர்கள் அமைப்பின் நிர்வாகி பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார். செயலாளர் சைபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

செந்தில், மதுக்கூர் அன்வர்.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தமது ஏற்புரையில் அமீரகத்தில் கணினியில் தமிழ் எனும் நன்னோக்கோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழில் ஆர்வமேற்படும் வண்ணம் தமிழ் பயிற்சி வகுப்புகள், உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்தினார்.

ஹமீது யாசின் நன்றியுரை கூறினார்.

தொடர்பு முகவரி :

அமீரகத் தமிழர்கள் அமைப்பு துபாய்
தபால் பெட்டி எண் 86776
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
மின்னஞ்சல் : etadxb@yahoo.com











Sunday, June 1, 2008

சென்னையில் இஸ்லாமிய சொற்பொழிவு

இஸ்லாமிய சேவை மையமும் அல்-கவுஸர் கல்விக் கழகமும் இணந்து சென்னை ராணி
சீதை மண்டபத்தில் நடத்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியில்
ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த முனைவர் தவ்ஃபிக் சவுத்ரி, "21ம் நூற்றாண்டில்
நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிலிருந்தே தொடங்க வேண்டும்" என்கிற
தலைப்பில ஓர் அற்புதமான் உரை நிகழ்த்தினார். ஆங்கிலமும், அரபியும் அவர்
நாவில் நர்த்தனம் ஆடின. திருக்குரானிலிருந்தும், நபி மொழியிலிருந்தும்
மேற்கோள்கம் சரமாரியாக வந்து விழுந்தன.

யாரையும் ஏசாமல், திட்டாமல், சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கிளப்பி நம்மைக்
குழப்பாமல், காரண காரியங்களோடு நிகழ்த்தப்பட்ட் ஒரு சொற்பொழிவு
மனதுக்கு நிறைவான் ஒரு மகிழ்வைத் தந்தது.

ஆஸ்த்ரேலியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் பிறகு படிப்பதையே
தொழிலாகக் கொண்டு பல்வேறு விஷயங்களில் முதன்மையாகத்தேறி
பட்டங்கள் பெற்றிர்ருக்கிறார். என்றாலும் மதினா பல்கலைக் கழகத்தில்
இஸ்லாமிய ஷரியாவில் ஆய்வு நடத்தி சந்து ப்பெற்றதையே பெறுபேறாகக்
கருதுகிறார்.

இவர் நடத்தி வரும் அல்-கவுஸர் கல்விக் காழகம் இஸ்லாம் பற்றிய பல்வேறு
அம்சங்களை பாடத் திட்டமாக வகுத்து ப்ட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதை நீங்கள் அத்தனையையும் ஒன்றாகப் படித்து பட்டம்
வாங்கலாம். அல்லது இடைவெளி விட்டு ஒவ்வொன்றாகப் படித்து
பட்டயம் வாங்களாம்.

மே 31ம் தேதி மற்றும் ஜூன் முதலாம் தேதிகளில் சென்னை அம்பாசடர் பல்லவா
ஓட்டலில் இஸ்லாமிய ஷரியா பற்றிய வகுப்புகள் நடக்கின்றன.
உணவு மற்றும் பாட உபகரணங்கள் உட்பட நபர் ஒன்றுக்கு ரூபாய் 950/-- நிறையப்
பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.க். அப்துஸ்ஸமது அவர்களின் புதல்வி ஜனாபா
ஃபாத்திமா முஸஃபர் ஆற்றிய தமிழ் உரையும் மிக நன்றாக இருந்தது.
அவரது கணவர் முஸஃபர் அஹ்மது தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.்


abjabin@gmail.com

Friday, May 30, 2008

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம் மன்னர்கள் எல்லா மன்னர்களைப் போலவும் போரிட்டனர். கொள்ளையடித்தனர். அவை மன்னர்களின் படைகளின் பொதுவான செயல்பாடு.

மன்னர்களுக்கு நாடும், செல்வமும், பெருமையும் குறியே தவிர, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகள், மதம் ஆகியவை பற்றி பெரிதும் கவலைப்பட்டதில்லை. இஸ்லாமியரை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியின் நன்றியுள்ள தளபதி இந்து.

அக்பரின் தளபதிகளும், அமைச்சர்களும் இந்துக்கள். ஒளரங்கசீப் எதிர்மறையாக அறியப்பட்ட அளவுக்கு, உபநிஷத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்த அவரது சகோதரர் தாரா அறியப்படவில்லை.

தவறாக இஸ்லாமியர்களாலும் புரிந்து கொள்ளப்படும் இந்த ஜிகாத் என்ற வார்த்தையின் உண்மைப் பொருள், ‘மனிதன் தன் உள்மனதுடன் நடத்தி வெல்லும் போரே’ என்கிறது திருக்குரான்.

1901ல் மெக் கென்லி துவங்கி ஜான் எப் கென்னடி வரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரையும் கொன்றது இஸ்லாமியர் அல்ல. ஆஸ்திரியாவின் ஆர்ச் ட்யூக் பெர்ட்டினான்ட் படுகொலை ஐரோப்பாவையே உலுக்கியது அது முஸ்லிம்களின் செயலல்ல.

இந்திய விடுதலைக்குப்பின் ‘அப்துல்லா’ என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மாவைக் கொன்ற மதவெறியன் முஸ்லீம் அல்ல. இந்தியாவின் நூற்றாண்டுப் பகைமைக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பும், குஜராத் படுகொலையும் இஸ்லாம் வன்முறைக்கு முன்னோடிகள் அல்ல. ராஜீவ் காந்தியையும், இந்திராகாந்தியையும் கொன்றது இஸ்லாமியத் தீவிரவாதிகள் அல்ல.

காஷ்மீர், கலவரங்களுக்கு, பாகிஸ்தான் தூண்டுதலும், இஸ்லாமியரும் காரணம். ஆனால் காலிஸ்தான் வன்முறை, அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம், நாகலாந்து, தெலுங்கானா என எங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்களை காரணம் காட்டமுடியாது.

ஹிரோஷிமா, நாகசாகி, ‘நேபாம்’, பயலாஜிகல் ஆயுதம் என அழிவு விஞ்ஞானத்தை உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் பயன்படுத்தி அறிவியல் வளர்ப்பவர்கள் இஸ்லாமியர் அல்ல.

அமெரிக்காவில் 3 கோடி செவ்விந்தியரை, ஆஸ்திரேலியாவில் 4 கோடிப் பழங்குடியினரைக் கொன்றதும், இரண்டரை கோடி ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கடத்தியதும், தென்னாப்ரிக்க இனவெறியை ஆசீர்வாதம் செய்ததும் எந்த இஸ்லாமிய வன்முறையாளனும் அல்ல.

இந்த மாயையிலிருந்து விடுபடும்போது உண்மையான வன்முறையாளர்கள் யார்? உலகைத் தம் சுயநலத்திற்காக ரணகளமாக்கும் மனிதகுல எதிரிகள் யார் என்பதை உலகம் உணரும்.

எழுதியது ஜிம்ஷா எழுதிய நேரம் 2:50 PM 2 பின்னூட்டங்கள்


asalamone@rediffmail.com

தமிழ் இஸ்லாமிய மீடியா.காம்

Free downloads of valuable books from

TamilIslamicMedia.com

Shamaail-e-Tirmidhi : A Muslim can truly claim his love for Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, if he attempts to follow the manner and life-style of the messenger of Islam. We are given such an opportunity, after the reading of this book, for it enlightens the reader with the intimate aspect of Rasul Sallallahu Alayhi Wasallam's life.


Hisnul Muslim - Dua for All Occasions
Invocations from the Qur'an & Sunnah. Translation of Hisnul-Muslim. This is a very beautiful booklet consists of many authentic Dua's (supplications) for a Muslim to supplicate on a daily basis and on special occasions.


Also download...


1. Beautiful 3-D view of Mecca (Day)Format: zipSize: 2,424KB
2. Beautiful 3-D view of Mecca (Night)Format: zipSize: 2,043KB
3. Beautiful 3-D view of MadinaFormat: zipSize: 5,227KB
4. Beautiful 3-D view of Uhud MountainFormat: zipSize: 2,891KB
5. Beautiful 3-D view of Kuba MasjidFormat: zipSize: 3,800KB
6. Beautiful 3-D view of Masjid Qiblatain.zip





--
TamilIslamicMedia.com Your onestop source for quality Tamil Islamic audio, video and other media resources.

மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்
1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்
இதோ உங்கள்
www.tamilmuslimtube.com ல்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்" இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் (George L.Hart)!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

தமிழைத் தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய்

நேசித்து தமிழ் வாழ, வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் இடம்பெறுகிறார்.


தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா.ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.


இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகை-யில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர். தமிழ்மொழி பழமையான மொழி. தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ‌ரும் பெர்க்கிலி ப‌ல்க‌லையில் த‌மிழ் துறையில் ப‌ணியாற்றிவ‌ருகிறார். பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களுடனான‌ மின்காணல்..

இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது.

சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல.
- பேரா.ஜியார்ஜ் ஹார்ட்




1996-ல் 'தமிழ்ப் பலகை"(Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர்! நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக/நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?

"1996-ல் 'தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றபிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அது எங்களின் தென் ஆசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அத்தியாவசியாமாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.

தாங்கள் அழகுபடுத்திக்கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கைபோல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?

உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பது ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்-தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது.

வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர்- அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
பெர்க்கிலியில் தமிழ் விழா என்று வருடம்தோறும் நடத்தி வருவதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்வதை வரவேற்கிறோம்.

7 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென் ஆசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின்கண் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது.
இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான் இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கக்பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும் அதன் சொற்களையும் மஸ்கிருதத்ததிலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளதுதான் ஆனால் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். எப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்னபோது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என் திறன்கள்–என்னிடம் திறன்கள் இப்பினும்–அவை மொழிகளைக் கற்றுக்கொள்வதில்தான் இருந்தன.

சமஸ்கிருதத்தின் பால் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழைமையான வளம் மிக்க இலலக்கியம் இருக்கிறது.

நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்வேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி.

ஏன் சமஸ்கிருத்தத்தில் மிகவும் சிக்கல்மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல்தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).

கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?

தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிமுக்கிய வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. துரவதிர்ஷ்டவசமாக தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்ககியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையத்தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணையத்தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இது செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.

பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக்கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?

எனது அடிப்படைக் கருத்துக்களை நான் திருத்திக்கொள்ளவில்லை. மொழி பெயர்ப்புகள் நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன். நான் மொழிபெயர்க்கும்போது இங்கும் அங்குமாக சில துரவதிர்ஷ்டவசமான தவறுகளைச் செய்தேன் – தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும்போது, அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வவின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென் இந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக்கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகிவிட்டது. பருவ மழைக்காலத்தின்போது பிரிந்திருத்தல், மற்றும் தூதுவிடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

தமிழகத்தில் சாதிமதங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். அவர் அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார். அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதை ஆழமாகக் கவர்ந்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக்கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக ஆக ஆக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்தது. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.


நன்றி:தமிழோவியம்.

drimamgm@hotmail.com

சென்னை கிரஸெண்ட் பள்ளி - சில அனுபவங்கள்

Dear Brothers Assalau Alaikkum

Please have a look and spend two minutes to read the attachment, again the opportunity is knocking our door for the admissions at Crescent School at Chennai.
If any one wants to utilize this opportunity, feel free to call me or send your application directly to Crescent School.

Crescent School
Vandalur, Chennai – 600 048 . India
Phone: +91-44-22750350, 22750351 Fax: +91-44- 22750391
Email: crescentschool@vsnl.com Website: www.crescentschools.info
With Regards

M.Kareem
0551038810
சவுதி அரேபியா

Dear brothers:

Assalamu Alaikum.

Thank you very much for forwarding the admission notification of Crescent School, Vandaloor, Chennai. Even Though this is a good opportunity to educate your sons in an Islamic Environment, you should be prepare for the following:

a) your son should be passed with good marks as this school has some minimum criteria for admissions irrespective of religion.
b) you should be wealthy enough to pay according to their fee structure.

I have had a bad experience, when I have approached this school for my son's admission. He has completed his schooling in Abu Dhabi. He has passed his 10th Std. at CBSC syllabus with 66.5% of marks. Being a resident of Chennai, I have gone to Crescent school for admission directly. My son's application rejected since he has got less marks. Their criteria was 70%. I have argued with them vehimently. But no use. In the meantime, one student from Kerala given admission. He has passed in Kerala State Board examinations and had abundant marks to meet their criteria. I have told them that passing CBSC syllabus is very difficult and it has no comparison with state boards. They have rejected my claim stating that whatever syllabus they have studied, their concern is only the marks obtained.

Finally, I have returned back without admission to myson. In the meantime, I have got his admission is St. Ann's School, Porur, Chennai. He has studied there and completed his +2. Then he has studied in Dr. Abdul Hakeem College of Engineering, Melvisharam, Vellore and graduated in B.E. Mechanical Engineering - passed in First Class. Now he is working is Muscat as M&E site Engineer.

So, at the last, these type of instituions have been established in Tamil Nadu for the upliftment of minority communities (muslims). The lands and grants have been allocated for this. Irrespective of this, these instituions are not interested in the welfare of the muslim community. They will educate only the wealthy muslims who can afford their fees structure and criteria. Poor muslims have no place in their institutions..... etc...... etc.....

Wassalam,

A.S. Abdul Rauf, M.A. (Pub.Admin.).,
Administrator, Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (00971-2) 6023983 (Dir.)
Mob: (00971-50) 5310-726
aabdulraguf@adnoc.com

Assalaamu alaikum

Anybody studied abroad or their parents employed abroad is considered as wealthy and and I agree to the fact. if your priority was to educate your son in that school you would have sold your properties to accomplish it. Probably you did not feel worthy of it. Onus is upon you.

Everybody has the justifiaction on their side.
May allah reward you for your patience, Alhamdulillah, your son is good position where you are able to do that. May be another good/poor muslim might have got that oppurtunity.

By the way, cresent college is within 3 top college of the university.

May allah guide us to right path.

Wasalaam
Khalid
khussain75@hotmail.com

Dear brothers and sisters
Assalamu Alaikkum
I too had the same bitter experience when
I wanted to get admission for my son in Crecent School
as brother Rawuf had.With the grace of Allah he is
successfully doing his pilot training in Canada
ALHAMDULILLAH.
I am the former Principal of a Govt
College,Madurai.In my 36 years of teaching experience
hat I can tell is there is nothing to be proud of
selecting students with high marks and producing fine
results which need no teaching or school's
efforts.Best students learn by themselves.
Secondly as all muslims kmow that Sachar
report to Govt has brought out the fact that status of
muslims is poorer than that of SCs and STs.I feel
these type of schools also have been the indirect
cause for this worst state of affairs.
Thirdly though schools are run with profit
motive nowadays,we muslims are answerable to ALLAH,we
have to do our best in developing educational
standards of muslims as a whole and especially of
women.
Finally I plead every muslim of Universe
to contribute something to achieve this goal,Insha
Allah we muslims will prove that we are not inferior
to anyone on earth.
Wassalam
A.K.THASHREEF JAHAN
FORMER PRINCIPAL
SRI MEENAKSHI GOVT COLLEGE FOR WOMEN,
MADURAI
0452-4353444
9344150951
syedfazluddin@yahoo.com

Thursday, May 29, 2008

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிய

10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 30-05-2008 காலை 9.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

http://tnresults.nic.in
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
www.timeschennai.com
www.chennaivision.com
www.indiaresults.com
www.tnagar.com
www.results.sify.com
www.squrebrothers.com
www.results.southindia.com
www.worldcolleges.info

message from

S.M. Arif Maricar
http://www.tmcaonline.com
http://arifmaricar.blogspot.com

Wednesday, May 28, 2008

சென்னையில் சொற்பொழிவு

சென்னையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

சென்னையில் பொதுமக்கள் பங்கேற்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி 30.05.2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை, 603 அண்ணா சாலையில் அமையப்பெற்றுள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் அல் கவுதர் நிறுவன இயக்குநர் ஷேக் டாக்டர் தௌபீக் சௌத்ரி, இஸ்லாமிய தகவல் மைய துணைத்தலைவர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் ஆகியோர் 21 ஆம் நூற்றாண்டு எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

மேலும் விபரமறிய

www.alkauthar.org

மேலும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் உள்ள அம்பாஸிடர் பல்லவா ஹோட்டலில் ஷேக் தௌபீக் சௌத்ரி பங்கேற்கும் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் பெற : 98 410 37786 / 93 810 53184





துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

துபாயில் இஸ்லாமியத் தகவல் மையம்

Islamic Information Centre

Tel : 04-3986950

Fax : 04- 3986957

P.O.Box : 25020 -Dubai UAE

info@islamicinfo.org.ae

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பு இயக்கம்

http://azadibachaoandolan.freedomindia.com/

பி.எட். தமிழ் வழியில் பயில.........

பி.எட். தமிழ் வழியில் பயில.........

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய விருப்பப் பாடங்களுடன் அறிமுகப்படுத்துகிறது.

TAMILNADU OPEN UNIVERSITY
DOTE Campus
Chennai 600 025
Tel : 044 2235 3522 /2235 2898 / 2220 0506
Fax : 044 2220 0601 / 22220 0606
www.tnou.ac.in

Tuesday, May 27, 2008

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் புதிய இணையதளம் சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

http://www.tnrd.gov.in/

புதிய காற்று மாத இதழ்

புதிய காற்று மாத இதழ்

தொடர்புக்கு

புதிய காற்று
ஷிஃபா காம்ப்ளக்ஸ் முதல் மாடி
142 வடக்கு வெளி வீதி
யானைக்கல்
மதுரை 625 001

நிறுவனர் : எஸ். ராஜாஹஸன்
ஆசிரியர் : ஹாமீம் முஸ்தபா
99524 00322
பொறுப்பாசிரியர் : சங்கர்
உதவி ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்
98421 15801

மின்னஞ்சல்

shifa_media@yahoo.co.in

www.puthiyakaatru.keetru.com
www.thamizham.net

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

துபாய் குறித்த நூல் தயாரிப்பு பணியில் உதவிட வேண்டுகோள்

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் ‘துபாய்' குறித்து நூலொன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற இருக்கின்றன.

துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும்.

தொடர்புக்கு

பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047

Scholarship

With the mission of ensuring world-class education to meritorious students across all economic strata, SSN College of Engineering, established by HCL founder Shiv Nadar, has decided to give scholarships to 20 Plus Two first rank holders from rural government higher secondary schools in the State.

Students selected for this scholarship, amounting to Rs. 22 lakh per year, will get total financial assistance for the entire duration of their study at the college, including their hostel expenses.

A statement from the college, already offering over 400 scholarships, said eligible candidates can get the applications free by sending their requisition letter with copy of mark statement latest by May 26 to Subramaniann, Administrative Officer, SSN Trust, 211/95, V.M. Street, Mylapore, Chennai - 600 004. Ph. - 044 - 24986474. E-mail: subramaniann@ssn.edu.in

The requisition letter should carry details about the applicant's family, proof of having come first in the school and other details. Applications should reach the SSN Trust by June 4.