Saturday, December 20, 2008

அஜீரணத்தை போக்கும் இஞ்சி

அஜீரணத்தை போக்கும் இஞ்சி
இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம்.

இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

நீங்களும் நூறாண்டு காலம் வாழலாமே..!
- தொகுப்பு : எஸ்.சரவணன்

நூறாண்டு காலம் நலம் காத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, எளிதில் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை, டாக்டர் த்ரிஷா மெக்னாயர் என்பவர் எழுதிய "தி லாங் லைஃப் ஈக்குவேஷன்" என்ற புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

அதன்படி, ஒருவர் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்வதற்கு, அவர் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; கைகளை கழுவுதல் வேண்டும்; தினமும் பல் துலக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார், அந்த மருத்துவர்.

ஆய்வு ஒன்றினை மேற்கொள் காட்டி, டாக்டர் த்ரிஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது இதுவே:

* கைகளை நன்றாக கழுவி, எப்போதும் தூய்மையுடன் இருந்தால், ஆயுளில் 2 ஆண்டுகள் கூடுகிறது.

* பற்களை சுத்தமாக பராமரித்து வந்தால், வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் உயர்கிறது.

* பெண்ணாக இருந்தால் அவரது கணவரும், ஆணாக இருந்தால் அவரது மனைவியும் நிலையான ஒரு துணையாக அமைந்துவிட்டால், ஆயுளில் எட்டு ஆண்டுகள் கூடுவது உறுதி.

* அன்றாடம் தவறாமல் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், வாழ்நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூடும்.

அதேநேரத்தில் புகைப்பழக்கம், துரித உணவுகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமை மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழலோடு வாழ்வது ஆகியவை நமது வாழ்நாளில் 20 ஆண்டுகளை குறைத்துவிடும் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IT Personal required

The Western School - Madukkur is looking for IT Personal for their IT team with the following knowledge /experience:

Job Description: Administrating IT Center at Pattukkottai; Implementing Accounting System; Email Communication; Liaison with School IT Team and administrative works
Required Knowledge: Knowledge of Microsoft Office; Email; Application usage and Training; Programming skill and Web Designing as definite advantage

Qualification: IT Related

Interested candidate please send your application to : eshackmkr@gmail.com with your latest CV.

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் (http://kayalpatnam.com) எனும் இணைய‌த்த‌ள‌ம் ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்துள்ள‌து அல்ஹ‌ம்துலில்லாஹ்.

இன்றைய‌ சூழ‌லில் சேவை அடிப்ப‌டையில் ஒரு இணைய‌த்த‌ள‌த்தை இய‌க்குவ‌த‌ற்கு பொருளாதார‌ம் இருந்தாலும் அத‌ற்கு தேவை அனைத்து த‌ர‌ப்பின‌ரின் ஒத்துழைப்பு. அந்த‌ வ‌கையில் காய‌ல் வாசிக‌ளின் அனைவ‌ரது ஒத்துழைப்புட‌ன் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் த‌ன‌து ப‌த்து ஆண்டு சேவையினை நிறைவு செய்துள்ள‌து.

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் குறித்த‌ அனைத்து வித‌ த‌க‌வ‌லை உட‌னுக்குட‌ன் உல‌கெங்கிலும் வாழ்ந்து வ‌ரும் காய‌ல‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி வ‌ரும் பாணி மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌து. ஒரு இணைப்புப் பால‌மாக‌ இவ்விணைய‌த்த‌ள‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்த‌ வ‌ரிசையில் இளையான்குடி.ஆர்க், சித்தார்கோட்டை.காம், ம‌துக்கூர்.காம், நெல்லைஏர்வாடி.காம், முதுகுள‌த்தூர்.காம், முதுவைவிஷ‌ன்.காம், லால்பேட்டை, நீடுர் ஆன்லைன்.காம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ஊர்க‌ளின் இணைய‌த்த‌ள‌ சேவைக‌ள் அந்ந்த‌ந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு செய்திக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌ன‌. இத‌ற்கெல்லாம் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ஒரு முன்மாதிரி என்றால் மிகைய‌ல்ல‌.

தொட‌ர்ந்து காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ணிக‌ளை இணைய‌ம் வ‌ழியே ஆற்ற‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னிம் பிரார்த்திக்கிறோம்.
ஈமான் டைம்ஸுக்காக‌

முதுவை ஹிதாய‌த்
ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர்
இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன்
துபாய்




---------- Forwarded message ----------
From:
Date: Fri, Dec 19, 2008 at 10:39 PM
Subject: Kayal on the Web completes 10 years!
To: muduvaihidayath@gmail.com


Kayal on the Web, the community portal of Kayalpatnam, completes 10 years today (December 20, 2008), Alhamdulillah! We thank you for your continued support!!

A new editorial - The Journey So Far! - is online. Click here to read

To share your views about Kayalpatnam.com, Click here


The Journey So Far!
(Posted on Saturday, December 20, 2008)
Kayal on the Web went online on December 20, 1998. With a few pages of static information, its journey began. The news about the Website was passed on through words of mouth and emails to friends and friends of friends. Ten years on, Kayalpatnam.com has nearly 1400 registered users and receives over 1.5 million pageviews per year, Alhamdulillah!

Over the years, Kayal on the Web has introduced a wide variety of content: News about Weddings, Deaths, New Births, Images, Jummah Bayans, Discussion Board and lots more. Yet, it was for the news about Kayalpatnam for which the users visited Kayal on the Web the most for. For nearly 8 years, Master Computer Academy has been updating the news straight from Kayalpatnam. We acknowledge the help rendered by Mr.Malik and Mr.Mohamed Ali all these years. It is wonderful of them. Since last year, Mr.S.K.Salih has also been updating the news from Kayalpatnam. We thank him too!

Thanks are also due to Kayalpatnam professionals (Mr.Hameed Sultan, Mr.Javed Nazeem, Mr.Imthias, Mr.Seyed Ibrahim, Dr.Kizhar, Dr.Ziyad Abubacker, Dr.Meerasahib and Dr.P.M.Syed Ahamed) - who have spared their valuable time all these years - to answer queries in the Q&A section of the Website. We thank them!

We thank various Kayal organisations - both in India and overseas - for supporting us enthusiastically, by providing us news, views and timely suggestions. We value that!

We thank the visitors to this Website, the Kayalites - both from India and the Overseas. We wanted you to feel home when you are here and we hope we make you feel home when you are here. We strive for that!

Since 2006, Kayalpatnam.com has been hosting advertisements. These advertisements are the primary sources of revenue for The Kayal First Trust, the charitable Trust that now owns Kayalpatnam.com. We thank our advertisers for their support!

Through advertisements in two of the Websites (Kayalpatnam.com and ToppersTalk.com), The Kayal First Trust generates revenue for its various activities. The annual contribution of the Trustees also form part of the Trust's budget. In the financial year 2006-2007, The Kayal First Trust generated Rs.17,400 through advertisements. In 2007-2008, this rose to Rs.39,800 and in the current financial year, we hope to touch Rs.1,20,000. None of the expenses of the Trustees are covered in the budget. The Trust's accounts are audited by a reputed Chartered Accountant.

In addition to Media, The Kayal First Trust has focussed on Education (Meet The State Toppers event was conceived by the Trust, this year we disbursed scholarships through Iqra Educational Society), Health Awareness Programs and Youth (Kayalpatnam Astronomy Society). We at The Kayal First Trust hope to diversify and cover hitherto untouched areas, Insha Allah, in the coming year. The vision of The Kayal First Trust is to develop and offer a wide spectrum of services, experiences from which - could stand and serve as model for other societies to possibly replicate.

As we step into a new decade, we look forward to the continued support of everyone who had made the journey of the last ten years possible. If we err, let us know. If we are found wanting, let us know. Oh yes, the current design is old and a new one is due for long. Insha allah, we should have it early in the New Year :-)

Thursday, December 18, 2008

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

லெபனான் அரசு முதல் முறையாக சிரியா நாட்டுக்கு மைக்கேல் அல் கூரி என்பவரை தூதராக நியமித்துள்ளது. தற்பொழுது சைப்ரஸ் நாட்டின் தூதரகாக இருக்கும் கூரி சிரியா நாட்டின் தூதராக நியமிக்கப்படுவதற்குரிய முடிவை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சிரியா மற்றும் லெபனான் நாட்டுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளையடுத்து முதன் முதலாக தூதரக உறவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு இறுதிக்குள் புதிய தூதர்களை இரு நாடுகளும் நியமிக்கின்றன.

இதேபோல் சிரியா நாட்டின் மக்ரம் ஒபைத் ஸ்பெயின் நாட்டு தூதராக இருக்கிறார். இவர் லெபனானுக்கான தூதராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, December 17, 2008

தினகரனில் வெளிநாட்டுச் செய்திகள்

Nri News Launched in www.dinakaran.com today ..

check Nri News at
www.dinakaran.com/nri

u can Mail me Nri News at
nrinews.dinakaran@gmail.com

v.vanangamudi
Mobile : 91-9840907286

அமிலச் சத்தும் நோய்களும்

அமிலச் சத்தும் நோய்களும்


மருத்துவத்தில் மனித உடல் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. டாக்டர் மென்கேல் மனித உடலை அமிலம் மற்றும் காரத்தன்மை அடிப்படையில் அணுகுகின்றார். நமது உடல் 80 சதவீதம் காரத்தன்மை, 20 சதவீதம் அமிலத்தன்மையின் அடிப்படையிலானது என்பதே டாக்டர் மென்கேலின் அணுகுமுறையாகும். இவரின் அணுகுமுறை காலத்தால் மிகவும் பழையது என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பிரபலமாகிவருகின்றது. இந்தியாவிலும் இந்த அணுகுமுறை குறீத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், ஆர்சனிக், குளோரின், புளோரின், அயோடின் ஆகியன உடலுக்கு அமிலத்தன்மையை அளிக்கும் உணவு வகைகள் ஆகும்.

கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, செம்பு, அலுமினியம், லித்தியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியன காரத்தன்மை அளிக்கும் உணவு வகைகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடம்பில் உண்டாகும் மொத்த அமிலக் கழிவில் மூன்றில் ஒரு பகுதியை நுரையீரல் வெளிப்படுத்திவிடுகின்றது. சிறுநீரகம், தோல், மலம் ஆகியவற்றின் மூலம் மற்ற இரு பகுதிகள் வெளியேற்றப்படுகின்றன.

நமது உடலில் அமிலச் சத்து அதிகமாவதால் தான் நோய்கள் உண்டாகின்றன என டாக்டர் மென்கல் திட்டவட்டமாகக் கூறுகின்றார். காரச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சேர்க்கும்போது நமது உடலில் இயல்பாகவே அமில நிலையின் அளவு குறைந்துவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், வாழைப்பழம் ஆகியவற்றில் காரத்தன்மை உள்ளது.

கோதுமை, சோளம், அரிசி, முட்டை, பன்றிக் கொழுப்பு, சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் அமிலத்தன்மை உள்ளது.

உடல் மருத்துவத்தைப் பொறுத்தவரை அமிலம், காரம் குறித்த விழிப்புணர்வும், அறிவும் அனைத்து மருத்துவர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும், நோயாளிகளுக்கும் கட்டாயம் தேவை என மென்கல் கூறுகின்றார்.

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

அதன் இறுதியில், அமெரிக்க ஆய்வுக்கு நேர்மாறான முடிவு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களுக்கு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட, அது அவர்களின் நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் தினமும் ஒரு முட்டையோ, அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான முட்டைகளைச் சாப்பிட்டாலோ, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 சதவீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரிய தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.

Monday, December 15, 2008

துபாய் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் எண்டிவிவி அரேபியா நேர்காணல்

Please note that the Interview featuring our MD which was aired on NDTV Arabia has been put up on the homepage of www.etaascon.com .



You can download the video from the website to view the same.





Regards



Corporate Communication Team



From: corpcomm
Sent: Thursday, November 20, 2008 1:18 PM
To: 'all@etaascon.com'; 'adhall@etaascon.com'
Subject: FW: Communication to all Employees





Reminder to all employees.





Dear Colleagues,





Pls note that our MD will be appearing for an interview called ‘Big Fish’ which will be aired on NDTV Arabia this Friday (21st Nov) at 8:30pm.



The show primilarly highlights on interviewing several senior officials in the UAE who are mostly CEO’S / MD’S of key companies based in Dubai focusing on their business, business values, business morals, industry status, etc.



If it is convenient to yourself please watch the programme.





Regards



Corporate Communications Team

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Excellence in report writing

Excellence in report writing

You may have to learn how to prepare a report at some stage or the other in your career. Here are some guidelines.

Any one who wishes to become a good writer should endeavour, before he allows himself to be tempted by the more showy qualities, to be direct, simple, brief, vigorous, and lucid.

H.W. Fowler

You will have to write reports at some stage or the other in your career. Even a short technical report if written shabbily may damage your reputation in your organisation. The time spent to learn how to prepare a good report is never a loss.

Any report is a formal write-up. It may be on topics that cover different areas such as accident; employee appraisal; enquiry; feasibility; industrial relations; investigation; maintenance of equipment; progress of work; or research.

Any report should be prepared with the reader in mind. It is desirable that you follow a simple format that facilitates easy comprehension. If your report goes to a busy executive, a summary will prove to be useful. Any good report will have a structure comprising the following elements:
•Title: Precise; should tell what it is. There can be a contents page that shows the name of the report, its subject, authors, and the date of submission.

•Content list: List of items in the report, sections, sub sections, list of exhibits if any, and page numbers
•Introduction/ Preface: A short write-up that explains the background, the reason why it has been prepared, and acknowledgement of those who have helped in the preparation. Sometimes a preface is added by the authority that accepts and uses the report, before its publication.

•Abstract: Essential summary or overview of the contents and the prime message. This may be written after the preparing the body of the report.

•Method: Style adopted in gathering details and processing them.
•Results: The main findings. These may be presented using graphics as well.
•Discussion: Analysis of the results, their relevance, and implications. This may be a major component of your report. Practical suggestion for further steps can appear in this part..
•Conclusions: This is the final part of the main body. It can carry a pointer to the future.
•References
•Appendices: Information either too long or too detailed to be included in the main text of the report
In the case of reports to be published for wide circulation, you have to plan the type of printing, paper, colours, and so on. A suitable disclaimer may also be necessary. The glitter of the publication should however not be at the expense of the contents.
Planning a report
You cannot just jump into writing a report, without adequate planning and preparation. The reason why you have been asked to prepare a report has to be kept in mind, and further steps planned in tune with the specific requirements. Often the authority that has asked you to make a report may not have a clear picture of the objectives of the report. In such cases, you will have to seek clarification. A clear brief is essential.. Without this, your efforts may be found to be futile in the end.
The objectives, time available for submission of the report, its approximate length and nature of contents may have to be discussed beforehand. With this background, you may prepare a rough picture of the report in your mind.
The next stage is vital. Analyse the objectives in detail, and plan the strategies for gathering details in respect of each objective.
An outline of the contents will have to be drafted. This is the skeleton of your report. Flesh and blood will have to be added in the form of data, analysis, arguments, and conclusions.
If you have any doubts regarding the style of the report expected by the authorities, you may have a preliminary discussion on the well structured outline and the methodology contemplated.
Supporting facts
Any argument that you may put forward should be backed by facts. No report will be considered sound, unless it is well documented and supported by reliable data and convincing evidence. This takes us to the need for garnering and compiling information. This activity is sometimes termed research. You may have to explore various avenues such as perusing related documents and archives, using libraries, browsing the Internet, and interviewing people. Preparing a list of people or organisations to be contacted, and the type of information expected from each may be written down. Making a time schedule is essential, if the report has to be finished on time. You will have to stick to the schedule, perhaps with minor allowances..
Your efforts may yield too much of information. You will have to separate the wheat from the chaff, analyse the material, and come to logical conclusions. The physical part of preparation may be done following the usual pattern and format expected from you.
It is a good idea to go through a few reports that have been accepted by your organisation, before beginning to draft. The language that you use should invariably be simple. Clarity is of supreme importance in this type of business document.
Do not go for fancy fonts. Make your report look professional and elegant. Never think that your first draft is sufficient. You will find that there is ample room for revision, as you go through your draft repeatedly. Follow the basic structure of reports indicated earlier. The pages should be numbered, as also the paragraphs for easy reference.

"Respond to 26 Nov - Take Immediate Action"

"Respond to 26 Nov - Take Immediate Action"

hosted on the web by PetitionOnline. com, the free online petition
service, at:

http://www.Petition Online.com/ 26novAct/

தியாகத் திருநாள் - நினைவுகள்

தியாகத் திருநாள் - நினைவுகள்

(கவிஞர் ப.அத்தாவுல்லா)




பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.




அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.




‘எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?’




‘ஆமாம்’




‘அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்’ – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் ‘கஅபா’.




அந்தப் பெருமகனார் பெயர் இபுராகிம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்), அவர் துணைவியார் பெயர் ஹாஜரா (அலை). அந்தப் பாலகர் பெயர் இஸ்மாயில் (அலை).




திரும்பி நடந்த அந்தப் பெருமகனார் மலைக்குன்றுகளைக் கடந்ததும் தம் முகத்தை அந்த மணல்மேட்டின் பக்கம் திருப்பினார். இரு கரங்களையும் விரித்து இறைவனிடம் இறைஞ்சினார்.




‘இறைவனே! யாருமற்ற, விவசாயமுமில்லாத இந்த பாலைப் பள்ளத்தாக்கில் என் சந்ததிகளைக் குடியமர்த்தி இருக்கிறேன் - தொழுகையை நிலைநிறுத்துவதற்காக! மக்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!’




சில நாட்களில் கொண்டு வந்த உணவுப்பொருளும் குடிநீரும் தீர்ந்தது. அதனால் நீரைத் தேடவேண்டிய அவசியம் உண்டாயிற்று. குழந்தை பசியால் அழுதது. தாகத்தில், வெயிலின் வேகத்தில் அழுதது. அழுத குழந்தையின் தாகம் தீர்க்க நீரில்லை. அன்னையோ மிகக் கவலையுற்றார். பக்கத்தில் நின்றிருந்த இருமலைக் குன்றுகளையும் நோக்கினார். ஒருவேளை அங்கே ஏதேனும் நீரூற்று இருக்கக் கூடுமோ என ஐயுற்றார். முதலில் ஒரு மலைக்குன்றில் ஏறினார்கள். அதன் பெயர் ஸஃபா. அங்கே நீரில்லை. பிறகு அடுத்த மலையில் ஏறினார்கள். தேடினார்கள். அங்கும் நீரில்லை. அதன் பெயர் மர்வா. இரு குன்றுகளிலும் ஏறித் தேடியும் நீரில்லாமல் வாடினார்கள்.




மீண்டும் குழந்தையின் நிலையறிய ஓடினார்கள். அங்கே கண்ட அந்த அதிசயக் காட்சியில் மனம் தேறினார்கள். தம் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் நோக்கினார்கள். அங்கே குழந்தையின் காலடி உதைப்பில், வானவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்களது காலடியிலிருந்து நீர் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிசயித்த அன்னை, நீரை அள்ளியள்ளிப் பருகினார்கள். இறைவனின் அற்புதப் பேரதிசயத்தில் மனம் நிறைந்து உருகினார்கள். நீர்ப்பை நிறைந்திட நீரெடுத்துப் பெருக்கினார்கள். தம் கைகளால், பாலைமணல் கொண்டு சிறு கரை கட்டி, நீரை அணை கட்டினார்கள் - ‘ஜம் ஜம்’ – நில் நில் - என்று தம் வாயுரையால் பொங்கிப் பெருகிய நீரை கரைகட்டினார்கள்.




‘இறைவன், இஸ்மாயில் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! அன்று மட்டும் அன்னை ஹாஜரா ‘ஜம்-ஜம்’ ஊற்றுக்குக் கரை கட்டவில்லையெனில் அது பொங்கிப் பெருகி இந்த பூலோகமெல்லாம் நனைத்திருக்கும்.’ என்று பின்னாளில் பொருள் விளக்கம் தந்தார் நபிகள் பெருமானார் நாயகம் (ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம்) அவர்கள்.




அவர்கள் தங்கியிருந்த அந்த பாலைப் பெருவெளிக்கு ‘மக்கா’ என்று பெயர். பூமியிலிருந்து சற்றே உயர்ந்து மணல் திட்டாய் காணப்பட்ட அந்த ஒளிப் புள்ளிதான் பூமிப்பந்தின் நடுப்புள்ளியாய் இலங்கும் ஆதியிறை ஆலயம் ‘கஅபா’. வானவர் அல்லது அக்குழந்தை, இருவேறு கருத்துக்கள், காலடியில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய அந்த நீரூற்றுதான் வற்றாத ஜீவனாய் இன்னும் ஊறிக் கொண்டிருக்கும் வசந்தத் தேனூற்று ‘ஜம்-ஜம்’. மக்காவுக்கு மாநிலத்தின் மார்பிடம் என்றொரு அடைமொழிப் பெயர் உண்டு. ஒருவேளை ‘ஜம்-ஜம்’ எனும் பால் அங்கு சுரந்து கொண்டிருக்கும் காரணமாயிருக்குமோ?




இபுராஹீம் நபிகள் இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான பெருந்தகையாளர். அவருக்கு இரு மனைவியரை அளித்து இறைவன் சிறப்புச் செய்தான். மூத்தவர் பெயர் ஸாரா(அலை). இளையவர் ஹாஜரா(அலை). அவர்கள் ஓர் அரச குலத்துப் புறா. இபுராஹீம் நபிகளோடு இணைந்து நடந்த நிலா, மூத்தவருக்கு இஸ்ஹாக்(அலை) அவர்களும், இளையவருக்கு இஸ்மாயில்(அலை) அவர்களும் மகவாகப் பிறந்தனர். இந்த இளையவர் வழி அநேக அற்புதங்களை இறைவன் நடத்திக் காட்டினான்.




இறைவன் கட்டளைப்படி மக்கா எனும் மணிநிலத்தில், தம் கண்ணின் மணிகளைக் கழற்றி வைத்துவிட்டு இபுராஹீம் நபிகள் சொந்த நாடு திரும்பினார்.




ஹாஜரா அன்னையாரும் இஸ்மாயில் இளஞ்சிசுவும் இறையின் காவலில் இருந்தனர். தமது இதயநேசர் வேண்டிய இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்ளாமலா இருப்பான்? மக்காவின் பாதையில் வழிநடந்து செல்லும் வழிப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லுகின்ற அந்தப் பாட்டையில், ஒரு புதுமையைப் பார்த்தனர். நீரிருக்கும் இடம் மட்டுமே வட்டமிட்டுப் பறக்கும் தண்ணீர்ப்பறவை, ‘ஜம்-ஜம்’ ஊற்றுருகே வட்டமிடுவது கண்டு வியப்புற்றனர். இவ்வளவு காலமாக இந்தப் பாதையில் வருகிறோம். இதுவரை இங்கே நீர் இருந்ததில்லையே என்று தமக்குள் வினா விடுத்துக் கொண்டனர். அந்த அதிசயம் என்னவென்று காண வந்திருந்தவர்களில் ஓரிருவரை அனுப்பி வைத்தனர். அவர்கள் கண்டு வந்து சொன்ன நீரூற்றுபற்றி அறிந்து மகிழ்வுற்றனர். அன்னை ஹாஜராவிடம் தாங்களும் அங்கு வந்து தங்கி வாழ அனுமதி கேட்டனர். மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதில் ஆர்வம் கொண்ட அன்னையார் அனுமதி அளித்தார். ஆயினும் நீரூற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் தரமுடியாது என்றும் எடுத்துரைத்தார். அந்நீரை பயன்படுத்திக் கொள்வதில் தடையில்லை என்று உறுதிமொழியும் உடன் தந்தார். பிறகென்ன?




நீரிருக்கும் இடம் ஊரிருக்கும். ‘ஜம்-ஜம்’ நீர் வந்தபிறகு மக்காவில் ஊர் வந்தது. அங்கு முதலில் வந்து குடியேறியவர்கள் ‘ஜர்ஹ{ம்’ இனத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் வடித்து வைத்திருக்கின்றனர்.




இளவல் இஸ்மாயில் வாலிபராய் வளர்ந்தார். அழகும், இளமையும், பொலிவும் புதுமையும் பெற்று மிளிர்ந்தார். தக்க வயது வந்ததம் குடியேறிய குலத்தாரிடம் பெண் முடித்தார். இறை நாட்டப்படி மீண்டும் நபி இபுராஹீம் அவர்கள் மக்கா வந்தார். அவர் வந்த வேளை, இளையவர் இல்லத்தில் இல்லை. அவர்களது மனைவி மட்டும் இருந்தார். அவர்களிடம், அவர்களது நிலைபற்றிக் கேட்க அவர்கள் சிரமத்தில் இருப்பதாக பதில் தந்தார். இபுராஹீம் நபிகளாரோ அவரிடத்து இளையவர் வந்தால் தமது ‘ஸலாம்’ உரைக்கும்படி கூறி, ‘வீட்டு நிலைப்படியை மாற்றி வருக’ எனக் கூறுமாறு கூறிச் சென்றார்.




இஸ்மாயில் நபிகளார் இல்லத்தில் நுழைந்தபோது தமது தந்தையார் இறைத்தூதர் இபுராஹீம் நபிகள் அவர்கள் வந்து சென்றது அறிந்து, உள்ளுணர்வில் அது பற்றி வினவினார். அவரது மனைவியாரும் நடந்தது பற்றி எடுத்துரைத்தார். ‘வீட்டு நிலைப்படி என்பது நீதான். உன்னை மணவிடுதலை செய்து விடுகிறேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்’ என்று கூறி அம்மங்கையை அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் அதே குலத்திலிருந்து இன்னொரு பெண்ணை மணமுடித்தார்.




இறை நாடியவரை பொறுத்திருந்த இபுராஹீம் நபிகள் மீண்டும் மக்கா வந்தார். அப்போதும் இஸ்மாயில் நபிகள் இல்லத்திலே இல்லை. துணைவியார் இருந்தார்கள். வந்த முதியவரை முகமலர்ந்து வரவேற்றார்கள். நன்கு உபசரித்தார்கள். இறைச்சியும் நீரும் கொண்டு தந்து அன்பளித்தார்கள். தங்கள் வாழ்க்கை நிலை இறையருளால் மிக நல்ல நிலையில் இருப்பதாக ஒப்பித்தார்கள். அவர்களிடம் ‘இஸ்மாயில் வந்தால் என் ஸலாம் கூறுங்கள். வீட்டு நிலைப்படியைப் பேணி நிலைப்படுத்துங்கள் என்று கூறுக’ எனக் கூறிச் சென்றார்கள்.




முன்னர்போலவே - இறை உதிப்புணர்வால் - இல்லம் வந்த இஸ்மாயில்(அலை) அவர்கள் தமது மனைவியாரிடம் வினவ, அவர்களோ நடந்தவை அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். தந்தையார் கூற்றுப்படி அந்த மாதரசியைத் தங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டார்கள், தக்க வைத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜரா இறையடி சேர்ந்திருந்தார்கள. காலம் கடந்து சென்றது. மீண்டும் இருவரும் இணையும் காலம் நெருங்கி வந்தது. ‘ஜம்-ஜம்’ ஊற்றருகே நின்றிருந்த பெரிய மரத்தின் நிழலில் இளையவர் அமர்ந்து அம்பொன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் பெருமகனார் அங்கே வந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு பாசமுள்ள இறைத் தூதர்களாகிய தந்தையும் மகனும் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். இறைத்தூதர்களாக இலங்கியவர்கள் அவர்கள். இறை கட்டளைகளையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். இறை கட்டளைக்கு இம்மியும் மாறு செய்யாதவர்கள் அவர்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதில் மண்டிக் கிடந்தது. உள்ளன்பும் உவகையும் பின்னிக் கிடந்தது. கனிவும் கருணையும் தேங்கிக் கிடந்தது.




பின்னர் இபுராஹீம் நபியவர்கள் தமது மகனாரை நோக்கிக் கூறலானார்கள், ‘இஸ்மாயிலே! இறைவன் எனக்கு ஒரு செயலைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறான். நீ அதில் எனக்கு உதவ முடியுமா?’ என்பதாகக் கேட்டார்கள். ‘இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் நிறைவேற்றுங்கள். நிச்சயம் நான் அதில் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று பதிலளித்தார்கள்.




அப்போது இபுராஹீம் நபி அவர்கள் சுற்றியிருந்த இடங்களில் சற்று உயரமாக, சற்றே மேலோங்கியிருந்த மணற்திட்டைக் காட்டிச் சொல்லலானார்கள், ‘இங்கே நான் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி எழுப்ப வேண்டும்’. இஸ்மாயில் நபியவர்கள் கற்களைக் கொண்டு வந்து தரவும் அவர்கள் கட்டவும் தொடங்கினார்கள். ஓரளவு உயரம் வந்தபொழுது ‘மகாமே இபுராஹீம்’ என்று சொல்லப்படும் அந்த கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள். இபுராஹீம் நபியவர்கள் அதன்மேல் ஏறிநின்று கொண்டு கட்டலானார்கள்.




இதற்கு முன்னால் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது இபுராஹீம் நபியவர்கள் கனவொன்று கண்டார்கள். தமது அருமை மகனை அறுத்துப் பலியிடக் கனவு கண்டார்கள். இறைவன் தூதராக இயங்கிய அந்தப் பெருமகனாரிடம், மற்றோரிடம் இல்லாத இனிய பண்பொன்று மிளிர்ந்தது. அது கனவாயினும் அல்லது இறையறிவிப்பாயினும் எதுவாயிருப்பினும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனடியாக நிறைவேற்றி விடுவதுதான் அது. கனவு கண்டபிறகு மகனைச் சந்தித்ததும், அவரிடம் இதுகுறித்து வினவினார்கள். ‘அருமை மகனே! உன்னை அறுத்து பலியிடுவதாகக் கனவொன்று கண்டேன். உன் விருப்பம் எதுவோ?’. தந்தை இபுராஹீம் நபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகும் அந்த அற்புதர் இஸ்மாயில் நபிகள், ‘இறைவன் விருப்பம் அதுவேயாயின் உங்களுக்கு, உங்கள் ஆசைக்கு அடிபணியும் பிள்ளையாகவே என்னைக் காண்பீர்கள்’ என்றார்கள். இறைவன் கட்டளையல்லவா? எனவே அப்படி வந்தது பதில். இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்றெல்லாம் விபரீதமாகத் தங்கள் புத்தியை தீட்டாமல் மகனைப் பலியிட கத்தியைத் தீட்டியவர் அந்தக் காருண்யர்!




பக்கத்திலே ‘மினா’ வெறும் மைதானம். அங்கே அழைத்துச் செல்கிறார்கள அருமை மைந்தனை. பளபளப்பாகத் தீட்டப்பட்ட கத்தி கைகளில். தந்தையார் ஆணைக்குத் தலை தாழ்த்தி தரும் தனயன். பக்கத்திலே பாறையொன்று. இறைவன் இட்டது முடிக்கும் நல்ல நெறிப்பெற்றியர் மகனது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறார்கள். அவர்களது வீரத்திற்கும் முறுக்கேறிய வலிமைக்குமாக இணங்கி அறுபட வேண்டிய உயிர் முடிச்சு இன்னும் இன்னும் விறைத்து நிற்கிறது. கழுத்தில் கத்தி வைக்கின்ற போதெல்லாம் அறுந்து போகவில்லை கழுத்து. மாறாக, கத்தி குரல்வளை விட்டும் நழுவிப் போகிறது. என்ன அதிசயம்! என்ன அதிசயம்! வலிமை போயிற்றே! கரம் வலுவிழந்து போனதோ? முதுமையில் கரங்கள் தளர்ந்து போனதோ? இறiவா என்ன இது வேதனை? நீ காட்டித்தந்த கனவினை நனவாக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் இறைபக்தியில் கனிந்த அந்தப் பெருமகனாரின் மனம் உருகுகிறது. கத்தி கூர்மைப்படவில்லையோ என்று சோதிக்கும் முகத்தான பக்கத்தில் நின்றிருந்த பாறைக் குன்றின்மேல் ஓங்கி அடிக்கிறார்கள். பாறை பிளந்து விடுகிறது. அப்போது வானின்றும் கொழுத்த ஆடொன்று இறங்கி வருகிறது. அதோடு இறைச் செய்தியும் வருகிறது. அதன்படி அந்த ஆட்டை மட்டும் அறுத்து பலியிடுகிறார்கள். இறைச் சோதனையில் வென்று காட்டுகிறார்கள்!




அதற்குப் பிறகுதான் கஅபா புனித ஆதியிறையாலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்கு முன்னாலும் கஅபா இருந்தது. வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று, இன்ன பிற இயற்கையின் சீற்றங்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுப் போயிற்று. இறைவேதம் அல் குர்ஆன், கஅபா இறையாலயத்தை, உலகத்தின் முதல் தோன்றிய ஆதியிறை ஆலயமாகச் சிறப்பித்துப் பேசும். வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துப்படி இதுவரை ஏறத்தாழ பன்னிரு முறைகள் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதன் முக்கிய அடித்தளமாக இபுராஹீம் நபிகள் கட்டிய அவர்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச் சுவரே அடிப்படையாக அமைந்தது.




இரு நபிமார்களும் இறையில்லத்தைக் கட்டி முடித்தனர். பின்னர் இறையிடம் இறைஞ்சினர்! ‘இறைவனே! இந்த புனிதப் பணியை எம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே நன்கு அறிந்தவனாகவும் செவியேற்பவனாகவும் இருக்கிறாய்! என்று திரும்பத் திரும்பக் கூறியபடி அவ்வாலயத்தைச் சுற்றி வட்டமிட்டு நடந்தனர்.







இபுராஹீம் நபி இன்னும் இறைஞ்சினார்கள்! ‘இறைவனே! எங்கள் பணியை ஏற்றுக் கொள்வாயாக! இஸ்லாமியராகவே எங்களை உன்னூலில் நூற்றுக் கொள்வாயாக! எங்கள் சந்ததியைப் பெருக்கு! உனை வணங்கும் கூட்டத்தாரை அதில் ஆக்கு. அவர்களில் இருந்தே ஒரு உன்னதத் தூதரை உண்டாக்கு. அவர்களுக்கு உனது வேதத்தையும் ஞானத்தையும் பரிசாக்கு!’




இந்தப் பிரார்த்தனையின் பயன் நமக்கு ஈருலக இரட்சகராம் அண்ணல் முஹம்மது(ஸல்) அவர்கள் அருளப்பட்டார்கள். அனைத்துலகுக்கும் ஓர் அருட்கொடையாக அகிலத்தின் அழகான முன்மாதிரியாக!




இதைத்தான் பெருமானார் பின்னாளில் இப்படிப் பேசினார்கள். ‘நான் என் தந்தை இபுராஹீமின் பிரார்த்தனையாக இருக்கிறேன்!’




நபிகள் பெருமானாரின் தலைமுறை வரிசை இபுராஹீம் நபிகளாரைத் தொடும். இபுராஹீம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் இரண்டாம் துணைவியாரிடம் அவர் கொண்டுவந்து கொடுத்த இறைச்சியிலும், நீரிலும் இறiவா நீ அபிவிருத்தி செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான் இவ்விரு உணவும் கனிவகைகளில் பிரார்த்தித்த கனிவகைகளும் இந்த மக்கா மாநகரில் மட்டும் இன்றும் அதிகமதிகம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. இறைச்சியும் நீரும் தினமும் உண்டாலும் அது மக்கா மக்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக மற்றவர்களுக்கு அனுதினமும் ஒத்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த பாகத்திலும் கிடைக்காத கனிவர்க்கங்கள் எல்லாம் இன்று மக்காவில் மட்டும் அதிகமாகக் கிடைக்கிறது. ஆய்வாளர்களை அது ஆச்சர்யப்பட வைக்கிறது. இறைத்தூதரின் வேண்டுதலையும் இறைவன் அவர்களுக்களித்த உயர்சிறப்பையும் உற்று நோக்குவோர் இதனை இறைவன் பேரற்புதமாகவும் பெருந்தகை வேண்டுதலின் பெரும் பயனாகவுமே போற்றி ஏற்பர். உண்மையும் அதுதான். அந்தப் பெருமகனாரின் நினைவை தியாகத்தைப் போற்றும் வகையிலேதான் இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.




எவ்வளவு பெரிய சோதனையில் அவர்கள் சிக்கித் தவித்தார்கள் என்பது அந்தச் சூழலிலிருந்து ஆய்வோருக்குத்தான் தெரியும். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகரைப் பாலைக்காட்டில் கொண்டுவிடும் பண்பாகட்டும், அரச குலத்து இளமனைவியை இறைவனின் அடைக்கலத்தில் விட்டுவிடும் தன்மையாகட்டும், கனவுதான் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளையை பலிகொடுக்கத் துணிந்த வீரமாகட்டும், பெரியவரின் கட்டளையேற்று மணல்மேடாய்க் கிடந்த இறையாலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய பொலிவாகட்டும், இறைகட்டளை எதுவென்றாலும் முகமன் கூறி வரவேற்று அடிபணிந்து காட்டிய பெருந்திறல் பண்பாகட்டும், அத்தனையும் அந்த வல்லவனிடமே ஒப்புவித்து, ஓர் அடிமையாய் தம்மை அர்ப்பணித்தளித்த ஓங்குயர் நிலையாகட்டும், இதயப் பிரார்த்தனையில் நம் ஈருலகும் வெற்றிபெற வைக்கும் நபிகள் நாயகத்தின் மூதாதையர் எனும் உயர்குலச் சிறப்பிலாகட்டும், எண்ண எண்ண எண்ணமெலாம் இனிக்கும் அந்த இனிய பெருந்தகையாளரின் இயல்பையும் திறத்தையும் எவர்தான் முழுதுமாக இயம்பவியலும்?




அவர்களைப்பற்றி எத்தனை ஆயிரம் நூற்கள் எழுதினாலும் அவர்களின் கால் துகளில் பட்டுத்தெறித்த தூசிக்குக்கூட இணையாகாது. அந்தப் பெருமகனாரின் நினைவாகத்தான் இந்தப் பெருநாள் - தியாகத் திருநாள்.




‘இறiவா! மனிதர்களில் சிலரை இவர்களை நோக்கித் திருப்புவாயாக!’ என்று அந்த இறைத்தூதர் இறைஞ்சினார்கள். இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இதயமும் புனித கஅபாவின் பக்கம் வாழ்வில் ஒருமுறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும். புனித ஹஜ் கடமையாக்கப்பட்டிருக்கிறது.




பெற்ற மகனை பலிகொடுக்கத் துணிந்த அந்த வீரச்செயலைப் போற்றி, ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்துப் பலியிடுதல் கடனாக்கப்பட்டிருக்கிறது. இரத்தமும் சதையும் எதுவும் இறைவன் விருப்பமல்ல. எனினும் இபுராஹீம் நபிகள் செய்யத் துணிந்த அந்த தியாகத்தைப் பாராட்டும் வகையில் இது ஹஜ்ஜுக் கடமையின் ஓர் அங்கமாக இறைவனாலும் இறைத் தூதராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பொங்கிப் பெருகும் ‘ஜம்-ஜம்’ நீ ஆண்டுகள் ஆயிரங்களைக் கடந்தும் இன்னும் பொங்கியபடியே இருக்கிறது. அதன் புதுமையும் பழம்பெருமையும் இஸ்லாமிய உலகு மட்டுமின்றி, அனைத்துலகும் தொட்டும் தொடர்ந்தும் பொங்கியபடியே இருக்கிறது.




‘இறைவா! இந்த இறைச்சியிலும் நீரிலும் அபிவிருத்தி அளிப்பாயாக!’ என்று வேண்டினார்கள். அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்னை ஹாஜராவை விட்டுப் பிரிகையில் ‘கனிவகைகளை வழங்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உலகின் எந்த பாகத்திலும் கிடைக்கும் அத்தனை கனிவகைகளிலும் மக்கம் கனிந்து கிடக்கிறது.




உலகம் அனைத்தும் மானுடம் அனைத்தும் ஓர்குலம். ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனே இறைவன். அவனது அடிமைகள் நாம் எனும் ‘தல்பியா’ எனும் சங்கநாதம் மக்கம் தொட்டு ஒலிக்கிறது. அதன் பழமையும் பெருமையும் மானுட சமுதாயம் போற்றும் உரிமையும் கடமையும் சமதர்மச் சமுதாயச் சோலையாக, சரிநிகர் சமானமாக அனைவரையும் ‘வெள்ளாடை’ தரித்த புனிதர்களாகக் காட்டும் புண்ணியத் திருவிழா ஆரம்பமாயிற்று. அண்ணலின் ஆதிகுலத் தோன்றல் இஸ்மாயில் நபிகள், தந்தையார் இபுராஹீம் நபிகள், துணைவியார் ஹாஜரா அம்மையார் நினைவுகளில் மக்கம் பூத்துக் கிடக்கிறது. உலக முழுவதும் அதன் வழித்தடம் பார்த்து நடக்கிறது. இனி உலகம் உள்ளளவும் இந்த வரலாறு ‘ஜம்-ஜம்’ நீர்போல் வந்து கொண்டேயிருக்கும் கஅபா இறையாலயம் அந்த கண்ணியனின் புகழ்மொழியில் நனைந்து கொண்டேயிருக்கும்!




(அலை) – அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் இறைக்கருணை அவர்கள் மீது

(ஸல்) - ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் உண்டாகட்டும் என்பது பொருள்!




கவிஞர் ப. அத்தாவுல்லா

Improving the School Education

Here is the email on Improving School Education" i received from Seyed Ibrahim

Improving the School Education

http://seyed.ibrahim.googlepages.com/improve


Action Items on

I. How to improve performance in the Exam

II. How to avoid dropouts at School level

III. The inadequacies – Economy, Health and Environment

IV. Miscellaneous

தமிழார்வம் இருக்க வேண்டியதுதான்..அதுக்காக..?

"மெய்ப்புலம் அறைகூவலர்"

சென்னை விமான நிலையத்தினுள் ஒரு பெயர்ப்பலகையில் கண்ட வார்த்தைகள் இவை. இதன் பொருள் யாருக்காவது புரிகிறதா? மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள்..

Physically Challenged என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் மொழிப் பெயர்ப்பாம் இது! உடல் ஊனமுற்றோருக்கான கழிவறைக் கதவில் இப்படி ஒரு பெயர்ப்பலகையை வைத்திருக்கிறார்கள். தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த கழிவறைக் கதவுதானா கிடைத்தது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

ibnubasheer@gmail.com

Sunday, December 14, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்

கடவுளுக்கு ஒரு கடிதம்

நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;
உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி
ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?
தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?
ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே
ஆயுதம் கொண்டும் நமக்குள்
சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?
சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு....!
அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற
அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..
பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு
பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்
எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?
மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை
மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே....!
நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்
நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது...

---"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Accounts Department
Granite Construction Company
Post Box # 842
Abu Dhabi, U.A.E.

விதைகள்

விதைகள்"

கருவாகி உருவாகி வளர விதை;
பருகும் பழமுண்டாக விதை;
கவிஞனின் கற்பனை விதை;
க"விதை" என்பதும் அதனாலே..!
விதை ஓர் ஒப்பற்ற ஆசான்;
அதைக் கொண்டு பாடம் பெறலாம்
வீரியமுள்ள விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...!
விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்;
எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்..
கணிணி முதல் கைப்பேசி வரை
அனைத்திலும் ஆதாரப் பொருள்
விதை வடிவமே..............
விதையே நீ வாழ்க! வளர்க!!!!!

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்


050-8351499
shaickkalam@yahoo.com

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.

தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்


தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.