Wednesday, November 14, 2007

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும் , இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.

பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். . சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும் , அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.

5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350 , 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.

இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள் போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.

1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி ' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

.
மைலில் அனுப்பியவர் : Mansoor Khan
--
Adam.Arifin
http://www.geocities.com/adamarif

வேலை வாய்ப்பு பெற உதவும் இணையத்தளங்கள்

http://www.gulftalent.com

Friday, November 9, 2007

சங்கங்கள்

THAILAND TAMIL KAZHAGAM
G.P.O. Box No. 2233
149/28 Soiputtaosoth
Bangkok 10500
Thailand
Tel/Fax : 622 234 4382
Mobile : 6681 9373733 / 6487323
E mail : thailandtamil@gmail.com
Website : www.thailandtamilkazhagam.com


ALL INDIA MUSLIM FORUM
3,Sherwani Nagar, Opposite Lucknow University , Sitapur Road ,Lucknow.U.P. India
Phones: +91-522-2733715 : +91-9919777909 : +91-9935520782
Email: < drmksherwani@yahoo.co.in>

Dr. M. K. Sherwani, LL.D. Saeed Arshad Azmi
President General Secretary


இந்தியன் சோஷியல் கிளப்
மலையாளம், மஸ்கட்
24701347 / 99322910

தமிழ்ச் சங்கம்,மஸ்கட் tamilmct@yahoo.com

Wednesday, November 7, 2007

புகை பகைப்போம்

கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்திருந்த மதினா பயணத்தில், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பகிர்ந்துக்கொள்வதற்காக சில விஷயங்களை எடுத்து வந்திருந்தார்கள். நான் இஸ்லாம் சம்பந்தமான சில கவிதைகளை எடுத்துவந்திருந்தேன். சிலர் திண்பண்டங்கள் எடுத்துவந்திருந்தனர். என் நண்பரின் மாமனார் அவரும் படிப்பதற்கு சிலவற்றை எடுத்துவந்திருந்தார். நான் கவிதை தொகுப்புகளை அவரிடம் நீட்டியபோது
பதிலுக்கு ஒரு பிரசுரத்தை என்னிடம் நீட்டினார். அதில் புகைத்தலுக்கு எதிரான எச்சரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. வெளியீடு: குளச்சல் ஏ.என். மீரான், ஜித்தா என்றிருந்தது. சரி யாரோ ஒருவர் எழுதியதை கொடுக்கிறார் என்றிருந்தேன். பிந்தைய நாட்களில்தான் தெரிந்தது அவர்தான் குளச்சல் மீரான் என்பதாக.

மாஷா அல்லாஹ், மனிதருக்கு முடி நரைத்திருந்தாலும் சிந்தனை நரைக்கவில்லை. அவரின் எழுத்தை உங்களுக்காக இங்கே பதிவு செய்திருக்கிறேன். புகைப்பவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். அல்லது இதனை பிரிண்ட் செய்தாவது அவர்களின் கையில் திணித்துவிடுங்கள்.

அன்புக்குரியவர்களே!
1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?

10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?

16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?

18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா?

உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.


fakhrudeen.h@gmail.com
நன்றி: http://nihalvu.blogspot.com/2004/10/blog-post_28.html (அபூ உமர்)

Monday, November 5, 2007

ETA ZENATH MAY 2007

புகைப்படங்கள்

வானலை வளர்தமிழ் - சிவ் ஸ்டார் பவனில் 11 ஜுலை 2008 வெள்ளிக்கிழமை



தேரிழந்தூர் தாஜுத்தீன் உடன்

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா !

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா !

நூல் : இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா
ஆசிரியர் : முனைவர் அ அய்யூப்
பக்கங்கள் : 160
விலை : ரூ 90
வெளியீடு : நவமணி பதிப்பகம்
44 எல்டாம்ஸ் சாலை
சென்னை 600 018
தொலைபேசி : 2434 0523

மறக்கப்பட்ட ஒரு மனிதரை நினைவுபடுத்தி இருக்கிறார் முனைவர் அ. அய்யூப்.

கம்பராமாயண சாயபு, இஸ்லாமிய இதழியலாளர்களின் முன்னோடி, தென்னாட்டு ஜின்னா, தாருல் இஸ்லாம் பத்திரிகையின் பிதாமகன், காதியானி தாவூத் ஷா, நாச்சியார்கோவில் தாவூத் ஷா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா.

அவரைப் பற்றி மிகவும் பிரையாசைப்பட்டு பல இடங்களில் அலைந்து, தேடித்தேடி, பல பேரிடம் விசாரித்து, விஷயங்களை அவரவரது நினைவுப் பதிவேடுகளிலிருந்து பெயர்த்து தந்திருக்கிறார் அய்யூப். ஓர் ஆய்வு நூலுக்கு தேடுவதைப் போல விஷயங்களைத் தேடி கோர்த்திருக்கும் நேர்த்தி சுவையானது.

நூலிலிருந்து சுவையான சில பகுதிகள்

உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்புக்குக் காரணமாக இருந்தது தாவூத் ஷாவிடமிருந்த தமிழறிவு. இராமானுஜருக்கு தமிழ்ப் பாடம் சரியாக வராது. தாவூத் ஷாவிற்கு கணிதப் பாடம் வராது. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.

குர்ஆன் மொழிபெயர்ப்பு

குர் ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கனவு. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி’ இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

இது காதியானி மொழிபெயர்ப்பு, கா•பிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் அவருகள் 13,000 கொடுத்தார்கள்.

1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

சீர்திருத்தக் கருத்துக்கள்

பள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் மாந்திரீகத்ஹ்டில் மூழ்கக் கூடாது. வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும்.

இதழியலாளர்

சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923 இல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார்.

இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல’ என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப்பாற்றில் நீந்தினார்.

கலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்

அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்கிறார் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி.

நன்றி :

நம்பிக்கை
மாத இதழ், மலேசியா
அக்டோபர் 2007

NAMBIKKAI
YPI Publication
29B JALAN PJS 10/24
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia
Tel : 603 5631 4802
Fax : 603 5632 8025
E mail : nambikkai@gmail.com

Sunday, November 4, 2007

BANK

HDFC Bank Ltd - NRI Services
TNT International Mail
P O BOX No. 15321
Dubai - UAE
SAFI 050 9778460

படித்ததில் பிடித்த சிலகவிதைகள்

படித்ததில் பிடித்த சிலகவிதைகள்
- முடிந்து போன துவக்கங்கள் -
கடந்த காலத்தில்தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை என்றுசொல்ல வைக்கின்றன.
கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று
என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது.க
ிடைக்காதவேலை ஒன்று தந்திருக்கிறதுகிடைத்தற்கரிய வேலையை.
துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான்தாங்கும் வலிமையை.
ஏமாற்றிய நண்பன்பெற்றுத் தந்திருக்கிறான்ஏமாறாத மனதை.
தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது
அன்பான மனைவியையும்அழகான குழந்தையையும்.
ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும்கடவுள் இருக்கிறார்.கவனித்துக் கொண்டே

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
SOFTWARE ENGINEER LIFE!
நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய்.
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பாய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்வாழ்க்கையை விட்டு
வெளியேவரத்தெரியாமல்கணிப்பொறிக்குள்சிக்கி தொலைந்துபோவாய்!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து .......

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!

உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா !
தேவைதானா என்று கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா ?
குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா ?
தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா ?
நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா ?
தேவை தான்முட்டைக்குள் இருக்கும் உயிரை மூச்சு விடவைக்கிறது
அனுபவங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை--------வைரமுத்து

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

குஜராத் கலவரம் அதிர்ச்சியான உண்மைகள்.

குஜராத் கலவரம் அதிர்ச்சியான உண்மைகள்.
வீடியோ பதிவின் தமிழாக்கம்

http://www.youtube.com/tmmktv

அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். (அல்குர்ஆன் 30:8)

நடுநிலைமையே சிறந்தது

'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

M.Hussainghani [ஹூஸைன்கனி]
hussainghani@gmail.com
Sikkal - Ramnad Dist
Camp : Riyadh (KSA)

Sunday, September 23, 2007

INDIAN GOVT/PUBLIC SECTOR ORGANISATION IN UAE

India Tourism
P O Box No. 12856
Deira, Dubai
U.A.E.
Tel : 04 2274848
Fax : 04 2274013
E mail : goirto@emirates.net.ae
www.incredibleindia.org


Tea Borad of India
P O Box No. 2415
Dubai - UAE
Tel : 04 3522612
Fax : 04 3522615
E mail : teaboard@emirates.net.ae
www.teaindiaportal.com

Indina Business & Professional Council
P O Box No. 25414
Dubai - UAE
Tel : 04 3324300
Fax : 04 3325655
E mail : info@ibpcdubai.com
www.ibpcdubai.com

Bank of Baroda

Air India

The New India Assurance Co. Ltd

Punjab National Bank

Thursday, August 30, 2007

ORGANISATIONS-MINORITIES/HUMAN RIGHTS

National Commission for Minorities,
5th Floor, Lok Nayak Bhavan, Khan Market,
New Delhi 110 003 Tel. 24618349
Fax 24693302, 24642645, 24698410
E-mail:ncm-mma@nic.in

National Human Rights Commission,
Faridkot House, Copernicus Marg, New Delhi, PIN 110001 Tel.No.
23384012 Fax No. 23384863 E-Mail: covdnhrc@nic.in, ionhrc@nic.in

Tuesday, August 28, 2007

தமிழ் இதழ்கள் - பொது

தினமணி
எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ்
எண் 29,2வது மெயின் ரோடு
அம்பத்தூர் தொழிற்பேட்டை
சென்னை 600 058



INDIA TODAY TAMIL
NO 98 A Dr Radhakrishnan Road
Mylapore
Chennai 600 004
Tel : 28478530
Fax : 28472178

Namma Ooru Seythi
No 3 C Jamals
No 44 Eldams Road
Teynampet
Chennai 600 018
Tel : 24340523

Razak Tower
No 15 Cutchery Road
Mayiladuthurai 609 001
Tel : 04364-225152
Fax : 04364-225101
E mail : nammaooruseythi@hotmail.com
Editor : Dr A Ayoob

Thuglak
No 166 ( Old No. 46 )
Greenways Road
Chennai 600 028
www.thuglak.com

குமுதம்
பழைய எண் 151 புதிய எண் 306
புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை 600 010
kumudamindia@gmail.com
P O Box No. 2592
Chennai 600 031
Tel : 26422148
Fax : 2642 5041


நக்கீரன்
105 ஜானி ஜான்கான் சாலை
சென்னை 600 014
தொலைபபேசி : 28482424
தொலைநகல் : 28485454
மின்னஞ்சல் : editor@nakkheeran.com
nakkheeran2003@yahoo.com
www.nakkheeran.com


குங்குமம்
229 கச்சேரி ரோடு
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 24631234
தொலைநகல் : 24633 1212
editor@kungumam.co.in
வாசகர் கடிதம் : kmj@kungmam.co.in


ஜுனியர் விகடன்
எண் 757 அண்ணா சாலை
சென்னை 600 002

ஆசிரியர் இலாகா :
34 கிரீம்ஸ் ரோடு
சென்னை 600 006
போன் : 2829 3232
பேக்ஸ் : 2829 2800
jv@vikatan.com
www.vikatan.com

விளம்பரங்களுக்கு :
விகடன் மீடியா சர்வீஸஸ்
25/12பி முதல்தளம்
அபிராமபுரம் 3 வது தெரு
ஆழ்வார்பேட்டை
சென்னை 600 018
போன் : 42139697/98
பேகஸ் : 42139699
மின்னஞ்சல் : advt@viktan.com

சந்தா : 044 435 12785


ராணி வார இதழ்
எண் 86 பெரியார் நெடுஞ்சாலை
சென்னை 600 007
தொலைபேசி : 253 24 771
தொலைநகல் : 264 26 884
மின்னஞ்சல் : raniweekly@vsnl.net


புதிய காற்று மாத இதழ்
ஷிஃபா காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
142 வடக்கு வெளி வீதி
யானைக்கல்
மதுரை 625 001
மின்னஞ்சல் : shifa_media@yahoo.co.in
www.puthiyakaatru.keetru.com
www.thamizham.net
haamim musthafa 99 524 00322
tamilpriyan 98 421 15801





தமிழ்ப்பணி
எண் 12 சாயிநகர் இணைப்பு
சென்னை 600 092
Tel : 247 98375 / 28552237
E mail : va_mu_sethuraman@yahoo.com
www.tamilpani.com

சரஸ் சாரல்
டெல்லி பிரஸ்
சிசன்ஸ் காம்ப்ளக்ஸ்
முதல் மாடி
2/92 மாண்டியத் சாலை
எழும்பூர்
சென்னை 600 008
மின்னஞ்சல் : delhipress_chn@vsnl.net



உங்கள் குரல் மாத இதழ்

உங்கள் குரல்


ஆசிரியர்

செ. சீனி நைனா முஹம்மது

துணையாசிரியர்

சு. கமலா

புரவலர் :

தஸ்லீம் முஹம்மது இப்ராஹிம் அல்ஹாஜ் PMP

முகவரி :

UNGALKURAL ENTERPRISE
ROOM 2, Ist Floor
22 China Street
10200 Pulau Pinang
Tel/Fax : 04 - 2615290
MALAYSIA


வெளிநாட்டு பத்திரிகை ஏஜெண்டுகள்

NEW NATIONAL PUBLISHER & DIST
P.O.BOX NO : 349, AL – KHOBAR, DAMAM, SAUDIA.
PHONE : 8644485 / 8640040


SINA BOOK SHOP,
P.O.BOX NO : 28997
PHONE : 00965 – 6424651
KUWAIT.

Tuesday, August 14, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!!

முதுவை ஹிதாயத் - பிளாக்கர் குறித்த கருத்துக்கள்

டாக்டர் ஹிமானா சையத், சிங்கப்பூர்

Syed Ibrahim
toMuduvai Hidayath
dateWed, Jun 25, 2008 at 5:59 AM
subjectRe: maniviza maanaattil kalaijar urai+ theermaanam

THanks; great work; keep it up-hs

நவநீ - அதிகாலை.காம்

navaneetha krishnan
toMuduvai Hidayath
ccnatar_77@yahoo.com
dateTue, Jun 24, 2008 at 1:27 AM
subjectRe: துபாயில் இந்திய வாலிபால் சம்மேளன தலைவருக்கு வரவேற்பு

Thalaiva,
Please forwarded msg. Could you please get some news daily from Dubai and Middle East? Shall we put these with courtesy? Please get back to me.


வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

MUSLIM POLYTECHNICS

01. MOHAMED SATHAK POLYTECHNIC COLLEGE
Kilakarai - 623 806
Tel : 04567 - 244889/241392
Fax : 04567 - 244928
E mail : info@mspc.ac.in
www.mspc.ac.in

02. Aalim Muhammed Salegh Polytechnic College
Nizara Educational Campus
Muthapudupet
Avadi IAF
Chennai 55
Tel : 2684 2636 /26842339
Fax : 26842447

Sunday, August 12, 2007

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

துபாயில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 10 ) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்றது.

வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.

இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.

ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபாயில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.
கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபாயில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

உணர்வாய் உன்னை பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் ( 050 655 24 91 ), செயலாளர் ஜகபர் சாதிக் ( 050 734 6756 ) , அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இது போன்ற பயிற்சி முகாம்களை தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் ( 050 614 2633) மற்றும் உசேன் பாஷா ( 050 385 1929 ) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.