Thursday, February 14, 2008

கீழக்கரை கல்லூரி நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநர்



கீழக்க்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில தடகள போட்டியை விளையாட்டு வீராங்கனை சைனி வில்சன் துவக்கி வைக்கிறார். அருகில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் மேலாணமை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் மற்றும் பலர்.

Great words:

Great words:

WILLIAM SHAKESPHERE

Three sentences for getting SUCCESS:
a) know more than other
b) work more than other
c) expect less than other

ADOLPH HITLER
If you win you need not explain… But if you lose you should not be there to explain

ALEN STRIKE
Don’t compare yourself with anyone in this world. If you do so, you are insulting yourself

MOTHER TERESA
If we cannot love the person whom we see, how can we love god, whom we cannot see?
If you start judging people you will be having no time to love them…

BONNIE BLAIR
Winning doesn’t always mean being first, winning means you’re doing better than you’ve done before –

THOMAS EDISON
I will not say I failed 1000 times, I will say that I discovered there are 1000 ways that can cause failure - -

LEO TOLSTOY
Everyone thinks of changing the world, but no one thinks of changing himself…

ABRAHAM LINCOLN
Believing everybody is dangerous; believing nobody is very dangerous…

EINSTEIN
If someone feels that they had never made a mistake in their life, then it means they had never tried a new thing in their life…

CHARLES
Never break four things in your life – Trust, Promise , Relation & Heart because when they break they don’t make noise but pain a lot.

Compiled by : MR JSA BUKHARI, Executive Director, ETA ZENATH, Dubai

Wednesday, February 13, 2008

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு


துபாய் மற்றும் வளைகுடாவில் வாழ்ந்து வரும் இந்தியர் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை குறும்படமாக தயாரித்து வசந்தம் செண்டரல் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட இருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேற்கண்ட தகவலை குறும்பட நிகழ்ச்சியினை தயாரித்து வரும் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/13/wrold-singapore-tamil-tv-programme-on-gulf-indians.html

துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாய் மற்றும் அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு சார்பில் தமிழக பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 01.02.2008 வெள்ளிக்கிழமை 6.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற இருக்கிறது.

டாக்டர் ஏ. அமீர்ஜஹான் அவர்கள் பாலியல் துறையில் சுமார் 25 ஆண்டுக்கும் அதிகமாக அனுபவம் மிக்கவர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் ரஷியாவில் ஸ்டாவ்ரோபோல் மாநில மருத்துவ பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம், செக்ஸாலஜி குறிதது தமிழில் நூல்கள் எழுதியமைக்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பாராட்டு, மதுரை அமுதசுரபி கலைமன்றத்தின் பாராட்டு, தமிழ்நாடு ராஜிவி காந்தி விருது, செல்வமணி ஃபைன் ஆர்ட்ஸ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ரஷிய மருத்துவப் பல்கலையின் தேர்வுக்குழுவில் உள்ளார். ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

மருத்துவத்துறையில் சேவையாற்றிவரும் இவர்களை பாராட்டி அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவரும், அயல்நாடு வாழ் தமிழ் மக்கள் சேவைக்காக விருது பெற்றவருமான அ.சு. மூர்த்தி, சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், துபாய் அமீரகத் தமிழர்கள அமைப்பு அமுதரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்ட உள்ளனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரம் வேண்டுவோர் 050 4748490 / 050 7979552 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா



துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா


உழைப்போம்! உயர்வோம்!! உதவுவோம்!!! எனும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு ( Web : www.etadxb.20fr.com Email : etadxb@yahoo.com ) சமுதாயப் பணியில் தனது ஆறாம் வயதினை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை நினைவுறுத்தும் வகையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 7வது ஆண்டு துவக்கவிழாவும், பவள விழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழாவும்,, அமீரகத்தில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணமாகவும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

மாண்புமிகு ஷேக் சுல்த்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ருஷி அவர்கள்
(சேர்மன், பின் பக்கீத் நிறுவனங்கள்)

தமிழர் தலைவர்
மானமிகு திரு. கி. வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)

புரட்சித்தமிழன் திரு. சத்யராஜ் அவர்கள்

திரு. குடந்தை அன்பழகன் அவர்கள்
(நிறுவனர், அன்பு மருத்துவமனை மற்றும் கல்விசார் நிறுவனங்கள்)

திரு. வீரசேகரன் அவர்கள்
(வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

இவர்களுடன் கலைஞர் டிவி புகழ் "எல்லாமே சிரிப்புதான்" குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவின் சிறப்புகளாக, ஆண்டுமலர் வெளியீடு, அங்கத்தினர்கள் பங்கேற்கும் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற 050 4748490 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

தகவல் : அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008

காயல் பிறைக்கொடியான் காலமானார்!

காயல் பிறைக்கொடியான் காலமானார்! நல்லடக்கம் மஃரிபுக்குப் பின்!!


தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)


கடந்த சில மாதங்களாக சுகவீனப்பட்டிருந்த காயல்பிறைக்கொடியான் கவிஞர்
எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் 09 பிப்ரவரி 2008 சனிக்கிழமை காலை 10:45
மணியளவில் காயல்பட்டணம் கே.எம்.டி.மருத்துவமனையில் காலமானார்.


------------------------------


காயல்பிறைக்கொடியான் மறைவு! பேரா.காதர் மொகிதீன் இரங்கல்!!


கவிஞர் காயல்பிறைக்கொடியானின் மரணத்தை முன்னிட்டு, அவர் வாழ்நாள்
முழுவதும் சார்ந்திருந்த பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்
தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ள இரங்கல்
செய்தி:-


அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தம் கவிதை உணர்வுகளால் தமிழை
அலங்கரித்த காயல்பிறைக்கொடியான் காலமான செய்தி வருத்தத்தைத் தருகிறது.
மார்க்கம், தேசியம், தாய்ச்சபை என அவர் பாடாத தலைப்புகளே இல்லை என
சொல்லும் அளவிற்கு பல்லாயிரக் கணக்கான பாடல்களை யாத்தளித்தவர்...


திங்கள் வழங்கும்..., எழில் முத்துப்போலே... என தொடங்குகின்ற நபிகளாரின்
புகழ்பாடும் அற்புதமான கவிதைகளும், ஒன்றுபட்டு வாழ்வோம்... ஒருமைப்பாடு
பேணுவோம்... நன்றியோடு தாயகத்தில் நன்மை சூழ வாழ்வோம் என்ற தேசிய
உணர்வூட்டும் பாடல்களும் கவிஞருக்கு பெருமை சேர்த்தவை!


காலமெல்லாம் முஸ்லிம் லீகிற்கு உழைத்த காயல்பிறைக்கொடியான் முஸ்லிம்
லீகின் புகழ்பாடும் கவிதைகள் பலவற்றை யாத்தளித்தவர்... பிறைக்கொடி
உயர்ந்தே பறக்கட்டுமே... என்ற தலைப்பிலான பாடல்கள் பல இவர் பாடிய
பாடல்களில் முக்கிய இடம்பெற்றவை!


கவிஞர் காயல்பிறைக்கொடியான் உள்ளத்தாலும், உணர்வாலும், எண்ணத்தாலும்,
எழுத்தாலும், பேச்சாலும் முஸ்லிம் லீகிற்காக வாழ்ந்தவர்... மாபெரும்
அறிஞர் இஸ்லாமிய மார்க்கத்தில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்...


மரபுக் கவிதையிலும், இசைப்பாட்டிலும் சன்மார்க்க விளக்கத்தையும் சமுதாய
ஒற்றுமையையும் முஸ்லிம் லீகின் தனித்துவத்தையும் படிவற்ற சமுதாய குயில்
அவர்!


இந்த தமிழருக்கு பாராட்டு விழாவும், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும்
அண்மையில்தான் காயல்பட்டணம் நடைபெற்று நானும் பங்கேற்று பாராட்டி
வாழ்த்தும், வாய்ப்பும் கிடைத்தது.


இன்று உடலால் நம்மை விட்டு அவர் பிரிந்திருந்தாலும் உணர்வால் நம்முடன்
என்றும் இருக்கிறார்... அன்னாரின் மறுவுலக வாழ்விற்கு அனைவரும் வல்ல
இறைவனை இறைஞ்சுகிறோம்.


-இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில்
தெரிவித்துள்ளார்


------------------------------------


காயல்பிறைக் கொடியானின் கடைசி இரங்கற்பா
தகவல்: காயல்பட்டணத்திலிருந்து மாஸ்டர் கம்ப்;யுட்டர் அகடமி


உன்னுடைய பொம்மை தான்
நானென்று நானறிவேன்
உன்னுடைய பலகோடி கோடி
அடியாரில் நானொருவன்


இன்னல் தரும் பிணிகளினால்
தாக்குண்டு தவிக்கின்றேன்
என்னை இவ்வாறு இங்கே
இடர்படுத்தல் சம்மதமோ!


என்னுடைய பணிகளிங்கே
இன்னும் இருக்குமெனில்
இன்னல் தரும் பிணிகளெனை
அணுகாது காப்பாயே!


இல்லை எனில் உடன்தூய
இனிய கலிமாவுடனே
வல்லோனே உன் சிறந்த
விண்ணுலகிற் கழைப்பாயே!!


---------------------------------------------------------------------------­-----
காயல் பிறைக்கொடியான்
கவிஞர் எஸ்.எம்.பி.யின் கடைசி இரங்கற்பா இது!


--------------------------


http://www.kayalpatnam.com

http://groups.google.com/group/imantimes

இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண ..............

Questions are answered by: Sheikh Adil Salahi. He can be reached at:

islam@arabnews.com

Questions on religious matters may be sent to the following address which is being normally forwarded to the appropriate channel for reply and clarification:
Islam in Perspective Section, Arab News, P O Box: 10452, Jeddah-21433, SAUDI ARABIA

Tuesday, February 12, 2008

பெண்கள் கவனத்திற்கு…

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரை ஆக்கம்: சகோதரர் - சுலைமான் அவர்கள்

தகவல் உதவி :
insanbkk@yahoo.com

TO GET UNIVERSITY LESSONS AT FREE OF COST

TO GET UNIVERSITY LESSONS AT FREE OF COST


Subject: FREE UNIVERSITY OPEN COURSEWARE

In the name of Allah, The Most Beneficent, The Most Merciful


For Deen
======
Madeena Islamic University - http://iu.edu.sa/edu/
For Dunya
========
Massachusetts Institute of Technology -
http://ocw.mit.edu/OcwWeb/Nuclear-Engineering/index.htm

தகவல் உதவி :

sapeermohamed@yahoo.com

இலவச இருதய அறுவை சிகிச்சை

CHIME (A trust formed by MIOT Hospital, Chennai) is giving free
heart

surgery for children with congenital heart disease. If you know any

persons with this disability please pass it to them. Forward this
to

all your friends.



Contact Details: chime@miothospitals.com

Source: The Hindu

தகவல் உதவி :

sadikjafar@gmail.com

திருக்குர்ஆன் வானொலி

Pls. find the attached Quran Radio, it is very interesting.
Pls. send it to your friends.

http://www.iraqcyber.com/quran/abdul_baset_1/quranp_1.html




தகவல் உதவி :
nishar ahmed

தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும்போது .......

மனித நேயப்பணிகளைச் செய்து வரும் துபாய் ஈமான் அமைப்பு : டாக்டர் ஏ. அமீர்ஜஹான் பாராட்டு


மனித நேயப்பணிகளைச் செய்து வரும் துபாய் ஈமான் அமைப்பு : டாக்டர் ஏ. அமீர்ஜஹான் பாராட்டு

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு 04.02.2008 திங்கட்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ( அல் முதீனா லூலூ செண்டர் பின்புறம் ) ஆரோக்கிய அறிவியல் எனும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துவக்கமாக ஜாபர் சாதிக் இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் அஹமது மொஹிதின் முன்னிலை வகித்தார்.

பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழகத்திலிருந்து வருகை புரிந்த பிரபல செக்ஸாலஜி நிபுணர் டாக்டர் ஏ. அமீர் ஜஹான் உடல்நலத்தின் இன்றியமையாமை குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் மனிதநேயப் பணிகள் குறித்து பாராட்டினார். ஒரு காலத்தில் கிழக்கைப் பார் எனும் முழக்கம் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது அமீரகம் மற்றும் வளைகுடாவில் ஏற்பட்டு வரும் மகத்தான வளர்ச்சி மேற்கைப் பார் எனும் முழக்கம் ஏற்பட வழிவகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று தங்களது ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். ஆயுளைக் குறைக்கும் ஆயிலை ( எண்ணெய் ) உணவுப் பொருட்களில் குறைத்து சாப்பிட வேண்டும். நல்லவை நடக்க நாம் தினமும் காலாற நடக்க வேண்டும் என்றார். உணவில் காய்கற் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகள் நம் வாழ்வின் ஆயுளை அதிகரிக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் ஏ. நஸீருல் அமீன் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின், ஷேக் முஹம்மது உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Monday, February 11, 2008

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள .....

Assalamu Alaikum,

Please visit the below link & trust me this will be useful for most of us especially for the students.

http://www.world-english.org/


Regards,

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்

அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள் குறித்த விபரமாவது :

பேச்சுப் போட்டி 1 ( ஆலிம் பெருமக்களுக்கு மட்டும் )

வெள்ளிக்கிழமை 29.02.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.

உலக வாழ்வில் பெருமானாரின் இறுதி நாட்கள், இன்றைக்கும் பொருந்துகிற இறுதித் தூதரின் சொற்கள், மஹ்ஷர் வெளியில் மாநபியின் ஷபாஅத், அரபகம் அண்ணலாரின் வருகைக்கு முன்னரும்,பின்னரும் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேசுவதற்கு தயார் நிலையில் வரவேண்டும். இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 20.02.2008

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

புனித குர்ஆன் மனனப் போட்டி 07.03.2008 வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை 07.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.

புனித குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான மனனப் போட்டியில் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஹாபிழ்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டி இவ்வருடம் முதல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 29.02.2008


இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச புனித உம்ரா பயணம், துபாய் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக் கூப்பன், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

பேச்சுப் போட்டி 2 ( பொதுமக்கள், மாணவ, மாணவியர் )

வெள்ளிக்கிழமை 14.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( அல்முதினா லூலூ செண்டர் பின்புறம் ) நடைபெற இருக்கிறது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் ( ஸல் ) அவர்கள், வேந்தர் நபிகளின் வருகை பற்றி வேதங்களின் முன்னறிவிப்பு, சான்றோர்கள் பார்வையில் ( ஸல் ), உத்தம நபியும், உண்மைத் தோழர்களும், பயணம் வகுத்த பாதை ( ஹிஜ்ரத் ) ஆகிய தலைப்புகளில் பொதுமக்கள் பேசலாம்.

இப்போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் ஜாதிம் மதம், இன வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

அண்ணலார் ( ஸல் ) ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒன்றில் மாணவ, மாணவியர் பேசலாம்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 10.03.2008

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் ஷார்ஜா திருச்சி ஷார்ஜா இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்ய்யத்தீன் 050 58 53 888, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712, ஈமான் அலுவலகம் 04 2661415 தொலைநகல் 04 2664142 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

ETA-Ascon seeks jets for new airline


ETA-Ascon seeks jets for new airline

By Saifur Rahman, Business News Editor

Published: February 10, 2008, 00:45

Dubai: ETA-Ascon, one of the UAE's largest diversified conglomerates, is in talks with regional jet manufacturers Embrayer, Bombardier and ATR to acquire jets to start its new airline in India, a top official said.
"Yes, we have started talking to all three regional jet manufacturers - Embrayer, Bombardier and ATR - to acquire 70-90 seater regional jets for the new airline in India," Syed M. Salahuddin, managing director of the $4.3 billion Emirates Trading Agency-Associated Construction (ETA-Ascon) group, told Gulf News on Wednesday.
"We have already got the licence to start the airline. We are preparing for commercial launch in around October. It will be a regional airline."

New entry

ETA-Ascon group, a major player in shipping, trading, construction, real estate and power sectors, has recently entered into aviation business with Star Aviation - a new leasing entity.
"We already have eight aircraft leased to different airlines and the portfolio size is worth $200 million," Salahuddin said.
The group, jointly owned by Dubai's Al Ghurair Group and a group of non-resident Indians, which had grown its business through trading, shipping and construction, has further diversified its portfolio by entering into real estate, hospitality, cement production, steel manufacturing, retail, jewellery and food services.
It has rebranded its property and hospitality portfolio with ETA Star that has more than 15 million square feet of built-up area in the planning and construction, worth $10 billion.
It is also developing a Dh2 billion luxury neighbourhood - Dubai Lifestyle City in Dubai. "We are planning to develop Lifestyle Cities in other parts of the world," he said.
Shipping
However, the company which employs 58,000 people, is also expanding its core businesses. With 35 vessels, it owns the largest privately owned fleet.
"We have ordered 30 vessels worth $1.5 billion that will join our 35-strong fleet in four years. Among the new vessels, the ratio between bulk carriers and liquid will be 50:50. We are also expanding our liquid carriers fleet," he said.
"As 80 per cent of the global trade move by sea, we are enjoying our share of growth. Last year, we carried 25 million metric tonnes of cargo, which will go up to 30-35 million tonnes."
India expansion
ETA-Ascon group has been investing in India heavily as major opportunities are being unlocked by the Indian government.
"India provides the biggest opportunity for us and we see so much scope for growth," he said.
His company is currently planning and developing two townships in India's Bangalore and Chennai.
"However, investment in infrastructure could unlock opportunities in other areas. For example, we have recently started a cargo rail service (Railway Wagon) to move containers between Delhi and Bombay, which will expand to all other major Indian cities as the economy grows there."

http://www.gulfnews.com/business/Aviation/10188600.html

துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு


துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு

துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் கீழை சீனா தானாவின் 'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா லேண்ட் மார்க் ஹோட்டலில் 08.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பவித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார்.

கந்தநாதன் தனது நூல் விமர்சன உரையில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் மனித நேயம், மதநல்லிணக்கம், இறைநம்பிக்கையினை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியை மலிகா சபியுதீன் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளைக் கொண்ட இதுபோன்ற புத்தகங்களை வாரம் ஒருமுறை குழந்தைகளிடம் வாசித்துக் காண்பித்து இக்கணினி யுகத்தில் அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார்.

பொறியாளர் ஆல்பர்ட் இந்நூலை வாசிப்பவர் தனித மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார் என்பதில் ஐயமில்லை என்றார்.

'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' நூலை நூலாசிரியர் கீழை சீனா தானா அவர்கள் வெளியிட தொழிலதிபர் முரளி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மர்சூக், பாபநாசம் அப்துல் ஹமீது, அஜ்மான் மூர்த்தி, டாக்டர் வில்லியம்ஸ், இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மர்சூக் அவர்கள் தனது உரையில் இந்நூல் தனக்கு ஒரு ஊக்க சக்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் வில்லியம்ஸ், அஜ்மான் மூர்த்தி, அப்துல் வாஹித், கவிஞர் இஸ்மத், கமருல் ஜமான், உஸ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

நூலாசிரியர் கீழை சீனா தானா ஏற்புரை நிகழ்த்தினார்.

சங்கமம் தொலைக்காட்சி ( 04 3530607 ) நிர்வாக இயக்குநர் கலையன்பன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

http://www.puduvaitamilsonline.com/news8.html

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்


துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.

28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா ? என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.
இவரது தொடர்பு எண் 050 9044240.

குறிப்பு : இச்செய்தியை www.thatstamil.com இணைய இதழில் படித்து விட்டு பாலாஜி, பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சகோதரகள் உதவ முன்வந்துள்ளனர். இதற்காக முயற்சி எடுத்த வி. களத்தூர் கமால் பாஷாவுக்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/11/world-tamil-youths-suffering-in-dubai.html

http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post_10.html

Sunday, February 3, 2008

எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :



எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :
துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பு விழாவில் தமிழக பிரமுகர் பேச்சு


அமீரக தமிழர்கள் அமைப்பு, துபாய்,அஜ்மான் மற்றும் தமிழ்த்தேர் அமைப்புகள் இணைந்து தமிழகத்தின் பிரபல மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான், டாக்டர் ஏ. நஸிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு மற்றும் மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சி துபாய் கராமா சிவ் ஸ்டார் பவன் உண(ர்)வகத்தில் 01.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் அ.சு. மூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்த்தேர் அமைப்பின் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். துபாய் அமீரக தமிழர்கள் அமைபின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈடிஏ அஸ்கான் தொழிலாளர் முகாம் நிர்வாகி சம்சுதீன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் தனது உரையில் எளிமையான நிலையில் வாழ்ந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் இலக்குடன் செயல்பட்டதால் மிக உயர்ந்த நிலையை அடைந்து கோடானுகோடி மக்களின் இதயங்கவர்ந்தவராக மாறினார். உழைப்பில் உண்மை இருக்குமானால் உயர்நிலையை அடையலாம் என்பது தனது அமீரக சுற்றுப்பயணத்தில் கண்ட அனுபவம் என்றார் முத்தாய்ப்பாக.

மதுக்கூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தண்டபாணி தனது உரையில் அமீரகத்தில் மன்னராட்சி இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருவது தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் வளங்கள் பல இருந்தும் ஜனநாயக நடைமுறை நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்கு போட்டியிட வேண்டுமென்றால் அமீரகத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற தகுதியைக் கொண்டவராக இருத்தல் வேண்டும் எனும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பேன் என்றார். ( இவ்வாறு அரங்கமே அதிர்ந்தது )

இந்தியன் முஸ்லிம் சங்கத்தின் ( ஈமான் ) துணைத்தலைவர் தனது உரையில் தமிழ் மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ்க் குடும்பங்களில் பட்டதாரிகளே இல்லை எனும் நிலையை மாற்ற வேண்டும் என்றார். இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் மற்றும் தியாகத்திருநாள் இவையிரண்டும் உணர்த்தும் படிப்பினைகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் அஷ்ரப் அலி, தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டணம் மணி, அமீரகக் கவிஞர்கள் பேரவையின் இசாக்,
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

ஏற்புரை நிகழ்த்திய சென்னை ஏ.ஜே. அறக்கட்டளைத் தலைவரும், பிரபல செக்ஸாலஜி நிபுணருமான டாக்டர் ஏ.அமீர்ஜஹான் அவர்கள் தனது உரையில் தமிழ் மகன் உலகின் எப்பகுதிக்கு சென்றாலும் தாயகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, தமிழ் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறான். தமிழ் மகன் பணம் மட்டுமலாது சிறந்த குணம் கொண்டவராக இருந்து வருகிறான். அறிவுப்பாலம் இட்ட அப்துல் கலாமை நினைவு கூர்ந்த அவர் தமிழனின் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சென்னை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வியை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னை அன்புப் பாலம் அமைப்பின் வெளிநாடு வாழ் இந்தியர்க்கு சிறப்பான சேவையாற்றியமைக்கான விருது பெற்ற ஏ.எஸ். மூர்த்தி, சாதனையாளர் விருது பெற்ற கோவிந்தராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

ரபிக், ஜியாவுதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.

மருத்துவம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாரடைப்பு ஏற்படும் போது தடுக்க வேண்டிய வழிமுறைகள், பாலியல் குறித்த சந்தேகங்கள், நடைப்பயிற்சியின் அவசியம், தினமும் குடிக்க வேண்டிய குடிநீரின் குறைந்த பட்ச அளவு உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டது.

தமிழ்த்தேர் அமைப்பின் கந்தநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவிமதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சைபுதீன், தமிழ்த்தேர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆடிட்டர் அமீர் சுல்தான்,பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் பொருளாளர் ஏ.அஹ்மது இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.