Monday, May 26, 2008

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால் கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107


http://niduronline.com/?p=559

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி

சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.

இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.

Sunday, May 25, 2008

தமிழக பல்கலைக்கழகங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாகையூர்
திருச்சி சாலை
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 0462 227620
www.tamiluniversity.ac.in

கல்வியியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 04362 - 227782 / 226720
www.tamiluniversity.ac.in

அந்தமானுக்கு கப்பலில் செல்ல

அந்தமான் மற்றும் நிக்கோபார் அட்மினிஷ்டிரேஷன்
டைரக்டரேட் ஆப் ஷிப்பிங் சர்வீஸஸ்
( யூனியன் பிரதேச அரசு )
17 ஜவகர் பில்டிங்ஸ் 2வது மாடி
ராஜாஜி சாலை
சென்னை 600 001
தொலைபேசி : 2522 6873

பொறியியல் கல்லூரிகள்

Adhiyamaan College of Engineering
Dr M G R Nagar
Hosur 635 109
Krishnagiri District
Tel : 04344 261025/260570/261002
Fax : 04344 260573

E mail : aeri_admission@yahoo.com
info@adhiyamaan.ac.in
www.adhiyamaan.ac.in


Chennai Office :

Madras Institute of Social Science
621 Anna Salai
Khiviraj Motors Bldg
Chennai 600 006
Tel : 044 28295110 / 2829 3218 / 2829 3112
Fax : 044 2829 5110

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

தமிழ் அறிஞருக்கு ரூ. 1.5 லட்சம்
சிறந்த புத்தகத்துக்கு ரூ. 1 லட்சம்

அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக இந்த அண்டும் ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.

ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24 ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

காக்கைச் சோறு' என்ற நூலை கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.

கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.

ஜுன் 30 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

அறிஞர் பெருமக்களைக் கொண்ட ஒரு தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.

பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் விபரம் பெற

ஆதித்தனார் இலக்கியப் பரிசு
தினத்தந்தி
சென்னை 600 007
என்ற முகவ்ரிக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

விவரம் - விதிகள்

1. அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் இலக்கியப்பரிசுகளை தினத்தந்தி நாளிதழ் வழங்குகிறது.

2. மொத்தப் பரிசுத் தொகை இரண்டரை லட்ச ரூபாய்

3. அத்தொகை தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கு ஒரு லட்ச ரூபாய் என்றும், வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய முதிய தமிழ் அறிஞர் ஒருவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் என்றும் பிரித்துக் கொடுக்கப்படும்.

4. ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

5. தேர்வுக்குழுவின் தேர்வே முடிவானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல.

6. பரிசைப் பகிர்ந்து அளிக்க தேர்வுக்குழுவிற்கு உரிமை உண்டு

7. பரிசுத்திட்டம் பற்றி நேரடித் தொடர்பும், கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக்கூடாது.

8. விதிகளை மாற்றவோ, புது விதிகளை சேர்க்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.

9. ஜுன் 30 ஆம் தேதிக்குள் ஆதித்தனார் இலக்கியப் பரிசு, தினத்தந்தி, சென்னை 600 007 என்ற முகவரிக்கு நூல்கள் / தமிழறிஞர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

நூல்கள்

10. கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாத்துறை நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

11. ஒருவர் எத்தனை நூல்கள் ( தலைப்புகள் ) வேண்டுமானாலும் அனுப்பலாம்.

12. அச்சேறிய நூல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு நூலிலும் 6 பிரதிகள் அனுப்ப வேண்டும். எந்தத் துறையைச் சேர்ந்த நூல் என்பதை ஒவ்வொரு பிரதியிலும் குறிப்பிட வேண்டும்.

13. பரிசுக்குரிய ஆண்டுக்கு முன்னதாக 3 ஆண்டுக்குள் ( 2005,2006,2007 ) முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும்.

14. எழுதிய ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் அல்லது பதிப்பாளர் நூல்களை அனுப்பலாம்.

15. நூல் 192 பக்கத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். ( கவிதை என்றால் 160 பக்கத்துக்குக் குறையக்கூடாது ) சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். தழுவலாகவோ, மொழி பெயர்ப்பாகவோ இருக்கக்கூடாது.

16. ஆசிரியரின் சொந்த முயற்சியால் எழுதப்பட்ட நூல் என்ற உறுதிமொழியுடனும், ஆசிரியரின் கையொப்பத்துடனும் நூலை அனுப்ப வேண்டும்.

17. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.

18. ஒருமுறை பரிசீலனைக்கு அனுப்பிய நூல்களை மறு ஆண்டும் அனுப்பலாம்.

19. ஒருமுறை பரிசு பெற்றவருக்கு மீண்டும் பரிசு வழங்கப்படமாட்டாது.

தமிழறிஞர்கள்

20. தமிழ்த் தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் பெயர்களை எவரும் பரிந்துரை செய்யலாம். அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். பிறந்த நாள் அல்லது வயது குறிப்பிட வேண்டும்.

21. அறிஞர் பெருமக்கள் தாங்களும் விண்ணப்பிக்கலாம். தங்கள் பணிகள் பற்றிய விவரங்களைத் தகுந்த சான்றுகளுடன் அனுப்ப வேண்டும்.

22. பெயர்களைப் பரிசீலனை செய்து, பரிசுக்குரிய ஒரு அறிஞரைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

Saturday, May 24, 2008

திருச்சி - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு - புகைப்படங்கள்




www.alkauthar.org

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu,

Dear friend,

I hope that this email finds you in the best of health and emaan. I am Tawfique Chowdhury, Director of AlKauthar Institute [http://www.alkauthar.org] sending you this email to update you on an exciting event taking place in Chennai at the end of the month of May – the first AlKauthar course in India in Chennai entitled: "The Mark of a Jurist" – The amazing rules of fiqh! [Read more]

ABOUT ALKAUTHAR
As you are aware, AlKauthar is a non-profit educational institute that offers intensive weekend courses in various countries around the world such as UK, Australia, South Africa and now launching in India inshaAllah. Courses are delivered in professional venues by prominent and well known international speakers – many of whom you met at the last Peace Conference in Chennai. Infact AlKauthar courses are so popular mashaAllah that we have over 3,500 unique students that have attended our courses worldwide and our courses are frequently packed out. In fact, we are the largest provider of Islamic intensive courses in the UK walhamdulillah with a student base running into the thousands. [http://www.alkauthar.org]
Why are AlKauthar courses so popular? Because we do our homework so that we can provide you with a fantastic course experience. Whether it be:
¨ the knowledge and fantastic quality of the course instructor,
¨ the ability of AlKauthar instructors to condense so much knowledge and information into an exciting knowledge filled single weekend course,
¨ the comprehensive notes,
¨ the modern teaching methodology,
¨ the use of IT equipment,
¨ the student portal that allows for follow-up after the course,
¨ the internet forums setup for answering questions from the students [http://forums.alkauthar.org/],
¨ the exams after the course so that the student can receive credits for an AlKauthar diploma and degree,
¨ the fantastic experience of studying together with friends,
¨ studying Islam in a fun and engaging environment from a world renowned Islamic orator and lecturer
… rest assured that your course experience with AlKauthar will be an event that you will always cherish inshaAllah.
AlKauthar Institute employs some of the world's most prominent speakers to teach its courses, like Sh Waleed Basyouni, Sh Yasir Qadhi, Sh Yassir Fazaga and many others who are all prominently featured on Dr Zakir Naik's Peace TV. AlKauthar is endorsed by many scholars worldwide and has their support. So you can be rest assured that you are getting the very best of authentic knowledge in the highest quality education style currently available in the Islamic education field.

THE FIRST COURSE IN CHENNAI: THE MARK OF JURIST
InshaAllah, in a few days, you will be receiving an email from us on the first AlKauthar course in Chennai – the Mark of a Jurist on the 31st of May – 1st of June 2008. I will be delivering the course myself inshaAllah. I am sure you will find the course a fantastic experience. AlKauthar students agree that there is rarely a more beneficial, stimulating and engaging course that AlKauthar delivers. Please ensure that you enroll online as soon as possible so that your seat is booked, as we anticipate strong demand inshaAllah! [Enroll online now]

ALKAUTHAR NEEDS YOU
At this time, AlKauthar needs your support to ensure that the course is a success. Please help us enrich lives through knowledge by doing the following:
¨ Send this email out to 10 of your friends and all your email lists that you have access to. Remember: You will have the reward of anyone that you guide to this knowledge.
¨ Send us 10 email addresses of your friends who may be interested in attending this course. Please email the addresses to us to: chennai@alkauthar.org
¨ If you can help with spreading the word, organizing marketing by spreading AlKauthar posters in various mosques in Chennai, distributing marketing material etc.. please email us at chennai@alkauthar.org
¨ We need your duas to make this concept successful in India. Truly, dua is the weapon of the believer!

NEED MORE INFO?
Please do not hesitate to use the following sources for more information:
¨ Check out our website at http://www.alkauthar.org
¨ To contact us, please call the following numbers: Sisters - 9381053184, 9710442030; Brothers - 9841037786, 9444010185
¨ To enroll for the Mark of a Jurist course in Chennai on the 31st May – 1st June 2008, please go to http://www.alkauthar.org/enrol.asp?Chosencourse=08_Che_MOJ
¨ If you would like to contact us or have any specific questions, then please do not hesitate to email us on chennai@alkauthar.org
Jazakallahulkhair and I ask Allah to keep us sincere in this endeavor and make it purely for His cause. Ameen.

Tawfique Chowdhury
Director
AlKauthar Institute and Mercy Mission
www.alkauthar.org
www.mercymission.org.au

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT

FOUNDATION FOR ECONOMIC AND EDUCATIONAL DEVELOPMENT
1-8-353 to 355, Begumpet, Beside Old HUDA Office, Secunderabad - 500 003, A.P., India

Phone Nos. (0091) (40) 27907680 / 27901426 Fax: (0091) (40) 27901239

Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org

(Registration No. 010230673 of Foreign Contribution (Regulation) Act, 1976 )


Assalamu Alaikum!

Re: Distribution of Uniforms and note books to poor students studying in Government Schools.

Education is the ladder which can take one to the highest position in life. This is the reason why Prophet Muhammad (SAS) emphasized the need of education time and again.

Foundation for Economic and Educational Development â€" FEED is striving hard for the past few years to meet the educational needs of the community by providing facilities for school education and also by giving scholarships for higher studies to poor and meritorious students. In addition to the 66 Urdu medium and 6 English medium schools run by FEED, it is felt necessary to provide school uniforms and note books to thousands of students studying in Government schools. As you are aware, the poorest of the poor children only will be admitted in the schools run by Government, in view of the nominal fees/free education.

These students can not afford to purchase note books and uniform because of the meager income of the family which is insufficient to feed the family members. As a result of this pitiable situation, these students develop inferiority complex since child hood itself, and the same will continue through out their life, leaving them in depression and make them inefficient, and frustrated in the entire career. Because of this reason, the drop-outs in class 8th, 9th and 10th are increasing year by year, as a result of which many of the seats in Minority Colleges are left unfilled. We feel it necessary to reduce the drop out rate and to see that these children continue their higher education, choose a professional career and lead a respectable life.

In the last academic year, we distributed school bags to these children. But the Teachers and Head masters advised us that, since many of these children are living in slums and attending classes with torn clothes, the distribution of uniform and note books will be more useful to them, so that they can come to the school in a dignified manner with proper clothing. Even though there are 27,000 students studying in 8th, 9th and 10th Classes in the city of Hyderabad, we are planning to cover 10,000 most deserving students in the coming academic year 2008-09.

To develop self confidence in these students from their child hood, and also to make them feel that they are second to none, we feel it necessary to provide them all possible help and facilities to continue their education uninterruptedly. Hence, we propose to supply them uniform and note books as per the following details:

Contd…2


- : 2 :-

Average cost of each set of uniform clothes and note books:

DescriptionIndian RupeesUS DollarsSaudi Riyals
a) Shirt and Pant for each boy200519
b) Shalwar and Khameez with dupatta for each girl200519
c) Cost of each note book
(10 note books per each student) Rs.14 x 10 =140140
413
Total Amount per each Student:
(Clothes + Note Books)340932


We request you to participate in this noble cause and support maximum number of children to continue their education in a dignified manner.

Kindly send your contribution in the name of “Foundation for Economic and Educational Development” through your personal cheques on the above address. Donors from outside India can pay through our Website: (www.feed-hyd.org) by using their CREDIT CARD which would be remitted to our account instantaneously.

Jazak Allah Khair

For Foundation for Economic and Educational Development

Ghiasuddin Babukhan
Managing Trustee


P.S.:- Please forward this e-mail to your friends and relatives.

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் ( முன்னாள் முதல்வர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை ) இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம் எனும் தலைப்பில் அஸ்கான் சமுதாயக்கூடத்தில் 21.05.2008 புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.







Friday, May 23, 2008

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
























துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தொடர்புக்கு :


தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161

மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in

Thursday, May 22, 2008

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக

இஸ்லாமிய இசையுலகில் முதன்முதலாக


இஸ்லாமிய சரித்திர நினைவிடங்கள் மற்றும்

பெருமானார் ( ஸல் ) அவர்கள் வாழ்வில்

நடந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள்

பாடல்களுக்கேற்ற ஒலி/ஒளிக் காட்சிகளாக

சமுதாயத்தில் வலம் வர இருக்கிறது.



மிகப் பிரமாண்டமான அளவில் அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக விரைவில் எதிர்பாருங்கள்

பாடல்கள் பாடியவர் : தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன்

வெளியீடு

இஸ்லாமிய புத்தக நிலையம்
கீழக்கரை

அமீரகத்தில் தொடர்புக்கு : 055 990 56 26 / 050 566 1493

தமிழநாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் வழங்கும் கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் டிரஸ்ட் ( TAMGRADS ) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி அளிக்கிறது. 10, +2 தேர்வில் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

TAMGRADS WELFARE TRUST
T 10 ( OLD NO 23 ) 11TH STREET
ANNA NAGAR
CHENNAI 600 040
TEL : 044 2626 7918

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.

படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

www.bsazakaat.org


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்

செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )

ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )

ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
www.bsazakaat.org
E mail : admin@bsazakaat.org
bsazakaat@gmail.com


தகவல் உதவி : விடியல் வெள்ளி
மே 2008

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால்,,,,,,,,,,,

10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் 10 லட்சம் பரிசு என்று சவால் விடுகிறார் சுன்னத் வல் ஜமா'அத் ஐக்கிய பேரவை தலைவர் மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள்,

விவரங்களுக்கு www.tamilmuslimtube.com ஐ பாருங்கள்.


thamizhmuslim@gmail.com

Tuesday, May 20, 2008

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் நிர்வாகிகள் வருமாறு :

நிறுவனர் : அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான்

தலைவர் : அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம்

துணைத்தலைவர்கள் :

அல்ஹாஜ் எம்.கே. சதக் அப்துல் காதர்
அல்ஹாஜ் ஏ. ஜே. அப்துல் ரசாக்
அல்ஹாஜ் பி.எஸ்.எம். சையது அப்துல் காதர்
அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன்
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.கே. காதிரி
அல்ஹாஜ் டாக்டர் டி. கமால் ஷெரீஃப்
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் காதிர் அப்துல் ரஹ்மான் புஹாரி
அல்ஹாஜ் எம். ரஜாக்

செயலாளர் :

அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

பொருளாளர் :

அல்ஹாஜ் எஸ்.சி.எம். ஜமாலுத்தீன்

இணைச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் ஏ.கே. செய்யது
அல்ஹாஜ் எஸ்.ஏ. அஹமது

உதவிச் செயலாளர்கள் :

அல்ஹாஜ் தைக்கா முஹம்மது அஷ்ரஃப்
அல்ஹாஜ் கே.ஏ.ஆர். சையது அப்துல் காதர்

ஐக்கியப் பொருளாதரப் பேரவை மாத இதழ்

ஆசிரியர் பொறுப்பு : அல்ஹாஜ் ஏ.கே. அப்துல்லாஹ்

வருட சந்தா ரூ. 100

தொடர்பு முகவரி :

The Secretary
United Economic Forum
Ali Towers 'D'
First Floor
No 55 Greems Road
Chennai 600 006
தொலைபேசி : 28 29 5445

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன


27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.

மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.

பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )