Sunday, August 10, 2008

அழகி

http://www.azhagi.com/docs.html#writeup



Award Winning Software Azhagi Type in Tamil in ALL Applications Email, Chat, Document, Print, Publish, Blog and Build WebSites in Tamil
It's Different. It's Special. How?

Azhagi is the leader in providing state-of-the-art transliteration, since 2000. It's transliteration scheme is unique, unrivaled and unmatched.
Easiest and Fastest Tamil Transliterator

With Azhagi, you will find Tamil transliteration natural and intuitive, simple and straightforward, fast and flexible. In a nutshell, if you wish to type in English and get it in Tamil (in any application) in the 'easiest' and 'fastest' mode possible, then Azhagi is the one & only software for you. More details on this, with lots of examples - HERE

The Hindu says

"... it challenges all existing Tamil transliteration softwares for speed, innovation and ease of use ..."

Microsoft Bhasha says

"... is one of the pioneers who have taken Tamil computing to heights quite unscalable by ordinary people. ..."

Should we say more?


அழகி - இதுவரை-யாரும்-கண்டிராத ஒரு தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள். எப்படி என அறிய, இங்கே (http://easy.azhagi.com) சுட்டவும்.

அழகி - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள்.
உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. விண்டோஸின் 'அனைத்து' செயலிகளிலும் (in 'all' windows applications) நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது. ஒலியியல்(phonetic/transliteration), தமிழ்நெட்99, தமிழ்'தட்டச்சு என்ற 3(மூன்று) விசைப்பலகை முறைகளிலும், 'திஸ்கி' எழுத்துருவில் மட்டுமில்லாது நவீன கால பயன்மிகு 'யூனிகோட்' எழுத்துருவிலும், எளிதாய் தட்டச்சு செய்ய வல்லது.

மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு ஆகும். உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம். 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (natural, intuitive and straightforward typing). மற்ற சில மென்பொருள்களில் வருவது போல் இவற்றை 'நேங', 'விச்நம்', 'னண்ட்ரி', 'கச்தோரி', 'பொஇ', 'மஞு', 'கட்ரு' என்றெல்லாம் ஒலிபெயர்க்காது அழகி. இது போன்ற உதாரணங்கள் இன்னும் பற்பல. அவற்றை விளக்கங்களுடன் அறிய http://easy.azhagi.com சென்று பார்க்கவும்.

பல தனித்தன்மை ('இரு திரை' ஒலிபெயர்ப்பு உட்பட) வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:
• ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே தட்டச்சிடலாம். உ-ம்: dear, easy, meals, queen etc. இவற்றை diyar, eesi, meels, kween என்றெல்லாம் தட்டச்சிடத் தேவையில்லை.
• Reverse Transliteration: 'மாற்று ஒலிபெயர்ப்பு' (தமிழில் தட்டச்சு செய்து அதன் இணையான ஒலியியல் ஆங்கிலம் பெறுவது)
• Word Count: தமிழில் 'சொல் எண்ணிக்கை'.
• Auto-Transliteration: நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம்: வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் 'ஒலிபெயர்க்கலாம்'. மீண்டும் தட்டச்சிட வேண்டியதில்லை.
• Auto-Insertion: அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
• Pop-up Display: திறந்து வைக்கப்பட்டிருக்கும் எந்த செயலியின் (any open application) கோப்பிலுள்ள ஆங்கில உரையின் இணையான தமிழ் ஒலியியல் உரையையும், ஒரு பட்டனைத் தட்டியே ஒரு தனி பாப்-அப் விண்டோவில் பார்க்கலாம்.
• தமிழ் கற்க, பயில்விக்க Learner's/Tutor's கீ-பேட் உண்டு.
• தமிழ் எண்களைக்கூட எளிதாய் தட்டச்சிடலாம்!

மேலும், யூனிகோட் ஆற்றலினால்,
1. விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சல்களை, எழுத்துரு (font) ஏதும் பதியாமலேயே பார்க்கலாம். விவரங்களுக்கு, http://azhagi.com/uniset.html சென்று பார்க்கவும்.
2. தமிழில் Find/Replace - MS'Word, Excel, Powerpoint என்று பல்வேறு செயலிகளில் - சரளமாய்ச் செய்யலாம்.
3. தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - MS'Word, Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.
4. உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!
5. இணைய குழுமங்களில் (online groups) தமிழிலேயே மடலாடலாம் - http://groups.google.com/group/illam
6. கூகிள், யாஹூ போன்ற search engine-களில், தமிழிலேயே தேடலாம். ஓர் உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) - இங்கே சொடுக்கவும்.

திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது அழகி. திஸ்கி-தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. யூனிகோட்/திஸ்கி இவை இரண்டிலுமே வலைதளங்கள் அமைக்க இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (Dynamic font) கொண்டது அழகி. விரிவான, தெள்ளத்தெளிவான உதவிக் கோப்புகளையும் உள்ளடக்கியது அழகி.

மேற்கூறிய சிறப்பம்சங்களால், தனி நபர்கள், உயர்தர நிறுவனங்கள் என்று அழகியின் வாடிக்கையாளர்கள், உலகில் பல்லாயிரம். அது மட்டுமல்லாது, சிறுவர்களும், மிகவும் வயதானவர்களும், தமிழ் பேச ஆனால் எழுத/படிக்க இயலாதவரும், தமிழ் தட்டச்சிடத் துடிக்கும் வேற்று மொழியினரும், கணினி என்றாலே ஒன்றுமே தெரியாதவரும் கூட, எளிதில் விரைவாக விரும்பி தமிழ் கற்று, ஓரிரு தினங்களிலேயே வேகமாக தட்டச்சிட, உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகை ஆகாது.

‘இரு திரை’ மற்றும் ‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு - அழகியில்


‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு
‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலிகளிலும்
அழகியைப் பயன்படுத்தி, MS-Word, Excel, PowerPoint, Adobe PageMaker, Photoshop, Outlook Express, Yahoo! Messenger, Hotmail, Google போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம். அழகியின் சோதனைப் பதிவு கொண்டு அதன் எல்லா அம்சங்களையும் எப்படி பரிசோதித்துப் பார்ப்பதென அறிய, http://azhagi.com/all.html சென்று பார்க்கவும்.

மதுக்கூர்.காம்

மதுக்கூர்.காம் என்ற இந்த இணையதளம் மதுக்கூர் மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுக்கூரிலும், இந்தியாவிலும் மற்றும் உலகத்தின் பல இடங்களிலும் வாழும் நமது மக்களை ஒன்று இணைத்து சேதிகளையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ளவேண்டும் மற்றும் பரஸ்பர உதவி மற்றும் சமுதாய உதவிகளை செய்யவேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.

www.madukkur.com


info@madukkur.com


webmaster@madukkur.com

Saturday, August 9, 2008

இந்தியப் பெண்கள் சங்கம் - குவைத்

இந்தியப் பெண்கள் சங்கம் - குவைத்


www.iwakuwait.com

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு

www.toastmasters.org

போலந்து நாட்டில் கல்வி பயில

போலந்தில் கல்வி பயில்வது பற்றிய விபரமறிய

www.howtostudyinpoland.pl

குவைத்தில் செயல்படும் அவேர் செண்டர்

www.aware.com.kw

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?


விபரம் அறிய கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மூலம் அறியலாம்

www.education.nic.in

www.ugc.ac.in

www.aicte.ernet.in

www.ncte.in.org

www.nciindia.org

www.dec.ac.in

முதல்வன்

முதல்வன்;

- கமால்இ ஜீனத் குழுமம் துபாய். ( 050 8444097)
vkamal@etazenath.com


“அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) “அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) – அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பு கேட்கத் தொடங்கியது.

நான் கம்ப்யுட்டரை அணைத்து விட்டு தொழுகைக்காக புறப்பட எழுந்தேன். என்னுடன் பணியாற்றும் எங்களுக்காக தேநீர் தயாரித்து சாதாரண அலுவலகப் பணிகளைச் செய்யும் என்னைவிட பணியில் குறைந்த நிலையிலுள்ள என் நண்பரை அழைத்தேன். நானும் அவரும் சேர்ந்தே போவது வழக்கம்.

படிக்கட்டில் இறங்கத் தொடங்கினோம். எங்கள் முன் காலை விந்திவிந்தி நடந்தவாறு ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை முந்த முயன்றேன். என் நண்பர் என் கையை பிடித்திழுத்து “கொஞ்சம் பொறுமையாக அவருக்குப் பின் செல்வோம் ”என்றார்.
கட்டிடத்தை விட்டு வெளியேறி வெளியே நடக்கும்போதும் காலை விந்திவிந்தி நடந்து சென்ற அந்த ஊனமுற்றவரை நான் முந்திச் செல்ல முயன்றபோதும்;

மீண்டும் “பொறுமையாக அவரை பின்தொடர்ந்தே செல்வோம் ” என்றார். நான் அவரை அதிசயமாகப் பார்த்தேன்.

சாலையை அடைந்தோம்;. தொலைவில் வந்து கொண்டிருக்கும் வாகனங்கள் வரும்முன் எங்களால் வேகமாக நடந்து சென்றோ அல்லது ஓடிச் சென்றோ கடந்து விடலாம் என்ற நிலை இருந்தபோதும்; “வேண்டாம்; அந்த ஊனமுற்றவர் சாலையை கடந்த பின்னேரே செல்வோம்” என்றார். நான் மீண்டும் அவரைப் புரியாமல் பார்த்தேன்;. சாலை வெறிச்சோடியது. எங்கள் முன்னால் சென்ற அந்த ஊனமுற்றவர்; சாலையைக் கடந்து கிழக்கு நோக்கி நடக்க நாங்கள் மேற்கில் பயணித்தோம்.

என் நண்பர் ஏன் அவ்வாறு செய்தார்? என உள்ளம் அறியத் துடித்தது. அவரைப் பார்த்து ““ஏன் நீங்கள் அந்த ஊனமுற்றவரை முந்த வேண்டாம். பின் தொடர்ந்தே செல்வோம் என்றீர்கள்?” ; என்று கேட்டேன்.

அவர் என்னை நோக்கி “அவர் நம்மைப் போல் இயல்பான உடலமைப்புடையவரல்ல. அத்தகைய ஒருவரை நாம் ஒவ்வொரு நிலையிலும் முந்திச் செல்லும்போது அவர் உள்ளம் நம்மை ஆண்டவன் இப்படி படைத்துவிட்டானே ஊனத்துடன்….. இந்த ஊனம் இல்லாமலிருந்தால் அவர்களைப்போல நாமும் வேகமாக கையை வீசி ஸ்டைலாகச் செல்லலாமே என்று மனவருத்தம் அடையலாம். மனிதனின்; உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனம் ஏற்படக்கூடாது. மனவருத்தம் என்பதும் ஒர் ஊனம் தான்;. மனவருத்தமும் ஒருவருக்கு தன் மேலும்இ இறைவன் மேலும்இ வாழ்க்கையின் மீதும் விரக்தி ஏற்படுத்தலாம். கண்பார்வையற்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது இயற்கையை உலக அழகை நாம் வியந்து பேசக்கூடாது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவரின் உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் அதுவும் ஒரு நற்செயல்தான் ! அதுவும் இறைவணக்கத்தின் ஓர் அங்கம் தான் ” என்றார்.

நான் மெய்சிலிர்த்தேன். நான் அவரை நோக்கி “நான் வேண்டுமானால் பதவியில் முதல்வனாக இருக்கலாம். ஆனால் குணத்தில் நீங்கள் தான் முதல்வன்” என்றேன் உணர்ச்சிவயப்பட்டவனாக. அவர் “அல்ஹம்துலில்லாஹ்” (இறைவனுக்கே புகழனைத்தும்) என்றார்; அடக்கத்துடன் .

இத்தனை நாள் ஒரு சாதாரண ஊழியராக எண்ணியிருந்த என் நண்பர் தான் ஒரு மனிதாபிமனி என்று உணர்த்தியபோது என் உள்ளத்தில் பல மடங்கு உயர்ந்து போனார்.


இஸ்லாமிக் செண்டர்,துபாய்

இஸ்லாமிக் செண்டர்,துபாய்

ISLAMIC INFORMATION CENTRE
P O BOX NO 25020
DUBAI - UAE
Tel : 04 398 6950
Fax : 04 398 6956

E mail : english@islamicinfo.org.ae
www.islamicinfo.org.ae

www.islam-guide.com
www.islamreligion.com



Islamic Organizations:
Also, If you would like more information on Islam, or if you have any questions or comments, you may contact one of the following organizations (Note: To search for addresses of Islamic centers near you, please visit Islamic Finder):


1) The United States:

Islamic Assembly of North America
3588 Plymouth Road, Suite # 270,
Ann Arbor, MI 48105, USA
Tel.: (734) 528-0006 - Fax: (734) 528-0066
E-mail: IANA@IANAnet.org

Islamic Foundation of America
PO Box: 3415, Merrifield, VA 22116, USA
Tel.: (703) 914-4982 - Fax: (703) 914-4984
E-mail: info@ifa.ws

Alharamain Islamic Foundation
1257 Siskiyou Blvd., no. 212,
Ashland, OR 97520, USA
Tel.: (541) 482-1116 - Fax: (541) 482-1117
E-mail: haramain@alharamain.org

Understanding Islam Foundation
11153 Washington Pl., Culver City,
CA 90232, USA
Tel. and Fax: (301) 558-9865
E-mail: info@understandingislam.us

World Assembly of Muslim Youth
PO Box: 8096, Falls Church,
VA 22041-8096, USA
Tel.: (703) 820-6656 - Fax: (703) 783-8409
E-mail: support@wamyusa.org

Islamic Information Institute
of Dar-us-Salam
5301 Edgewood Rd., College Park,
MD 20740-4623, USA
Tel.: (301) 982-9463 - Fax: (301) 982-9849
E-mail: iiid@islamworld.net

Al Jumuah Magazine
PO Box: 5387, Madison,
WI 53705-5387, USA
Tel.: (608) 277-1855 - Fax: (608) 277-0323
E-mail: info@aljumuah.com

2) Canada:

Islamic Information & Da’wah Center International
1168 Bloor Street West, Toronto,
Ontario M6H 1N1, Canada
Tel.: (416) 536-8433 - Fax: (416) 536-0417
E-mail: comments@islaminfo.com

3) The United Kingdom:

Al-Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green,
London SW6 4HW, UK
Tel.: 44 (0207) 736 9060
Fax: 44 (0207) 736 4255
E-mail: muntada@almuntada-alislami.org

Jam’iat Ihyaa’ Minhaaj Al-Sunnah
PO Box: 24, Ipswich, Suffolk IP3 8ED, UK
Tel. and Fax: 44 (01473) 251578
E-mail: mail@jimas.org

4) Saudi Arabia:

Alharamain Islamic Foundation
PO Box: 69606, Riyadh 11557, Saudi Arabia
Tel.: (966-1) 465-2210 - Fax: (966-1) 462-3306
E-mail: haramain@alharamain.org

World Assembly of Muslim Youth
PO Box: 10845, Riyadh 11443, Saudi Arabia
Tel.: (966-1) 464-1669 - Fax: (966-1) 464-1710
E-mail: info@wamy.org

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே 'நபியவர்களின் இறுதிப் பேருரை' என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
தொடக்க துதி மொழிகள்

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: 'நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
பிரிவின் முன்னறிவிப்பு

ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!

ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!

ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)
அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!

ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, 'உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!

(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி 'இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

Friday, August 8, 2008

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்தின் ஆபாச எதிர்ப்பு வாரம்

'அருந்தமிழ்நாட்டில் ஆபாசங்கள் எதற்கு?'

http://www.tamilanexpress.com/politics/politics5.asp

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர், கடந்த ஜூலை 25 முதல்-ஆகஸ்ட் 3 வரையிலான நாட்களை ஆபாச எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடித்தனர். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆபாசத்திற்கு எதிராக கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், பேரணி என நடத்தினர்.

நாம் கடந்த வியாழனன்று சென்னையில் நடந்த பேரணியை விஸிட் செய்தோம்.

மதியம் 2 மணிக்கு பேரணி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட தீவுத்திடல் அருகிலுள்ள மன்றோ சிலை அருகே 20 பேர் மட்டுமே கூடி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல, குழு குழுவாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரத் துவங்கினர். 3 மணிக்கு பேரணியைத் துவங்க போலீஸôர் அனுமதி வழங்கியதால், சரியாக 2.50 மணிக்கு எல்லோரும் பேரணிக்குத் தயாரானார்கள்.

பேரணியைத் துவக்கி வைக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தலைவர் கோ.க. மணி, மன்றோ சிலையருகே 2.55 மணிக்கு காரில் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து சரியாக 3 மணிக்கு பேரணிக்குத் தலைமை வகித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழகத் தலைவர் ஏ.ஷபீர் அஹமத் பேசத் துவங்கினார்.
அவர், ""தமிழ்நாட்டில் எங்கும் ஆபாசம் நிரம்பியுள்ளது.

திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எதிரொலிக்கின்றன. அரை குறை ஆடைகளுடனான நிகழ்ச்சிகள் சின்னத்திரையை ஆக்கிரமித்துள்ளன. பத்திரிகைகளும் ஆபாசத்திற்கு இடமளிக்கும் விதமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. சின்னத்திரையில் வரும் காட்சிகள் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் என எல்லாத் தரப்பினரையும் ஆபாசத்தை நோக்கித் தள்ளிவிடுகின்றன.

மாதா, பிதா, தெய்வம் என்ற வரிசையில் உள்ள ஆசிரியர்கள்கூட மாணவிகளிடம் தவறாக நடப்பதை இன்று பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது'' என்று வேதனைப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பேரணியைத் துவக்கி வைத்துப் பேசிய கோ.க.மணி, ""எங்கப் பார்த்தாலும் ஆபாசம் அதிகரித்து, அருவருப்பு மேலோங்கி வருவதைப் பார்க்க முடிகிறது. அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டக்கூடியதாக இந்தப் பேரணி அமைந்துள்ளது.

தொலைக்காட்சியைப் பார்த்து பிஞ்சு உள்ளங்கள், ஆபாச வக்கிரப் புத்திக்குத் தூண்டப்படுகிறார்கள். நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வக் கருத்துக்களை கடந்த கால திரைப்படங்கள் சொல்லின. இப்போது அப்படியல்ல கதை, பாடல், உடை நாகரீகம் என எல்லாவற்றிலும் ஆபாசம். சமூகப் பார்வையோடு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பதை திரைப்படத்துறையினர் உணர வேண்டும். ஆபாசத்தை ஒழிப்பதில் மிகுந்த அக்கறை அரசுக்கு உள்ளதால், அரசு இந்த ஆபாசத்தை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார்.

இதன் பிறகு மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நிறைவடைந்தது. அங்கு ஆபாசத்தை ஒழிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆபாசத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, ""தணிக்கை செய்! தணிக்கை செய்! சின்னத்திரையை தணிக்கை செய்!'' ""ஆன்மீகம் தழைக்கும் அருந்தமிழ்நாட்டில் ஆபாசம் எதற்கு ரோட்டில், வீட்டில்...?''

""தடை செய்! தடை செய்! ஆபாசப் படங்களை தடை செய்!'' ""எரிதழல் ஒன்றை எடுத்து வா தோழா! அரிக்கும் ஆபாசம் தடுக்கவா தோழா!'' ""இருளில் தொலையுது இந்திய இளமை! கருகி அழியுது கன்னியர் பெண்மை'' என்று பல்வேறு உணர்ச்சிபூர்வமான கோஷங்களை ஆண்களும், பெண்களும் எழுப்பிச் சென்றனர்.

நாம் பேரணியில் பங்கேற்ற ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் என்.ஜான் முஹம்மதிடம் பேசினோம். அவர், ""ஆபாசம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை, இணையத் தளம் என்று எங்கும் ஆபாசம்.

இது கலாசாரத்தைச் சீரழிக்கிறது. ஆணுறை விளம்பரங்கள் மோசமாக உள்ளன. விளம்பரங்களில், குறிப்பாக சுகாதாரப் பொருட்கள் பற்றிய விளம்பரங்களிலும் மோசமான ஆபாசங்கள் இடம்பெறுகின்றன. எய்ட்ûஸ கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சியை வரவேற்கிறோம். அதற்காக ஆணுறை வழங்கும் இயந்திரங்களை வைப்பதை எதிர்க்கிறோம்.'' என்று ஆவேசப்பட்டார்.

""ஒளிவு மறைவாக இருந்த ஆபாச மற்றும் மானக்கேடு செயல்கள், இன்று திறந்த வெளியில் நடக்கின்றன. ஃபேஷன் என்ற பெயரில் அரைகுறை ஆடை உடுத்தும் கலாசாரம் இன்று எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது'' என்று கொதித்த ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிரணி மாநில துணை அமைப்பாளர் கதீஜா மற்றும் தௌலத் நிஷா ஆகியோர், ""பெண்கள் தாய்மைக்கு முன்னுதாரணம்.

ஆனால் அத்தகைய பெண்களை தரக்குறைவாக தொலைக்காட்சி, திரைப்படங்களில் காட்டுகிறார்கள். வீட்டில் குடும்பத்தோர் தொலைக்காட்சியைப் பார்க்க முடிவதில்லை. அந்த அளவிற்கு ஆபாசம் அத்துமீறி உள்ளது. விளம்பரம் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் விஷ விதையைத் தூவிவிடுகின்றனர்'' என்று ஆவேசமானார்கள்.

""பழைய திரைப்படங்களில் செய்தி இருந்தது. இன்று ஆபாசம் மட்டும்தான் இருக்கிறது. காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளனர் திரைப்பட தயாரிப்பாளர்கள். இது பற்றிக் கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். நோயாளிக்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்று விஷத்தன்மையுள்ள மருந்துகளை ஒரு டாக்டர் கொடுப்பாரா?'' என்று கேள்வி எழுப்பினார் பேரணியில் கலந்துகொண்ட இன்னொரு பெண் ஷீரிமா.

நல்ல சங்கை ஊதியுள்ளனர். சம்பந்தப்பட்டோர்களின் காதுகளில் விழுந்தால் சரி!

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

06.08.2008 புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மௌலவி குதுப்புத்தீன் ஆலிம் அவர்கள் 'நபிகள் நாயகம் ( ஸல்)' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தமிழகப் பெருமக்கள் பலர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கென தனியிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

கோட்டைப் பள்ளி

இதே போல் ஒவ்வொரு வாரமும் தேரா கோட்டைப் பள்ளியில் தமிழ் சொற்பொழிவு மற்றும் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரபி மொழியினை படிக்காதவர்கள் கூட திருக்குர்ஆனை சிறப்பான முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் தமிழ் மொழியில் சொற்பொழிவும், மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.

Wednesday, August 6, 2008

வெளிநாடு வாழ் இந்தியர்க்கான இணையத்தளங்கள்

www.gulfindian.com
riyajs2004@yahoo.co.in

www.yahind.com
zia@yahind.com

கண்ணும் உணவும்

கண்ணும் உணவும்

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.


வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

நன்றி : யாழ்

http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post_18.html

வெளிச்சம் தோன்றும்

வெளிச்சம் தோன்றும்

கடந்து போன கசப்பான நாட்களை நினைத்து வருந்தாமல் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து பயப்படாமல் இன்று செய்யும் காரியத்தில் முனைந்திருப்பவனே புத்திசாலி என்று ஓர் அறிஞர் சொல்கிறார்.

கடந்த காலம் என்பது கனவு போன்றது. அதை மறந்து விடவேண்டும். எதிர் காலம் என்பது நிச்சயமில்லாத ஒன்று. ஆனால் நிகழ் காலம் என்பது நிஜமானது. எனவே இதில் கவனம் செலுத்துபவனே புத்திசாலி என்பது அந்த அறிஞரின் கூற்று.

இன்று என்பது கையிலிருக்கும் ரொக்கம் மாதிரி. நாளை என்பது லாட்டரி சீட்டு மாதிரி. மூன்று காலங்களில் நிகழ் காலமே முக்கியம். அதற்கு கடந்த காலம் ஒரு பாடம். எதிர் காலம் ஒரு லட்சியம்.

இந்த நிகழ் கால வாழ்வின் திட்டம் எதுவாக இருக்க வேண்டும்?

சிக்கனம்தான் முதல் திட்டமாக இருக்க வேண்டும். அளவான செலவு. திட்மிட்ட செலவு. பிறகு அதில் கொஞ்சமாவது சேமிப்பு என்று திட்டத்தை வகுத்தால் வாழ்க்கை நலமாக இருக்கும். நாளை என்ற பயம் நீங்கும். சேமிப்பே நம்பிக்கையூட்டும்.

இதைத் தவிர நம்பிக்கையுள்ள திடமான மனம் அமைய என்ன வழி?

தினசரி கொஞ்சம் தியானம். காலை - மாலை ஐந்து நிமிடம் கூடப் போதும். மனதைப் பண்படுத்தி அதனைத் தறிகெட்டு ஓடவிடாது உங்கள் வசமாக்கிக் கொணடால் நீங்களே வெற்றி வீரர்.

இப்படிப் பல விதங்களில் நம்மை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதற்குத் திட்டமிட வேண்டும். அதற்கேற்றபடி செயல்பட வேண்டும். நேற்றைவிட இன்று உயர்ந்து பண்பட்டிருக்க வேண்டும். இன்றைவிட நாளை மேலும் உயர்நிலையில் இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை விட நாம் நன்றாக வாழ்கிறோம். நாகரீகமாக வாழ்கிறோம்.அறிவியல் சாதனங்களை அனுபவிக்கிறோம். நம் சந்ததியினரை இதைவிட நன்றாக வாழ வைக்க வேண்டும் அல்லவா? அதற்கு நாம் திட்டமிட வேண்டும்.

ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!

விடி வெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால் நிச்சயம் வெளிச்சம் தோன்றும்.


http://www.valoothoor.com/

லட்சியக் கவிஞர் இக்பால்

ஏப். 21: இக்பால் நினைவு தினம்

'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்


எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)

''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''

இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.

அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.

அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,

''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''

என்று பாடினார்.

இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.

இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.

''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''

தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே

''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''

எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்

என்னரும் இந்தியச் சகோதரர்களே!

''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!

மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது

(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.

என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.

அரசியல்

சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.

சமய நல்லிணக்கம்

இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.

மேலும் ஒரு பாடலில்

நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.

என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.

''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.

''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆன்மிகம்

ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.

சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.

''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.

அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.

''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''

என்று கூறும் கவிஞர்

''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''

என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.

''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''

என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.

மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.

''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''

என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.

http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html

Tuesday, August 5, 2008

சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் பயிற்சிகள்

கர்ப்பிணிகள் தூங்குவது எப்படி ?

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg




Launch of Online Registration for Indian Nationals in Kuwait

The Embassy of India announces the launch of Online Registration for Indian Nationals based in Kuwait with effect from August 15, 2008. All Indian nationals are encouraged to visit the Embassy website http://indembkwt.org/onlineregister.php in this regard and register themselves on the Online Registration Form.