Monday, September 22, 2008

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை.

மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும்.

கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ?

எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ?

இதைத் தெரிந்து கொள்ள அந்த நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் என் நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஊஹூம்...! அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றிரண்டு வரும்; அவ்வளவுதான்' என்று சொல்லி வருந்தினார்.

முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார்.

விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார்.

இந்த விமர்சனம் சரிதானா ?

வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.


- சிராஜுல் ஹஸன்

பொறுப்பாசிரியர், சமரசம்
www.samarasam.com
www.iftchennai.org
samarasam12@gmail.com

16-30 செப் 2008 சமரசம் இதழிலிருந்து


பிறைநதிபுரத்தான்
dateTue, Sep 23, 2008 at 5:29 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்


"கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் பெரியவர் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவர்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரருக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட 'குளுகுளு' சிறை வசதிகள் - பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

ஒவ்வொரு வருடமும் டிசம்பர ஆறை முன்னிட்டு அப்பாவி இஸ்லாமியர்கள் - நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்படுவதை வரவேற்கும் தின மலர் - 'ஜெயேந்திரர்' இரவில் கைது செய்யப்பட்டதை மட்டும் மனித உரிமை மீறலாக திரிப்பது ஏன்?

பிற்படுத்தப்பட்ட சாதிகளை அரசியலுக்காக ஒன்றினைக்கும் தலைவர்களையெல்லாம் 'சாதி வெறியர்களாக' கட்டம் கட்டும் - தின மலருக்கு. மதவெறி பிடித்த பா.ஜ.க முதல் - பஜ்ரங் தள் வரை தேசப்பற்றுள்ள இயக்கங்களாக தெரிவது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பு, 'ஒன்றுபட்டிருந்த' த.மு.மு.க,வால் (முஸ்லீம் மீடியா டிரஸ்ட்) தமிழக முஸ்லிம்களுக்காக 'சஹர்' நேர நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதை - தான் வெளியிடும் 'தொலைக்காட்சி நிகழ்ச்சி' பட்டியலில் கூட வெளியிட மறுத்தது இந்த தினமலர்.

விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா? என்று தினமலர் துனை ஆசிரியர் கேட்டதாக 'நொந்து' கொள்ளும் சிராஜுல் ஹசனுக்கு தெரியாதா - இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடு...

முஸ்லிம்கள் பார்ரட்டு கடிதம் எழுதவில்லை என்று அலுத்துக்கொள்ளும்
சிராஜுல் ஹஸன் - முஸ்லிம்களுக்கெதிராக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக, பிராமனீயத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக - 'மொட்டை' கடுதாசிகளை தானே எழுதி பிரசுரித்துக்கொள்ளும் தினமலர் - முஸ்லிம்கள் எழுதியதாக சில பாராட்டு கடிதங்களையும் எழுதி பிரசுரித்து கொண்டிருக்கலாமே?

சிராஜுல் ஹஸன் சொல்வது மாதிரி இவர்களிடையே 'உரையாடலாக' எதுவும் நடைபெறவில்லை போலிருக்கிறது - தினமலர் துனை ஆசிரியர் 'பயான் செய்ததை' - எதிர் கேள்வி கேட்காமல் 'பவ்யமாக' செவிமடுத்துக் கொண்டு இருந்திருக்கிறாரோ சிராஜுல் ஹஸன் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தேங்கை முனீப்
dateTue, Sep 23, 2008 at 9:35 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளராகக் காட்டிக் கொள்ள முயலும் சிராஜுல் ஹஸன் போன்றவர்கள் சமுதாய நலம் என்பதை விட அவாள்களை திருப்திப்படுத்தல் என்பதிலேயே கவனத்தை செலுத்துகின்றனர்.

//தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். //


டென்மார்க் வெளியிட்ட கார்டூனும் அததைக் குறித்து உலகெங்கும் ஏற்பட்ட கொந்தளிப்பும் உலகுக்கே வெளிச்சமானது. இதை அறிந்தும் தனது கயமைத் தனத்தை வெளியிட்ட தினமலரை எதிர்க்கும் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வை கொச்சைப் படுத்துவதாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. உலக அரங்கில் இது குறித்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிராஜுல் ஹஸனின் இந்த வேண்டுகோளை ஏற்று தினமலர் மற்றும் ஜில்லாண்ட போஸ்டனின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு ஸலாம் கூறி நமது தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளலாம்!?


//கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ? எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ? //


குப்பைத் தொட்டியில் கிடக்கும் மலர்களுக்காக எவரும் ஆசைப் படுவதில்லை. கழிவு நீர்த் தொட்டியில் வாசனைத் திரவியம் ஊற்றி விடுவதால் அதன் நாற்றம் மாறுவதும் இல்லை.

//முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார்.//

தன் நியாயமான உணர்வுகளை வெளிப் படுத்தும் முஸ்லிம்களை கத்துகிறார்கள் என்று கருத்து தெரிவித்தவரின் கருத்துக்களை ஏதொ பெரிய தத்துவம் என்று பதிவு செய்துள்ளார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் ஏதொ எல்லா ஊடகங்களும் மற்ற மதத்தினரும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் முஸ்லிம்கள் மட்டும் சுயநலத்துடன் தங்களுக்காக மட்டும் போராடுகிறார்கள் என்பதைப் போலவும் நினைக்கத் தோன்றுகிறது இவர்களின் கருத்தைப் பார்த்தால்.

விநாயக ஊர்வலத்தில் முஸ்லிம்களைத் தாக்கி அவர்களின் சொத்துக்களை சுறையாடிய சங்கப் பரிவாரையும் அவர்களுக்கு ஆதாரவாக இருந்ததுடன் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கிய அரஜக காவல் துறையைக் குறித்து இவர்கள் என்ன கருத்து வெளியிட்டார்கள்? தப்பு செய்தவனைத் தண்டிக்காமல் தடுத்தவனைத் தீவிரவாதியாக்கிக் காட்ட முயலும் போது தன்சார்பு நியாயத்தை வெளிக் காட்டும் சமுதாயத்தின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் பத்திரிக்கையாளனின் கருத்துக்களை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பதிவு செய்யும் சிராஜுல் ஹஸன் சமுதாயத்துக்கு என்ன நலவை நாடுகின்றார்?

//விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார்//

நல்ல கேள்விதான். இது வரை சமுதாயத்தின் எந்தப் பிரச்சினைகளுக்கும் போராடாத, சமுதாயத்தின் உணர்வுகளை முனை மழுங்கச் செய்யும் இவர் சார்ந்த அமைப்பு இதை முதலில் செய்யட்டும்.

அவரவரை திருப்திப் படுத்த அவரவருக்கு ஏற்ப கருத்துக்களையும் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் இவர் சார்ந்த அமைப்பு முதலில் தன் மனசாட்சியை கேள்வி கேட்கட்டும்

அதி. அழகு
dateTue, Sep 23, 2008 at 10:18 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

இந்த மாதிரி ஆளுங்க எதுக்கு இருக்கிறானுங்க?

தமிழக முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் உணர்வு வந்துடக் கூடாது. அப்புடி வந்துட்டா அதையும் மழுங்கடிக்கனும்.

போங்கடா .... நோன்புக் கஞ்சி காய்ச்சி குடுத்து, ஈத் மிலன் நடத்துங்க.

கூடவே ஒரு ஜெய் ஹிந்த் போட்டுக்க! சமுதாயம் உருப்பட்டுடும்.

Abu Shaimah
dateTue, Sep 23, 2008 at 10:42 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

சமரசம்-னா கையாலாகாத தனம் என்ற பொருளா?

சிலம்பம் அளவுக்கு ஒரு பெரிய கம்பை அஞ்சாறு போலீசு நாய்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சகோதரரின் மண்டையைக் குறிவைத்து அடித்தார்களே, அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படி இப்படி எல்லாம் வழாவழா கொழாகொழான்னு எழுத முடியுதோ?

சமரசம் பேருக்கு ஏத்தமாதிரி இறைக் கொள்கையையும் சமரசம் செய்யாமல் இருந்தா சரி!

சமுதாய இயக்கங்கள் கொஞ்சம் போல இயங்க ஆரம்பித்த ஒரே நிகழ்வு இந்த கார்ட்டூன் விவகாரம்; அதிலயும் தண்ணி ஊத்தி மழுங்கடிச்சுட்டு 'தேசிய' நீரோட்டத்தில கலந்து ஐக்கியமாக வேண்டியது தான்!!!

//கூடவே ஒரு ஜெய் ஹிந்த் போட்டுக்க! சமுதாயம் உருப்பட்டுடும்.//

ஜெய் 'ஹிந்து'-ன்னு போட்டா இன்னும் சமரசமா -வும் தேசப்பற்றோடும் இருக்கும்.

Mohamed Mahir Ahamed Ibrahim
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

subjectClaiming Authorship for the featured article TV and Children dated 16-18 jan 2008

Assalamu alaikum

Sub: Samarasam dated 16-31 Jan 2008 issue's featured article's authorship claim

I am glad to see the featured article in Samarasam by today regarding TV and Children. I did not expect this topic could get this much appreciation even after almost more than 1.6 years.

It was first published in Adirai.com (unfortunately since adirai.com is down i can't able to give u link) and then in my blog and the topic named விளையும் வினை

http://techtamil.blogspot.com/2006/09/blog-post_25.html

It was also then recognized and published in thamizmanam.com's Poongaa.com

http://poongaa.com/content/view/127/1/

It was already published in Manarul Huda during 2007 ( I forgot the month/issue, Ref: Mohamed Ibrahim of Basharath publishers)

except the title and author name, I see the entire (main) content (word-by-word) was written by me... even the present author claims he got it from Readers Digest which is a big lie.

As an young author I might expect my name in a magazine like yours which could give me recognition of my work and could boost me writing up further articles/writings. But unfortunately this kind of stealing by some of our brothers really discourage.

:(

Regards,
Mohamed Mahir
Chennai
9444289450

தொலைபேசியிலும் பேசினேன். சமரசம் இதழில் மறுப்பு வரவேயில்லை - மாஹிர்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்




துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
http://www.muduvaivision.com/
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/???????-?????????????-?????-??????


துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.

12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 ) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.

மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

விருது

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருடந்தோரு இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1

Sunday, September 21, 2008

ESPN தொலைக்காட்சி தமிழில் அலைபேசி செய்திச்சேவை

விளயாட்டு ஒளிபரப்பில் முன்னணியில் இருக்கும் ESPN தொலைக்காட்சி தமிழில்,
அலைபேசியில், செய்திச்
சேவையை தொடங்கி இருக்கிறது.

இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு உள்ளூர், தேசீய, சர்வதேச,
பொழுதுபோக்கு மறூம் விளையாடுச் செய்திகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும்
இரண்டிரண்டு நிமிடங்கள் வீதம் பதே நிமிடங்கள். பதினோறு மணிக்கு வர்த்தகச்
செய்திகள். பிற்பகல் இரண்டு மணிக்கு உள்ளூர் மற்றும் தேசியச் செய்திகள்.
மாலை ஐந்து மணிக்கு மீண்டும் வர்த்தகச் செய்திகள். மாலை ஏழுமணிக்கு
மீண்டும் அனைத்துச் செய்திகள்.இந்தச் செய்திகளை தென்னகத்தில் எந்த
அலைபேசி எண்ணில் கேட்கலாம் என்பதை இனித்தான் அறிவிக்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் மூன்று செய்திகள் இருக்க வேண்டும். அதாவது நாற்பது
நொடிகளுக்குள் செய்தியின்
எந்த அம்சத்தையும் விட்டு விலாமல் ஒரு முழுமையைக் கொண்டு வரவேண்டும்.
சவால்தான். என்றாலும்
பத்திரிகைகள் எந்த அளவுக்கு அநாவசியமாக வார்த்தைகளைப்போட்டு இடத்தை
நிரப்புகிறார்கள் என்பது
இப்போதுதான் தெரிகிறது.

ஒரு சௌகரியம்: நான் வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் செய்யலாம். ஒரு
அசௌகரியம்: காலை முதல்
மாலை ஏழு மணி செய்தி முடியும் வரை நான் எங்கும் செல்ல முடியாது. தனியாகவே
அனைத்தையும் செய்வதால்
சனி - ஞாயிறு - விடுமுறை எதுவும் கிடையாது.

கழுகுக் கண்களுடன் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.
என்றாலும் உங்களுக்கு ஏதேனும்
வித்தியாசமான செய்திகள் தெரிய வந்தால் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ் - சத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.

இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.

இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலற்ற நிலையில் அரசு ஆம்புலன்ஸ்...!

செயலற்ற நிலையில் அரசு ஆம்புலன்ஸ்...!

சென்னை, செப். 20: அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' சேவை மோசமான நிலையை எட்டி வருகிறது. ஆபத்தான நிலையிலும் கூட மருத்துவமனைகளில் அனுமதிக்க காசு கேட்பது போன்ற செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' வாகனங்கள் உள்ளன. சாலை விபத்து போன்ற அவசர காலங்களில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல "ஆம்புலன்ஸ்' பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது, அவைகளில் பெரும்பாலானவை செயலற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமும் நடைபெறும் சம்பவங்கள்... திருவள்ளூர் அருகே ஞாயிற்றுக்கிழமை (செப்.14) நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்தோர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மருத்துவமனையில் இருந்து (டி.என்.01 - ஜி.1156) என்ற எண் கொண்ட, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உரிய ஆம்புலன்ஸில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ. 800-ம், கூடுதல் பணமாக ரூ. 200-ம் டிரைவர் கேட்டுள்ளார். வேறு வழியின்றி, அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனாலும், மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸில் டீசல் இல்லை; ஒலி எழுப்பான் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர். அரை மணி நேரத்துக்கும் மேலாக, ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்தவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். வேறு ஆம்புலன்ஸ் வந்த பின்பே, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.

""இன்னும் 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்து இருந்தால், உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்'' என்று கதறினர் காயமடைந்தவர்கள்.

தலைக் காயத்துக்கும் காசு... சாலை விபத்துகளின் போது, தலைக் காயம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் வாங்கக் கூடாது. ஆனால், காயமடைந்தவர்களிடம் தலைக் காயம் முதல் எந்தக் காயம் ஆனாலும் காசு வசூலிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் செயல்கள் மாவட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்ன காரணம்? ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க டிரைவர்கள் இல்லாதது, போதிய டீசல் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசின் "ஆம்புலன்ஸ்' சேவை கேள்விக் குறியாகி இருக்கிறது.

போதுமான அளவு டிரைவர்களையும், வண்டிகளுக்கு டீசலையும் அளித்தால், அரசின் ஆம்புலன்ஸ் சேவை உயிர் பெறும் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசு மருத்துவமனை டாக்டர்கள்.

Contact Lens User Be Careful

Contact Lens User Be Careful

A 21 year old guy, he used to wear a pair of contact lenses, during a
barbecue party.

While, barbecuing he stared at the fire charcoals continuously for 2-3
minutes. After a few minutes,

he started to scream for help and moved rapidly, jumping up and down.
No one in the party knew why he was doing this ? Then he admitted into
the Hospital,
the doctor said he'll be blind permanently because of the contact
lenses that he had worn.

Contact lenses are made by plastics, and the heat from the charcoal
melted his contact lenses.

So, send this information to all your friends..... DO NOT WEAR CONTACT
LENSES WHERE OVERHEATING AND FLAMES ARE CONCERNED.....OR WHILE COOKING...!

Friends if this information is important.....please pass this message
to all your near & dear ones.

Friday, September 19, 2008

கருணாநிதியிடம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் கோரிக்கை மனு


கருணாநிதியிடம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் கோரிக்கை மனு


சென்னை, செப்.20-

முதல்-அமைச்சர் கருணாநிதியை இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

கருணாநிதிக்கு வாழ்த்து

முதல்-அமைச்சர் கருணாநிதியை, இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கவிக்கோ அப்துல் ரகுமான், கேப்டன் அமீர்அலி, எஸ்.எம்.இதாயத்துல்லா, பிரசிடன்ட் அபுபக்கர் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பெரியார் விருது, டாக்டர் பட்டம் பெற்ற முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கொடுத்த மனு விவரம் வருமாறு:-

தமிழகத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து இடஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நன்றி கூறுகின்றோம். மத்திய அரசு, மாநில அரசு மூலம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி வரையிலும் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

எளிமையான மனு

இதற்கான மனுவினை மாணவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மூலம்தான் அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கல்வித் துறை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பாததால் பெரும்பாலான கல்விக்கூடங்கள் மாணவர்களிடம் இருந்து மனுக்களை பெற மறுத்து வருகின்றன.

இதுதொடர்பாக கல்வித் துறை, உடனடியாக சுற்றறிக்கை அனுப்புவதுடன் ஊடகங்களிலும் இந்தச் செய்தியை வெளியிட வேண்டும். மனுக்களை பூர்த்தி செய்ய தேவைக்கு அதிகமான சான்றிதழ்களை திரட்டுவதற்கு ஏழை மாணவர்களுக்கு ரூ.500-க்கு மேல் செலவாகிறது. சிலருக்கு மட்டுமே மேற்கண்ட உதவித் தொகை கிடைப்பதால் பலர் செய்யும் செலவு வீணாகிறது. எனவே, கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் மனுக்களை எளிமைப்படுத்தி ஏழை மாணவர்களின் சிரமத்தைப் போக்க பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

நல வாரியம்

எங்களது முந்தைய கோரிக்கையின்படி அரசு சாராத நல வாரியங்களில் இருப்பது போல முஸ்லீம்களின் பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு ஒரு நல வாரியம் அமைக்க வேண்டும். சதாவதானி சேக்குத்தம்பி பாவலர் அஞ்சல் தலை வெளியிட வேண்டும். விசாரணையின்றி எந்த கோர்ட்டு தீர்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

IDB Scholarship Programme 2008 - 2009

IDB Scholarship Programme 2008 - 2009
Applications are invited for the IDB Scholarship from meritorious, but financially needy Muslim students granted admission or intend to seek admission in the academic session 2008-2009 in the first year of degree course in the fields of Medicine and Engineering, (all branches) including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law.

The scholarship is offered as an Interest-Free Loan to be refunded in installments after completion of the graduation. The applicants should have passed SSC (10+2) with minimum 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics.

Please write for Application Forms (available Free of Charge) giving course details and the date of admission along with a self-addressed envelop of 25x11 cm size with postage stamps of Rs. 15/= affixed on it, to: MUSLIM EDUCATION TRUST, E-3, Abut Fazl Enclave, Jamia Nagar, New Delhi - 110 025. Ph: 26957004, 26941354, 65738725, Fax: 26949076. Application Form can also be downloaded from the website: www.metdelhi.org or www.sit-india.org.

Application form duly completed in all respects with necessary copies of required documents should reach the Trust office on the address given above latest by 6th October 2008.

Shah Waliullah Award

Shah Waliullah Award
To commemorate the outstanding services of Hazrat Shah Waliullah to promote the Islamic values, the Institute of Objective Studies instituted an Award known as “Shah Waliullah Award” to honour eminent scholars who have done outstanding work in Social Sciences, Humanities, Law and Islamics. The Award is in the form of a cash of one lakh rupees and a scroll of honour containing citation which is given annually to the bet scholar of the year.

The next award which is seventh in continuity would be for the year 2005 on the topic “Islamic Law in Contemporary Perspective”, the thrust being on the highly important contribution of the scholar to the above topic with contemporary research methodology, knowledge and ideological trends in focus.
Nominations are invited for the seventh Shah Waliullah Award (for the year 2005).
Nomination forms can be had from the address given below. The last date for receipt of nominations is October 15, 2008.

Further, the IOS invites the young scholars and researchers (below 45 years of age) to submit the Essay on the topic under Essay Writing Competition (Junior Category). The best Essay, as decided by the Panel of judges, is awarded Rs. 25,000/-. The award and the award money may be shared if there is a tie between two or more winners.

The topic of the Essay for 2005 would be “Constit-utionalism in Islamic Law Perspective”.
The last date for submission of essay on the above topic is October 25, 2008. For further details, contact: Dr. M. Manzoor Alam, Chairman, IOS, Institute Building, 162, Jogabai Main Road, Jamia Nagar, New Delhi-110025, Ph: 26981187 Email: manzoor @ndf.vsnl.net.in

http://islamicvoice.com/September2008RamdanIssue/COMMUNITYROUNDUP/index.php?PHPSESSID=683a7a1895b3d278dab8f53e81d0f9c9#Non-MuslimMadrasaTeachersattendAMUCourse

Thursday, September 18, 2008

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா


http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/??????-?????????-???????-??????-?????
Published in : இலக்கியம், கட்டுரை


இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.



வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு. இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடி பேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று. தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

தொகுப்பு : தமிழண்ணா

Last update : 17-09-2008 04:19

காயல்பட்டணம்.இன்

This is our humble effort to present our day-to-day Kayalpatnam ambience in a way of traditional, historical and scholarly values.

Click n experience our blasted off hit @ http://kayalpatnam.in/

Our target is to furnish the Kayalites with the necessary info on daily events of local atmosphere, education, jobs etc with traditional touch.

We are happy to be a part of uplifting our society through this tiny contribution.

kahirfathan@gmail.com

நான்காம் ஆண்டில் கீற்று

நான்காம் ஆண்டில் கீற்று
http://keetru.com/

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் தமிழ் இணைய தளங்களில் குறைவாக இருந்தபோது, அதை ஈடுகட்டும் சிறுமுயற்சியாகத் தான் கீற்று இணையதளத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வனும், ஆதவன் தீட்சண்யாவும் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து இறுதியாக ‘கீற்று’ என்ற பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஓவியர் மருது Logo வரைந்து கொடுத்தார். 20000 ரூபாய் கடன் வாங்கி கணினி ஒன்று வாங்கினோம். ஆதவனும், புனிதபாண்டியனும் பல்வேறு இதழாசிரியர்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தினார்கள். ஜூலை 24, 2005ல் கீற்று அரும்பியது.

புதுவிசை, தலித் முரசு, புரட்சிப் பெரியார் முழக்கம், புதிய காற்று என நான்கு இதழ்களுடன் தொடங்கப்பட்ட கீற்று, தற்போது 20க்கும் மேற்பட்ட இதழ்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என விரிந்து பரந்துள்ளது. குறிப்பாக கீற்று நேர்காணல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்பட்டதும், ஏராளமான விவாதங்களைக் கிளப்பியதும் மகிழ்ச்சியான செய்திகளாகும்.

அதே நேரத்தில் இலக்கியம் மற்றும் அரசியல் பக்கங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், மாற்றுத்திரை மீதான கவனத்தைக் குறைத்து விட்டது ஒரு குறைதான். நான்காம் ஆண்டில் அதை நிவர்த்திக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். அரசியல் மற்றும் இலக்கியப் பகுதிகளுக்கு படைப்புகள் அனுப்பி பங்களிப்பு நல்கியதுபோன்றே இந்தப் பகுதிகளுக்கும் அனுப்பி, உதவ வாசகர்களை வேண்டுகிறோம்.

படைப்புகளை வலையேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து படைப்பாளிகள் சிலர் எங்களிடம் பேசினர். அவர்களுக்கு அளித்த விளக்கத்தை வாசகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ‘திங்கள் முதல் வெள்ளி வரை வலையேற்றம் செய்யப்படும்’ என்று அறிவித்திருந்தாலும், அந்தத் தொடர்ச்சி கடந்த சில மாதங்களாக இல்லை. இதற்கு முதற்காரணம் கீற்றுவுக்கு என்று முழுநேர ஊழியர்கள் யாரும் இல்லாதது. கீற்று ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் வருமானத்திற்காக வேறொரு வேலை செய்கிறோம். அந்த வேலை முடிந்து, வீடு திரும்புகிற மாலை நேரத்திலும், மறுநாள் வேலைக்குப் போவதற்கு முந்தைய அதிகாலை நேரத்திலும் கீற்று வேலையைப் பார்க்கிறோம். நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் என மூன்று பேர் வேலை பார்த்தால்தான் கீற்றுவின் அனைத்துப் பகுதிகளையும் புதிதாக வலையேற்றம் செய்ய இயலும்.

வருமானத்திற்காகப் பார்க்கும் வேலையில் வேலைப்பளு அதிகமாகி, வீடு திரும்ப தாமதமாகும் நாட்களில் கீற்று வலையேற்றம் பாதிக்கப்படுகிறது. முழுநேர ஊழியரை பணி அமர்த்துவதற்கு கீற்றுவின் பொருளாதார நிலை ஆட்சேபம் தெரிவிக்கிறது.

இதழ்கள் சில தொடர்ச்சியாக வெளிவராமல் இருப்பதற்கான காரணத்தையும் வாசகர்களிடம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கையை 25 என்று நாம் கொண்டாலும், அவற்றில் சில இதழ்கள் தற்போது அச்சில் வெளிவருவதில்லை, அதனால் இணையத்திலும் வருவதில்லை. மீதமுள்ள இதழ்களில் சில, சிற்றிதழ்களுக்குரிய பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாமதமாகவே வருகின்றன. அவ்வாறு வந்தாலும், ஒரு சில இதழ்களைத் தவிர, ஏனைய இதழ்களின் குறுந்தகடைப் பெறுவது இமாலய சாதனையாகவே இருந்து வருகிறது. குறைந்தது 10 தடவையாவது தொலைபேசியில் நினைவூட்டினால் மட்டுமே குறுந்தகடு எங்கள் கைக்கு வருகிறது. அவ்வாறு கிடைக்கும் குறுந்தகடுகளிலும் - குறுந்தகடு உடைந்து வருவது, யுனிகோட்-க்கு மாற்ற முடியாத எழுத்துருவில் படைப்புகள் இருப்பது - மாதிரியான வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால்தான் இதழ்களை ! வல�¯ �யேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மூன்று ஆண்டுகளில் கீற்று சரியான பாதையில் பயணித்ததா என்று கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், அம்பேத்கர், பெரியார், பாரதிதாசன் வரிசையில் பாரதியையும் நிறுத்தியது பிழையாகவே தொக்கி நிற்கிறது. கீற்று ஆசிரியர் குழுவில் இருப்பவர்களில் யாருமே முப்பது வயதைத் தொடாதவர்கள். எங்களது வாசிப்பின் போதாமையோடு, பாரதி குறித்து நிலவும் ‘all in all அழகுராஜா’ கருத்துப் பிம்பமும் சேர்ந்து கொள்ள இந்தத் தவறு நேர்ந்து விட்டது. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ முகமூடியை விலக்கிவிட்டுப் பார்த்தால், பாரதியின் இந்துத்துவ கோர முகம் தென்படுவதை வாலஜா வல்லவனும், வே.மதிமாறனும் ஆதாரப்பூர்வமாக நிறுவியிருந்தாலும், அவற்றைப் படித்துணர்வதற்கு எங்களுக்கு இந்தக் காலம் தேவையானதாக இருந்திருக்கிறது. ஒருவர் பூமியின்கீழ் உள்ள எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்கு இயலாது என்ற சமாதானத�¯! �தைà ��் போர்த்திக் கொள்ள மனம் எத்தனித்தாலும், தவறான ஒருவரை வழிகாட்டியாக வாசகர்களிடம் முன்னிருத்தியது பிழையேயாகும். அதற்குக் கழுவாயாக, பாரதியை நாங்கள் அறியக் காரணமான புத்தகங்களில் ஒன்றை வாசகர்களுக்குப் படிக்கத் தருகிறோம். புத்தகத்தின் முதல் அத்தியாயம் இங்கே.

வாசகர்களின் கருத்துக்களை அறிவதற்கும், அவர்களுடன் உரையாடுவதற்கும் வலைக்குழுமம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். அதில் பங்கு பெற அழைக்கிறோம். பெருகும் ஆதரவினைப் பொருத்து, வாசகர் வட்டம் நடத்தும் எண்ணமுள்ளது. கீற்றுவிற்கு ஏதேனும் நிதி சேர்ந்தால் அடுத்த ஆண்டு ‘ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா’ நடத்தவும் உத்தேசமுள்ளது. கீற்றுவின் மீது அக்கறை இருக்கும் வாசகர்கள் அது தொடர்ந்து வெளிவருவதற்கு உதவியாக நிதி அளிக்க வேண்டுகிறோம். நிதி அளிக்க இங்கே அழுத்தவும்.

வேறென்ன? கீற்றுவின் புதிய வடிவம் குறித்தும், புதிய பகுதிகள் குறித்தும் அரிய ஆவலாக உள்ளோம்.

நன்றி.

என்றும் அன்புடன்,
கீற்று ஆசிரியர் குழு

விபரீத வாழ்க்கை நடத்தும் அமீரகத் தொழிலாளர்கள்


விபரீத வாழ்க்கை நடத்தும் அமீரகத் தொழிலாளர்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாம்களில் தாங்கள் தங்கும் அறைக்கு அருகே சமையல் எரிவாயுவை உபயோகிப்பதன் மூலம் தங்களுடன் வெடிகுண்டை வைத்திருப்பது போன்றது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு குறித்து பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டாலும், தாங்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இதுபோன்ற நிலையில் தான் இருக்க முடிகிறது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் ஒதுக்குப்புறத்தில் தங்கிவரும் சூழ்நிலையில் உணவுக்காக அலைவதைத் தடுக்க தொழிலாளர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தாங்கள் வேறு இடங்களுக்கு பணியின் நிமித்தமாக செல்லும் நிலை ஏற்படின் சமையல் எரிவாயுவை பிறிதொருவருக்கு விற்று விடுகின்றனர்

துபாய் பேருந்தில் திடீர் தீ : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்


துபாய் பேருந்தில் திடீர் தீ : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்

துபாயின் முக்கிய வணிகப் பகுதியான பர்துபாயின் பிரதான சாலையான காலித் பின் வாலித் சாலையில் வியாழன் நண்பகல் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிந்தது.

வாகனத்தின் ஏதோ ஒரு பகுதியில் புகை வருவதை உணர்ந்த ஓட்டுநர் ஏதோ அசாம்பாவிதம் நேரப்போகிறது என்பதனை உணர்ந்து உடனடியாக பயணிகளை பேருந்தை விட்டு இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் இறங்கியதும் ஓட்டுநரும் பேருந்தை விட்டுக் குதித்தார்.

அதனைத் தொடர்ந்து தீ மளமளவென எரிந்து பேருந்தை தீக்கிரையாக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயினை அணைத்தனர். இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன், தங்களது இன்னுயிரைக் காத்த ஓட்டுநரைப் பாராட்டினர்.

தீவிபத்துக்குக் காரணம் மின்கசிவு என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என ஓட்டுநர் தெரிவித்தார்.

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி, நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்


செஞ்சி,செப்.19-

செஞ்சிக்கோட்டையில் சதாத்துல்லாகான் மசூதி நுழைவு வாயில் உள்பட பல்வேறு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணி

தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையை பழமை மாறாமல் வைத்திருக்க வேண்டும் என்று காரணம் சொல்லி ஏற்கனவே பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோட்டை மதில் சுவர்கள் புல் செடிகள் முளைத்து சேதமடையும் வகையில் காணப்பட்டது.அதனால் தற்போதுள்ள அதிகாரிகள் அதனை செப்பணிட முடிவு செய்து கடந்த ஓராண்டாக பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி கோட்டையில் மதில் சுவர்கள் சரிசெய்யப்பட்டு சிமெண்டு பூசி புதுப்பிக்கப்பட்டது. சிவன் கோவில் சீரமைக்கப் பட்டது.வெளிநாட்டினரும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த மசூதி

தற்போது ராஜகிரி கோட்டைக்கு வெளியில் உள்ள சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதாத்துல்லாகான் மசூதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்றும் செஞ்சியை சேர்ந்த முஸ்லீம்கள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் தொழுகை நடத்துகின்றனர்.

மேலும் ராஜகிரி கோட்டையில் முதல் மற்றும் 2-வது, 3-வது நுழைவு வாயில் மதில் சுவர்கள் (பெரிய பெரிய பெரிய கருங்கற்களால் ஆனது ) இங்கு பழுதடைந்த பணிகள் சீர் செய்யப்படுகிறது.

இப்பணிகள் தொல் பொருள்துறை அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் மணி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

www.muduvaivision.com


லக்னோ,செப்.18-

ரூ.200 காணாமல் போனதால் ஆசிரியை 200 மாணவர்களை 10 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதில் மூச்சு திணறி 12 பேர் மயக்கம் அடைந்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்கா கிராமம்.இங்கு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பையில் இருந்த ரூ.200 காணாமல் போய் விட்டது.இதை மாணவர்களில் யாரோ ஒருவர் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

இதுபற்றி சந்தேகப்படும் மாணவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். ஆனால் பணத்தை எடுத்ததாக யாரும் கூறவில்லை.

எனவே அங்கு படித்து வந்த 200 மாணவர்களÛயும் வகுப்பறையில் வைத்து பூட்டும்படி வகுப்பு ஆசிரியைக்கு உத்தரவிட்டார். அவர் 200 மாணவர்களையும் இடநெருக்கடி உள்ள அறைக்குள் அடைத்து பூட்டினார்.தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கவில்லை.

குறுகிய இடத்தில் அனைவரையும் அடைத்து இருந்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கதறினார்கள். ஆனாலும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.

மாலையில் வகுப்பு முடிந்த போதும் மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் 10 மணி நேரத்துக்கு மேலாக அடைத்து வைக்கபட்டு கிடந்தனர்.

மாணவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு தேடி சென்றனர். அப்போது தான் மாணவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

அப்போதும் அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதனால் பெற்றோர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை மீட்டு வந்தனர். உள்ளே 12 மாணவர்கள் மயங்கி கிடந்தனர்.

இதுபற்றி கல்வித்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

A Call to Rise above Politics & Partisanship. ...

A Call to Rise above Politics & Partisanship. ...

Dear Dr. Manmohan Singh,

The blasts in Delhi (September 12, 2008) are another in the series of tragic blasts in which scores of people have been killed. We strongly condemn the blasts and demand a proper, unbiased investigation into the same. We demand that the guilty be punished. At the same time it seems that our investigating agencies are ignoring some thing very crucial in the matters of investigating the acts of terror.

The acts of terror have been occurring and Home Ministry is watching helplessly. While the current investigation is totally focused around SIMI, many an alleged culprits have been put behind the bars, despite which now some unknown entity Indian Mujahideen seems to have been projected as being responsible for the current ones. At the same time another stark truth is being deliberately sidelined and undermined. And that relates to the blasts done by Bajrang Dal and Hindu Jagran Samiti. We fail to understand as to why the investigation authorities are turning a blind eye to some of the well established facts.

1. In a serious case of blasts in Nanded in April 2006 two Bajarang Dal workers died when making bombs. Similar incidents of bomb blasts were witnessed in many places around that time, Parabhani, Jalna and Aurangabad in Maharashtra. Most of these were in front of the mosques. The Nanded investigation 'leads' were not followed. On the contrary the investigation in that direction was not pursued at all. The attitude of police in this investigation has been totally lax. Social activists made the complaint about this to Human Rights commission. The commission summoned the Superintendent of police, Nanded, in its hearing held on 17th June. The SP failed to turn up for hearing! There seems to be a deliberate cover up of this important finding of Maharashtra Anti terrorist Squad. ATS did investigate the links of the dead with Bajrang Dal, an RSS affiliate. At the same time the injured were visited in the hospital by the top brass of local BJP and associates.

Local BJP MP told the police not to harass those related to the culprits in the wake of the Bajrang Dal involvement in the bomb making. In Nanded, ATS also found fake moustache and pajama kurta, the idea being that the culprits will dress like a Muslim while doing these black deeds.

2. A bomb blast took place at the RSS office at Tenkasi, in the Tirunelveli District of Tamil Nadu on January 24. After a thorough investigation, the Tamilnadu Police had arrested 7 persons belonging to Sangh Parivar outfits. They had confessed that they indulged in this terror act to instigate the local Hindu population against the Muslims.
On further investigation, the Tamilnadu Police arrested Siva Alias Sivanandam, who is the General Secretary of Hindu Munnani at Kadayanallur, a neighbouring town of Tenkasi. Formed in 1980, Hindu Munnani is a frontal organisation of Sangh Parivar operating in Tamilnadu.

Siva, who has earlier worked in quarries in the neighboring state of Kerala had supplied the ammonium nitrate and other raw materials for preparing the bombs.

3. The bombs which exploded in Gadkari Rangayatan on 4th June 2008 injured seven people. Again Maharashtra Anti Terrorist Squad succeeded in nabbing the culprits. The culprits were part of Hindu Janjagaran Samiti (HJS), an outfit of Sanatana Ashram in Panvel. These culprits were also involved in other blasts, in Vashi, Panvel and Ratnagiri. We have not heard anything about the further tracing of this very important lead.

4. On 24th August, in Kanpur two Bajrang Dal workers died while making bombs. Rajiv alias Piyush Mishra and Bhupinder Singh were killed while making crude bombs on Sunday afternoon.

On 25th August, Monday, police recovered some crude hand grenades, lead oxide, red lead, potassium nitrate, bomb pins, timers and batteries from the spot, inside a hostel in Kalyanpur area of Kanpur, about 80 km from Lucknow. No further investigation, why?

Every time there is a bomb blast immediately the agencies and the media declare that it is done by some Muslim organization without any proof. Hundreds of innocent young boys are picked up, what follows are illegal detentions, torture, arrests, harassment of families, forcing the families and victims to sign blank papers. For years these helpless victims are tortured in jails, denied legal aid, even lawyers who try and fight their cases are attacked openly in courts. Their images tarnished for life time.

If they are lucky they get let off after years as neither the agencies or the police have any proof against them. The cacophony of stricter laws rises so that a police can extract a confession by third degree torture and present that as evidence. Through this systematic vilification campaign the process of demonization of minorities continued unabated.

If we look at the timing of the terror attacks it is very clear that one and only one political outfit is gaining from it and that is Sangh. With their eyes on the central government their agenda of polarizing the voter is going ahead successfully.

On the other hand there are constant attacks on minorities on one pretext or another. Orissa thousands of Christians have been attacked, rendered homeless, their homes ransacked and looted and burnt down, churches attacked and even orphanages are not left alone.

Karnataka a similar picture is emerging. We have personally briefed very senior people in the government and the Congress party about the Karnataka situation and that it might explode but nothing was done and we have seen what has happened yesterday.

While we write to you now, the police are firing at Muslims in Yakutpura in Vadodara. Yesterday during the Ganpati procession a local dargah was broken down and shops of Muslims looted and ransacked. Already one boy has died and many are injured.

Last few days the only Muslim village Nandepeda in the Dangs, Gujarat has been attacked, ransacked. Villagers have been beaten up brutally including women and children. All men have fled to the jungles. The police not only took away all the goods but before going they poured kerosene into the eatable good so that they could not eat anything too. A proposed VHP rally today was stopped after spending 4 hours on the phone and pressuring various police departments.

UPA had formed the National Integration Council under tremendous pressure. The first agenda papers which were prepared, if you remember, were highly communal and objectionable. A number of us had raised it during the meeting and the Home Minister had replied' treat them as scrap' in your presence. Probably the Home Minister realized that people like us were too uncomfortable to have in the NIC, who would raise these questions. The NIC was never convened again. It was supposed to meet every six months.

The country unfortunately has been given on a platter to the Sangh and the government looks helplessly in providing security to ordinary citizens whether they are victims of terror attacks or victims of the constant attacks by the Sangh Parivar's various outfits.

We hope you will intervene and question why are such clear cases of involvement of RSS affiliates in terror attacks being ignored. It seems the investigating authorities deliberately want to cover up the role of RSS affiliates in these acts of terror. Can the real truth behind the dastardly acts come out without properly investigating these incidents, where the culprits' involvement is very clear? We urge upon you to instruct the investigating authorities to pursue the investigation in an unbiased, honest and professional manner. The life of innocent citizens is at stake and such irresponsible cover will definitely prevent the real truth from coming out. For the sake of fairness, honesty and the values of our constitution, we need to pursue these cases in their logical direction.

Can we look forward to you, Mr. Prime Minister to make your Government to rise above partisan attitude and unravel the truth behind the blasts which are rocking the country in a painful way?

Sincerely,

Shabnam Hashmi, Member, National Integration Council

Ram Puniyani, Social Activist, and Writer

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்


www.muduvaivision.com

குவைத்தில் ஷரீஅத் விளக்க மாநாடு!

மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு! புனித ரமழான் சிறப்பு நிகழ்வுகள்!! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

முதல் நிகழ்ச்சி!

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19-09-2008 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் தராவீஹ் தொழுகைக்கு பிறகு நள்ளிரவு 2 மணி (ஸஹர் நேரம்) வரை குவைத், தஸ்மா பகுதியில் உள்ள 'டீச்சர்ஸ் சொஸைட்டி' இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு, புனித ரமழான் சிறப்பு நிகழ்வாக' நடைபெற இருக்கின்றது.

சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு மாநாட்டில் பெங்களூரு ஸபீலுர் ரஷhத் அரபிக்கல்லூரியின் தலைமைப் பேராசியர் - சமுதாயத்தின் போர்வாள் - கன்ஜுல் மில்லத் - ஃபகீஹுல் மில்லத் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எஸ். ஸைஃபுத்தீன் ரஷாதி ஃபாஜில் மழாஹிரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'தவ்ஹீத் எது? தவ்ஹீத்வாதிகள் யார்;' என்ற தலைப்பிலும், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் பேராசியர் - சொற்பொழிவு திலகம் - ஸுல்தானுல் வாயிழீன் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் முஃப்தி ரிஜ்வி பின் நூரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'தக்வா - இறையச்சம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர். கூட்ட இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.

இரண்டாவது நிகழ்ச்சி!

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 20-09-2008 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் தராவீஹ் தொழுகைக்கு பிறகு நள்ளிரவு 2 மணி (ஸஹர் நேரம்) வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'அஹ்மத் அப்துல்லாஹ் அல் அஜீல்' பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு, புனித ரமழான் சிறப்பு நிகழ்வாக' நடைபெற இருக்கின்றது.
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு மாநாட்டில் பெங்களூரு ஸபீலுர் ரஷhத் அரபிக்கல்லூரியின் தலைமைப் பேராசியர் - சமுதாயத்தின் போர்வாள் - கன்ஜுல் மில்லத் - ஃபகீஹுல் மில்லத் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எஸ். ஸைஃபுத்தீன் ரஷாதி ஃபாஜில் மழாஹிரி ஹழ்ரத் கிப்லா அவர்கள் 'இஸ்லாமிய எழுச்சியும், குழப்பவாதிகளின் சூழ்ச்சியும்' என்ற தலைப்பல் சிறப்புரையாற்றுகின்றார். கூட்ட இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ளவம், குழப்பங்களிலிருந்து தெளிவு பெறவும், குழப்பவாதிகளின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளவும் இச்சிறப்புமிகு இரண்டு நிகழ்ச்சிகளிலும் குவைத் வாழ் இந்திய, தமிழக, இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸஹர் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப் பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும், அலைபேசி வாயிலாக 7872482, 9430786, 7302747 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்

வேலைவாய்ப்புக்கு உதவும் இணையத்தளங்கள்

www.allarabia.com


www.manpower-me.com

www.bayt.com

www.recruitgulf.com

www.insurevacancy.com