Thursday, March 13, 2008

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் செயல்பட்டு வரும் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.10.2007 வெள்ளிக்கிழமை மம்சார் பூங்காவில் நடைபெற்றது. அல் அமீன் ஜமாஅத் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஜமாஅத்தினர் இணைந்து அல் அமீன் ஜமாஅத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

விழாவிற்கு எஸ்.நயினார் முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக பீர் அலி இறைவசனங்களை ஓதினார். மவ்லவி ஷெரீப் ஆலிம் துவக்கவுரை நிகழ்த்தினார். பொறியாளர் முஹம்மது கனி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமாஅத் வரவு செலவு அறிக்கையினை ஹஸன் சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் பத்ரு ஸஹாபாக்கள் நிர்வாகத் தலைவர் வாவா முஹம்மது சமுதாய இளைஞர்கள் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவது குறித்து பாராட்டினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் இணையத்தளம், மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தப்பட வேண்டியது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் : புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது
துணைத் தலைவர்கள் : ஊத்துமலை ஷேக் அப்துல் காதர்
செயலாளர் : அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர் : அருளாச்சி அஷரப் மில்லத், அருளாச்சி அப்துல் கரீம்
பொருளாளர் : வெள்ளானைக் கோட்டை நாகூர் மைதீன்
துணைப் பொருளாளர் : வாசுதேவநல்லூர் முஜீபுர் ரஹ்மான், அருளாச்சி ஹஸன்
செயற்குழு உறுப்பினர்கள் : வாசுதேவநல்லூர் சதக்கத்துல்லா, அருளாச்சி பாதுஷா, வெள்ளானைக் கோட்டை ஹ¤ஸைன், திவான் மைதீன்,ஊத்துமலை செல்லவாப்பா
கெளரவ ஆலோசகர்கள் : அருளாச்சி முஹம்மது மைதீன் ( ஷெரிப் ), அருளாச்சி டி.முஹம்மது மைதீன்

No comments: