Sunday, July 20, 2008

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்






கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், முஸ்லிம் லீக் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. இஹ்சானுல்லா அவர்களது மகன் தீன்குலச் செல்வன் ஒய். அன்வாருல்லா B.B.M. மணாளருக்கும், ஒய். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் குமாரத்திக்கும் திருமணம் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரஜப் பிறை 23 ( 27 - 07 -2008 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இன்ஷா அல்லாஹ் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்( ஷாதி மஹால் ) திருமண இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., எம்.பி. அவர்கள் தலைமை தாங்குகிறார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைச்செயலாளர் கும்பகோணம் தளபதி ஏ. முஹம்மது தாஹா,தீனிசை வேந்தர் தேரிழந்தூர் ஏ.எஸ். தாஜுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் ஹாஜியா பாத்திமா முஸப்பர், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி வி.ஏ. முஹம்மது யஹ்யா மன்பஈ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இத்திருமண விழாவில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்திட மணமகனின் சகோதரரும், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் செயலாளருமான ஒய் ரஹ்மத்துல்லாஹ் கோட்டுக் கொண்டுள்ளார்.

No comments: