Sunday, July 20, 2008

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன மாயம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

இதோ மாயசூத்திரம் ஓன்று

உங்களால் முடியும் என்று நம்புங்கள்.முடித்திருப்பீர்கள் - ஆம் "முடியும் என்ற நம்பிக்கை" எனும் சக்தியால் உங்கள் வெற்றியை நீங்களே நிர்மானியுங்கள். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் அவநம்பிக்கைகளை இன்றே ஒழியுங்கள். உங்கள மனதை நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்படி வைத்திருங்கள் எப்படியென்றால், தோல்வியை தவிர்த்து வெற்றியையே எண்ணுங்கள்.தினமும நீங்கள நினைத்ததை விட சிறந்தவராக மாறிவிட்டீர்கள் என்பதை நினைவூருங்கள். இவ்வாறு நினைவூட்ட சிறந்ததையே, மிகப்பெரிய அளவில் எண்ணுங்கள்.

மாய சூத்திரம் இரண்டு

"சாக்குபோக்கு சொல்வது" என்ற கொடிய நோயை நீங்களாகவே குணப்படுத்துங்கள். இதில் முதலாவது "என் உடல் ஆரோக்கியம் நன்றாய இருந்திருக்குமேயானால்" ஒன்றை நினைவில வையுங்கள துருப்பிடித்து போவதைவிட தேய்ந்து போவது மேல். இவ்வுலகில இயக்கத்தில இருக்கும் எந்த பொருள் தேயவில்லை.எனவே இதிலிருந்து விடுபட சிறந்த வழி யாரிடமும உங்கள உடல் ஆரோக்கியம பற்றி பேசாதீர்கள், உடல் நலம் பற்றி கவலை கொள்ள மறுங்கள், உடல் எந்த அளவிற்கு நலமாக இருக்கிறதோ அதை நினைத்து மகிழுங்கள்.

அடுத்ததாக,"ஆனால நான் அந்த அளவிற்கு அறிவாளியாக இருந்தால்" - இதற்கு காரணம் நம அறிவை குறைத்து மதிப்பிட்டு, மற்றவர் அறிவை அதிக மதிப்பிடுவது.ஒன்றை சிந்தியுங்கள் ஏன் சில அறிவாளிகள் தோற்கிறார்கள். பதில் தவறான அணுகுமுறை.எனவே சரியான அணுகுமுறையே அறிவைவிட சிறந்தது.அறிவு என்பதை சிந்திக்கும திறன மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.

கடைசியாக, "எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால்" - இதற்கு காரண காரிய விதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஒரு வெற்றியாளன் தோல்வியின போது கற்றுக்கொண்டு வெற்றியடைகிறான் ஆனால ஒரு தோல்வியாளன் தோல்வியில கற்றுக்கொள்ள தோற்கிறான். அதிர்ஷடம என்பதை பரிசு சீட்டு குலுக்கலில உண்டாகும நிகழ்வு(ப்ராபபிலிடி) யுடன குழப்பிக்கொள்ளாதீர்கள் ஒருவனுடைய வெற்றியை(அதிர்ஷடம்)தீர்மானிப்பது அவனுடைய தயாரிப்பு,திட்டமிடல், வெற்றி சிந்தனை ஆகும்.

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன ஆச்சர்யம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

சென்ற பகுதியில் மாய சூத்திரம் ஒன்று மற்றும் இரண்டு பார்த்தோம். இந்தப் பகுதியில் மூன்று மற்றும் நான்கு பார்ப்போம்.

மாய சூத்திரம் மூன்று

"பயத்தை போக்கி தன்னம்பிக்கை,தைரியத்தை உருவாக்குங்கள்" - பயத்தை போக்குவதில் மிகப்பெரிய எதிரி "தயக்கம்".இதை ஒழித்துக்கட்ட ஒரே வழி "செயலில் இறங்குவது".ஆம் "செயல்" ஒன்றே பயம் என்ற மனோபாவ தொற்றுநோய்க்கு அருமருந்து.முதலில் பயத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்துங்கள்.பின்பு செயலில் இறங்குங்கள்.உதாரணமாக கூட்டத்தில் அல்லது அலுவலக மீட்டிங்-கில் பேச பயம் என்றால், ஏதாவது உங்கள் கருத்தை கட்டாயமாக வெளிப்படுத்தி பேசுங்கள்.நாளடைவில் நீங்கள் தான் மீட்டிங்கின் ஹீரோ.நினைவில் கொள்ள சில குறிப்புகள் - "எப்போதும் முதல் வரிசையில் அமருங்கள்", "ஒருவருக்கொருவர் பேசும்போது 'இருவரும் சமம் என்ற மனநிலையில்'கண்களைப் பார்த்து பேசுங்கள்","பயம் உணரும்போதெல்லாம் பெரிய புன்னகை செய்யுங்கள்". ஆம் புன்னகை ஒன்றே பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வஸ்துவாகும்.

மாய சூத்திரம் நான்கு

"மிக உயர்வாகவே எண்ணுங்கள்" - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப உயர்ந்த குறிக்கோளை எண்ணி செயல்படுங்கள். உயர்ந்த இலட்சியத்திற்கு தடையாக இருப்பது "சுயமறுப்பு" சிந்தனையாகும். எ.கா ஒருவர் தனக்கு பிடித்த வேலைக்கான விளம்பரத்தை பார்க்கிறார் ஆனால் ஒரு முயற்சியும் செய்யாமல் வேலைக்கு தேவையான தகுதி தன்னிடம இல்லை என்று எண்ணி விட்டு விடுகிறார்.இதுபோன்ற சுயமறுப்பை இன்றோடு ஒழியுங்கள்.
உயர்ந்த அளவில் சிந்திப்பதற்கு முதலில் நேர்மறை (பாசிட்டிவான) முடிவை சித்தரிக்கும் சொல்,வாக்கியங்களை பயன்படுத்துங்கள்.மற்றவரை பற்றியும் பாசிட்டிவாக பேசிப் பழகுங்கள். "உயர்ந்து விளங்க என்றும் உயர்வாக எண்ணுங்கள்"




நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்





இப்படிக்கு,

பா.குருசாமி (எம்.பி.ஏ)
மேலாளர்,
ரியாத், சவுதி அரேபியா
pgsamy1974@yahoo.com

No comments: