Saturday, August 2, 2008

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்



கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்த வல்லி ஏ. இஹ்சானுல்லா இல்லத் திருமணம் ஞாயிறன்று கோட்டக் குப்பத்தில் நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மணமக்களை வாழ்த்தி பேசியபோது தெரிவித்ததாவது:

ஆலிம்களின் கோட்டை என்ற சிறப்புக் குரிய கோட்டக்குப்பம் மக்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ப தோடு அல்லாமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையுமே முஸ்லிம் லீகின் நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர்.

இது திருமண நிகழ்ச் சியா அல்லது முஸ்லிம் லீகின் மாநாடா என வியக்கும் அளவிற்கு சிறப் பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. இந்த ஊரில் மற்ற ஊர்களுக்கு வழிகாட்டும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ரப்பானிய்யா அரபி பெண்கள் மதரஸா என மார்க்கக் கல்வி பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இந்த மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தமிழ கத்தன் பல பகுதிகளுக்கும் சென்று குர்ஆனின் போதனைகளை ஹதீஸ் களின் விளக்கங்களை சமு தாய மக்கள் நல்ல முறை யில் எடுத்துரைத்து மார்க்க சேவை ஆற்றி வருகின்றனர்.

எனக்கு முன்பு பேசிய சகோதரர் துபை அப்துல் ரஹ்மான் இந்த ஊரின் பிரச்சினை தொடர்பாக மக்கள் நடந்து கொண்ட முறைகள் குறித்து சில செய்திகளை தெரிவித்தார். கோரிக்கைகள் எதுவானா லும் அதனை எப்படி அணுக வேண்டும் என இறைவன் தனது திருமறை யில் வழிகாட்டியுள்ளான். திருக்குர்ஆனில் முதல் அத்தியாயமான ~அல்ஹம்து சூராவை இறைவன் அமைத்து தந்துள்ள விதமே பல செய்தி களை நமக்கு அழகுற விளக்குகிறது.

இறைவனை புகழ்ந்து அவனது ஆற்றலை வியந்து போற்றும் வகையில் முதல் சில வசனங்கள் அமைந்துள்ளன.

இத்தகைய ஆற்றலுக் கும் - சிறப்புக்கும் உரிய இறைவனுக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்று மக்கள் இறைவனுக்கு உறுதி அளிப்பது போன்று அடுத்த சில வசனங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்துத்தான் ~இறைவா எங்களை நேரான வழியில் செலுத்து வாயாக என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்படி இறைமறை வசனம் ஒரு ஒழுங்கு முறையை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைக்கும் இரே வழிமுறையைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் டெல்லி யில் ஒன்றாக கூடி முஸ்லிம் சமுதாயத்துக்கு எப்படியெல்லாம் பணி யாற்ற வேடும் என ஆலோ சனை செய்தோம்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர் பாக மத்திய அரசு உடனுக் குடன் தீர்வு காணும் வகை யில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்.

பிரதமரிடம் நேரம் வாங்கி அவரை சந்தித்த போது நாங்கள் எந்த நோக் கத்திற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை விட்டு விட்டு ஆளாளுக்கு அவர வர் மாநில பிரச்சினையை பேச துவங்கி விட்டனர்.

பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த தும்தான் நாம் எந்த நோக் கத்துக்காக பிரதமரை சந்தித்தோமோ அதனை குறித்து விரிவாக விவாதிக் காமல் வந்து விட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியதுடன் நமது கோரிக்கைகள் தொடர் பாக அரசை அணுகும் போது குர்ஆன் கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்து விளக்கினோம்.

அதன்படி இன்னொரு நாள் பிரதமரை சந்தித் தோம். முதலில் அவரை மனமார வாழ்த்தி பாராட் டினோம். பின்னர் அவர் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் உற்ற துணையாக இருக்கும் என்ற உறுதியை தெரிவித் தோம். பிறகுதான் நாங்கள் அவரை சந்திக்க வந்ததன் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.

இந்த அணுகுமுறையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மன் மோகன்சிங் எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதன்படி சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைத்து தந்துள்ளார்.

இறைவன் வழிகாட்டும் இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் நமது கோரிக்கைகள் அனைத் திலும் உறுதியான வெற்றி யினை பெற முடியும்.

இப்போது மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி செய்யக் கூடிய அரசுகள் சிறுபான்மை மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட அரசுகள். இந்த அரசு களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கும் எந்த செயலி லும் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது. அதிலும் முஸ்லிம்கள் இதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதன்வாயிலா கத்தான் நாம் நமது சமு தாயத்துக்கு நன்மைகளை செய்ய முடியும். நமது எல்லா செயல்களையும் இறைவன் காட்டும் வழி முறையில் அமைத்து கொள்ள வேண்டும். அதற் காக இறைவனிடம் அனை வரும் துஆ செய்வோம்.

இவ்வாறு பேராசிரியர் பேசினார்.

No comments: