Thursday, August 14, 2008

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை


மதுரை, ஆக. 13: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மூலம் காந்தியச் சிந்தனை சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் இரா.ரெங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2008-09-ம் ஆண்டுக்கான காந்தியச் சிந்தனைச் சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கும், யோகா, தியான மற்றும் முழுமை நலவாழ்வு பட்டய மற்றும் உயர் பட்டயப் படிப்புக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது (மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

காந்தியச் சிந்தனை- சான்றிதழ் படிப்பு, காந்தியச் சிந்தனை- பட்டயப் படிப்பு, யோகா, தியானம் மற்றும் முழுமை நலவாழ்வு- பட்டயப் படிப்பு மற்றும் உயர் பட்டயப் படிப்பு.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும், டிகிரி படிப்பு முடித்தோர் உயர் பட்டயப் படிப்புக்கும் ஆக.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பேராசிரியர் எஸ்.ஜெயராஜ், காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனம், காந்தி மியூசியம்-625 020 (தொலைபேசி எண்: 9442405759, 9976888960).

No comments: