Friday, June 25, 2010

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

உங்கள் சமூகப் பணி மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

கடந்த பல ஆண்டுகளாக வெளி நாட்டில் பணி புரிந்து, வாழ்ந்து வரும் J. Iqbal Ahmed குவைத்திலிருந்து விடுக்கும் கோரிக்கை:

ஐயா, லட்சக் கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் (வீட்டு டிரைவர், வீட்டு வேலை, கட்டிட வேலை) சொற்ப வருவாய் பெற்று, பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 22 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரக வாசலில் வைத்து மயிலாடுதுறையைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரை அவரது குவைத் முதலாளி ( இரும்பு கம்பியால்) அடித்து, போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார். இந்த செய்தி அரப் டைம்ஸ் என்ற நாளிதழில் (23.4.2010) வந்துள்ளது. அவரது நிலை இன்று வரை சரியாகத் தெரியவில்லை. இதை, போல் ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த oடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிட, அவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.(கேரளா மாநில அரசு வெளிநாடு வாழ் கேரள மக்களுக்காக தனி அமைச்சகம் அமைத்து பல ஆண்டுகளாக பணி ஆற்றி வருகிறது)

இதை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சரிடம் Oப்புதல் பெற்று தாங்கள் அறிவிக்க வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

DeputyCM web link

இப்படிக்கு, வெளிநாடு வாழ் தமிழன்.
J. Iqbal Ahmed
Kuwait
Mobile +965 97823446

No comments: