Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையே தீர்வு!

ஒற்றுமையே தீர்வு!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.

கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.

கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.

மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.

அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.

தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.

இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.

இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.

ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.

எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.

வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!

கல்வி உதவித்தொகை

1.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை
சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை
நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

27-உட்ஸ் சாலை

சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால்
கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்
மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.
தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.
மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

www.midomi.com

Minambur Foundation

Dear All,

We give free service and coordination for getting admission for the following Institutes.

For MBA in Indian and UK universities minimum qualification must be a graduation. For USA online university, you can apply, if you have experience of two years with a two year diploma of any course.

Please visit the websites and choose a suitable course according to your qualification and requirements.

If you find any difficulty, please feel free to meet me in our office to decide.

1) English language courses in UK for any age group at London Study Center (www.londonstudycentre.co.uk )(British council approved Institute). These are full time courses in London , UK . On admission guidance will be given for visa procedure.

2) International School of Business Studies (www.isbs.org.uk). - Business Studies and Accountancy courses in London , UK for regular students. (British council approved Institute) MBA degree awarded by " Wales University ". These are full time courses in London, UK. On admission, guidance will be given for visa procedure. These courses can be converted part time to find a job after some time. IELTS requirement can be relaxed. Assured admission guaranteed.

3) Banasthali Deemed University, Rajasthan, India, (www.banasthali.org): Self study B.Ed. (One year), M.Ed. (One year), BBA, B.Sc.(Comp.Sci), MBA, etc. distance courses from Banasthali University , (Accredited, Indian Human resources Ministry approved university), for working class.

4) Online courses of Washington American Global University, (private non-accredited, registered university) USA for senior working class.(www.wagu-edu.us) , Any country Embassy attestation can be obtained.

Ashfaq Hussain
Saad Othman Al-Brahim Cont. Est. (Educational services).
Minambur Foundation (Chennai , India ),
14, Hafsa Bint Umar Street , Raudah-I,
P.O.box-100805, Riyadh- 11645.
Phone# 01 4915683, Fax# 01 4931988,
Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

என் செய்வேன்?

என் செய்வேன்?

http://www.muduvaivision.com/data/kavithai.asp?id=8

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை
வேலிகளால் அடைத்து – நாலாபுறமும்
வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால்
வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும்

காளை கரவை மாடுகளை எல்லாம்
கயிறுகளால் கட்டி வைத்து
தார் குச்சிகளால் தினமும்
தீண்டினால் அவை என் செய்யும்

காண்பவர் வாழாவிருப்பாரோ
கண்களை முடிகொள்வாரோ
வாயில்லா ஜீவன் அதை
வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ

மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா
மனித மனம் என்ன
மிருகத்திலும் கொடியதா – அல்லது
மங்கி மழுங்கி விட்டோடா?

பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது
பிழைக்க வந்த வந்தேரிகளால்
ஏ அமெரிக்காவின் கள்ள குழந்தையே
இஸ்ரேல் எனும் ஈனப்பிரவியே

ஏதைக் கண்டுவிட நீ துடிக்கிறாய்
யாரை வெல்வோம் என நினைக்கிறாய்?
மண்ணில் சாய்ந்தவரெல்லாம் மாண்டுவிட்டனரா - இல்லை
மறுமை சோலையின் மலர்களாகி விட்டனர்

வீழாத வல்லரசு உண்டா?
வீண்சுமர் வென்று
வெற்றி வாகை சுஉடிய கொற்றவன் எவனும்
உலகில் உண்டா?

தொடுத்த போர்கள் எல்லாம்
தொடர்வதைத்தானே பார்க்கிறோம்
வியட்நாம் பாடம் தரவில்லையா
வீழவில்லை இன்னும் பாரசீகமும் ஆப்கானும்


உயிர் துறந்த எங்களது உடல் உறுப்பே
உன் உடல் வடிக்கும் குருதியால்
என் இகம் துடிக்கும் செய்தியை
என் இதயம் கேட்கும் கேள்வியை

அது உகுக்கும் கண்ணீரை
எப்படி துடைப்பேன் - இறைவனிடம்
இரு கைகளை ஏந்துவதை தவிர நான்
என் செய்வேன்? என் செய்வேன்?


முதுவை சல்மான் - ரியாத்-அல்ஜிரியா
salmanhind007@yahoo.co.in

Monday, January 5, 2009

HVAC TECHNICIAN REQUIRED FOR U.A.E.

HVAC TECHNICIAN REQUIRED FOR U.A.E.

Position : HVAC Technician
Education : Graduate of Refrigeration
Experience : 4 years of experience in Gulf countries
Location : United Arab Emirates

Job Description
ü EXPERIENCED IN INSTALLATION, TESTING AND COMMISSIONING OF HVAC CONTROLS TO INCLUDE TROUBLE SHOOTING
ü GOOD KNOWLEDGE AND EXPERIENCE IN CENTRALIZED A/C SYSTEM (CHILLER, AUH, FUC, MOTOR AND PUMPS) INCLUDING REPAIR, WATER FLOW TESTING AND AIR BALANCING.
ü ABLE TO USE HVAC INSTRUMENTS, e.g. VOLTMETERS, THERMOMETERS (WET AND DRY BULB TEMPERATURE) TACHOMETER, CLAMP METER, GUAGE MAINFOLD AND FLOW MEASURING INSTRUMENT)
ü KNOWLEDGE IN DUCT FABRICATION AND INSTALATION INCLUDING TESTING AND BALANCING IS AN ADVANTAGE.
PLEASE RUSH YOUR CV TO hr@nationalestb.com or call 0097150-5631773

Thanks & Regards,

Hussain Basha
Manager-Corporate Affairs
-------------------------------------------------------------------------------------------
NATIONAL ELEVATORS & CENTRAL A/C FZE
P.O.Box : 54523 | Techno Park-FTZ | Ras Al Khaimah | U.A.E |
Tel. 07-2446230 | Fax. 07-2446231 | Mobile: 050-4474563 |
E-mail : hussain@nationalestb.com | www.nationalestb.com |
N A T I O N A L E S T. G R O U P | S I N C E 1986 |

ஒபாமாவுக்கு மஹாதீரின் மனம் திறந்த மடல்

Open Letter to Barack Hussein Obama, President-elect of the United States of America


By Dr. Mahathir Mohamad and Former Prime Minister of Malaysia

URL of this article: www.globalresearch.ca/index.php?context=va&aid=11584

Global Research, January 2, 2009


January 1, 2009

Dear Mr. President,
I did not vote for you in the Presidential Election because I am Malaysian.
But I consider myself one of your constituents because what you do or say will affect me and my country as well.
I welcome your promise for change. Certainly your country, the United States of America needs a lot of changes.
That is because America and Americans have become the most hated people in the world. Even Europeans dislike your arrogance. Yet you were once admired and liked because you freed a lot of countries from conquest and subjugation.
It is the custom on New Year's day for people to make resolutions. You must have listed your good resolutions already. But may I politely suggest that you also resolve to do the following in pursuit of Change.
1) Stop killing people. The United States is too fond of killing people in order to achieve its objectives. You call it war, but today's wars are not about professional soldiers fighting and killing each other. It is about killing people, ordinary innocent people by the hundreds of thousands. Whole countries will be devastated.
War is primitive, the cavemen's way of dealing with a problem. Stop your arms build up and your planning for future wars.
2) Stop indiscriminate support of Israeli killers with your money and your weapons. The planes and the bombs killing the people of Gaza are from you.
3) Stop applying sanctions against countries which cannot do the same against you.
In Iraq your sanctions killed 500,000 children through depriving them of medicine and food. Others were born deformed.
What have you achieved with this cruelty? Nothing except the hatred of the victims and right-thinking people.
4) Stop your scientists and researchers from inventing new and more diabolical weapons to kill more people more efficiently.
5) Stop your arms manufacturers from producing them. Stop your sales of arms to the world. It is blood money that you earn. It is un-Christian.
6) Stop trying to democratize all the countries of the world. Democracy may work for the United States but it does not always work for other countries.
Don't kill people because they are not democratic. Your crusade to democratize countries has killed more people than the authoritarian Governments which you overthrew. And you have not succeeded anyway.
7) Stop the casinos which you call financial institutions. Stop hedge funds, derivatives and currency trading. Stop banks from lending non-existent money by the billions.
Regulate and supervise your banks. Jail the miscreants who made profits from abusing the system.
8) Sign the Kyoto Protocol and other international agreements.
9) Show respect for the United Nations.
I have many other resolutions for change which I think you should consider and undertake.
But I think you have enough on your plate for this 2009th year of the Christian Era.
If you can do only a few of what I suggest, you will be remembered by the world as a great leader. Then the United States will again be the most admired nation. Your embassies will be able to take down the high fences and razor-wire coils that surround them.
May I wish you a Happy New Year and a great Presidency.
Yours Sincerely,
Dr. Mahathir bin Mohamad
(Former Prime Minister of Malaysia)


Please support Global Research
Global Research relies on the financial support of its readers.

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு

செத்தும் கொடை கொடுத்த" வள்ளல் சீதக்காதி என்றழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதர் மரைக்காயர் அவர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு பற்றி தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ படம் உங்கள் அபிமான www.tamilmuslimtube .com ல் கீழ்காணும் சுட்டில் காணலாம்.

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009


Short video film by Tamil Vitrtual University about the Architechtuaral excellence of Kilakarai Naduth theru Juma Masjid built by "Vallal Seethakaathi" in 17th Century , now available in your favourite website www.tamilmuslimtube .com in the following link

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009

அண்ணல் நபிகள் பற்றி அறிஞர் அண்ணா

www.arignaranna.blogspot.com

Rajaghiri Gazzali


"அறிஞர் அண்ணா" என்று அகிலம் போற்றும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சர் ஆவார்.
அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949இல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்து வந்தது.
1957இல் நடைபெற்ற தேர்தலில் கலந்துகொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்ற போது அண்ணாதுரையும் சட்டசபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க.வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969இல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவுகூரப்படுகிறார்.


அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.


இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.


பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.


இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.


தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.


இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.


இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். "அது தவறு" என்பதை எடுத்துரைத்தார்கள்.


மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, "இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் - முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.


எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல - 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.


"நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?" என்று அவர்கள் கேட்டார்கள்.


அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: "இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாஅத்' என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய 'ஜமாஅத்'திலே நான் இல்லை".


நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, 'ஜமாஅத்'திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.


எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.


யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.


இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ - அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.


தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.


வடநாட்டிலே இந்து - முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.


நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.


முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான - ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.


அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! "பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது" என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத - விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!


இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.


சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?


நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் "360 உருவங்களும் ஆண்டவனல்ல" என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.


பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.


நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!


வேண்டாம் அற்புதங்கள்!


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.


யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.


அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.


அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.


இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.


உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!


அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!


எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.


அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!


இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.


சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.


இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.


சொல்லும் செயலும்!

மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.


யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.


இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.


அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.


இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.


மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.


நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.


சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.



சமத்துவ மார்க்கம்

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.


இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.


நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.


மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.


மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.


இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ' அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!' என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் 'ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்' என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்' – கடவுளுக்குப் பொதுவாக' என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?


ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.

மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் 'மகான்' என்று சொல்லுகின்றோம்.


ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.


நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.


இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.


திருத்தொண்டு

கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.


யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.

சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.


எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.


சிறந்த மார்க்கம்

இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.


இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.


நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.


இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.


கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.


கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.


ஒன்றே குலம், ஒருவனே தேவன்

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.


மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.


ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.


இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.


ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.


ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.


இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.


இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.


காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.


மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.


இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.


மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.


பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.


எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் 'நாஸ்திகர்கள்' என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.


ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

அறப்பணி

என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.


எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.


என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.


ஏகதெய்வக்கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.


இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!

எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.


அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.


இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.


பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.


அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
Subscribe to: Posts (Atom)

Aramex has organised a Gaza campaign and you can help them by donating what you can afford.

Aramex has organised a Gaza campaign and you can help them by donating what you can afford.
Below are the collection categories:

- 1st aid kits
- medical supplies
- tents
- blankets
- canned foods (not meat)
- clothes (New or as good as new)
- personal hygiene products

Deadline is on the 11th of January 09.

Certainly, you can drop the packs to the following collection points:

Mall of Emirates
Deira City Center
Sharjah City Center
Ajman City Center

In brief:

Hundreds of Israeli troops are moving deeper into Gaza as the second day of the ground assault gets under way.

International pressure to secure a ceasefire in Gaza is growing as it teeters on the brink of a humanitarian disaster.

Aid agencies have warned that people in the region are facing "grave" shortages of food and water.

Save the Children has warned that basic humanitarian supplies are running out with much of the city left without electricity and water.

The agency called for aid to be let in to the stricken area and said that 50,000 children are already suffering from chronic malnutrition.

More than 2,000 families were displaced prior to the launch of the ground offensive on Saturday with charities expecting the number to increase significantly as fighting escalates.
Please circulate!!! !!!!!!!
Millions of thanks for your help and support..May almighty allah bless you!!

நாடகமே உலகம்

http://jazeela.blogspot.com

நாடகமே உலகம்

ஜெஸிலா | அனுபவம்/ நிகழ்வுகள் | 60 மறுமொழிகள் | #

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

டாக்டர் அமீர்ஜஹான் துபாய் பயணம் - புகைப்படங்கள்










Sunday, January 4, 2009

ஊர்

சமிபத்தில் படித்ததில் இருந்து....... சில....

நபி இப்ராஹிம் அவர்கள் ஈராக் இல் “ஊர்” எனும் இடத்தில் பிறந்து வாழ்ந்து ஆட்சி செய்தார்கள். இது பாரசிகம் எனவும் அழைக்கப்பட்டது. "ஊர்” எனும் சொல் நாம் நினைப்பது போல் திராவிட மொழி சொல் அல்ல. இது ஒரு சுமேரிய மொழிச் சொல் ஆகும்.

மக்கள் நெருக்கமாக விவசாய நாகரிகத்தோடு, வியாபாரமும் செய்த மக்கள் குடியிருந்த இடங்களெல்லாம் “ஊர்” என அழைக்கப்பட்டது.

ஈரானில் நிசாபூர் எனும் ஒரு இடம் இருக்கிறது. இங்கு தான் உலக புகழ் பெற்ற கவிஞர் உமர்கையாம் பிறந்தார்.

ஆப்கனிஸ்தான் இல் உள்ள ஜோபூர்
பங்களாதேஷில் உள்ள தினாஜ்பூர்
இந்தியாவில் மைசூர், பெங்களூர், நாக்பூர், ஜெய்பூர், நாகூர்
துர்கியில் உள்ள ஷோக்பூர்
கம்போடியாவில் ஹங்கூர்
ரஷ்யாவில் பைலூர்
மலேசியாவில் சிலாங்கூர், கோலாலம்பூர்
சிங்கப்பூர்
பாகிஸ்தானில் லாகூர், பாகல்பூர்
இலங்கையில் தோப்பூர், மூதூர், மருதூர், நல்லூர், சம்பூர், நிந்தவூர், கோவிலூர், பச்சனூர், மயிலங்கடலூர், ஏறாவூர், மகிளூர்.

தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்:
வழுத்தூர், கூத்தாநல்லூர், பேகம்பூர், லால்பூர், திருவாங்கூர்,
எழும்பூர், பர்கூர், தானூர், கொடுங்கலூர், கண்ணனூர், திருவிடைமருதூர், வடலூர், ஆரய நல்லூர், கீழூர், சீழசாத்தனூர், மாணிக்கபூர், பெரம்பூர், நெல்லூர், கரூர், மாலையூர், கோயம்புத்தூர், பனையூர், வேலம்புதூர், வண்டியூர், கண்டியூர், மணலூர், செம்பனூர், அரியலூர், காட்டுபுதூர், ஆரூர், புத்தூர், எருக்கூர், நீடூர், ஆலந்தூர், சாத்தூர், சானூர், குன்னூர், அரசூர், மைலாப்பூர், திருப்பூர், கடலூர், முசாபூர், வடலூர், ஆம்பூர்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஊர் எனும் சொல்லோடு கூடிய பகுதிகள் உள்ளன.

மேலும் எங்கு எல்லாம் “ஊர்” எனும் சொல்லோடு கூடிய “ஊர்” இருக்கிறதோ அங்கு எல்லாம் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருப்பார்கள் என்பது நிஜம்.

Rajaghiri Gazzali

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்


கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.

மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

FAQs on Import of Gold by NRI's

FAQs on Import of Gold by NRI's

http://indiacustoms.blogspot.com/2008/01/import-of-gold-silver.html


Can NRIs bring gold into India?


Yes.
NRIs can bring into India gold upto 10,000 grams as part of their baggage once in
six months provided they have stayed abroad for a continuous period of six months.

In what form can the gold be brought into India?
The gold may be brought into India in any form, including ornaments (other
ornaments studded with stones and pearls).

Are NRIs required to pay customs duty on the gold brought by them into India?
Yes.
They are required to pay customs duty in any convertible foreign currency at a rate equivalent to Rs.220/- per 10 grams of gold. (may change from time to time)

How often can a NRI bring gold into India?
A NRI can bring gold into India once in six months.

Is it necessary that the NRI should have stayed abroad at least for a minimum period of six months prior to his return to India for being eligible to bring gold?
Yes.


Check Gold Prices & Charts in India and Overseas Market


Import of Silver by NRI's
Can NRIs bring silver into India?
Yes. NRIs can bring to India silver upto 100 kilograms as part of their personal baggage.

What is the rate of duty payment on such import?
The rate of duty on import of silver is Rs. 500 per kilogram which is payable in foreign currency. (may change from time to time)

Can NRI's bring both gold and silver?
Yes.

Can NRIs sell gold/silver imported by them to residents?
Yes. Gold/silver so brought by NRIs can be sold to residents against payment in rupees. Reserve Bank has granted general permission to persons resident in India to make payment to NRIs in Indian rupees by means of a crossed cheque in India and that such rupees are credited to Ordinary Non-resident Rupee (NRO) account of the NRI seller.



Rules & Regulations


Jewellery which is in addition to the duty free jewellery otherwise allowed


without payment of duty only is liable to payment of duty

(a) Who can import Gold as Baggage

Any passenger of Indian origin or
Any Passenger holding a valid passport issued under the Passport Act 1967



(b) Eligibility Conditions and Customs Duty

Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger has not availed of the exemption under this scheme at the time of such short visit.




The duty at the rate of Rs. 250 per 10 gm should be paid by the passenger in convertible Foreign currency
The weight of Gold (including ornaments) should not exceed 10 Kg per passenger
The gold is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
The passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the Customs bonded warehouse and pay the duty before clearance. Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii)He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the duty before clearance.


Note: The jewellery, which is in addition to the jewellery otherwise allowed without payment of duty, only is liable to payment of duty under the above mentioned scheme for import of gold/silver.


Clearence of Silver on payment of duty


(a) Who can import Silver

Any Passenger of Indian Origin or

Any passenger holding a valid passport issued under the Passport Act 1967.



(b) Eligibility conditions and Customs Duty

Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger.has not availed of the exemption under this scheme at the time of such short visit.

The duty at the rate of Rs. 500 per Kilogram should be paid by the passenger in convertible Foreign currency

The quantity of Silver should not exceed 100 Kilogram per passenger

The Silver is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India

Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.

The passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the Customs bonded warehouse and pay the duty before clearance.Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the duty before clearance.

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

www.muduvaivision.com


ஜன. 3: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தைசெட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.

சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்துவைத்தார்.

கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).

சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.

சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

சலீம் கான்-ஐ.நா விருது

இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.

ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.

சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.

2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.

உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.

ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''

மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.

சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.

பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.

புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''

அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!

Rajaghiri Gazzali

Saturday, January 3, 2009

ரியாத்தில் தமிழக இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Dear All,

We have one Mr. Rajendran from the town of Chinna Salem, in Tamil Nadu, admitted to Shimesy Hospital's, Accident emergency section. He is suffering from High BP and has resulted in total paralysis of his left side. His brother approached Riyadh Indian Association (RIA) for help. Our Humanitarian Committee Convener Mr. Shahjagan from the day, the call was received, is behind this case. We all as Indians, owe Shajagan a lot, in this and many other cases.

Mr. Rajendran was claimed as brain dead by the doctors on arrival and was kept under observation. By god's grace, he reclaimed his consciousness and is now able to move his body and Doctors have advised to sent him to India ASAP for further medical assistance.

Mr. Rajendran has no valid Iqama and his Iqama is not renewed for the last nine years. All these works + his visa transfer from old to new transport, his authorization from Indian Embassy, strecher tickets from Air India are being followed up by our contacts. We are in need of money for all these, in tune of SAR.8000-SAR.10000.

RIA request all of you, who receive this e-mail to help as much possible to this unfortunate fellow countrymen. You can provide your contributions to me, Magesh ( Mob : 050-6634823) or Mr. Sekhar- Rajendran's brother (Mob : 050-9145644).

Rajendran is a make-shift tailor in KSA and has a family of wife and 2 daughters aged 17 and 13 in India.

Please help.

Thanks

Magesh
magesh74p@yahoo.com

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்

க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு விரைவில் சம‌ உரிமை மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெறும்.

ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழை அனுப்ப‌ த‌மிழ‌க‌மெங்குமுள்ள‌ ஜ‌மாஅத்துக‌ள், முக்கிய‌ப் பிர‌முக‌ர்க‌ள் ம‌ற்றும் பொதுந‌ல‌ அமைப்புக‌ள் குறித்த‌ முக‌வ‌ரி ம‌ற்றும் தொலைபேசி எண்க‌ளை கீழ்க்க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கு அனுப்பி வைக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 28460127 / 9840040067
மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி :
ithayathulla@gmail.com