தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!
தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்
சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழிதொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.
பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.
பி.எஸ்.என்.எல். தொலைபேசி 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி 044 64555100, 64556100
(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, May 11, 2009
Sunday, May 10, 2009
மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரிப்பு
சென்னை, மே 9-
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்ததைப்போல இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் வேலை
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக என்ஜினீயரிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே `கேம்பஸ் இண்டர்விï' மூலம் பெரிய பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதனால், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் போட்டிப்போட்டு சேர்ந்தனர்.
எலெக்ட்ரானிக்ஸ் கம்ïனிகேஷன், கம்ப்ïட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் 30 ஆயிரம், 40 ஆயிரம். 70 ஆயிரம் என்று சம்பளத்தை வாரி வழங்கின. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வாங்கும் சம்பளத்தை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 21 வயது என்ஜினீயரிங் பட்டதாரி வாங்க முடியும் என்ற நிலை உருவானது.
அரசு பணிக்கு மவுசு
என்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கால் சென்டர், இ-பப்ளிஷிங், பி.பி.ஓ. உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச்சேரும் கலை அறிவியல் பட்டதாரிகளும் அரசு பணியைவிட அதிக சம்பளம் பெற்றனர். திறமை இருந்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உயர்ந்த பொறுப்புக்கு வருவதுடன் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களுக்கு அரசு வேலையில் சேரும் ஆர்வம் மெதுவாக குறைந்தது.
இந்த நிலையில், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்ததுடன் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிப்பளு அதிகரித்ததுடன் ஏராளமான சலுகைகள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் அரசு துறை நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஊழியர்களை தேர்வுசெய்தன. அதோடு 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
வரலாறு திரும்புகிறது
இதனால், கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பார்வை, அரசு வேலை பக்கம் திரும்ப தொடங்கியது. அரசு வேலைக்கான போட்டிதேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண பி.ஏ.. பி.எஸ்சி. கல்வித்தகுதி கொண்ட வேலைக்கும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வில் வெற்றிபெற்று வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 1970-களில் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முதல் 10 ரேங்க் இடங்களையும் கணிசமான அளவு பிடிப்பவர்களா தமிழக மாணவர்களாக இருந்தனர். இதனால், டெல்லி பாராளுமன்றத்திலும், வெவ்வேறு மாநிலங்களிலும் செயலாளர், தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. இடையில் பல ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் வரலாறு திரும்புள்ளது.
முப்படைகளிலும்
முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு நிகராக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் அதிகாரி பணி இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோலேச்சினார்கள். ஜெனரல், அட்மிரல், ஏர் சீப் மார்ஷல் போன்ற தலைமை பதவிகளை அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் பாதுகாப்புத்துறையில் தமிழக இளைஞர்கள் சேருவது குறைய தொடங்கியது.
இந்த நிலையில், ராணுவ, கடற்படை, விமானப்படையில் சேர நடத்தப்படும். என்.டி.ஏ., சி.டி.எஸ். எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தற்போது தமிழக மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை தற்போதைய இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப பாடத்திட்டங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரிப்பு
சென்னை, மே 9-
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்ததைப்போல இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் வேலை
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக என்ஜினீயரிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே `கேம்பஸ் இண்டர்விï' மூலம் பெரிய பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதனால், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் போட்டிப்போட்டு சேர்ந்தனர்.
எலெக்ட்ரானிக்ஸ் கம்ïனிகேஷன், கம்ப்ïட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் 30 ஆயிரம், 40 ஆயிரம். 70 ஆயிரம் என்று சம்பளத்தை வாரி வழங்கின. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வாங்கும் சம்பளத்தை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 21 வயது என்ஜினீயரிங் பட்டதாரி வாங்க முடியும் என்ற நிலை உருவானது.
அரசு பணிக்கு மவுசு
என்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கால் சென்டர், இ-பப்ளிஷிங், பி.பி.ஓ. உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச்சேரும் கலை அறிவியல் பட்டதாரிகளும் அரசு பணியைவிட அதிக சம்பளம் பெற்றனர். திறமை இருந்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உயர்ந்த பொறுப்புக்கு வருவதுடன் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களுக்கு அரசு வேலையில் சேரும் ஆர்வம் மெதுவாக குறைந்தது.
இந்த நிலையில், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்ததுடன் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிப்பளு அதிகரித்ததுடன் ஏராளமான சலுகைகள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் அரசு துறை நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஊழியர்களை தேர்வுசெய்தன. அதோடு 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
வரலாறு திரும்புகிறது
இதனால், கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பார்வை, அரசு வேலை பக்கம் திரும்ப தொடங்கியது. அரசு வேலைக்கான போட்டிதேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண பி.ஏ.. பி.எஸ்சி. கல்வித்தகுதி கொண்ட வேலைக்கும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வில் வெற்றிபெற்று வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 1970-களில் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முதல் 10 ரேங்க் இடங்களையும் கணிசமான அளவு பிடிப்பவர்களா தமிழக மாணவர்களாக இருந்தனர். இதனால், டெல்லி பாராளுமன்றத்திலும், வெவ்வேறு மாநிலங்களிலும் செயலாளர், தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. இடையில் பல ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் வரலாறு திரும்புள்ளது.
முப்படைகளிலும்
முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு நிகராக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் அதிகாரி பணி இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோலேச்சினார்கள். ஜெனரல், அட்மிரல், ஏர் சீப் மார்ஷல் போன்ற தலைமை பதவிகளை அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் பாதுகாப்புத்துறையில் தமிழக இளைஞர்கள் சேருவது குறைய தொடங்கியது.
இந்த நிலையில், ராணுவ, கடற்படை, விமானப்படையில் சேர நடத்தப்படும். என்.டி.ஏ., சி.டி.எஸ். எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தற்போது தமிழக மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை தற்போதைய இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப பாடத்திட்டங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
Saturday, May 9, 2009
வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.
குறிப்பு :
இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.
குறிப்பு :
இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Labels:
நிகழ்ச்சி,
படிப்பு,
வழிகாட்டுதல்,
வி.களத்தூர்
Islamic financing answer to world crisis, expert
Islamic financing answer to world crisis, expert
By Shabna Aziz and Faisal Aboobacker Ponnani
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009050837351&archiveissuedate=08/05/2009
DAMMAM – Islamic financing is the only solution for the global economic crisis currently threatening the world’s largest countries, says a financial expert from India, who is currently visiting the Kingdom. H. Abdur Raqeeb, who is the convener of the National Committee on Islamic Banking, Indian Center for Islamic Finance (ICIF) said that the world is gradually realizing and accepting the significance of the Islamic finance system as a solution to untangle the crisis.
Abdur Raqeeb, who is in the leather export business, has devoted much of his time to implementing an Islamic banking system in India. “My goal is to improve human welfare which can be achieved only through implementing an Islamic finance system. Basically, the purpose of my visit to the Kingdom is to create awareness among the Indian expat population here about the relevance of Islamic economics in India and to meet with Islamic banking giants in the Kingdom, such as, Al-Rajhi, IDB and other banking experts,” he told Saudi Gazette in an exclusive interview.
“Islamic banking is most beneficial to the marginalized sections of society. European countries, like Britain, have started many Islamic financing systems. Since 2005, several Islamic banks have been established in Britain, and London has become a center of Islamic banking. Prime Minister Gordon Brown wants to make Britain the ‘gateway to Islamic finance and trade’. The UK treasury and the Japanese ministry of finance are seriously exploring the potential use of ‘Sukook’ (Asset based bonds) as a debt management tool in the wholesale sterling and yen markets. The Islamic financial system has received such recognition in the West that even the Vatican has proposed Islamic finance principles to Western banks as a solution for the worldwide economic crisis,” Abdur Raqeeb said.
“Islamic banking is the need of the hour. It is all about equity and justice and sharing and caring. But unfortunately, people, including Muslims, are unaware of this divinely ordained economic system. Islamic banks are not for Muslims alone. One in five of the applicants for some of the products of the Islamic banks in Britain is a non-Muslim,” said Abdur Raqeeb.
He has been working for many years to bring about reforms in the banking regulations in India which act as a major stumbling block to the introduction of Islamic financing in India. “In the Indian scenario, India is an emerging global economic powerhouse and has displayed a very steady and high growth rate. We have enormous human resources with abundant technical and managerial skills. Direct investment, portfolio investment and venture capital investments are at an all time high. But on the other hand, a large section of the population is left out of the prosperity net. There is a desperate shortage of equity and lease financing for micro and small enterprises. The relevance of Islamic financing in a country like India is that it ensures equitable and fair distribution of monetary resourses to all the sectors, especially the marginalized section,” Abdur Raqeeb explained.
The government of India has appointed a senior team headed by Ananda Sinha who is the chief general manager in charge of the department of banking operations and development to study the feasibility of introducing Islamic banking in the country. On September 12, 2008, the Raghu Ram Rajan committee submitted a report on financial sector reforms and the committee recommended interest-free banking in India. “More efforts are needed to convince the Reserve Bank of India, the parliamentarians and the general public about the benefits and utility of the Islamic banking system for the comprehensive growth of all sectors in India,” Abdur Raqeeb said.
“The Indian Banks Regulation Act of 1949 says that no banks can be run without interest. Our prime goal is to persuade the authorities to amend this rule in order to accommodate Islamic financing in the banking sector of the country,” he said.
“In the midst of the current downturn, there is little liquidity except in the Gulf region. There are plenty of funds with the Non Resident Indians in the Middle East. After 9\11, the Gulf countries are reluctant to invest in the West. These funds can flow into India, once India recognizes Islamic financing. There are two high profile multi-million dollar projects underway in Mumbai and other Indian cities from Middle Eastern countries,” he said.
He added that according to GRAIL (the US market intelligence and data analysis provider) India has the potential of emerging as a significant market for Islamic Banking provided that there is a favorable change in the regulatory environment and increased awareness among Muslims and India as a whole.
Abdur Raqeeb along with others who support his ideas organized a conference in New Delhi in February 2006 on the topic ‘Justice and Equity: The message of Islamic banking’ which was well received with the participation of experts in the field, such as, the Islamic Development Bank’s Dr. Umer Chapra; Dr. Monzer Kahf from the USA; and Dr. Mansoor Durrani from the Kingdom.. “Some of the political parties, like RJD of Lalu Prasad Yadav, have included Islamic banking in their election manifesto and that gives us a ray of hope,” said Abdur Raqeeb.
He has already visited most of the Islamic banks around the world and has communicated the need of Islamic banking in India. – SG
By Shabna Aziz and Faisal Aboobacker Ponnani
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009050837351&archiveissuedate=08/05/2009
DAMMAM – Islamic financing is the only solution for the global economic crisis currently threatening the world’s largest countries, says a financial expert from India, who is currently visiting the Kingdom. H. Abdur Raqeeb, who is the convener of the National Committee on Islamic Banking, Indian Center for Islamic Finance (ICIF) said that the world is gradually realizing and accepting the significance of the Islamic finance system as a solution to untangle the crisis.
Abdur Raqeeb, who is in the leather export business, has devoted much of his time to implementing an Islamic banking system in India. “My goal is to improve human welfare which can be achieved only through implementing an Islamic finance system. Basically, the purpose of my visit to the Kingdom is to create awareness among the Indian expat population here about the relevance of Islamic economics in India and to meet with Islamic banking giants in the Kingdom, such as, Al-Rajhi, IDB and other banking experts,” he told Saudi Gazette in an exclusive interview.
“Islamic banking is most beneficial to the marginalized sections of society. European countries, like Britain, have started many Islamic financing systems. Since 2005, several Islamic banks have been established in Britain, and London has become a center of Islamic banking. Prime Minister Gordon Brown wants to make Britain the ‘gateway to Islamic finance and trade’. The UK treasury and the Japanese ministry of finance are seriously exploring the potential use of ‘Sukook’ (Asset based bonds) as a debt management tool in the wholesale sterling and yen markets. The Islamic financial system has received such recognition in the West that even the Vatican has proposed Islamic finance principles to Western banks as a solution for the worldwide economic crisis,” Abdur Raqeeb said.
“Islamic banking is the need of the hour. It is all about equity and justice and sharing and caring. But unfortunately, people, including Muslims, are unaware of this divinely ordained economic system. Islamic banks are not for Muslims alone. One in five of the applicants for some of the products of the Islamic banks in Britain is a non-Muslim,” said Abdur Raqeeb.
He has been working for many years to bring about reforms in the banking regulations in India which act as a major stumbling block to the introduction of Islamic financing in India. “In the Indian scenario, India is an emerging global economic powerhouse and has displayed a very steady and high growth rate. We have enormous human resources with abundant technical and managerial skills. Direct investment, portfolio investment and venture capital investments are at an all time high. But on the other hand, a large section of the population is left out of the prosperity net. There is a desperate shortage of equity and lease financing for micro and small enterprises. The relevance of Islamic financing in a country like India is that it ensures equitable and fair distribution of monetary resourses to all the sectors, especially the marginalized section,” Abdur Raqeeb explained.
The government of India has appointed a senior team headed by Ananda Sinha who is the chief general manager in charge of the department of banking operations and development to study the feasibility of introducing Islamic banking in the country. On September 12, 2008, the Raghu Ram Rajan committee submitted a report on financial sector reforms and the committee recommended interest-free banking in India. “More efforts are needed to convince the Reserve Bank of India, the parliamentarians and the general public about the benefits and utility of the Islamic banking system for the comprehensive growth of all sectors in India,” Abdur Raqeeb said.
“The Indian Banks Regulation Act of 1949 says that no banks can be run without interest. Our prime goal is to persuade the authorities to amend this rule in order to accommodate Islamic financing in the banking sector of the country,” he said.
“In the midst of the current downturn, there is little liquidity except in the Gulf region. There are plenty of funds with the Non Resident Indians in the Middle East. After 9\11, the Gulf countries are reluctant to invest in the West. These funds can flow into India, once India recognizes Islamic financing. There are two high profile multi-million dollar projects underway in Mumbai and other Indian cities from Middle Eastern countries,” he said.
He added that according to GRAIL (the US market intelligence and data analysis provider) India has the potential of emerging as a significant market for Islamic Banking provided that there is a favorable change in the regulatory environment and increased awareness among Muslims and India as a whole.
Abdur Raqeeb along with others who support his ideas organized a conference in New Delhi in February 2006 on the topic ‘Justice and Equity: The message of Islamic banking’ which was well received with the participation of experts in the field, such as, the Islamic Development Bank’s Dr. Umer Chapra; Dr. Monzer Kahf from the USA; and Dr. Mansoor Durrani from the Kingdom.. “Some of the political parties, like RJD of Lalu Prasad Yadav, have included Islamic banking in their election manifesto and that gives us a ray of hope,” said Abdur Raqeeb.
He has already visited most of the Islamic banks around the world and has communicated the need of Islamic banking in India. – SG
பாலைவனத் தூது
அஸ்ஸலாமு அலைக்கும்,
இப்பொழுது பாலைவனத் தூது http://palaivanathoothu.blogspot.com என்ற இணையதள வலைப் பதிவிலும் காணலாம். இப்பொழுதே இதனை உங்கள் favourate list ல் add செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை அல்லது உங்களது படைப்புகளை எங்களது palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
இதனை உங்களது நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் உங்களது சகோதர , சகோதரிகளுக்கும் தெரிவியுங்கள்.
இன்றே படியுங்கள் ! பாலைவனத் தூது
இப்பொழுது பாலைவனத் தூது http://palaivanathoothu.blogspot.com என்ற இணையதள வலைப் பதிவிலும் காணலாம். இப்பொழுதே இதனை உங்கள் favourate list ல் add செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை அல்லது உங்களது படைப்புகளை எங்களது palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
இதனை உங்களது நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் உங்களது சகோதர , சகோதரிகளுக்கும் தெரிவியுங்கள்.
இன்றே படியுங்கள் ! பாலைவனத் தூது
Friday, May 8, 2009
பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-தமுமுக தொண்டர்கள் மோதல்
பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-தமுமுக தொண்டர்கள் மோதல்
வெள்ளிக்கிழமை, மே 8, 2009, 12:44 [IST]
மக்களவைத் தேர்தல்-2009
http://thatstamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை, மே 8, 2009, 12:44 [IST]
மக்களவைத் தேர்தல்-2009
http://thatstamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Labels:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
தமுமுக,
தொண்டர்,
பொள்ளாச்சி,
மோதல்
துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் நடத்திய கல்விக் கருத்தரங்கு
துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் நடத்திய கல்விக் கருத்தரங்கு
துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் நடத்திய கல்விக் கருத்தரங்கில் எஸ்.எம். இதாயத்துல்லா, அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் ( சினா தானா )
Labels:
கருத்தரங்கு,
கல்வி,
துபாய்,
தேரிழந்தூர்,
ஜமாஅத்
Thursday, May 7, 2009
பல் மருத்துவர் முஹம்மது ஃபாரூக்
பல் மருத்துவர் முஹம்மது ஃபாரூக்
துபாயில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவம் முஹம்மது ஃபாரூக் தற்பொழுது காரைக்குடியில்
Labels:
காரைக்குடி,
பல் மருத்துவர்,
முஹம்மது ஃபாரூக்
துபாயில் சமுதாய நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்பவர்
துபாயில் இஸ்லாம் குறித்து அறிய உதவும் இஸ்லாமிய தகவல் மையம்


துபாயில் இஸ்லாம் குறித்து அறிய உதவும் இஸ்லாமிய தகவல் மையம்
துபாய் : துபாய் உலக நாடுகளை இணைக்கும் ஒரு வர்த்தக கேந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகை புரிந்து வருகின்றனர்.
இங்கு வருபவர்கள் இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளவும், குறிப்பாக இஸ்லாம் குறித்த சந்தேகங்களைப் போக்கி கொள்ள உதவும் வகையிலும் தார் அல் பர் எனும் சேவை அமைப்பினால் துபாய் அரசின் ஆதரவுடன் இஸ்லாமிய தகவல் மையம் ( http://www.islamicinfodubai.com ) 1996 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.
இத்தகவல் மையம் திருக்குர்ஆனை பல்வேறு மொழிகளில் வெளியிடுதல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோருக்கு பயிற்சி, இஸ்லாமிய அமைச்சகத்துடன் இணைந்து இஸ்லாம் குறித்து சகோதர சமுதாய மக்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் இஸ்லாம் குறித்த தகவல் வழங்குதல், கருத்தரங்கம், கண்ண்காட்சி, இஸ்லாம் குறித்த நூல்கள் பல்வேறு மொழிகளில், ஆடியோ, குறுந்தகடு உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகவல் மையத்தில் தமிழ், ஆங்கிலம், சீனா, மலையாளம், இந்தி, உர்தூ, சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூல்கள் கிடைக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த தமீம் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு செயல்பட்டு வரும் நூலகம் பல்வேறுபட்ட மக்களையும் கவர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகமும் செயல்பட்டு வருகிறது.
மேலும் விபரமறிய தொடர்புக்கு : Tel : 04-3986950
மின்னஞ்சல் : info@islamicinfo.org.ae
இணையத்தளம் : http://www.islamicinfodubai.com
திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி
திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி
திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட மாணாவர்களது ஆட்டம் அதிகரித்து வருவதாக அங்கு பயின்று வரும் ஒரு மாணவரின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதியைக் கண்காணிக்க சமுதாய நபரல்லாது வேறு நபர் இருப்பதால் அவர்களைக் கட்டுக்கு கொண்டு வர முடியவில்லையாம்.
விடுதி உணவு சரியில்லை.
தொழுகைக்கு முறையான வசதியில்லை.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அரபி மொழித்தேர்வுக்கான விடைத்தாள்கள் கல்லூரி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக தொலைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளில் ஆப்செண்ட் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கேட்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்களாம்.
சமீபத்தில் அமீரகம் வருகை புரிந்த எம்.ஐ.இ.டி. கல்லூரி முதல்வர் முனைவர் பீ. மு. மன்சூர் தனது கல்லூரியின் பெருமை குறித்து எடுத்துரைத்தார்.
மேற்கண்ட தகவல்கள் சரிதானா ? என்பது குறித்து யாரேனும் முறையாக விசாரித்து தகவல் தந்து உதவினால் கல்லூரியின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளவும், சமுதாய மாணவர்கள் வரும் காலத்த்தில் சரியான மாணவரைத் தேர்வு செய்யவும் உதவியாய் இருக்கும்.
திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட மாணாவர்களது ஆட்டம் அதிகரித்து வருவதாக அங்கு பயின்று வரும் ஒரு மாணவரின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதியைக் கண்காணிக்க சமுதாய நபரல்லாது வேறு நபர் இருப்பதால் அவர்களைக் கட்டுக்கு கொண்டு வர முடியவில்லையாம்.
விடுதி உணவு சரியில்லை.
தொழுகைக்கு முறையான வசதியில்லை.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அரபி மொழித்தேர்வுக்கான விடைத்தாள்கள் கல்லூரி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக தொலைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளில் ஆப்செண்ட் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கேட்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்களாம்.
சமீபத்தில் அமீரகம் வருகை புரிந்த எம்.ஐ.இ.டி. கல்லூரி முதல்வர் முனைவர் பீ. மு. மன்சூர் தனது கல்லூரியின் பெருமை குறித்து எடுத்துரைத்தார்.
மேற்கண்ட தகவல்கள் சரிதானா ? என்பது குறித்து யாரேனும் முறையாக விசாரித்து தகவல் தந்து உதவினால் கல்லூரியின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளவும், சமுதாய மாணவர்கள் வரும் காலத்த்தில் சரியான மாணவரைத் தேர்வு செய்யவும் உதவியாய் இருக்கும்.
The Holy Prophet (SAW) Said:
The Holy Prophet (SAW) Said:
1) Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people
2) Four things that destroy the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night
3) Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).
4) Four things that increase the wetness of face & its happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.
5) Four things that stop the Rizq (Sustenance) :
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty
6) Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers..
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).
The Holy Prophet (SAW), Also said to communicate to others even if you listen One Verse (Ayaah) & this one verse will stand on the Day of Judgment for intercession.
The Holy Prophet (SAW) said, Stop doing everything during the Azaan, even reading the Quran, the person who talks during the Azaan will not be able to say the Kalima E Shahada on his/her death bed....
Please pass this message to Muslims...
**READ THIS DUAA FOR BETTER LIFE**
Allahumma- inni- ala- Zikr-ika -wa Shuk-rika wa husni-Ibaadatik
A very powerful Dua'a has been sent to you. Imagine if 1000 people read it just because of you. Jazakallah. BECAUSE ONLY you will seek goodness
___________
1) Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people
2) Four things that destroy the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night
3) Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).
4) Four things that increase the wetness of face & its happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.
5) Four things that stop the Rizq (Sustenance) :
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty
6) Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers..
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).
The Holy Prophet (SAW), Also said to communicate to others even if you listen One Verse (Ayaah) & this one verse will stand on the Day of Judgment for intercession.
The Holy Prophet (SAW) said, Stop doing everything during the Azaan, even reading the Quran, the person who talks during the Azaan will not be able to say the Kalima E Shahada on his/her death bed....
Please pass this message to Muslims...
**READ THIS DUAA FOR BETTER LIFE**
Allahumma- inni- ala- Zikr-ika -wa Shuk-rika wa husni-Ibaadatik
A very powerful Dua'a has been sent to you. Imagine if 1000 people read it just because of you. Jazakallah. BECAUSE ONLY you will seek goodness
___________
Wednesday, May 6, 2009
சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )
சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )
முஸ்தாக் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டோமே என மனம் துடியாய் துடித்தது. யா அல்லாஹ்! வேறு வழியே தெரியவில்லையே. தங்கை ரஷிதா வாழ வேண்டுமே எனப் புலம்பினான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
முஸ்தாக் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தான். குடும்பச் சுமையின் காரணமாக படிக்க ஆசை இருந்தும் அவனால் மேலே படிக்க முடியவில்லை.
ரசாக் பாயின் மளிகைக் கடையில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்தான். ரசாக் பாயும், அவர் மனைவி அஜீஜாவும், முஸ்தாக்கை பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொண்டார்கள்.
ரசாக் பாயின் வீட்டுக்குள் சுதந்திரமாக சென்று வரும் உரிமை முஸ்தாக்கிற்கு மட்டுமே உண்டு. ரசாக் பாயின் பிள்ளைகள் சல்மானும், சுலைமானும் முஸ்தாக்கிடம் அண்ணே, அண்ணே என்று அன்பாகப் பழகினர்.
முஸ்தாக்கிற்கு அம்மாவும், தங்கையும் மட்டுமே உண்டு. வாப்பா இல்லை. முஸ்தாக் கொண்டு வரும் வருமானமும், தீப்பெட்டி ஒட்டும் வருமானமும் மூவருக்கும் இரண்டு வேளை கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் ரஷிதாவுக்கு பதினைந்து பவுன் நகை போடுவதாகப் பேசி பக்கத்து ஊர் இஸ்மாயிலுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தாயின் பழைய நகை பத்துப் பவுனைப் போட்டு ஐந்து பவுன் நகை ஆறுமாதம் கழித்துப் போடுவதாகப் பேச்சு. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது.
ரஷிதா பத்து நாளைக்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டு பெட்டியுடன் ஊர் வந்து சேர்ந்தாள். “என்னம்மா ரஷிதா, தீடீர்னு மச்சான் வரல்லையா?”
அண்ணே, ஐந்து பவுன் நகை வாங்கிட்டுத்தான் ஊருக்கு வரணும்னு என் மாமியார் என்னை துரத்தி விட்டுட்டாங்க.
ஏம்மா மச்சானுக்கு நம்ம நெலமைத் தெரியாதா?
தெரிஞ்சு என்னண்ணே பிரயோஜனம்? என்னை நகை வாங்கிட்டு வா. இல்லைன்னா நகைக்கு உரிய பணத்தை யாவது வாங்கிட்டு வான்னு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு எனத் தேம்பி தேம்பி அழுதாள்.
முஸ்தாக்கின் இரத்தம் கொதித்தது. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த வக்கில்லை. மாமியார் வீட்டுலேயே புடுங்கணும்னு நெனைக்கிற இவனெல்லாம் ஆம்பிளை எனக் காறி உமிழ்ந்தான்.அதே மனக் கசப்புடன் வேலைக்குச் சென்றான்.
அங்கே அஜீஜா, ஏய் முஸ்தாக், இங்க வாப்பா அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கி இருக்கேன். முதலாளி டிசைன் நல்லா இல்லைன்னுட்டாரு. நீ பார்த்துச் சொல்லுப்பா நல்ல இருக்கா,இல்லையான்னு.
சூப்பரா இருக்குமா, நீங்க கழுத்துல போட்டா இன்னும் அழகாயிரும். அஜீஜா கணவனை பார்த்து கேட்டுக்கங்க.
அவன் நீ என்ன செஞ்சாலும் சரின்னுதான் மாடு மாதிரி தலையாட்டுவான். அவன் உன்னோட செல்லப் புள்ளையாச்சே!
உங்களுக்குப் பொறாமை தாயும் புள்ளையும் ஒண்ணாப் பேசுறதைப் பாத்து
இப்படி தாயும், தந்தையுமா பழகுறவுங்க வீட்டில் இருந்து முஸ்தாக், அஜீஜா ஆசையாய் வாங்குன நெக்லஸைத் திருடி விட்டான்.
மனம் வெட்டி போட்ட பல்லியின் வாலாய் துடித்தது.
ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கையின் கையில் கொடுத்து கடன் வாங்கி இந்த நெக்லஸை வாங்கினேன் எனப் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.
யா அல்லாஹ்! இந்த வரதட்சணை கொடுமை என்றுதான் மறையுமோ? இதனால் பாவங்களுக்கு ஆளாகி வேதனைத் தீயில் வாடிகிறோமே! நான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நீயும் உரியவர்களும் மன்னிப்பார்களா? என்று புலம்பித் தள்ளினான்.
அன்று முதல் சிரிப்பை தொலைத்து விட்டு நடை பிணமாக நடமாடினான்.
ரசாக் பாய் நல்ல உள்ளத்துடன் முஸ்தாக் நீ ஏண்டா இப்புடி உம்முன்னு இருக்க, அம்மா ஆசையா வாங்குன நகை தொலைஞ்சு போச்சுன்னா அவ எங்கயாவது ஞாபக மறதியா கழட்டி வச்சுருப்பா இல்லைன்னா கொக்கி கழண்டு எங்கயாவது கீழ விழுந்திருக்கும். நீ கவலைப்படாதடா என உண்மை தெரியாமல் ஆறுதல் சொன்னார். அன்பான இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மேலும் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நிம்மதியில்லாமல் தவித்தான். நாட்கள் சென்றன.
ஒரு கல்யாண வீட்டில் தற்செயலாக ரஷிதாவின் கழுத்தில் நகையைப் பார்த்த அஜீஜா திகைத்துப் போனாள்.
ஏம்மா ரஷிதா இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கே எங்கேம்மா வாங்குன?
அஜீஜா நகையை கழட்டி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்.
நான் வாங்கலைம்மா அண்ணன் தான் வாங்கிக் குடுத்தாங்க.
அஜீஜாவிற்கு உண்மை புரிஞ்சு போச்சு. பந்தலில் உட்கார்ந்திருந்த கணவனை அழைத்து உண்மையை விளக்கினாள்.
அப்புடிச் சொல்லாதம்மா அவன் ரொம்ப நல்லவன்.
இல்லைங்க இது என் நெக்லஸ்தான். நான் வாங்குன கடை முத்திரை அதுல இருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. வாங்க வீட்டுக்குப் போவோம். அவனை கூப்பிட்டு விசாரிப்போம்.
அங்கே ரசாக் பாய் முஸ்தாக்கை அழைத்து, முஸ்தாக் அல்லாஹ்வின் மேல் ஆணையா கேக்கிறேன். நீ தப்பு செய்தியா?
வாப்பா, என்னை மன்னிச்சுருங்க, என்னோட தங்கச்சி வாழணும்கிற ஆசையில தப்பு செய்திட்டேன். இந்த பாவ காரியத்தால தினம், தினம் நிம்மதியில்லாம செத்துக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட என்னைய சோறு போட்ட உங்க கையாலேயே அடிச்சு கொன்னுருங்க என்று பதறித் துடித்து அழுதான்.
விபரங்களை கேட்டறிந்த ரசாக் பாய் கண்கள் கலங்க வரதட்சணை என்கிற பேய் ஒரு நல்லவனை எப்படி திருடனா மாத்தியிருக்கு பாத்தியா! யா அல்லாஹ் இது என்ன கொடுமை! இது மாதிரி எத்தனையெத்தனை நல்லவர்கள் தவறிழைத்து விட்டு துடிக்கிறார்களோ? எத்தனையெத்தனை குடும்பங்கள் கடனில் மூழ்கி நாதியற்று நடுத்தெருவில் தவித்து வருகிறார்களோ? பாழாய் போன இந்த வரதட்சணை பழக்கம் எப்படி மார்க்கத்தில் புகுந்தது? ஆமாம்! இதற்கு எதாவது ஒரு வழி செய்தாகனும். டேய் முஸ்தாக்! நீ செய்த இந்த தவறை நாங்க மன்னிக்கனுமா- வேண்டாமா? சொல்லு
அல்லல்லா – இப்படி சொல்லாதீங்க வாப்பா, நீங்க மன்னிச்சாதான் அல்லாஹ்வும் என்னை மன்னிப்பான் என்று மனசு வெடிக்கக் கதறினான்.
அப்போ நான் சொல்வதை செய்வீயா?
நீங்கள் என்ன சொன்னாலும் சரி அப்படியே செய்வேன் என்றான் விம்மியபடி.
அப்படியா! நீ கல்யாணம் செய்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய். அது மட்டுமல்ல உன் வயிற்று பிள்ளைக்கும் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் உன்னை மன்னித்து விடுவோம். என்ன சரிதானே?
திடுக்கென்று எழுந்து வல்ல நாயன் மீது ஆணை ! இந்த வரதட்சணை கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்து துடித்தவன் நான். இந்த கொடுமை யாருக்கும் வேணாம். நானோ எனது பிள்ளைகளோ வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்து நபி (ஸல்) அவர்கள் வழியில் இல்லறத்தை நல்லறம் ஆக்குவேன் வாப்பா என்று கதறியவாறு வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டான். அங்கே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.
நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2009
முஸ்தாக் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டோமே என மனம் துடியாய் துடித்தது. யா அல்லாஹ்! வேறு வழியே தெரியவில்லையே. தங்கை ரஷிதா வாழ வேண்டுமே எனப் புலம்பினான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
முஸ்தாக் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தான். குடும்பச் சுமையின் காரணமாக படிக்க ஆசை இருந்தும் அவனால் மேலே படிக்க முடியவில்லை.
ரசாக் பாயின் மளிகைக் கடையில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்தான். ரசாக் பாயும், அவர் மனைவி அஜீஜாவும், முஸ்தாக்கை பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொண்டார்கள்.
ரசாக் பாயின் வீட்டுக்குள் சுதந்திரமாக சென்று வரும் உரிமை முஸ்தாக்கிற்கு மட்டுமே உண்டு. ரசாக் பாயின் பிள்ளைகள் சல்மானும், சுலைமானும் முஸ்தாக்கிடம் அண்ணே, அண்ணே என்று அன்பாகப் பழகினர்.
முஸ்தாக்கிற்கு அம்மாவும், தங்கையும் மட்டுமே உண்டு. வாப்பா இல்லை. முஸ்தாக் கொண்டு வரும் வருமானமும், தீப்பெட்டி ஒட்டும் வருமானமும் மூவருக்கும் இரண்டு வேளை கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் ரஷிதாவுக்கு பதினைந்து பவுன் நகை போடுவதாகப் பேசி பக்கத்து ஊர் இஸ்மாயிலுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தாயின் பழைய நகை பத்துப் பவுனைப் போட்டு ஐந்து பவுன் நகை ஆறுமாதம் கழித்துப் போடுவதாகப் பேச்சு. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது.
ரஷிதா பத்து நாளைக்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டு பெட்டியுடன் ஊர் வந்து சேர்ந்தாள். “என்னம்மா ரஷிதா, தீடீர்னு மச்சான் வரல்லையா?”
அண்ணே, ஐந்து பவுன் நகை வாங்கிட்டுத்தான் ஊருக்கு வரணும்னு என் மாமியார் என்னை துரத்தி விட்டுட்டாங்க.
ஏம்மா மச்சானுக்கு நம்ம நெலமைத் தெரியாதா?
தெரிஞ்சு என்னண்ணே பிரயோஜனம்? என்னை நகை வாங்கிட்டு வா. இல்லைன்னா நகைக்கு உரிய பணத்தை யாவது வாங்கிட்டு வான்னு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு எனத் தேம்பி தேம்பி அழுதாள்.
முஸ்தாக்கின் இரத்தம் கொதித்தது. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த வக்கில்லை. மாமியார் வீட்டுலேயே புடுங்கணும்னு நெனைக்கிற இவனெல்லாம் ஆம்பிளை எனக் காறி உமிழ்ந்தான்.அதே மனக் கசப்புடன் வேலைக்குச் சென்றான்.
அங்கே அஜீஜா, ஏய் முஸ்தாக், இங்க வாப்பா அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கி இருக்கேன். முதலாளி டிசைன் நல்லா இல்லைன்னுட்டாரு. நீ பார்த்துச் சொல்லுப்பா நல்ல இருக்கா,இல்லையான்னு.
சூப்பரா இருக்குமா, நீங்க கழுத்துல போட்டா இன்னும் அழகாயிரும். அஜீஜா கணவனை பார்த்து கேட்டுக்கங்க.
அவன் நீ என்ன செஞ்சாலும் சரின்னுதான் மாடு மாதிரி தலையாட்டுவான். அவன் உன்னோட செல்லப் புள்ளையாச்சே!
உங்களுக்குப் பொறாமை தாயும் புள்ளையும் ஒண்ணாப் பேசுறதைப் பாத்து
இப்படி தாயும், தந்தையுமா பழகுறவுங்க வீட்டில் இருந்து முஸ்தாக், அஜீஜா ஆசையாய் வாங்குன நெக்லஸைத் திருடி விட்டான்.
மனம் வெட்டி போட்ட பல்லியின் வாலாய் துடித்தது.
ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கையின் கையில் கொடுத்து கடன் வாங்கி இந்த நெக்லஸை வாங்கினேன் எனப் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.
யா அல்லாஹ்! இந்த வரதட்சணை கொடுமை என்றுதான் மறையுமோ? இதனால் பாவங்களுக்கு ஆளாகி வேதனைத் தீயில் வாடிகிறோமே! நான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நீயும் உரியவர்களும் மன்னிப்பார்களா? என்று புலம்பித் தள்ளினான்.
அன்று முதல் சிரிப்பை தொலைத்து விட்டு நடை பிணமாக நடமாடினான்.
ரசாக் பாய் நல்ல உள்ளத்துடன் முஸ்தாக் நீ ஏண்டா இப்புடி உம்முன்னு இருக்க, அம்மா ஆசையா வாங்குன நகை தொலைஞ்சு போச்சுன்னா அவ எங்கயாவது ஞாபக மறதியா கழட்டி வச்சுருப்பா இல்லைன்னா கொக்கி கழண்டு எங்கயாவது கீழ விழுந்திருக்கும். நீ கவலைப்படாதடா என உண்மை தெரியாமல் ஆறுதல் சொன்னார். அன்பான இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மேலும் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நிம்மதியில்லாமல் தவித்தான். நாட்கள் சென்றன.
ஒரு கல்யாண வீட்டில் தற்செயலாக ரஷிதாவின் கழுத்தில் நகையைப் பார்த்த அஜீஜா திகைத்துப் போனாள்.
ஏம்மா ரஷிதா இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கே எங்கேம்மா வாங்குன?
அஜீஜா நகையை கழட்டி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்.
நான் வாங்கலைம்மா அண்ணன் தான் வாங்கிக் குடுத்தாங்க.
அஜீஜாவிற்கு உண்மை புரிஞ்சு போச்சு. பந்தலில் உட்கார்ந்திருந்த கணவனை அழைத்து உண்மையை விளக்கினாள்.
அப்புடிச் சொல்லாதம்மா அவன் ரொம்ப நல்லவன்.
இல்லைங்க இது என் நெக்லஸ்தான். நான் வாங்குன கடை முத்திரை அதுல இருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. வாங்க வீட்டுக்குப் போவோம். அவனை கூப்பிட்டு விசாரிப்போம்.
அங்கே ரசாக் பாய் முஸ்தாக்கை அழைத்து, முஸ்தாக் அல்லாஹ்வின் மேல் ஆணையா கேக்கிறேன். நீ தப்பு செய்தியா?
வாப்பா, என்னை மன்னிச்சுருங்க, என்னோட தங்கச்சி வாழணும்கிற ஆசையில தப்பு செய்திட்டேன். இந்த பாவ காரியத்தால தினம், தினம் நிம்மதியில்லாம செத்துக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட என்னைய சோறு போட்ட உங்க கையாலேயே அடிச்சு கொன்னுருங்க என்று பதறித் துடித்து அழுதான்.
விபரங்களை கேட்டறிந்த ரசாக் பாய் கண்கள் கலங்க வரதட்சணை என்கிற பேய் ஒரு நல்லவனை எப்படி திருடனா மாத்தியிருக்கு பாத்தியா! யா அல்லாஹ் இது என்ன கொடுமை! இது மாதிரி எத்தனையெத்தனை நல்லவர்கள் தவறிழைத்து விட்டு துடிக்கிறார்களோ? எத்தனையெத்தனை குடும்பங்கள் கடனில் மூழ்கி நாதியற்று நடுத்தெருவில் தவித்து வருகிறார்களோ? பாழாய் போன இந்த வரதட்சணை பழக்கம் எப்படி மார்க்கத்தில் புகுந்தது? ஆமாம்! இதற்கு எதாவது ஒரு வழி செய்தாகனும். டேய் முஸ்தாக்! நீ செய்த இந்த தவறை நாங்க மன்னிக்கனுமா- வேண்டாமா? சொல்லு
அல்லல்லா – இப்படி சொல்லாதீங்க வாப்பா, நீங்க மன்னிச்சாதான் அல்லாஹ்வும் என்னை மன்னிப்பான் என்று மனசு வெடிக்கக் கதறினான்.
அப்போ நான் சொல்வதை செய்வீயா?
நீங்கள் என்ன சொன்னாலும் சரி அப்படியே செய்வேன் என்றான் விம்மியபடி.
அப்படியா! நீ கல்யாணம் செய்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய். அது மட்டுமல்ல உன் வயிற்று பிள்ளைக்கும் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் உன்னை மன்னித்து விடுவோம். என்ன சரிதானே?
திடுக்கென்று எழுந்து வல்ல நாயன் மீது ஆணை ! இந்த வரதட்சணை கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்து துடித்தவன் நான். இந்த கொடுமை யாருக்கும் வேணாம். நானோ எனது பிள்ளைகளோ வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்து நபி (ஸல்) அவர்கள் வழியில் இல்லறத்தை நல்லறம் ஆக்குவேன் வாப்பா என்று கதறியவாறு வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டான். அங்கே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.
நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2009
Labels:
சிறுகதை,
திருமங்கலம்,
பா.பாத்துமுத்து,
வாழ்க்கையின் விலை
Subscribe to:
Posts (Atom)