சேலம் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!
http://www.muslimleaguetn.com/news.asp?id=201
புனித ரமளான் மாத நோன்பு காலம் முழுவதும் முஸ்லிம் லீக் பிரைமரி அமைப்புக்கள் சிறப்பான பணியாற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கதையும். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கும் துணைபுரிய வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட முடிவுகள்:
ரமளான் செயல்திட்டங்கள்:
புனித ரமளான் நோன்பு காலம் தற்போது துவங்க உள்ளது. இறைவனின் அருள் நிறைந்த இம்மாதத்தில் முஸ்லிம் லீகினர் அனைவரும் சமூக நலப் பணிகளில் திட்டமிட்டு ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஏழை எளியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு தேவையான உணவு. உடை. உறைவிட வசதிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தர்மகாரியங்களை தாராளமாகச் செய்யும் இம்மாதத்தில். தரவேண்டியவர்களிடமிருந்து ஏழை வரியை பெற்று பெறவேண்டியவர்களுக்கு வழங்கும் பணியை முஸ்லிம் லீக் அமைப்புக்கள் செய்ய வேண்டும். இதற்காக பைத்துல்மால் அமைப்புக்களை தோற்றுவித்து முறையாக இந்த பணிகளைச் செய்யலாம்.
முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரை கண்டறிந்து அவர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சர்வசமயத்தவர்களையும் பங்கேற்கச் செய்து சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான 3.50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் முறையாக கிடைக்க அரசு உத்தரவுகள் பிறப்பித்தும் சில துறைகளில் இதுபின் பற்றப்படவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கிறது.
பெரியார் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களில் ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட நியமிக்கப்படவில்லை.
இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட விளம்பரப்படி 6 பேராசிரியர்கள், 6 இணை பேராசிரியர்கள் மற்றும் 24 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இந்த இட ஓதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும், இதே நிலை அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களிலும் உள்ளதால் அனைத்து துறைகளிலும் 3.50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இச்செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மண்டல மாநாடு:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ரமளான் நோன்பு முடிந்த ஓரிரு நாட்களில் நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்த 6 மாவட்டங்களின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில் மாநாட்டு தேதியையும் இடத்தையும் முடிவு செய்வது.
-மேற்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, September 1, 2008
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை சீர்குலைப்பதை நிறுத்தாவிட்டால் வக்ஃபு வாரிய தலைவருக்கு எதிராக முஸ்லிம் லீக் நடவடிக்கை! பேராசிரியர் எச்சரிக்கை!!
http://www.muslimleaguetn.com/news.asp?id=198
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறைகளிலெல்லாம் சீர்குலைத்து வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பாட்டில் மஸ்ஜிதுகளிலும். தர்கா நிர்வாகங்களிலும் பல்வேறு. குழப்பங்கள் ஏற்படுவதாக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் போக்கை வக்ஃப் வாரிய தலைவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் புனித ரமளான் முடிந்ததும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இது விஷயத்தில் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.. கூறினார்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தின் மதிய இடைவேளையின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த. தலைவர் பேராசிரியர் இந்த ~கெடுவையும். எச்சரிக்கையையும் வெளியிட்டார்.
செய்தியாளர்களின் நேர்காணலின் போது அவர் மேலும் கூறியதாவது:-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாநில நிர்வாகிகள். அணிகளின் அமைப்பாளர்கள். அனைத்து மாவட்டங்களின் தலைவர். செயலாளர். பொருளாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்றோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக. தமிழக அரசில் முதன் முறையாக சிறுபான்மையினர் இயக்கு நரகம் உருவாக்கித்தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டும் நேரத்தில் கர்நாடகம். ஆந்திர மாநிலங்களை போன்றும். மத்திய அரசில் உள்ளது போன்றும். தனியாக தமிழ்நாட்டிலும் சிறுபான்மை நல அமைச்சகம் உருவாக்கி சிறப்பான முறையில் சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களை செய்ய வலியுறுத்கிறோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியிலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் உள்ளது தொடர்ந்து இதே கூட்டணியில் இருக்கும் - இருப்போம். இக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிலும் நீடித்து நிலைக்க வேண்டும். இதற்கு டாக்டர் ராமதாஸ் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் தமிழக நன்மைக்காக கலைஞர் தலைமையிலான அரசு தொடர வேண்டும்.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லஷ்மணானந்த. சரஸ்வதியும். அவரது சகாக்கள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. யார் இதை செய்திருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தை. காரணமாக வைத்து ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கெதிரான வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராள மான பொருட்சேதம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவும் பதற்ற நிலையும் நீடித்து வருகிறது. இந்த வன்முறை கண்டத்திற்குரியது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அமர்நாத் ஆலயத்திற்கான நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று கஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அமர்நாத் கஷ்மீரில் அமைந்துள் ளது. அங்கேயுயுள்ள பனி லிங்கத்தை நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் தரிசித்து வந்தவர்கள் இப்போது லட்சக்கணக்கில் வழிபடுகின்றனர். இது இந்துக்களின் மத நம்பிக்கை.
எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டிற்கு உரிய வசதிகள் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை.
இந்த அடிப்படையில் கஷ்மீர் மாநில அரசும். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளது. இந்த நன்மைகளை எந்த அரசாக இருந்தாலும் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.
இப்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும் நிலையில் இப்போது 100 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கஷ்மீர் தனித்தன்மை வாய்ந்ததாகவும். எல்லைப்புற மாநிலமாகவும் இருப்பதால் பதற்றமும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
இந்தப் பிரச்சினை கஷ்மீர் மாநிலத்திற்குள்ளேயே சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்ப தையே நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அரசும் இதற்காக பெரு முயற்சி செய்து வருகிறது. இம்முயற்சி வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முடிவுக்கு வரவேண்டும்.
எந்தக் சூழ்நிலையிலும் கஷ்மீர் இந்தியாவன் பிரிக்க முடியாத பகுதி என்பதே இந்திய முஸ்லிம் களின் உறுதியான நிலைப்பாடு.
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை தகர்க்கும் வக்ஃபு வாரிய தலைமை
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்களுக்காக தமிழ் நாட்டில் பன்னிரண்டா யிரத்திற்கும் மேற்பட் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல்கள். தர்காக்கள் வக்ஃபு வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சுன்னத் ஜமாஅத் நடைமுறையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பள்ளிவாசல்கள். மதரஸாக்கள் நூற்றுக்கும் குறைவானவையே இவை பெரும்பாலும் வக்ஃபு வாரியத்தில் இணைக்கப்பட்டிருக்காதவை.
சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் பள்ளிவாசல் தர்காக்கள் நிர்வாகங்கள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
துரதிருஷ்டவசமாக இககொள்கையில் நம்பிக்கை. இல்லாத ஒருவர் வக்ஃபு வாரியத்தின் தலைவராக ஆக்கப்பட்டதால் அவர் பின்பற்றும் கொள்கையுடையவர்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் திணிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு பாரம்பரிய நடைமுறைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய செயல்முறைகளையும் தேர்தல் நடைமுறைகளையும் புகுத்துவதாகவும். தர்கா ஜியாரத்தில் நம்பிக்கையற்ற இவர் தர்காக்களில்கூட இவர் கொள்கையுடையவ அறங்காவலராக நியமிக்க முயற்சிப்பதாகவும் மாநிலம் முழுவதிலுமிருந்தும் பரவலாக புகார் சொல்லப்படுகிறது. இதனால் 90 சதவீத முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான நானும். சட்டமன்ற உறுப்பினராக கலீலுர் ரஹ்மானும். உறுப்பினர்களாக உள்ளோம். முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சார்ந்தவர்கள் நாங்கள்.
சமுதாயம் எதிர்பார்த்த வர்களுக்கு வக்ஃபு வாரிய தலைவர் என்ற கண்ணியம் தரப்பட்டிருந்தால் அது சமுதாயத்திற்கு மனநிறைவை தந்திருக்கும். ஆனால் வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பட்டால் முஸ்லிம் சமுதாயம் வேதனையில் உள்ளது.. இது தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
வக்ஃபு வாரிய தலைவருக்கு ஒருமாத காலக் கெடு அளிக்கிறோம். முஸ்லிம் சமுதாய பாரம்பரிய நடைமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகங்களில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=198
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறைகளிலெல்லாம் சீர்குலைத்து வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பாட்டில் மஸ்ஜிதுகளிலும். தர்கா நிர்வாகங்களிலும் பல்வேறு. குழப்பங்கள் ஏற்படுவதாக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் போக்கை வக்ஃப் வாரிய தலைவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் புனித ரமளான் முடிந்ததும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இது விஷயத்தில் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.. கூறினார்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தின் மதிய இடைவேளையின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த. தலைவர் பேராசிரியர் இந்த ~கெடுவையும். எச்சரிக்கையையும் வெளியிட்டார்.
செய்தியாளர்களின் நேர்காணலின் போது அவர் மேலும் கூறியதாவது:-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாநில நிர்வாகிகள். அணிகளின் அமைப்பாளர்கள். அனைத்து மாவட்டங்களின் தலைவர். செயலாளர். பொருளாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்றோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக. தமிழக அரசில் முதன் முறையாக சிறுபான்மையினர் இயக்கு நரகம் உருவாக்கித்தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டும் நேரத்தில் கர்நாடகம். ஆந்திர மாநிலங்களை போன்றும். மத்திய அரசில் உள்ளது போன்றும். தனியாக தமிழ்நாட்டிலும் சிறுபான்மை நல அமைச்சகம் உருவாக்கி சிறப்பான முறையில் சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களை செய்ய வலியுறுத்கிறோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியிலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் உள்ளது தொடர்ந்து இதே கூட்டணியில் இருக்கும் - இருப்போம். இக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிலும் நீடித்து நிலைக்க வேண்டும். இதற்கு டாக்டர் ராமதாஸ் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் தமிழக நன்மைக்காக கலைஞர் தலைமையிலான அரசு தொடர வேண்டும்.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லஷ்மணானந்த. சரஸ்வதியும். அவரது சகாக்கள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. யார் இதை செய்திருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தை. காரணமாக வைத்து ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கெதிரான வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராள மான பொருட்சேதம் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவும் பதற்ற நிலையும் நீடித்து வருகிறது. இந்த வன்முறை கண்டத்திற்குரியது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அமர்நாத் ஆலயத்திற்கான நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று கஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அமர்நாத் கஷ்மீரில் அமைந்துள் ளது. அங்கேயுயுள்ள பனி லிங்கத்தை நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் தரிசித்து வந்தவர்கள் இப்போது லட்சக்கணக்கில் வழிபடுகின்றனர். இது இந்துக்களின் மத நம்பிக்கை.
எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டிற்கு உரிய வசதிகள் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை.
இந்த அடிப்படையில் கஷ்மீர் மாநில அரசும். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளது. இந்த நன்மைகளை எந்த அரசாக இருந்தாலும் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.
இப்படி வசதிகள் செய்து கொடுக்கப்படும் நிலையில் இப்போது 100 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கஷ்மீர் தனித்தன்மை வாய்ந்ததாகவும். எல்லைப்புற மாநிலமாகவும் இருப்பதால் பதற்றமும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
இந்தப் பிரச்சினை கஷ்மீர் மாநிலத்திற்குள்ளேயே சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்ப தையே நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அரசும் இதற்காக பெரு முயற்சி செய்து வருகிறது. இம்முயற்சி வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முடிவுக்கு வரவேண்டும்.
எந்தக் சூழ்நிலையிலும் கஷ்மீர் இந்தியாவன் பிரிக்க முடியாத பகுதி என்பதே இந்திய முஸ்லிம் களின் உறுதியான நிலைப்பாடு.
மஹல்லா ஜமாஅத் பாரம்பரியத்தை தகர்க்கும் வக்ஃபு வாரிய தலைமை
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்களுக்காக தமிழ் நாட்டில் பன்னிரண்டா யிரத்திற்கும் மேற்பட் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல்கள். தர்காக்கள் வக்ஃபு வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சுன்னத் ஜமாஅத் நடைமுறையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பள்ளிவாசல்கள். மதரஸாக்கள் நூற்றுக்கும் குறைவானவையே இவை பெரும்பாலும் வக்ஃபு வாரியத்தில் இணைக்கப்பட்டிருக்காதவை.
சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் பள்ளிவாசல் தர்காக்கள் நிர்வாகங்கள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
துரதிருஷ்டவசமாக இககொள்கையில் நம்பிக்கை. இல்லாத ஒருவர் வக்ஃபு வாரியத்தின் தலைவராக ஆக்கப்பட்டதால் அவர் பின்பற்றும் கொள்கையுடையவர்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் திணிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு பாரம்பரிய நடைமுறைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய செயல்முறைகளையும் தேர்தல் நடைமுறைகளையும் புகுத்துவதாகவும். தர்கா ஜியாரத்தில் நம்பிக்கையற்ற இவர் தர்காக்களில்கூட இவர் கொள்கையுடையவ அறங்காவலராக நியமிக்க முயற்சிப்பதாகவும் மாநிலம் முழுவதிலுமிருந்தும் பரவலாக புகார் சொல்லப்படுகிறது. இதனால் 90 சதவீத முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான நானும். சட்டமன்ற உறுப்பினராக கலீலுர் ரஹ்மானும். உறுப்பினர்களாக உள்ளோம். முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சார்ந்தவர்கள் நாங்கள்.
சமுதாயம் எதிர்பார்த்த வர்களுக்கு வக்ஃபு வாரிய தலைவர் என்ற கண்ணியம் தரப்பட்டிருந்தால் அது சமுதாயத்திற்கு மனநிறைவை தந்திருக்கும். ஆனால் வக்ஃபு வாரிய தலைவரின் செயல்பட்டால் முஸ்லிம் சமுதாயம் வேதனையில் உள்ளது.. இது தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
வக்ஃபு வாரிய தலைவருக்கு ஒருமாத காலக் கெடு அளிக்கிறோம். முஸ்லிம் சமுதாய பாரம்பரிய நடைமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகங்களில் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் லீக் பதிப்பகம் வழங்கும் ஸஹர் நேர ஒளிபரப்பு பிறை மேடை!
முஸ்லிம் லீக் பதிப்பகம் வழங்கும் ஸஹர் நேர ஒளிபரப்பு பிறை மேடை!
http://www.muslimleaguetn.com/news.asp
02-09-2008 செவ்வாய் முதல் ரமளான் முடியும் வரை விஜய் தொலைக்காட்சியில் அதிகாலை 3-30 முதல் 4 மணிவரை பிறை மேடை என்ற தலைப்பில் ஸஹர் நேர ஒளிபரப்பு ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்.
முஸ்லிம் லீக் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
http://www.muslimleaguetn.com/news.asp
02-09-2008 செவ்வாய் முதல் ரமளான் முடியும் வரை விஜய் தொலைக்காட்சியில் அதிகாலை 3-30 முதல் 4 மணிவரை பிறை மேடை என்ற தலைப்பில் ஸஹர் நேர ஒளிபரப்பு ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்.
முஸ்லிம் லீக் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
Sunday, August 31, 2008
வாக்காளர் பட்டியல்
சுதந்திர இந்தியாவின் அடையாளமும் சுதந்திர இந்தியாவில் நமக்கிருக்கும் முழு உரிமையும் வாக்குச் சீட்டு மட்டும் தான் என்று சில நேரங்களில் என்னத்தோன்றுகிறது.
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியமைக்கக்கூடிய வலிமைமிக்க ஆயுதம் வாக்குச் சீட்டு! இதோ மறுசீரமைக்கப்பட்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உங்கள் மற்றும் உங்கள் குடும்த்தைச் சேர்ந்த, உங்கள் ஊர், மற்றும் தெருவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் விடுபடாமல் உள்ளதா என்பதை கண்டு உடனே தவறை திருத்த முயற்சி செய்யுங்கள்.
http://www.eroll.tn.nic.in/pdf/
மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லீம்களின் பெயர்களை கவனமாகக் கவனித்து பார்த்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியமைக்கக்கூடிய வலிமைமிக்க ஆயுதம் வாக்குச் சீட்டு! இதோ மறுசீரமைக்கப்பட்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உங்கள் மற்றும் உங்கள் குடும்த்தைச் சேர்ந்த, உங்கள் ஊர், மற்றும் தெருவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் விடுபடாமல் உள்ளதா என்பதை கண்டு உடனே தவறை திருத்த முயற்சி செய்யுங்கள்.
http://www.eroll.tn.nic.in/pdf/
மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லீம்களின் பெயர்களை கவனமாகக் கவனித்து பார்த்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
Saturday, August 30, 2008
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு
துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சைபுதீன் வரவேற்றார்.
கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய துணைத்தூதரக அரங்கில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவார்.
மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் நூர், செந்தில் ஜெரால்டு, சலீம், சபியா நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சைபுதீன் வரவேற்றார்.
கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய துணைத்தூதரக அரங்கில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவார்.
மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் நூர், செந்தில் ஜெரால்டு, சலீம், சபியா நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நோன்பு - - மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நோன்பு
மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்
டாக்டர்
A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075
________________________________________
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.
மூச்சுத் திணறல் :
இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!
உலகெங்கும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் டாக்டரின் மருத்துவ கட்டுரைகளை இணையத்தின் மூலம் படித்து பலன் பெறுகிறார்கள். நீங்களும் படிக்கவேண்டுமா? ஒரு முறை விசிட் செய்யுங்கள்:
www.tamilislam.com
டாக்டர்
A.ஷேக் அலாவுதீனை தொடர்பு கொள்ள:
சவூதி அரேபியா:
மெடிக்கல் கன்ஷல்டன்ட் மருத்துவமனை
ரியாத், சவூதி அரேபியா
போன்: 0505258645
தமிழ்நாடு:
தி ஹெல்த் ரிசோர்ட்
HIG
-331 முல்லை நியூ ஹவுசிங் யூனிட், புது பஸ்ஸ்டான்ட் அருகில், தஞ்சாவூர்- போன்: 9442871075, 04362 227414
நலம் பெற வாருங்கள்:
அனைத்து வகையான நரம்பியல் (Neurological) நோய்கள், பலதரப்பட்ட தீராதவலி (Pre-Existing, Chronic), மனநோய்கள் Psycho), பாலியல் பிரச்சனைகள், ஆண்மைக் கோளாறு, பெண்மைக் கோளாறு All types of Sexual Problems), பெண்கள் கர்ப்பபை பிரச்சனைகள் (Uterus)> கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதயம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரக நோய்கள் மற்றும் கைவிடப்பட்ட பல நோய்கள் அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நலமாக வாழ டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.
[
THANKS SOURCE:http://www.tamilislam.com/MEDICAL/INDEX.HTM
நோன்பு
மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்
டாக்டர்
A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075
________________________________________
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.
மூச்சுத் திணறல் :
இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!
உலகெங்கும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் டாக்டரின் மருத்துவ கட்டுரைகளை இணையத்தின் மூலம் படித்து பலன் பெறுகிறார்கள். நீங்களும் படிக்கவேண்டுமா? ஒரு முறை விசிட் செய்யுங்கள்:
www.tamilislam.com
டாக்டர்
A.ஷேக் அலாவுதீனை தொடர்பு கொள்ள:
சவூதி அரேபியா:
மெடிக்கல் கன்ஷல்டன்ட் மருத்துவமனை
ரியாத், சவூதி அரேபியா
போன்: 0505258645
தமிழ்நாடு:
தி ஹெல்த் ரிசோர்ட்
HIG
-331 முல்லை நியூ ஹவுசிங் யூனிட், புது பஸ்ஸ்டான்ட் அருகில், தஞ்சாவூர்- போன்: 9442871075, 04362 227414
நலம் பெற வாருங்கள்:
அனைத்து வகையான நரம்பியல் (Neurological) நோய்கள், பலதரப்பட்ட தீராதவலி (Pre-Existing, Chronic), மனநோய்கள் Psycho), பாலியல் பிரச்சனைகள், ஆண்மைக் கோளாறு, பெண்மைக் கோளாறு All types of Sexual Problems), பெண்கள் கர்ப்பபை பிரச்சனைகள் (Uterus)> கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதயம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரக நோய்கள் மற்றும் கைவிடப்பட்ட பல நோய்கள் அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நலமாக வாழ டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.
[
THANKS SOURCE:http://www.tamilislam.com/MEDICAL/INDEX.HTM
பழனி பாபா ஆவணப்படம்
பழனி பாபா ஆவணப்படம்
முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரி தாக்ககுதலுக்கு உள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.
பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : zainul123us@yahoo.com
முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரி தாக்ககுதலுக்கு உள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.
பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : zainul123us@yahoo.com
இலங்கை பத்திரிகாசிரியரின் மறைவு - ஓர் இரங்கல்
"நவமணி' இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் நாடித்
துடிப்பு. அதன்நாளங்களில் இரத்தமாக
ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடி[ப்பைத் தந்தவர், இன்று தானே அதை
இழந்து அமரராகிவிட்டார்.
சாதாரண நிருபராக இருந்து, பத்திரிகாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட
கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள்
வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப்
பதியப்படவில்லை என்பது சோகம்.
ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணி நேரம் உட்காருங்கள்.
உங்கள் அனுபவங்களை அசை
போடுங்கள். அதை ஒரு நூலாக - வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான்
ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், வேலைப்பழு காரணமாக, நேரத்தோடு நித்தம் நித்தம் யுத்தம் நடத்திக்
கொண்டிருந்த அவருக்கு நேரமே
கிடைக்கவில்லை. காலமும், காலனும் கூட காத்திருக்கத் தயாரில்லை.
அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்னைகளில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை,
அதை எழுத்தில் வடிக்கும்
வல்லமை. முகம் நோக்காது, விளைவுகளை எண்ணாது, அதே சமயம் முகத்தில்
அடித்தாற்போல் சொல்லாமல்
நளினமாகவும், நாகரீகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு. அவரை
'பெரிய ம்னிதர்' என்று
முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.
உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக - பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும்
தோழமையுடன் கைலாகு
கொடுத்துப் பழகும் அளவுக்கு பரிச்சயம். ஆனால், இந்த செல்வாக்கின் ஒரு
துளியையேனும் தன் சொந்த
லாபங்களுக்காகப் பயன் படுத்தினாரா என்றால், அழுத்தம் திருத்தமாக வரும்
பதில் " இல்லை" என்பதாகும்.
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன ? அது வேறொன்றுமில்லை. இலங்கையில்,
அதுவும் தமிழில், அதுவும்
கட்சி சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அது மலையைப்
புரட்டி கட்லில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல்
நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான்
அவருடைய தனிச்சிறப்பு.
பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 ஒன்பது காரணம் இருக்கும். அதற்காக
அச்சமோ, கவலையோ படமாட்டார்.
வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும். பத்திரிகையை வெளிக்கொணர்ந்து
விடுவார். பத்திரிகை அச்சிட
மசிதான் தேவை.ஆனால் இவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும் !
சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது, எதை விடுவது,
எப்போதும் அவரை வாட்டிய சவால்.
சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக
நட்த்துவது நஷ்டத்தால் இடித்தது.
அதனால் என்ன ? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒரு முறை அல்லது
இருமுறையாக்கு. காலம் கனியாமல்
போகாது அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும் விடா
முயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.
லண்டன் "தீபம்" தொலைகாட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல்
விமர்சன நிகச்சிக்கு " அரங்கம் -
அந்தரங்கம்" என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் அடுத்த முறை
இலங்கை வந்தபோது பார்க்கிறேன்
"நவமணி' யின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற,
எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த
அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர்.
"உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள்
வைக்கவும் இல்லை. இயல்பாகவே
அப்படி அமைந்து விட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலைவரிசையில்
(Wave Length) சிந்திக்கிறோம்
என்பதுதான். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.
தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது,
தவறாமல் "நவமணி" அனுப்பித் தந்தார் இங்கே, இலங்கை பற்றிய செய்திகளை
நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.
அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது
அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும்
மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல்
எண்ணீ மகிழ்வார். எங்கள்
இருவரையும் சேர்ந்த்தே சந்திக்கப் பிரியப்படுவார்.சுவாரஸ்யமான எங்கள்
இளமைகால அனுபவங்களை
கரிசனத்துடன் கேட்பார். ஒரு நாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப்
பேசும்போது, " ஒரே உறையில் எப்படி
இரண்டு வாள்கள் இருந்தீர்கள் ? " என்றார். நான் சொன்னேன். ' இரண்டு
வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான்
இந்தியாவுக்கு ஓடி விட்டேன்" என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.
ஆனால், இவரும், துணைவியாரும் விபத்தில் சிக்கி, தான் தப்பி, துணைவியார்
போய் விட, " அவளோடு நானும் போயிருக்க வேண்டும்" என்றவர் துக்கம் தாளாமல்,
ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.
இன்று அவர் போய் விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர்
தாங்காது கண்ணி வடிக்கிறோம்
எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை..
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட "நவமணி" யின் ஆசிரியர் திலகம்
அல்ஹாஜ் அஸாருடைய இழப்பு
இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத் துறைக்கும் ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவரது பயிற்சிப்
பட்டறையில் அனுபவ பாடம் கற்றுக் கொண்ட எத்தனையோ மாணவ மணிகள் தாங்கள் சாதனைகள் மூலம்
பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக. அதுவே அவருக்குச்
செலுத்தும் இதயமார்ந்த
அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு
சுவர்க்கமாக இருக்கட்டும்.
ஆழ்ந்த இரங்கலுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com
__._,_.___
துடிப்பு. அதன்நாளங்களில் இரத்தமாக
ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடி[ப்பைத் தந்தவர், இன்று தானே அதை
இழந்து அமரராகிவிட்டார்.
சாதாரண நிருபராக இருந்து, பத்திரிகாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட
கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள்
வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப்
பதியப்படவில்லை என்பது சோகம்.
ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணி நேரம் உட்காருங்கள்.
உங்கள் அனுபவங்களை அசை
போடுங்கள். அதை ஒரு நூலாக - வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான்
ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், வேலைப்பழு காரணமாக, நேரத்தோடு நித்தம் நித்தம் யுத்தம் நடத்திக்
கொண்டிருந்த அவருக்கு நேரமே
கிடைக்கவில்லை. காலமும், காலனும் கூட காத்திருக்கத் தயாரில்லை.
அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்னைகளில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை,
அதை எழுத்தில் வடிக்கும்
வல்லமை. முகம் நோக்காது, விளைவுகளை எண்ணாது, அதே சமயம் முகத்தில்
அடித்தாற்போல் சொல்லாமல்
நளினமாகவும், நாகரீகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு. அவரை
'பெரிய ம்னிதர்' என்று
முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.
உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக - பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும்
தோழமையுடன் கைலாகு
கொடுத்துப் பழகும் அளவுக்கு பரிச்சயம். ஆனால், இந்த செல்வாக்கின் ஒரு
துளியையேனும் தன் சொந்த
லாபங்களுக்காகப் பயன் படுத்தினாரா என்றால், அழுத்தம் திருத்தமாக வரும்
பதில் " இல்லை" என்பதாகும்.
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன ? அது வேறொன்றுமில்லை. இலங்கையில்,
அதுவும் தமிழில், அதுவும்
கட்சி சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அது மலையைப்
புரட்டி கட்லில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல்
நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான்
அவருடைய தனிச்சிறப்பு.
பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 ஒன்பது காரணம் இருக்கும். அதற்காக
அச்சமோ, கவலையோ படமாட்டார்.
வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும். பத்திரிகையை வெளிக்கொணர்ந்து
விடுவார். பத்திரிகை அச்சிட
மசிதான் தேவை.ஆனால் இவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும் !
சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது, எதை விடுவது,
எப்போதும் அவரை வாட்டிய சவால்.
சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக
நட்த்துவது நஷ்டத்தால் இடித்தது.
அதனால் என்ன ? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒரு முறை அல்லது
இருமுறையாக்கு. காலம் கனியாமல்
போகாது அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும் விடா
முயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.
லண்டன் "தீபம்" தொலைகாட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல்
விமர்சன நிகச்சிக்கு " அரங்கம் -
அந்தரங்கம்" என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் அடுத்த முறை
இலங்கை வந்தபோது பார்க்கிறேன்
"நவமணி' யின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற,
எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த
அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர்.
"உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள்
வைக்கவும் இல்லை. இயல்பாகவே
அப்படி அமைந்து விட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலைவரிசையில்
(Wave Length) சிந்திக்கிறோம்
என்பதுதான். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.
தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது,
தவறாமல் "நவமணி" அனுப்பித் தந்தார் இங்கே, இலங்கை பற்றிய செய்திகளை
நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.
அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது
அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும்
மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல்
எண்ணீ மகிழ்வார். எங்கள்
இருவரையும் சேர்ந்த்தே சந்திக்கப் பிரியப்படுவார்.சுவாரஸ்யமான எங்கள்
இளமைகால அனுபவங்களை
கரிசனத்துடன் கேட்பார். ஒரு நாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப்
பேசும்போது, " ஒரே உறையில் எப்படி
இரண்டு வாள்கள் இருந்தீர்கள் ? " என்றார். நான் சொன்னேன். ' இரண்டு
வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான்
இந்தியாவுக்கு ஓடி விட்டேன்" என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.
ஆனால், இவரும், துணைவியாரும் விபத்தில் சிக்கி, தான் தப்பி, துணைவியார்
போய் விட, " அவளோடு நானும் போயிருக்க வேண்டும்" என்றவர் துக்கம் தாளாமல்,
ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.
இன்று அவர் போய் விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர்
தாங்காது கண்ணி வடிக்கிறோம்
எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை..
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட "நவமணி" யின் ஆசிரியர் திலகம்
அல்ஹாஜ் அஸாருடைய இழப்பு
இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத் துறைக்கும் ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவரது பயிற்சிப்
பட்டறையில் அனுபவ பாடம் கற்றுக் கொண்ட எத்தனையோ மாணவ மணிகள் தாங்கள் சாதனைகள் மூலம்
பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக. அதுவே அவருக்குச்
செலுத்தும் இதயமார்ந்த
அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு
சுவர்க்கமாக இருக்கட்டும்.
ஆழ்ந்த இரங்கலுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com
__._,_.___
Friday, August 29, 2008
துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி
துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி ( www.quran.gov.ae ) செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை துபாய் அல் மம்சார் பூங்கா அருகில் அமையப்பெற்றுள்ள கலாச்சார மற்றும் அறிவியல் கழகத்தில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 12வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது ஆதரவில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இருப்பதாக இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் இப்ராஹிம் முஹம்மது பு மெல்ஹா தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஸ்விட்சர்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான், போஸ்ட்வானா மற்றும் ஜான்சிபார் உள்ளிட்ட நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.
கடந்த காலங்களை விட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அல்ஜீரியாவில் இருந்து பங்கேற்கு ஒன்பது வயது மாணவர் பதேஹ் பாதி மிகவும் இளவயது போட்டியாளர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் வருடந்தோறும் பங்கேற்று வருகின்றன.
இப்போட்டியினையொட்டி சிறப்பு தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட இருக்கிறது. போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் உலகெங்கும் உள்ளோர் பார்க்கும் வண்ணம் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி நடத்தும் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருது, அமீரக அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி, சிறைக்கைதிகளுக்கான திருக்குர்ஆன் மனனப் பயிற்சி, இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் அறிவியல் நிகழ்ச்சி உள்ளிட்ட பலவேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருதுக்காக தேர்வு செய்யப்படுவருக்கு திர்ஹம் ஒரு மில்லியன் வழங்கப்படும். திருக்குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றி பெறும் முதல் பத்து போட்டியாளர்களுக்கு முறையே திர்ஹம் 250000, 200000, 150000,65000,60000,55000,50000,45000,40000,35000 வழங்கப்படும்.
இப்போட்டிகளுக்கான நடுவர்கள் சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், நைஜீரியா, சிரியா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
TOUCH OF HARMONY 2008
TOUCH OF HARMONY 2008
(A Joint Project of Jamiyah Singapore and The New York University, USA)
Mission
To promote harmony and peace among peoples of different faiths and races at both local and global level. This is expected to be accomplished by providing opportunities to students and young people from institution of higher learning to come into contact with one another under a common programme of short duration for promoting peace and harmony in the multi-racial and multi-faith global environment.
Vision
It is envisaged that the project will provide a platform for exchange of talents, skills and resources for experiencing inter racial, inter faith and inter ethnic interaction for promoting goodwill and harmony among our young students who are the architects of our society in future.
Objectives for TOH IV
The objectives of Touch of Harmony are:
1. To provide opportunities for the young people across the globe to experience and promote inter faith, inter racial and inter ethnic goodwill and understanding.
2. To provide an educational experience for the younger generation coming from different socio, cultural and ethnic background to interact in a different environment and thus widening their knowledge, understanding and values pertain to different faiths, races and ethnicities.
3. To provide opportunities for young talents from different nations to gain the pleasure of serving the needy and disadvantaged in their respective communities.
4. To provide the opportunity in planning, organizing, and managing community service and inter faith programmes and services in a socio-cultural environment different from their own, and
5. To promote a global awareness and understanding on the importance of ‘GOING GREEN’. Students will participate in the activities that will open their minds and hearts to our mother earth.
The participants are made up of 4 tertiary students from various universities and faculties.
• Mr. Muhammad Thohir Bin Mohd Masbur
Singapore Management University
Bachelor of Science (Economics)
(Representing Islamic faith)
• Mr. Low Wen Yan Richard Andrew
National Junior College
‘A’ Levels Graduate
(Representing Christian faith)
• Mr. Chng Shiung Qian
Nanyang Technological University
Bachelor of Electrical & Electronics Engineering (Hons)
(Representing Buddhist faith)
• Ms. Theivambigai D/O Ganesan
National University of Singapore
Bachelor of Arts (Political Science)
(Representing Hindu faith)
The accompanying chaperones for Touch Of Harmony Program this year will be:-
• Mr. Mohamad Hosni Abdul Malik
Master of Engineering Management, Australia
Program Development Executive, Jamiyah Singapore
• Mdm Faridah Ajis
Diploma in Early Childhood Education
Principal, Jamiyah Child Care Centre.
The duration of the program is 7th of July 2008 till the 21st of July 2008.
Under this programme the participant students were given the chance to learn about the different cultures in New York City and were able to show and portray their own Singaporean culture to the students of New York University. They were living in an NYU dorm together with students from different nationalities. They mingled and helped students in their school work and also had fun discussing about global issues in the Global Youth Forum.
The program gives the students the opportunity of living their passion. Ms. Theivambigai was given the opportunity to work with children in a day care centre for 2 days and even taken the children out to Central Park Zoo. Mr. Thohir was given the opportunity to be an employee of the Bank of New York for a day. These are just some of the priceless opportunities that touch the lives of these young adults. They also had the opportunity of having a tea meeting with Singapore’s Permanent Representative to the UN Mr. Vanu Gopala Menon at New York.
Touch of Harmony seeks to expand this program to promote the message of peace and harmony in a global setting.
The Press conference was Chaired by Mr. Eduardo Ramose Gomez , Managing Partner of Duanne Morris (formerly Mexican Ambassador to Singapore). Mr. Abu Bakar Maidin, President of Jamiyah , Mr. Nalla , CEO of Hindu Endowments Board and Ms Madhu Bala from the Hindu Advisory Board were present at the Press Conference.
Participant students gave a pictorial presentation of their New York experience under the Touch of Harmony Programme. Mr. Mohd Hosni Abdul Malik, Chief Chaperon of Touch of Harmony team introduced the participants to the press.
Md Saleem
(A Joint Project of Jamiyah Singapore and The New York University, USA)
Mission
To promote harmony and peace among peoples of different faiths and races at both local and global level. This is expected to be accomplished by providing opportunities to students and young people from institution of higher learning to come into contact with one another under a common programme of short duration for promoting peace and harmony in the multi-racial and multi-faith global environment.
Vision
It is envisaged that the project will provide a platform for exchange of talents, skills and resources for experiencing inter racial, inter faith and inter ethnic interaction for promoting goodwill and harmony among our young students who are the architects of our society in future.
Objectives for TOH IV
The objectives of Touch of Harmony are:
1. To provide opportunities for the young people across the globe to experience and promote inter faith, inter racial and inter ethnic goodwill and understanding.
2. To provide an educational experience for the younger generation coming from different socio, cultural and ethnic background to interact in a different environment and thus widening their knowledge, understanding and values pertain to different faiths, races and ethnicities.
3. To provide opportunities for young talents from different nations to gain the pleasure of serving the needy and disadvantaged in their respective communities.
4. To provide the opportunity in planning, organizing, and managing community service and inter faith programmes and services in a socio-cultural environment different from their own, and
5. To promote a global awareness and understanding on the importance of ‘GOING GREEN’. Students will participate in the activities that will open their minds and hearts to our mother earth.
The participants are made up of 4 tertiary students from various universities and faculties.
• Mr. Muhammad Thohir Bin Mohd Masbur
Singapore Management University
Bachelor of Science (Economics)
(Representing Islamic faith)
• Mr. Low Wen Yan Richard Andrew
National Junior College
‘A’ Levels Graduate
(Representing Christian faith)
• Mr. Chng Shiung Qian
Nanyang Technological University
Bachelor of Electrical & Electronics Engineering (Hons)
(Representing Buddhist faith)
• Ms. Theivambigai D/O Ganesan
National University of Singapore
Bachelor of Arts (Political Science)
(Representing Hindu faith)
The accompanying chaperones for Touch Of Harmony Program this year will be:-
• Mr. Mohamad Hosni Abdul Malik
Master of Engineering Management, Australia
Program Development Executive, Jamiyah Singapore
• Mdm Faridah Ajis
Diploma in Early Childhood Education
Principal, Jamiyah Child Care Centre.
The duration of the program is 7th of July 2008 till the 21st of July 2008.
Under this programme the participant students were given the chance to learn about the different cultures in New York City and were able to show and portray their own Singaporean culture to the students of New York University. They were living in an NYU dorm together with students from different nationalities. They mingled and helped students in their school work and also had fun discussing about global issues in the Global Youth Forum.
The program gives the students the opportunity of living their passion. Ms. Theivambigai was given the opportunity to work with children in a day care centre for 2 days and even taken the children out to Central Park Zoo. Mr. Thohir was given the opportunity to be an employee of the Bank of New York for a day. These are just some of the priceless opportunities that touch the lives of these young adults. They also had the opportunity of having a tea meeting with Singapore’s Permanent Representative to the UN Mr. Vanu Gopala Menon at New York.
Touch of Harmony seeks to expand this program to promote the message of peace and harmony in a global setting.
The Press conference was Chaired by Mr. Eduardo Ramose Gomez , Managing Partner of Duanne Morris (formerly Mexican Ambassador to Singapore). Mr. Abu Bakar Maidin, President of Jamiyah , Mr. Nalla , CEO of Hindu Endowments Board and Ms Madhu Bala from the Hindu Advisory Board were present at the Press Conference.
Participant students gave a pictorial presentation of their New York experience under the Touch of Harmony Programme. Mr. Mohd Hosni Abdul Malik, Chief Chaperon of Touch of Harmony team introduced the participants to the press.
Md Saleem
நினைவே ஒரு சங்கீதம்...!
நினைவே ஒரு சங்கீதம்...!
http://www.lankasripoems.com/
இனியவளே...!
நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....
முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத் தந்த
கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி வடாகத்திலும்
இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....
அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில் இல்லை
உயிரே...
அலுவலகத்திலும் சரி.. அறையிலும் சரி
இருபத்துநான்கு மணி நேரமும்
இங்கே AC இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி சுழலாமல்
ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..
முகத்து வியர்வையை துடைக்க
Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...
இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...
உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்
இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும் இல்லை
என் தேவதையே...
அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....
தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...
இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...
இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில்
ஊர் சுற்றியபோது உண்டான ஆனந்தம்
இங்கு இல்லை
என் அன்பே...
இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை கண்டாலும்
நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச் சுவரில்
பென்சிலாலும் கரியாலும் கிறுக்கிய
அழகு இதில் இல்லை
என் அழகே....
பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை, நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....
உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்
Trichy Syed,
Dubai, U.A.E.
http://www.lankasripoems.com/
இனியவளே...!
நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....
முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத் தந்த
கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி வடாகத்திலும்
இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....
அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில் இல்லை
உயிரே...
அலுவலகத்திலும் சரி.. அறையிலும் சரி
இருபத்துநான்கு மணி நேரமும்
இங்கே AC இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி சுழலாமல்
ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..
முகத்து வியர்வையை துடைக்க
Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...
இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...
உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்
இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும் இல்லை
என் தேவதையே...
அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....
தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...
இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...
இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில்
ஊர் சுற்றியபோது உண்டான ஆனந்தம்
இங்கு இல்லை
என் அன்பே...
இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை கண்டாலும்
நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச் சுவரில்
பென்சிலாலும் கரியாலும் கிறுக்கிய
அழகு இதில் இல்லை
என் அழகே....
பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை, நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....
உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்
Trichy Syed,
Dubai, U.A.E.
Peace TV
Dear Brother / Sister in Islam,
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu.
Anticipating your keen interest in Peace TV... it is our humble pleasure to inform you that Peace TV is now available on High Definition (HD) format in North America, Central America, Alaska and Canada. In South America, where it was not available at all, now Peace TV can be viewed in HD too. InshaAllah, soon it will be available on High Definition (HD) format through
out the world.
PEACE TV
The Solution for Humanity
24-Hour 'Free to Air' Spiritual Edutainment
International Satellite TV Channel
Alhamdulillah:-
* Is the first HIGH DEFINITION (HD) 24-Hrs Islamic Satellite TV
Channel in the world.
* Reaches over 200 countries in every corner of the world, with an
estimated viewership of over 75 Million people.
* Telecast via 4 different strategically located Satellites: INTELSAT
10, GALAXY 18, EUROBIRD 1, ARABSAT 4 as well as on SKY TV 823.
* Peace TV can be watched on HD (High Definition) as well as SD
(Standard Definition) formats at present in America and very shortly
worldwide.
* Webcast on INTERNET on www.peacetv.tv, it can be viewed in 3
different resolutions worldwide.
Peace TV can be tuned in on Satellites:-
1. ARABSAT BADR 4
Position: 26* East, Frequency: 12207, Symbol Rate: 27500, FEC: 3/4,
Polarization: Vertical.
Reach : Middle East, Africa and Europe
2. INTELSAT 10
Position: 68.5* East, Frequency: 3783.25, Symbol Rate: 3250, FEC: 2/3,
Polarization: Vertical.
Reach : Asia, Middle East, Australia and Africa
3. GALAXY 18
Position: 123.5* West, Transponder: 13, Frequency: 11965,
Symbol Rate: 07234, FEC: 2/3, Polarization: Vertical
Reach : North America, Central America, South America, Alaska and Canada
Also available on Globecast World TV - Channel 65
4. Euro Bird 1
Transponder: F 1L, Frequency: 12523, Symbol Rate: 27500, FEC: 2/3,
Polarization: Horizontal
Reach : UK & Europe
Also available on Sky TV - Channel 823
For Enquiry and Details Kindly Contact:-
DUBAI
Yasin Khan
Mob. : +971-50-4833646
SAUDI ARABIA
Mohammed Abdul Raheem
Mob. : +966-50-7489201 / +966-55-9234578
Tel. : +966-1-4625008
INDIA
Tel. : +91-22-23735565
USA
Tel. : +1-718-5543765
UK
Mustasam Abbasi
Mob.: +44-7949-940740
Live online on www.peacetv.tv.
Please pray for Peace TV's content and technological quality growth,
including its reach in High Definition (HD) format worldwide.
May Allah (swt) grant all of the Muslim Ummah the best of Help, Skills and
Striving to enhance the proper perspective of Islam and Muslims the world
over. Aameen.
Yours brotherly in the service of Islam,
Dr. Zakir Naik
Servant of Islam
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu.
Anticipating your keen interest in Peace TV... it is our humble pleasure to inform you that Peace TV is now available on High Definition (HD) format in North America, Central America, Alaska and Canada. In South America, where it was not available at all, now Peace TV can be viewed in HD too. InshaAllah, soon it will be available on High Definition (HD) format through
out the world.
PEACE TV
The Solution for Humanity
24-Hour 'Free to Air' Spiritual Edutainment
International Satellite TV Channel
Alhamdulillah:-
* Is the first HIGH DEFINITION (HD) 24-Hrs Islamic Satellite TV
Channel in the world.
* Reaches over 200 countries in every corner of the world, with an
estimated viewership of over 75 Million people.
* Telecast via 4 different strategically located Satellites: INTELSAT
10, GALAXY 18, EUROBIRD 1, ARABSAT 4 as well as on SKY TV 823.
* Peace TV can be watched on HD (High Definition) as well as SD
(Standard Definition) formats at present in America and very shortly
worldwide.
* Webcast on INTERNET on www.peacetv.tv, it can be viewed in 3
different resolutions worldwide.
Peace TV can be tuned in on Satellites:-
1. ARABSAT BADR 4
Position: 26* East, Frequency: 12207, Symbol Rate: 27500, FEC: 3/4,
Polarization: Vertical.
Reach : Middle East, Africa and Europe
2. INTELSAT 10
Position: 68.5* East, Frequency: 3783.25, Symbol Rate: 3250, FEC: 2/3,
Polarization: Vertical.
Reach : Asia, Middle East, Australia and Africa
3. GALAXY 18
Position: 123.5* West, Transponder: 13, Frequency: 11965,
Symbol Rate: 07234, FEC: 2/3, Polarization: Vertical
Reach : North America, Central America, South America, Alaska and Canada
Also available on Globecast World TV - Channel 65
4. Euro Bird 1
Transponder: F 1L, Frequency: 12523, Symbol Rate: 27500, FEC: 2/3,
Polarization: Horizontal
Reach : UK & Europe
Also available on Sky TV - Channel 823
For Enquiry and Details Kindly Contact:-
DUBAI
Yasin Khan
Mob. : +971-50-4833646
SAUDI ARABIA
Mohammed Abdul Raheem
Mob. : +966-50-7489201 / +966-55-9234578
Tel. : +966-1-4625008
INDIA
Tel. : +91-22-23735565
USA
Tel. : +1-718-5543765
UK
Mustasam Abbasi
Mob.: +44-7949-940740
Live online on www.peacetv.tv.
Please pray for Peace TV's content and technological quality growth,
including its reach in High Definition (HD) format worldwide.
May Allah (swt) grant all of the Muslim Ummah the best of Help, Skills and
Striving to enhance the proper perspective of Islam and Muslims the world
over. Aameen.
Yours brotherly in the service of Islam,
Dr. Zakir Naik
Servant of Islam
பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது
பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது
http://rajasugumaran.blogspot.com/2008/08/blog-post.html
தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.
பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.
தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.
முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?
அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,
http://rajasugumaran.blogspot.com/2008/08/blog-post.html
தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.
பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.
தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.
முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?
அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,
குழந்தை வளர்ப்பு ஒரு கலை!
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
தொடர்-1
S.A. மன்சூர் அலி
சென்னை வண்டலூர் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்
மர்ஹூம் நீடூர் ஏ. எம். சயீத் சாஹிப் அவர்களின் மருமகன்
http://niduronline.com
http://niduronline.com/?p=11#more-11
நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?
தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்?
நல்ல செங்கற்கள், நல்ல சிமெண்ட், நல்ல இரும்புக் கம்பிகள் என்று பார்த்து பார்த்து வாங்கி அரைகுறைப் பொறியாளர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நமது வீட்டின் அழகு எப்படி காட்சியளிக்கும்?
தோட்டக்கலை தெரியாத ஒருவரிடம் இளம் பூச்செடிகளை ஒப்படைத்தால் அவைகளின் கதி என்னவாகும்?
ஆடு, மாடு, கோழிகளை பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் அது குறித்த அறிவை சிறிதும் பெறாமல் போய் விட்டால் அந்த உயிரினங்கள் என்ன பாடு படும்?
அறை குறை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டால் நோயாளி என்ன ஆவார்?
பெற்றோர்களே!
தையல் ஒரு கலை! அது ஒரு திறமை!
சமையல் ஒரு கலை! அது ஒரு திறமை!
வீடு கட்டுதல் ஒரு கலை! அது ஒரு திறமை!
அது போலவே தோட்டப் பராமரிப்பும், ஆடு மாடு வளர்த்தலும், அறுவை சிகிச்சையும் வெவ்வேறு கலைகளே! திறமைகளே!
அப்படியானால் குழந்தை வளர்ப்பு? அது ஒரு கலை அல்லவா? அது ஒரு திறமையல்லவா?
திருமணமான எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பதைக் கண்டிருப்பீர்கள்! குழந்தைப் பேற்றினை அதுவரை அடையாத ஒரு மனைவியின் ஏக்கத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் ஒரு கவிஞர்:
அடுக்கி வைக்கவா? கலைத்துப் போடவா?
அடுக்கி வைத்து என்ன பயன்?
கலைத்துப் போட ஒரு குழந்தை இல்லையே?
(நன்றி: தினகரன் வார மலர்)
அல்லாஹுதஆலா உங்களுக்கு அழகான குழந்தையை / குழந்தைகளை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். ஆனால் நமது குழந்தைகளை எப்படி வளர்த்திட வேண்டும் என்பது குறித்து நமக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது! இது வேதனை அல்லவா?
நன்றாக உடுத்திக் கொள்ள நல்ல டெய்லரைத் தேடிப் போகிறோம். நாம் பெறுகின்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக நாம் விளங்கிட வேண்டாமா? சிந்தியுங்கள் சிறிது நேரம்! இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து…
(தொடரும்..)
பாகம் 2
இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-2)
அன்று ஒரு நாள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடத்தைத் துவங்கிடும் முன்பு கேள்வி ஒன்றைக் கேட்டேன்:
‘”முஸ்லிம் என்றால் யார்?”
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். நான் கேட்டேன்:
முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்த ஒருவரே முஸ்லிம் ஆவார் - இது சரியா? தவறா?
‘தவறு சார்’ என்றான் ஒரு மாணவன் உடனேயே.
‘எப்படி?’
‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம்!
ஆனால் அவர்களின் தந்தை ஒரு முஸ்லிமாக இருந்திடவில்லையே சார்!’
‘சார்,சார்’ என்று எழுந்து நின்றான் மற்றொரு மாணவன்
‘என்ன பையா?
‘இப்ராஹிம் நபி(அலைஹிஸ்ஸலாம்)யின் தந்தை சிலைகளை விற்று வந்தார். ஆனால் அவர் மகன் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) ஒரு முஸலிம்தானே’ என்றான்.
இவர்கள்தாம் இன்றைய குழந்தைகள். படு சுட்டிகள்’
படு வேகமாக சிந்திப்பவர்கள். நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் சிந்தனை வளம் (Creative Thinking) கொட்டிக் கிடக்கிறது.
ஒரு தடவை ஆங்கிலக் கலந்துரையாடல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். மாணவர்களிடம் கற்பனையாக ‘நீங்கள் இப்போது தான் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்திருக்கின்றீர்கள். விமான நிலைய அதிகாரிகளிடம் நீங்கள் உரையாடிட வேண்டும். எவ்வாறு உரையாடுவீர்கள்? செய்து காட்டுங்கள் பார்ப்போம்’ என்றேன். அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து உரையாடலைத் தொடங்கினார்கள்.
சற்று நேரத்தில் அவர்களில் ஒருவனை கவனித்தேன். மூக்கின் மேல் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டேன். ”சாரஸ்” வியாதிக்கு பயந்து தான் சார் என்றான். (அப்போது சிங்கப்பூரில் ”சார்ஸ்’ பயம் இருந்தது உண்மை தான்). மாணவனின் கற்பனை வளத்தைப் பார்த்தீர்களா? இவர்கள்தாம் இன்றைய மாணவர்கள்.
பேற்றோர்களே! ஆசிரியர்களே!
உங்கள் குழந்தைகளும், மாணவர்களும் படு சுட்டிகளே என்பதை பல தருணங்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவற்றை ஒரு கணம் நினைவு படுத்தி அசை போட்டுப் பாருங்கள்;. அத்தகைய ‘சுட்டித்தனம்’ குழந்தைகளுக்கு அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.
சில சமயங்களில் நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு ”அடக்கம்,ஒடுக்கமாக’ நடந்திட மாட்டார்கள். அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம்.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி, வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம். நமது Flash Back அவர்களுக்கு சுவைப்பதில்லை.குழந்தைகள்தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காதீர்கள். பேற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு, உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!
எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.
பாகம் 3
குழந்தைக்கு அம்மா யார்?
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-3)
சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.
அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.
‘குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’.
அறிஞர் கேட்டார்: ‘உங்கள் குழந்தையின் வயது என்ன? ‘
‘மூன்று’.
‘நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்களே!’
‘ஏன்? அப்படியானால் நான் எப்போது வந்திருக்க வேண்டும்?’
‘நீங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பது என்பது அந்தக் குழந்தையைப் பெற்று வளர்த்திடும் தாயைத் தேர்வு செய்திடும் நேரத்திலேயே துவங்கி விடுகிறது’.
அறிஞரின் பதிலில் உள்ள ஆழத்தைக் கவனித்தீர்களா?
இதோ இன்னொரு சம்பவம்.
அபுல் அஸ்வத் (ரஹ்) என்ற பெரியார், ஹஜ்ரத அலி ரலியல்லாஹ் அவர்களின் மாணவர். அவர் தமது முதுமைக் காலத்தில் தனது பிள்ளைகளை அழைத்து ‘நான் உங்களுக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உபகாரம் செய்துள்ளேன்’ என்று சொன்னாராம். புரியவில்லையே என்றார்களாம் பிள்ளைகள்.நல்ல ஸாலிஹானதொரு பெண்ணை எனக்கு மனைவியாக தேர்வு செய்ததன் மூலம் உங்களுக்கு நல்லதொரு தாயை நான் தேர்வு செய்திடவில்லையா? என்று புரிய வைத்தாராம் அந்த அறிஞர்.
இந்த இடத்தில் நாம் சில பாடங்களைப் படித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.
1. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது திருமண விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.
2. வரதட்சனைக்காக பெண்ணை தேர்வு செய்யும் இளைஞர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்ணின் குணத்தைப் பாருங்கள். பணத்தைப் பார்க்காதீர்கள்.
3. அவசர கோலத்தில் காதலித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திருமணம் செய்திடத் துடிக்கும் இளைஞர்களே! சற்று நிதானித்து செயல் படுங்கள். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சீரியஸான விஷயம். அதனை விளையாட்டாய் எடுத்துக் கொண்டால் அது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கப் பற்றுள்ள பெண்களை தேர்வு செய்திடும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பொய்க்கப் போவதில்லை.
பாகம் 4
தாய்மையின் சிறப்பு
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-4)
• குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள் (குர்ஆன் 18: 46).
• குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்(குர்ஆன் 25: 74).
• குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற அருட்கொடைகள். ஆம் அது ஒரு நிஃமத்.
• குழந்தைகள் ஒரு அமானத்தும் கூட. எனவே குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு(Responsibility).
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதொரு குடும்பச் சூழல் அவசியம். ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூதஆலா!
எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?
ஒரு முறை அண்ணல் நபி(சல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்:
யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள். ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே!
நபி(சல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரலி) அவர்கள். நபி(சல்) அவர்கள் பதிலளித்தார்கள்:
தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?
பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.
அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.
அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (ஆதார நூல் : தபரானி)
தாய்மார்களே! இவ்வளவு சிறப்புகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட நாங்கள் துஆ செய்திடும் அதே வேளையில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு மகத்தான பொறுப்பு என்பதையும் நீங்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே எங்கள் அவா!
பாகம் 5
தந்தையின் பொறுப்பு
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-5)
ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல.
குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.
1. உடல் வளர்ச்சி (Physical Development)
2. மன வளர்ச்சி (Psychological Development)
3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)
4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)
5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)
பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும். இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் ‘என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா’ என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!
இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:
நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் ‘உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். ‘நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!’ (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (தபரானி)
தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?
பாகம் 6
குழந்தைகளை கொஞ்சுங்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-6)
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத்தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?
இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார்.
“என்னம்மா, முழிச்சிக்கிட்டியா? என்ன வேணும்? இதோ நான் இருக்கேன் உனக்காக!” என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்க தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்துவிட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.
இன்னொரு தாய். இஅவ்ர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூஙகப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வருகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்சனைதான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளம் தாய் தூங்கப் போகிறார். தூக்கம் வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். அப்போதுதான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை.” ஏய் சும்மாயிரு தூங்க விட மாட்டியா என்னை?” என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய், சற்றும் முகத்தில் பாசம் இல்லாதபடி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர் கதையானால்?
மேற்கண்ட இரு தாய்மார்களிடத்தில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை தன்னம்பிக்கை உடையதாக வளர்கிறது. முன்னேறத் துடிக்கிறது. மற்றவர்களையும் நம்புகிறது. அவர்களின் உதவியுடன் சாதித்துக் காட்டுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழ்த்து எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மைக்கேல் ஜோர்டன் ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அதெற்கென படிபடியாக திட்டமிட்டு உழைத்தேன். கடுமையான முயற்சிகள் மேற்கொண்டேன்.
எனக்கு உதவி தேவைப்பட்டால் யாரையும் அணுகுவதற்குத் தயங்கமாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?”
இங்கேதான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும்.
ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்?
எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!
விளையாட்டுக்கு; கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். ‘கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!’ என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.
பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?
இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:
அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? ‘நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (முஸ்லிம்)
இது போன்ற நபிமொழிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே குழந்தைகளைக் கொஞ்சுவதை ஒரு சுன்னத் என்ற அடிப்படையில் செயல் படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
இங்கே இன்னொன்றையும் நினைவில் நிறுத்துவோம். குழந்தைகள் நன்றாக வறர்க்கப்பட குடும்பச் சூழல் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாம் மேலே எடுத்துக் காட்டிய சான்றிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
பாகம் 7
குழந்தையைப் பாராட்டுங்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-7)
ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது. அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.
இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.
உங்கள் குழந்தை - புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா - பாராட்டுங்கள்.
கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே - இன்னும் முயற்சி செய் - வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.
உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள். ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம். சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத் தடவை எப்படியும் பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’ ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம். இப்போது நபிவழிக்கு வருவோம். ஆமாம் பாராட்டுவதும் நபிவழியே! இதோ சான்றுகள்: அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். ஓரு நாள் நபி (சல்) அவர்கள் பின்னிரவில் தொழுவதற்காக எழுந்து சிறுநீர் கழித்து விட்டு திரும்புகிறார்கள். அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் சிறுவர் இப்னு அப்பாஸ் தான் அது என்று தெரிய வருகிறது. தமக்குத் தெரியாமலேயே பணிவிடை செய்த இப்னு அப்பாஸ் அவர்களை நபியவர்கள் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியாற்றல் பெறுகிட துஆவும் செய்கிறார்கள். பின்னாளில் இப்னு அப்பாஸ் அவர்கள் மிகச் சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராக விளங்கினார்கள் என்பது வரலாறு. சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சஹாபி ஒருவரை நபியவர்கள் பாராட்டி துஆ செய்ததாக நபிமொழி உண்டு. சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறுபவரை முத்தம் கொடுத்துப் பாராட்டுவார்கள் நபியவர்கள் என்றும் நபிமொழி உண்டு.
இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?
பாகம் 8
குழந்தைகளை திட்டாதீர்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-8)
எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை “சனியனே!” என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? “சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!” என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?
“இங்கே வாடா நாயே!”
“உயிரை வாங்காதேடா”
“நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா”.
“டேய்! சோம்பேறிக் கழுதை”.
“நீ எங்கேடா உருப்படப் போகிறாய்”
குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?
பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். எந்த அளவுக்கு தந்தைக்கு அவன் பயந்திருந்தால் இப்படிப் பட்ட விபரீத முடிவுக்கு வந்திருப்பான் என்று சிந்தியுங்கள்.
மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் “மருந்து” இட வேண்டுமாம்.
குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் நாமே வழி வகுத்து விடுகிறோம்.
நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?
நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். அதனை நமது அருமை மகன் உடைத்து விட்டு வந்திருப்பான். “நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா” என்று அவர்களை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?
திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது. அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ” உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்” என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும்.
“தம்பி இங்கே வா” - என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்?
“அடடா! உடைத்தா விட்டாய்? சரி, சரி - போனால் போகட்டும், இனி மேல் சற்று கவனமாக இரு!” என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான்? ஏன்? நாம் பொருட்களை உடைத்ததே கிடையாதா?
இங்கே இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
‘மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்’ என்கிறான் வல்லோன் அல்லாஹூ தஆலா. (2:83) இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:
- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.
- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.
- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.
- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.
- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.
எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டளைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்!
பாகம் 9
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 9 - குழந்தைகளை அடிக்காதீர்கள்.
குழந்தைகளை அடிக்காதீர்கள்.
“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” - என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” - இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.
தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”
“திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?” - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!
“இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?” என்று அனுப்பி வைக்கிறார்.
இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன?
இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!
மாறாக - அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் “அடிக்கக் கூடாது” என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது - அக்க்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது.
சான்றுக்கு - நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் அப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா - என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும். இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.
குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!
”உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” (முஸ்லிம்)
ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள “அனுமதி” உள்ளது. அவ்வளவு தான்.
அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா? நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார்.
அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!”
எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.
அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?
குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். க்ண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?
ஒரு முறை:
அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் “பொன்மொழிகள்” :
- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!
- அடியாத மாடு படியாது!
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!
- அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!
இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:
- கட்டுப் படுவார்கள் குழந்தைகள் - பய உண்ர்ச்சியினால் - அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!
- ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இன்னொரு முறை - மென்மையான முறை - சுன்னத்தான முறை:
- அன்பு செலுத்தி (Love and Compassion)
- அக்கரை காட்டி (Taking Care)
- மரியாதை கொடுத்து (Respect)
- நம்பிக்கையூட்டி (Trust)
வழி காட்டினால் - கட்டுப் படுவார்கள் - ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று!
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் “சொல்லை” கவனிப்பதில்லை. மாறாக நமது “செயலை”த் தான் கவனிக்கிறது என்பதனை மற்ந்திடக் கூடாது.
குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.
குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்த்ரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (Consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ள்த்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.
இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!
பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.
“குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!” (அஹ்மத்)
குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா?
குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற “தண்டனைகள்” குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை வ்ன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!
பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:
”(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.” (குர் ஆன் 3:159)
இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
- குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.
- தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்.
இவர்கள் தாம்.
நீங்கள் அப்படி இல்லையே?
தொடர்-1
S.A. மன்சூர் அலி
சென்னை வண்டலூர் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்
மர்ஹூம் நீடூர் ஏ. எம். சயீத் சாஹிப் அவர்களின் மருமகன்
http://niduronline.com
http://niduronline.com/?p=11#more-11
நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?
தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்?
நல்ல செங்கற்கள், நல்ல சிமெண்ட், நல்ல இரும்புக் கம்பிகள் என்று பார்த்து பார்த்து வாங்கி அரைகுறைப் பொறியாளர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நமது வீட்டின் அழகு எப்படி காட்சியளிக்கும்?
தோட்டக்கலை தெரியாத ஒருவரிடம் இளம் பூச்செடிகளை ஒப்படைத்தால் அவைகளின் கதி என்னவாகும்?
ஆடு, மாடு, கோழிகளை பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் அது குறித்த அறிவை சிறிதும் பெறாமல் போய் விட்டால் அந்த உயிரினங்கள் என்ன பாடு படும்?
அறை குறை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டால் நோயாளி என்ன ஆவார்?
பெற்றோர்களே!
தையல் ஒரு கலை! அது ஒரு திறமை!
சமையல் ஒரு கலை! அது ஒரு திறமை!
வீடு கட்டுதல் ஒரு கலை! அது ஒரு திறமை!
அது போலவே தோட்டப் பராமரிப்பும், ஆடு மாடு வளர்த்தலும், அறுவை சிகிச்சையும் வெவ்வேறு கலைகளே! திறமைகளே!
அப்படியானால் குழந்தை வளர்ப்பு? அது ஒரு கலை அல்லவா? அது ஒரு திறமையல்லவா?
திருமணமான எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பதைக் கண்டிருப்பீர்கள்! குழந்தைப் பேற்றினை அதுவரை அடையாத ஒரு மனைவியின் ஏக்கத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் ஒரு கவிஞர்:
அடுக்கி வைக்கவா? கலைத்துப் போடவா?
அடுக்கி வைத்து என்ன பயன்?
கலைத்துப் போட ஒரு குழந்தை இல்லையே?
(நன்றி: தினகரன் வார மலர்)
அல்லாஹுதஆலா உங்களுக்கு அழகான குழந்தையை / குழந்தைகளை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். ஆனால் நமது குழந்தைகளை எப்படி வளர்த்திட வேண்டும் என்பது குறித்து நமக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது! இது வேதனை அல்லவா?
நன்றாக உடுத்திக் கொள்ள நல்ல டெய்லரைத் தேடிப் போகிறோம். நாம் பெறுகின்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக நாம் விளங்கிட வேண்டாமா? சிந்தியுங்கள் சிறிது நேரம்! இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து…
(தொடரும்..)
பாகம் 2
இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-2)
அன்று ஒரு நாள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடத்தைத் துவங்கிடும் முன்பு கேள்வி ஒன்றைக் கேட்டேன்:
‘”முஸ்லிம் என்றால் யார்?”
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். நான் கேட்டேன்:
முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்த ஒருவரே முஸ்லிம் ஆவார் - இது சரியா? தவறா?
‘தவறு சார்’ என்றான் ஒரு மாணவன் உடனேயே.
‘எப்படி?’
‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம்!
ஆனால் அவர்களின் தந்தை ஒரு முஸ்லிமாக இருந்திடவில்லையே சார்!’
‘சார்,சார்’ என்று எழுந்து நின்றான் மற்றொரு மாணவன்
‘என்ன பையா?
‘இப்ராஹிம் நபி(அலைஹிஸ்ஸலாம்)யின் தந்தை சிலைகளை விற்று வந்தார். ஆனால் அவர் மகன் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) ஒரு முஸலிம்தானே’ என்றான்.
இவர்கள்தாம் இன்றைய குழந்தைகள். படு சுட்டிகள்’
படு வேகமாக சிந்திப்பவர்கள். நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் சிந்தனை வளம் (Creative Thinking) கொட்டிக் கிடக்கிறது.
ஒரு தடவை ஆங்கிலக் கலந்துரையாடல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். மாணவர்களிடம் கற்பனையாக ‘நீங்கள் இப்போது தான் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்திருக்கின்றீர்கள். விமான நிலைய அதிகாரிகளிடம் நீங்கள் உரையாடிட வேண்டும். எவ்வாறு உரையாடுவீர்கள்? செய்து காட்டுங்கள் பார்ப்போம்’ என்றேன். அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து உரையாடலைத் தொடங்கினார்கள்.
சற்று நேரத்தில் அவர்களில் ஒருவனை கவனித்தேன். மூக்கின் மேல் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டேன். ”சாரஸ்” வியாதிக்கு பயந்து தான் சார் என்றான். (அப்போது சிங்கப்பூரில் ”சார்ஸ்’ பயம் இருந்தது உண்மை தான்). மாணவனின் கற்பனை வளத்தைப் பார்த்தீர்களா? இவர்கள்தாம் இன்றைய மாணவர்கள்.
பேற்றோர்களே! ஆசிரியர்களே!
உங்கள் குழந்தைகளும், மாணவர்களும் படு சுட்டிகளே என்பதை பல தருணங்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவற்றை ஒரு கணம் நினைவு படுத்தி அசை போட்டுப் பாருங்கள்;. அத்தகைய ‘சுட்டித்தனம்’ குழந்தைகளுக்கு அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.
சில சமயங்களில் நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு ”அடக்கம்,ஒடுக்கமாக’ நடந்திட மாட்டார்கள். அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம்.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி, வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம். நமது Flash Back அவர்களுக்கு சுவைப்பதில்லை.குழந்தைகள்தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காதீர்கள். பேற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு, உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!
எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.
பாகம் 3
குழந்தைக்கு அம்மா யார்?
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-3)
சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.
அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.
‘குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’.
அறிஞர் கேட்டார்: ‘உங்கள் குழந்தையின் வயது என்ன? ‘
‘மூன்று’.
‘நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்களே!’
‘ஏன்? அப்படியானால் நான் எப்போது வந்திருக்க வேண்டும்?’
‘நீங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பது என்பது அந்தக் குழந்தையைப் பெற்று வளர்த்திடும் தாயைத் தேர்வு செய்திடும் நேரத்திலேயே துவங்கி விடுகிறது’.
அறிஞரின் பதிலில் உள்ள ஆழத்தைக் கவனித்தீர்களா?
இதோ இன்னொரு சம்பவம்.
அபுல் அஸ்வத் (ரஹ்) என்ற பெரியார், ஹஜ்ரத அலி ரலியல்லாஹ் அவர்களின் மாணவர். அவர் தமது முதுமைக் காலத்தில் தனது பிள்ளைகளை அழைத்து ‘நான் உங்களுக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உபகாரம் செய்துள்ளேன்’ என்று சொன்னாராம். புரியவில்லையே என்றார்களாம் பிள்ளைகள்.நல்ல ஸாலிஹானதொரு பெண்ணை எனக்கு மனைவியாக தேர்வு செய்ததன் மூலம் உங்களுக்கு நல்லதொரு தாயை நான் தேர்வு செய்திடவில்லையா? என்று புரிய வைத்தாராம் அந்த அறிஞர்.
இந்த இடத்தில் நாம் சில பாடங்களைப் படித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.
1. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது திருமண விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.
2. வரதட்சனைக்காக பெண்ணை தேர்வு செய்யும் இளைஞர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்ணின் குணத்தைப் பாருங்கள். பணத்தைப் பார்க்காதீர்கள்.
3. அவசர கோலத்தில் காதலித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திருமணம் செய்திடத் துடிக்கும் இளைஞர்களே! சற்று நிதானித்து செயல் படுங்கள். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சீரியஸான விஷயம். அதனை விளையாட்டாய் எடுத்துக் கொண்டால் அது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கப் பற்றுள்ள பெண்களை தேர்வு செய்திடும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பொய்க்கப் போவதில்லை.
பாகம் 4
தாய்மையின் சிறப்பு
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-4)
• குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள் (குர்ஆன் 18: 46).
• குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்(குர்ஆன் 25: 74).
• குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற அருட்கொடைகள். ஆம் அது ஒரு நிஃமத்.
• குழந்தைகள் ஒரு அமானத்தும் கூட. எனவே குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு(Responsibility).
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதொரு குடும்பச் சூழல் அவசியம். ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூதஆலா!
எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?
ஒரு முறை அண்ணல் நபி(சல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்:
யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள். ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே!
நபி(சல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரலி) அவர்கள். நபி(சல்) அவர்கள் பதிலளித்தார்கள்:
தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?
பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.
அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.
அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (ஆதார நூல் : தபரானி)
தாய்மார்களே! இவ்வளவு சிறப்புகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட நாங்கள் துஆ செய்திடும் அதே வேளையில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு மகத்தான பொறுப்பு என்பதையும் நீங்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே எங்கள் அவா!
பாகம் 5
தந்தையின் பொறுப்பு
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-5)
ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல.
குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.
1. உடல் வளர்ச்சி (Physical Development)
2. மன வளர்ச்சி (Psychological Development)
3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)
4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)
5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)
பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும். இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் ‘என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா’ என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!
இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:
நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் ‘உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். ‘நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!’ (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (தபரானி)
தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?
பாகம் 6
குழந்தைகளை கொஞ்சுங்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-6)
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத்தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?
இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார்.
“என்னம்மா, முழிச்சிக்கிட்டியா? என்ன வேணும்? இதோ நான் இருக்கேன் உனக்காக!” என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்க தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்துவிட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.
இன்னொரு தாய். இஅவ்ர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூஙகப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வருகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்சனைதான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளம் தாய் தூங்கப் போகிறார். தூக்கம் வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். அப்போதுதான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை.” ஏய் சும்மாயிரு தூங்க விட மாட்டியா என்னை?” என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய், சற்றும் முகத்தில் பாசம் இல்லாதபடி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர் கதையானால்?
மேற்கண்ட இரு தாய்மார்களிடத்தில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை தன்னம்பிக்கை உடையதாக வளர்கிறது. முன்னேறத் துடிக்கிறது. மற்றவர்களையும் நம்புகிறது. அவர்களின் உதவியுடன் சாதித்துக் காட்டுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழ்த்து எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மைக்கேல் ஜோர்டன் ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அதெற்கென படிபடியாக திட்டமிட்டு உழைத்தேன். கடுமையான முயற்சிகள் மேற்கொண்டேன்.
எனக்கு உதவி தேவைப்பட்டால் யாரையும் அணுகுவதற்குத் தயங்கமாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?”
இங்கேதான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும்.
ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்?
எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!
விளையாட்டுக்கு; கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். ‘கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!’ என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.
பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?
இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:
அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? ‘நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (முஸ்லிம்)
இது போன்ற நபிமொழிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே குழந்தைகளைக் கொஞ்சுவதை ஒரு சுன்னத் என்ற அடிப்படையில் செயல் படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
இங்கே இன்னொன்றையும் நினைவில் நிறுத்துவோம். குழந்தைகள் நன்றாக வறர்க்கப்பட குடும்பச் சூழல் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாம் மேலே எடுத்துக் காட்டிய சான்றிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
பாகம் 7
குழந்தையைப் பாராட்டுங்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-7)
ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது. அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.
இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.
உங்கள் குழந்தை - புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா - பாராட்டுங்கள்.
கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே - இன்னும் முயற்சி செய் - வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.
உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள். ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம். சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத் தடவை எப்படியும் பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’ ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம். இப்போது நபிவழிக்கு வருவோம். ஆமாம் பாராட்டுவதும் நபிவழியே! இதோ சான்றுகள்: அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். ஓரு நாள் நபி (சல்) அவர்கள் பின்னிரவில் தொழுவதற்காக எழுந்து சிறுநீர் கழித்து விட்டு திரும்புகிறார்கள். அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் சிறுவர் இப்னு அப்பாஸ் தான் அது என்று தெரிய வருகிறது. தமக்குத் தெரியாமலேயே பணிவிடை செய்த இப்னு அப்பாஸ் அவர்களை நபியவர்கள் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியாற்றல் பெறுகிட துஆவும் செய்கிறார்கள். பின்னாளில் இப்னு அப்பாஸ் அவர்கள் மிகச் சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராக விளங்கினார்கள் என்பது வரலாறு. சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சஹாபி ஒருவரை நபியவர்கள் பாராட்டி துஆ செய்ததாக நபிமொழி உண்டு. சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறுபவரை முத்தம் கொடுத்துப் பாராட்டுவார்கள் நபியவர்கள் என்றும் நபிமொழி உண்டு.
இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?
பாகம் 8
குழந்தைகளை திட்டாதீர்கள்!
(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-8)
எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை “சனியனே!” என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? “சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!” என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?
“இங்கே வாடா நாயே!”
“உயிரை வாங்காதேடா”
“நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா”.
“டேய்! சோம்பேறிக் கழுதை”.
“நீ எங்கேடா உருப்படப் போகிறாய்”
குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?
பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். எந்த அளவுக்கு தந்தைக்கு அவன் பயந்திருந்தால் இப்படிப் பட்ட விபரீத முடிவுக்கு வந்திருப்பான் என்று சிந்தியுங்கள்.
மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் “மருந்து” இட வேண்டுமாம்.
குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் நாமே வழி வகுத்து விடுகிறோம்.
நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?
நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். அதனை நமது அருமை மகன் உடைத்து விட்டு வந்திருப்பான். “நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா” என்று அவர்களை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?
திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது. அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ” உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்” என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும்.
“தம்பி இங்கே வா” - என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்?
“அடடா! உடைத்தா விட்டாய்? சரி, சரி - போனால் போகட்டும், இனி மேல் சற்று கவனமாக இரு!” என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான்? ஏன்? நாம் பொருட்களை உடைத்ததே கிடையாதா?
இங்கே இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
‘மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்’ என்கிறான் வல்லோன் அல்லாஹூ தஆலா. (2:83) இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:
- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.
- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.
- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.
- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.
- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.
எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டளைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்!
பாகம் 9
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 9 - குழந்தைகளை அடிக்காதீர்கள்.
குழந்தைகளை அடிக்காதீர்கள்.
“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” - என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” - இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.
தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”
“திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?” - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!
“இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?” என்று அனுப்பி வைக்கிறார்.
இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன?
இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!
மாறாக - அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் “அடிக்கக் கூடாது” என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது - அக்க்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது.
சான்றுக்கு - நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் அப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா - என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும். இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.
குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!
”உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” (முஸ்லிம்)
ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள “அனுமதி” உள்ளது. அவ்வளவு தான்.
அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா? நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார்.
அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!”
எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.
அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?
குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். க்ண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?
ஒரு முறை:
அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் “பொன்மொழிகள்” :
- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!
- அடியாத மாடு படியாது!
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!
- அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!
இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:
- கட்டுப் படுவார்கள் குழந்தைகள் - பய உண்ர்ச்சியினால் - அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!
- ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இன்னொரு முறை - மென்மையான முறை - சுன்னத்தான முறை:
- அன்பு செலுத்தி (Love and Compassion)
- அக்கரை காட்டி (Taking Care)
- மரியாதை கொடுத்து (Respect)
- நம்பிக்கையூட்டி (Trust)
வழி காட்டினால் - கட்டுப் படுவார்கள் - ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று!
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் “சொல்லை” கவனிப்பதில்லை. மாறாக நமது “செயலை”த் தான் கவனிக்கிறது என்பதனை மற்ந்திடக் கூடாது.
குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.
குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்த்ரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (Consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ள்த்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.
இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!
பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.
“குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!” (அஹ்மத்)
குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா?
குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற “தண்டனைகள்” குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை வ்ன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!
பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:
”(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.” (குர் ஆன் 3:159)
இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
- குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.
- தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்.
இவர்கள் தாம்.
நீங்கள் அப்படி இல்லையே?
Thursday, August 28, 2008
8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு
8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு
கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.
கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.
Labels:
ஆண்டு,
எஸ்.எஸ்.எல்.சி.,
கமுதி,
கலாவிருத்தி,
சதவீதம்,
நூறு,
பள்ளி,
பாராட்டு
சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளி ஆண்டு விழா
சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரம், ஆக. 28: சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் 103-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.
காலையில் தொடங்கிய விளையாட்டு விழாவுக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் ஏ.எம்.தாவூது தலைமை வகித்தார்.
நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், முகம்மதியா பள்ளிகளின் துணைத் தலைவர் அல்தாப் ஹூசைன், செயலர் முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிகளின் நிர்வாகக் குழு துணைச் செயலர் ஜமீருல் ஹசன் வரவேற்றார். தேசிய ஒருமைப்பாடுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசினார்.
விளையாட்டுப் போட்டிகளை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலர் ஹெச். மஹ்சூல் கரீம் துவக்கி வைத்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியை சாஜிதா பானு நன்றி கூறினார்.
முன்னதாக தேசியக் கொடியை முஸ்லிம் சபையின் தலைவர் ஏ.எம். தாவூது, பள்ளிக்கொடியை நிர்வாகக்குழுத் தலைவர் எஸ்.தஸ்தகீரும் ஏற்றி வைத்தனர்.
வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகத் தலைவர் ஹபீபு ரகுமான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் எம். முகம்மது இபுராம்சா, தாளாளர் ஏ. அஹமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், பனைக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஏ. ஜவஹர்அலி, சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், புரவலர் எஸ்.எம். கமருல்ஜமான், ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி, பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவினைத் தொடர்ந்து முகம்மதியா நர்சரிப் பள்ளியின் ஆண்டுவிழாவும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
ராமநாதபுரம், ஆக. 28: சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் 103-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.
காலையில் தொடங்கிய விளையாட்டு விழாவுக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் ஏ.எம்.தாவூது தலைமை வகித்தார்.
நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், முகம்மதியா பள்ளிகளின் துணைத் தலைவர் அல்தாப் ஹூசைன், செயலர் முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிகளின் நிர்வாகக் குழு துணைச் செயலர் ஜமீருல் ஹசன் வரவேற்றார். தேசிய ஒருமைப்பாடுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசினார்.
விளையாட்டுப் போட்டிகளை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலர் ஹெச். மஹ்சூல் கரீம் துவக்கி வைத்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியை சாஜிதா பானு நன்றி கூறினார்.
முன்னதாக தேசியக் கொடியை முஸ்லிம் சபையின் தலைவர் ஏ.எம். தாவூது, பள்ளிக்கொடியை நிர்வாகக்குழுத் தலைவர் எஸ்.தஸ்தகீரும் ஏற்றி வைத்தனர்.
வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகத் தலைவர் ஹபீபு ரகுமான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் எம். முகம்மது இபுராம்சா, தாளாளர் ஏ. அஹமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், பனைக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஏ. ஜவஹர்அலி, சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், புரவலர் எஸ்.எம். கமருல்ஜமான், ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி, பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவினைத் தொடர்ந்து முகம்மதியா நர்சரிப் பள்ளியின் ஆண்டுவிழாவும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Labels:
ஆண்டு விழா,
சித்தார்கோட்டை,
முகம்மதியா பள்ளி
வெளிநாட்டு வேலை மோகம்
வெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.
இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.
உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.
கேள்விகள்
1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?
2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?
3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?
4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?
5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?
6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?
7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?
8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?
9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?
10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?
11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?
12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?
13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?
15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?
அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.
கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.
இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.
உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.
கேள்விகள்
1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?
2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?
3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?
4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?
5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?
6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?
7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?
8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?
9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?
10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?
11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?
12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?
13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?
15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?
அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.
கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.
FATWA SESSION ON RAMADAN
KARNATAKA ISLAMIC KNOWLEDGE BUREAU
KIKB Invites you all with family and friends to attend a,
FATWA SESSION ON RAMADAN
Event conducted by Islamic Affairs and Charitable
Activities Dept.(GOVT. OF DUBAI) on Friday 29th August from 07.30pm to 09.30pm at
JAMIAT UL ISLAHI HALL, Al Qusais, Behind Lulu Hypermarket, Dubai, United Arab Emirates.
All are requested to attend in this event along with family & friends and make it a grand success.
By.President,Office bearers &members, KIKB
KIKB Invites you all with family and friends to attend a,
FATWA SESSION ON RAMADAN
Event conducted by Islamic Affairs and Charitable
Activities Dept.(GOVT. OF DUBAI) on Friday 29th August from 07.30pm to 09.30pm at
JAMIAT UL ISLAHI HALL, Al Qusais, Behind Lulu Hypermarket, Dubai, United Arab Emirates.
All are requested to attend in this event along with family & friends and make it a grand success.
By.President,Office bearers &members, KIKB
துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி
துபாயில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி
துபாயில் ரமலானே வருக ! ரஹ்மானே ! நிறைவருளைத் தருக !! எனும் சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஃபான் 29 ( 29 ஆகஸ்ட் 2008 ) வெள்ளிக்கிழமை தேரா சிறிய ஜர்வூனி கோட்டைப் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
முதல் அமர்வு ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு மௌலானா மௌலவி பேராசிரியர் முஹம்மது இப்ராஹிம் ஹஜ்ரத் ஃபைஜி தலைமை தாங்குகிறார். மௌலவி முஜீபுர் ரஹ்மான் ஃபைஜி இறைவசனங்களை ஓதுகிறார். அடமங்குடி ஏ. அப்துர் ரஹ்மான் கீதம் பாடுகிறார். மௌலவி மீரன் முஹ்யித்தீன் வடகரை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இரண்டாம் அமர்வில் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மௌலவி ஹுசைன் மக்கீ காயல்பட்டினம் உரை நிகழ்த்துகிறார்.
மூன்றாம் அமர்வு அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில் மௌலவி வாலிநோக்கம் கலீலுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி காஜா முஹ்யித்தீன் ஜமாலி, காயல் மௌலவி முத்து முஹம்மது மஹ்ளரி, காயல் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம், சென்னை மௌலவி ஜியாவுத்தீன் பாக்கவி, கோட்டக்குப்பம் மௌலவி முஹம்மது யஹ்யா மன்பயீ, பெரம்பலூர் இஹ்சானுல்லாஹ் பாக்கவி, கீழக்கரை முஹம்மது மஃரூப், ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 050 29 28 746 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
"Mohamed ismail",
குறிப்பு :
ரமலான் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெறும்
துபாயில் ரமலானே வருக ! ரஹ்மானே ! நிறைவருளைத் தருக !! எனும் சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஃபான் 29 ( 29 ஆகஸ்ட் 2008 ) வெள்ளிக்கிழமை தேரா சிறிய ஜர்வூனி கோட்டைப் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
முதல் அமர்வு ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு மௌலானா மௌலவி பேராசிரியர் முஹம்மது இப்ராஹிம் ஹஜ்ரத் ஃபைஜி தலைமை தாங்குகிறார். மௌலவி முஜீபுர் ரஹ்மான் ஃபைஜி இறைவசனங்களை ஓதுகிறார். அடமங்குடி ஏ. அப்துர் ரஹ்மான் கீதம் பாடுகிறார். மௌலவி மீரன் முஹ்யித்தீன் வடகரை சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இரண்டாம் அமர்வில் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மௌலவி ஹுசைன் மக்கீ காயல்பட்டினம் உரை நிகழ்த்துகிறார்.
மூன்றாம் அமர்வு அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில் மௌலவி வாலிநோக்கம் கலீலுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி காஜா முஹ்யித்தீன் ஜமாலி, காயல் மௌலவி முத்து முஹம்மது மஹ்ளரி, காயல் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம், சென்னை மௌலவி ஜியாவுத்தீன் பாக்கவி, கோட்டக்குப்பம் மௌலவி முஹம்மது யஹ்யா மன்பயீ, பெரம்பலூர் இஹ்சானுல்லாஹ் பாக்கவி, கீழக்கரை முஹம்மது மஃரூப், ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 050 29 28 746 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
"Mohamed ismail"
குறிப்பு :
ரமலான் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெறும்
Wednesday, August 27, 2008
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)