Sunday, March 21, 2010

ஊமையாய் நான்.......

ஊமையாய் நான்.......


உள்ளம் என்னும்
பள்ளத்தில்
உறவுகளையும்
உணர்வுகளையும்
அடக்கம் செய்துவிட்டு
அடக்கமாய்
அரபுலகத்திற்கு
அடைக்கலமாகிவிட்டேன்!!


கனவுகள் பொய்த்துப்போய்
கனத்த இதயத்துடன்;
கண்முன்னே நின்ற
கடமைக்குக் கட்டுப்பட்டு
கண்காணாத் தேசத்தில் இப்படி நான்!!!


வறண்டத் தொண்டையுடன்
நனைந்தக் கண்களுடன்
குலுங்கிக் குலுங்கி அழும் உன்
குரலுக்கு முன்
ஊமையாய் எத்தனையோ முறை நான்!!


இங்கே
பல் துலக்குவதிலிருந்து
இரவு
படுக்கைக்குச் செல்லும் வரை
நிமிடம் தவறாத நேரம்தான்;
தனித்த நேரத்திலும்
துளிர்த்த உன் நினைவுகள் பாரம்தான்!!!


மனம் பிடித்து
மணம் முடித்தோம் நாம்;
இப்போது
பணம் எடுக்க
பாலைவனத்தில் நான்!!


அழுக்கு ஆடைகள் போட்டாலும்
புத்தம் புதிதாய் என் இதயத்தில் நீ மட்டும்தான்!!!
சுட்டெரிக்கும் வெயிலும்
சுகமாய்தான் இருக்கும் உன்
கடிதம் என் கையில் இருக்கும் வரை.....


மணம் முடித்தும்
மணக்காத நம் வாழ்க்கை;
இன்னும் எத்தனை காலத்திற்கு
வாழாவெட்டியாய்
நான் இங்கே
நீ அங்கே!!!



- யாசர் அரஃபாத்

Opportunities for Freshers at ThyssenKrupp- Gulf Region

Opportunities for Freshers at ThyssenKrupp- Gulf Region

Kindly note ThyssenKrupp Elevator is responsible for the ThyssenKrupp Group’s global activities in the area of passenger transportation systems. With almost 43,000 employees and sales of approximately €5.3 billion, the Elevator business is represented in more than 65 countries worldwide. The product range comprises passenger and freight elevators, escalators and moving walks, chair and platform lifts, passenger boarding bridges and quality service for the entire product range.


As part of our business growth plans in the Gulf region, we are looking for high caliber fresh graduates in Engineering, Business Administration and Economics to join our post-graduate training program on the latest elevation technology and project management.

If you:

• Are graduate of any of the above disciplines

• Want to play a role in complex projects

• Like challenges, and are looking for rapid career growth within the ThyssenKrupp world, please send your CV to:

jobs.gulf@thyssenkr upp.com

Successful candidates will enjoy the benefits of our post-graduate
training program:

• Structured Training at ThyssenKrupp Elevator SEED School in Madrid, Spain.

• Practical field training in ThyssenKrupp Operations in the region.

• Company provided accommodation, transportation and monthly salary during the training period.

• Employment contract with ThyssenKrupp Elevator in the Gulf Region.

After the completion of their training, trainees will continue their career development in ThyssenKrupp Elevator by working in different departments in our operations in the Gulf region.

Arabic speaking candidates will be given preference, however, other candidates are encouraged to apply.

All applications will be treated in complete confidence. To learn more about us, please visit www.thyssenkrupp- elevator. com

Thursday, March 18, 2010

Indian Expats

Indian Expats

Found this site recently.. looks like an amazing place.. check it out ppl..Indian Expat Forums, Classifieds, Events, Jobs and more...

www.abroadindians.com

பணம் தேடும் பந்தயத்தில் .......

பணம் தேடும் பந்தயத்தில் .......

வத்திய மேனியும்
நெற்றியில் வியர்வையுமாக
இங்கே நான்!


கருகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் நான்
விடுகதையாய்!!


கூழோ! கஞ்சியோ!
குடிக்கும் போது நீ வேண்டும்;
என எத்தனை முறை சொன்னாலும் நீ;
மூட்டை முடிச்சுடன்
மூட்டைப் பூச்சிகளுடந்தான்
இங்கே நான்!!


பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே - என
காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்;
முகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி!!


பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நீ மட்டுமே!!


விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வளைக்குடாவிற்கு!!


சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்றாலும்;
உள் அர்தத்தை
உன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது!!


வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!


- யாசர் அரஃபாத்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!


A. Mohammad Alavudeen | Cash Control | Finance & Risk Management | Emirates Group
(: +9714-7083176 | 6: +9714-2864132 | *: mohammad.alavudeen@emirates.com

NRI’s offered scholarships

NRI’s offered scholarships

http://arifmaricar.blogspot.com/2010/03/nris-offered-scholarships.html

June 10 last date for receipt of applications The Ministry of Overseas Indian Affairs, Government of India has announced the Scholarship Programme for Diaspora Children (SPDC 2010-2011) to assist children/wards of PIOs / NRIs to pursue undergraduate courses in several disciplines in India. The Educational Consultants India Limited (Ed.CIL), a Government of India Enterprise, has been designated as the Nodal Agency for implementation of the SPDC.

The following are the highlights of the SPDC 2010-2011 :
- 100 scholarships are being offered for undergraduate courses in several disciplines including Engineering/Architecture/Technology, Humanities/Liberal Arts, Commerce, Management-BBA/BBM, Computer-BCA, Journalism, Hotel Management, Agriculture/Animal Husbandry, Sciences, Law, etc. - The programme is open only to PIOs/NRIs from the specified 40 countries, including Kuwait, having a larger concentration of Indian Diaspora.

- 50 percent of the scholarship would be reserved for PIOs. However, in the event of non-availability of suitable PIO candidates, the unfilled slots could be assigned to NRI candidates.

- NRI candidates would be eligible for the grant of scholarship only if their total family income per month does not exceed an amount equivalent to US $2,250 (US dollars two thousand two hundred and fifty only).

- Children ot NRIs should have pursued at least three years of education inclusive of 11th & 12th or equivalent (not beyond), in a foreign country during the last six years, and should have passed the qualifying examination abroad.

n The last date for receipt of duly filled-in application forms in the prescribed format by Ed.CIL is 10th June 2010.

- PIO/NRI students already studying in India on a self-financing basis or under any other arrangement will not be eligible under this scheme, which is open only for fresh admissions in the first semester/year of undergraduate courses.

- Candidates would be selected on the basis of their performances in the qualifying examination (equivalent to plus 2 stage in India) which decides the eligibility to apply for the scholarship scheme. The candidates would also have to fulfill all the criteria prescribed for the purpose.

The guidelines and the application form can be downloaded from http://www.educationindia4u.nic.in/shared/downloaditems/Img180.pdf

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” டாக்டர் பெரியார்தாசன்

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” டாக்டர் பெரியார்தாசன்

சமுதாய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.
நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.
ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.
ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் www.islamkalvi.com தளத்தில் பார்க்கலாம்.

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறிய சமயத்தில் இந்த ரபீவுல் ஆகிர் மாதத்தில் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள்.

பஹ்ரான் யுத்தம். இதை நஜ்ரான் யுத்தம் என்றும் சொல்லப்படுகிறது. பத்ரு யுத்ததிற்கும் உஹது யுத்ததிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரைஷிகளையும், பனூ சுலைம் கூட்டத்தினரையும் எச்சரிப்பதற்காக நயகம் (ஸல்) அவர்கள் படையுடன் சென்று “பஹ்ரான்” என்ற இடத்தில் இந்த மாதம் முழுவதும் தங்கினார்கள். யுத்தம் நடை பெறவில்லை. மீண்டும் மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரபீவுல் அகிர் மாதம் நடந்தது.

மதீனாவிலுள்ள பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த யூதர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சி செய்தனர். யூதர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் நபியவர்களுக்கு அறிவித்து காப்பாற்றினான். இந்நிகழ்வு ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படை பனூ சுலைம் கூட்டத்தினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்களிடம் போரிட்ட இஸ்லாமிய படையினர் சிலரை கைதிகளாக்கினர். ஒட்டகம் ஆடு போன்ற கால்நடைகளை கனீமத்தாக (வெற்றிப்பொருளாக) எடுத்து வந்தனர். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை “துல்கஸ்ஸா” என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். எதிரிகளில்ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். அவர்களின் கால்நடைகள் வெற்றிப் பொருளாக கிடைத்தது. இந்நிகழ்வும் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடைபெற்றது.


தொகுப்பு: மவ்லவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவூதி, Dubai ( 055 976 4994 )

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘ஜெனரல் ஸ்டடிஸ்’ என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள்.

மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...

கோடை காலத்தில் அனைவரும் உண்ண வேண்டிய அற்புதமான உணவு கம்மங்கூழ்...

அதைப்பற்றியான எனது பதிவை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்...

http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_16.html

அன்புடன்....
சங்கவி...
sangkavi.blogspot.com
sat10707@gmail.com

துபையில் (Peace) அமைதி மாநாடு

துபையில் (Peace) அமைதி மாநாடு

இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் நாளை 18.03.2010இல் தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய சத்தியமார்க்கம்.காம் அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றது.
கலந்து கொண்டு சிறப்பிப்போர்:

Sheikh Abdur Rahman Al Sudais (Expected)
Imam Masjed Al-Haram (Al-Kaba) – Saudi Arabia

Dr. அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸ் - ஸஊதி அரபியா
ஈர்த்திழுக்கும் இவரது மறையோதல் உலகப் புகழ் பெற்றது. 1961ஆம் ஆண்டு பிறந்த ஷேக் அப்துர் ரஹ்மான், தமது 12ஆவது வயதில் இறைமறையை முழுமையாக மனனம் செய்தவர். ஹிஜ்ரீ 1399ஆம் ஆண்டு ரியாத் மருத்துவக் கழகத்தின் மிகச் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்ற மருத்துவர். ஷேக் அப்துர் ரஹ்மான் அவர்கள், தமது 'இஸ்லாமிய அடிப்படை நெறிமுறை' (ஷரீஆ) இளங்கலைப் பட்டத்தை ரியாத் பல்கலைக் கழகத்தில் 1983இல் நிறைவு செய்தார். பின்னர், இமாம் முஹம்மது இபுனு ஸஊத் இஸ்லாமியப் பலகலைக் கழகத்தில் தமது முதுநிலைக் கல்வியை 1987இலும் இஸ்லாமிய நெறிமுறை (ஷரீஆ) ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் 1995இலும் நிறைவு செய்தார். ஹிஜ்ரீ 1404 ஷஅபான் மாதம் 22ஆம் நாள்முதல் கஅபாவின் இமாமாகப் பணியாற்றுகிறார். அன்னார், சிறுவயது முதல் தம் நல்லொழுக்கத்தாலும் இப்போதும் பின்பற்றும் எளிமையாலும் அனவரையும் கவர்ந்தவர்.

Sheikh Mishary Rashid Al Effasy - Kuwait
ஷேக் மிஷாரீ ராஷித் அல் இஃபாஸி - குவைத்

ஷேக் மிஷாரீ அவர்கள் 1976இல் குவைத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த ஓதுவார் (காரீ அல் குர்ஆன்). மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அல் குர்ஆனையும் இஸ்லாமியக் கல்வியையும் பயின்றவர். மறையோதுதலின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்த ஷேக் மிஷாரீ, குவைத்தின் பெரிய பள்ளிவாயிலின் இமாமாகப் பணியாற்றுகிறார். இவரது குரலில் அல் குர்ஆன் யூ-ட்யூபில் கேட்கக் கிடைக்கிறது.

Dr. Hussain Hamed Hassan - Egypt
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் - எகிப்து
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரத் துறையில் சமகாலத்தவரின் தந்தை எனப் பேசப் படுகிறார். கைரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்தைக் கடந்த 1965இல் பெற்றவர். கூடுதலாக, ந்யூயார்க் பலகலைக் கழகத்தின் 'உலகளாவிய ஒப்பீட்டுச் சட்டப் பயிற்சி' மையத்திலிருந்து இரு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞராக 1969-1970 பணியாற்றியுள்ளார். தற்போது மத்தியக் கிழக்கின் பல இஸ்லாமிய வங்கிகளுக்கு மட்டுமின்றி, பொருளாதாரக் கல்விப் பயிலகங்களின் நெறிமுறைக் கண்காணிப்புக் குழுமத்தின் தலைவராகவும் மத்தியக் கிழக்கின் அரசாங்கங்கள் சிலவற்றுக்குப் பொருளாதார ஆலோசகராகவும் திகழ்கிறார்.

Yasir Qadhi - USA
ஷேக் யாஸிர் காழி - அமெரிக்கா
ஷேக் யாஸிர் காழி அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸில் உள்ள ஹ்யூஸ்டனில் பிறந்தவர். மேனிலைப் பள்ளிப் படிப்பை ஸஊதியில் உள்ள ஜித்தாவிலும் இஸ்லாமியக் கல்வியை மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமது இஸ்லாமியக் கல்வி ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழத்தில் அண்மையில் பெற்றார் ஷேக் யாஸிர். மிகச் சிறந்த பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான ஷேக் யாஸிரின் அழைப்புப் பிரச்சாரங்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளன. ப்பீஸ், இஸ்லாம்(இங்கிலாந்து), அல்-ஹுதா(ஸஊதி அரேபியா), அல்-ஃபஜ்ரு(எகிப்து) ஆகிய தொலைக்காட்சிகளிலும் இவரது இஸ்லாமியப் பிரச்சாரம் ஒளிபரப்பப் படுகிறது.

Yusuf Estes - USA
ஷேக் யூஸுஃப் எஸ்ட்ஸ் - அமெரிக்கா

"விளையாட்டுப் பிள்ளை" என்று கேள்விப் பட்டிருக்கிறோமில்லையா? போலவே, அமெரிக்காவின் யூஸுஃப் எஸ்ட்ஸ் அவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரின் உள்ளங்களையும் தம் விளையாட்டுப் பேச்சினால் கொள்ளை கொண்ட இந்த "விளையாட்டு ஷேக்" ஒரு முன்னாள் கிருஸ்துவப் பாதிரியாவார். ஐ.நா.வின் மத அமைதி-நல்லிணக்கத் தலைவர்களில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். எகிப்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைக் கிருஸ்துவத்துக்கு மதமாற்ற முயன்றபோது இஸ்லாத்தின் வலையில் தாமாகவே வந்து 'வீழ்ந்துபட' நேந்ததை விளையாட்டாக எளிமையான ஆங்கிலத்தில் அவர் விவரிக்கும்போது சிரிப்பும் அழுகையும் கலந்த அனுபவம் உண்டாகும். வெகு எளிமையான ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாகப் பேசியே பலரை இஸ்லாத்தின் பக்கம் அழத்து வந்திருக்கிறார். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காகவே பல இணைய தளங்களை நடத்திவருகிறர். அவரது சொந்தப் பெயரிலும் (www.YusufEstes.com) பிற பெயர்களிலும் இயங்கும் இணைய தளங்களுள் குறிப்பிடத் தக்கவை : (www.BibleIslam.com), (www.ShareIslam.com).

Abdur Raheem Green - UK
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் - இங்கிலாந்து

ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இராணுவப்படை நிர்வாகியாத் திகழ்ந்த தந்தைக்கு, தான்ஸானியாவின் தலைநகரான தாருஸ்ஸலாமில் பிறந்தவர். குடும்பம் முழுதும் இங்லாந்துக்கு மீண்டு, லண்டன் கிருஸ்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். மாணவப் பருவத்திலேயே வாழ்வின் பொருளைத்தேடி, தம் உள்ளம் அலைபாயுவதை உணர்ந்தவர். தம் கலாச்சாரத்தை, வாழும் வழியைப் பல்வேறு வகையில் தன்னுள் கேள்விக்குட்படுத்தியவர். பிறகென்ன? தேடிக் கொண்டே இருப்பவர்களை இறுதியாக எதிர்கொள்வது அல்லாஹ்வின் வேதம்தானே! அது 1987இல் அவர் கைக்குக் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பிறருக்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் சிறந்த அழைப்பாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார் ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன். அவரது இணையதளம் www.IslamsGreen.org

Sheikh Hussain Yee - Malaysia
ஷேக் ஹுஸைன் யீ - மலேஷியா

"சீனஞ் சென்றேனும் ஞானம் தேடு" என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. இந்தச் சீனவழிவந்த "யீ" அவர்களுக்கு ஞானம் பிறந்தது மலேஷியாவில். புத்தமதக் குடும்பத்தில் பிறந்த "யீ", தமது 18ஆவது வயதில் (1978) இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாமியக் கல்வி பயில்வதற்காக அவர் தேர்ந்து கொண்டது மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகம். தேர்ந்தெடுத்த துறை ஹதீஸுக்கலை. பட்டம் பெற்றது 1978இல். மலேஷியாவில் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அடிப்படை போதனைகளையும் வாழும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட 'முஸ்லிம் சமூகநல அமைப்பு (Perkin)'இல் தம்மை இணைத்துக் கொண்டார் ஷேக் ஹுஸைன். பின்னர் ஹாங்காங்கின் இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் பொறுப்பேற்றார். மலேஷியாவில் "அல்-காதிம்" (தொண்டன்) எனும் அமைப்பை 1984இல் நிறுவி அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். சமகால ஹதீஸுக்கலை விற்பன்னர்களில் தலையானவரான இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்களின் மாணவராவார் ஷேக் ஹுஸைன்.

M.M Akbar - India
ஷேக் எம். முஹம்மது அக்பர் - இந்தியா

இயற்பியல் பட்டதாரியான எம். முஹம்மது அக்பர், ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர். கேரளாவில் பிறந்த ஷேக் அக்பர் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிறமத நண்பர்களுடன் நடத்தும் நட்புமுறையில் அமைந்த விவாதத்திலும் கெட்டிக்காரர். "ஸ்நேகஸம்வாதம்" (Friendly debate) எனும் பெயருடைய மலையாள மாத இதழின் ஆசிரியர். "நிஜம்" எனும் தஃவா அமைப்பின் நிறுவன இயக்குநர். Peace எனும் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். "Bibilinte Daivikatha-Vimarshangal, Vasthuthakal" (Divinity of Bible-Criticisms and Truths), "Haindavatha - Dharmavum Dharshanavum" (Hinduism – Religion and Ideology) ஆகிய நூல்களை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்.

Saeed Rageah - Canada
ஷேக் ஸயீத் ராகேஹ் - கனடா
சோமாலியாவில் பிறந்து ஸஊதியில் வளர்ந்து, வட அமெரிக்காவுக்குப் பெயர்ந்து, தற்போது கனடாவின் டோரொண்டோவில் அபூஹுரைரா இஸ்லாமிய மையத்தில் இமாமாகப் பணியாற்றும் ஷேக் ஸயீத், இஸ்லாமியக் கல்வியில் இளங்கலைப் பட்டமும் வெர்ஜினீயாவின் ஃபயர்ஃபாக்ஸில் உள்ள 'இஸ்லாமிய, அரபு அறிவியல் பயிலக Institute of Islamic and Arabic Sciences'த்தில் நெறிமுறை(ஷரீஆ)க் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாவன்மை மிக்கவர். மஸ்ஜிது ஹுதா (மோண்டரல்), மஸ்ஜித் ஆயா (மேரீலாண்ட்) "முஸ்லிம் இளையோர்" இதழ், "அக்ஸாக் கூட்டமைப்பு" ஆகியவற்றின் நிறுவனர் ஆவார் ஷேக் ஸயீத்.
Ahmed Hamed - India
ஷேக் அஹ்மது ஹாமித் - இந்தியா
"அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும்" எனக் கூறும் ஷேக் அஹ்மது ஹாமித், 28 வயது நிரம்பிய இந்திய இளைஞர். வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரியான அஹ்மது, கடந்த சில ஆண்டுகளாகவே அழைப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். "இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை, குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த பிரச்சாரம் ஒன்றின் மூலமே களைய முடியும்" எனக் கூறும் அஹ்மது, எவரையும் கவரும் நாவன்மை கொண்டவர். பல்வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றியவர். அமீரகங்கள், ஸஊதி அரபியா, இங்கிலாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் அழைப்புப் பணி செய்திருக்கிறார். தாஇகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஷேக் அஹ்மது.

Zain Bhikha - South Africa
ஸைன் பிகா - தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் 1974இல் பிறந்த ஷேக் ஸைன், சிறுவயதில் குரலினிமை கொண்ட சிறந்த பாடகராம். ப்ரிட்டோரியா முஸ்லிம் பள்ளிக்கூடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இஸ்லாத்தை மையப் படுத்தி, "வாழும் வழி - A Way of Life" எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் பின்னர் "Praise to the Prophet (SAW)" (1996), "Fortunate is He" (1997) and "The Journey" (1998) ஆகிய தொகுப்புகளையும் ஸைன் வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சி நிரல்:
வியாழன் 18.03.200
மாலை 5 முதல் இரவு 11:30 வரை : மாநாட்டுத் தொடக்கம், உரைகள், பொருட்காட்சி
வெள்ளி 19.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், ஜும் ஆத் தொழுகை, பொருட்காட்சி
பகல் 2.30 முதல் இரவு 11:30 வரை : உரைகள், கிரா அத், கவிதை, பொருட்காட்சி
சனி 20.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், பொருட்காட்சி
பகல் 2.30 முதல் மாலை 6 வரை : உரைகள், பொருட்காட்சி
மாலை 6.30 முதல் இரவு 11.30 வரை : பொருட்காட்சி, மாநாட்டு நிறைவு
கூடுதல் விபரங்களுக்கு: http://www.peaceconvention.com/

நன்றி : பீஸ் ட்ரைன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)

அலமா பஜல் ஹக் - உத்திரப் பிரதேசம்
லியாகத் அலி - உத்திரப் பிரதேசம்
குலாப் கான் - மத்தியப் பிரதேசம்
முஹிபுல்லாஹ் - மத்தியப் பிரதேசம்
மிர் ஜாபர் அலி தன்ச்வாரி - மத்தியப் பிரதேசம்
நூரா - மத்தியப் பிரதேசம்
சிராஜுதீன் - மத்தியப் பிரதேசம்
கையும் கான் - மத்தியப் பிரதேசம்
மௌலவி சயீத் அலாவுதீன் - ஹைதராபாத்
மது மாலிக் - அஸ்ஸாம்
ஷேக் பர்மூத் அலி - அஸ்ஸாம்

வஹாபி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1860 - 1870)

அஹமதுல்லாஹ்
அமிருதீன்
இப்ராகிம் மண்டல்
முஹம்மது சேர் அலி
யஹ்யா அலி

மாப்பிளா புரட்சியில் (கேரளா ) ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1922 - 1924)

நெல்லிப்பரம்பன் அலவி ஹாஜி
கொலபரம்பன் குஞ்சலாவி
கொழிச்செரி கோயா குட்டி
அம்பட்டுபரம்பன் சைதலிப்பா
கயக்கட்டிபரம்பில் குன்ஜெனி
மசிங்கள் ரயின்
குதுகள்ளன் குஞ்சிரா
சுந்காத் அதான்
வரியாத்வளப்பில் அஹம்மத் குட்டி
மட்டும்மால் அஹம்மத் குட்டி
பொயிக்குன்னான் மரைக்கார்
மசின்சேரி அலவி
பொகத் கொயமி
குஞ்சிக் காதர் மொல்லா
முகரி குஞ்சயம்மு
குன்ஹி மொஹிதீன் குட்டி
பூவகுண்டில் அலவி
குஞ்சிடு
அரிபார பாகர்
மட்டும்மால் மரைக்கார்
குட்டி ஹசான்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1909 - 1921)

அலி அஹ்மத் சித்திகி - பஞ்சாப்
முஸ்தப்பா ஹுசைன்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1932 - 1938)

அப்துல் காதர் சௌத்ரி - மேற்கு வங்காளம்
சிராஜுல் ஹக் - மேற்கு வங்காளம்
முஹம்மது இப்ராகிம் - மேற்கு வங்காளம்

Laugh out loud

Laugh out loud

R. Priyadarshini

16 March 2010

Say the word recession and some Dubai residents literally laugh it away. Don’t believe us? Well then you’ll have to check out the Emirates Humour Club to see what’s so funny

The fifth floor auditorium at the Karama Centre in Dubai recently roared with laughter when the Emirates Humour Club (EHC) held its first anniversary function attended by around 350 people. What started with a handful of residents sharing jokes has now become a hugely popular event around the city.

“EHC also stands for ‘Eeee, Haaa, Corner’ where once a month, ordinary people gather, laugh it out and become extraordinary people. This is one forum where people take humour seriously and everything else in life lightly,” say KG Guna and Suresh Krishnan, who are the brains behind the club. Both are seasoned entertainers and communicators with a penchant for humour.

‘Know humour? No worries! No humour? Know worries!’ is the tag line of the venue, and sex, religion and politics are forbidden subjects. True happiness is to make others happy and members literally live by this rule, insists Suresh.

The president of the club opens proceedings with a humorous welcome address which is followed by the general humour session, and after breaking the ice, calls out people from a list to the podium to share some humour.

Joke sharing is the basic requirement for a humorist. Applied humour like mimicry, slapstick comedy and miming are also in the fray.

Humorous skits are part of the activities at the EHC club and with every session, special skits spanning 10 to 15 minutes enthrall the audience, covering everything from contemporary news to interesting facts from around the world.

The U.A.E. is a rare country where people of more than 150 nationalities live in harmony. How does EHC intend to break the language barrier as its present programmes are mostly in Indian languages?

“The EHC is planning to have its second chapter in English. This is primarily aimed at expanding our horizon and includes numerous humour lovers from other sections of the community, as well as children. We are open to one and all,” says Guna.
“Many people still hesitate to take to the stage and share a joke. If I say something funny, they will laugh. But the basic idea of the club is to do just that,” he says with a smile.

Dr Sujatha Parthasarathy, an active member of the club, believes ‘humour is infectious’.

“At a time when there are so many negative thoughts thanks to the recession,” he says, “nothing proves better than loads of humour to lighten our burden.”
Guna and Suresh echo the same sentiment.

“People asked us where is the need for such a club at a time when recession is striking everyone hard. We replied that this is precisely the right time as nothing offers better remedy than comedy.”

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
விளையாட்டு – தங்கும் விடுதி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010
தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்
ஏழை மாணவர் இல்லம்
தொலைபேசி : 2848 1344

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்
கட்டுரைப்போட்டி தலைப்பு :
பெரும் புரட்சியாளர் பெருமானார் ( அல்லது )
நம் தியாகத்தால் கிடைத்தது நாட்டுக்கு சுதந்திரம்
சும்மா கிடைக்குமோ ஆட்சி, அதிகாரம்
- ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஓர் ஆய்வு

கலந்து கொள்ளத் தகுதி : மாணவர்கள் மற்றும் 40 வயதிற்குட்பட்ட அனைவரும்
அளவு : ஏ4 அளவுத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் டைப் செய்து ஐந்து பக்கங்களுக்கு மிகாமல்
தியாகிகள் மையத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 ஏப்ரல் 2010

பரிசு : நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு தலா ரூ. 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள்

முகவரி :
தியாகிகள் மையம்
எண் 10 ( பழைய எண் 73 ) தாதா முத்தியப்பன் தெரு ( பிராட்வே )
பிளாட் எண் 5 முதல் தளம்
கொத்தவால் சாவடி காவல் நிலையம் எதிரில்
ஜார்ஜ் டவுண்
சென்னை 600 001
போன் : 044 – 421 65 352

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1078

• இஸ்லாமிய மாண்புகளை, பண்பாடுகளை வலியுறுத்தும் வகையிலோ, இஸ்லாமிய வாழ்வியலின் சிறப்புக் கூறுகளை எடுத்துக் கூறும் வகையிலோ சிறுகதைகள் அமையலாம்
• சிறுகதைகள் மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருக்கக் கூடாது. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அளிக்கப்படல் வேண்டும்.
• இதற்கு முன்பு வேறு எந்த ஊடகத்திலும் எந்த வடிவிலும் வெளியானதாக இருக்கக் கூடாது.
• பெயர், முகவரி, அலைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதைப் பக்கங்களில் பெயரோ, முகவரியோ இடம் பெறக்கூடாது.
• அஞ்சல் தலை வைத்து அனுப்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
• சமரசத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் அமைய வேண்டும்.
• உறையின் மேல் சமரசம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிடுக
• நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
முதல் பரிசு : ரூ 2000
இரண்டாம் பரிசு : ரூ. 1000
மூன்றாம் பரிசு : ரூ. 500
( பரிசு பெறாத கதைகள் தகுதியிருப்பின் சமரசம் இதழில் வெளியாகும் )
சிறுகதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 31.03.2010
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர்
சமரசம்
எண் 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
மின்னஞ்சல் : samarasam12@gmail.com
www.samarasam.net

Sunday, March 14, 2010

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!



http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0825-control-the-sins-of-the-tongue.html

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.

தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.

நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.

சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.

மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

"தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !
( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=164

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.
இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.
என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.
பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.
இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.
ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.
காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.
உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.
இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.
சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !
பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.
சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.
லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.
நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !
ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,
எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.
பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.
பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.
பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?
பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.
சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.
வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.
பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.
15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.
இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?
கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.
ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.
இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.
15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.
ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.
பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.
துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !
குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?
எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !
உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர் உழைப்பாளி !!

குறிப்பு ;
வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com என்ற இ.மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தலாம்.

100 websites for sending Free SMS

100 websites for sending Free SMS

There are 100 websites to send sms via online for free



குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான 100 இணைய தளங்களின் பெயர்களை இதில் கொடுத்துள்ளேன்.இதில் சில இணைய தளங்களின் குறுஞ்செய்தி சேவைகளின் வழியாக பன்னாட்டு குறுஞ்செய்திகளையும் அனுப்ப இயலும்(இலவசமாக) ஆகையால் இவற்றை பயன்படுத்தி கொள்வதன் பொருட்டு உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



http://4usms.net/
http://50sms.com/
http://adleel.com/sms.htm
http://adleel.com/sms.htm
http://free-sms-message.com/index.htm
http://free-sms-message.com/index.htm
http://gsms.se/
http://mobile.fares.net/sms/uae
http://my.phonegnome.com/
http://simsor.com/register
http://sms4u.biz/signup.php
http://smscity.com/
http://stepsms.com/
http://thesmszone.com/
http://www.160by2.com/
http://www.agentsms.com/
http://www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
http://www.atrochatro.com/
http://www.awalsms.com/
http://www.awalsms.com/
http://www.boswtol.com/
http://www.boswtol.com/
http://www.cbfsms.com/
http://www.cbfsms.com/
http://www.cellular.co.za/
http://www.clickatell.com/
http://www.clickatell.com/
http://www.d1g.com/
http://www.devinosms.com/
http://www.ecosms.ch/
http://www.edihasms.com/
http://www.edihasms.com/
http://www.freesms.2way.de/
http://www.freesms.co.za/
http://www.freesms.co.za/
http://www.freesms.com/
http://www.freesms.com/
http://www.free-sms.com/
http://www.free-sms.com/
http://www.free--sms.com/index.go
http://www.freesms.net/
http://www.freesms.net/
http://www.freesms.web.tr.tc/
http://www.free-sms-service.de/
http://www.genie.co.uk/
http://www.genie.co.uk/
http://www.gosms.com/
http://www.gsmvault.com/
http://www.hai91.com/
http://www.hot.it/sms
http://www.hotsms.com/
http://www.hotsms.com/
http://www.islamweb.net/
http://www.itsalat.com/
http://www.itsalat.com/
http://www.jfax.de/
http://www.jfax.de/
http://www.junglesms.com/
http://www.lycos.co.uk/
http://www.lycos.co.uk/
http://www.metacrawler.de/
http://www.mginger.com/
http://www.mobik.com/mobik/client/
http://www.mobizone.com/
http://www.mobizone.com/
http://www.mobyko.com/
http://www.mycantos.com/
http://www.nemra1.com/
http://www.nice-prizes.de/
http://www.nice-prizes.de/
http://www.phones.com/
http://www.pimpmysms.com/
http://www.quicksms.de/
http://www.quicksms.de/
http://www.quios.com/
http://www.quios.com/
http://www.resalh.com/
http://www.rosms.home.ro/
http://www.rosms.home.ro/
http://www.send.sms.to/free.asp
http://www.sendsmsnow.com/
http://www.shortmessage.com/
http://www.sms.ac/
http://www.sms.at/
http://www.sms.at/
http://www.sms.com/
http://www.sms.de/
http://www.sms.de/
http://www.sms.mums.it/
http://www.sms.mums.it/
http://www.sms2india.org/
http://www.smsdiscount.com/en/index.html
http://www.smsfree.co.uk/
http://www.smsfree.co.uk/
http://www.smspop.com/
http://www.smspress.com/
http://www.smspress.com/
http://www.smspup.com/
http://www.smspup.com/
http://www.sms-sprueche.tv/
http://www.sms-sprueche.tv/
http://www.smstxtbox.com/web/
http://www.smsyes.com/
http://www.smsyes.com/
http://www.textmefree.com/
http://www.textmefree.com/
http://www.themobiweb.com/en/sms.html
http://www.uaesms.com/
http://www.uni.de/
http://www.uni.de/
http://www.unisms.uni.cc/
http://www.vazu.com/
http://www.vizzavi.it/
http://www.vizzavi.it/
http://www.world-free.com/free-sms
http://www.worldxs.net/sms.html
http://www.yellowpages.com.eg/
http://zyb.com/
http://zyb.com/
sms2.htm
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.bestspider.com/sms
www.bestspider.com/sms
www.call-magazine.de/free_sms
www.call-magazine.de/free_sms
www.cellular.co.za/send_
www.cellular.co.za/send_sms2.htm
www.hot.it/sms
www.jinny.com.lb/sms
www.jinny.com.lb/sms
www.jokes.gr/en/sms
www.jokes.gr/en/sms
www.jump.to/freesms
www.jump.to/freesms
www.masrawy.com/sms
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.ournet.md/sms
www.ournet.md/sms
www.send.sms.to/free.asp
www.smsuae.com/sms-uae
www.smsuae.com/sms-uae
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.uboot.com/uk
www.uboot.com/uk
www.ulluminati.ch/Nexus/sms.html
www.ulluminati.ch/Nexus/sms.html
www.world-free.com/free-sms
www.worldxs.net/sms.html

--

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.

நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )