என்னதான் நடந்தாலும்-இருட்டிலுமா நீதி மறைந்துவிடும்?
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி. ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய அரசமைப்புச் சட்டம் (கான்ஸ்டிடூஷன்) 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் அமுலுக்கு வந்தது. அதன் பிரிவு 14ன் படி அரசு, இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவருக்கும் சட்டத்தின் முன்னர் சமம், சட்டங்களின் சமத்தினை மறுத்தல் ஆகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரிவு 15ன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் இவற்றை மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களாக் கொண்டு, குடிமக்கள் எவருக்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது.
அரசு என்பது ஒரு நாட்டின் தூண்களாக கருதப்படும் நீதி, அரசு, மக்களவை போன்ற மூன்றையும் பொருந்தும்.
ஆனால் உத்திர பிரதேசத்திலுள்ள ஆயோத்தியாவில் பாரம்பரியமிக்க தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாடிலிருந்த பாபரி மஸ்ஜிதை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6ந்தேதி திராவிட இனத்தலைவரால் ஒரு தடவை பண்டாரம், பரதேசி என்ற அழைக்கப்பட்டவர்களால் இடித்துத்தள்ளப்பட்டதின் மூலம் சர்வதேச நாட்டுமக்கள் முன்பு இந்திய நாட்டின் இறையாண்மையினை சந்தேகிக்க வாய்ப்புக் கொடுத்தது மட்டுமல்லாமல், அதன்பின்பு நடந்த கலவரங்களில் கணக்கற்ற பொருட்சேதம், 2000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டும் ஒரு நீங்கா வடுவினை அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்த இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தி விட்டனர் என்றால் மிகையாகுமா?
பாபர் படையெடுத்தாராம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடித்து மஸ்ஜித் 1528 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டதாம் என்ற கதை. ஏன் ஆயோத்தியில் மஸ்ஜித் கட்ட கோவிலைத் தவிர இடமா இருந்திருக்காது? அது என்ன மக்கள் குறைந்த இடத்தில் அதிகமாக மக்கள் வாழும் பம்பாய், புதுடெல்லி, கல்கத்தா போன்ற நகரமாவா இருந்திருக்கும்? பெரும்பாலான மக்களின் மத, இன துவேசத்தினைத் தூண்ட என்ன கருவி வேண்டும் அவர்களுக்கு இதனைத் தவிர? ஆனால் இஸ்லாம் மார்க்கத்தினை ஏற்றுக் கொண்டு பக்கத்து நாடுகளில் படையெடுத்த முஸ்லிம் தளபதிகளுக்கு ரஸ_லுள்ள ஹ_தைபியா உடன்படிக்கையில் ஏற்படுத்திய முன்மாதிரி தான் செயல் படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அப்படியென்ன கட்டுப்பாடு அந்த தளபதிகளுக்கு என்று கேட்கிறீர்களா? அன்னிய நாட்டில் படையெடுத்துப் போகும்போது எந்த பயிரினங்களையும,; நாசம் விளைவிக்கக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது, கால்நடைகள் சாப்பிடக்கூடிய வைக்கோல், புல்களை சேதப்படுத்தக்கூடாது, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆகியோருக்கு தீங்கிழைக்கக்கூடாது, அடுத்தவர் மதங்களையும், அவர்கள் வழிபடும் தலங்களுக்கும் சேதம் விளைவிக்காது அவர்களை போதனை மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் பாதைக்கு திருப்ப வேண்டும் எனபது தான்.
மெடீவல் காலம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வரலாற்று இடைப்பட்ட காலத்தில் ஒரு நாட்டின் மீது அடுத்த நாட்டு மன்னர் படையெடுத்துப் போகும் போது பல்வேறு அத்து மீறல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் மற்ற பகுதியிலும் நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஏன் இன்று கூட அதுபோன்ற அத்து மீறல்கள் பாலஸ்தீன இளைஞர்கள் மீதும், பாலஸ்தீனர்களுக்கு உதவிப்பொருள்கள் கப்பலில் கொண்டு சென்ற செஞ்சலுவை சங்கத்தினர் மீதும் இஸ்ரேயில் நாட்டினர் நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இங்கு கூட மக்கள் போராட்டம் என்ற போர்வையில் பஸ்களை-அரசு வாகனங்களை கொழுத்துவது, பசுமையான நிழல் தரும் மரங்களை வெட்டி போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்வது போன்ற செய்திகளை அன்றாடம் பத்திரிக்கை வாயிலாக அறிகிறோம். இந்திய நாட்டு போலிஸ் சட்டம் 1861ன்பிரிவு 30 மற்றும் 30ஏ படி வன்முறையானர்களை கலைக்க வேண்டுமென்றால் முதலில் மெகாபோனில் எச்சரிக்கையும், அதன்பின்பு கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் குழாய் மூலமும், அதன்பின்பு லத்தியினை உபபோகித்தும,; அதற்கும் கட்டுப்படாவிட்டால் துப்பாக்கி உபயோகித்து ரப்பர் குண்டுகளையும், அதற்கும் கட்டுப்படாவிட்டால் குறைந்தளவு துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறது.. ஆனால் தொலைக்காட்சியில் கல்லெறியும் காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது போலீஸார் திருப்பி கல்லெறியும் காட்சி எந்த சட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியவில்லை. அதுபோன்ற சில நிகழ்வுகள் வரலாற்று இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்டாலும் பாரம்பரியமிக்க புராதான பள்ளிவாசல் கட்டி முடித்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த பள்ளிவாசலினை பாபர் பிறந்தார் என்று நவீன நாகரீக காலத்தில் 1949 ஆம் ஆண்டு ராமர் சிலையினை பள்ளிவாசலில் வைத்து அதனை தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் ஏற்பட்டு அதன் உச்சக்கட்டமாக அந்தப்பள்ளியும் தரைமட்டமாக்கப் பட்டு மகிழ்ந்தவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர் பிற்காலத்தில் அதன் தலைவர்கள் நாட்டினை ஆளும் நிலைக்கு வந்தார்கள் என்பது ஆச்சரியமா தெரியவில்லையா?. ஏனென்றால் அதே திராவிடத்தலைவர்கள் அவர்கள் ஆட்சிக்கு மாரிமாரி ஆதரவு தெரிவித்து அந்த அமைச்சரவையிலும் இடம்பெற்றார்கள். அதன் விளைவுதான் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு மனிதக் கொலைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையினை சந்தேகத்திற்குள்ளாக்கியது என்றால் உண்மையில்லையா?
சென்ற வாரம்(செப்டம்பர்மூன்றாம் வாரம் 2010) திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையில் உள்ள கோயில் புராதாண சின்னங்கள் பாதுகாக்கும் தொல் பொருள் துறையின் கட்டுப்பாடில் இருக்கும் போதே புதிதாக ஒரு சிலையினை ஹிந்துத்துவா அமைப்பினர் வைத்து அதன் மூலம் ஒரு பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் மாநில அரசு அதிகாரிகளும், தொல் பொருள் துறையும் தலையிட்டு அந்தச் சிலையினை அகற்றி அமைதி ஏற்படுத்தவில்லையா? அது போன்று 1949ஆம் ஆண்டு மத்திய அரசும் மாநில அரசும் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் ராமர் சிலை வைத்தபோது அதனை எடுத்திருந்தால் 50ஆண்டு இந்து-முஸ்லிம் கசப்புணர்ச்சி ஏற்பட்டிருக்குமா? அல்லது பாபரி மஸ்ஜித் தான் இடிக்கப்பட்டு மதசார்பற்ற நாடு என்ற கொள்கைக்கு களங்கம் சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்குமா? அதே போன்று தான் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கண்கள் கலங்க ஏற்பட்ட மனித கொலைகளில் 2000பேருக்கு மேல் உயரிழந்ததும் அன்றைய மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் பிற்காலத்தில் அரசியல் வாதிகளான அமித்ஷா மற்றும் உயர்காவல் துறை அதிகாரிகள் கூட்டணியில் சொகுராபுதீன், அவர் மனைவி, சொகுராபுதீன் நண்பர் பிரஜாபதி, இசாரத் ஜஹான் போன்றவர்களின் உயிர்கள் போலி என்கவுண்டரில் பறியோயிருக்குமா? போலி என்கவுண்டரில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதால் தானே முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு நியாயமான எஸ்.ஐ.டி விசாரணை நடந்து கொண்டுள்ளது. அந்த குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சர் அமித் சாவினை பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை பிரதமர் அத்வானி ஜெயில் சென்று ஆறுதல் கூறியது தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. அதேபோல மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ள பெண்சாமியார் பிராக்யா சிங்கை பாபரி மஸ்ஜித் இடிப்பின் போது மகிழ்ச்சியில் திளைத்த உமாபாரதி அவருக்கு பாராளுமன்றத்தில் போட்டியிட இடம் ஒதுக்குவதாக அவரை சந்தித்த பின்னர் அறிவித்தார். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் கைதான இளைஞர்களை முஸ்லிம் அரசியல் வாதிகள் எவரும் 1998ஆம் ஆண்டு சிறையில் சென்று பார்க்காததின் மூலம்;;; நாங்கள் நடுநிலையாளர்கள் என்று உணர்த்தவில்லையா?
பள்ளிவாசலினை இடித்தக் கட்சிக்காரர்கள் ஆட்சி நடந்தபோது பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தினை முஸ்லிம்கள் தானாக முன்வந்து இடித்தவர்களிடம் தாரை வார்க்க வேண்டுமென்ற ஒரு சமாதான கூட்டம் காஞ்சி சங்கரராமன் புகழ் ஆச்சாரியார் தலைமையில் புதுடெல்லியில் நடந்தது. அனைவரும் அறிவர். அதற்கு முஸ்லிம் அமைப்பினர் ஒத்துக் கொள்ளவில்லையென்று கோபமாக ஆச்சாரியார் வெளிநடப்பு செய்ததினை தொலைக்காட்சிகள் வெளியிட்டன என்பதினையும் அறிவர். அப்படியிருந்தும் அந்த ஆச்சாரியாருக்கு மதநல்லினக்கத்திற்காக டி.நகர் வரும்போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு முஸ்லிம் தங்கவியாபரிகள் அளித்து விளம்பரப்படுத்தியதும் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் வந்தது முஸ்லிம்கள் எவருக்கும் எதிரியாக இல்லை என்பதினையே குறிக்கவில்லையா?.. 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு 24.9.2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கட உள்ளது என்று போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பல அடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டு, கலவரம் நடந்தால் அதனை அடக்க லத்திகள் மட்டும் ரூபாய் 72 கோடிகளுக்கு வாங்கப்பட்டதாகவும் ஆனால் அந்த தீர்ப்பு தள்ளிப்போட்டது மூலம் அரசுக்கு வீணான செலவுதான,; என்றைக்குச் சொன்னாலும் தீர்ப்பு தீர்ப்புதான், அதனை தள்ளிப்போடுவதின் மூலம் இன்னும் ஆவலை தூண்டிவிட்டு அரசுக்கு வீணான செலவு தான் என்றும், இஸ்லாமியர்களும், இந்து மக்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம் ஆனால் சில அரசியல் தலைவர்கள் எங்களது ஒற்றுமையினை குலைக்கப் பார்க்கிறார் என்றும் 24.9.2010ந் தேதியிட்ட மாலைமலர் வாசகர்கள் கூறுவதாக பக்கம் 7ல் வெளிடப்பட்டுள்ளது.. இது எதனை பிரதிபலிக்கிறது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டம் ஓர் இருட்டறையல்ல. மதசார்பற்ற கொள்கைகொண்ட இந்தியாவின் புகழை உயர்த்த பாபரி மஸ்ஜித் தீர்ப்பு இருக்குமென்று நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள். பாபரி மஸ்ஜித்துக்கு வைத்த சீலினை உடைத்து ராமர் சிலை வழிபாட்டிற்கு வித்திட்ட மாவட்ட நீதபதி பிற்காலத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் நீதியின் மீது முஸ்லிம்களுக்கு சந்தேகமிருந்தாலும் எல்லோரையும் ஒரே தராசில் இடைபோடாது நடப்பவை நாட்டிற்கு நல்லவையாக இருக்கும், அதுவும் ததிகனத்தம் போட்டு நடக்கும் காமன் வெல்த் நாடுகளின் தடகளைப் போட்டிற்கு எந்த ஊறும் வராது தீர்ப்பு அமைய வேண்டுமென்பதால்கூட தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம். ஆகவே எல்லோரும் எதிர்பார்க்கிற நீதி இருட்டறையில் நிச்சயம் மறைந்து விடாது என நம்பி அமைதி பெறுவோம்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, September 25, 2010
விடுகதை இதற்கு..
விடுகதை இதற்கு..
எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!
கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!
பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!
லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!
விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!
கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!
பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!
லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!
விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
Thursday, September 23, 2010
வருமானம் துடைத்துவிட்டுச் செல்லும் .
வருமானம் துடைத்துவிட்டுச் செல்லும் .
விக்கித்து நிற்போம்
திரும்பும் இடமெல்லாம்
திக்கற்று இருப்போம்!
விட்டு வந்த சொந்தங்களை
சுமந்து வந்துள்ளேன்
நினைவுகளாக!
குழுக் குளு அறையானாலும்
குறும்புச் செய்யும்
மூட்டையானாலும்
இறுக்கமாய் இருப்பேன்;
எப்போது
நான் உறவுகளுடன்
நெருக்கமாய் இருப்பேன்!
ஓய்வான நேரத்திலும்
சாய்வாக இருந்து
உறவுகளை நினைப்பேன்;
அவ்வப்போது குரலைக் கனைப்பேன்;
தொண்டையில் சிக்கிய எச்சிலுக்காக!
ஆனாலும்
வருமானம் என் கண்ணீரை
துடைத்துவிட்டுச் செல்லும்
விரலாக!
அதனாலே இங்கு இருக்கிறேன்
உரலாக!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
விக்கித்து நிற்போம்
திரும்பும் இடமெல்லாம்
திக்கற்று இருப்போம்!
விட்டு வந்த சொந்தங்களை
சுமந்து வந்துள்ளேன்
நினைவுகளாக!
குழுக் குளு அறையானாலும்
குறும்புச் செய்யும்
மூட்டையானாலும்
இறுக்கமாய் இருப்பேன்;
எப்போது
நான் உறவுகளுடன்
நெருக்கமாய் இருப்பேன்!
ஓய்வான நேரத்திலும்
சாய்வாக இருந்து
உறவுகளை நினைப்பேன்;
அவ்வப்போது குரலைக் கனைப்பேன்;
தொண்டையில் சிக்கிய எச்சிலுக்காக!
ஆனாலும்
வருமானம் என் கண்ணீரை
துடைத்துவிட்டுச் செல்லும்
விரலாக!
அதனாலே இங்கு இருக்கிறேன்
உரலாக!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
சுதந்திர இந்தியாவில் நாங்கள்..
சுதந்திர இந்தியாவில் நாங்கள்..
மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!
குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!
விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!
மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;
காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!
ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!
பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!
குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!
விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!
மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;
காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!
ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!
பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்
ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!
கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!
கந்தையானாலும்
கசக்கி கட்டு என்றார்கள்;
கசக்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!
கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திர்க்காக;
கனவுகளை தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!
உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!
ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
கதவோடு!
உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!
இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!
- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!
கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!
கந்தையானாலும்
கசக்கி கட்டு என்றார்கள்;
கசக்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!
கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திர்க்காக;
கனவுகளை தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!
உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!
ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
கதவோடு!
உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!
இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!
- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
பாவப்பட்ட காஷ்மீரிகள்..
பாவப்பட்ட காஷ்மீரிகள்..
குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!
பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!
பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
Wednesday, September 22, 2010
அறிவுப் புரட்சி ஓங்குக !
அறிவுப் புரட்சி ஓங்குக !
பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )
அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் . அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள். ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது. அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .
இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸலிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?
விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர்; கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர்; ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம்; மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.
உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும்; ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன; அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம்; அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன ; பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.
கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது; கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை ; கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்; உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .
உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது; இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறத;. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது; நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம். 10 சதவிகிதம் எனக் கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !
நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள்; தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள்; ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.
ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர், உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிகை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் ;முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர். இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே ;பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை; வங்கி போன்ற துறைப் பணிகளிலே 2 . .2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர்; அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனச் சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.
கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ;ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும்; பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர்; பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும்; கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தேவையில்லையெனக் கூறிவிட்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது, சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது; சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறிக் களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும்; வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.
அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.
மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம். அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர். மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர். பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும். அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .
உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும். இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி....
ஒளிரட்டும் சமுதாயம்...
கூடட்டும் இறையருள்....
( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபை.
imct.vkr@gmail.com
www.imct.50g.com
பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )
அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் . அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள். ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது. அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .
இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸலிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?
விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர்; கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர்; ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம்; மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.
உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும்; ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன; அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம்; அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன ; பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.
கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது; கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை ; கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்; உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .
உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது; இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறத;. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது; நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம். 10 சதவிகிதம் எனக் கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !
நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள்; தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள்; ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.
ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர், உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிகை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் ;முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர். இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே ;பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை; வங்கி போன்ற துறைப் பணிகளிலே 2 . .2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர்; அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனச் சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.
கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ;ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும்; பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர்; பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும்; கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தேவையில்லையெனக் கூறிவிட்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது, சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது; சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறிக் களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும்; வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.
அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.
மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம். அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர். மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர். பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும். அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .
உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும். இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி....
ஒளிரட்டும் சமுதாயம்...
கூடட்டும் இறையருள்....
( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபை.
imct.vkr@gmail.com
www.imct.50g.com
பாவப்பட்ட காஷ்மீரிகள்..
பாவப்பட்ட காஷ்மீரிகள்..
குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!
பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!
பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
Monday, September 20, 2010
கிழட்டு குழியானாலும்..
கிழட்டு குழியானாலும்..
இருப்பேன் என்றும்
இளமையாக மனதளவில்;
உன்னோடு இருக்கும் போது!
வாயில் பொக்கையும்
தலையில் வழுக்கையும்
வந்தாலும் வரவேண்டாம்
நமக்குள் பிரிவு!
தட்டுத்தடுமாறி நடக்கையிலே
நடைக்குச்சியாய் நீ இருக்க
தடையேதுமில்லை என
”விடை”க் கொடுக்க வேண்டும்;
குச்சிக்கு விடைக்கொடுக்கவேண்டும்!
கிழட்டு குழியானாலும்
நமட்டுச் சிரிப்புடன்
கன்னத்தில் குழியென்று
சொல்லி சிரிக்கவேண்டும்!
வாலிப வயதில்
வாழ்ந்துவிட்டோம்
தனித்தனியாக;
இருக்கும் காலமாவது
இணைந்திருபோம்
ஒருவருக்கொருவராக!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
இருப்பேன் என்றும்
இளமையாக மனதளவில்;
உன்னோடு இருக்கும் போது!
வாயில் பொக்கையும்
தலையில் வழுக்கையும்
வந்தாலும் வரவேண்டாம்
நமக்குள் பிரிவு!
தட்டுத்தடுமாறி நடக்கையிலே
நடைக்குச்சியாய் நீ இருக்க
தடையேதுமில்லை என
”விடை”க் கொடுக்க வேண்டும்;
குச்சிக்கு விடைக்கொடுக்கவேண்டும்!
கிழட்டு குழியானாலும்
நமட்டுச் சிரிப்புடன்
கன்னத்தில் குழியென்று
சொல்லி சிரிக்கவேண்டும்!
வாலிப வயதில்
வாழ்ந்துவிட்டோம்
தனித்தனியாக;
இருக்கும் காலமாவது
இணைந்திருபோம்
ஒருவருக்கொருவராக!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
தாகத்தைத் தணிக்க..
தாகத்தைத் தணிக்க..
நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!
வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!
சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!
படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!
நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!
வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!
சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!
படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!
நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
இப்படிக்கு உன் கணவன்.
இப்படிக்கு உன் கணவன்.
அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!
பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!
என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!
கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!
காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!
துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!
துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!
பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!
இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!
பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!
என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!
கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!
காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!
துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!
துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!
பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!
இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
விடைக்கொடுக்க முடியாமல்..
விடைக்கொடுக்க முடியாமல்..
அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல் நான்!
வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!
உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!
வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!
இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!
- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
மறைந்துவிடுமென்று!
திருத்திக் கொள்ளவும்..
இஸ்லாமிய சகோதரன்
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.கம
அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல் நான்!
வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!
உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!
வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!
இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!
- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
மறைந்துவிடுமென்று!
திருத்திக் கொள்ளவும்..
இஸ்லாமிய சகோதரன்
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.கம
Saturday, September 18, 2010
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.
உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் – வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.
இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்.
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர் திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.
காதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீது முகம்மது ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
முகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
கடையநல்லூர் எஸ.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.
தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர் 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் n~ரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.
தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.
வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவ+ர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.
செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்புறம் ஜெயிலில் வாடியவர்.
திருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.
மேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மரு~;வாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்Nலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது.
செய்குத்தம்பி பாவலரால் ”கோவை” பாடப்பெற்ற இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார் கிலாபத் போரில் தீவிரங்காட்டியவர்.
1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளி;குளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.
முடிவுரை
இந்தத் தியாகிகள் வெளிச்சத்திற்கு வந்தவர்கள். திருவண்ணா மலையில் தந்தை பெரியார் தலைமையில் 15-11-1924ல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் என்று 21-11-1924 நவசக்தி இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இருந்த முதல் பெயர் யாகூப் ஹஸன். அவரைத் தொடர்ந்தே இராஜாஜி, எஸ்.சீனிவாச ஐயங்கார்இ டாக்டர். புp.வரதராஜலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மற்றும் பலரின் பெயர்களும் இருந்தன. ஆம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றவர்கள் தமிழக முஸ்லீம்கள்.
16-11-1924ல் இரண்டாம் நாள் மாநாட்டில் நாமக்கள் உஸ்மான் சாகிப் தீர்மானம் கொண்டு வந்தார் என ”திரு வி.க. வாழ்க்கை குறிப்புகள்” பக். 331ல் உள்ளது.
இவர்கள் யார்? இவர்கள் ஆற்றிய பணிகள் என்ன? இவர்களைப் போல் இன்னும் எத்தனை பேர்? – இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள், இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்.
www.kadayanallur.org
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.
உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் – வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.
இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்.
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர் திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.
காதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீது முகம்மது ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
முகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
கடையநல்லூர் எஸ.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.
தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர் 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் n~ரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.
தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.
வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவ+ர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.
செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்புறம் ஜெயிலில் வாடியவர்.
திருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.
மேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மரு~;வாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்Nலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது.
செய்குத்தம்பி பாவலரால் ”கோவை” பாடப்பெற்ற இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார் கிலாபத் போரில் தீவிரங்காட்டியவர்.
1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளி;குளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.
முடிவுரை
இந்தத் தியாகிகள் வெளிச்சத்திற்கு வந்தவர்கள். திருவண்ணா மலையில் தந்தை பெரியார் தலைமையில் 15-11-1924ல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் என்று 21-11-1924 நவசக்தி இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இருந்த முதல் பெயர் யாகூப் ஹஸன். அவரைத் தொடர்ந்தே இராஜாஜி, எஸ்.சீனிவாச ஐயங்கார்இ டாக்டர். புp.வரதராஜலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மற்றும் பலரின் பெயர்களும் இருந்தன. ஆம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றவர்கள் தமிழக முஸ்லீம்கள்.
16-11-1924ல் இரண்டாம் நாள் மாநாட்டில் நாமக்கள் உஸ்மான் சாகிப் தீர்மானம் கொண்டு வந்தார் என ”திரு வி.க. வாழ்க்கை குறிப்புகள்” பக். 331ல் உள்ளது.
இவர்கள் யார்? இவர்கள் ஆற்றிய பணிகள் என்ன? இவர்களைப் போல் இன்னும் எத்தனை பேர்? – இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள், இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்.
www.kadayanallur.org
இல்லாத உணவின்..
இல்லாத உணவின்..
எதை உண்ணவும் வழியில்லாமல்
முடங்கிப் போய் நானிருக்க;
எனைத் திங்க நீ வந்தாயோ!
மனம் விட்டு அழவும்
திடம் இல்லாமல் நான்;
உணவாக வேண்டுமா நான் உனக்கு!
என்னைப் படம் எடுத்தவனுக்கோ
பாராட்டுப்பத்திரம் தத்ரூபக் காட்சி என்று;
ஒட்டிப்போன வயிருடன்
ஒரமாய் சிரித்தேன்;
உன் உணவுக்கும் நான்தானா
கழுகுக்குப் பிறகு..
எட்டி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
தொட்டு விட்டுச் செல்லும்
கண்ணீர் தரையைத் தட்டிவிட்டுச் செல்லும்!
இல்லாத உணவின் மகத்துவம்
தள்ளாடும் எனக்குத்தான் தெரியும்;
விரயம் ஆக்காதீர் உணவை!
எங்கே வலி எனத்தெரியாமல்
வலிக் கொடுக்கும்;உயிர் எடுக்கும்;
பசிக்கு உணவு இல்லையேல்
உணவே நாம்தான் பசிக்கு..
உணவுக்கொடுத்து
உயிர்க்கொடுங்கள்;
உணர்வைக் கொடுத்து
உயிர்வதையைத் தடுங்கள்!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
எதை உண்ணவும் வழியில்லாமல்
முடங்கிப் போய் நானிருக்க;
எனைத் திங்க நீ வந்தாயோ!
மனம் விட்டு அழவும்
திடம் இல்லாமல் நான்;
உணவாக வேண்டுமா நான் உனக்கு!
என்னைப் படம் எடுத்தவனுக்கோ
பாராட்டுப்பத்திரம் தத்ரூபக் காட்சி என்று;
ஒட்டிப்போன வயிருடன்
ஒரமாய் சிரித்தேன்;
உன் உணவுக்கும் நான்தானா
கழுகுக்குப் பிறகு..
எட்டி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
தொட்டு விட்டுச் செல்லும்
கண்ணீர் தரையைத் தட்டிவிட்டுச் செல்லும்!
இல்லாத உணவின் மகத்துவம்
தள்ளாடும் எனக்குத்தான் தெரியும்;
விரயம் ஆக்காதீர் உணவை!
எங்கே வலி எனத்தெரியாமல்
வலிக் கொடுக்கும்;உயிர் எடுக்கும்;
பசிக்கு உணவு இல்லையேல்
உணவே நாம்தான் பசிக்கு..
உணவுக்கொடுத்து
உயிர்க்கொடுங்கள்;
உணர்வைக் கொடுத்து
உயிர்வதையைத் தடுங்கள்!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
பாபரி மஸ்ஜித்
பாபரி மஸ்ஜித்..
இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!
தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!
எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6’யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!
அமைதியான அயோத்தியை அய்யோ ”தீ”யாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!
தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!
இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!
இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blospot.com
--
இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!
தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!
எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6’யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!
அமைதியான அயோத்தியை அய்யோ ”தீ”யாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!
தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!
இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!
இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blospot.com
--
சொல்லி சொல்லி வளர்ப்போம்.
சொல்லி சொல்லி வளர்ப்போம்.
சில நேரம்
சிணுங்கும் என் கைப்பேசி
உன் அழைப்புக்காக;
உள்ளுக்குள்ளே உரைப்பேன்
அன்புத்தொல்லை என்று!
சுருக்கென்ற வார்த்தைக்கு
நறுக்கென்று கடித்துக்கொள்வேன்
அன்பு எப்படித் தொல்லையாகும் என்று!
காயாத கனவுகளுடன்
காலாற நடைப்போடும் நினைவுகளுடன்
கால்மேல் கால்போட்டு கட்டிலில்!
புதுஜோடி என்ற
பட்டத்துடன் இப்படி
விட்டத்தைப் பார்த்தப்படி இங்கே நான்!
மணிக்கணக்கில் பேசினாலும்
நிமிடமாய் இருக்கும்;
”மணி”யைப் பற்றிப் பேசினால் மட்டும்
நெருடாலாய் இருக்கும்!
என்னைப் போன்ற தோழர்கள்
ஏராளம் இங்கே;
ஏங்கிக்கொண்டே இருக்கும்
எப்போதும் செல்வோம் அங்கே!
இனி தலைமுறைக்கு
சொல்லி சொல்லி வளர்ப்போம்
கல்வியைபற்றி;
சொல்லவே வேண்டும் கல்விக்கு முன்
வெளிநாட்டைப்பற்றி!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
சில நேரம்
சிணுங்கும் என் கைப்பேசி
உன் அழைப்புக்காக;
உள்ளுக்குள்ளே உரைப்பேன்
அன்புத்தொல்லை என்று!
சுருக்கென்ற வார்த்தைக்கு
நறுக்கென்று கடித்துக்கொள்வேன்
அன்பு எப்படித் தொல்லையாகும் என்று!
காயாத கனவுகளுடன்
காலாற நடைப்போடும் நினைவுகளுடன்
கால்மேல் கால்போட்டு கட்டிலில்!
புதுஜோடி என்ற
பட்டத்துடன் இப்படி
விட்டத்தைப் பார்த்தப்படி இங்கே நான்!
மணிக்கணக்கில் பேசினாலும்
நிமிடமாய் இருக்கும்;
”மணி”யைப் பற்றிப் பேசினால் மட்டும்
நெருடாலாய் இருக்கும்!
என்னைப் போன்ற தோழர்கள்
ஏராளம் இங்கே;
ஏங்கிக்கொண்டே இருக்கும்
எப்போதும் செல்வோம் அங்கே!
இனி தலைமுறைக்கு
சொல்லி சொல்லி வளர்ப்போம்
கல்வியைபற்றி;
சொல்லவே வேண்டும் கல்விக்கு முன்
வெளிநாட்டைப்பற்றி!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
மணக்கூலி...
மணக்கூலி...
யாசகம் கேட்க
வாசகத்துடன் என் வாசலுக்கு;
படித்த மாப்பிள்ளை என்று;
அடையாளத்துடன் அறிமுக விழா
உன் புகைப்படத்துடன்!
உன்னை விலைப்பேசி
உறவைக் கொல்லக் கைக்கூலி;
மணாளியாய் வந்து
மசக்கையாவதற்கா மணக்கூலி!
எல்லாம் துறந்து
உன்னை மணந்து
உயிராய் வரும் என்னிடமே
தட்சணையா!
காலத்திற்கும் சேர்ந்து
கணவன் நீ சோர்ந்தால்
மனதிற்கு மருந்தாய்
இல்லறத்திற்குக் கனிவாய்
இருப்பதற்கா இந்தத் தினக்கூலி!
உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய
என் பெற்றோருக்கு அபராதமா;
உனக்கான தலைமுறையை
தருவதற்கான பரிகாரமா!
மணம் முடிக்க
பணம் பறிக்கும்
உனக்குப் பெயர் மாப்பிள்ளையா
கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்
நீயெல்லாம் ஆண்பிள்ளையா!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
யாசகம் கேட்க
வாசகத்துடன் என் வாசலுக்கு;
படித்த மாப்பிள்ளை என்று;
அடையாளத்துடன் அறிமுக விழா
உன் புகைப்படத்துடன்!
உன்னை விலைப்பேசி
உறவைக் கொல்லக் கைக்கூலி;
மணாளியாய் வந்து
மசக்கையாவதற்கா மணக்கூலி!
எல்லாம் துறந்து
உன்னை மணந்து
உயிராய் வரும் என்னிடமே
தட்சணையா!
காலத்திற்கும் சேர்ந்து
கணவன் நீ சோர்ந்தால்
மனதிற்கு மருந்தாய்
இல்லறத்திற்குக் கனிவாய்
இருப்பதற்கா இந்தத் தினக்கூலி!
உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய
என் பெற்றோருக்கு அபராதமா;
உனக்கான தலைமுறையை
தருவதற்கான பரிகாரமா!
மணம் முடிக்க
பணம் பறிக்கும்
உனக்குப் பெயர் மாப்பிள்ளையா
கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்
நீயெல்லாம் ஆண்பிள்ளையா!
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--
Wednesday, September 15, 2010
வருந்துகிறோம்....
வருந்துகிறோம்....
பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின்
மாநிலத் துணைத் தலைவரும்,
தமிழ் நாடு முஸ்லிம் இயக்கங்களின்
கூட்டமைப்பின் தலைவருமான
அல்ஹாஜ் பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர்
அவர்களின் அருமைத் துணைவியார் இன்று
வபாத்தானார்களென்ற செய்தியை மிகுந்த
மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்....
(இன்னாலில்லாஹி வ இன்னா....)
அன்னாரது மறைவால் வாடும் அல்ஹாஜ்
பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர் அவர்களுக்கும்
அவர்களது குடும்பத்தாருக்கும் தமிழ் நாடு
முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பாகவும்
தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த வேதனையைத்
தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்கப் பற்று
மிகுந்தும், துணைவருக்கு இல்லற வாழ்விலும்
பொது வாழ்விலும் உறுதுணை புரிந்தும்,
விருந்தோம்பல் பண்பில் சிறந்தும்,
நற்பண்புகளால் மலர்ந்தும் வாழ்ந்த
அன்னையார் அவர்கள் இறையருளால்
மறுமை நல் சுவன வாழ்வு பெற்றிலங்கிட
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்...
சமுதாயப் பெருமக்கள் அனைவரும்
மறைந்த அன்னாருக்காகத் துஆ
செய்ய விழைகிறோம்...
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு.
(சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்)
பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின்
மாநிலத் துணைத் தலைவரும்,
தமிழ் நாடு முஸ்லிம் இயக்கங்களின்
கூட்டமைப்பின் தலைவருமான
அல்ஹாஜ் பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர்
அவர்களின் அருமைத் துணைவியார் இன்று
வபாத்தானார்களென்ற செய்தியை மிகுந்த
மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்....
(இன்னாலில்லாஹி வ இன்னா....)
அன்னாரது மறைவால் வாடும் அல்ஹாஜ்
பி.எஸ்.எம்.செய்யிது அப்துல் காதிர் அவர்களுக்கும்
அவர்களது குடும்பத்தாருக்கும் தமிழ் நாடு
முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பாகவும்
தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த வேதனையைத்
தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்கப் பற்று
மிகுந்தும், துணைவருக்கு இல்லற வாழ்விலும்
பொது வாழ்விலும் உறுதுணை புரிந்தும்,
விருந்தோம்பல் பண்பில் சிறந்தும்,
நற்பண்புகளால் மலர்ந்தும் வாழ்ந்த
அன்னையார் அவர்கள் இறையருளால்
மறுமை நல் சுவன வாழ்வு பெற்றிலங்கிட
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்...
சமுதாயப் பெருமக்கள் அனைவரும்
மறைந்த அன்னாருக்காகத் துஆ
செய்ய விழைகிறோம்...
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு.
(சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்)
சில பயனுள்ள டிப்ஸ்கள்......................
சில பயனுள்ள டிப்ஸ்கள்......................
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும்
அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்
கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்
இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும்
கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு
அரைத்தால் ருசியாக இருக்கும்.
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்
ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல்
குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்
நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி
பளிச்சென்று இருக்கும்
மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள்.நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும்
அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்
கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்
இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும்
கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு
அரைத்தால் ருசியாக இருக்கும்.
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்
ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல்
குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்
நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி
பளிச்சென்று இருக்கும்
மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள்.நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
ஓட்டுவங்கி..
ஓட்டுவங்கி..
கொல்லாமல் கொல்லும்
கல்லாதக் கல்வி;
கற்றாலும் காலைவாரிவிடும்
கவர்ன்மெண்டின் சதி!
முக்கால்வாசி சமுதாயம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே;
மூட்டு வலியானாலும் இப்படி
மூட்டைத் தூக்குகிறோம் மேலே!
சுதந்திர நாட்டில்
சிறைவாசியாக நாங்கள்;
அடிப்படை வசதியே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
தேர்தலை கணித்து
குடிமகன் என்னை நினைத்து
அறிக்கை கொடுப்பாய் அவசரமாய்
ஒதிக்கீடு உண்டு உனக்கு;
எல்லாம் முடிந்து மீண்டும் உணர்வோம்
ஓதிக்கப்பட்டுள்ளோம் என்று!
ரமலானோடு ரமலானாக
வந்துவிடுவாய் கஞ்சிக் குடிக்க;
ஓட்டுக்கும் மட்டும் வங்கியாக
போட்டதுக்குப் பின் நாங்கள் தொங்கியாகும் நிலை!
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
கொல்லாமல் கொல்லும்
கல்லாதக் கல்வி;
கற்றாலும் காலைவாரிவிடும்
கவர்ன்மெண்டின் சதி!
முக்கால்வாசி சமுதாயம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே;
மூட்டு வலியானாலும் இப்படி
மூட்டைத் தூக்குகிறோம் மேலே!
சுதந்திர நாட்டில்
சிறைவாசியாக நாங்கள்;
அடிப்படை வசதியே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
தேர்தலை கணித்து
குடிமகன் என்னை நினைத்து
அறிக்கை கொடுப்பாய் அவசரமாய்
ஒதிக்கீடு உண்டு உனக்கு;
எல்லாம் முடிந்து மீண்டும் உணர்வோம்
ஓதிக்கப்பட்டுள்ளோம் என்று!
ரமலானோடு ரமலானாக
வந்துவிடுவாய் கஞ்சிக் குடிக்க;
ஓட்டுக்கும் மட்டும் வங்கியாக
போட்டதுக்குப் பின் நாங்கள் தொங்கியாகும் நிலை!
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
Subscribe to:
Posts (Atom)