எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,
உங்கள் சமூகப் பணி மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.
கடந்த பல ஆண்டுகளாக வெளி நாட்டில் பணி புரிந்து, வாழ்ந்து வரும் J. Iqbal Ahmed குவைத்திலிருந்து விடுக்கும் கோரிக்கை:
ஐயா, லட்சக் கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் (வீட்டு டிரைவர், வீட்டு வேலை, கட்டிட வேலை) சொற்ப வருவாய் பெற்று, பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 22 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரக வாசலில் வைத்து மயிலாடுதுறையைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரை அவரது குவைத் முதலாளி ( இரும்பு கம்பியால்) அடித்து, போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார். இந்த செய்தி அரப் டைம்ஸ் என்ற நாளிதழில் (23.4.2010) வந்துள்ளது. அவரது நிலை இன்று வரை சரியாகத் தெரியவில்லை. இதை, போல் ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த oடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிட, அவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.(கேரளா மாநில அரசு வெளிநாடு வாழ் கேரள மக்களுக்காக தனி அமைச்சகம் அமைத்து பல ஆண்டுகளாக பணி ஆற்றி வருகிறது)
இதை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சரிடம் Oப்புதல் பெற்று தாங்கள் அறிவிக்க வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.
DeputyCM web link
இப்படிக்கு, வெளிநாடு வாழ் தமிழன்.
J. Iqbal Ahmed
Kuwait
Mobile +965 97823446
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, June 25, 2010
நம் மொழி தமிழ்!
நம் மொழி தமிழ்!
-சுதா அறிவழகன்
திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.
இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.
இன்று தனிச் சிறப்புடன் கூடிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.
தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.
தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.
செம்மொழித் தமிழ்...
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.
செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.
செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.
செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.
செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.
தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.
தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.
பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.
தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.
தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...
தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.
கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.
பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்
பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.
அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.
தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.
அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.
இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
தமிழின் பிற சிறப்புகள்
- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.
- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.
- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.
- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.
- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.
- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.
இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, தமிழக அரசு சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.
ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.
தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம், அக மகிழ்வோம்.
Thanks: Thatstamil.com
-சுதா அறிவழகன்
திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.
இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.
இன்று தனிச் சிறப்புடன் கூடிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.
தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.
தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.
செம்மொழித் தமிழ்...
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.
செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.
செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.
செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.
செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.
தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.
தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.
பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.
தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.
தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...
தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.
கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.
பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்
பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.
அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.
தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.
அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.
இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
தமிழின் பிற சிறப்புகள்
- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.
- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.
- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.
- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.
- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.
- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.
இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, தமிழக அரசு சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.
ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.
தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம், அக மகிழ்வோம்.
Thanks: Thatstamil.com
HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!
HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!
While your efforts and work outside the office are essential to the performance and operation of the company, your wellbeing is equally vital, hence, we would highly recommend taking the necessary precautions such as
· Drinking plenty of water
· not to remain under direct sun exposure, try to remain in the shade
· keep your cars well ventilated and aired
· take extra percussions with elders and children
· Do not leave your cell phone or other electronic items in the car exposed to the heat as it is easily flammable
· Please be sure to protect yourself with sunscreen.
· Dress in loose light clothing and avoid tight, air restricting garments.
· wear your sunglasses outside the office in day light to protect your eyes tissue which can be easily damaged by such a heat and sun.
· Try to leave an open bottle of water in your car if you leave it in an un-shaded car park as the evaporated water will counter act the heat impact.
· Do not leave perfumes or lighters in the car as they are flammable.
· Do no leave children or pets in locked unventilated areas such as cars (heat will kill them).
· Do not walk for long times directly under the sun (i.e. wear hat or umbrella).
While your efforts and work outside the office are essential to the performance and operation of the company, your wellbeing is equally vital, hence, we would highly recommend taking the necessary precautions such as
· Drinking plenty of water
· not to remain under direct sun exposure, try to remain in the shade
· keep your cars well ventilated and aired
· take extra percussions with elders and children
· Do not leave your cell phone or other electronic items in the car exposed to the heat as it is easily flammable
· Please be sure to protect yourself with sunscreen.
· Dress in loose light clothing and avoid tight, air restricting garments.
· wear your sunglasses outside the office in day light to protect your eyes tissue which can be easily damaged by such a heat and sun.
· Try to leave an open bottle of water in your car if you leave it in an un-shaded car park as the evaporated water will counter act the heat impact.
· Do not leave perfumes or lighters in the car as they are flammable.
· Do no leave children or pets in locked unventilated areas such as cars (heat will kill them).
· Do not walk for long times directly under the sun (i.e. wear hat or umbrella).
செம்மொழிப் பாடல் !!!
செம்மொழிப் பாடல் !!!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.
திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு
திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு.: சிவதாணுப்பிள்ளை
கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:
தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.
பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.
தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:
தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.
பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.
தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமீரகத்தின் தகவல் களஞ்சியம்
அமீரகத்தின் தகவல் களஞ்சியம்
http://www.vkalathur.com/muduvai.php
ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து அந்நிய நாட்டில் வாழ்கின்றோம். நாம் இங்கு இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க இந்தியாவையேச் சுற்றி சுற்றி வருவது நிதர்சனம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சொந்தங்களிடம் சுகம் விசாரிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஊரில் நடப்பவற்றை... நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? பேப்பர் படித்துக் கொண்டே நண்பர்களுடன் விவாதித்த விவாதித்த விஷயங்கள் எல்லாம் இப்போது எந்த நிலையில் இரக்கின்றன? இவற்றையெல்லாம் இங்கிருந்து கொண்டு எங்கே கிடைக்கும் என்ற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும். வளைகுடாவில் வாழும் தமிழர்களின் இந்த வாட்டத்தைப் போக்குவதற்காகவே தமிழ்சசேவை புரிந்துவருகிறார் காஹிலா என்கிற முதுவை ஹிதாயத்துல்லா.
இவர் தமிழ் உள்ளங்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த முக்கியச் செய்திகளைத் திரட்டி பத்திரிக்கைகள் மூலம் நம்மைப் படிக்க வைப்பவர், தானாக முன்வந்த பத்திரி்க்கைகளுக்குச் செய்தி தரும் தேனீயான முதுவை ஹிதாயத்துல்லாவைப்பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்வொமா?
அமைதி தவழும் சிரித்த முகம் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு, அமீரகத்தில் வாழும் நலிந்த தமிழ் மக்களுக்குத் தன்னுடன் தொடர்கொள்ள தமிழ் அமைப்புகள் மூலம் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவி செய்யும் சேவகர், எதையும் இலகுவாக மென்மையாக பேசி முடிக்கும் தன்மை, ஆடம்பரமில்லாத தோற்றம் இத்தனையும் சேர்ந்த மொத்தம் தான் முதுவை ஹிதயாத்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுவை என்னும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் M.Sc. படித்த திருச்சி வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியி்ல் வினாடி வினா போன்ற நிகழச்சிகளில் பங்கேற்றும், ஏற்று நடத்தியும் சிறப்பித்தவர், தம் பள்ளி, கல்லூரிகாலங்களில் பொத அறிவுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளார். பொத அறிவுச்செய்திகளை விரல் நுனியிலும் நாநுனியிலும் சேமித்து வைத்திருக்கும் தகவல் வங்கி இவர்.
மேலும் .......http://www.vkalathur.com/muduvai.php
http://www.vkalathur.com/muduvai.php
ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து அந்நிய நாட்டில் வாழ்கின்றோம். நாம் இங்கு இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க இந்தியாவையேச் சுற்றி சுற்றி வருவது நிதர்சனம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சொந்தங்களிடம் சுகம் விசாரிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஊரில் நடப்பவற்றை... நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? பேப்பர் படித்துக் கொண்டே நண்பர்களுடன் விவாதித்த விவாதித்த விஷயங்கள் எல்லாம் இப்போது எந்த நிலையில் இரக்கின்றன? இவற்றையெல்லாம் இங்கிருந்து கொண்டு எங்கே கிடைக்கும் என்ற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும். வளைகுடாவில் வாழும் தமிழர்களின் இந்த வாட்டத்தைப் போக்குவதற்காகவே தமிழ்சசேவை புரிந்துவருகிறார் காஹிலா என்கிற முதுவை ஹிதாயத்துல்லா.
இவர் தமிழ் உள்ளங்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த முக்கியச் செய்திகளைத் திரட்டி பத்திரிக்கைகள் மூலம் நம்மைப் படிக்க வைப்பவர், தானாக முன்வந்த பத்திரி்க்கைகளுக்குச் செய்தி தரும் தேனீயான முதுவை ஹிதாயத்துல்லாவைப்பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்வொமா?
அமைதி தவழும் சிரித்த முகம் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு, அமீரகத்தில் வாழும் நலிந்த தமிழ் மக்களுக்குத் தன்னுடன் தொடர்கொள்ள தமிழ் அமைப்புகள் மூலம் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவி செய்யும் சேவகர், எதையும் இலகுவாக மென்மையாக பேசி முடிக்கும் தன்மை, ஆடம்பரமில்லாத தோற்றம் இத்தனையும் சேர்ந்த மொத்தம் தான் முதுவை ஹிதயாத்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுவை என்னும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் M.Sc. படித்த திருச்சி வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியி்ல் வினாடி வினா போன்ற நிகழச்சிகளில் பங்கேற்றும், ஏற்று நடத்தியும் சிறப்பித்தவர், தம் பள்ளி, கல்லூரிகாலங்களில் பொத அறிவுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளார். பொத அறிவுச்செய்திகளை விரல் நுனியிலும் நாநுனியிலும் சேமித்து வைத்திருக்கும் தகவல் வங்கி இவர்.
மேலும் .......http://www.vkalathur.com/muduvai.php
செம்மொழி எம்மொழி
செம்மொழி எம்மொழி
”தமிழ்” என்றாலே “மூவினம்”
த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)
உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.
பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை
முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
”தமிழ்” என்றாலே “மூவினம்”
த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)
உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.
பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை
முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
Tuesday, June 22, 2010
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?
தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.
தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.
தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.
அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.
நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.
தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.
தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.
நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)
தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.
கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)
தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
-சிராஜுல்ஹஸன்
நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )
Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........
மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……
ஷேக் சிந்தா மதார்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?
தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.
தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.
தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.
அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.
நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.
தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.
தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.
நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)
தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.
கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)
தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
-சிராஜுல்ஹஸன்
நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )
Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........
மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……
ஷேக் சிந்தா மதார்
Monday, June 21, 2010
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
லால்பேட்டை – 608303 - கடலூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு – மார்ச் 2010 தேர்வு முடிவுகள்
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களின் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 98% அல்ஹம்துலில்லாஹ்…
முதல் இடம் - P.M. முனவ்வரா – 471 / 500
இரண்டாவது இடம் P.M. பஹீமா - 453 / 500
மூன்றாவது இடம் M.I. அஸ்மா - 450 / 500
கணித பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
H.K. முஹம்மது ஹிசாம்
M.H. முஹம்மது ஹசன்
அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
P.M. முனவ்வரா
P.M. பஹீமா,
M.I. அஸ்மா,
S.A. ஆயிஷா
400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் – 23 பேர்
T. நூரல் ஃபஷியா – 446 N. அரபாத் பேகம் - 424
S.A. ஆயிஷா - 445 M.A. சாஹீனா பர்வீன் - 424
H.K. முஹம்மது ஹிசாம் - 443 P. சஞ்சீவ் - 421
M.H. முஹம்மது ஹசன் - 439 M.I, தஸ்லீமா - 418
N. நபீலா பர்வீன் - 436 A.S. முஹம்மது ஆஷிக் – 409
K. பரக்கத்துன்னிசா - 434 A.M. உவைஸ் அஹ்மது – 409
A.V. அபுதல்ஹா - 430 H. பாஹிரா நஸ்ரீன் - 404
M.I. தெளபீக்கா பானு - 430 N. அப்துல்லா - 404
M.A. பர்ஹானா பர்வீன் - 427 F. உம்மு அத்தியா நஸ்ரீன் - 402
A. பத்தின் நாச்சியா - 427 H. ஹஸ்மினா பர்வீன் - 400
390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 10 பேர்
350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 37 பேர்
300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 22 பேர்
இங்ஙனம்
முஸ்லிம் பட்டதாரி கல்வி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்
பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும்
அலுவலக பணியாளர்கள்
லால்பேட்டை
லால்பேட்டை – 608303 - கடலூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு – மார்ச் 2010 தேர்வு முடிவுகள்
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களின் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 98% அல்ஹம்துலில்லாஹ்…
முதல் இடம் - P.M. முனவ்வரா – 471 / 500
இரண்டாவது இடம் P.M. பஹீமா - 453 / 500
மூன்றாவது இடம் M.I. அஸ்மா - 450 / 500
கணித பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
H.K. முஹம்மது ஹிசாம்
M.H. முஹம்மது ஹசன்
அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
P.M. முனவ்வரா
P.M. பஹீமா,
M.I. அஸ்மா,
S.A. ஆயிஷா
400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் – 23 பேர்
T. நூரல் ஃபஷியா – 446 N. அரபாத் பேகம் - 424
S.A. ஆயிஷா - 445 M.A. சாஹீனா பர்வீன் - 424
H.K. முஹம்மது ஹிசாம் - 443 P. சஞ்சீவ் - 421
M.H. முஹம்மது ஹசன் - 439 M.I, தஸ்லீமா - 418
N. நபீலா பர்வீன் - 436 A.S. முஹம்மது ஆஷிக் – 409
K. பரக்கத்துன்னிசா - 434 A.M. உவைஸ் அஹ்மது – 409
A.V. அபுதல்ஹா - 430 H. பாஹிரா நஸ்ரீன் - 404
M.I. தெளபீக்கா பானு - 430 N. அப்துல்லா - 404
M.A. பர்ஹானா பர்வீன் - 427 F. உம்மு அத்தியா நஸ்ரீன் - 402
A. பத்தின் நாச்சியா - 427 H. ஹஸ்மினா பர்வீன் - 400
390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 10 பேர்
350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 37 பேர்
300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 22 பேர்
இங்ஙனம்
முஸ்லிம் பட்டதாரி கல்வி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்
பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும்
அலுவலக பணியாளர்கள்
லால்பேட்டை
கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்
http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=261
கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்
ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம்.
சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினார். தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை சென்னை கிருத்துவ உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். வகுப்பு நண்பர்களுடனும் பொது விசயங்களையும், மத விசயங்களையும் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடல் நலக் குறைவின் காரணமாக பள்ளிக் கல்வி தடைபட்டது. எனினும், அவர்தம் தந்தையார் அவர்களுடன் வியாபாரத்தை பெருக்குவதிலும், வியாபார நுணுக்கங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதிலும் மிக்க ஆவலுடன் ஈடுபட்டார்கள்.
வியாபாரமும் கல்வியும்:
தோல் பதனிடும் தொழிலே அவர்தம் பூர்விக குடும்ப வியாபாரமாக இருந்தது. எனவே அவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போதும் கல்வியினை நடைமுறையில் கற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டினார். அதன் காரணமாக மெட்ராஸ்யுனைடெட்கிளப்-ல் உறுப்பினராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, அங்கே வருகின்ற ஆங்கில பிரசுரிப்புகளான, பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிவீயூவ் தீ ஸ்பெக்டேட்டர் ஆகிய ஆங்கில வார, மாத இதழ்களை விருப்பத்துடன் படித்து வந்தார். அது மட்டுமன்றி, வரலாற்று நூல்கள் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இதர பல்வேறு பயனுள்ள நூல்களையும், அவ்வப் போது சுயமாகவே வாங்கி படித்து தன்னுடைய ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார். அதன் காரணமாக ஆங்கிலத்தில் வியாபார ரீதியான கடிதங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் எழுதி வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்தார்.
நவீன கல்வியும், ஐரோப்பிய பயணமும் :
பெரம்பூரில் இயங்கி வந்த ஜமாலியாப் பள்ளியில், அரபி மொழிக் கல்வியைத் தவிர ஏனைய நவீன பாடத்திட்டத்தினை மாணவருக்கு பயிற்று விக்க முடியுமா? என்ற சர்ச்சைக்கு முடிவுகளான ஜனாப் ஜமால் முகமது சாகிப் ஏப்ரல் 1910-ல் இருந்து ஜனவரி 1911 முடிய 10 மாதங்கள் இடைவிடாது, பயணம் மேற்கொண்டு எகிப்து, வியட்னாம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து துருக்கி, (மீண்டும் எகிப்து, மக்கா மதினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை பார்வையிட்டு அவைகளின் அடிப்படையில் உறுதியான முடிவுக்கு வந்தார். குறிப்பாக கான்ஸ்டாண்டி – நோபிளில் அமைந்துள்ள பழமையான காலிபா, நகரத்தில் – செய்குல் இஸ்லாம் என்ற அமைப்பின் கருத்துக்களை பதிவு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜமால் அவர்கள், மத ரீதியான அரபு கல்வியுடன், இதர நவீனப் பாடங்களையும், இஸ்லாமிய மத கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற கருத்தினை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் நவீனக் கல்வியினை இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி தருவதற்குரிய அடிப்படைக் கோட்பாட்டை வடிவமைத்து தந்த கல்வித் தந்தையாக ஜனாப், ஜமால் முகமது சாகிப் அவர்கள் விளங்குகிறார்கள்.
பிரிட்டிஷ் நாணயத்தில் (பவுண் ஸ்டிடர்லிங்க்) இந்திய ரூபாயின் மதிப்பு ஜமால் சாகிப்பின் பொருளாதார கண்ணோட்டம் :
ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றவர் இல்லை. எனினும், பொருளாதார சிந்தனையில் குறிப்பாக அந்நிய செலவாணி நிர்ணய விகிதத்தில் கூர்மையான அறிவும், அவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, இறக்குமதி ஏற்றுமதியின் வழியாக பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவராக விளங்கினார்.
1920 முதல் 1930 முடிய உள்ள 10 ஆண்டுகளில் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அன்றைய பிடிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்டது 1.ராயல் கமிசன் அமைப்பு, 2. இந்திய பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள விலை நிர்ணய மாற்றம், 3. இந்திய ரூபாய்க்கும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க்கும் இடையே உள்ள விலை நிர்ணயம், இம்மூன்று முக்கிய முடிவுகளும் இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக இந்திய பாமர மக்களைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தன. நாடு முழுவதும் இப்பொருளாதார முடிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பின. இவைகள் சம்பந்தப்பட்ட பாதிப்பான பொருளாதார அம்சங்களை தன்னுடைய எழுச்சிமிக்க பேச்சுக்கள் மூலம் தென்னிந்திய மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஜனாப். ஜமால் முகமது ஆவார்கள். இத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், 1931-32ல் ஜனாப். ஜமால் சாகிப் அவர்கள் இங்கிலாந்து சென்று அவ்வரசிடம் முறையிட்டு பின் நாடு திரும்பினார். இத்தகைய பொருளாதார சிந்தனை மிக்க ஜமால் சாகிப் அவர்களை தென் இந்திய சாம்பர் ஆப் காமர்ஸ்-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. இதன் காரணமாக ஜமால் காசிப் அவர்களை படிக்காத பொருளாதார மேதை என்று உறுதியாகக் கூறலாம்.
வட்டமேஜை மகா மாநாட்டில் ஜமால் முகமது அவர்களின் பங்கு:
பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவர்களால் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு ஜமால் முகமது சாகிப் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்கள். வட்டமேஜை மகா மாநாட்டில் பங்கு பெற்று பொருளாதார கருத்துக்களை சிறப்புற வலியுறுத்தினார்.
மேலும், அவர் செயற்கையான முறையில், நிர்வாக உத்தரவுகள் மூலம் பிரிட்டிஷ் நாணயத்திற்கும் இந்தியாவின் ரூபாய்க்கும் உள்ள மதிப்பு விகிதாச்சார முறையின் சமநிலைப்பாட்டை தோற்றுவிப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியா பிரிட்டிஷ்க்கு செலுத்த வேண்டிய கடனை அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டார். வியாபார வளர்ச்சி குன்றினால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என வலியுறுத்தினார். இத்தகைய கருத்துகள் அப்போது உள்ள காலத்திற்கு மட்டுமின்றி, இப்போது உள்ள காலத்திற்கும் பொருந்தும். இது அவர்தம் தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவுடைய இராணுவ செலவை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்திற்று. மகாண சட்ட மன்றங்களில் அத்தகைய இராணுவ செலவு அதிகரிப்பு ஒப்புக் கொள்ளப்படவில்லை யென்றாலும், அவற்றிற்கு மேல முடிவு எடுத்த திணிப்பது போன்ற நிர்வாக சட்டதிட்டங்கள் அகற்றப்பட வேண்டு மென்று உரையாற்றினார்.
விவசாயம், தொழில்-மேம்பாடு, வியாபாரம், தொழிலாளர்கள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசில் தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுயாட்சி முறை அமைப்பு வேண்டுமென்று ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார். இத்தகையக் கருத்துக்களின் அடிப்படையில் பின்னால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓரளவு அமைந்தது என்றால் மிகையாகாது. எனவே இரண்டாவது வட்டமேஜை மகா மாநாட்டில் மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் ஜனாப் ஜமால் முகம்மது அவர்களே.
வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு சமயத்தை சார்ந்தவர்களை ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்த மக்களிடையையும், மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் ஏற்படுத்த நல்ல முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மகாத்மா காந்தி அவர்களுடன் அடிக்கடி உரையாற்றும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்களும் இதர தலைவர்களும் ஜமால் சாகிப் அவர்கள் மீது முழு நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்குப் பெற்றவுடன் ஜனவரி 1932 –ல் ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் இந்தியா திரும்பினார்கள்.
ஜமால் சாகிப் அவர்களின் மெச்ச தக்க குணநலன்கள் :
ஜமால் முகம்மது அவர்கள் ஒரு செல்வாக்கு மிக்க வியாபாரி எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான தேசியவாதி; பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடியாக இல்லாதவர்; இந்திய பொருளாதார விசயங்களிலும், அதன் நிதிநிலை அமைப்பிலும் பாண்டித்தியம் பெற்ற திகழ்ந்தவர்; ஆதலின் சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் வணிக அமைச்சராக விளங்குவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்; சிறந்த கொடை வள்ளல்; புகழ்மிக்க கல்வியாளர்; அதனாலேயே தென் இந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர்தம் பெயரில் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்; பல தரப்பினரும் பாராட்டிய சிறந்த மேடைப் பேச்சின் வித்தகர்; அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி; அகிம்சையில் அசையா நம்பிக்கை கொண்டவர்; பூக்களைக் கண்டு மகிழ்ந்தவர்; பூக்களைப் பறித்தல் கூட நோவினை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவர்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்; வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்; சுதேசி பொருள்களை விரும்பியவர்; - இத்தகைய ஈடு இணையற்ற பண்பின் காரணமாய், ஜனாப் ஜமால் முகம்மது சாகிப் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின், ஒப்பற்ற மனிதராக விளங்குகின்றார்.
இந்தியா முழுமையிலும் அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியவர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர்.
விடுதலை போரில் செலவுக்காக மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜியிடம் ( Blank Cheque ) தொகை எழுதப்படாத காசோலை வழங்கிய இத்தகைய வள்ளல் ஜமால் முகம்மது அவர்களுடைய சிறந்த மறுமை வாழ்விற்கு சமவுரிமை இறைவனை இறஞ்சிகிறது.
கட்டுரை எழுதியவர்
டாக்டர். கே.எஸ்.உதுமான் முகைய்தீன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு)
பொருளாதாரத்துறை, சென்னை பல்கலைகழகம்,
சென்னை – 600 005.
நன்றி : சம உரிமை மாத இதழ்– ஜுன் 2010
samaurimail@gmail.com
ஆண்டுச் சந்தா : ரூ.144/-
தொடர்பு எண் : சென்னை : 044 4510 810
அமீரகத் தொடர்பு எண் : 050 51 96 433
கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்
ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம்.
சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினார். தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை சென்னை கிருத்துவ உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். வகுப்பு நண்பர்களுடனும் பொது விசயங்களையும், மத விசயங்களையும் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடல் நலக் குறைவின் காரணமாக பள்ளிக் கல்வி தடைபட்டது. எனினும், அவர்தம் தந்தையார் அவர்களுடன் வியாபாரத்தை பெருக்குவதிலும், வியாபார நுணுக்கங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதிலும் மிக்க ஆவலுடன் ஈடுபட்டார்கள்.
வியாபாரமும் கல்வியும்:
தோல் பதனிடும் தொழிலே அவர்தம் பூர்விக குடும்ப வியாபாரமாக இருந்தது. எனவே அவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போதும் கல்வியினை நடைமுறையில் கற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டினார். அதன் காரணமாக மெட்ராஸ்யுனைடெட்கிளப்-ல் உறுப்பினராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, அங்கே வருகின்ற ஆங்கில பிரசுரிப்புகளான, பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிவீயூவ் தீ ஸ்பெக்டேட்டர் ஆகிய ஆங்கில வார, மாத இதழ்களை விருப்பத்துடன் படித்து வந்தார். அது மட்டுமன்றி, வரலாற்று நூல்கள் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இதர பல்வேறு பயனுள்ள நூல்களையும், அவ்வப் போது சுயமாகவே வாங்கி படித்து தன்னுடைய ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார். அதன் காரணமாக ஆங்கிலத்தில் வியாபார ரீதியான கடிதங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் எழுதி வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்தார்.
நவீன கல்வியும், ஐரோப்பிய பயணமும் :
பெரம்பூரில் இயங்கி வந்த ஜமாலியாப் பள்ளியில், அரபி மொழிக் கல்வியைத் தவிர ஏனைய நவீன பாடத்திட்டத்தினை மாணவருக்கு பயிற்று விக்க முடியுமா? என்ற சர்ச்சைக்கு முடிவுகளான ஜனாப் ஜமால் முகமது சாகிப் ஏப்ரல் 1910-ல் இருந்து ஜனவரி 1911 முடிய 10 மாதங்கள் இடைவிடாது, பயணம் மேற்கொண்டு எகிப்து, வியட்னாம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து துருக்கி, (மீண்டும் எகிப்து, மக்கா மதினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை பார்வையிட்டு அவைகளின் அடிப்படையில் உறுதியான முடிவுக்கு வந்தார். குறிப்பாக கான்ஸ்டாண்டி – நோபிளில் அமைந்துள்ள பழமையான காலிபா, நகரத்தில் – செய்குல் இஸ்லாம் என்ற அமைப்பின் கருத்துக்களை பதிவு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜமால் அவர்கள், மத ரீதியான அரபு கல்வியுடன், இதர நவீனப் பாடங்களையும், இஸ்லாமிய மத கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற கருத்தினை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் நவீனக் கல்வியினை இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி தருவதற்குரிய அடிப்படைக் கோட்பாட்டை வடிவமைத்து தந்த கல்வித் தந்தையாக ஜனாப், ஜமால் முகமது சாகிப் அவர்கள் விளங்குகிறார்கள்.
பிரிட்டிஷ் நாணயத்தில் (பவுண் ஸ்டிடர்லிங்க்) இந்திய ரூபாயின் மதிப்பு ஜமால் சாகிப்பின் பொருளாதார கண்ணோட்டம் :
ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றவர் இல்லை. எனினும், பொருளாதார சிந்தனையில் குறிப்பாக அந்நிய செலவாணி நிர்ணய விகிதத்தில் கூர்மையான அறிவும், அவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, இறக்குமதி ஏற்றுமதியின் வழியாக பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவராக விளங்கினார்.
1920 முதல் 1930 முடிய உள்ள 10 ஆண்டுகளில் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அன்றைய பிடிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்டது 1.ராயல் கமிசன் அமைப்பு, 2. இந்திய பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள விலை நிர்ணய மாற்றம், 3. இந்திய ரூபாய்க்கும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க்கும் இடையே உள்ள விலை நிர்ணயம், இம்மூன்று முக்கிய முடிவுகளும் இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக இந்திய பாமர மக்களைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தன. நாடு முழுவதும் இப்பொருளாதார முடிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பின. இவைகள் சம்பந்தப்பட்ட பாதிப்பான பொருளாதார அம்சங்களை தன்னுடைய எழுச்சிமிக்க பேச்சுக்கள் மூலம் தென்னிந்திய மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஜனாப். ஜமால் முகமது ஆவார்கள். இத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், 1931-32ல் ஜனாப். ஜமால் சாகிப் அவர்கள் இங்கிலாந்து சென்று அவ்வரசிடம் முறையிட்டு பின் நாடு திரும்பினார். இத்தகைய பொருளாதார சிந்தனை மிக்க ஜமால் சாகிப் அவர்களை தென் இந்திய சாம்பர் ஆப் காமர்ஸ்-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. இதன் காரணமாக ஜமால் காசிப் அவர்களை படிக்காத பொருளாதார மேதை என்று உறுதியாகக் கூறலாம்.
வட்டமேஜை மகா மாநாட்டில் ஜமால் முகமது அவர்களின் பங்கு:
பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவர்களால் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு ஜமால் முகமது சாகிப் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்கள். வட்டமேஜை மகா மாநாட்டில் பங்கு பெற்று பொருளாதார கருத்துக்களை சிறப்புற வலியுறுத்தினார்.
மேலும், அவர் செயற்கையான முறையில், நிர்வாக உத்தரவுகள் மூலம் பிரிட்டிஷ் நாணயத்திற்கும் இந்தியாவின் ரூபாய்க்கும் உள்ள மதிப்பு விகிதாச்சார முறையின் சமநிலைப்பாட்டை தோற்றுவிப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியா பிரிட்டிஷ்க்கு செலுத்த வேண்டிய கடனை அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டார். வியாபார வளர்ச்சி குன்றினால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என வலியுறுத்தினார். இத்தகைய கருத்துகள் அப்போது உள்ள காலத்திற்கு மட்டுமின்றி, இப்போது உள்ள காலத்திற்கும் பொருந்தும். இது அவர்தம் தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவுடைய இராணுவ செலவை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்திற்று. மகாண சட்ட மன்றங்களில் அத்தகைய இராணுவ செலவு அதிகரிப்பு ஒப்புக் கொள்ளப்படவில்லை யென்றாலும், அவற்றிற்கு மேல முடிவு எடுத்த திணிப்பது போன்ற நிர்வாக சட்டதிட்டங்கள் அகற்றப்பட வேண்டு மென்று உரையாற்றினார்.
விவசாயம், தொழில்-மேம்பாடு, வியாபாரம், தொழிலாளர்கள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசில் தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுயாட்சி முறை அமைப்பு வேண்டுமென்று ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார். இத்தகையக் கருத்துக்களின் அடிப்படையில் பின்னால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓரளவு அமைந்தது என்றால் மிகையாகாது. எனவே இரண்டாவது வட்டமேஜை மகா மாநாட்டில் மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் ஜனாப் ஜமால் முகம்மது அவர்களே.
வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு சமயத்தை சார்ந்தவர்களை ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்த மக்களிடையையும், மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் ஏற்படுத்த நல்ல முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மகாத்மா காந்தி அவர்களுடன் அடிக்கடி உரையாற்றும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்களும் இதர தலைவர்களும் ஜமால் சாகிப் அவர்கள் மீது முழு நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்குப் பெற்றவுடன் ஜனவரி 1932 –ல் ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் இந்தியா திரும்பினார்கள்.
ஜமால் சாகிப் அவர்களின் மெச்ச தக்க குணநலன்கள் :
ஜமால் முகம்மது அவர்கள் ஒரு செல்வாக்கு மிக்க வியாபாரி எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான தேசியவாதி; பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடியாக இல்லாதவர்; இந்திய பொருளாதார விசயங்களிலும், அதன் நிதிநிலை அமைப்பிலும் பாண்டித்தியம் பெற்ற திகழ்ந்தவர்; ஆதலின் சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் வணிக அமைச்சராக விளங்குவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்; சிறந்த கொடை வள்ளல்; புகழ்மிக்க கல்வியாளர்; அதனாலேயே தென் இந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர்தம் பெயரில் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்; பல தரப்பினரும் பாராட்டிய சிறந்த மேடைப் பேச்சின் வித்தகர்; அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி; அகிம்சையில் அசையா நம்பிக்கை கொண்டவர்; பூக்களைக் கண்டு மகிழ்ந்தவர்; பூக்களைப் பறித்தல் கூட நோவினை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவர்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்; வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்; சுதேசி பொருள்களை விரும்பியவர்; - இத்தகைய ஈடு இணையற்ற பண்பின் காரணமாய், ஜனாப் ஜமால் முகம்மது சாகிப் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின், ஒப்பற்ற மனிதராக விளங்குகின்றார்.
இந்தியா முழுமையிலும் அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியவர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர்.
விடுதலை போரில் செலவுக்காக மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜியிடம் ( Blank Cheque ) தொகை எழுதப்படாத காசோலை வழங்கிய இத்தகைய வள்ளல் ஜமால் முகம்மது அவர்களுடைய சிறந்த மறுமை வாழ்விற்கு சமவுரிமை இறைவனை இறஞ்சிகிறது.
கட்டுரை எழுதியவர்
டாக்டர். கே.எஸ்.உதுமான் முகைய்தீன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு)
பொருளாதாரத்துறை, சென்னை பல்கலைகழகம்,
சென்னை – 600 005.
நன்றி : சம உரிமை மாத இதழ்– ஜுன் 2010
samaurimail@gmail.com
ஆண்டுச் சந்தா : ரூ.144/-
தொடர்பு எண் : சென்னை : 044 4510 810
அமீரகத் தொடர்பு எண் : 050 51 96 433
Sunday, June 20, 2010
அந்த இரண்டணா
அந்த இரண்டணா
எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
syed musthafa
dateTue, Jun 15, 2010 at 11:38 PM
subjectRe: அந்த இரண்டணா ........................
அரிய பதிவு! வாழ்த்துக்கள்!
- திருச்சி சையது.
abdul rahuman
dateWed, Jun 16, 2010 at 8:20 AM
subjectRe: |TMB| அந்த இரண்டணா ........................
அற்புதமான நினைவுக்குறிப்பு!
"உழைத்து ஈட்டும் பொருளில் அல்லாஹ்வின் பரக்கத் எந்த அளவு உள்ளது" என்பதையும் அழகாக உணர்த்துகிறது. பல படிப்பினைகளைத் தரும் அருமையான ஆக்கம். நன்றி சகோதரர் முதுவை ஹிதாயத்.
Sheikh Sintha Mathar Masoud
dateWed, Jun 16, 2010 at 8:18 AM
subjectநெஞ்சைத் தொட்ட இரண்டணா
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிதாயத் அவர்களே,
நெஞ்சைத் தொட்டுவிட்டது அந்த இரண்டணா.
மிக்க நன்றி.
ஷேக் சிந்தா மதார்
எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
syed musthafa
dateTue, Jun 15, 2010 at 11:38 PM
subjectRe: அந்த இரண்டணா ........................
அரிய பதிவு! வாழ்த்துக்கள்!
- திருச்சி சையது.
abdul rahuman
dateWed, Jun 16, 2010 at 8:20 AM
subjectRe: |TMB| அந்த இரண்டணா ........................
அற்புதமான நினைவுக்குறிப்பு!
"உழைத்து ஈட்டும் பொருளில் அல்லாஹ்வின் பரக்கத் எந்த அளவு உள்ளது" என்பதையும் அழகாக உணர்த்துகிறது. பல படிப்பினைகளைத் தரும் அருமையான ஆக்கம். நன்றி சகோதரர் முதுவை ஹிதாயத்.
Sheikh Sintha Mathar Masoud
dateWed, Jun 16, 2010 at 8:18 AM
subjectநெஞ்சைத் தொட்ட இரண்டணா
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிதாயத் அவர்களே,
நெஞ்சைத் தொட்டுவிட்டது அந்த இரண்டணா.
மிக்க நன்றி.
ஷேக் சிந்தா மதார்
மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி
மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி
( மேலப்பாளையம் த.மு.சா. காஜா முகைதீன் எம்.ஏ.எம்.பில்., )
இஸ்லாமிய இலக்கியங்களில் கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, முனாஜாத்து, படைப்போர் ஆகியவை இஸ்லாமிய இலக்கியங் களுக்கே உரித்தான புதிய வடிவங்களாகும். அவற்றின் உள்ளடக்கம் வேறுபட்ட தன்மைகள் உடையன. மஸ் அலா இலக்கியம் மட்டுமே எவ்விதக் கற்பனையும் கலவாத உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டுள்ள ஆயிரம் மஸ்அலா, வெள்ளாட்டி மஸ்அலா, நூறு மஸ்அலா என்னும் மூன்று வகை மஸ்அலா இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
காலத்தால் முந்திய ஆயிரம் மஸ் அலா என்னும் அதிசய புராணம் வண்ணப் பரிமளப் புலவரால் கி.பி. 1572 இல் இயற்றப் பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்…) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்குர் ஆனிலும் ஹதீதுகளிலும் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வரலாறு மற்றும் போதனைகளே இதில் முற்றாக வழங்கப்படுகின்றன.
மஸ் அலா என்னும் அரபிச்சொல் ஆல் (கேள்வி) என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நபிபெருமான் (ஸல்…) அவர்கள் மதினாவில் இருக்கும் பொழுது மதினாவிற்கு அண்மையிலுள்ள கைபர் என்னும் பகுதியில் வேதியர் அப்துல்லா இப்னு சலாம் என்பாரை சந்தித்து இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என ஜிப்ரயீல் (அலை) மூலம் நபிபெருமான் (ஸல்) அவர்களுக்கு இறைக்கட்டளை கிடைக்கிறது. இதன்படி உக்காஸ் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்பி நபி பெருமான் (ஸல்…)அவர்கள் தம்மைப் பற்றியும் இஸ்லாத்தின் நெறி பற்றியும் அப்துல்லா இப்னு சலாமிடம் அறிவிக்கும்படிச் செய்தனர். இதனை செவிமடுத்த அப்துல்லா இப்னு சலாம்.
அர்த்தமொன் றறியா வண்ணமாயிர மசலாவுங்கள்
சித்தமன் புறவேகொண்டு சென்றவர்க்கருள்வேன்.
(ஆயிர மஸ் அலா :32)
என இயம்பி நபி பெருமானை சந்திக்கும் முகமாக 700 யூதர்களுடன் அப்துல்லா இப்னு சலாம். மதினாமாநகர் வர ஆயத்தப்படுகிறார் இதனை நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவித்து, அப்துல்லா இப்னு சலாம் விடுக்கும் ஆயிரம் வினாக்களுக்குரிய விளக்கங்களையும் இறைக்கட்டளைப்படி நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவிக்க அக்கருத்துக்களையே விளக்கமாக நபி (ஸல்…) அவர்கள் அளிக்கிறார். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்படி நடப்போருக்குரிய பயன்களாக ஆயிரம் மஸ் அலாவின் தொடக்கத்தில் வண்ணப் பரிமளப் புலவர்.
மூதறி வுண்டாம் நாளும் முதலவன் கிருபை தோன்றும்
தீதறுந் துன்பந் தீருஞ் செல்வமுஞ் சிறப்பு முண்டாம்
பூதலத் துயிர்கள் யாவும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை யிறசூல் தம்மை யகம்மகிழ்ந்தருளுவோர்க்கே (ஆயிரம் மஸ் அலா : 2 ) என்று விளங்க வைக்கிறார்.
நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக் குர்ஆன் மற்றொன்று அல்ஹதீஸ் இவ்விரண்டையும் உறுதியாக பற்றிக்கொள்ளின் நீங்கள் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள் என்று தம் சமூகத்தினருக்கு நபி (ஸல்…) அவர்கள் அறிவிப்புச் செய்ததற்கிணங்க குர்ஆன் ஹதீஸ்களே ஆயிரம் மஸ் அலாவின் நற்செய்திகளாக உள்ளன.
அப்துல்லா இப்னு சலாமின் ஆரம்பக் கேள்வி தீனென்றால் என்ன? என்பது ………………………………………………… தீனாவதே சாறான கலிமா சாஹா தத்துடன் ஈறாத சிபத்தில் ஈமானுமாம் (ஆயிரம் மஸ் அலா : 72)
என்று இஸ்லாத்தின் அடி நாதமான கலிமா பற்றியது நபி (ஸல்…) அவர்களின் பதில். லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லா என்பதே நபி (ஸல்…) அப்துல்லா இப்னு சலாமுடைய உள்ளத்தின் பதித்த முதல் செய்தியாகும். இது.
தொடர்ந்து இஸ்லாத்தின் கொள்கைகளில் ஏற்கப்பட்டவை விலக்கப் பட்டவை, நல்லார், அல்லார், திருக்குர்ஆன் சிறப்பு ஜிப்ரயீல் (அலை) யின் செயல்பாடு, கதிரவன் சந்திரன் பற்றிய விளக்கங்கள், சொர்க்கத்தின் சுகம், நரகத்தின் கொடுமை பற்றியும் ஆபில் காபில் தஜ்ஜால் ஆகியோர் பற்றியும் இறுதி நாள் பற்றியும் விளக்கங்கள் நபி (ஸல்…) அவர்களின் விடைகளில் இடம் பெற்றுள்ளன.
மனிதப் படைப்பு குறித்து திருக்குர்ஆன் (22.5) நிச்சயமாக நாம் உங்களை எண்ணிலிருந்து சிருஷ்டித்தோம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருமண்ணாற் படைத்த மாந்தன் ஒரு வடிவாய்
ஆவரென்றே
கருதியே பலமன் கொண்டு கருப்பிடித்தனமத்தா னந்தப்
பரிசுவால் மானுட ரெல்லாம் பலவண்ணானாரென்ன
மருவியே இரசூல் கூற …
என்பதில் மனிதப் படைப்பின் தன்மை பற்றிய இறைவாக்கைப் பற்றி வண்ணப் பரிமளப்புலவர் மஸ் அலாவில் பதிவு செய்துள்ளார்.
கியாமத் (இறுதி) நாளின் அடையாளங்கள் வரிசைப்படுத்திக் கூறிய புலவர். உங்கள் மீது உங்கள் இறைவனால் சாட்டப்பட்டிருக்கும் மலக்குல் மவுத் தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (அல்குர்ஆன் 32 :11) என்று மனிதனின் இறப்பையும், அவன் இறுதி நாளில் எழுப்பப்படுவதனையும் பற்றிய இறைமறைக் கருத்துக்களையும், நன்மை, தீமை பற்றி வானவர் எடுத்துரைப்பதையும்.
கியாமத்தான கியாமத்து நாளிலே – கருதிநாயன்
கணக்குகள் கேட்டு நாள்
நியாயத் தாயடியாரை எழுப்புமந்தேரஞ் – சாலி
குவானவர் தங்களைத்
தயாநட் பானது கொண்டந்தப் பூமியின் தக்க
கூட்டுற வாக்குவா ரென்னவே
பயானைப் பேச நபி பதம் போற்றி வந்தவர் சூதர் – மறு மொழி கூறுவார். (மஸ் அலா :797)
இவ்வாறு இறை மறையின் செய்திகளே இதில் படிப்பினையாக இடம் பெறுகின்றன. இறுதிநாளில் உயிர்கள் அனைத்தும் இறைவன்பால் சென்றபின் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்? இதனை
இனிமேல் துனியாவோடு இகழ்ச்சியிலை
பனிஆதம் பிறப்பும் இறப்புமில்லை
யுனுசேர் அருணத்து உதயங்களிலை
அநியாயம் அவலம்பவம் கசடுகளிலையே
(ஆயிர மஸ் அலா : 962)
என்று ஒரு மஸ் அலா உரைக்கிறது. உலகின் அழிவுக்குப்பின் உலக வாழ்க்கை நன்மை செய்தோர்க்கு நன்மையும் தீமை செய்வோர்க்குத் தீமையும் வந்து நேரும் என்பதை,
நன்மை செய்தவர் சொர்க்க மாநகரெய்தி வாழ்வர்
தின்மை செய்தவர் நரகமானது சேர்ந்திருப்பர்..
என இவ்வாறு மனிதப் படைப்புத் தொடங்கி இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளையும் இம்மை மறுமைப் பயன்களையும் மஸ் அலாக்கள் வாயிலாக நபி (ஸல்) மொழி மறுமொழிகள் அப்துல்லா இப்னு சலாமுக்கு தீனுல் இஸ்லாம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியது. அந்நிலையில்
மாமானமும்புகழ் முகம்மதே, எங்களின்
வாழ்வே குதாய் தூதரே
சூமானியமான வழிபிழைத் தேநின்ற சூதர்
அங்கிடமானதை
யீமானி லேநீனிலே சாருமசலாவுத் தமாமாய்ப்
பயானோதினீர்
சாமானி யாமோக சாருமசலாவுந் தமாமாய்ப்
பயானோதினீர்
அப்துல்லா இப்னு சலாமின் இக்கூற்றில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு வெளிப்படுகிறது.
மஸ் அலாக்கள் மூலம் நபி (ஸல்…) அளித்த மெய்மைகளை உள்வாங்கிய அப்துல்லா இப்னு சலாம் தம்முடைய குழுவினர் ஏழு நூறு பேர்களுடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். இவ்வதிசயப் புராணமென்னும் ஆயிரமசலா ஒவ்வொன்றிலும் இஸ்லாமியமார்க்கக் கல்வியை வண்ணப்பரிமளப்புலவர் பரிணமிக்கச் செய்துள்ளார்.
நன்றி : சம உரிமை ( ஜுன் 2010 )
( மேலப்பாளையம் த.மு.சா. காஜா முகைதீன் எம்.ஏ.எம்.பில்., )
இஸ்லாமிய இலக்கியங்களில் கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, முனாஜாத்து, படைப்போர் ஆகியவை இஸ்லாமிய இலக்கியங் களுக்கே உரித்தான புதிய வடிவங்களாகும். அவற்றின் உள்ளடக்கம் வேறுபட்ட தன்மைகள் உடையன. மஸ் அலா இலக்கியம் மட்டுமே எவ்விதக் கற்பனையும் கலவாத உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டுள்ள ஆயிரம் மஸ்அலா, வெள்ளாட்டி மஸ்அலா, நூறு மஸ்அலா என்னும் மூன்று வகை மஸ்அலா இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
காலத்தால் முந்திய ஆயிரம் மஸ் அலா என்னும் அதிசய புராணம் வண்ணப் பரிமளப் புலவரால் கி.பி. 1572 இல் இயற்றப் பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்…) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்குர் ஆனிலும் ஹதீதுகளிலும் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வரலாறு மற்றும் போதனைகளே இதில் முற்றாக வழங்கப்படுகின்றன.
மஸ் அலா என்னும் அரபிச்சொல் ஆல் (கேள்வி) என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நபிபெருமான் (ஸல்…) அவர்கள் மதினாவில் இருக்கும் பொழுது மதினாவிற்கு அண்மையிலுள்ள கைபர் என்னும் பகுதியில் வேதியர் அப்துல்லா இப்னு சலாம் என்பாரை சந்தித்து இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என ஜிப்ரயீல் (அலை) மூலம் நபிபெருமான் (ஸல்) அவர்களுக்கு இறைக்கட்டளை கிடைக்கிறது. இதன்படி உக்காஸ் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்பி நபி பெருமான் (ஸல்…)அவர்கள் தம்மைப் பற்றியும் இஸ்லாத்தின் நெறி பற்றியும் அப்துல்லா இப்னு சலாமிடம் அறிவிக்கும்படிச் செய்தனர். இதனை செவிமடுத்த அப்துல்லா இப்னு சலாம்.
அர்த்தமொன் றறியா வண்ணமாயிர மசலாவுங்கள்
சித்தமன் புறவேகொண்டு சென்றவர்க்கருள்வேன்.
(ஆயிர மஸ் அலா :32)
என இயம்பி நபி பெருமானை சந்திக்கும் முகமாக 700 யூதர்களுடன் அப்துல்லா இப்னு சலாம். மதினாமாநகர் வர ஆயத்தப்படுகிறார் இதனை நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவித்து, அப்துல்லா இப்னு சலாம் விடுக்கும் ஆயிரம் வினாக்களுக்குரிய விளக்கங்களையும் இறைக்கட்டளைப்படி நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவிக்க அக்கருத்துக்களையே விளக்கமாக நபி (ஸல்…) அவர்கள் அளிக்கிறார். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்படி நடப்போருக்குரிய பயன்களாக ஆயிரம் மஸ் அலாவின் தொடக்கத்தில் வண்ணப் பரிமளப் புலவர்.
மூதறி வுண்டாம் நாளும் முதலவன் கிருபை தோன்றும்
தீதறுந் துன்பந் தீருஞ் செல்வமுஞ் சிறப்பு முண்டாம்
பூதலத் துயிர்கள் யாவும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை யிறசூல் தம்மை யகம்மகிழ்ந்தருளுவோர்க்கே (ஆயிரம் மஸ் அலா : 2 ) என்று விளங்க வைக்கிறார்.
நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக் குர்ஆன் மற்றொன்று அல்ஹதீஸ் இவ்விரண்டையும் உறுதியாக பற்றிக்கொள்ளின் நீங்கள் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள் என்று தம் சமூகத்தினருக்கு நபி (ஸல்…) அவர்கள் அறிவிப்புச் செய்ததற்கிணங்க குர்ஆன் ஹதீஸ்களே ஆயிரம் மஸ் அலாவின் நற்செய்திகளாக உள்ளன.
அப்துல்லா இப்னு சலாமின் ஆரம்பக் கேள்வி தீனென்றால் என்ன? என்பது ………………………………………………… தீனாவதே சாறான கலிமா சாஹா தத்துடன் ஈறாத சிபத்தில் ஈமானுமாம் (ஆயிரம் மஸ் அலா : 72)
என்று இஸ்லாத்தின் அடி நாதமான கலிமா பற்றியது நபி (ஸல்…) அவர்களின் பதில். லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லா என்பதே நபி (ஸல்…) அப்துல்லா இப்னு சலாமுடைய உள்ளத்தின் பதித்த முதல் செய்தியாகும். இது.
தொடர்ந்து இஸ்லாத்தின் கொள்கைகளில் ஏற்கப்பட்டவை விலக்கப் பட்டவை, நல்லார், அல்லார், திருக்குர்ஆன் சிறப்பு ஜிப்ரயீல் (அலை) யின் செயல்பாடு, கதிரவன் சந்திரன் பற்றிய விளக்கங்கள், சொர்க்கத்தின் சுகம், நரகத்தின் கொடுமை பற்றியும் ஆபில் காபில் தஜ்ஜால் ஆகியோர் பற்றியும் இறுதி நாள் பற்றியும் விளக்கங்கள் நபி (ஸல்…) அவர்களின் விடைகளில் இடம் பெற்றுள்ளன.
மனிதப் படைப்பு குறித்து திருக்குர்ஆன் (22.5) நிச்சயமாக நாம் உங்களை எண்ணிலிருந்து சிருஷ்டித்தோம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருமண்ணாற் படைத்த மாந்தன் ஒரு வடிவாய்
ஆவரென்றே
கருதியே பலமன் கொண்டு கருப்பிடித்தனமத்தா னந்தப்
பரிசுவால் மானுட ரெல்லாம் பலவண்ணானாரென்ன
மருவியே இரசூல் கூற …
என்பதில் மனிதப் படைப்பின் தன்மை பற்றிய இறைவாக்கைப் பற்றி வண்ணப் பரிமளப்புலவர் மஸ் அலாவில் பதிவு செய்துள்ளார்.
கியாமத் (இறுதி) நாளின் அடையாளங்கள் வரிசைப்படுத்திக் கூறிய புலவர். உங்கள் மீது உங்கள் இறைவனால் சாட்டப்பட்டிருக்கும் மலக்குல் மவுத் தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (அல்குர்ஆன் 32 :11) என்று மனிதனின் இறப்பையும், அவன் இறுதி நாளில் எழுப்பப்படுவதனையும் பற்றிய இறைமறைக் கருத்துக்களையும், நன்மை, தீமை பற்றி வானவர் எடுத்துரைப்பதையும்.
கியாமத்தான கியாமத்து நாளிலே – கருதிநாயன்
கணக்குகள் கேட்டு நாள்
நியாயத் தாயடியாரை எழுப்புமந்தேரஞ் – சாலி
குவானவர் தங்களைத்
தயாநட் பானது கொண்டந்தப் பூமியின் தக்க
கூட்டுற வாக்குவா ரென்னவே
பயானைப் பேச நபி பதம் போற்றி வந்தவர் சூதர் – மறு மொழி கூறுவார். (மஸ் அலா :797)
இவ்வாறு இறை மறையின் செய்திகளே இதில் படிப்பினையாக இடம் பெறுகின்றன. இறுதிநாளில் உயிர்கள் அனைத்தும் இறைவன்பால் சென்றபின் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்? இதனை
இனிமேல் துனியாவோடு இகழ்ச்சியிலை
பனிஆதம் பிறப்பும் இறப்புமில்லை
யுனுசேர் அருணத்து உதயங்களிலை
அநியாயம் அவலம்பவம் கசடுகளிலையே
(ஆயிர மஸ் அலா : 962)
என்று ஒரு மஸ் அலா உரைக்கிறது. உலகின் அழிவுக்குப்பின் உலக வாழ்க்கை நன்மை செய்தோர்க்கு நன்மையும் தீமை செய்வோர்க்குத் தீமையும் வந்து நேரும் என்பதை,
நன்மை செய்தவர் சொர்க்க மாநகரெய்தி வாழ்வர்
தின்மை செய்தவர் நரகமானது சேர்ந்திருப்பர்..
என இவ்வாறு மனிதப் படைப்புத் தொடங்கி இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளையும் இம்மை மறுமைப் பயன்களையும் மஸ் அலாக்கள் வாயிலாக நபி (ஸல்) மொழி மறுமொழிகள் அப்துல்லா இப்னு சலாமுக்கு தீனுல் இஸ்லாம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியது. அந்நிலையில்
மாமானமும்புகழ் முகம்மதே, எங்களின்
வாழ்வே குதாய் தூதரே
சூமானியமான வழிபிழைத் தேநின்ற சூதர்
அங்கிடமானதை
யீமானி லேநீனிலே சாருமசலாவுத் தமாமாய்ப்
பயானோதினீர்
சாமானி யாமோக சாருமசலாவுந் தமாமாய்ப்
பயானோதினீர்
அப்துல்லா இப்னு சலாமின் இக்கூற்றில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு வெளிப்படுகிறது.
மஸ் அலாக்கள் மூலம் நபி (ஸல்…) அளித்த மெய்மைகளை உள்வாங்கிய அப்துல்லா இப்னு சலாம் தம்முடைய குழுவினர் ஏழு நூறு பேர்களுடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். இவ்வதிசயப் புராணமென்னும் ஆயிரமசலா ஒவ்வொன்றிலும் இஸ்லாமியமார்க்கக் கல்வியை வண்ணப்பரிமளப்புலவர் பரிணமிக்கச் செய்துள்ளார்.
நன்றி : சம உரிமை ( ஜுன் 2010 )
Tuesday, June 15, 2010
அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!
அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!
ஆட்சியும் அதிகாரமும்
உண்மையான அரசும் ஆட்சியும், படைத்துகாக்கும் இறைவனுக்கே உரியவை . அவன் ஒருவன் தான் ஆளுபவன் மற்றவைகளுக்கு முழந்தாளிடுவது மக்களின் அறியாமையினால்தான்.
தன்னை தானே ஆட்சி செலுத்தாதவனை மற்றவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.
அரசியல்
அரசியல் ஒரு சூனியக்கலை , ஆளும் வர்கதிரனால் அந்த மந்திர வித்தை செய்யபடுகிறது . ஆளப்படுபவர்களும் , தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது , அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் . ஆனால் நசுக்கபடுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை .
வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றந்தான் அரசியல் , ஆனால் இது செல்வந்தர்கள் தாங்கள் செல்வத்தை பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் .
அகம்
தன் அகத்தை முழுதும் தெறித்து கொள்கிறவன் தீமைகள் அனைத்தையும் பயனுள்ளதாக்கி விடுவான் .
அறியாமை
உறுதி மிக்க வைரத்தயும் மெல்லிய மலரின் இதழால் அறுத்துவிடலாம் . ஆனால் அறியாமையில் உழலும் இந்த மனிதனிடம் எவ்வித உபதேசமும்
பலனளிக்காமல் போய் விடுகிறது ; அது எவ்வளவு மிருதுவாக இருந்த போதிலும் சரியே .
அல்லாமா இக்பால் ,
ஆட்சியும் அதிகாரமும்
உண்மையான அரசும் ஆட்சியும், படைத்துகாக்கும் இறைவனுக்கே உரியவை . அவன் ஒருவன் தான் ஆளுபவன் மற்றவைகளுக்கு முழந்தாளிடுவது மக்களின் அறியாமையினால்தான்.
தன்னை தானே ஆட்சி செலுத்தாதவனை மற்றவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.
அரசியல்
அரசியல் ஒரு சூனியக்கலை , ஆளும் வர்கதிரனால் அந்த மந்திர வித்தை செய்யபடுகிறது . ஆளப்படுபவர்களும் , தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது , அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் . ஆனால் நசுக்கபடுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை .
வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றந்தான் அரசியல் , ஆனால் இது செல்வந்தர்கள் தாங்கள் செல்வத்தை பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் .
அகம்
தன் அகத்தை முழுதும் தெறித்து கொள்கிறவன் தீமைகள் அனைத்தையும் பயனுள்ளதாக்கி விடுவான் .
அறியாமை
உறுதி மிக்க வைரத்தயும் மெல்லிய மலரின் இதழால் அறுத்துவிடலாம் . ஆனால் அறியாமையில் உழலும் இந்த மனிதனிடம் எவ்வித உபதேசமும்
பலனளிக்காமல் போய் விடுகிறது ; அது எவ்வளவு மிருதுவாக இருந்த போதிலும் சரியே .
அல்லாமா இக்பால் ,
அந்த இரண்டணா
அந்த இரண்டணா
எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
தீன்குறள்
தமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழைச் சொன்ன அளவுக்கு இஸ்லாத்தைச் சொன்னதில்லை என்கிற ஒரு கருத்து உலவுகிறது.
சீறாப்புராணம் தொடங்கி மஸ்தான்சாஹிபு பாடல்கள் வரை, " கொண்டாடப்படும்" இஸ்லாமிய இலக்கியங்கள் பலவும் தமிழைப் பிழிந்து கொடுத்த அளவுக்கு இஸ்லாமியக் கருத்தாக்கங்களை மொழிந்திடவில்லை என்பது தமிழாய்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிடம் குடிகொண்டுள்ள ஓர் ஆதங்கம்.
இது ஒருபுறமிருக்க, இஸ்லாம் என்றாலே இலக்கியத்துக்கு இடமளிக்கக் கூடாத ஒன்று என்பது போன்ற 'தூய' தோற்றத்தையும் சிலர் முனைந்து தோற்றுவித்துவருகின்றனர்.:-(
வாழ்விற்கு உகந்த இஸ்லாமிய நற்கருத்துகளை இதயத்திற்கு உகந்த இனிய தமிழ்மொழியில் இலக்கியமாக்குவதன் எதிர்பார்ப்பு இரண்டையும் அறிந்தவர்களின் விழிகளில் ஏக்கமாகிப் படர்ந்திருக்க, அந்தத் தாகநெருப்பைத் தணிக்கும் அளவில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்களின் நூல்கள் அமைவதுண்டு. 'இறைவா' என்கிற தலைப்பில் வந்த உரைவீச்சு நூல் ஒரு எடுத்துக்காட்டு.
ஒருமுறை அவர், தமிழில் இஸ்லாமியக்கவிதை எழுதுவது 'கத்திமீது நடப்பது மாதிரி கடினமான வேலை' என்று குறிப்பிட்டார். கவிதைகளின் மிகைப்பண்பும் வரம்புக்குட்பட்டே, ஆனால் சுவையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதில்.
என்னதான் திலகமாக இருந்தாலும் 'உன்புகழை வானமே அண்ணாந்து பார்க்கிறது' என்றெல்லாம் 'முத்து' வரிகளை உதிர்க்க இயலாது. கூடாது.
அவ்வகையில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இயற்றியுள்ள 'தீன்குறள்' தமிழ் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.
திருக்குறளின் அடியொற்றி 'அ'வில் தொடங்கி 'ன்' னில் முடியும் தீன்குறள், இறைமொழி, நபிவழி இவற்றின் கருத்துகளை 101 அதிகாரங்களாக, 1010 குறட்பாக்களில் கொண்டுள்ளது.
ஒருசோறு பதமாக,
செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;அதை
எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)
என்பதைச் சுட்டலாம்.
இஸ்லாமிய நற்கருத்துகளை இனியதமிழில், பா வடிவில் வாசிக்க விரும்பும் யாருக்கும் இந்நூல் பயனளிக்கும்.
நூல் : தீன்குறள்
ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081
செய்தி: Imantimes
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
நூல் அறிமுகம் : தீன் குறள்
http://www.mudukulathur.com/noolarimugamview.asp?id=260
இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம்.
தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் என்பர் சில ஆய்வாளர்கள்.
‘அளவியல் ஒப்ப அனைத்தும், இறையின்
உளவியல் ஒப்பே உலகு”
என ஆரம்பித்து
“உறைந்தும் இறைபால் உயரார், மனத்துள்
நிறைந்து மகிழா ரெனின்”
என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது தீன் குறள் எனலாம்.
‘கடவுள் வாழ்த்து’ ஆரம்பித்து ‘ஊடல் ஊவகை’ யில் முடிப்பார் திருவள்ளுவர். வாழும் வள்ளுவரான பதுருத்தீனும் ‘இறை வாழ்த்து’ தொடங்கி ‘மன நிறைவு’டன் முடிக்கிறார்.
101 தலைப்புகளில் 1010 தீன் குறள்களைக் கொண்டிலங்கும் இந்நூல் இறை மறை, நபிமொழி ஆகியவற்றின் உள்ளீடுகளைக் கொண்டு வெளிச்சக் கருத்துக்களைப் பெளர்ணமிக்க வைத்துள்ளது. இந்தச் “சின்ன குருவிச்சிறகு” “அன்னப் பெருஞ் சிறகாம் மாக்கவிஞர் முன்னே” தீன்குறளால் மாட்சிமை பெற்றுள்ளது.
இந்நூலில் இல்லாதது எதுவுமில்லை என்று கூறுமளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இஸ்லாமிய நெறியில் பொங்கிப் பிரவாகமெடுத்துள்ள சிறப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும் இதோ சான்றுக்கு இரு தீன்குறள்கள் :
“செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;
அதை எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)
(செய்ய விரும்பினால் ஊர் மகிழுமாறு ஒரு தொண்டேனும் செய்வீர்; அத்தகைய தொண்டு காலத்தால் அழியாதது).
“தொண்டு புரியார் தவசீலராயினும்
கண்டு புரியா துலகு” (தீன் குறள் 555)
(தொண்டு புரியார் தவ சீலராயினும் உலகம் அவரை இனங்கண்டு போற்றாது).
இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது; ஒவ்வொரு வரும் படிக்க வேண்டியது; எல்லாப் பள்ளிவாசல்களிலும் படிக்கும் பொருட்டு வைக்கப்பட வேண்டியது; மதரஸாக்களிலும் ஏனைய அரபிக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாகப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது; அனைத்து முஸ்லிம் கல்வி நிலையங் களிலும், பொதுநலச் சேவை அமைப்புகளிலும், அங்கிங்கெனாதபடி எல்லா நூலகங்களிலும் அவசியம் இடம்பெற வேண்டியது; சமுதாயப் புரவலர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தேவையானவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட வேண்டியது. ஏனெனில் கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் கூறிய வண்ணம் “தீன் குறள்” – இஸ்லாம் தமிழுக்குத் தரும் ‘மஹர்’; தமிழ் இஸ்லாத்திற்குத் தரும் ‘பரிசம்’. - ’எஸ்.எம்.எம்’.
நூல் : தீன்குறள்
ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081
நன்றி : இனிய திசைகள் ( முதல் இதழ் )
டிசம்பர் 2002
சீறாப்புராணம் தொடங்கி மஸ்தான்சாஹிபு பாடல்கள் வரை, " கொண்டாடப்படும்" இஸ்லாமிய இலக்கியங்கள் பலவும் தமிழைப் பிழிந்து கொடுத்த அளவுக்கு இஸ்லாமியக் கருத்தாக்கங்களை மொழிந்திடவில்லை என்பது தமிழாய்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிடம் குடிகொண்டுள்ள ஓர் ஆதங்கம்.
இது ஒருபுறமிருக்க, இஸ்லாம் என்றாலே இலக்கியத்துக்கு இடமளிக்கக் கூடாத ஒன்று என்பது போன்ற 'தூய' தோற்றத்தையும் சிலர் முனைந்து தோற்றுவித்துவருகின்றனர்.:-(
வாழ்விற்கு உகந்த இஸ்லாமிய நற்கருத்துகளை இதயத்திற்கு உகந்த இனிய தமிழ்மொழியில் இலக்கியமாக்குவதன் எதிர்பார்ப்பு இரண்டையும் அறிந்தவர்களின் விழிகளில் ஏக்கமாகிப் படர்ந்திருக்க, அந்தத் தாகநெருப்பைத் தணிக்கும் அளவில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்களின் நூல்கள் அமைவதுண்டு. 'இறைவா' என்கிற தலைப்பில் வந்த உரைவீச்சு நூல் ஒரு எடுத்துக்காட்டு.
ஒருமுறை அவர், தமிழில் இஸ்லாமியக்கவிதை எழுதுவது 'கத்திமீது நடப்பது மாதிரி கடினமான வேலை' என்று குறிப்பிட்டார். கவிதைகளின் மிகைப்பண்பும் வரம்புக்குட்பட்டே, ஆனால் சுவையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதில்.
என்னதான் திலகமாக இருந்தாலும் 'உன்புகழை வானமே அண்ணாந்து பார்க்கிறது' என்றெல்லாம் 'முத்து' வரிகளை உதிர்க்க இயலாது. கூடாது.
அவ்வகையில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இயற்றியுள்ள 'தீன்குறள்' தமிழ் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.
திருக்குறளின் அடியொற்றி 'அ'வில் தொடங்கி 'ன்' னில் முடியும் தீன்குறள், இறைமொழி, நபிவழி இவற்றின் கருத்துகளை 101 அதிகாரங்களாக, 1010 குறட்பாக்களில் கொண்டுள்ளது.
ஒருசோறு பதமாக,
செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;அதை
எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)
என்பதைச் சுட்டலாம்.
இஸ்லாமிய நற்கருத்துகளை இனியதமிழில், பா வடிவில் வாசிக்க விரும்பும் யாருக்கும் இந்நூல் பயனளிக்கும்.
நூல் : தீன்குறள்
ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081
செய்தி: Imantimes
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
நூல் அறிமுகம் : தீன் குறள்
http://www.mudukulathur.com/noolarimugamview.asp?id=260
இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம்.
தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் என்பர் சில ஆய்வாளர்கள்.
‘அளவியல் ஒப்ப அனைத்தும், இறையின்
உளவியல் ஒப்பே உலகு”
என ஆரம்பித்து
“உறைந்தும் இறைபால் உயரார், மனத்துள்
நிறைந்து மகிழா ரெனின்”
என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது தீன் குறள் எனலாம்.
‘கடவுள் வாழ்த்து’ ஆரம்பித்து ‘ஊடல் ஊவகை’ யில் முடிப்பார் திருவள்ளுவர். வாழும் வள்ளுவரான பதுருத்தீனும் ‘இறை வாழ்த்து’ தொடங்கி ‘மன நிறைவு’டன் முடிக்கிறார்.
101 தலைப்புகளில் 1010 தீன் குறள்களைக் கொண்டிலங்கும் இந்நூல் இறை மறை, நபிமொழி ஆகியவற்றின் உள்ளீடுகளைக் கொண்டு வெளிச்சக் கருத்துக்களைப் பெளர்ணமிக்க வைத்துள்ளது. இந்தச் “சின்ன குருவிச்சிறகு” “அன்னப் பெருஞ் சிறகாம் மாக்கவிஞர் முன்னே” தீன்குறளால் மாட்சிமை பெற்றுள்ளது.
இந்நூலில் இல்லாதது எதுவுமில்லை என்று கூறுமளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இஸ்லாமிய நெறியில் பொங்கிப் பிரவாகமெடுத்துள்ள சிறப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும் இதோ சான்றுக்கு இரு தீன்குறள்கள் :
“செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;
அதை எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)
(செய்ய விரும்பினால் ஊர் மகிழுமாறு ஒரு தொண்டேனும் செய்வீர்; அத்தகைய தொண்டு காலத்தால் அழியாதது).
“தொண்டு புரியார் தவசீலராயினும்
கண்டு புரியா துலகு” (தீன் குறள் 555)
(தொண்டு புரியார் தவ சீலராயினும் உலகம் அவரை இனங்கண்டு போற்றாது).
இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது; ஒவ்வொரு வரும் படிக்க வேண்டியது; எல்லாப் பள்ளிவாசல்களிலும் படிக்கும் பொருட்டு வைக்கப்பட வேண்டியது; மதரஸாக்களிலும் ஏனைய அரபிக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாகப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது; அனைத்து முஸ்லிம் கல்வி நிலையங் களிலும், பொதுநலச் சேவை அமைப்புகளிலும், அங்கிங்கெனாதபடி எல்லா நூலகங்களிலும் அவசியம் இடம்பெற வேண்டியது; சமுதாயப் புரவலர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தேவையானவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட வேண்டியது. ஏனெனில் கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் கூறிய வண்ணம் “தீன் குறள்” – இஸ்லாம் தமிழுக்குத் தரும் ‘மஹர்’; தமிழ் இஸ்லாத்திற்குத் தரும் ‘பரிசம்’. - ’எஸ்.எம்.எம்’.
நூல் : தீன்குறள்
ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081
நன்றி : இனிய திசைகள் ( முதல் இதழ் )
டிசம்பர் 2002
என்றாவது ஒருநாள்.....
என்றாவது ஒருநாள்.....
என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!
முத்தங்கள் பலகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!
இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!
துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!
தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!
நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!
நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!
நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!
வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!
கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இழிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!
-யாசர் அரஃபாத்
என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!
முத்தங்கள் பலகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!
இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!
துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!
தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!
நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!
நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!
நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!
வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!
கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இழிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!
-யாசர் அரஃபாத்
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
http://www.ottrumai.net/TArticles/13-GoodChildren.htm
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
----- நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)
http://www.ottrumai.net/TArticles/13-GoodChildren.htm
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.
4. உறுதியாக இருத்தல்
பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.
அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.
5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.
மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.
6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!
7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
8. மன்னித்து விடுங்கள்
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.
9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.
10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்
சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.
அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.
இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
12. கீழ்ப்படிதல்
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!
தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!
முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.
இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.
மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
----- நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)
Sunday, June 13, 2010
சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்!
சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்!
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.
சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்
சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:
1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)
2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)
3. இந்திய காவல் பணி (Indian Police Service)
4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')
5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')
6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')
7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')
8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')
9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)
10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')
11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service, Group 'A')
12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')
13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')
14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)
16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')
17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')
18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)
19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)
20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)
21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)
22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'
23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'
24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'
25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B
26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'
இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்
தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)
2. பிரதானத்தேர்வு (Main Exam)
3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)
ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.
பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.
தேர்வு எழுத தகுதிகள்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.
வயது வரம்பு:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.
எத்தனை முறை தேர்வு எழுதலாம்?
நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.
பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.
விண்ணப்பித்தல்
ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.
முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.
பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)
3. தாவரவியல் (Botany)
4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)
6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)
8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)
12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)
18. அரசியல் அறிவியல்(Political Science)
19. உளவியல் (Psychology)
20. பொது நிர்வாகம் (Public administration)
21. சமூகவியல் (Sociology)
22. புள்ளியியல் (Statistics)
23. விலங்கியல் (Zoology)
போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.
பிரதானத்தேர்வு (Main Exam)
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.
பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது
* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி
(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்
* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.
பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)
3. மானிடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botany)
5. வேதியியல் (Chemistry)
6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)
8. பொருளாதாரம் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. புவியமைப்பியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (Law)
14. மேலாண்மை (Management)
15. கணிதம் (Mathematics)
16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical Science)
18. தத்துவம் (Philosophy)
19. இயற்பியல்(Physics)
20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)
21. உளவியல் (Psychology)
22. பொது நிர்வாகம்(Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
26. இலக்கியம் (Literature)
(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)
1. தமிழ் 2. ஆங்கிலம்
3. மலையாளம் 4. தெலுங்கு
5. கன்னடம் 6. இந்தி
7. மராத்தி 8. உருது
9. ஒரியா 10. சமஸ்கிருதம்
11. குஜராத்தி 12. வங்காளம்
13. பஞ்சாபி 14. நேப்பாளி
15. சிந்தி 16. மணிப்பூரி
17. காஷ்மீரி 18. கொங்கணி
19. பாலி 20. பெர்சியன்
21. அஸ்ஸாமி 22. அரபு
23. சீனம் 24. பிரெஞ்ச்
25. ஜெர்மனி 26. ரஷ்யன்
பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.
நேர்முகத்தேர்வு
(Personality Test)
பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (இர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.
Thanks :
பொது அறிவு உலகம்
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.
சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்
சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:
1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)
2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)
3. இந்திய காவல் பணி (Indian Police Service)
4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')
5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')
6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')
7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')
8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')
9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)
10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')
11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service, Group 'A')
12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')
13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')
14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)
16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')
17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')
18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)
19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)
20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)
21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)
22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'
23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'
24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'
25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B
26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'
இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்
தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)
2. பிரதானத்தேர்வு (Main Exam)
3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)
ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.
பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.
தேர்வு எழுத தகுதிகள்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.
வயது வரம்பு:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.
எத்தனை முறை தேர்வு எழுதலாம்?
நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.
பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.
விண்ணப்பித்தல்
ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.
முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.
பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)
3. தாவரவியல் (Botany)
4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)
6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)
8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)
12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)
18. அரசியல் அறிவியல்(Political Science)
19. உளவியல் (Psychology)
20. பொது நிர்வாகம் (Public administration)
21. சமூகவியல் (Sociology)
22. புள்ளியியல் (Statistics)
23. விலங்கியல் (Zoology)
போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.
பிரதானத்தேர்வு (Main Exam)
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.
பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது
* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி
(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்
* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.
பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)
3. மானிடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botany)
5. வேதியியல் (Chemistry)
6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)
8. பொருளாதாரம் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. புவியமைப்பியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (Law)
14. மேலாண்மை (Management)
15. கணிதம் (Mathematics)
16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical Science)
18. தத்துவம் (Philosophy)
19. இயற்பியல்(Physics)
20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)
21. உளவியல் (Psychology)
22. பொது நிர்வாகம்(Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
26. இலக்கியம் (Literature)
(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)
1. தமிழ் 2. ஆங்கிலம்
3. மலையாளம் 4. தெலுங்கு
5. கன்னடம் 6. இந்தி
7. மராத்தி 8. உருது
9. ஒரியா 10. சமஸ்கிருதம்
11. குஜராத்தி 12. வங்காளம்
13. பஞ்சாபி 14. நேப்பாளி
15. சிந்தி 16. மணிப்பூரி
17. காஷ்மீரி 18. கொங்கணி
19. பாலி 20. பெர்சியன்
21. அஸ்ஸாமி 22. அரபு
23. சீனம் 24. பிரெஞ்ச்
25. ஜெர்மனி 26. ரஷ்யன்
பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.
நேர்முகத்தேர்வு
(Personality Test)
பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (இர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.
Thanks :
பொது அறிவு உலகம்
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!
Posted: 24 Apr 2010 09:12 PM PDT
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.
அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.
source: thatstamil
Posted: 24 Apr 2010 09:12 PM PDT
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.
அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.
source: thatstamil
Subscribe to:
Posts (Atom)